20-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - நீங்கள் சதா ஆரோக்கியம் மற்றும் செல்வந்தர் ஆவதற்காக இப்போது உங்களுடைய உடல், மனம், பொருளைக் காப்பீடு செய்யுங்கள். இச்சமயத்தில் தான் இந்த எல்லையற்ற காப்பீடு செய்யப்படுகிறது.

கேள்வி:
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் எந்த நினைவை ஏற்படுத்தி முன்னேற்றத்தை அடைய வேண்டும்?

பதில்:
இப்போது நாடகம் முடிந்ததும் வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டும். பல முறை இந்த நடிப்பை நடித்தாயிற்று. 84 பிறவிகள் முழுமை அடைந்து விட்டது. இப்போது சரீரம் என்ற உடையை அகற்றி வீட்டிற்குச் செல்வோம் என்பதை ஒருவருக்கொருவர் நினைவு படுத்துங்கள். இதுவே ஆன்மீக சமூக சேவையாளர்களாகிய உங்களின் சேவை. ஆன்மீக சமூக சேவை யாளராகிய நீங்கள் அனைவருக்கும் தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து தந்தை மற்றும் வீட்டை நினையுங்கள் என்ற செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்

பாடல்:
ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள் பிரபுவே...........

ஓம் சாந்தி.
பெரும்பாலும் கீதா பாட சாலைகள் உள்ள இடங்களில் குறிப்பாக இந்த பாடலைப் பாடுகிறார்கள். கீதையை சொல்லிக் கொடுக்கக்கூடியவர்கள் முதலில் இந்த சுலோகனைப் பாடுகிறார்கள். யாரை அழைக்கிறார்கள் என்பதை அறியவில்லை, இச்சமயம் தர்மம் கீழான நிலைக்கு வந்து விட்டது. முதலில் பிரார்த்தனை, பிறகு வாருங்கள், மீண்டும் வந்து கீதையின் ஞானத்தைக் கூறுங்கள் என வேண்டுகிறார்கள். ஏனென்றால் பாவம் மிகவும் பெருகி விட்டது. பிறகு ஆம், பாரத மக்கள் பாவ ஆத்மாக்களாக துக்கம் உடையவர்களாக மாறும் போது தர்மம் அதர்மம் ஆகும் போது நான் வருகிறேன் என அவர் பதிலளிக்கிறார். சொரூபத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிச்சயமாக மனித உடலில் தான் வருவார். அனைத்து ஆத்மாக் களும் ரூபத்தை மாற்றுகிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உண்மையில் நிராகாரி. பின் இங்கே சாகாரத்தில் மாறுகிறீர்கள். மனிதர்கள் என அழைக்கப்படுகிறீர்கள். இப்போது மனிதர்கள் பாவ ஆத்மாவாக, பதீதமாக இருப்பதால் நானும் எனது ரூபத்தைப் படைக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எப்படி நிராகார நிலையில் இருந்து சாகார நிலைக்கு மாறுகிறீர்களோ, அவ்வாறே நானும் மாற வேண்டியிருக்கிறது. இந்த பதீத உலகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வரமுடியாது. அவரோ சொர்க்கத்திற்கு அதிபதி யாவார். ஸ்ரீ கிருஷ்ணர் கீதையைக் கூறினார் என நினைக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் பதீத உலகத்தில் இருக்க முடியாது. அவருடைய பெயர், ரூபம், தேசம், காலம், நடிப்பு அனைத்தும் முற்றிலும் தனிப்பட்டது. இதை பாபா கூறுகின்றார். கிருஷ்ணருக்கு அவருக்கென்று தாய் தந்தை இருக்கின்றனர். அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்து தனது ரூபத்தைப் படைக்கிறார். நானோ கர்ப்பத்தில் வருவதில்லை. எனக்கு