02.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு என்ற மருந்தின் மூலம் உங்களை என்றுமே நோயிலிருந்து விடுபட்டவர்களாக ஆக்குங்கள். நினைவு செய்வதையும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதையும் உங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள்; ஆகுவீர்கள்.

பாடல்:
தங்கள் முன்னேற்றத்தில் சதா அக்கறைகொண்ட குழந்தைகளின் அடையாளம் என்ன?

பதில்:
அவர்களின் ஒவ்வொரு செயலும் எப்பொழுதும் ஸ்ரீமத்தின் அடிப்படையிலேயே இருக்கும். தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, சரீர உணர்வைக் கொண்டிராதீர்கள். உங்களின் நினைவு யாத்திரைக்கான ஓர் அட்டவணையை வைத்திருங்கள். உங்களின் இலாப, நட்டக் கணக்கின் பதிவை வைத்திருங்கள். பாபாவின் நினைவில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள் என்பதையும், மற்றவர்களுக்கு எவ்வளவு நேரம் விளங்கப்படுத்தினீர்கள் என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

பாடல்:
நீங்களே அன்புக் கடல். உங்களுடைய ஒரு துளிக்காக நாங்கள் தாகத்துடன் இருக்கிறோம்.

ஓம் சாந்தி.
இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும்போது, தந்தையின் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் சரீர உணர்வில் இருப்பதால், மாயை உங்களில் பலரை நினைவில் இருப்பதைத் தடை செய்கிறாள். சிலர் தங்கள் நண்பர்கள், உறவினர்களை நினைவு செய்கிறார்கள். ஆனால் ஏனையவர்களோ உணவு, பானம் போன்றவற்றை நினைவு செய்கிறார்கள். அவர்கள் இலக்ஷ்மியை வணங்கும்போது அவரை வரவழைப்பது போன்று, நீங்கள் இங்கு வரும்போது தந்தையை வரவழைக்க வேண்டும். எவ்வாறாயினும் உண்மையில் இலக்ஷ்மி வருவதில்லை. ‘தந்தையை நினைவு செய்யுங்கள்;’ என்பதும், ‘அவரை வரவழையுங்கள்;’ என்பதும் ஒன்றேயாகும். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பல பாவங்களைச் செய்துள்ளதால் உங்களால் இந்த ஞானத்தைக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதிருப்பதற்கும் இதுவே ஒரு காரணமாகும். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவி;ற்கு நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவதுடன், மேலும் ஆரோக்கியமானவர்களாகவும் ஆகுவீர்கள். அது மிகவும் இலகுவானது. இருப்பினும் கடந்த காலப் பாவங்களான மாயை, உங்களைத் தடைசெய்கின்றாள். தந்தை கூறுகிறார்: அரைக் கல்பத்திற்கு நீங்கள் என்னைப் பிழையான முறையில் நினைவு செய்து வந்தீர்கள். அவர் வந்து முரளியைப் பேசுவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளதால் நீங்கள் அவரை நடைமுறையில் வரவழைக்கிறீர்கள். எவ்வாறாயினும், நினைவு செய்வது என்ற இந்தப் பழக்கம் பதியவேண்டும். நீங்கள் நோயிலிருந்து விடுபடுவதற்காகச் சத்திரசிகிச்சை நிபுணர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அப்பொழுது நீங்கள் என்னைச் சந்திக்க வருவீர்கள். என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். தந்தையையும், இனிய வீட்டையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய இடத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தந்தை மாத்திரமே இங்கு வந்து உங்களுக்கு உண்மையான செய்தியைக் கொடுக்கிறார். வேறு எவராலும் கடவுளின் செய்தியை உங்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனையவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகக் கீழே இறங்கி மேடைக்கு வருகிறார்கள். யார் கடவுள் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கடவுளையும் தெரியாது. உண்மையில் அவர்களைத் தூதுவர்கள் என்று அழைக்க முடியாது. அந்தப் பெயரை மனிதர்களே அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் பாகத்தை நடிப்பதற்காகக் கீழே இறங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் எவ்வாறு அவரை நினைவு செய்வார்கள்? தங்கள் பாகங்களை நடிக்கும்போது அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகவேண்டும். பின்னர் இறுதியில் அவர்கள் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். தந்தையே