16.02.21
இன்றைய சிந்தனைக்கு
அன்பு:
அன்பு செய்பவர் என்றால் கொடுப்பவர்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
உண்மையான அன்பில், எதிர்பார்புகள் இல்லை. நம்முள் இருக்கும்அன்பை நாம் அறிந்துகொள்ளும்போது, நம்மால் எல்லையற்ற அன்பை கொடுக்க முடியும். மற்றவர்கள், அன்பை திரும்ப வெளிப்படுத்தினாலும் அல்லது வெளிப்படுத்தாவிட்டாலும், உண்மையான அன்பானது, தொடர்ந்து சுயநலமின்றி கொடுப்பதற்கு நமக்கு உதவி செய்கின்றது.
செயல்முறை:
இன்றைய நாள், நான் எனக்குள் இருக்கும் அன்பை அறிந்துகொண்டு, மற்றவர்களுடன் அன்பை பகிர்ந்துகொள்ளும் நாளாக இருக்கட்டும். என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களிடம், என்னுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயலையாவது நான் செய்வதை உறுதிபடுத்திகொள்வதோடு, என்னுளிருந்து வெளிப்படும் அன்பானது, என்னைச் சுற்றி உள்ளவர்களிடமும் பரவுவதை நான் உணர்வேன்.