நிச்சயம் ரதம் வேண்டும். நான் இவருடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் பிரவேசம் ஆகிறேன். முதல் நம்பரில் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். இது இவருடைய பல பிறவிகளின் கடைசி பிறவி 84வது பிறவி. எனவே நான் இவருக்குள் வருகிறேன். இவருக்கு தன்னுடைய பிறவிகளைப் பற்றித் தெரியாது. ஸ்ரீ கிருஷ்ணர் எனது பிறவிகளைப் பற்றி நான் அறியவில்லை எனக் கூற மாட்டார். நான் யாருக்குள் பிரவேசமாகின்றேனோ அவருக்கு அவருடைய பிறவிகளைப் பற்றித் தெரியாது என பகவான் கூறுகின்றார். கிருஷ்ணர் இராஜ்யத் திற்கே அதிபதி என நான் அறிகிறேன். சத்யுகத்தில் சூரிய வம்ச இராஜ்யம், விஷ்ணுபுரி இருக்கிறது. இலஷ்மி நாராயணனுக்கு விஷ்ணு என்று பெயர். எங்கு சொற்பொழி வாற்றினாலும் இந்த பாட்டு போதுமானது. ஏனென்றால் இதை பாரதவாசிகளே தான் பாடுகிறார்கள். தர்மம் மறைந்து போகும் போது தான் மீண்டும் கீதையைக் கூறுவேன். மீண்டும் அதே தர்மம் ஸ்தாபனை ஆகிறது. அந்த தர்மத்தின் மனிதர்கள் யாருமே இல்லை என்றால் மீண்டும் கீதா ஞானம் எங்கிருந்து வெளிப்பட்டது? சத்யுகம், திரேதாவில் எந்த சாஸ்திரமும் இல்லை என பாபா புரிய வைக்கிறார். இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயம் ஆகும். இவைகள் மூலமாக யாரும் என்னை அடைவதில்லை. நானே வரவேண்டியிருக்கிறது. வந்து அனைவருக்கும் கதி(முக்தி) வழியாக சத்கதி கொடுக்கிறேன். அனைவரும் திரும்பிப் போக வேண்டிய திருக்கிறது. வீட்டிற்குச் சென்று பிறகு சொர்க்கத்தில் வர வேண்டும். முக்திக்கு சென்று பிறகு ஜீவன் முக்திக்கு வர வேண்டும். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது என பாபா கூறுகின்றார். இல்லறத்தில் இருந்தாலும் ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்றால் துக்கமற்ற வாழ்க்கை என்று பாடப்பட்டிருக்கிறது. சன்னியாசிகள் ஜீவன் முக்தியை உருவாக்க முடியாது. அவர்கள் ஜீவன் முக்தியை ஏற்பதில்லை. இந்த சன்னியாசிகளின் தர்மமே கிடையாது பிற்காலத்தில் தான் சன்னியாச தர்மம் தோன்றுகிறது. இஸ்லாமியர்கள், பௌத்தர் போன்றோர் சத்யுகத்தில் வர மாட்டடார்கள். இப்போது மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கிறது. தேவதா தர்மம் மட்டும் இல்லை. அவர்கள் அனைவரும் வேற்று தர்மங்களில் சென்று விட்டனர். தன்னுடைய தர்மத்தைப் பற்றியே தெரியவில்லை. யாருமே தன்னை தேவதா தர்மம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஜெய்ஹிந்த் என்கிறார்கள். அது தந்தை கிடையாது. பாரதத்திற்கு வெற்றி, பாரத்திற்கு தோல்வி எப்போது ஏற்படுகிறது. இது யாருக்கும் தெரியாது. எப்போது பழைய உலகம் அழிந்து இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறதோ அப்போது பாரதத்திற்கு வெற்றி கிடைக்கிறது. இராவணன் தான் அழிக்கிறான். இராமர் வெற்றி அடைய வைக்கிறார். பாரதத்திற்கு வெற்றி (ஜெய் பாரத்) என்றார்கள். ஜெய்ஹிந்த் இல்லை. வார்த்தையையே மாற்றி விட்டார்கள். கீதையில் நல்ல நல்ல வார்த்தைகள் இருக்கின்றன.

உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், எனக்குத் தாய், தந்தை இல்லை என்கிறார். நான் எனது ரூபத்தை நானே உருவாக்க வேண்டியிருக்கிறது. நான் இவருக்குள் பிரவேசம் ஆகிறேன். கிருஷ்ணருக்கு தாய் தான் பிறப்பு கொடுக்கிறார். நான் படைக்கக் கூடியவன். நாடகத்தின் படி பக்தி மார்க்கத்திற்காக இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கீதை, பாகவதம் அனைத்தும் தேவதா தர்மத்தை வைத்து தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாபா ஸ்தாபனை செய்த தேவி தேவதா தர்மம் முடிந்து விட்டது. மீண்டும் எதிர் காலத்தில் வரும். முதல், இடை, கடையை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிறார்கள். இதில் முதல், இடை, கடை என்பதன் பொருள் தனியாகும். எது முடிந்து விட்டதோ அதுவே நடந்துக் கொண்டிருக்கிறது. முடிந்த கதையைக் கூறுகிறார்கள். அதுவே எதிர்காலத்தில் திரும்ப நடக்கும். மனிதர்கள் இந்த விஷயங்களை அறியவில்லை. எது முடிந்து விட்டதோ அந்த கதையை பாபா நிகழ்காலத்தில் சொல்கின்றார். பிறகு எதிர்காலத்தில் திரும்ப நடக்கும், இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். மிகவும் தெள்ளத் தெளிவான புத்தி வேண்டும். உங்களை எங்கே அழைத்தாலும் அங்கே குழந்தைகள் உரையாற்ற வேண்டும். குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். தனது தந்தை யார் என குழந்தைகள் கூறுவார்கள். நிச்சயம் தந்தை வேண்டும். இல்லை என்றால் சொத்து எப்படி அடைவார்கள்? நீங்கள் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள். ஆனால், இந்த பெரிய மனிதர்களுக்கும் கூட மரியாதை கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அனைருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் ஓ, கடவுளே வாருங்கள் என இறை தந்தையை அழைக்கிறார்கள். ஆனால் அவர் யார்? நீங்கள் சிவபாபாவின் மகிமையை பாட வேண்டும், ஸ்ரீகிருஷ்ணரின் மகிமையையும் செய்ய வேண்டும் மேலும் பாரதத்தின் மகிமையை செய்ய வேண்டும். பாரதம் சிவாலயமாக சொர்க்கமாக இருந்தது. 5000 வருடத்திற்கு முன்பு தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அதை யார் ஸ்தாபனை செய்தது? நிச்சயமாக உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்த நிராகார் பரம்பிதா பரமாத்மா சிவாய நமஹ ஆகிவிட்டது. பாரதவாசிகள் தான் சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவன் எப்போது வருகை புரிந்தார்? இதுயாருக்கும் தெரியவில்லை. நிச்சயமாக சொர்க்கத்திற்கு முன்பு சங்கமம் வந்திருக்க வேண்டும். கல்ப கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை என்று கூறுவார். ஒரு வேளை ஒவ்வொரு யுகம் என்றாலும் நான்கு அவதாரம் இருக்க வேண்டும். அவர்கள் எத்தனை அவதாரங்களைக் காண்பித்திருக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த ஒரு தந்தையே சொர்க்கத்தைப் படைக்கின்றார். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது விகாரமற்றதாக இருந்தது. குழந்தைகள் எப்படிப் பிறக்கிறார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்க முடியாது. என்ன பழக்க வழக்கங்கள் இருந்ததோ அது நடக்கும். நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள்? முதலில் நீங்கள் பாபாவைப் புரிந்துக் கொள்ளுங்கள். அங்கே ஆத்ம ஞானம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறோம். அழ வேண்டிய விஷயம் இல்லை. ஒரு போதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. குஷியோடு சரீரத்தை விடுகிறார்கள். நான் எப்படி ரூபத்தை மாற்றிக் கொண்டு வருகிறேன் என்பதை தந்தையே புரிய வைத்திருக்கிறார். கிருஷ்ணருக்கு அவ்வாறு கூற முடியாது. அவர் கருவிலிருந்து பிறவி எடுக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனவாசிகள். இங்கே தான் பிரஜா பிதா இருக்க வேண்டும். நாம் அவருடைய வாரிசுகள். அந்த நிராகார தந்தை அழிவற்றவர்! ஆத்மாக்களாகிய நாமும் கூட அழிவற்றவர்களே. ஆனால் நாம் நிச்சயமாக மறுபிறவி எடுக்க வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் வந்து கீதையின் ஞானத்தைக் கூறுங்கள் என்கிறார்கள் என்றால் நிச்சயமாக யார் வந்து சென்றிருக்கிறார்களோ அனைவரும் சக்கரத்தில் வருவார்கள். பாபாவும் வந்து சென்றிருக்கிறார். மீண்டும் வந்திருக்கிறார். மீண்டும் வந்து கீதையைக் கூறுகிறேன் என்கிறார். பதீத பாவனா வாருங்கள் என அழைக்கிறார்கள் என்றால் நிச்சயம் இது பதீத உலகம் ஆகும். அனைவரும் பதீதமாக இருக்கிறார்கள். எனவே தான் பாவத்தைப் போக்குவதற்காக கங்கா ஸ்தானம் செய்கிறார்கள். சொர்க்கத்தில் இந்த பாரதம் தான் இருந்தது. பாரதம் உயர்ந்த அழியாத கண்டம். அனைவரின் தீர்த்த ஸ்தலம் ஆகும். அனைத்து மனிதர்களும் பதீதமாக இருக் கிறார்கள். அனைவருக்கும் ஜீவன் முக்தி கொடுக்கக் கூடியவர் அந்த தந்தை, நிச்சயமாக இவ்வளவு பெரிய சேவையை செய்கிறார் என்றால் அவருடைய மகிமையைப் பாட வேண்டும். அழியாத தந்தையின் பிறப்பிடம் பாரதம் ஆகும். அவரே அனைவரையும் பாவனமாக மாற்றக் கூடியவர். பாபா தன்னுடைய பிறப்பிடத்தை விட்டு விட்டு வேறு எங்கும் போக முடியாது. எனவே தான் பாபா நான் எப்படி ரூபத்தை படைக்கிறேன் என புரிய வைக்கிறார்.

அனைத்திற்கும் ஆதாரம் தாரணை ஆகும். தாரணைக்கு ஏற்ப தான் குழந்தைகளாகிய உங்களுக்கு பதவி கிடைக்கிறது. அனைவரின் முரளியும் ஒன்றுபோல இருக்காது. அந்த புல்லாங்குழலை வாசித்தாலும் கூட ஒன்று போல வாசிக்க முடியாது. ஒவ்வொருவரின் நடிப்பும் தனிப்பட்டதாகும். எவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய பாகம் இருக்கிறது! பரமாத்மாவும் நானும் நடிகன் என்கிறார். அனைத்து தர்மங்களும் கீழான நிலையை அடையும் போது நான் வருகிறேன். பக்தி மார்க்கத்தில் கூட நான் தான் கொடுக்கிறேன். ஈஸ்வரன் பெயரில் தான புண்ணியம் செய்கிறார்கள் என்றால் ஈஸ்வர் தான் அதனுடைய பலனை கொடுக்கிறார். அனைவரும் தன்னை காப்பீடு செய்கிறார்கள். இதனுடைய பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என அறிகிறார்கள். நீங்களோ 21 பிறவிகளுக்காக காப்பீடு செய்கிறீர்கள். அது எல்லைக்குட்பட்ட காப்பீடு, மறைமுகமானது. இது எல்லைக்கப்பாற்பட்ட