22.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இதுவே பிராமணர்களாகிய உங்களின் புதிய விருட்சமாகும். நீங்கள் அதை நன்றாகப் பராமரிப்பதுடன், வளர்க்கவும் வேண்டும், ஏனெனில் புதிய விருட்சத்தைச் சிட்டுக்குருவிகள் உண்டு விடுகின்றன.

பாடல்:
பிராமண விருட்சத்தில் வெளிப்படுகின்ற புதிய இலைகள் ஏன் வாடி விடுகின்றன? இதற்கு என்ன காரணம், இதற்கான தீர்வு என்ன?

பதில்:
தந்தை விளங்கப்படுத்துகின்ற ஞானத்தின் அற்புதமான இரகசியங்களை ஆத்மாக்கள் புரிந்துகொள்ளாதபொழுது, அவர்களின் மனத்தில் சந்தேகங்கள் எழுகின்றன. இதனாலேயே புதிய இலைகள் வாடிக் கற்பதை நிறுத்துகின்றன. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் திறமைசாலிக் குழந்தைகள் தேவைப்படுகின்றனர். நீங்கள் எதைப் பற்றியாவது ஏதாவது சந்தேகங்களைக் கொண்டிருந்தால், சிரேஷ்டர்களிடம் வினவுங்கள். நீங்கள் இன்னமும் ஒரு பதிலைப் பெறவில்லை எனில், தந்தையை வினவ முடியும்.

பாடல்:
வந்து எங்களைச் சந்தியுங்கள், ஓ அன்பிற்கினியவரே!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைப் பல முறைகள் கேட்டுள்ளீர்கள். துன்ப வேளையில் அனைவரும் கடவுளைக் கூவியழைக்கின்றனர், ஆனால் அவர் இப்பொழுது உங்களுடன் அமர்ந்திருந்து, உங்களைத் துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுவிக்கின்றார். உங்களை இத்துன்ப தாமத்திலிருந்து சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற, சந்தோஷ தாமத்தின் அதிபதியே, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் வந்து, உங்களின் முன்னிலையில் அமர்ந்திருந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது மனிதர்களுக்கான பணியல்ல. பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கு, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்ற மனிதர்களால் முடியாது. “மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை”. இது யாருடைய புகழ்? இது பாபாவுடைய புகழ் ஆகும். தேவர்கள் நிச்சயமாகச் சத்திய யுகத்திலேயே இருக்கிறார்கள். இந்நேரத்தில் தேவர்கள் இருப்பதில்லை. எனவே, நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்குபவரே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர். சிவன் என அழைக்கப்படுகின்ற, பரமாத்மாவாகிய பரமதந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு இங்கு வர வேண்டும். இப்பொழுது, அவர் எவ்வாறு வர முடியும்? அவர் தூய்மையற்ற உலகில் கிருஷ்ணரின் சரீரத்தைக் கொண்டிருக்க முடியாது. மனிதர்கள் குழப்பம் அடைகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நேரடியாக அவரைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வுலகின் வரலாறும், புவியியலும் தெரியும். வரலாற்றுடன், நிச்சயமாகப் புவியியலும் இருக்கின்றது. மனித உலகின் வரலாறும், புவியியலும் இருக்கின்றன. சூட்சும வதனத்தின் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பற்றிய வரலாறோ, புவியியலோ ஒருபொழுதும் இருக்க முடியாது. அங்கே சூட்சும வதனத்தில் ‘அசைவும்’, இங்கே ‘பேச்சும்’ இருக்கின்றன. பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகினதும் வரலாற்றையும், புவியியலையும் கூறுவதுடன், அசரீரி உலகின் செய்திகளையும் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு மூன்று உலகங்களைப் பற்றிய அனைத்து விடயங்களையும் கூறுகின்றார். பிராமணர்களின் புதிய விருட்சம் இப்பொழுது நாட்டப்படுகின்றது. இது ஒரு விருட்சம் என அழைக்கப்படுகின்றது; ஏனைய வழிகளும், பிரிவுகளும் விருட்சங்கள் என அழைக்கப்பட மாட்டாது. கிறிஸ்தவர்களின் விருட்சம் இவ்விருட்சத்திலிருந்து வேறுப்பட்டது எனக் கிறிஸ்தவர்கள் நம்பினாலும், இப்பெரிய விருட்சத்திலிருந்தே அனைத்துக் கிளைகளும் வெளித்தோன்றின