01.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள். உங்கள் மனோபாவம் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
பாடல்:
எக் குழந்தைகளின் விளக்கங்கள் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?பதில்:
வீட்டில் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து, ஒரு தாமரை மலர் போல் தூய்மையாக இருப்பவர்கள்pன் விளக்கங்களாகும். அத்தகைய அனுபவம் வாய்ந்த குழந்தைகள் இந்த ஞானத்தை ஏனையோருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அது பிறரில் மிகச் சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, ஏனெனில் திருமணம் செய்திருப்பினும், தூய்மையற்ற மனோபாவம் எதனையும் கொண்டிருக்காதிருப்பது மிகவும் உயர்ந்ததோர் இலக்காகும். குழந்தைகளாகிய நீங்கள் இதனையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பாடல்:
எங்கள் யாத்திரை மிகவும் தனித்துவமானது.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஏனெனில் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தந்தையைத் தெரியும். குழந்தைகள் குழந்தைகளே. குழந்தைகளான நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் ஆவீர்கள்.. பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் சகோதர, சகோதரிகள் என்பது உங்களுக்குத் தெரியும்; நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். ஆகவே, உண்மையில், ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதர, சகோதரிகள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் (ஆத்மாக்களும்) சகோதரர்கள். இங்கே, நீங்கள் ஒரு பாட்டனாரினதும், தந்தையினதும் குழந்தைகள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகளும், பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். இவரின் மனைவியும் (பிரம்மாவின் லௌகீக மனைவி) தான் ஒரு பிரம்மாகுமாரி என்றே கூறுகின்றார். ஆகவே அவரது உறவுமுறையும் அவ்வாறு ஆகுகின்றது. ஒரு லௌகீகச் சகோதரரும் சகோதரியும் ஒருவர் மீது ஒருவர் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க மாட்டார்கள். இக்காலத்தில் அனைவரும் அசுத்தமானவர்களாகி விட்டனர், ஏனெனில் இவ்வுலகம் அசுத்தமடைந்துள்ளது. நீங்கள் இப்பொழுது பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீPங்கள் பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகி விட்டீர்கள்; ஆகவே நீங்கள் சகோதர, சகோதரிகள். இருவகையான துறவறம் உள்ளன என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். துறவறம் என்பது தூய்மையாக இருப்பதும், ஐந்து விகாரங்களைத் துறப்பதுமாகும். ஏனையோர் ஹத்தயோக சந்நியாசிகள்; அவர்களின் (பிரிவு) துறை வேறானது. அவர்கள் இல்லறப் பாதையில் உள்ளவர்களிலிருந்து தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விடுகின்றார்கள். அவர்கள் செயல்களைத் துறந்து விடுகின்ற, ஹத்தயோக சந்நியாசிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதே உங்கள் சரீர உணர்வையும், சரீர உறவினர்களையும் துறந்து, தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்று குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமது வீட்டையும், தொழிலையும் விட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தமது தாய்வழி மாமனுடனோ அல்லது தந்தைவழி மாமனுடனோ தொடர்புகள் எதனையும் கொண்டிருப்பதில்லை. தங்களுக்;கென ஒரு விடயமே உள்ளது என்றும், அந்த ஒரு விடயம் மாத்திரமே நினைவுசெய்யப்பட வேண்டும் என்றும், தங்கள் ஒளிகள் அந்த ஒளியுடன் இரண்டறக் கலக்கும் என்றும், தாங்கள் நிர்வாணா தாமத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டும் என்பவற்றை