14-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! மனிதனை தேவதையாக்கும் சேவையில் அவசியம் விக்னங்கள் (தடைகள்) ஏற்படும். நீங்கள் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு இந்த சேவையில் தயாராக இருக்க வேண்டும், கருணையுள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும்.

கேள்வி:
யாருக்கு கடைசி பிறப்பின் நினைவு இருக்கிறதோ அவர்களின் அடையாளம் என்ன?

பதில்:
இப்பொழுது இந்த உலகில் நாம் அடுத்த பிறப்பு எடுக்கக் கூடாது மற்றும் மற்றவர்களுக்கும் பிறப்பு கொடுக்கக் கூடாது என்று அவர்களது புத்தியில் இருக்கும். இது பாவ ஆத்மாக்களின் உலகம், இது இப்பொழுது விருத்தி ஆகக் கூடாது. இது விநாசம் ஆக வேண்டும். நாம் இந்த பழைய ஆடைகளைக் கழற்றி நமது வீட்டிற்குச் செல்வோம். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது.

பாடல்:
புது மரத்தின் மொட்டுக்கள் ........

ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு வரின் தீபத்தை ஏற்ற வேண்டும். இது உங்களது புத்தியில் இருக்கிறது. தந்தைக்கும் எல்லையற்ற சிந்தனை இருக்கிறது - எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்களோ அவர்களுக்கு முக்திக்கான வழியைக் கூற வேண்டும். குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காகவே, துக்கத் திலிருந்து விடுவிப்பதற்காகவே தந்தை வருகின்றார். இங்கு துக்கம் இருக்கிறது எனில் சுகமான இடமும் ஒன்று இருக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வது கிடையாது. இதை அறியவே இல்லை. சாஸ்திரங்களில் சுகமாக இடத்தையும் கூட துக்கமான ஸ்தானமாக ஆக்கி விட்டனர். இப்பொழுது தந்தை கருணையுள்ளம் உடையவராக இருக்கின்றார். நாம் துக்கமாக இருக்கிறோம், ஏனெனில் சுகம் மற்றும் சுகம் கொடுப்பவரைப் பற்றி அறியவில்லை. இதுவும் நாடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. சுகம் என்று எதைக் கூறுகிறோம்? துக்கம் என்று எதைக் கூறுகிறோம்? என்பதை அறியவில்லை. ஈஸ்வரனைப் பற்றி கூறுகையில் அவரே சுகம், துக்கம் கொடுக்கிறார் என்று கூறிவிடுகின்றனர். அதாவது அவரைக் களங்கப்படுத்தி விட்டனர். எந்த ஈஸ்வரை தந்தை என்று கூறுகிறோமோ அவரை அறியவில்லை. தந்தை கூறுகின்றார் - நான் குழந்தைகளுக்கு சுகம் தான் கொடுக் கிறேன். பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நான் அனைவரையும் இனிய வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று கூறுகின்றார். அந்த இனிய வீடும் பாவனமானதாக இருக்கிறது. அங்கு எந்த பதீத ஆத்மாவும் இருப்பது கிடையாது. இந்த இடத்தை யாரும் அறியவில்லை. இன்னார் நிர்வாண்தாமத்திற்குச் சென்று விட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் புரிந்து கொள்வது கிடையாது. புத்தர் நிர்வாண்தாமத்திற்குச் சென்றார் எனில், நிச்சயம் அங்கு வசிப்பவராக இருந்திருக்க வேண்டும். அங்கேயே சென்று விட்டார். நல்லது, அவர் சென்று விட்டார் சரி, மற்றவர் கள் எப்படிச் செல்ல முடியும்? கூடவே