என்பது அவர்களுக்குத் தெரியாது. எவ்வாறு மனித உலகம் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தாயும், தந்தையும், பின்னர் குழந்தைகளும் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் அனைவரும் ஒரேசமயத்தில் வெளிப்படுவதில்லை. இரண்டு இலைகள், பின்னர் நான்கு இலைகள் அல்லது ஐந்து இலைகள் வெளித்தோன்றுகின்றன, சில சிட்டுக்குருவிகளால் உண்ணப்படுகின்றன. இங்கும் சிட்டுக்குருவிகள் அவற்றை உண்கின்றன. இது மிகவும் சிறிய விருட்சம். முன்னைய கல்பத்தில் நிகழ்ந்ததைப் போல் வளர்ச்சி படிப்படியாகவே இடம்பெறுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிக ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்! நீங்கள் மூன்று காலங்களினதும் விடயங்களையும் அறிந்த திரிகாலதரிசிகளும், திரிலோகநாதர்களும், அதாவது, மூன்று உலகங்களையும் அறிந்தவர்களும் ஆவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் “திரிலோகநாதர்” அல்லது திரிகாலதரிசி என அழைக்கப்பட முடியாது. மக்கள் கிருஷ்ணரை “திரிலோகநாதர்” என்று அழைக்கின்றார்கள். சேவை செய்பவர்கள் தங்கள் பிரஜைகளை உருவாக்குவார்கள். உங்கள் வாரிசுகளையும், உங்கள் பிரஜைகளையும் நீங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் “திரிலோகநாதர்கள்” என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! சில குழந்தைகளால் மிகச்சரியாக விளங்கப்படுத்த இயலாதிருக்கின்றது, எனவே, ஆக்கத்திற்குப் பதிலாக, அவர்கள் அழிவை விளைவிக்கின்றார்கள். அவர்கள் வெளித்தோன்றியுள்ள இலைகளை வாடச் செய்கிறார்கள். அவர்கள் புத்தியில் சந்தேகங்கள் எழுகின்றன. அவர்கள் பின்னர் கற்பதை நிறுத்தி விடுகிறார்கள். இதுவும் முன்னைய கல்பத்தில் நிகழ்ந்து என்று ஒருவர் கூறுவார், எனவே, இதனை “கடந்தது கடந்து விட்டது” என்;றே பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகின் வரலாற்றினதும், புவியியலினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், மக்கள் பல கட்டுக்கதைகளை உருவாக்கிக் கூறுகிறார்கள். அவர்கள் புத்தகங்களை எழுதி, அனைத்து வகையான விடயங்களையும் பற்றிய நாடகங்களையும் உருவாக்குகிறார்கள். பாரதத்தில், அவர்கள் பலரையும் அவதாரங்கள் என நம்புகிறார்கள். பாரதம் தனது சொந்தப் படகை (தன்னை) மூழ்கடித்துக் கொண்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது குறிப்பாகப் பாரதமாகிய படகையும், பொதுவாக உலகையும் மீட்கின்றீர்கள். உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. சூரியன் மறைகின்றபொழுது மக்கள் அது கடலின் அடியில் செல்வதாகக் கூறுவதைப் போன்று, நாங்கள் மேலே இருக்கும்பொழுது, நரகம் கீழே இருக்கும். எவ்வாறாயினும், உண்மையில் அது நிகழ்வதில்லை. துவாரகை கடலினடியில் மூழ்கியதாக அவர்கள் எண்ணுகிறார்கள். மனிதர்களின் புத்திகள் மிகவும் அற்புதமானவை! நீங்கள் இப்பொழுது மிகவும் மேன்மையானவர்களாகி விட்டீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இந்தத் துன்ப வேளையில் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்கின்றீர்கள். தேவர்கள் அதைப் பெற்றிருந்தார்கள். இங்கு, துன்பத்தை அனுபவித்த பின்னர், நீங்கள் இப்பொழுது எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற பெரும் சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். கீதா ஞானத்தைச் செவிமடுப்பது என்றால், சற்சங்கத்தில் இருப்பது என்று அர்த்தமாகும் என்று மக்கள் கூறுகின்றார்கள். சாய்பாபா போன்ற எண்ணற்ற சற்சங்கங்கள் இருக்கின்றன. அது அத்தகைய பெரிய சந்தை, ஆனால் இதுவோ பிரம்மாகுமாரிகளின் ஒரேயொரு கடை ஆகும். ஜெகதாம்பாள் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல் ஆவார். பிரம்மாவின் புதல்வியாகிய, சரஸ்வதி