04-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தூய்மையாகி கதி, சத்கதிக்குத் தகுதி அடையுங்கள். பதீத ஆத்மா கதி, சத்கதிக்கு தகுதியானதன்று. எல்லையற்ற தந்தை உங்களை எல்லையற்ற அளவிற்கு தகுதி அடையச் செய்கிறார்.

கேள்வி:
பிதா விரதை என்று யாருக்குக் கூறுவார்கள்? அவர்களின் முக்கிய அடையாளங்கள் கூறுங்கள்?

பதில்:
பிதா விரதை என்பவர்கள் தந்தையின் ஸ்ரீமத்படி முழுமையாக நடப்பார்கள், அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்வார்கள், அவ்விபச்சாரி நினைவில் இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல குழந்தைகள் தான் ஒவ்வொரு விசயத்தையும் கடைப்பிடிக்க முடியும். அவர்களுடைய எண்ணங்கள் சதா சேவையைப் பற்றியே ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுடைய புத்தி என்ற பாத்திரம் தூய்மையாகிக் கொண்டே இருக்கும். அவர்கள் ஒரு போதும் விவாகரத்து (விலகி போக மாட்டார்கள்) செய்ய மாட்டார்கள்.

பாடல்:
எனக்கு உதவி செய்யக் கூடியவரே......

ஓம் சாந்தி.
குழந்தைகள் வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப நன்றி கூறுகிறார்கள். அனைவரும் ஒன்று போல நன்றி கூறுவதில்லை. யார் நன்கு நிச்சய புத்தி உடையவர்களோ, பாபாவின் சேவை யில் உள்ளப் பூர்வமாக உயிரினும் மேலாக அன்பாக ஈடுபட்டிருப்பார்களோ, அவர்கள் தான் உள்ளுக்குள் நன்றியைக் கூறிக் கொண்டிருப்பார்கள். பாபா, இது தங்களின் அதிசயம். எங்களுக்கு ஒன்றும் தெரியாது, நாங்கள் தங்களை சந்திப்பதற்குத் தகுதி அற்றவராக இருந்தோம். இது சரி தான். மாயா அனைவரையும் தகுதி அற்றவராக ஆக்கி விட்டது. சொர்க்கத்திற்கு அதிபதியாக யார் மாற்றுகிறார்கள்? பிறகு நரகத்திற்கு அதிபதியாக யார் மாற்றுகிறார்கள் என அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கதி, சத்கதி இரண்டிற்கும் தந்தை தான் தகுதி அடைய வைக்கிறார் என நினைக்கிறார்கள். இல்லை என்றால் அங்கே இருப்பதற்குத் தகுதி உடையவராக எவருமே இல்லை. நாங்கள் பதீதமாக இருக்கிறோம் என அவர்களே கூறுகிறார்கள். இந்த உலகமே பதீதமாக இருக்கிறது. சாது சன்னியாசிகள் என யாருமே தந்தையை அறியவில்லை. இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு தனது அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். தந்தையே வந்து தான் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகும். இங்கேயே வந்து தகுதி அடைய வைக்கிறார் தூய்மையாக மாற்றுகிறார். அங்கேயே அமர்ந்து தூய்மையாக்க முடியும் என்றால் ஏன் இவ்வளவு பதீதமாக மாறுகிறார்கள்?

குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமத்தில் தான் நிச்சய புத்தி இருக்கிறது. பாபாவின் அறிமுகத்தை எவ்வாறு கொடுக்க வேண்டும் என அறிவு இருக்க வேண்டும். சிவாய நமஹ என்பது அவசியம். அந்த தாய் தந்தையே உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பிரம்மா விஷ்ணு, சங்கரர் கூட படைப்புகள். அவர்களைப் படைக்கக் கூடிய தந்தை நிச்சயம் இருப்பார். தாயும் வேண்டும். அனைவருக்கும் இறை தந்தை நிச்சயம் ஒருவரே. நிராகாரருக்குத் தான் கடவுள் என்று பெயர். படைக்கக் கூடியவர் எப்போதும் ஒருவரே. முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். யுக்தி யுக்தாக எப்படி அறிமுகத்தைக் கொடுப்பது என்பதைக் கூட புரிந்துக் கொள்ளுங்கள். பகவான் தான் ஞானக் கடல். அவரே தான் வந்து இராஜயோகத்தைக் கற்பித்தார். அந்த பகவான் யார்? முதலில் அப்பாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாபாவும் நிராகாரராக இருக்கிறார். ஆத்மாவும் நிராகாரராக இருக்கிறது. அந்த நிராகார தந்தை வந்து குழந்தைகளுக்கு சொத்து கொடுக்கிறார். யார் மூலமாவது புரிய வைப்பார் அல்லவா? இல்லை என்றால் இராஜாக்களுக்கு இராஜாவாக எப்படி மாற்றினார்? சத்யுக இராஜ்யத்தை யார் ஸ்தாபனை செய்தது? சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் யார்? நிச்சயம் சொர்க்கத்தின் தந்தையாகத் தான் இருப்பார். அவர் நிராகாரராக இருக்க வேண்டும். முதன் முதலில் அப்பாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கோ, பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கோ தந்தை என்று கூற முடியாது. அவர்கள் படைக்கப்படு கின்றார்கள். சூட்சும வதனத்தில் இருப்பவர்கள் கூட படைக்கப் படுகிறார்கள். அவர்களும் படைப்புகளே எனும் போது ஸ்தூல வதனத்தில் இருப்பவர்களை பகவான் என்று எப்படிக் கூற முடியும்? தேவதாய நமஹ! என பாடப்பட்டிருக்கிறது. அவரோ சிவாய நமஹ. முக்கியமானது இந்த விசயம் ஆகும். இப்போது படக்கண்காட்சிகளில் அடிக்கடி ஒரு விசயத்தை மட்டும் புரிய வைக்க மாட்டார்கள். இதுவோ ஒவ்வொரு வருக்கும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். நிச்சயத்தை ஏற்படுத்த வேண்டும். யார் வந்தாலும் முதலில் அவர்களுக்கு நீங்கள் வந்தால், தந்தையின் காட்சியை அடையலாம் என முதலில் தெரிய வைக்க வேண்டும். தந்தையிடம் இருந்து தான் உங்களுக்கு சொத்து கிடைக்கிறது. தந்தை தான் கீதையில் இராஜ யோகத்தைக் கற்பித்தார். கிருஷ்ணர் கற்பிக்கவில்லை. தந்தை தான் கீதையின் பகவான் ஆவார். இதுவே நம்பர் ஒன் விசயம் ஆகும். கிருஷ்ண பகவான் வாக்கு கிடையாது. ருத்ர பகவான் வாக்கு அல்லது சோம் நாத் சிவபகவான் வாக்கு எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக் கதையும் தனிப்பட்டதாகும். ஒருவரைப் போல இன்னொருவர் கிடையாது. எனவே முதன் முதலில் யார் வந்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றி புரிய வைக்க வேண்டும். இதுவே முக்கிய மாக புரிய வைக்க வேண்டிய விசயம் ஆகும். பரம்பிதா பரமாத்மாவின் தொழில் இது. அவர் தந்தை இவர் குழந்தை. அவர் சொர்க்கத்தின் தந்தை. இவர் சொர்க்கத்தின் இளவரசர். இதை மிகத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். முக்கியமானது கீதையாகும். அதனுடைய ஆதாரத்தில் தான் மற்ற சாஸ்திரங்கள் இருக்கிறது. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக விளங்குவது பகவத் கீதையாகும்.நீங்கள் சாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா என மனிதர்கள் கேட்கிறார்கள். அட, ஒவ்வொருவரும் தனது தர்ம சாஸ்திரத்தை ஏற்றுக் கொள்வார்கள். அனைத்து சாஸ்திரங்களையும் ஏற்க மாட்டார்கள். ஆம், அனைத்தும் சாஸ்திரங்கள் தான். ஆனால் சாஸ்திரங்களை அறிந்து கொள்வதற்கு முன்பு தந்தையை அறிந்துக் கொள்வது முக்கியமான விசயம் ஆகும். அவரிடம் இருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. சாஸ்திரங்களினால் சொத்து கிடைக்காது. தந்தையிடமிருந்து தான் சொத்து கிடைக்கிறது. பாபா ஞானத்தைக் கொடுக்கிறார். ஆஸ்தியைக் கொடுக்கிறார். அது சம்பந்தமாக புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதன் முதலில் கீதையை எடுத்துக் கொள்ள வேண்டும். கீதையின் பகவான் யார்? அதில் தான் இராஜயோகத்தின் விசயம் வருகிறது. புதிய உலகத்திற்காகத் தான் நிச்சயம் இராஜயோகம் இருக்கும். பகவான் வந்து பதீதமாக்க மாட்டார். அவர் பாவனமான மகாராஜாவாக மாற்றுகிறார். முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்து பிறகு, இவர் நமது தந்தை என நான் உறுதி அளிக்கிறேன் என எழுத வையுங்கள். முதன் முதலில் சிவாய நமஹ என்பது பற்றி விளக்க வேண்டும். தாயும் நீயே, தந்தையும் நீயே...... மகிமைகள் கூட இந்த தந்தையினுடையதாகும். பகவான் பக்தியின் பலனை இங்கே வந்து தான் கொடுக்க வேண்டும். பக்தியின் பலன் என்ன? இதை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். யார் நிறைய பக்தி செய்தனரோ, அவர்களுக்குத் தான் பலன் கிடைக்கும். இந்த விசயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. உங்களிலும் கூட வரிசைக் கிரமமான முயற்சிக்கு ஏற்ப அறிகிறீர்கள்.

