07-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! எச்சரிக்கையாக இருந்து படிப்பின் மீது முழு கவனம் செலுத்துங்கள். நமக்கு சிவபாபாவுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்பது கூடாது. அவ்வாறு சொல்வதும் கூட தேக அபிமானமாகும்.

கேள்வி:
பாரதம் அழிவற்ற தீர்த்த ஸ்தலம் - எப்படி?

பதில்:
பாரதம் பாபாவின் பிறப்பிடமாக இருப்பதன் காரணத்தால் அழிவற்ற கண்டமாக உள்ளது. இந்த அழிவற்ற கண்டத்தில் சத்யுகம் மற்றும் திரேதாயுகத்தில் சைதன்ய தேவி-தேவதைகள் இராஜ்யம் செய்கின்றனர். அந்தச் சமயத்தை பாரதம் சிவாலயம் எனச் சொல்லப்படுகின்றது. பிறகு பக்தி மார்க்கத்தில் ஜட சிலைகளைச் செய்து பூஜை செய்கின்றனர். சிவாலயங்களும் அநேகம் கட்டுகின்றனர் என்றால் அச்சமயம் கூட தீர்த்த ஸ்தலமாக உள்ளது. அதனால் பாரதத்தை அழிவற்ற தீர்த்த ஸ்தலம் எனச் சொல்ல முடியும்.

பாடல்:
இரவு நேரப் பயணியே, களைத்துப்போகக் கூடாது..........

ஓம் சாந்தி.
யார் இந்த எச்சரிக்கை தந்து கொண்டிருக்கிறார், களைத்துப் போகக் கூடாது - ஓ இரவு நேரப் பயணியே என்று? இதை சிவபாபா சொல்கிறார். அநேகக் குழந்தைகள் இப்படியும் நினைக் கின்றனர்- நமக்கோ சிவபாபா தான், அவரோடு தான் நமக்குத் தொடர்பு உள்ளது. ஆனால் அவர் சொல்கிறாரென்றாலும் கூட பிரம்மாவின் வாயின் மூலமாகத் தான் இல்லையா? அநேகர் நினைக் கின்றனர், சிவபாபா நமக்கு நேரடியாகப் பிரேரணை தருகிறார் என்று. ஆனால் இதுபோல் நினைப்பது தவறாகும். சிவபாபா கல்வியை நிச்சயமாக பிரம்மா மூலம் தான் தருவார். உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், குழந்தைகளே, களைத்துப்போக வேண்டாம் என்று. உங்களுக்கு சிவபாபாவுடன் தொடர்பு இருக்கலாம். சிவபாபாவும் சொல்கிறார், மன்மனாபவ. பிரம்மாவும் சொல்கிறார் - மன்மனாபவ. அப்போது பிரம்மாகுமார்-குமாரிகளும் சொல்கின்றனர், மன்மனாபவ. ஆனால் எச்சரிக்கை செய்வதற்கோ வாய் வேண்டும் இல்லையா? அநேகக் குழந்தைகள் நினைக்கின்றனர், நமக்கோ அவரோடு தொடர்பு என்று. ஆனால் வழிகாட்டுதலோ பிரம்மா மூலமாகத் தருவார் இல்லையா? வழிகாட்டுதல் முதலியவை நேரடியாகக் கிடைத்துக் கொண்டிருந்தால், பிறகு அவர் இங்கே வருவதற்கான தேவை தான் என்ன? சில குழந்தைகளுக்கு இதுபோன்ற சிந்தனை வருகிறது - சிவபாபா பிரம்மா மூலமாகச் சொல்கிறார் என்றால் நம் மூலமாகவும் கூடச் சொல்ல முடியும் என்று. ஆனால் பிரம்மா இல்லாமல் தொடர்பு ஏற்பட முடியாது. அநேகர் பிரம்மா அல்லது பிரம்மா குமார்- குமாரிகளிடம் கோபித்துக் கொள்கின்றனர் என்றால் இதுபோல் சொல்லத் தொடங்கி விடுகின்றனர். யோகமோ சிவபாபாவிடம் வைக்கத் தான் வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு போதனை, எச்சரிக்கை தருவதற்காக அறிவுரை சொல்லவும் வேண்டியிருக்கிறது. பாபா புரிய வைக்கிறார், நீங்கள் நேரத்துக்கு வகுப்புக்கு வருவ தில்லை, யார் சொன்னார்? சிவபாபா மற்றும் பிரம்மா தாதா இருவருமே கூறினர், இருவருக்கும் சரீரம் ஒன்று தான். ஆக, சொல்கிறார், எச்சரிக்கையாக இருந்து படிப்பின் மீது முழு கவனம் செலுத்துங்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை படிப்பு சொல்லித் தருகிறார். முதல்-முதலில் மகிமை சிவபாபாவுக்கு செய்ய வேண்டும். அவருடைய மகிமை மிக உயர்வானது. எல்லையற்ற மகிமை. அவருடைய மகிமைகளுக்கு நிறைய நல்ல-நல்ல வார்த்தைகள் உள்ளன. ஆனால் குழந்தைகள் அவ்வப்போது மறந்து போகின்றனர். விசார் சாகர் மந்தன் செய்து சிவபாபாவின் மகிமைகளை முழுமையாக எழுத வேண்டும்.