மிகவும் பிரபல்யமானவர்;. தாய் மூலமும், தந்தை மூலமும் நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெற்றதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அந்தத் தாயையும் தந்தையையும் கண்டுகொண்டுள்ளீர்கள். அவர்கள் உங்களுக்குப் பல சந்தோஷப் பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார்கள். அச்சா. தாய்க்கும், தந்தைக்கும் பிறப்பு கொடுத்தவர் யார்? சிவபாபா ஆவார். நாங்கள் சிவபாபாவிடமிருந்து இரத்தினங்களைப் பெறுகின்றோம். நீங்கள் அவருடைய பேரக் குழந்தைகள். தந்தையும் தாயுமாகிய பிரம்மாவினூடாகவும், சரஸ்வதியினூடாகவும் அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து நாங்கள் இப்பொழுது எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றோம். அவரே அருள்பவர். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! பின்னர் எவ்வாறு நாங்கள் இப் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதையும், எவ்வாறு நாங்கள் அங்கு சந்தோஷப் பொக்கிஷங்களைப் பெறுவோம் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் பாரதத்தின் சேவகர்கள். நாங்கள் எங்களுடைய மனங்கள், சரீரங்கள், செல்வத்தினூடாகச் சேவை செய்;கின்றோம். மக்கள் காந்திஜிக்கும் உதவினார்கள். யாதவர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த முடியும். பரமாத்மாவான பரமதந்தை பாண்டவர்களின் பக்கத்தில் இருக்கின்றார். விநாச வேளையில், பாண்டவர்கள் அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள், கௌரவர்களினதும், யாதவர்களினதும் புத்திகளில் கடவுளின் மீதான அன்பு இருப்பதில்லை. அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் அவரைக் கூழாங்கற்கள், கற்கள் போன்றவற்றில் இட்டுள்ளார்கள். நீங்கள் அவரைத் தவிர, எவரிடமும் அன்பு கொண்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய விரல் நுனியிலிருந்து உங்களுடைய உச்சந்தலை வரை சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பல குழந்தைகள் இருக்கின்றார்கள். தாய் மூலமும், தந்தை மூலமும் செவிமடுக்கின்ற நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்;கின்றீர்கள். முழு உலகிலும் உங்களைப் போன்ற பாக்கியசாலிகள் எவரும் இல்லை. எவ்வாறாயினும், உங்கள் மத்தியிலும், சிலர் பலமில்லியன் மடங்குகள் பாக்கியசாலிகள், சிலர் நூறு மடங்குகள் பாக்கியசாலிகள், ஏனையோர் வெறுமனே பாக்கியசாலிகளாகவோ அல்லது துர்;ப்பாக்கியசாலிகளாகவோ இருக்கின்றார்கள். வியப்படைந்து, பின்னர் ஓடிவிடுபவர்கள் பெரும் துர்ப்பாக்கியசாலிகள் எனக் கூறப்படுகின்றார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் தந்தையை விட்டு நீங்கிச்; செல்கின்றார்கள். தந்தை மிகவும் இனிமையானவர்;. அவர் உங்;களுக்குக் குறிப்பிட்ட அறிவுறுத்தல்களைக் கொடுத்தால், நீங்கள் அவரை விட்டு நீங்கிச் செல்லக்கூடும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால், குலத்தின் பெயரை அவதூறு செய்கின்றீர்கள் என்றும், நீங்கள் குலத்தின் பெயரை அவதூறு செய்தால், பெரும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் விளங்கப்படுத்துகின்றார். அத்தகைய நபர் சற்குருவின் பெயரை அவதூறு செய்பவர் என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, இது தங்கள் லௌகீகக் குருவிற்கும் பொருந்துகின்றது என்று எண்ணுகிறார்கள். ஆண்களும் தங்களுடைய கள்ளங்கபடமற்ற மனைவிகளை இதனால் பயமுறுத்துகிறார்கள். அமரத்துவப் பிரபுவாகிய, பாபா உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். பாபா கூறுகின்றார்: நான் ஆசிரியரும், சேவகனும் ஆவேன். மாணவர்கள் தங்களுடைய ஆசிரியரின் பாதங்களைக் கழுவிப் பின்னர் அந்த நீரைப் பருகுகின்றார்களா? உலகின் அதிபதிகளாகப் போகின்ற