உங்களுடைய எல்லையற்ற தாய், தந்தை அவரே எனப் புரிய வைக்கப்படுகிறது. ஜகதம்பா, ஜகத்பிதா என்று கூட பாடப்பட்டிருக்கிறது. ஆதாம் மற்றும் ஏவாளைக் கூட மனிதர்கள் என நினைக்கிறார்கள். ஏவாள் என்று தாயைக் கூறுகிறார்கள். சரியான வழியில் ஏவாள் யார்? இது யாருக்கும் தெரியவில்லை. தந்தை தான் புரிய வைக்கிறார். ஆம், யாரும் உடனடியாக புரிந்துக் கொள்ள முடியாது. படிப்பில் நேரம் தேவைப்படுகிறது. படித்துக் கொண்டே வந்து வக்கீல் ஆகிறார்கள். குறிக்கோள் நிச்சயமாக இருக்கிறது. தேவதையாக வேண்டும் என்றால் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தாயும் நீயே தந்தையும் நீயே...... எனப் பாடுகிறார் கள். பிறகு பதீத பாவனா வருங்கள் என்றும் கூறுகிறார்கள். பதீத உலகம் மற்றும் பாவன உலகம் என்று எதற்குப் பெயர்? கலியுகம் இன்னும் 40000 வருடங்கள் இருக்குமா என்ன? சரி, நல்லது. பாவனமாக மாற்றக் கூடியவர் அந்த ஒரு தந்தை அல்லவா? சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் இறை தந்தை ஆவார். கிருஷ்ணர் ஸ்தாபனை செய்ய முடியாது. அவர் சொத்தை அடைகிறார். அந்த ஸ்ரீ கிருஷ்ணர் சொர்க்கத்தின் இளவரசர். சிவபாபா சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர். அவர் படைப்பு. முதல் இளவரசன் ஆவார். இதைத் தெளிவுபடுத்தி பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதினால், உங்களுக்கு புரிய வைப்பது எளிதாக இருக்கும். படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பு பற்றி தெரிந்து விடும். படைக்கக் கூடியவர் நாலெட்ஜ்ஃபுல். அவரே இராஜயோகம் கற்பிக்கிறார். அவர் ஒன்றும் இராஜா கிடையாது. அவர் இராஜயோகத்தைக் கற்பித்து இராஜாக் களுக்கு இராஜாவாக மாற்றுகிறார். பகவான் இராஜயோகத்தைக் கற்பித்தார். ஸ்ரீ கிருஷ்ணர் இராஜ்ய பதவியைப் பெற்றார். அவரே தான் இழக்கவும் செய்தார். அதைத் தான் மீண்டும் பெற வேண்டும். சித்திரங்கள் மூலாக மிகவும் நன்றாகப் புரிய வைக்கப் படுகிறது. தந்தைக்கு என்று தொழில் அவசியம் வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் போட்டதால் பாரதம் கூழாங்கல் போன்று ஆகிவிட்டது. சிவபாபாவை அறிந்துக் கொண்டால் பாரதம் வைரம் போன்ற தாகிவிடும். கீதையில் கூட இராஜயோகம் என்று இருக்கிறது. வெளிநாட்டவர்கள் கூட இராஜ யோகத்தைக் கற்கிறார்கள். கீதையினால் தான் கற்றுக் கொண்டார்கள். இப்போது நீங்கள் அறிந்துக் கொண்டீர் கள். மற்றவர்களுக்கும் தந்தை யார் எனப் புரிய வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அவர் சர்வ வியாபி இல்லை. ஒரு வேளை சர்வவியாபியாக இருந்தால் எப்படி இராஜ யோகத்தைக் கற்று கொடுப்பார்? இந்த தவறைப் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும். யார் சேவையில் ஈடுபட்டிருக் கிறார்களோ, அவர்களுக்குத் தான் எண்ணங்கள் ஓடும். பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கும் போது, அசரீரி ஆகும் போது, மன்மனாபவ நிலையில் இருக்கும் போது, பதிவிரதை அல்லது பிதா விரதை ஆகி மேலும் நல்ல குழந்தையாக இருக்கும் போதும் தான் தாரணை ஆகும்.