யாரையும் அழைத்துச் செல்லவில்லை. உண்மையில் அவர் செல்லவேயில்லை. ஆகையால் பதீத பாவன் தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். பாவன உலகம் இரண்டு, ஒன்று முக்திதாமம், மற்றொன்று ஜீவன்முக்தி தாமம். சிவபுரி மற்றும் விஷ்ணுபுரி. இது இராவணபுரியாகும். பரம்பிதா பரமாத்மாவை இராமர் என்றும் கூறுகின்றனர். இராம இராஜ்யம் என்று கூறப்படுகிறது எனில் புத்தி பரமாத்மாவின் பக்கம் சென்று விடுகிறது. மனிதர்கள் அனைவருமே பரமாத்மாவை ஏற்றுக் கொள்வார்கள் என்பது கிடையாது. ஆக உங்களுக்கு கருணை ஏற்படுகிறது. கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பாபா கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே! மனிதர்களை தேவதையாக்கும் இந்த ஞான யக்ஞத்தில் அதிக தடைகள் ஏற்படும். கீதையின் பகவான் அவமதிக்கப்பட்டிருக்கிறார் அல்லவா! அவமரியாதை அவருக்கும், உங்களுக்கும் ஏற்படுகிறது. இவர் நான்காம் பிறையைப் பார்த்தவராக இருக்கக் கூடும் என்று கூறுவர் அல்லவா! இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். உலகில் எவ்வளவு அசுத்தங்கள் உள்ளன! மனிதர்கள் என்ன என்னவெல்லம் சாப்பிடுகின்றனர்? மிருகங்களை அழிக்கின்றனர், என்ன என்ன செய்கின்றனர்! தந்தை வந்து இவையனைத்து விசயங் களிலிருந்தும் விடுவித்து விடுகின்றார். உலகில் எவ்வளவு சண்டை சச்சரவுகள் நடக்கின்றன! உங்களுக்காக தந்தை எவ்வளவு எளிதாக ஆக்கிவிட்டார்! தந்தை கூறுகின்றார் - நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்தால் போதும், விகர்மங்கள் விநாசம் ஆகி விடும். அனைவருக்கும் ஒரே விசயத்தைப் புரிய வையுங்கள். தந்தை கூறுகின்றார் - தங்களது சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் உண்மையில் அங்கு வசிக்கக் கூடியவர்கள். சந்நியாசி களும் கூட அதற்கான வழியைத் தான் கூறுகின்றனர். ஒருவேளை ஒருவர் நிர்வாண்தாமத்திற்குச் சென்று விட்டால் பிறகு அவர் மற்றவர்களை எப்படி அழைத்துச் செல்வார்? அவர்களை யார் அழைத்துச் செல்வது? புத்தர் நிர்வாண்தாமத்திற்குச் சென்றதாக வைத்துக் கொள்ளுங்கள், அவரது பௌத்த தர்மத்தினர் இங்கு தான் அமர்ந்திருக்கின்றனர். அவர்களை திரும்பி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லவா! இறை தூதுவர்கள் அனைவரின் ஆத்மாவும் இங்கு தான் இருக்கிறது, அதாவது ஏதாவது சரீரத்தில் இருக்கிறது, இருப்பினும் மகிமை பாடப்படுகிறது. நல்லது, தர்ம ஸ்தாபனை செய்து விட்டுச் சென்றார், பிறகு என்ன ஆனது? முக்திக்குச் செல்ல மனிதர்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! அவரோ (பாபா) இந்த ஜபம், தீர்த்த யாத்திரை போன்றவை களைக் கற்றுக் கொடுக்கவில்லை. தந்தை கூறுகின்றார் - அனைவருக்கும் கதி, சத்கதி அளிப்பதற் காகவே நான் வருகிறேன். அனைவரையும் அழைத்துச் செல்கிறேன். சத்யுகத்தில் ஜீவன்முக்தி இருக்கிறது. ஒரே ஒரு தர்மம் தான் இருக்கிறது, மற்ற அனைத்து ஆத்மாக்களையும் திரும்பி அழைத்துச் செல்கிறேன். பாபா தோட்டத்தின் எஜமானார், நாம் தோட்டக்காரர்கள் என்பதை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். மம்மா, பாபா