புது மனிதன் என்று யாரைச் சொல்லலாம்? சொர்க்கத்தின் புது மனிதர் கிருஷ்ணர். ஆனால் இச்சமயம் பிராமணர்களின் குடுமி உயர்வாகப் பாடப்பட்டுள்ளது. குழந்தைகள் படைக்கப் படு கிறார்கள் என்றால் கல்வி கற்பிக்கப்படுகின்றது. லட்சுமி-நாராயணரைப் புது மனிதர் எனச் சொன்னால் அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக, இப்போது புது மனிதன் யார்? இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய, புரிய வைக்க வேண்டிய விசயங்களாகும். அந்தத் தந்தை சர்வசக்திவான், வேர்ல்டு ஆல்மைட்டி. இந்த வார்ததையை பாபாவின் மகிமையில் எழுத மறந்து விடுகின்றனர். பாரதத்துக்கும் மகிமை செய்யப் படுகின்றது-பாரதம் அவிநாசி தீர்த்த ஸ்தலம். - எப்படி? தீர்த்த ஸ்தலங்கள் பக்தி மார்க்கத்திலும் உள்ளது. ஆக, இதை அவிநாசி தீர்த்த ஸ்தலம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவிநாசி தீர்த்த ஸ்தலம் எப்படி? சத்யுகத்தில் நாம் இதைத் தீர்த்த ஸ்தலம் என்று சொல்ல முடியுமா? நாம் இதை அவிநாசி தீர்த்த ஸ்தலம் என எழுதுகிறோம் என்றால் எப்படி? தெளிவு படுத்திச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் - ஆம், சத்யுக- திரேதாவில் கூட இது தீர்த்த ஸ்தலம் தான். துவாபர-கலியுகத்திலும் கூட தீர்த்த ஸ்தலம். அவிநாசி எனச் சொல்கிறோம் என்றால் நான்கு யுகங்களிலும் உறுதிப் படுத்திச் சொல்ல வேண்டும். தீர்த்த ஸ்தலங்கள் முதலியன துவாபரயுகத்திலிருந்தே உள்ளன. பிறகு நாம் எழுத முடியுமா, அவிநாசி தீர்த்த ஸ்தலம் என்று? சத்யுக-திரேதாவிலும் தீர்த்த ஸ்தலம், அங்கே சைதன்ய தேவி-தேவதைகள் உள்ளனர். இங்கே உள்ளது ஜட தீர்த்த ஸ்தலம். அது சைதன்யமான, உண்மையிலும் உண்மையான தீர்த்தம். அப்போது அது சிவாலயமாக இருக்கும். இவ்விஷயங் களை பாபா தான் வந்து புரிய வைக்கிறார். பாரதம் அவிநாசி கண்டம். மற்ற அனைத்தும் விநாசமாகி விடும். இந்த விஷயங்கள் மனிதர்களுக்கு தெரியவில்லை பதீத பாவனன் பாபா இங்கே வருகிறார். யாரை பாவன தேவி-தேவதைகளாக ஆக்குகிறாரோ, அவர்கள் தான் பிறகு இந்த சிவாலயத்தில் வசிக்கின்றனர். இங்கே பத்ரிநாத், அமர்நாத் செல்ல வேண்டியுள்ளது. அங்கே பாரதம் தான் தீர்த்த ஸ்தலம். அங்கே சிவபாபா இருக்கிறார் என்பதால் அல்ல. சிவபாபாவோ இப்போதும் இருக்கிறார். இந்தச் சமயத்தினுடையது தான் அனைத்து மகிமைகளும். சிவபாபாவின் பிறப்பிடம் இது. பிரம்மாவின் பிறப்பிடமாகவும் ஆகிவிட்டது. சங்கரின் பிறப்பிடம் எனச் சொல்ல மாட்டார்கள். அவருக்கோ இங்கே வர வேண்டிய அவசியமே இல்லை. அவரோ விநாசத்திற்கு நிமித்தமாக ஆக்கப் பட்டுள்ளார். விஷ்ணு வரும்போது இரண்டு ரூபங்களுடன் பாலனை செய்கிறார். விஷ்ணுவின் இரண்டு ரூபங்களை யுகலாக(தம்பதிகளாக)க் காட்டுகின்றனர். இது அவருடைய (விஷ்ணு) பிரதிமையாகும். (சித்திரம்) அந்த மனிதர்களோ, தர்ம ஸ்தாபகர்களையும் கூட