எவ்வளவு முடியுமோ நினைவை அதிகரியுங்கள் என பாபா கட்டளை இடுகிறார். தேக அபிமானத்தில் வருவதால் நீங்கள் நினைப்பதில்லை. புத்தியும் தூய்மை ஆவதில்லை. சிங்கத்தின் பாலை வைப்பதற்கு தங்க பாத்திரம் வேண்டும் என்பார்கள். இதிலும் பிதா விரதப்பாத்திரம் வேண்டும். அவ்விபச்சாரி பிதா விரதை மிகச் சிலரே. சிலர் முற்றிலும் அறியவில்லை. சிறு குழந்தையைப் போல இருக்கிறார்கள். இங்கே தான் அமர்ந்திருப்பார்கள். ஆனால் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடு கிறார்கள் அல்லவா? அது போல. குழந்தையை மடியில் வைத்து திருமணம் செய்யப்படுகிறது. ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருக்கிறார்கள். மிகவும் அன்பு ஏற்பட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதுவும் அவ்வாறே. நிச்சயம் செய்ய வேண்டும். ஆனால் புரிந்துக் கொள்ளவில்லை. நாம் மம்மா பாபாவினுடையவராகிறோம். அவர்களிடமிருந்து சொத்து அடைய வேண்டும். எதையும் அறியவில்லை. அதிசயம் அல்லவா? 5-6 வருடங்கள் இருந்த பிறகும் கூட பாபாவை அல்லது கணவரை விவாகரத்து செய்து விடுகிறார்கள். மாயா அவ்வளவு துன்புறுத்து கிறது.