காப்பீடு, நேரடியானது. நீங்கள் உடல், மனம், பொருளால் தன்னை காப்பீடு செய்கிறீர்கள். பிறகு அளவற்ற செல்வத்தைப் பெறுகிறீர்கள். சதா ஆரோக்கிய மாகவும், செல்வந்தர் களாகவும் மாறுகிறீர்கள். நீங்கள் நேரடியாக காப்பீடு செய்து கொண்டிருக்கிறீர்கள் மனிதர்கள் ஈஸ்வரன் பெயரில் தானம் செய்கிறார்கள். ஈஸ்வரன் கொடுப்பார் என நினைக்கிறார்கள். அவர் எப்படி கொடுப்பார் என்பதைப் புரிந்துக் கொள்வதில்லை. மனிதர்கள் எது கிடைத்தாலும் அதை ஈஸ்வரன் கொடுக்கிறார் என நினைக்கிறார்கள். ஈஸ்வரன் குழந்தையை கொடுத்தார். நல்லது, கொடுக்கிறார் என்றால் பிறகு நிச்சயமாக எடுப்பார். நீங்கள் அனைவரும் நிச்சயமாக இறக்க வேண்டும். உடன் எதுவும் வராது. இந்த சரீரம் கூட அழிந்து விடும். எனவே இப்போது எதைக் காப்பீடு செய்கிறீர்களோ அதை செய்யுங்கள். பின் 21 பிறவிகளுக்கு காப்பீடு ஆகிவிடும். காப்பீடு செய்து விட்டு சேவை ஒன்றும் செய்யாமல் இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. சேவை செய்ய வேண்டும் அல்லவா? உங்களுக்கென்று செலவாகிறது அல்லவா? காப்பீடு செய்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எதுவும் கிடைக்காது. சேவை செய்தால் தான் கிடைக்கும் உயர்ந்த பதவியும் கிடைக்கும். யார் எவ்வளவு நிறைய சேவை செய்கிறார்களோ அவ்வளவு அதிகமாகக் கிடைக்கும். சிறிது அளவு சேவை செய்தால் சிறிது தான் கிடைக்கும். அரசாங்க சமூக சேவகர்கள் கூட வரிசைக்கிரமத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று பெரிய பெரிய தலைவர் கள் இருக்கிறார்கள். பல்வேறு விதமான சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடையது ஸ்தூலமானது, உங்களுடையதோ ஆன்மீக சேவை ஆகும். ஒவ்வொருவரையும் நீங்கள் யாத்ரீகராக மாற்றுகிறீர்கள். இதுவே தந்தையிடம் செல்வதற்கான ஆன்மீக யாத்திரையாகும். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் குரு போன்றோர்களையும் விடுங்கள் என பாபா கூறுகிறார். என்னை மட்டும் நினையுங்கள், பரம்பிதா பரமாத்மா நிராகாரர், சாகார ரூபத்தை எடுத்துப் புரிய வைக்கிறார். நான் கடனாகப் பெறுகிறேன். இயற்கையின் ஆதாரத்தை எடுக்கிறேன் என்கிறார். நீங்களும் ஆத்மாவாக வந்தீர்கள். இப்போது மீண்டும் அனைவரும் திரும்பப் போக வேண்டும். அனைத்து தர்மத்தினருக்கும் மரணம் எதிரில் இருக்கிறது என்கிறார். யாதவர், கௌரவர் அழிந்து விடுவர். பிறகு பாண்டவர் மட்டும் வந்து இராஜ்யம் செய்வார்கள். இந்த கீதையின் பாகம் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. பழைய உலகம் அழிய வேண்டும். 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்போது பழையதாகிவிட்டது. 84 பிறவிகள் முடிந்து விட்டது நாடகம் நிறைவடைந்து விட்டது. இப்போது திரும்பிப் போக வேண்டும். சரீரத்தை விட்டு விட்டு வீட்டிற்கு போகிறார்கள். ஒவ்வொரு வருக்கும் இப்போது வீட்டிற்குப் போக வேண்டும் என்ற நினைவை ஏற்படுத்த வேண்டும். பல முறை 84 பிறவிகளின் நடிப்பை நடித்தாயிற்று. இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது யார், யார் எந்த தர்மத்தினரோ அவர்கள் அந்தப் பிரிவில் போவார்கள். மறைந்து