மட்டுமே அவர்கள் நம்புகின்றார்கள். அவர்களின் துறையும் வேறானது, அவர்களின் ஆடைகளும் வேறானவை. பெண்களே நரகத்தின் வாசல் என்றும், பஞ்சும் நெருப்பும்; ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது என்றும், பிரிந்து வாழ்வதன் மூலமே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். நாடகத்திற்கேற்ப அவர்களின் சமயம் வேறுபட்டது. சங்கராச்சாரியார் அந்தச் சமயத்தை ஸ்தாபித்தார். அவர் ஹத்தயோகத்தையும், செயல்களைத் துறப்பதையும் கற்பித்தார், இராஜயோகத்தை அல்ல. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். அதுவும் வரிசைக்கிரமமானது; அனைவரும் 100 வீதம் விவேகிகளாக இருக்க முடியாது. சிலர் 100 வீதம் விவேகிகள் என்றும், சிலர் 100 வீதம் விவேகமற்றவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இது நிகழும். நீங்கள் ‘மம்மா, பாபா| என்று கூறுவதால், நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள். எந்த அசுத்தமான மனோபாவத்தையும் கொண்டிருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகின்றது. ஒரு சகோதரரும், சகோதரியும் என்றுமே திருமணம் செய்ய முடியாது. வீட்டில் ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையில் ஏதாயினும் இருந்து, அவர்களின்; செயற்பாடு தவறாக இருப்பதை அவர்களுடைய தந்தை கவனித்தாராயின், அதனையிட்டு மிகவும் கவனம் செலுத்துவார். “அதிகளவு பாதிப்பை விளைவிக்கின்ற அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள்?” அவர் அவர்களைப் பெருமளவு ஏசுவார். முன்னர், இவ்விடயங்களில் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இப்பொழுது அனைவரும் 100 வீதம் தமோபிரதானாக உள்ளார்கள். மாயையின் விசை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. பரமாத்மா பரமதந்தையின் குழந்தைகளுடனேயே மாயை சண்டை செய்கின்றாள். தந்தை கூறுகின்றார்: இவர்கள் எனது குழந்தைகள். நான் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். மாயை கூறுகின்றாள்: இல்லை, இவர்கள் என்னுடைய குழந்தைகள்! நான் அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளேன். இங்கே, நீங்கள் தர்மராஜாகிய, தந்தையின் கரங்களில் இருக்கின்றீர்கள். வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து, தூய்மையாக இருப்பவர்கள், தாங்கள் ஒன்றாக வாழும்பொழுதும் எவ்வாறு தூய்மையாக இருக்கின்றோம் என்பதனை ஏனையோருக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். ஹத்தயோகி சந்நியாசிகளினால் நிறைவேற்ற முடியாத பணியை நீங்கள் செய்வதற்குத் தந்தை உங்களைத் தூண்டுகிறார். சந்நியாசிகளினால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. ‘இராஜயோகம்| என்ற தலைப்பில் விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எழுதினார். எவ்வாறாயினும், சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள், அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. வீட்டில் வாழும்பொழுதும் தூய்மையாக இருக்கின்ற நீங்கள் பிறருக்கு ஞானத்தை விளங்கப்படுத்தும்பொழுது, உங்கள் அம்பு இலக்கை மிக நன்றாகத் தாக்கும். மரங்களைப் பற்றிய ஒரு மாநாடு டெல்கியில் இடம்பெறுவதாக பாபா ஒரு செய்தித்தாளில் வாசித்தார். அந்தக் காட்டு மரங்களையிட்டு அக்கறை கொண்டிருக்கும் அதேவேளையில், வம்சாவளி விருட்சம், அதாவது, மனித உலக விருட்சம் எவ்வாறு தோன்றியது என்றோ அல்லது அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதைப் பற்றியோ எப்பொழுதாவது அவர்கள் அக்கறை கொண்டார்களா என்று நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும். இன்னமும், குழந்தைகளாகிய