வந்து அவர்களைத் தூய்மையானவர்களாக ஆக்குகின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: தூய்மையாகுவதற்கு ஒரு வழியே உள்ளது: உங்களுடைய சரீரம் உட்பட, உங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்களுக்குத் தெரியும்: ஆத்மாவாகிய எனக்கு நினைவு செய்வதற்கான கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கீழ்ப்படிவானவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். இதில் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் கீழ்ப்படிவானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் குறைவாக நினைவு செய்தீர்களானால், அது நீங்கள் கீழ்ப்படிவு குறைந்தவர்கள் என்றே பொருள்படும். கீழ்ப்படிவானவர்களே உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். தந்தையின் முதல் கட்டளை: உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். இரண்டாவதாக, இந்த ஞானத்தைக் கிரகியுங்கள். நீங்கள் நினைவில் இருக்காவிட்டால் அதிகளவு தண்டனையை அனுபவிக்க நேரிடும். நீங்கள் தொடர்ந்து சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றினால், அதிகளவு செல்வத்தைப் பெறுவீர்கள். கடவுள் பேசுகிறார்: என்னை நினைவு செய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். அதாவது, நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றைப் புரிந்து கொள்வதாகும். என்னை அடையாளம் கண்டு கொள்வதுடன், என்னிடமிருந்து சக்கரத்தின் ஆரம்பம், மத்தி. இறுதியைப் புரிந்து கொள்ளுங்கள். இவை இரண்டுமே முக்கிய விடயங்களாகும். இவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தில் முழுக் கவனம் செலுத்தினால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். கருணை உள்ளம் கொண்டவர்களாகி, அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். அவர்களும் நன்மை பெறச் செய்யுங்கள். இந்த உண்மையான யாத்திரையில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் அழைத்து வருவதற்கு ஒரு வழிமுறையை உருவாக்குங்கள். அவை பௌதீக யாத்திரைகளாகும். ஆனால் இதுவோ ஆன்மீக யாத்திரையாகும். வேறு எவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. அவர்களிடமுள்ள ஞானம் அனைத்தும் சமயநூல்களின் தத்துவமே ஆகும். இது ஆன்மீக ஞானமாகும். ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே பரமாத்மா இந்த ஞானத்தைக் கொடுத்து, பின்னர் அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். குழந்தைகளில் சிலர்; வந்து அமர வேண்டும் என்பதற்காக வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் சுய முன்னேற்றம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் அதிக சரீர உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகினால், கருணையுள்ளவர்களாகவும் ஸ்ரீமத்தையும் பின்பற்றுபவர்களாகவும் ஆகுவார்கள். அவர்கள் கீழ்ப்படிவானவர்கள் இல்லை. தந்தை கூறுகிறார்: எவ்ளவு நேரம் நீங்கள் நினைவில் இருந்தீர்கள் என்றும், எந்த நேரங்களில் நீங்கள் நினைவில் இருந்தீர்கள் என்றும் ஓர் அட்டவணையை வைத்திருங்கள். முன்பு நீங்கள் ஓர் அட்டவணையை வைத்திருந்தீர்கள். நல்லது. நீங்கள் உங்கள் அட்டவணையை பாபாவிற்கு அனுப்பவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அதை உங்களுடனாவது வைத்திருங்கள். இலக்ஷ்மியைப் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கின்றீர்களா என்று பார்ப்பதற்கு, உங்கள் முகத்தைப் பாருங்கள். வர்த்தகர்கள் தங்கள் கணக்குகளை வைத்திருப்பார்கள். சிலர் தாங்கள் நாள் முழுவதும் செய்யும் நடவடிக்கைகளைக் குறித்து வைத்திருப்பார்கள். அதை எழுதுவது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு போன்றதாகும். எவ்வளவு நேரம் நீங்கள் பாபாவின் நினைவில் இருந்தீர்கள் என்றும், எவ்வளவு நேரம் நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினீர்கள் என்றும் ஒரு கணக்கை வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வாறான ஓர் அட்டவணையை நீங்கள் வைத்திருந்தால் நீங்கள் அதிகளவு முன்னேற