போன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் மலர்கள் ஆவார்களோ அவர்கள் வந்து விடுவார்கள். நல்ல நல்ல மலர்கள் வருகிறார்கள். பிறகு மாயாவின் புயல் வீசுவதால் விழுந்து விடுகிறார்கள். மீண்டும் ஞானத்தின் சஞ்ஜீவினி மூலிகை கிடைப்பதால் எழுகிறார்கள். நீங்கள் சாஸ்திரங்களைப் படித்து வந்திருக்கிறீர்கள் என பாபா கூறுகிறார். நிச்சயம் இவர்களுடைய குரு போன்றோர் இருந்தனர். குருக்கள் உட்பட அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடியவர் ஒருவர் தான் என்று பாபா கூறுகிறார். ஒரு நொடியில் முக்தி, ஜீவன் முக்தி, இராஜா இராணி என்றால் இல்லற மார்க்கம் ஆகிவிட்டது. விகாரமற்ற இல்லற மார்கம் இருந்தது. இப்போது சம்பூர்ண விகாரமாகி விட்டது. அங்கே இராவண இராஜ்யம் இல்லை. இராவண இராஜ்யம் அரை கல்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. பாரத வாசிகள் தான் இராவணனிடம் தோல்வி அடைகிறார்கள். மற்ற அனைத்து தர்மத்தினரும் அவரவர் நேரத்தில் சதோ ரஜோ தமோவைக் கடக்கின்றனர். முதலில் சுகம் பின் துக்கத்தில் வருகிறார்கள். முக்திக்குப் பிறகு ஜீவன் முக்தி தான். இச்சமயம் அனைவரும் தமோபிரானமாக செல்லரித்த நிலையில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை விட்டு பிறகு இன்னொரு உடலை எடுக்கிறது. நான் பிறப்பு இறப்பில் வருவதில்லை என பாபா கூறுகிறார். எனக்கு தந்தை யாரும் இல்லை. மற்ற அனைவருக்கும் தந்தை இருக்கிறார்கள். கிருஷ்ணரும் தாயின் கர்ப்பம் மூலமாகவே பிறக்கிறார். இதே பிரம்மா இராஜ்யத்தை அடையும் போது கர்ப்பத்திலிருந்து தான் பிறவி எடுப்பார். இவரே தான் பழையதிலிருந்து புதியதாக வேண்டும். 84 பிறவிகளின் ஓல்ட் (பழையவர்) ஆவார். கஷ்டப்பட்டு தான் சிலருடைய புத்தியில் பதிகிறது, போதை ஏறுகிறது. இதுவே மணமுள்ள கஸ்தூரி ஞானம் ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆன்மீக சமூக சேவகராகி அனைவருக்கும் ஆன்மீக யாத்திரையைக் கற்பிக்க வேண்டும். தன்னுடைய தேவி தேவதா தர்மத்தின் நாற்று நட வேண்டும்.

2. தன்னுடைய தூய்மையான புத்தியினால் அப்பாவை வெளிப்படுத்த வேண்டும். முதலில் தனக்குள் தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்குக் கூற வேண்டும்.

வரதானம்:
வார்த்தையுடன் மனதின் மூலமாக சக்திசாலி சேவை செய்து சுலபமாக வெற்றி மூர்த்தி ஆகுக

வார்த்தையின் சேவையில் சதா பிசியாகும் அனுபவம் உள்ளது, அவ்வாறே ஒவ்வொரு நேரமும் சொல்லோடு கூடவே மனதின் சேவையும் இணைந்திருக்க வேண்டும். மனதின் சேவை என்பது ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் இயல்பாகவே நல் ஆசை மற்றும் நல் விருப்பங்களை வைப்பதாகும். தூய அதிர்வலைகள் தனக்கும் பிறக்கும் அனுபவமாக வேண்டும். மனதால் எல்லோருக்கும் எப்போதும் ஆசீர்வாதமே வெளிப்பட வேண்டும். மனதின் சேவையால் சொல்லின் சக்தி சேமிப்பாகும். மேலும் மனதின் சக்தி வாய்ந்த சேவையில் சுலபமாகவே வெற்றி மூர்த்தி ஆக செய்யும்.

சுலோகன்:
தனது ஒவ்வொரு நடத்தை மூலமாகவும் தந்தையின் பெயரை ஓங்கச் செய்பவரே உண்மையிலும் உண்மையான இறை சேவகன்.