04-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது
ஸ்ரீமத் படி அமைதியின் ஆழத்தில் செல்கிறீர்கள். உங்களுக்கு
பாபாவிடமிருந்து சாந்தியின் ஆஸ்தி கிடைக்கின்றது. சாந்தியில்
அனைத்துமே வந்து விடுகின்றது.
கேள்வி:
புது உலகத்தின் ஸ்தாபனைக்கான
முக்கிய ஆதாரம் என்ன?
பதில்:
பவித்திரதா (தூய்மை). பாபா
எப்போது பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி புது உலக ஸ்தாபனை
செய்கிறாரோ, அப்போது நீங்கள் உங்களுக்குள் சகோதர-சகோதரிகள் ஆகி
விடுகிறீர் கள். ஆண், பெண் என்ற உணர்வு விடுபட்டுப் போகின்றது.
இந்தக் கடைசிப் பிறவியில் பவித்திரமா வீர்களானால் பவித்திர
உலகின் மாலிக் ஆகி விடுவீர்கள். நீங்கள் தனக்குத் தானே உறுதி
எடுத்துக் கொள்கிறீர்கள், நாங்கள் சகோதர-சகோதரி ஆகி இருப்போம்
என்று. விகாரத்தின் திருஷ்டி வைக்க மாட்டோம்.ஒருவர் மற்றவரை
கவனப்படுத்தி (எச்சரிக்கை செய்து) முன்னேற்றத்தை அடைவோம்.
பாடல்:
மணமகள்களே, எழுந்திருங்கள்..........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்.
புத்தி யில் சுய சக்கரதாரி எனச் சொல்லிக் கொள்கிறார். ஏனென்றால்
சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்வது என்பதே
சுயதரிசன சக்கரதாரி ஆவதாகும். இவ்விசயங்களை பாபாவைத் தவிர வேறு
யாரும் புரிய வைக்க முடியாது. பிராமணர்களாகிய உங்கள் ஆதாரம்
அனைத்தும் அமைதியில் தான் உள்ளது. அனைவருமே
அழைக்கின்றனர்-சாந்தி தேவா, ஓ சாந்தி அளிப்பவரே என, சாந்தியை
யார் கொடுப்பார் அல்லது சாந்திதாமத்திற்கு யார் அழைத்துச்
செல்வார் என்று யாருக்கும் தெரியாது. இதைக் குழந்தைகளாகிய
நீங்கள் தான் அறிவீர்கள். பிராமணர்கள் தான் சுயதரிசனச்
சக்கரதாரி ஆகின்றனர். தேவதைகள் யாரும் சுயதரிசனச் சக்கரதாரி
எனச் சொல்லிக் கொள்ள முடியாது. எவ்வளவு இரவு பகலுக்குள்ள
வேறுபாடு! பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார்,
நீங்கள் ஒவ்வொருவருமே சுயதரிசன சக்கரதாரி தான் - நம்பர்வார்
புருஷார்த்தத்தின் அனுசாரம். பாபாவை நினைவு செய்ய வேண்டும்-இது
தான் முக்கிய விஷயம். பாபாவை நினைவு செய்வது என்றால் சாந்தியின்
ஆஸ்தியைப் பெறுவதாகும். சாந்தியில் அனைத்துமே வந்து விடுகின்றன.
உங்களுடைய ஆயுளும் நீண்டதாக ஆகி விடுகின்றது. நோயற்ற உடலாகவும்
ஆகிக் கொண்டே போகின்றது. பாபாவைத் தவிர வேறு யாராலும் சுயதரிசன
சக்கர தாரி ஆக்க முடியாது. ஆத்மா தான் அதுபோல் ஆகின்றது.
பாபாவும் கூட அப்படி தான், ஏனென்றால் சிருஷ்டியின்
முதல்-இடை-கடை பற்றிய ஞானம் அவருக்கு உள்ளது. பாடலும்
கேட்டீர்கள், இப்போது புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
பாடலோ மனிதர்கள் தான் இயற்றியுள்ளனர். பாபா அமர்ந்து சாரத்தைப்
புரிய வைக்கிறார். அவர் அனைத்து ஆத்மாக் களுக்கும் தந்தை. ஆகவே
குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள் சகோதர-சகோதரர் ஆகின்றனர்.
பாபா புது உலகத்தைப் படைக்கும் போது பிரஜாபிதா பிரம்மா மூலம்
நீங்கள் சகோதர-சகோதரிகள். ஒவ்வொருவரும் பிரம்மாகுமார்-
குமாரிகள். இது புத்தியில் இருப்பதன் மூலம் பிறகு ஆண்-பெண்
என்ற உணர்வு விடுபட்டு விடும். மனிதர்கள் இதைப் புரிந்து
கொள்வதில்லை, அதாவது நாமும் கூட உண்மையில் சகோதர-சகோதரர்கள்
என்று. பிறகு தந்தை படைப்பினைப் படைக்கிறார் என்றால்
சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். குற்றமான பார்வை நீங்கி விடு
கின்றது. பாபா நினைவு படுத்தவும் செய்கிறார், நீங்கள் அழைத்துக்
கொண்டே இருந்தீர்கள் ஹே பதீத-பாவனா என்று. இப்போது நான்
வந்திருக்கிறேன், உங்களுக்குச் சொல்கிறேன், இந்தக் கடைசிப்
பிறவியில் பவித்திரமாகுங்கள். அப்போது நீங்கள் பவித்திர
உலகத்திற்கு மாலிக் (அதிபதி) ஆவீர்கள். இந்தக் கண்காட்சியோ
உங்கள் ஒவ்வொரு வரின் வீட்டிலும் இருக்க வேண்டும். ஏனென்றால்
குழந்தைகள் நீங்கள் பிராமணர்கள். உங்கள் வீட்டில் இந்தச்
சித்திரங்கள் அவசியம் இருக்க வேண்டும். இவற்றை வைத்துப் புரிய
வைப்பது மிகவும் சுலபம். 84 பிறவிச் சக்கரமோ புத்தியில் உள்ளது.