சேவியர் (இரட்சகர்) எனச் சொல்கின்றனர். கிறிஸ்து, புத்தர் முதலானவர்களையும் கூட சேவியர் எனச் சொல்லி விடுகின்றனர். அவர்கள் அமைதியை உருவாக்க வந்ததாக நினைக் கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றும் அமைதியை உருவாக்குவதில்லை. யாரையும் துக்கத் திலிருந்து விடுவிப்பதில்லை. அவர்களோ தர்மத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும் என உள்ளது. அவர்களுக்குப் பின்னால் அவர்களின் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த சேவியர் (பாதுகாப்பவர்) என்ற வார்த்தை நன்றாக உள்ளது. இதையும் அவசியம் போட வேண்டும். இந்தச் சித்திரம் வெளிநாடுகளில் வெளியாகும் போது அனைத்து மொழிகளிலும் வெளிவரும். அந்த மனிதர்கள் போப் போன்றவர்களுக்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர்! ஜனாதிபதி முதலானவர்கள் இறந்து போனால் எவ்வளவு மகிமை செய்கின்றனர்! ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராக உள்ளாரோ அவ்வளவு அவருக்கு மகிமை செய்யப் படுகின்றது. ஆனால் இச்சமயம் அனைவரும் ஒரே மாதிரி ஆகி விட்டனர். பகவானை சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். அனைவரும் ஆத்மாக்கள் தங்களுடைய தந்தைக்கு நிந்தனை செய்கின்றனர் - நாங்கள் எல்லாருமே தந்தையர் என்பதாக. அதுபோல லௌகிக் தந்தையும் கூட சொல்ல முடியாது, நானும் தந்தை தான் என்று. ஆம், அவரோ எப்போது தம்முடைய படைப்பைப் படைக்கிறாரோ, அப்போது அவர்களுடைய தந்தையாக ஆவார். இப்படி நடக்கக் கூடும். இங்கோ ஆத்மாக்களாகிய நம் அனைவருடைய தந்தை ஒருவரே! நாம் அவருக்குத் தந்தையாக ஆகவே முடியாது. அவரைக் குழந்தை எனச் சொல்ல முடியாது. ஆம், இதுவோ ஞானத்தின் சுவையுடன் கூடிய இனிய உருவகமாகும்-அதாவது சிவ பாலகனை வாரிசாக்கிக் கொள்வதாகச் சொல்கிறார். இவ்விசயங்களையோ புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புரிந்து கொள்வார்கள். சிவபாலகனை வாரிசாக்கி அவர் மீது பலியாகின்றனர். சிவபாபா மீது குழந்தைகள் பலி யாகின்றனர். இது ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வது போல (கொடுக்கல் வாங்கல்). ஆஸ்தி கொடுப்பதற்கு எவ்வளவு மகத்துவம் உள்ளது! தேகத்துடன் கூட என்னென்ன உள்ளனவோ அவை அனைத்துக்கும் வாரிசாக்குங்கள். ஆனால் தேக அபிமானம் விடுபடுவது கடினமாகும். தன்னை ஆத்மா என நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்போது தேக அபிமானம் விட்டுப் போகும். ஆத்ம அபிமானி ஆவதென்பது பெரும் முயற்சியாகும். நாம் ஆத்மா அழியாதவர்கள். நம்மை நாமே சரீரம் என நினைத்து அமர்ந்திருக்கிறோம். இப்போது பிறகு தன்னை ஆத்மா என உணர்வதில் முயற்சி உள்ளது. பெரியதிலும் பெரிய நோய் தேக அபிமானத் தினுடையதாகும். தன்னை ஆத்மா என உணர்ந்து பரமபிதா பரமாத்மாவை யார் நினைப்ப தில்லையோ, அவர்களின் விகர்மங்கள் நீங்குவதில்லை.

