16.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரு வைரத்தைப் போன்றிருந்த பாரதம் தூய்மையற்றதாகி விட்டதால், ஏழ்மை நிலையை அடைந்து விட்டது. இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை அதனை வைரத்தைப் போன்று தூய்மையானதாக்க வேண்டும். நீங்கள் இனிய தேவ விருட்சத்தின் மரக்கன்றை நாட்ட வேண்டும்.பாடல்:
தந்தையின் எப்பணிகளில் குழந்தைகள் அவரது உதவியாளர்கள் ஆகவேண்டும்?பதில்:
முழு உலகிலும் தேவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதும், எண்ணற்ற சமயங்களை அழித்து ஒரேயொரு உண்மையான தர்மத்தை ஸ்தாபிப்பதும் தந்தையின் பணிகளாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பணிகளில் உதவியாளர்களாக வேண்டும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என எண்ணாதீர்கள்.பாடல்:
தாயும் நீயே, தந்தையும் நீயே.ஓம் சாந்தி.
உலக மக்கள் பாடுகின்றார்கள்: “தாயும் நீயே, தந்தையும் நீயே.” எனினும், தாங்கள் யாரைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இதுவும் அற்புதமான விடயமாகும். அவர்கள் இதனைக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுகின்றார்கள். உண்மையில் இத்தாயும், தந்தையுமானவர் யார் என்பது உங்களது புத்தியில் உள்ளது. அவர் பரந்தாமவாசியாவார். ஒரேயொரு பரந்தாமம் மாத்திரம் இருக்கின்றது. சத்திய யுகத்தைப் பரந்தாமம் என அழைக்க முடியாது. சத்திய யுகம் இங்கேயே இருக்கின்றது, நாங்கள் அனைவரும் கூட பரந்தாமத்தில் வசிப்பவர்கள். நீங்கள் நிர்வாணா தாமமாகிய, பரந்தாமத்திலிருந்தே இப் பௌதீக உலகிற்கு வந்தீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம் என்பது மேலே இல்லை. நீங்கள் பரந்தாமத்திலிருந்து வருகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களின் மூலமாக உங்களது பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்பதனையும், எவ்வாறு உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதனையும் இப்பொழுது அறிவீர்கள். தொலைதூரவாசியாகிய அந்த ஒரேயொருவரே இந்த அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். இது ஏன் அந்நிய தேசம் என அழைக்கப்படுகின்றது? நீங்கள் பாரதத்திற்கு வருகின்றீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், நீங்கள் முதலில், தந்தையால் ஸ்தாபிக்கப்படுகின்ற சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள், பின்னர், அதுவே இராவண இராச்சியமாகிய, நரகம் ஆகுகின்றது. எண்ணற்ற சமயங்களும், எண்ணற்ற அரசாங்கங்களும் இருக்கின்றன. பின்னர், தந்தை வந்து, ஒரேயொரு இராச்சியத்தை உருவாக்குகின்றார். இப்பொழுது பல அரசாங்கங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றிணைந்து, ஒன்றாக வேண்டும் என அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் கூறுகின்றனர். எவ்வாறு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒன்றாக்கப்பட முடியும்? 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனுமே உலகில் சர்வ சக்திவான்களாக இருந்தனர். உலகை ஆட்சிபுரியக்கூடிய வேறு எந்தச் சர்வசக்தி அதிகாரமும் இல்;லை. சமயங்கள் அனைத்தும் ஒரே தர்மத்திற்குள் வரமுடியாது. சுவர்க்கத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது, இதனாலேயே அனைத்தும் ஒன்றாக வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது ஏனையவற்றின் விநாசத்தைத் தூண்டி, ஒரேயொரு ஆதி சனாதன தேவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றேன். நீங்களும் கூறுகின்றீர்கள்: நாங்கள் அனைத்துச் சக்திகளையும் கொண்டவராகிய, உலக சர்வசக்திவானின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப, பாரதத்தில் ஒரேயொரு தேவ அரசாங்கத்தின் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். தேவ அரசாங்கத்தைத் தவிர, வேறு எங்குமே ஒரேயொரு அரசாங்கம் இருக்க முடியாது. 