உங்கள் புத்தி அந்தளவிற்குப் பரந்ததாக ஆகவில்லை; நீங்கள் அந்தளவு கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு நோய் இருக்கின்றது. ஒரு லௌகீகக் குடும்பத்திலும், ஒரு சகோதரனும் சகோதரியும் ஒருவர் மீது ஒருவர் அசுத்தமான எண்ணங்களை என்றுமே கொண்டிருக்க மாட்டார்கள். இங்கே, நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள்; நீங்கள் பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளுமான, சகோதர, சகோதரிகள.; அசுத்தமான எண்ணங்கள் தோன்றுமாயின், உங்களைப் பற்றி என்ன கூறப்படும்? நீங்கள் நரகத்தில் வாழ்பவர்களிலும் பார்க்க ஆயிரம் மடங்கு அசுத்தமானவர்கள் என்றே கருதப்படுவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வாழ்பவர்கள் தூய்மையாக இருப்பதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். உலகில் உள்ள எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு வருகின்றார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக ஒரு சத்தியத்தைச் செய்து, ராக்கி ஒன்றைக் கட்ட வேண்டும். இதில் பெரும் முயற்சி தேவைப்படுகின்றது. திருமணம் செய்த பின்னரும் தூய்மையாக இருத்தல் என்பது ஒரு செங்குத்தான இலக்காகும். உங்கள் புத்தி சற்றேனும் ஈர்க்கப்படக்கூடாது. மக்கள் திருமணம் செய்யும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். தந்தை வந்து, உங்களைத் துகில் உரிவதிலிருந்து காப்பாற்றுகிறார். திரௌபதியின் கதையும் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவ்விடயங்களிலும் நிச்சயமாகச் சில உட்கருத்துக்கள் இருக்க வேண்டும். அந்தச் சமயநூல்கள் போன்ற அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நாடகத்தில் கடந்து சென்றவை யாவும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை, அவை நிச்சயமாக மீண்டும் நிகழ வேண்டும். ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் இரண்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. உங்கள் புத்தி இப்பொழுது மிகவும் பரந்ததாகி உள்ளது. எல்லையற்ற தந்தையின் புத்தி எவ்வாறோ, அவ்வாறே ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற, விசேடமான குழந்தைகளினது புத்தியும் இருக்க வேண்டும். எண்ணற்ற குழந்தைகள் உள்ளனர். இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? அவர்கள் பிராமணர்கள் ஆகும்வரை, ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் இப்பொழுது பிரம்மாவின் குலத்திற்கு உரியவர்கள், பின்னர் நீங்கள் சூரிய வம்சத்திற்கு உரியவர்கள், அதாவது, விஷ்ணுவின் வம்சத்தினர்களாக ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது சிவனின் குலத்திற்கு உரியவர்கள். சிவன் தாதாவும் (பாட்டனார்), பிரம்மா பாபாவும் ஆவர். மக்கள் அனைவருக்கும் ஒரேயொரு மனித குலத் தந்தையே உள்ளார். மனித உலக விருட்சத்திற்கான விதை இருக்க வேண்டும் என்பதையும், ‘புதிய மனிதன்’ என அவர்கள் அழைக்கின்ற மனிதர் ஒருவர் முதலில் வரவேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்;கின்றனர். யார் அந்தப் ‘புதிய மனிதன்’ ஆக இருப்பார்? அது பிரம்மாவாகவே இருக்க வேண்டும். பிரம்மாவும், சரஸ்வதியுமே ‘புதியவர்கள்| என்று கருதப்படுகிறார்கள். இதனைப் புரிந்துகொள்வதற்கு பரந்த புத்தி தேவைப்படுகின்றது. ‘ஓ தந்தையான கடவுளே! ஓ பரமதந்தையான கடவுளே!’ என்று ஆத்மாக்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்களே இதனைக் கூறுவதால், அவரே அதிமேலான, அனைவரையும் படைப்பவராக இருக்க வேண்டும். பின்னர், இங்கே, கீழே இருக்கின்ற இம்மனித உலகில், அதியுயர்வானவர் என்று யார் கருதப்படுவார்? மனித குலத்தின் தந்தையே ஆவார். இந்த மனித உலக விருட்சத்தில் பிரம்மாவே பிரதானமானவர் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். சிவனே ஆத்மாக்களின் தந்தை, பிரம்மாவை மனிதர்களைப் படைப்பவர் என்று அழைக்க முடியும். எவ்வாறாயினும், எவரின் வழிகாட்டலில் அவர் இதனை நிறைவேற்றுகின்றார்? தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவைத் தத்தெடுக்கின்றேன். அவ்வாறாயின் புதிய பிரம்மா எங்கிருந்து வருவார்? இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரின் சரீரத்திற்குள் பிரவேசித்து, இவருக்குப் பிரஜாபிதா பிரம்மா எனப் பெயரிடுகின்றேன். நீங்கள் நிச்சயமாகப் பிரம்மாவின் குழந்தைகள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றோம். நாங்கள் தந்தையிடமிருந்து தூய்மை, சந்தோஷம், அமைதி, ஆரோக்கியம் செல்வம் ஆகியவற்றைப் பெறுவதற்கே வந்துள்ளோம். நாங்கள் பாரதத்தில் சதா சந்தோஷமாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் அவ்வாறில்லை. தந்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தூய்மையே முதன்மையானது என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ராக்கி யாருக்குக் கட்டப்படுகின்றது? தூய்மையற்றவர்களாகி விட்டவர்கள் ‘நாங்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்களாக இருப்போம்’ என்;று ஒரு சத்தியத்தைச் செய்கிறார்கள். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் எவ்வாறு சகோதர, சகோதரிகள் என்ற உணர்வில் வாழ்;கின்றோம் என்பதைப் பற்றித் திருமணம் செய்த ஒரு தம்பதியினருக்கு முதலில் விளங்கப்படுத்த வேண்டும். ஆம், இந்த ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வதற்குக் காலம் பிடிக்கின்றது. மாயையின் பல புயல்கள் வருகின்றன என்று குழந்தைகள் எழுதுகின்றார்கள். ஆகவே, வீட்டில் வாழ்ந்து கொண்டு தூய்மையாக இருக்கின்ற அந்தக் குழந்தைகள் சொற்பொழிவாற்றினால் நல்லது, ஏனெனில், இது புதியதொரு விடயம். இது சுய இராச்சியத்திற்கான யோகமாகும். இதில் துறவறமும் உள்ளது. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, நீங்கள் ஜீவன்முக்தியைப் பெற விரும்புகின்றீர்கள், அதாவது, சற்கதி பெற விரும்பிகின்றீர்கள். இங்கே பந்தன வாழ்வே உள்ளது. உங்களுடைய அந்தஸ்து சுய இராச்சியத்திற்கு உரியது. சுயம் இராச்சியத்தை விரும்புகின்றது. இப்பொழுது அந்த இராச்சியம் இருப்பதில்லை. ஆத்மா கூறுகின்றார்: நான் அரசராக இருந்தேன், நான் அரசியாக இருந்தேன், இப்பொழுது நான் விகாரமானவராகவும், ஏழையாகவும் ஆகிவிட்டேன். என்னிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை. இவ்வாறு ஆத்மாவே கூறுகின்றார். ஆகவே, உங்களை நீங்கள் ஆத்மாக்கள், அதாவது, பரமாத்மா பரமதந்தையின் குழந்தைகள் எனக் கருத வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள், ஆகவே, எங்களுக்கு இடையில் பெருமளவு அன்பு இருக்க வேண்டும். நாங்கள் இந்த முழு உலகையும் அழகாக்குகின்றோம். இராம இராச்சியத்தில், சிங்கமும், ஆடும் ஒன்றாக ஒரு தடாகத்தில் நீர் அருந்துவதுண்டு; அங்கே என்றுமே எவரும் சண்டையிடுவதில்லை. எனவே, குழந்தைகளாகிய உங்கள் மத்தியில் எந்தளவு அன்பு இருக்க வேண்டும்? இந்த ஸ்திதியைப் படிப்படியாக அடையலாம். பலரும் பெருமளவு சண்டை இடுகின்றார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் சண்டையிடுகின்றார்கள்; அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கதிரைகளையும் வீசி எறிகின்றார்கள்! அது அசுரர்களின் ஒன்றுகூடல். இது உங்கள் இறை ஒன்றுகூடல், ஆகவே நீங்கள் எவ்வளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும்? எவ்வாறாயினும், இது