பாபா சொல்லிப் புரிய வைக்கிறார்-நல்லபடியாகப் படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள் என்றால் சக்கரவர்த்தி ஆவீர்கள். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இல்லை என்றால் ஸ்ரீஸ்ரீ சிவபாபாவின் மனதில் இடம்பெற முடியாது. மனதில் இடம் பிடித்தால் சிம்மாசனத்தில் அமரலாம். மிகவும் இரக்கமனம் உள்ளவராக ஆகவேண்டும். மனிதர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர். பார்ப்பதற்குப் பெரிய பணக்காரர்களாக உள்ளனர். போப்புக்குப் பாருங்கள், எவ்வளவு மரியாதை! பாபா சொல்கிறார், நான் எவ்வளவு நிரகங்காரியாக இருக்கிறேன்! என்னை வரவேற்பதற்காக இவ்வளவு செலவு செய்யாதீர்கள் என்று அந்த மனிதர்கள் சொல்ல மாட்டார்கள். பாபாவோ முதலிலேயே எழுதி விடுவார் - எந்த ஓர் ஆடம்பரமும் செய்ய வேண்டாம். ஸ்டேஷனுக்கு அனைவரும் வர வேண்டாம். ஏனென்றால் நாமே குப்தமாக உள்ளோம். இதையும் செய்யத் தேவையில்லை. இவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. மற்ற அனைவரையுமே அறிந்துள்ளனர். சிவபாபாவை முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர். ஆக, குப்தமாக இருப்பது நல்லது. எவ்வளவு நிரகங்காரியோ, அவ்வளவு நல்லது. உங்களது ஞானமே மௌனமாக இருப்பது தான். பாபாவுக்கு மகிமை செய்ய வேண்டும். அதன் மூலம் தான் புரிந்து கொள்வார்கள், தந்தை பதீதபாவன், சர்வ சக்திவான். தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கும். இதை குழந்தைகள் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. நீங்கள் சொல்வீர்கள், சிவபாபா விடமிருந்து எனக்கு புது உலகத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சித்திரங்களும் உள்ளன. இந்த தேவதைகள் போல் நாம் ஆகிறோம். சிவபாபா நமக்கு பிரம்மா மூலம் ஆஸ்தி தந்து கொண்டிருக்கிறார். அதனால் சிவபாபாவுக்கு மகிமை செய்கின்றனர். நோக்கம் குறிக்கோள் எவ்வளவு தெளிவாக உள்ளது! கொடுப்பவர் அவர். பிரம்மா மூலம் கற்றுக் கொடுக்கிறார். சித்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்க வேண்டும். சிவனுடைய சித்திரங்களும் எத்தனை உருவாக்கியுள்ளனர்! பாபா வந்து பதீத்திலிருந்து பாவனமாக்கி அனைவரையும் முக்தி, ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்கிறார். சித்திரங்களிலும் தெளிவாக உள்ளது. அதனால் பாபா வலியுறுத்திச் சொல்கிறார்-இதை அனைவருக்கும் கொடுப்பீர்களானால் எடுத்துச் சென்று படிப்பார்கள். இங்கிருந்து பொருள்களை எடுத்துச் செல்கின்றனர், அங்கே போய் அலங்கரித்து வைக்கின்றனர். இதுவோ மிக நல்ல பொருளாகும். துணியினாலான திரைகளோ மிகவும் பயனுள்ள பொருள்கள். இந்தச் சித்திரங் களிலும் கூட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேவியர் என்ற சொல்லும் கூட அவசியமாகும். வேறு எவரும் சேவியரும் அல்லர், பதீதபாவனும் அல்லர். பாவன ஆத்மாக்கள் வருகின்றனர் என்றாலும் கூட அவர்கள் அனைவரையும் பாவனமாக ஆக்குவதில்லை. அவர்களின் தர்மத்தைச் சேர்ந்தவர் களோ கீழே அவர்களின் நாடகப் பாத்திரத்தை நடிக்க வந்தாக வேண்டும். இந்தப் பாயின்ட்டுகளை புத்திசாலிக் குழந்தைகள் தான் தாரணை செய்வார்கள்.