முடியும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கான ஆலோசனையை உங்களுக்குத் தந்தை கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். மாலையின் மணிகளாக ஆகுபவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். பிராமணர்களின் மாலை இப்பொழுது உருவாக்கப்பட மாட்டாது என்று பாபா கூறியுள்ளார். அது இறுதியிலேயே, உருத்திரரின் மாலை உருவாக்கப்படும்போது மட்டுமே உருவாக்கப்படும். பிராமணர்களின் மாலையின் மணிகள் தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருக்கும். இன்று மூன்றாவதாக அல்லது நாலாவதாக இருப்பவர்கள், நாளை கடைசியிலும் இருப்பார்கள். அதில் அத்தகையதொரு வேறுபாடு உள்ளது! சிலர் விPழ்ச்சியடைந்து, சீரழிந்தவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் மாலையிலிருந்து மாத்திரம் விழுவதில்லை. அவர்கள் சென்று பிரஜைகளைத் தகனம் செய்பவர்களாக ஆகுகிறார்கள். நீங்கள் மாலையில் கோர்க்கப்படுவதற்கு விரும்பினால் நீங்கள் அதிகளவு முயற்சி செய்யவேண்டும். எவ்வாறு சுய முயற்சி செய்வது என்பது பற்றி பாபா மிகவும் நல்ல ஆலோசனை கொடுக்கிறார். பாபா இதனை அனைவருக்கும் கூறுகிறார். வாய் பேச முடியாதவர்களும் சமிக்ஞை மூலம் பாபாவை மற்றவர்களுக்கு நினைவூட்டலாம். பேசக்கூடியவர்களிலும் பாhர்க்க அவர்களால்; மேலே உயர்ந்து செல்ல முடியும். கண் பார்வையற்றோர் அல்லது ஊனமுற்றோரும் ஆரோக்கியமானவர்களிலும் பார்க்க உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். ஒரு விநாடியில் சமிக்ஞை கொடுக்கப்படுகிறது. ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ என்பது நினைவுகூரப்படுகிறது. நீங்கள் தந்தைக்கு உரியவர்களாக ஆகியவுடன், நீங்கள் நிச்சயம் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் பெறும் அந்தஸ்து உண்மையில் வரிசைக்கிரமமாகவே இருக்கும். ஒரு குழந்தை பிறந்ததும் அவர் தனது ஆஸ்திக்கான உரிமையைப் பெறுகிறார். இங்கு ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஆண்களே. ஆகவே நீங்கள் உங்கள் ஆஸ்திக்கான உரிமையைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். அனைத்தும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. ஆனால் முன்னைய கல்பத்திலும் நீங்கள் அவ்வாறான முயற்சியையே செய்தீர்கள் என்றும் கூறப்படுகிறது. இது மாயையுடனான குத்துச் சண்டையாகும். பாண்டவர்கள் இராவணனான மாயையுடன் சண்டையிடுகிறார்கள். சிலர் முயற்சி செய்து, இரட்டைக் கிரீடத்துடன் உலக அதிபதிகள் ஆகுகிறார்கள். ஆனால் ஏனையவர்கள் பிரஜைகளின் பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் ஆகுகிறார்கள். அனைவரும் இங்கு கற்கிறார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நிச்சயமாக பாபாவின் கவனம் முன்னணியிலிருக்கும் மணிகளின் மீதே ஈர்க்கப்படுகிறது. எட்டு மணிகளும் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள் என்று அவர்களின் முயற்சியிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஒவ்வொருவருடைய இதயத்திலுமுள்ள இரகசியத்தை அவர் அறிந்துள்ளார் என்றோ, ஒவ்வொருவரினதும் அகத்தினுள் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்கிறார் என்றோ இல்லை. இல்லை. ஜனிஜனன்ஹாராக இருத்தல் என்பது அனைத்தையும் அறிந்திருப்பதாகும். அது ஒவ்வொருவரினதும் இதயத்தில் இருப்பதை அவர் அறிந்து கொண்டுள்ளார் என்பதல்ல. ஜனிஜனன்ஹார் என்றால் ஞானம் நிறைந்தவர் என்பதாகும். அவருக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி அனைத்தும் தெரியும். அவர் அமர்ந்திருந்து ஒவ்வொருவரினதும் இதயத்திலுள்ளதை அறிந்துகொள்வார்; என்றல்ல. நான் எண்ணங்களை வாசித்தறிபவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் ஜனிஜனன்ஹார். அதாவது ஞானம் நிறைந்தவர். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் எவ்வாறு மீண்டும் சுழல்கின்றது என்பது எனக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிப்பதற்காகவே நான் வந்துள்ளேன். எந்தளவிற்கு நீங்கள் சேவை செய்கின்றீர்கள் என்பதையும் எந்த அளவிற்கு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம். பாபா இங்கு அமர்ந்திருந்து உங்கள் அனைவருக்குள்ளும் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்வதில்லை. பாபா அமர்ந்திருந்து அந்தத் தொழிலைச் செய்வதில்லை. அவர் சகல இரகசியங்களையும் அறிந்தவர். அவரே மனித உலக விருட்சத்தின் ஞானம் நிறைந்த விதையாவார். மனித உலகின் ஆரம்பம், மத்தி இறுதி ஆகியவற்றையும், அதன் பிரதான நடிகர்களைப் பற்றியும் தனக்குத் தெரியும் என்று அவர் கூறுகிறார். ஏனைய படைப்புக்கள் எண்ணற்றவை. ஜனிஜனன்ஹார் (சகல இரகசியங்களையும் அறிந்தவர்) என்ற வார்த்தை மிகவும் பழமையானதாகும். என்னிடமுள்ள ஞானம் அனைத்தையும் நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். எவ்வாறாயினும் நான் நாள் முழுவதும் அமர்ந்திருந்து நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை அவதானிப்பதில்லை. இலகு ஞானத்தையும், யோகத்தையும் உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே நான் வந்துள்ளேன். தந்தை கூறுகிறார்: எனக்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர். நான் என்னையே குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறேன். எனது தொழில் அனைத்தும் குழந்தைகளுடனேயே ஆகும். என்னுடைய குழந்தைகள் ஆகுபவர்களின் தந்தையே நான். அந்தக் குழந்தை, நிஜமான குழந்தையா அல்லது மாற்றாந்தாய்க் குழந்தையா என்பதை என்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரும் கற்கிறார்கள். நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் செயலாற்றி, பரோபகாரிகள் ஆகவேண்டும். விருட்சத்தின் பிரபுவின் நாள், வியாழ பிரபுவின் நாள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிவன், விருட்சத்தின் பிரபுவும் ஆவார். இருவரும் ஒன்றே ஆவர். சிறுவர்கள் வியாழக்கிழமையில் (சற்குருவின் நாள்) பாடசாலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அது ஒரு குருவைக் (அவர்களின் ஆசிரியர்) ஏற்றுக் கொண்டிருப்பதைப் போன்றதாகும். உதாரணமாக, திங்கட்கிழமை சோமநாதரின் (அமிர்தத்தின் பிரபு) நாளாகும். ஆகவே சிவபாபா உங்களுக்கு அமிர்தத்தை அருந்துவதற்குக் கொடுக்கிறார். உண்மையில் அவரது பெயர் சிவன் ஆகும். ஆனால் அவர் உங்களுக்குக் கற்பிப்பதனால் அவர் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார். சோமநாதர் உருத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் இந்த உருத்திரரின் ஞான யாகத்தை உருவாக்குகிறார். அதனால் அவர் ஞானத்தைக் கொடுப்பவராகுகிறார். அவருக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்து இந்த ஒரு யக்யாவே தொடர்ந்துள்ளது. இந்த யாகத்தீயில் பழைய உலகம் முழுவதிலுமுள்ள அனைத்தும் அர்ப்பணிக்கப்படும் என்பது எவருக்கும் தெரியாது. சகல மனிதர்களும், பஞ்சபூதங்கள் உட்பட ஏனைய அனைத்தும் மாற்றமடையும். குழந்தைகளாகிய நீங்கள் இவற்றைக் காண்பீர்கள். இவற்றைப் பார்ப்பதற்கு நீங்கள் மகாவீரர்கள் (துணிவுள்ள வீரர்கள்) ஆகவேண்டும். என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் பாபாவை மறந்துவிடக்கூடாது. மனிதர்கள் தொடர்ந்தும் விரக்திக்குரல் எழுப்புவார்கள். முதலில் அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: சற்று சிந்தித்துப் பாருங்கள், சத்தியயுகத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது. அங்கு மிகக் குறைவான மனிதர்களே இருந்தார்கள். ஒரு தர்மமே இருந்தது. இப்பொழுது, கலியுக இறுதியில் ஏராளமான சமயங்கள் உள்ளன. இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? கலியுகத்திற்குப் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். இப்பொழுது யார் சத்தியயுகத்தை ஸ்தாபிப்பார்? தந்தை ஒருவரே படைப்பவர். சத்தியயுக ஸ்தாபனையும், கலியுக விநாசமும் நிகழும். அந்த விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது. நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றவேண்டும். தந்தையையும், தந்தையின் படைப்பையும் நினைவு செய்யுங்கள். இது அத்தகையதோர் இலகுவான விடயமாகும்!