மற்றும் அனைத்து குழந்தைகளும் தோட்டக்காரராகி விதை விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். நாற்று முளைக்கிறது பிறகு மாயையின் புயல் வந்து சாய்ந்து விடுகிறது. பலவிதமான புயல்கள் ஏற்படுகின்றன. இது மாயையின் தடைகளாகும். புயல்கள் வருகின்றன எனில் கேட்க வேண்டும் - பாபா, இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீமத் கொடுப்பவர் தந்தை ஆவார். புயல்கள் வரத்தான் செய்யும். முதல் நம்பரில் இருப்பது தேக அபிமானம் ஆகும். நான் ஆத்மா அழிவற்றவன், இந்த சரீரம் அழியக் கூடியது என்பதைப் புரிந்து கொள்வது கிடையாது. நமது 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது. ஆத்மா தான் மறுபிறப்பு எடுக்கிறது. அடிக்கடி ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்பது ஆத்மாவின் வேலையாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இது உங்களது கடைசிப் பிறவியாகும். இந்த உலகில் அடுத்த பிறப்பு எடுக்கக் கூடாது, யாருக்கும் கொடுக்கவும் கூடாது. பிறகு சிருஷ்டி எப்படி விருத்தியாகும்? என்று கேட்கின்றனர். அட, இந்த நேரத்தில் சிருஷ்டியின் விருத்தி தேவையில்லை. இது பிரஷ்டாச்சாரத்தின் விருத்தியாகும். இந்த வழக்கம் இராவணனிடமிருந்து ஆரம்பமானது ஆகும். உலகில் பிரஷ்டாச்சாரத்தை உருவாக்குவது இராவணன் ஆகும். சிரேஷ்டாச்சாரியாக ஆக்குவது இராமர். இதற்கும் நீங்கள் எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். ஒருவேளை தேக அபிமானத்தில் வரவில்லையெனில், பிறகு தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். சத்யுகத்திலும் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்வீர்கள் அல்லவா! இப்பொழுது எனது இந்த சரீரத்திற்கு வயதாகிவிட்டது, இதனை விடுத்து புதியதை எடுப்பேன் என்பதை அறிவீர்கள். இங்கு ஆத்மாவின் ஞானமும் கிடையாது. தன்னை தேகம் என்று உணர்ந்து அமர்ந்திருக்கிறார்கள், யார் துக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இந்த உலகிலிருந்து செல்ல வேண்டும் என்று உள்ளம் விரும்புகிறது. அங்கு சுகம் தான் இருக்கும். மற்றபடி அங்கு ஆத்மாவின் ஞானம் இருக்கும். ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்பர். ஆகையால் துக்கம் ஏற்படாது. அது சுகத்தின் பிராப்தியாகும். இங்கும் ஆத்மா என்று கூறுகின்றனர், பிறகு சிலர் ஆத்மா தான் பரமாத்மா என்றும் கூறிவிடுகின்றனர். ஆத்மா இருக்கிறது, இது ஞானம் அல்லலவா! ஆனால் நாம் இந்த நடிப்பிலிருந்து திரும்பிச் செல்ல முடியாது என்பதை அறியவில்லை. ஒரு சரீரத்தை விடுத்து பிறகு அவசியம் மற்றொன்றை எடுக்க வேண்டும். மறுபிறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வர். அனைவரின் கணக்கும் கூடிக் கொண்டே இருக்கிறது அல்லவா! மாயையின் இராஜ்ஜியத்தில் காரியங்கள் விகர்மமாகத் தான் ஆகின்றன, ஆக கணக்கு கூடிக் கொண்டே இருக்கின்றது. கணக்கு அதிகரிக்கும் அளவிற்கு அங்கு எந்த காரியங்களும் இருக்காது.

திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். விநாசம் ஆகியே தீர வேண்டும். அணுகுண்டின் பரிசோதனையும் செய்து கொண்டிருக்கின்றனர். கோபத்தில் வந்து பிறகு போட்டு விடுகின்றனர். சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளன. ஐரோப்பியர்கள் யாதவர்கள் என்று கூறப் பட்டிருக்கிறது. நாம் அனைத்து தர்மத்தினர்களையும் ஐரோப்பியர்கள் என்று தான் கூறுகிறோம். ஒருபுறம் பாரதம் இருக்கிறது, மற்ற அனைவரையும் ஒன்றாக ஆக்கிவிட்டோம். தனது கண்டத்தின் மீது அவர்களுக்கு அதிக அன்பு இருக்கிறது. ஆனால் நாடகத்தில் இவ்வாறு இருக்கிறது என்ன செய்ய முடியும்? முழு சக்தியையும் பாபா கொடுத்துக் கொண்டிருக்கிறார். யோக பலத்தின் மூலம் நீங்கள் இராஜ்யம் அடைகிறீர்கள். உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. என்னை நினைவு செய்யுங்கள், தேக அபிமானத்தை விட்டு விடுங்கள் என்று மட்டுமே தந்தை கூறுகின்றார். நான் இராமரை நினைக்கிறேன், ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கிறேன் என்று கூறுகின்றனர் எனில், அவர்கள் தங்களை ஆத்மா என்று நினைப்பது கிடையாது. ஆத்மா என்று நினைக்கின்றனர் எனில் ஆத்மாவின் தந்தையை ஏன் நினைப்பது கிடையாது? தந்தை கூறுகின்றார் - பரம்பிதா பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஜீவாத்மாக்களை ஏன் நினைவு செய்கிறீர்கள்? நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். நான் ஆத்மா, தந்தையை நினைவு செய்கிறேன். பாபா கட்டளையிட்டிருக்கிறார் - நினைவு செய்வதன் மூலம் விகர்மம் விநாசம் ஆகும் மற்றும் ஆஸ்தியும் புத்தியில் வந்து விடும். தந்தை மற்றும் ஆஸ்தி அதாவது முக்தி மற்றும் ஜீவன் முக்தி. இதற்காகத் தான் அலைந்து கொண்டிருக்கின்றனர். யக்ஞம், தவம், ஜபம் போன்றவைகள் செய்து கொண்டிருக்கின்றனர். போப்பிடமும் ஆசீர்வாதம் பெறுவதற்குச் செல்கின்றனர். இங்கு தந்தை கூறுவது தேக அபிமானத்தை விடுங்கள், தன்னை ஆத்மா என்ற நிச்சயம் செய்யுங்கள். இந்த நாடகம் முடிவடைகிறது, நமது 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது, இப்பொழுது செல்ல வேண்டும். எவ்வளவு எளிதாக்கி புரிய வைக்கின்றார்! இல்லறத்தில் இருந்தாலும் இதை புத்தியில் வையுங்கள். எவ்வாறு நாடகம் முடிவடையும் தருவாயில் இன்னும் 15 நிமிடங்கள் தான் இருக்கின்றன என்று நினைப்பர். இப்பொழுது இந்தக் காட்சி முடிவடையும், நாம் இந்த ஆடைகளை களைத்து விட்டு வீட்டிற்குச் செல்வோம் என்று நடிகர்கள் நினைப்பர். இப்பொழுது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட விசயங்களைத் தனக்குத் தானே உரையாடிக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் நாம் சுகம், துக்கத்தின் பாகத்தை நடித்தோம்? என்பதை அறிவீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள், உலகில் என்ன என்ன நடந்து கொண்டிருக்கிறது? இவையனைத்தையும் மறந்து விடுங்கள். இவையனைத்தும் அழியக் கூடியவைகள். இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். கலியுகம் இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் நடைபெறும் அவர்கள் புரிந்திருக்கின்றனர். இதற்குத் தான் ஆழ்ந்த இருள் என்று கூறப்படுகிறது. தந்தையின் அறிமுகம் இல்லை. ஞானம் என்றால் தந்தையின் அறிமுகம், அஞ்ஞானம் என்றால் அறியாமை. ஆக ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் ஆழ்ந்த வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் - வரிசைக்கிரமமாக. இப்பொழுது இரவு முடிவடையப் போகிறது, நாம் திரும்பிச் செல்கிறோம். இன்று பிரம்மாவின் இரவு, நாளை பிரம்மாவின் பகல் ஏற்படும், மாறுவதற்கு நேரம் தேவைப்படும் அல்லவா! இப்பொழுது நாம் மரண உலகில் இருக்கிறோம், நாளை அமரலோகத்தில் இருப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு இந்த 84 பிறவிச் சக்கரம் சுற்றுகிறது. இவ்வாறு சுற்றுவது நின்று விடாது. நீங்கள் எவ்வளவு முறை என்னை சந்தித்திருப்பீர்கள்? என்று பாபா கேட்கிறார். பல முறை சந்தித்திருக்கிறோம் என்று குழந்தைகள் கூறுகிறீர்கள். உங்களது 84 பிறவிச் சக்கரம் முடிவடைகிறது எனில் அனைவருக்கும் முடிவடைந்து விடுகிறது. இது தான் ஞானம் என்று கூறப்படுகிறது. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஞானக் கடல், பரம்பிதா பரமாத்மா, பதீத பாவன் ஆவார். பதீத பாவன் என்று யார் அழைக்கப்படுகின்றார்? என்று நீங்கள் கேளுங்கள். பகவான் என்று நிராகாராமானவர் தான் கூறப்படுகின்றார். பிறகு நீங்கள் ஏன் இரகுபதி இராகவ இராஜாராம் என்று கூறுகிறீர்கள்? ஆத்மாக்களின் தந்தையானவர் அந்த நிராகாரமானவர் தான், புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி தேவை.