எனது குழந்தைகளை நான் எனது பாதங்களைக் கழுவச் செய்ய முடியுமா? இல்லை. அந்த அசரீரியானவரும், ஆணவமற்றவருமானவரின் புகழ் நினைவுகூரப்படுகின்றது. இவரும் அவருடைய சகவாசத்தினால் ஆணவமற்றவராகி விட்டார். கள்ளங்கபடமற்றவர்களை அடிப்பதும் நினைவுகூரப்படுகின்றது. இவ்வன்முறைகள் முன்னைய கல்பத்திலும் நடைபெறுகின்றன. பாவக் கலசம் நிறைந்து, இரத்த ஆறுகள் பாயும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய எல்லையற்ற இராச்சியத்தை யோக சக்தி மூலம் பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஆட்ட, அசைக்க முடியாத இராச்சியத்தைத் தந்தையிடமிருந்து கோருவதைப் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் நிச்சயமாகச் சூரிய வம்சத்தினர் ஆகுவோம். ஆம், இதற்குத் தைரியம் தேவைப்படுகின்றது. ஏதாவது விகாரங்கள் உங்களில் இருக்கின்றனவா என்பதைப் பார்ப்பதற்கு உங்களுடைய முகங்களைத் தொடர்ந்தும் சோதியுங்கள். நீங்கள் ஏதனையாவது புரிந்துகொள்ளாதுவிடின், நீங்கள் சிரேஷ்டர்களிடம் வினவி, சந்தேகங்களை அகற்ற முடியும். ஓர் ஆசிரியரால் உங்களுடைய சந்தேகங்களை அகற்ற முடியாதுவிடின், பாபாவிடம் வினவுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்வதற்கு இன்னமும் பலவிடயங்கள் உள்ளன. பாபா தொடர்ந்தும் நீங்கள் உயிர்வாழும்வரை உங்களுக்கு விளங்கப்படுத்துவார். அவர்களின் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு, நீங்கள் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்றும், அதைப் பற்றி பாபாவிடம் வினவுவீர்கள் என்றும் நீங்கள் அவர்களுக்குக் கூறலாம், அல்லது, பாபா அக்கருத்தை இன்னமும் உங்களுக்கு விளங்கப்படுத்தவில்லை என்றும், அவர் அதை எதிர்காலத்தில் விளங்கப்படுத்துவார் என்றும், அப்பொழுது அவர்கள் அதைப் பற்றி வினவலாம் என்றும் அவர்களுக்குக் கூறுங்கள். பல கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. சிலர் என்ன நடக்கும் என்று யுத்தத்தைப் பற்றி வினவுகின்றார்கள். பாபா திரிகாலதரிசி. அவரால் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், பாபா இன்னமும் அந்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை, அதனால் நீங்கள் அவருக்கு ஒரு விண்ணப்பத்தை இடுங்கள், ஆனால் அது அவரைப் பொறுத்தது என்று அவர்களுக்குக் கூறுங்கள். இவ்வாறாக நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். பாபா குழந்தைகளிடம் பூந்தோட்டத்தில் ஒரு வினாவை வினவினார்: பாபா ஞானக் கடல், எனவே, அவர் ஞான நடனத்தை ஆட வேண்டும். அச்சா. சிவபாபா பக்தி மார்க்கத்தில் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கின்ற பாகத்தை நடிக்கின்றபொழுது, சங்கம யுகத்தில் பாரதத்திற்குச் சென்று குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வேண்டும் எனவும், உங்களைச் சுவர்க்க அதிபதிகளாக்க வேண்டும் என்றும் அந்நேரத்தில் எண்ணியிருப்பாரா? இவ்வெண்ணம் அந்நேரத்தில் தோன்றியதா அல்லது அது அவர் வர வேண்டிய நேரத்தில் தோன்றியதா? அப்பொழுது உண்மையில் இந்த எண்ணம் இருக்க மாட்டாது என்றே பாபா எண்ணுகிறார். 84 பிறவிகளின் பாகம் உங்களில் அமிழ்ந்திருப்பதைப் போன்று, இந்த ஞானம் அவரில் அமிழ்ந்திருந்தாலும், அவர் வர வேண்டிய நேரத்தில் மாத்திரம் அது வெளிப்படும். புதிய உலகைப் படைப்பதற்கான எண்ணத்தைக் கடவுள் கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. அந்த எண்ணம் சரியான நேரத்திலேயே வரும். அவரும் நாடகத்தினால் கட்டுப்பட்டுள்ளார். இவை மிகவும் ஆழமான விடயங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய். தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு : 13ஃ01ஃ1969