ஒரு பாடசாலை ஆகும். ஒரு பாடசாலையில் சிலர் தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள், வேறு சிலர் பின்தங்கி வீழ்கின்றார்கள். இந்தப் பாடசாலை அற்புதமானது. அங்கே, ஆசிரியர்களும், பாடசாலைகளும் வெவ்வேறாக உள்ளன, ஆனால் இங்கோ ஒரு பாடசாலையும், ஒரேயொரு ஆசிரியருமே உள்ளார். ஆத்மா ஒரு சரீரத்தை ஏற்றுக் கற்பிக்கின்றார். அவர் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரங்கள் மூலம் கற்கின்றோம். இந்தளவிற்கு நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். நாங்கள் ஆத்மாக்கள், அவர் பரமாத்மா. இது உங்கள் புத்தியில் நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சரீர உணர்வினாலேயே நீங்கள் தவறுகள் செய்கின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! சரீர உணர்வுடையவர் ஆகுவதன் மூலம், நீங்கள் மாயையினால் தாக்கப்படுகின்றீர்கள். இந்த ஏற்றம் மிகவும் செங்குத்தானது. நீங்கள் அதிகளவிற்கு ஞானக் கடலைக் கடைய வேண்டும்! இரவு நேரத்திலேயே உங்களால் ஞானக் கடலைக் கடைய முடியும். இவ்வாறாக ஞானக் கடலைக் கடைவதன் மூலம், நீங்கள் படிப்படியாக தந்தையைப் போன்று ஆகுவீர்கள். இந்த ஞானம் முழுவதையும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்தவாறு, இராஜயோகத்தைக் கற்றிடுங்கள். இவை அனைத்தும் உங்கள் புத்திக்கான வேலை ஆகும். உங்கள் புத்தியே இவ்விடயங்களைக் கிரகிக்கின்றது. வீட்டில் குடும்பத்துடன் வாழ்பவர்களுக்குப் பெருமளவு முயற்சி தேவை. இந்நாட்களில். மக்கள் தமோபிரதானாக உள்ளதால், மிகவும் அசுத்தமாகி விட்டனர். மாயை அனைவரையும் அழித்துள்ளாள். அவள் அனைவரையும் மென்று, முழுமையாக விழுங்கி விட்டாள். தந்தை வந்து, பெரிய முதலையான, மாயையின் வயிற்றிலிருந்து உங்களை அகற்றுகின்றார். அங்கிருந்து உங்களை அகற்றுவது மிகவும் கடினமாகும். வீட்டில் தங்களது குடும்பங்களுடன் வாழ்பவர்கள் தங்கள் பிரகாசத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: எங்களுடையது இராஜயோகம் ஆகும். நாங்கள் ஏன் பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் என அழைக்கப்படுகின்றோம்? இந்தப் புதிரை நீங்கள் புரிந்துகொண்டு, அவர்களுக்குக் கூற வேண்டும்: உண்மையில், நீங்களும் பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளுமே ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மா புதிய உலகைப் படைக்கின்றார். ஒரு புதிய மனிதனின் மூலம் புதிய உலகம் படைக்கப்படுகின்றது. உண்மையில், சத்திய யுகத்தின் முதற் குழந்தையே புதியவர் என அழைக்கப்பட வேண்டும். இது பெரும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். அங்கே சந்தோஷப் பேரிகைகள் இசைக்கப்படும். அங்கே ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மையாக இருக்கின்றன. பாபா இப்பொழுது இவரின் சரீரத்தில் பிரவேசித்துள்ளார். இப் புதிய மனிதர் தூய்மையானவர் அல்ல. அவர் (பாபா) இந்த முதியவரினுள் அமர்ந்து, இவரைப் புதியவர் ஆக்குகின்றார். அவர் பழையவற்றைப் புதியதாக்குகின்றார். இப்பொழுது, ‘புதிய மனிதர’; என யாரை அழைக்க முடியும்? பிரம்மாவை இவ்வாறு அழைக்க முடியுமா? புத்தி இதனையிட்டு வேலை செய்கின்றது. யார் ஆதாமும், ஏவாளும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரே புதிய மனிதர். பின்னர் அவர் பழைய மனிதனான, பிரம்மா ஆகுகின்றார். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை இந்தப் பழைய மனிதனாகிய பிரம்மாவை, அந்தப் புதிய மனிதர் ஆக்குகின்றேன். புதிய உலகிற்குப் புதிய மனிதர் தேவைப்படுகின்றார். அவர் எங்கிருந்து வருவார்? புதிய மனிதரே சத்திய யுகத்தின் இளவரசர். அவர் அழகானவர் என அறியப்பட்டுள்ளார். இவர் அவலட்சணமானவர்; இவர் ஒரு புதிய மனிதர் அல்ல. அதே ஸ்ரீ கிருஷ்ணரே 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது தனது இறுதிப் பிறவியில் பாபாவினால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பழைய விடயங்களைப் புதியதாக்குகின்றார். இவை புரிந்துகொள்வதற்கு, அத்தகைய ஆழமான விடயங்கள். புதியது பின்னர் பழையது ஆகுகின்றது. பழையது புதியது ஆகுகின்றது. அவலட்சணமானவர் அழகானவராகவும், பின்னர் அழகானவர் அவலட்சணமானவராகவும் ஆகுகின்றார். அனைவரிலும் பழையவர், இப்பொழுது அனைவரிலும் புதியவர் ஆகுகின்றார். பாபா உங்களைப் புத்தாக்கம் செய்து, அனைவரிலும் புதியவர்கள் ஆக்குவதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உங்கள் சொந்த ஸ்திதியையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனினும் குமாரர்களும், குமாரிகளும் தூய்மையானவர்கள். எவ்வாறாயினும், வீட்டில், தமது குடும்பத்துடன் வாழ்பவர்கள் ஒரு தாமரை மலர் போன்று வாழ்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்ற வேண்டும். விஷ்ணுவின் குலம் திரிகாலதரிசிகள் ஆகுவதற்கான ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. இந்தப் பழைய மனிதரே திரிகாலதரிசி. இவ்விடயங்கள் அத்தகைய தந்திரமான விடயங்கள். இந்தப் பழைய மனிதனே ஞானத்தைப் பெற்ற புதிய மனிதர் ஆகுகின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: அது ஹத்தயோகமும், இது இராஜயோகமும் ஆகும். இராஜயோகம் என்றால், சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதாகும். சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றார்கள்; அதனை அவர்கள் விரும்புவதில்லை. தந்தை கூறுகின்றார்: பெண்கள் சுவர்க்கத்தின் வாசல்கள். நான் ஞான கலசத்தைத் தாய்மார்களாகிய உங்கள் மீது வைக்கின்றேன். எனவே, எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் ‘ஓம் நமசிவாய| என்பதையும், ‘கடவுள் சிவன் பேசுகின்றார்| என்பதையும் விளங்கப்படுத்துங்கள். இந்த ஒலி மிகவும் உரத்து ஒலிக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள். இந்த நம்பிக்கையுடன், தூய்மைக்கான சத்தியத்தைக் கடைப்பிடிப்பதால், ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்புடன் ஒன்றாகச் சேர்ந்து வாழுங்கள். அனைவரையும் அழகானவர்கள் ஆக்குங்கள்.2. உங்கள் புத்தியைப் பரந்ததாக ஆக்குவதால், இந்த ஞானத்தின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளுங்கள். ஞானக் கடலைக் கடையுங்கள். மாயையின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உயிருடன் மரணி;த்து வாழ்ந்து, ஞான அமிர்தம் பொழியப்படுவதால், மகத்துவமானவர்கள் ஆகுவீர்களாக.குழந்தைகளாகிய உங்கள் மீது தந்தை ஞான அமிர்தத்தைப் பொழிந்து, உங்களைப் பிரேதங்கள் போல் இருப்பதிலிருந்து மகத்துவமானவர்கள் ஆக்குகின்றார். அவர் உங்களை எரிகின்ற சிதையிலிருந்து அகற்றி, உங்களை உயிருடன் வாழ்பவர்கள் ஆக்கினார். அவர் உங்களுககு ஞான அமிர்தத்தைக் கொடுத்து, உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்கினார். கடவுள் மரணித்தவர்களை உயிர்ப்பிக்கின்றார் என மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் எவ்வாறு அவர் அதனைச் செய்கின்றார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். முன்னர் உங்கள் சரீர உணர்வு காரணமாக, பிரேதங்களைப் போல், மரணித்திருந்த நீங்கள், இப்பொழுது மகத்துவமானவர்களாகி விட்டீர்கள். என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கின்றது.
சுலோகம்:
செயல்களைப் புரியும்பொழுதும், தங்கள் தர்மத்தில் ஸ்திரமாக இருப்பவர்களே, தர்மாத்மாக்கள் ஆவார்கள்.