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில், அதாவது, முழு உலகிலும் ஒரேயொரு தேவ அரசாங்கமே இருந்தது. இப்பொழுது உலகில் மீண்டும் ஒருமுறை தேவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காகவே தந்தை மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். குழந்தைகளாகிய நாங்கள் அவரது உதவியாளர்கள். இந்த இரகசியம் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உருத்திரரின் ஞான யாகமாகும். அசரீரியானவரே உருத்திரர் என அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணரை அவ்வாறு அழைக்க முடியாது. ‘உருத்திரர்’ என்ற பெயர் அசரீரியானவருடையதாகும். பல பெயர்களைக் கேட்க நேரிட்டதால், உருத்திரர் சோமநாதரிலிருந்து வேறுபட்டவர் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, ஒரேயொரு தேவ அரசாங்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என நினைத்துச் சந்தோஷப்படாதீர்கள். நரகத்தில் ஓர் அந்தஸ்தைப் பெறுவதற்காக மக்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்கின்றார்கள் எனப் பாருங்கள்! முதலில் அவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றனர், இரண்டாவதாகப் பெருமளவு பணம் சம்பாதிக்கின்றார்கள். பக்தர்களுக்கு, ஒரேயொரு கடவுளே இருக்க வேண்டும், இல்லையெனில், அவர்கள் அலைந்து திரிவார்கள். இங்கே அனைவரையும் கடவுள் என அவர்கள் அழைக்கின்றனர். அவர்கள் பலரை அவதாரங்களாகக் கருதுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் ஒருமுறையே வருகின்றேன். அவர்கள் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! முழு உலகும் தூய்மையற்றதாக இருக்கின்றது, அதிலும் பாரதமே அதி தூய்மையற்றதாக உள்ளது. பாரதம் ஏழையாகி விட்டது. ஆனால், பாரதம் வைரத்தைப் போன்றிருந்தது. நீங்கள் புதிய உலக இராச்சியத்தைப் பெற வேண்டும். கிருஷ்ணரைக் கடவுள் என அழைக்க முடியாதெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பிறப்பிற்கும், இறப்பிற்கும் அப்பாற்பட்டவராகிய, அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே கடவுள் என அழைக்கப்பட முடியும். மக்கள் கூறுகின்றனர்: அவரும் கடவுள், நானும் கடவுள். நாங்கள் எங்களைக் களிப்பூட்டுவதற்கே இங்கே வந்திருக்கின்றோம். அவர்கள் மிகவும் போதையுடையவர்களாக இருக்கின்றார்கள். “நான் எங்கே பார்த்தாலும் உங்களை மாத்திரமே பார்க்கின்றேன். இது அனைத்தும் உங்களது அற்புதமே! நானே நீங்கள், நீங்களே நான்.” அவர்கள் தொடர்ந்தும் நடனமாடுகின்றார்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: பக்தர்கள் தொடர்ந்தும் கடவுளைப் பிரார்த்திக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் பெருமளவு பக்தி உணர்வுடன் கடவுளைப் பூஜிக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: நான் அவர்களுக்குக் காட்சிகளைக் கொடுக்கின்றேன், ஆனால் அவர்கள் என்னைச் சந்திக்க மாட்டார்கள். நானே சுவர்க்கத்தைப் படைப்பவர். அவர்களுக்கு நான் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்றேன் என்றில்லை. கடவுள் ஒரேயொருவரே. தந்தை கூறுகின்றார்: மறுபிறவிகள் எடுப்;பதால், அனைவரும் இப்பொழுது பலவீனமாகி விட்டார்கள். நான் இப்பொழுது பரந்தாமத்திலிருந்து வந்திருக்கின்றேன். நான் ஸ்தாபிக்கின்ற சுவர்க்கத்திற்குள் நான் பிரவேசிப்பதில்லை. தாங்கள் சுயநலமற்ற சேவை செய்வதாகப் பலர் கூறுகின்றனர், அவர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ, அவர்கள் செய்வதற்குரிய பலனை நிச்சயமாகப் பெறுகின்றார்கள். அவர்கள் தானங்கள் செய்வதால், நிச்சயமாக அதற்குரிய பலனைப் பெறுகின்றார்கள். நீங்கள் கடந்த காலத்தில் தான தர்மங்கள் செய்ததனால், செல்வந்தர்கள் ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப எதிர்காலத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள். உங்களது எதிர்காலத்தின் பல பிறவிகளுக்காக நற்செயல்களைச் செய்யுமாறு இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. மக்கள் தங்களது அடுத்த பிறவிக்காக அவ்வாறு செய்கின்றனர். அது தங்களது கடந்த காலச் செயல்களுக்குரிய