குழந்தைகளாகிய நீங்கள் வந்து, இங்கு அமரும்பொழுது, பாபா உங்களை வினவுகிறார்: குழந்தைகளே, நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கிறீர்களா? அப்பொழுது, நீங்கள் புதிய உலக இராச்சியத்தையும் நினைவுசெய்கிறீர்களா? எல்லையற்ற தந்தையின் பெயர் சிவன். பல மொழிகளின் காரணமாக, அவருக்குப் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பம்பாயில் பாபுல்நாத் (முட்களின் பிரபு) என்று அழைக்கப்படுகின்ற ஆலயம் உள்ளது, ஏனெனில் அவர் முட்களை மலர்களாக மாற்றுகின்றார். சத்திய யுகத்தில் மலர்கள் உள்ளன, ஆனால் இங்கோ அனைவரும் முட்கள் ஆவார்கள்;. எனவே, பாபா ஆன்மீகக் குழந்தைகளை வினவுகிறார்: நீங்கள் எந்தளவு நேரம் எல்லையற்ற தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள்? அவருடைய பெயர் நன்மையளிப்பவராகிய, சிவன் ஆகும். நீங்கள் அவரை எந்தளவிற்கு அதிகமாக நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். சத்திய யுகத்தில் பாவங்கள் இல்லை. அது தூய, புண்ணியாத்மாக்களின் உலகம, இதுவோ பாவாத்மாக்களின் உலகம். ஐந்து விகாரங்களே உங்களைப் பாவம் செய்ய வைக்கின்றன. சத்திய யுகத்தில் இராவணன் இருப்பதில்லை. அவன் முழு உலகினதும் எதிரியாவான். இந்நேரத்தில், முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. அனைவரும் சந்தோஷமற்றும், தமோபிரதானாகவும் இருக்கின்றனர். இதனாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இவ்வார்த்தைகள் கீதையிலிருந்து பெறப்பட்டவை. தந்தையே கூறுகிறார்: உங்கள் சரீரத்தினதும், சரீர உறவினர்களினதும்; உணர்வைத் துறந்து, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். முதலில், நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளில் இருந்தீர்கள், பின்னர் நீங்கள் இராவணனின் பந்தனங்களில் வந்தீர்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை, நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் வர வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை இந்தக் கற்பித்தல்களைச் சங்கம யுகத்தில் கொடுக்கின்றார். தந்தையே கூறுகிறார்: நான் பரந்தாமவாசி. உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு, நான் இந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். தந்தை கூறுகின்றார்: முதலில் தூய்மையாகாமல், உங்களால் என்;னிடம் வர முடியாது. இப்பொழுது, நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகுவீர்கள்? என்னை நினைவுசெய்யுங்கள். பக்தி மார்க்கத்திலும், என்னை மாத்திரம் வழிபட்டவர்கள் இருந்தார்கள். அது கலப்படமற்ற வழிபாடு என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது, நானே தூய்மையாக்குபவர்;. எனவே என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். 63 பிறவிகளின் பாவங்கள் உள்ளன. சந்நியாசிகளால் ஒருபொழுதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தையால் மாத்திரமே அதைக் கற்பிக்க முடியும். உண்மையில், அந்தச் சமயநூல்கள், பக்தி போன்ற அனைத்தும் இல்லறத்தவர்களுக்கு உரியது. சந்நியாசிகள் சென்று, காடுகளில் அமர்ந்திருந்து, பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்கிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நானே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறேன். எனவே, என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகுவீர்கள். இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் கற்று, ஏனையோருக்கும் கற்பிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைத் தேவ இராச்சியத்தில் கோருவீர்கள். ஒரேயொரு தந்தையே அல்பா. ஒரு படைப்பானது ஒரு படைப்பிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியாது. அவர் எல்லையற்ற தந்தை, எனவே அவர் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். சத்திய