நாளுக்கு நாள் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஏனெனில் ஆழமான ஞானம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. புரிய வைக்க வேண்டியது அல்லாவின் விசயம் மட்டுமே. அல்லாவை மறந்ததால் அனாதைகளாக ஆகிவிட்டீர்கள், துக்கமானவர்களாக ஆகிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒருவரின் மூலம் ஒருவரை அறிந்து கொள்வதால் 21 பிறவிகளுக்கு சுகம் ஏற்பட்டு விடுகிறது. இது ஞானம், அது அஞ்ஞானமாகும். அதாவது பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனர். அட, அவர் தந்தையாக இருக்கிறார். தந்தை கூறுகிறார் - உங்களுக்குள் இருக்கும் பூதம் தான் சர்வவியாபி ஆகும். 5 விகாரங்கள் என்ற இராவணன் தான் சர்வவியாபியாக இருக்கிறது. இந்த விசயங்களைப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. நாம் ஈஸ்வரனின் மடியில் இருக்கிறோம் - இந்த மிக உயர்ந்த போதை இருக்க வேண்டும். பிறகு எதிர்காலத்தில் தேவதைகளின் மடிக்குச் செல்வோம். அங்கு சதா சுகமாக இருப்பீர்கள். சிவபாபா நம்மை தத்தெடுத்திருக்கிறார். அவரை நினைவு செய்ய வேண்டும். தனக்கும் பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும், அப்பொழுது தான் இராஜ்ஜியம் கிடைக்கும். இது புரிந்து கொள்வதற்கு மிக நல்ல விசயமாகும். சிவபாபா நிராகாராக இருக்கிறார், ஆத்மாக்களாகிய நாமும் நிரகாராக இருக் கிறோம். அங்கு நாம் அசரீரியாக, ஆடையின்றி இருந்தோம். பாபா சதா அசரீரியாகவே இருக் கின்றார், பாபா ஒருபொழுதும் சரீரம் என்ற ஆடையை அணிந்து மறுபிறப்பு எடுப்பது கிடையாது. பாபா ஒரே ஒருமுறை அவதாரம் எடுக்கிறார். முதன் முதலில் பிராமணர்களைப் படைக்கிறார் எனில் அவர்களை தன்னுடையவர்களாக ஆக்கிய பிறகு பெயர் வைக்க வேண்டும் அல்லவா! பிரம்மா இல்லையெனில் பிறகு பிராமணர்கள் எங்கிருந்து வருவர்? ஆக இவர் அவரே தான், அதாவது முழு 84 பிறவிகள் எடுத்திருப்பவர், வெள்ளையாக இருந்தவர், பிறகு கருப்பாக ஆகிவிட்டார், சுந்தரலிருந்து சியாம், சியாமிலிருந்து (அசுத்தத்திலிருந்து) சுந்தர் ஆகின்றார். பாரதத் திற்கும் கூட நாம் சியாம் சுந்தர் என்ற பெயர் வைக்கலாம். பாரதம் தான் சியாம் (கருப்பு), பாரதம் தான் தங்கயுகம், சுந்தர மான காலம் என்று கூறப்படுகிறது. பாரதம் தான் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகிறது. பாரதம் தான் ஞானச் சிதையில் அமர்ந்து வெள்ளையாக ஆகிறது. பாரதத்தில் உள்ளவர்களுக்குத் தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. பாரதவாசிகள் பிறகு பிற தர்மங்களுக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். ஐரோப்பியர் மற்றும் இந்தியர்களில் வேறுபாடுகள் தென்படாது. அங்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர், பிறகு கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். அவர்களது குழந்தைகளும் கூட அதே தோற்றத்துடன் இருக்கின்றனர். ஆப்பிரிக்கர்களையும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இப்பொழுது சக்கரத்தைப் புரிந்து கொள்வதற்கு பாபா விசாலபுத்தி கொடுக்கிறார். விநாச கால விபரீத புத்தி என்றும் எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்கள் மற்றும் கௌரவர்கள் அன்பு செலுத்த வில்லை. யார் அன்பு செலுத்தினார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. எதிரிகளுக்குத் தான் விபரீத புத்தி என்று கூறப்படுகிறது. இச்சமயத்தில் அனைவருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் தான்! பாபாவை சர்வவியாபி என்று கூறி இகழ்ந்துவிட்டனர். பிறகு பிறப்பு, இறப்பு இல்லாதவர் எனக் கூறிவிடுகின்றனர். அவருக்கு எவ்வித பெயர், உருவம் கிடையாது என்று கூறிவிடுகின்றனர். ஓ பரமபிதாவே! என்று கூறுகின்றனர், ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சாட்சாத்காரமும் ஏற்படு கிறது. அதற்கும் பரமாத்மாவிற்கும் வித்தியாசம் இருப்பது கிடையாது. மற்றபடி வரிசைக்கிரமமாக சக்திகளில் முன்பின் இருக்கவே செய்கிறது. மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருக்கின்றனர், அவர்களிலும் பதவிகள் இருக்கின்றன. புத்தியில் வித்தியாசம் இருக்கிறது. ஞானக் கடலானவர் உங்களுக்கு ஞானம் கொடுத்திருக்கிறார், ஆக அவரை நினைவு செய்கிறீர்கள். அந்த நிலை உங்களுக்கு கடைசியில் ஏற்படும்.