ஸ்ரீமத் படி முழுமையாக நடப்பதில்லை என்றால் அவர்கள் படிப்பதில்லை. பிறகு ஃபெயிலாகி விடுகின்றனர். பாடசாலையில் நடத்தை, பண்புகளும் பார்க்கப் படுகின்றன. இவர்களின் நடத்தை எப்படி உள்ளது? தேக அபிமானத்தில் இருந்து அனைத்து விகாரங்களும் வந்து விடுகின்றன. பிறகு தாரணை எதுவும் ஆவதில்லை. கட்டளைப்படி நடக்கும் குழந்தைகளிடம் தான் பாபாவும் அன்பு காட்டுவார். புருஷார்த்தம் அதிகம் செய்ய வேண்டும். யாருக்காவது புரிய வைப்ப தென்றால் முதல்-முதலில் பாபாவுக்கு மகிமை செய்ய வேண்டும். பாபாவிடமிருந்து ஆஸ்தி எப்படிக் கிடைக்கிறது? பாபாவின் மகிமைகளை முழுமையாக எழுத வேண்டும். சித்திரங்களையோ மாற்ற முடியாது. மற்றப்படி போதனைகளை முழுமையாக எழுத வேண்டும். பாபாவின் மகிமைகள் வேறு. பாபாவிடமிருந்து கிருஷ்ணருக்கு ஆஸ்தி கிடைத்ததென்றால் அவருடைய மகிமை வேறு. தந்தையை அறிந்திராத காரணத்தால் பாரதம் பெரிய தீர்த்த ஸ்தலம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இதை உறுதிப் படுத்திச் சொல்ல வேண்டும்-பாரதம் அவிநாசி தீர்த்த ஸ்தலம் என்று. இப்படி-இப்படி குழந்தைகள் நீங்கள் அமர்ந்து புரிய வைப்பீர்களானால் மனிதர்கள் கேட்டு வியப்படைவார்கள். பாரதம் வைரம் போன்றதாக இருந்தது. பிறகு பாரதத்தை சோழி போல் யார் ஆக்கினார்? இதில் புரிய வைப்பதற்கும், விசார் சாகர் மந்தன் செய்வதற்கும் பெரிதும் தேவை உள்ளது. பாபாவோ உடனே சொல்கிறார், இதில் இந்தத் திருத்தம் செய்ய வேண்டும் என்று. குழந்தைகள் சொல்வதில்லை. பாபா திருத்தத்தையோ விரும்புகிறார். இஞ்சினீயர் ஒருவர் இருந்தார். மெஷின் கெட்டுப் போயிருந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் இன்னொருவர் உதவி இஞ்சினீயர் இருந்தார். அவர் அமர்ந்து சொன்னார்- இதில் இதைச் செய்வதால் இது சரியாகி விடும் என்று. அப்போது உண்மையிலேயே அந்த மெஷின் சரியாகி விட்டது. ஆக, அவர் மிகவும் குஷியாகி விட்டார். அவர் சொன்னார், இவருக்கோ பரிசளிக்க வேண்டும். அதனால் அவருடைய சம்பளத்தை அதிகப் படுத்தினார். பாபாவும் கூட சொல்கிறார், நீங்கள் திருத்தம் செய்வீர்களானால் நான் சபாஷ்-சபாஷ் என்று சொல்வேன். எப்படி ஜெகதீஷ் சஞ்சய் இருக்கிறார், எப்போதாவது நல்ல-நல்ல பாயின்ட்டுகளை வெளிப்படுத்துகிறார் என்றால் பாபா குஷியடைகிறார். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் வேண்டும். இந்தக் கண்காட்சி மேளாவோ எல்லாம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். எங்கெங்கே யாருடைய கண்காட்சி நடைபெறுகிறதோ, அங்கே இதையும் செய்வார்கள். இங்கோ புத்தியின் (கபாலம்) கதவு திறக்க வேண்டும். அனைவருக்கும் சுகம் தர வேண்டும். பாடசாலையில் நம்பர்வார் படிப்பவர்களோ இருக்கவே செய்கின்றனர். படிக்கவில்லை என்றால் பண்பு நடத்தைகளும் கெட்டுப் போகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யாருடனாவது கோபித்துக் கொண்டு படிப்பை விட்டுவிடக் கூடாது. தேக அபிமானத்தை விட்டு தன் மீது இரக்கம் கொள்ள வேண்டும். பாபாவுக்கு சமமாக நிரகங்காரி ஆக வேண்டும்.