பாடல்: நீங்களே அன்புக் கடல்.

“ஞானக் கடல், பேரானந்தக் கடல்” என்று படத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், “அன்புக் கடல்” என்ற வார்த்தைகளையும் நீங்கள் நிச்சயமாகச்; சேர்த்துக் கொள்ள வேண்டும். தந்தையின் புகழ் முற்றிலும் தனித்துவமானது. அவர் சர்வவியாபகர் என்று கூறுவதன் மூலம் அவர்கள் அவரின் புகழை அழித்துள்ளனர். ஆகவே “அன்புக் கடல்” என்ற வார்த்தைகள் நிச்சயமாக எழுதப்படவேண்டும். இதுவே எல்லையற்ற தந்தையினதும், தாயினதும் அன்பாகும். “உங்களின் கருணையினாலே நாங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறோம்” என்று இவரையிட்டே அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு இது தெரியாது. இப்பொழுது தந்தை கூறுகிறார்: என்னை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை நான் மட்டுமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். அது ஒரு பிறவிக்கான கேள்வியல்ல. ஏனெனில் அவருக்கு உலகின் கடந்தகாலம், நிகழ்காலம். எதிர்காலம் அனைத்தும் தெரியும். ஆகவே உங்கள் புத்தியில் எவ்வளவு பிரவேசிக்க வேண்டும்? ஆத்ம உணர்வு இல்லாதவர்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாது. சரீர உணர்வு முழுக் கல்பத்திலும் தொடர்ந்துள்ளது. சத்திய யுகத்திலும் கடவுள் பற்றிய ஞானம் இல்லை. நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக கீழே இறங்கி வரும்போது, கடவுளின் ஞானத்தை மறந்துவிடுகிறீர்கள். ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். எவ்வாறாயினும்; துன்பம் என்ற கேள்வியே அங்கில்லை. அவரே ஞானக் கடலும், அன்புக் கடலும் ஆவார் என்பதே தந்தையின் புகழாகும். ஒரு துளி என்பது: மன்மனாபவவும், மத்யாஜிபவவும் ஆகும். இந்தத் துளியைப் பெறுவதன் மூலம் உங்களால் நச்சுக் கடலைத் தாண்டி, பாற் கடலுக்குச் செல்லமுடியும். சுவர்க்கத்தில் பாலாறும், நெய்யாறும் ஓடுமென்று மக்கள் கூறுகிறார்கள். அவை வெறும் புகழ்ச்சியேயாகும். எவ்வாறு அங்கு பாலாறும், நெய்யாறும் இருக்க முடியும்? மழைக்குப் பின்னர் நீரே ஓடும். நெய் எங்கிருந்து வரும்? அது அங்குள்ள செழிப்பைக் குறிப்பதாகும். சுவர்க்கம் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அஜ்மீரில் சுவர்க்கத்தைப் போன்ற ஒரு மாதிரியுரு இருந்தாலும், எவருக்கும் எதுவுமே தெரியாது. நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தந்தை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொண்டிருப்பது போன்று, இதுவும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் சுழலவேண்டும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். நீஙகள் அவரின் புகழை மிகச்சரியாகக் கூறவேண்டும். அவருடைய புகழ் எல்லையற்றது. அனைவரும் ஒரேமாதிரி இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, தெய்வீகக் காட்சிகளில் என்ன நடக்கும் என்று பாபா உங்களுக்குக் காட்டியவற்றை நடைமுறையில் பார்ப்பீர்கள். அவர் தொடர்ந்தும் உங்களுக்கு ஸ்தாபனையினதும், விநாசத்;தினதும் காட்சிகளைக் கொடுக்கிறார். அர்ச்சுனனுக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டன. பின்னர் அவற்றை அவர் நடைமுறையில் கண்டார். நீங்களும் உங்கள் பௌதீகக் கண்களால் விநாசத்தைக் காண்பீர்கள். சுவர்க்கம் பற்றிய காட்சிகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் நடைமுறையில் அங்கு