எனவே முதன் முதலில் சிவாய நமஹ எனக்கூற வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட படைப்பவர் இவரே. ஞானக் கடல் இந்த சிவனே. இப்போது என்ன செய்ய வேண்டும்? திரிமூர்த்தியின் அருகில் இடம் இருக்கிறது. அதில் சிவபாபா மற்றும் கிருஷ்ணர் இருவரின் தொழிலும் தனித்தனி என எழுத வேண்டும். முதல் விசயம் இதைப் புரிய வைத்தால் தான் புத்தி திறக்கும். மற்றபடி படிப்பானது எதிர்காலத்திற்கானதாகும். இது போன்ற படிப்பு வேறு எதுவும் இல்லை. சாஸ்திரங்களினால் இந்த அனுபவம் ஏற்படாது. நாம் சத்யுக ஆரம்பத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பள்ளி நிறைவடையும் போது, நம்முடைய இறுதித் தேர்வு நடக்கும். பிறகு அங்கே சென்று இராஜ்யம் செய்வார்கள். கீதையைக் கூறக் கூடியவர்கள் இந்த விசயங்களைப் புரிய வைக்க முடியாது. முதலில் பாபாவைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். பாபா தான் திரிகால தர்ஷி (மூன்று காலமும் தெரிந்தவர்). வேறு எந்த மனிதரும் உலகத்தில் திரிகால தர்ஷி கிடையாது. உண்மையில் யார் பூஜைக்குரியவர்களோ, அவர்களே பூஜாரி ஆகிறார்கள். பக்தியும் நீங்கள் தான் செய்கிறீர்கள். வேறு யாரும் செய்யவில்லை. யார் பக்தி செய்தனரோ, அவர்களே முதல் நம்பரில் பிரம்மாவாகவும் பிறகு பிரம்மாவின் வாய்வழி வம்சாவளியினராகவும் ஆகிறார்கள். அவர்களே பூஜைக்குரிய வராகவும் ஆகிறார்கள். முதல் நம்பரில் பூஜைக்குரியவர்களாக இருப்பவர்களே, முதல் நம்பரில் பூஜாரிகளாக மாறுகிறார்கள். பிறகு பூஜைக்குரியவராக மாறுகிறார்கள். பக்தியின் பலனும் முதலில் அவர்களுக்குக் கிடைக்கும். பிராமணர்கள் தான் படித்து பிறகு தேவதைகளாக மாறுகிறார்கள். இது எங்கும் எழுதப்படவில்லை. இவர் கள் மூலமாக ஞான அம்பை எய்தக் கூடியவர்கள் வேறு யாரோ என்பது பீஷ்மர் போன்றவர்களுக்குத் தெரியும் அல்லவா? ஏதோ சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். இப்போது கூட ஏதோ ஒரு சக்தி தான் இவர்களுக்கு கற்பிக்கிறது எனக் கூறுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என பாபா பார்க்கின்றார். இந்த கண்களால் தான் பார்ப்பார்கள். பித்ருக்களுக்குப் படைக்கும் போது ஆத்மா வருகிறது. இது, இவர் என பார்க்கிறது. சாப்பிடு கிறார்கள் என்றால் கண்கள் போன்றவை அவர்களைப் போன்றே மாறுகிறது. தற்காலிகமாக லோன் எடுக் கிறார்கள். இது பாரதத்தில் தான் நடக்கிறது. பழமையான பாரதத்தில் முதன் முதலில் இராதை, கிருஷ்ணர் இருந்தனர். அவர்களுக்கு பிறப்பு கொடுப்பவர்களை உயர்ந்த வர்களாக எண்ணமாட்டார்கள். அவர்கள் குறைவாக தேர்ச்சி அடைந்தனர் அல்லவா? கிருஷ்ணரி லிருந்து தான் மகிமை ஆரம்பமாகிறது. இராதை, கிருஷ்ணர் இருவரும் அவரவர் இராஜ்யத்தில் வருகிறார்கள். அவர்களின் தாய், தந்தையை விட குழந்தைகளின் பெயர் பிரசித்தமாக இருக்கிறது. எவ்வளவு அதிசயமான விசயங்கள்! குப்தமாக குஷி இருக்கிறது. நான் சாராரண உடலில் வருகிறேன் என பாபா கூறுகின்றார். இவ்வளவு தாய்மார்களின் கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆகவே சாதாரண உடலை எடுத்திருக்கிறேன். இவர் மூலமாக செலவு நடந்து கொண்டிருக்கிறது. சிவபாபாவின் பண்டாரா ஆகும். போலா பண்டாரி (கள்ளம் கபடமற்றவரின் களஞ்சியம்) அழியாத ஞான இரத்தினங்களுடையதாகும். பிறகு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய பாலனையும் நடந்து கொண்டிருக்கிறது. இது குழந்தைகளுக்குத் தான் தெரியும்.