2) நல்ல பண்புகளை தாரணை செய்ய வேண்டும். அனைவருக்கும் சுகம் தர வேண்டும். கட்டளைப்படி நடப்பவராகி இருக்க வேண்டும்.

வரதானம்:
ஒருமுகப்படுத்தும் சக்தி மூலமாக ஒரு நொடியில் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நஷ்டோ மோகா ஸ்மிருதி சொரூபம்) மோகத்தை அழித்து நினைவின் சொரூபம் ஆவீர்களாக.

கடைசி பேப்பரின் கேள்வி ஒரு நொடியில் முற்றுப்புள்ளி வைத்தல் என்பதாக இருக்கும். வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. அவ்வளவு தான். தந்தை மற்றும் நான் மூன்றாவது என்று எந்த விஷயமும் கிடையாது. ஒரு நொடியில் என்னுடைய பாபா இரண்டாமவர் என்று யாருமில்லை .... இதை யோசிப்பதில் கூட நேரம் பிடிக்கிறது. ஆனால் நிலைத்து விட வேண்டும். ஆடிப் போய் விடக் கூடாது. ஏன், என்ன .. .. என்பது போன்ற எந்த கேள்விகளும் உருவாகக் கூடாது. அப்பொழுது தான் நஷ்டோ மோகா ஸ்மிருதி சொரூபம் ஆவார்கள். எனவே பயிற்சி செய்யுங்கள் - எப்பொழுது வேண்டுமோ, விஸ்தாரத்தில் வருவோம். எப்பொழுது வேண்டுமோ ஒருமுகப்படுத்திக் கொண்டு விடுவோம். பிரேக். (பவர்ஃபுல்) சக்திசாலியாக இருக்க வேண்டும்.

சுலோகன்:
யாருக்கு (சுவமான்) சுயமானத்தின் (அபிமான்) அகம்பாவம் இல்லையோ, அவர்களே எப்பொழுதும் (நிர்மான்) பணிவுள்ளவர்கள் ஆவார்கள்.