யுகத்தில், நீங்கள் சற்கதியில் இருப்பீர்கள், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். ‘முக்தி’, ‘ஜீவன்முக்தி’, ‘சற்கதி’ என்ற வார்த்தைகள் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் உரியவை. தந்தையின் நினைவைக் கொண்டிருக்காமல், உங்களால் வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இங்கு, அனைவரும் நாஸ்திகர்கள்: அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்களாகி விட்டீர்கள். கடவுள் மீது அன்பைக் கொண்டிராதவர்களின் புத்திகள் அழிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இது இப்பொழுது விநாச நேரம் ஆகும். சக்கரம் நிச்சயமாகச் சுழல வேண்டும். கடவுளின் மீது அன்பைக் கொண்டிருப்பவர்களின் புத்திகள் வெற்றியடைகின்றன. தந்தை அனைத்து விடயங்களையும் ஓர் எளிமையான முறையில் விளங்கப்படுத்துகிறார், ஆனால் இராவணனாகிய, மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். இது இப்பொழுது இப்பழைய உலகின் இறுதியாகும். அது அமரத்துவ உலகாகும்; அங்கே அகால மரணம் இல்லை. நாங்கள் தந்தைக்குக் கூறுகின்றோம்: வந்து, எங்கள் அனைவரையும் உங்களுடன் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள். எனவே, அவரே மகாகாலன். சத்திய யுகத்தின் விருட்சம் மிகச்சிறியதாகும். விருட்சம் இப்பொழுது மிகவும் பெரியதாக உள்ளது. பிரம்மாவினதும். விஷ்ணுவினதும் தொழில் என்ன? விஷ்ணு ஒரு தேவர் என அழைக்கப்படுகின்றார். பிரம்மா ஆபரணங்கள் போன்ற எவற்றையும் அணிந்திருப்பதில்லை. அங்கு பிரம்மா, விஷ்ணு, அல்லது சங்கரர் இருப்பதில்லை. மனித குலத்தின் தந்தையாகிய பிரம்மா இங்கேயே இருக்கின்றார். நீங்கள் சூட்சும வதனத்தில் காட்சிகளை மாத்திரமே பெறுகிறீPர்கள். இங்கே பௌதீக, சூட்சும, அசரீரி உலகம் உள்ளன. சூட்சும வதனத்தில் ‘அசைவு’ உள்ளது. இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்ற, கீதா பாடசாலை இதுவாகும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பி;க்கின்றார், எனவே நிச்சயமாகச் சிவபாபாவே நினைவுசெய்யப்பட வேண்டியவர்;. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அன்பும், நினைவும், இரவு வணக்கமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இத் துன்பவேளையில் எல்லையற்ற சந்தோஷம் எனும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டைப் பெற்றுள்ளீர்கள். ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். அவரை நினைவுசெய்து, சதா சந்தோஷமாக இருங்கள்.

2. பாப்தாதாவைப் போல் அசரீரியானவராகவும், ஆணவமற்றவராகவும் ஆகுங்கள். தைரியத்தைக் கொண்டிருந்து விகாரங்களை வெற்றி கொள்ளுங்கள். உங்கள் யோக சக்தி மூலம் உங்கள் இராச்சியத்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் செயற்படும்பொழுதும், ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதால், ஆன்மீக ஆளுமையின் அனுபவத்தைக் கொடுக்கின்ற, ஒரு கர்மயோகியாக இருப்பீர்களாக.

குழந்தைகளாகிய நீங்கள் பணியாட்கள் அல்ல, ஆனால் நீங்கள் கர்மயோகிகள், நீங்கள் ஒவ்வொரு செயலையும் யோகியுக்தாக இருந்து செய்கின்றீர்கள். உங்கள் கரங்களால் வேலை செய்யும்பொழுது, உங்கள் சக்திவாய்ந்த ஸ்திதியில் நீஙகள் ஸ்திரமாக இருப்பதை உங்களிடமிருந்து அனைவரும் அனுபவம் செய்யட்டும். நீங்கள் ஒரு சாதாரண முறையில் நடமாடும்பொழுதும் அல்லது எங்காவது நிற்கும்பொழுதும் தொலைவிலிருந்தே உங்கள் ஆன்மீக ஆளுமை அனுபவம் செய்யப்படட்டும். லௌகீக ஆளுமைகள் கவர்வதைப் போல், உங்கள் ஆன்மீக ஆளுமையான, தூய்மையின் ஆளுமையும், ஒரு ஞானி, யோகி ஆத்மாவாக இருக்கின்ற ஆளுமையும் இயல்பாகவே பிறரைக் கவரும்.

சுலோகம்:
சரியான பாதையில் நடந்து, அனைவருக்கும் சரியான பாதையைக் காட்டுபவர்களே உண்மையான கலங்கரை விளக்கங்கள்.