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவபகவான் வாக்கு என்று கூற வேண்டும். அவர் அனைவரையும் படைக்கக் கூடியவர். பிறகு கிருஷ்ணரை ஞானக் கடல், இறை தந்தை என எப்படி கூற முடியும்? என ஆரம்பியுங்கள். இவ்வளவு தெளிவாக எழுதினால் புத்தியில் படிப்பு பதியும். ஒரு சிலருக்குப் புரிந்து கொள்ள இரண்டு மூன்று வருடங்கள் ஆகிறது. பகவான் வந்து பக்தியின் பலனைக் கொடுக்கிறார். பிரம்மா மூலமாக பாபா யக்ஞத்தைப் படைக்கிறார். பிராமணர்களைப் படிக்க வைக்கிறார். பிராமணனிலிருந்து தேவதையாக்குகிறார். பிறகு கீழே வரத்தான் வேண்டும். மிகவும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். முதலில் ஸ்ரீ கிருஷ்ணர் சொர்க்கத்தின் இளவரசன். சொர்க்கத்தின் காட் பாதர் கிடையாது என்பதைத் தெளிவு படுத்திக் காண்பிக்க வேண்டும். சர்வ வியாபி என்ற ஞானத்தால் முற்றிலும் தமோபிரதானம் ஆகி விட்டார்கள். யார் இராஜ்ய பதவியை கொடுத்தாரோ, அவரையே மறந்து விட்டனர். கல்ப கல்பமாக பாபா இராஜ்யத்தைக் கொடுக்கிறார். பிறகு, நாம் பாபாவை மறந்து போகிறோம். மிகவும் அதிசயமாக இருக்கிறது! முழு நாளும் குஷியில் ஆட வேண்டும். பாபா நம்மை உலகத்திற்கே அதிபதி ஆக்குகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒருவரை மட்டுமே நினைக்கும் ‘பிதா விரதை’ ஆக வேண்டும். நினைவை அதிகரித்து புத்தியை தூய்மையாக்க வேண்டும்.

2. பாபாவின் அறிமுகத்தை யுக்தியோடு கொடுக்கும் முறையைக் கண்டுபிடிக்க வேண்டும். சிந்தனைக் கடலைக் கடைந்து தந்தையை நிரூபிக்க வேண்டும். நிச்சய புத்தி உடையவராகி சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
சுயமாற்றத்தின் மூலம் உலக மாற்றத்திற்கு நிமித்தம் ஆகக்கூடிய சிரேஷ்ட சேவாதாரி ஆகுக.

குழந்தைகளாகிய நீங்கள் சுயமாற்றத்தின் மூலம் உலகத்தை மாற்றம் செய்வதற்கான ஓப்பந்தம் (காண்ட்ராக்ட்) எடுத்துள்ளீர்கள். சுயமாற்றம் தான் உலக மாற்றத்திற்கு ஆதாரம் ஆகும். சுயமாற்றம் இல்லாமல் எந்தவொரு ஆத்மாவிற்காகவும் எவ்வளவு தான் உழைப்பு செய்தாலும், மாற்றம் ஏற்பட முடியாது, ஏனென்றால், இன்றைய நாட்களில் கேட்பதினால் மட்டும் மாறுவ தில்லை, ஆனால், பார்ப்பதினால் மாற்றம் அடைகின்றார்கள். பந்தனத்தை ஏற்படுத்தக்கூடிய சிலர் கூட நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்தைப் பார்த்து மாறிவிடுகின்றார்கள். எனவே, செய்து காண்பிப்பது, மாறிக் காண்பிப்பது தான் சிரேஷ்ட சேவாதாரி ஆகுவதாகும்.

சுலோகன்:
சமயம், சங்கல்பம் மற்றும் பேசுவதினுடைய சக்தியை (எனர்ஜி) வீணானதிலிருந்து நல்லதாக மாற்றம் செய்தீர்கள் என்றால் சக்திசாலி ஆகிவிடுவீர்கள்.