பலன் என அவர்களும் கூறுகின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள். உங்கள் 21 பிறவிகளுக்கான செயல்களின் பலன் இப்பொழுது தயார் செய்யப்படுகின்றது. சங்கம யுகத்தின் முயற்சிக்கான வெகுமதி 21 சந்ததிகளுக்குத் தொடர்கின்றது. நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமாக இருக்கக்கூடியதாக அத்தகையதொரு வெகுமதியை உங்களுக்காக உருவாக்குவதாகச் சந்நியாசிகளால் கூற முடியாது. கடவுள் நல்ல, அல்லது தீய பலனைக் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்கள் சக்கரத்தின் காலப் பகுதியை நீண்டதாக்கி, ஒரு தவறைச் செய்து விட்டார்கள். சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டதெனக் கூறுகின்ற பலர் இருக்கின்றனர். முஸ்லீம் ஒருவர் உங்களிடம் வந்து, சக்கரத்தின் காலப் பகுதி உண்மையில் 5000 வருடங்களே எனக் கூறினார். நாங்கள் இங்கே பேசுகின்ற விடயங்களை அவர் செவிமடுத்திருக்க வேண்டும். படங்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றன, எனினும், அனைவரும் இதனை நம்ப மாட்டார்கள். இந்த உருத்திர ஞான யாகத்தின் மூலமாக விநாசச் சுவாலைகள் தோன்றுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே இலகு இராஜயோகம் கற்பிக்கப்படுகின்றது. கிருஷ்ணரின் ஆத்மா இப்பொழுது தனது இறுதிப் பிறவியில், சிவனிடமிருந்து (உருத்திரர்) தனது ஆஸ்தியைப் பெறுகின்றார். அவர் இங்கே அமர்ந்திருக்கின்றார். பாபா இவரிலிருந்து வேறுபட்டவர். அவர்கள் பிராமணப் புரோகிதர் ஒருவருக்கு உணவூட்டி, ஓர் ஆத்மாவை வரவழைக்கும்பொழுது, அவ்வாத்மா அந்தப் பிராமணப் புரோகிதரின் சரீரத்தினுள் பிரவேசித்துப் பேசுகின்றார். மக்கள் குறிப்பாக யாத்திரைகள் சென்று, ஆத்மாக்களை வரவழைக்கின்றார்கள். அவ்வாத்மா சென்று நீண்ட காலமாகி விட்டது, எனவே, அவர் எவ்வாறு வருகின்றார்? என்ன நிகழ்கின்றது? அவ்வாத்மா கூறுகின்றார்: நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். நான் இன்ன இன்ன வீட்டில் பிறவி எடுத்திருக்கின்றேன். அங்கே என்ன நிகழ்கின்றது? அவ்வாத்மா அவ்விடத்தை விட்டு, இங்கே வந்து விட்டாரா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் அவர்களுடைய பக்தியின் பலனை அவர்களுக்குக் கொடுப்பதால், அவர்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றேன். இதுவும் நாடகத்தில் ஓர் இரகசியம். அவர்கள் பேசுகின்றார்கள், எனவே அப்பாகம் தொடர்கின்றது. ஒருவர் பேசவில்லையாயின், அது நிச்சயிக்கப்படவில்லை என்பதாகும். தந்தையின் நினைவில் இருங்கள், உங்களது பாவங்கள் அழிக்கப்படும். அதற்கு வேறு எவ்வழியும் இல்லை. அனைவரும் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் மீண்டும் ஒருமுறை பரந்தாமத்திலிருந்து இந்தப் பழைய உலகிற்குள் வந்து, ஒரு பழைய சரீரத்தினுள் பிரவேசித்திருக்கின்றேன். இவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்தார். பின்னர், இவர் பூஜிப்பவராகி, இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுகின்றார். அது உங்களுக்கும் பொருந்துகின்றது. நான் உங்களையும் அவ்வாறு ஆக்குகின்றேன். இவர் முதலாம் இலக்க முயற்சியாளர். இதனாலேயே நீங்கள் கூறுகின்றீர்கள்: “மாதேஸ்வரி, பிதாஸ்ரீ”. தந்தையும் கூறுகின்றார்: சிம்மாசனத்தில் அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஜெகதாம்பா அனைவரது ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றார். தாய் இருப்பதால், நிச்சயமாகத் தந்தையும், குழந்தைகளும் கூடவே இருக்க வேண்டும். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காண்பிக்கின்றீர்கள். சத்திய யுகத்தில், உங்களது ஆசைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. பாபா கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் வசிக்கும்பொழுதே, முழுமையாக யோகத்தில் இருப்பீர்களாயின், இங்கே இருப்பவர்களை விடவும் உயர்ந்ததோர் அந்தஸ்தை உங்களால் பெற முடியும். பலர் பந்தனத்தில் இருக்கின்றார்கள். பலவீனமானவர்கள் துன்புறுத்தப்படாத வகையில் இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடந்த இரவு, உள்நாட்டு அமைச்சருக்கு பாபா விளங்கப்படுத்தினார். எவ்வாறாயினும், அவர்கள் இரண்டு அல்லது நான்கு முறைகள் இதனைச் செவிமடுத்தாலே, இதைப் பற்றிச் சிந்திப்பார்கள். இது அவர்களது பாக்கியத்தில் இருந்தாலே, அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்த ஞானம் நழுவிச் சென்று விடக்கூடிய மார்க்கமாகும். சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் இதனை அறிய நேரிட்டால், “மனிதர்களைத் தேவர்களாக்குவதற்கு அதிகக் காலம் எடுக்கவில்லை” என்ற வாசகத்தைப் புரிந்துகொள்வார்கள். அதனைச் செய்தவர் யார்? அவர்கள் அவரது புகழைப் பாடுகின்றனர்: அசரீரியானவர் ஒரேயொருவரே, அவரது பெயர் சத்தியமானவரும், அமரத்துவ உருவமும் என்பதாகும். பிரம்ம தத்துவமே அவரது சிம்மாசனம். அவர்கள் கூறுகின்றனர்: உங்களது சிம்மாசனத்தை விட்டிறங்கி இங்கே வாருங்கள்! தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவார். அவர் ஒவ்வொருவரினதும் இதயத்திலும் என்ன இருக்கின்றது என்பதனை அறிவார் என்றில்லை. மக்கள் தங்களைச் சற்கதிக்குக் கொண்டு செல்வதற்காகக் கடவுளை நினைவுசெய்கின்றனர். பாபா கூறுகின்றார்: நான் உலகச் சர்வசக்தி வாய்ந்த தேவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றேன். நிகழ்ந்த பிரிவினைகள் யாவும் அகற்றப்படும். எங்களது தேவ தர்மத்தைச் சார்ந்தவர்களின் மரக்கன்றுகள் நாட்டப்பட வேண்டும். விருட்சம் மிகவும் பெரியது. அதில் அதிஇனிமையானவர்கள்; தேவர்களே. அவர்களது மரக்கன்று நாட்டப்பட வேண்டும். ஏனைய எண்ணற்ற சமயங்களைச் சார்ந்தவர்கள் மரக்கன்றுகளை நாட்டுவதில்லை.இன்று சற்குரு தினமாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மையாகுங்கள், நான் உங்களை என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வேன். பின்னர் நீங்கள் வெல்வெற் அரசியாகினாலும் சரி, சில்க் அரசியாகினாலும் சரி, நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டுமாயின், எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். அச்சா. நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவிடமிருந்தும், இனிய மம்மாவிடமிருந்தும் அன்பும், நினைவுகளும், நமஸ்காரங்களும்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சங்கம யுகத்தில் நீங்கள் செய்கின்ற முயற்சிக்கான வெகுமதி 21 பிறவிகளுக்கு நீடிக்கவுள்ளது. இதனை உங்களது விழிப்புணர்வில் வைத்திருந்து, மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். ஞானத்தைத் தானம் செய்வதன் மூலம் உங்களது வெகுமதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.2. இனிய தேவ விருட்சத்தின் மரக்கன்று நாட்டப்படுகின்றது. எனவே, அதி இனிமையானவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய பிராமணப் பிறப்பின் சிறப்பியல்பையும், தனித்துவத்தையும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்தவாறே, ஒரு பற்றற்ற பார்வையாளராகச் சேவை செய்வீர்களாக.இந்தப் பிராமணப் பிறப்பு ஒரு தெய்வீகமான பிறப்பாகும். சாதாரண ஆத்மாக்கள் தங்களுடைய பிறந்த நாட்களையும் திருமண நாளையும், நண்பர்களின் தினத்தையும் வெவ்வேறாகக் கொண்டாடுகின்றார்கள்., ஆனால் உங்களுடைய பிறந்த நாளும், திருமண நாளும், தாய்மார்களின் தினமும், தந்தையரின் தினமும், நிச்சயதார்த்த தினமும் அனைத்தும் ஒன்றே, ஏனெனில் நீங்கள் அனைவரும் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவராக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் விழிப்புணர்வில் இந்தப் பிறவியின் சிறப்பியல்பையும், தனித்துவத்தையும் வைத்தவாறே சேவை செய்வதில் உங்கள் பாகத்தை நடியுங்கள். சேவை செய்வதில் ஏனையோருக்கும் சகபாடிகள் ஆகுங்கள், ஆனால் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்தவாறே ஒரு சகபாடியாக இருங்கள். சிறிதளவு கூட எவருக்கேனும்; அடிமை ஆகுதல் இல்லாதிருக்கட்டும்.