அமிர்தவேளையில் நினைத்து நினைத்து சுகம் அடையுங்கள். படுத்திருங்கள், ஆனால் உறங்கி விடாதீர்கள். தன்னை அடக்கிக் கொண்டு அமர வேண்டும். முயற்சி இருக்கிறது. வைத்தியர்களும் கூட அமிர்த வேளைக்கான மருந்து கொடுக்கின்றனர். இதுவும் மருந்தாகும். படைப்பவராகிய தந்தை பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைத்து கற்பிக்கின்றார் - இந்த விசயத்தை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் ஈஸ்வரனின் மடியில் வந்திருக்கிறோம், பிறகு தேவதையின் மடிக்குச் செல்வோம் என்ற ஆன்மீக போதையில் இருக்க வேண்டும். தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும்.

2) அமிர்தவேளையில் எழுந்து ஞானக் கடலின் ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். ஒருவரின் கலப்படமற்ற நினைவில் இருக்க வேண்டும். தேக அபிமானத்தை விடுத்து தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும்.

வரதானம்:
அமிருதவேளை முதல் இரவு வரை நினைவின் விதியுடன் கூட ஒவ்வொரு செயலும் செய்யக் கூடிய சித்தி சொரூபம் ஆவீர்களாக.

அமிருதவேளை முதல் இரவு வரை என்ன செயல்கள் செய்தாலும் சரி, நினைவின் விதியுடன் கூடிய செயலாக செய்யுங்கள். அப்பொழுது ஒவ்வொரு கர்மத்திலும் சித்தி - வெற்றி கிடைக்கும். எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய சித்தியாவது - கண்கூடான பலனின் ரூபத்தில் அதீந்திரிய சுகத்தின் உணர்வு ஏற்படுவது. எப்பொழுதுமே சுகத்தின் அலைகளில், மகிழ்ச்சியின் அலைகளில் மூழ்கிக் கொண்டே இருப்பார்கள். எனவே இந்த (பிரத்யட்ச பலன்) கண்கூடான பலனும் கிடைக்கிறது. மேலும் பிறகு வருங்கால பலனும் கிடைக் கிறது. இந்த நேரத்தினுடைய கண்கூடான பலனாவது அநேக வருங்கால பிறவிகளினுடைய பலனை விட சிறந்தது ஆகும். இப்பொழுதே செய்தீர்கள், இப்பொழுதே கிடைத்து விட்டது - இதற்குத் தான் பிரத்யட்ச பலன் என்று கூறுவார்கள்.

சுலோகன்:
சுயம் தங்களை கருவி என்று கருதி, ஒவ்வொரு செயலையும் செய்தீர்கள் என்றால் விலகியும் பிரியமாகவும் (ந்யாரா, ப்யாரா) இருப்பீர்கள். நான் என்ற தன்மை வர முடியாது.