செல்லும்போது அந்தக் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். மிகச்சிறந்த விடயங்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. இதனைக் குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். சகோதர சகோதரிகளே: வந்து இந்த ஞானத்தின் மூலமும், யோகத்தின் மூலமும் பாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். பாபா அழைப்பிதழ் கடிதத்தில் திருத்தங்கள் செய்கிறார். கீழே அவர் கையொப்பமிட்டார்: நாங்கள் இப்போது கடவுளின் சேவையில் உள்ளோம். அந்தப் பணிக்காக நாங்கள் எங்கள் மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் உபயோகிக்கிறோம். காலப்போக்கில் புகழ் கிட்டும். ஒரு சக்கரத்திற்கு முன்னர் தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்கள் நிச்சயம் வருவார்கள். எவ்வாறாயினும் நீங்கள் முயற்சி செய்யவேண்டும். படிப்படியாக உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். அந்தச் சந்தோஷம் உறுதியாக இருப்பதால் நீங்கள் மீண்டும் மீண்டும் வாடிவிட மாட்டீர்கள். பல புயல்கள் வரும். ஆனால் நீங்கள் அவற்றை வெற்றி கொள்ள வேண்டும். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அத்துடன் ஏனையோருடனும் தொடர்பில் இருங்கள். பாபாவிற்குச் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்கும்வரை, பாபாவினால் உங்களை முழுதாகச் சேவையில் ஈடுபடுத்த முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தில் முழுக் கவனம் செலுத்துவதுடன், சுயத்திற்கும், மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள்;. கருணை உள்ளவர்களாகி, அனைவரையும் இந்த உண்மையான யாத்திரையில் செல்வதற்கு வழி செய்யுங்கள்.

2. பாபா உங்களுக்குக் கொடுக்கின்ற ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றுங்கள். நினைவு மற்றும் சேவை பற்றிய அட்டவணை ஒன்றை வைத்திருங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல இரகசியங்களையும் அறிந்தவராகவும் (இராசியுக்த்), சாமர்த்தியமானவராகவும் (யுக்தியுக்த்) யோகா சொரூபமானவராகவும் (யோக்யுக்த்) ஆகி, உங்களின் நேர்மையான இதயத்தினால் பிரபுவை மகிழ்ச்சி அடையச் செய்வீர்களாக.

பாப்தாதாவின் பட்டங்களாவன, தில்வாலா (இதயங்களை வென்றவர்) மற்றும் திலாராம் (இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவர்) என்பவையாகும். நேர்மையான இதயங்களைக் கொண்டவர்களையிட்டு பிரபு மகிழ்ச்சி அடைகிறார். தமது இதயபூர்வமாகத் தந்தையை நினைவு செய்பவர்கள், இலகுவாக புள்ளி ரூபத்தை அடைகிறார்கள். அவர்கள் குறிப்பாகத் தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெறத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். காலத்திற்கேற்பவும் சத்தியத்தின் சக்திக்கேற்பவும், அவர்களின் தலைகள் ஒரு யுக்தியுக்த் முறையில் செயல்படும். அவர்கள் இயல்பாகவே எல்லாவற்றையும் மிகச்சரியாகவே செய்வார்கள். நீங்கள் இறைவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளீர்கள். எனவே, உங்களின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் மிகச்சரியானவை. இத்தகையதோர் ஆத்மா ராசியுக்தாகவும் யுக்தியுக்தாகவும் யோகியுக்தாகவும் ஆகுவார்.

சுலோகம்:
சதா தந்தையின் அன்பில் அமிழ்ந்திருங்கள். நீங்கள் பல வகையான துன்பங்களில் இருந்தும் ஏமாற்றப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.