சுலோகம்:
ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி தனது வாழ்வில் பணிவிற்கும், அதிகாரத்திற்குமான சமநிலையைப் பேணுபவர் ஆவார்.
மாதேஷ்வரியின் மேன்மையான வாசகங்கள்
ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவிற்கும் இடையிலான வேறுபாடு.
ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள், ஒரு முகவரின்; வடிவில் ஆத்மாக்கள் சற்குருவைக் கண்டபொழுது, ஓர் அழகிய சந்திப்பு நடைபெற்றது. நாங்கள் இவ் வார்த்தைகளைக் கூறுகின்றோம், அவற்றின் மிகச்சரியான அர்த்தம் என்னவெனில், ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்தனர் என்பதாகும்;. “நீPண்டகாலம்” என்றால், ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலத்தின் முன்னர் பிரிந்து விட்டார்கள் என்பதாகும், ஆகவே இவ்வார்த்தைகள் ஆத்மாக்களும், பரமாத்மாவும் வெவ்வேறான ஆளுமைகள் என்பதை நிரூபிக்கின்றன. இருசாராரின் மத்தியிலும் ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது, ஆனால் உலக மக்கள் அவரை இனங்கண்டு கொள்ளாததால், அவர்கள் இவ் வார்த்தைகளை “ஆத்மாவான நானே பரமாத்மா” என்பதாக எடுத்துக் கொண்டு விட்டனர். ஏனெனில் ஆத்மாக்கள் மாயையின் ஆதிக்கத்திற்குள்ளாகுவதால், அவர்கள் தங்களுடைய ஆதி ரூபத்தை மறந்து விட்டார்கள். மாயையின் ஆதிக்கம் அகற்றப்படும்பொழுது, ஆத்மாக்கள் பரமாத்மாவைப் போல் ஆகுகின்றார்கள். எனவே அவர்கள் ஆத்மாக்களை இவ்விதமாக வேறானவர்களாகக் கருதுகின்றார்கள். பின்னர், “ஆத்மாவான நானே, கடவுள்!’ என்று கூறுகின்ற வேறு மக்களும் இருக்கின்றார்கள், ஆனால் ஆத்மாக்கள் தங்களை மறந்து விட்டதால், சந்தோஷமற்றவர்களாகி விட்டார்கள், எனவே, ஓர் ஆத்மா தன்னை இனங்கண்டு, தூய்மையாகும்பொழுது, அந்த ஆத்மா பரமாத்மாவில் அமிழ்ந்து, ஒன்றாகுகின்றார். ஆகவே, ஒவ்வோர் ஆத்மாவையும் அவ்விதமாக வேறானவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாவும், பரமாத்மாவும் வேறான ஆளுமைகள் என்பதை நாங்கள் அறிவோம். ஓர் ஆத்மா கடவுளாகவும் முடியாது, ஓர் ஆத்மாவால் பரமாத்மாவில் இரண்டறக் கலக்கவும் முடியாது. பரமாத்மா எவ்வழியிலும் ஆதிக்கத்திற்குள்ளாக முடியாது.