நல்லது, உங்களுக்கு ஒரு பிராமணி (ஆசிரியர்) கொடுத்து விடுவோம்.
அவர் வந்து சேவை செய்து விட்டுச் செல்வார். நீஙகள்
கண்காட்சியைத் திறந்து வையுங்கள். பக்தி மார்க்கத்திலும் கூட
யாராவது கிருஷ்ணரின் பூஜை அல்லது மந்திரங்கள் முதலியன
தெரியவில்லை என்றால் பிராமணர்களை அழைக்கின்றனர். அவர்கள்
தினந்தோறும் வந்து பூஜை செய்கின்றனர். நீங்களும் வரவழைக்க
முடியும். இதுவோ மிகவும் சுலபம். பாபா, பிரஜாபிதா பிரம்மா மூலம்
சிருஷ்டியைப் படைத்திருப் பார் என்றால் நிச்சயமாக பிரம்மா
குமார்-குமாரிகள் சகோதர-சகோதரி ஆகியிருப்பார்கள். உறுதி மொழி
எடுத்துக் கொள்கின்றனர், நாங்கள் இருவரும் சகோதர-சகோதரியாக
இருப்போம், விகார திருஷ்டி வைக்க மாட்டோம். ஒருவர் மற்றவரை
கவனப் படுத்தி (எச்சரித்து) முன்னேற்றத்தை அடைவோம்.
முக்கியமானது நினைவின் யாத்திரை. அந்த மனிதர்கள் விஞ்ஞானத்தின்
சக்தியால் எவ்வளவு உயரத்தில் செல்வதற்காக முயற்சி செய்கின்றனர்!
ஆனால் மேலே எந்த ஓரு உலகமும் கிடையாது. இது விஞ்ஞானத்தின் அதிக
பட்சத்தில் செல்வதாகும். இப்போது நீங்கள் அமைதியின் எல்லைக்குச்
செல்கிறீர்கள், ஸ்ரீமத்படி. அவர்களுடையது சயின்ஸ். உங்களுடையது
சைலன்ஸ். குழந்தைகள் அறிவார்கள்,
ஆத்மாவோ சுயம் சாந்த சொரூபம். இந்த சரீரத்தின் மூலம் பார்ட்டை
மட்டும் நடிக்க வேண்டி யுள்ளது. கர்மம் செய்யாமலோ யாருமே
இருக்க முடியாது. பாபா சொல்கிறார், தன்னை சரீரத்திலிருந்து
விலகிய தனியான ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு
செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். மிகவும்
சுலபமானது. அனைவரைக் காட்டிலும் அதிகமாக என்னுடைய பக்தர்கள்,
அதாவது சிவனுடைய பூஜாரிகளுக்குப் புரிய வையுங்கள்.
உயர்ந்ததிலும் உயர்ந்த பூஜை சிவனுக்கு செய்யப் படுவதாகும்.
ஏனென்றால் அவர் தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா வந்துள்ளார்,
அனைவரையும் உடன் அழைத்துச் செல்வதற்காக. தங்களுக்கான சமயத்தில்
நாமும் டிராமாவின் அனுசாரம் கர்மாதீத் நிலையை அடைவோம். பிறகு
விநாசம் ஏற்படும். புருஷார்த்தம் அதிகம் செய்ய வேண்டும், அதன்
மூலம் நாம் ஆத்மா சதோபிரதானமாக ஆகி விட வேண்டும். பாபாவின்
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதா எனச்
சொல்கின்றனர், இது எவ்வளவு பெரிய மகிமை! தேவதைகளுக்கும் மகிமை
பாடுகின்றனர் - சர்வகுண சம்பன்ன, சம்பூர்ண நிர்விகாரி.........
பாபா தான் வந்து முழுமையான தூய்மையாக ஆக்குகிறார். எப்போது
முழுமையாக தூய்மையற்ற உலகமாக ஆகின்றதோ, அப்போது தான் பாபா வந்து
முழுமையான தூய்மையான உலகத்தை உருவாக்குகிறார். அனை வரும்
சொல்கின்றனர், நாங்கள் பகவானின் குழந்தைகள் என்று. அப்படியானால்
சொர்க்கத்தின் ஆஸ்தி இருக்க வேண்டும் அல்லவா ! பிரஜாபிதா
பிரம்மா மூலம் இப்போது நாம் சகோதர-சகோதரிகளாக ஆகியிருக்கிறோம்.
கல்பத்திற்கு முன்பும் கூட பாபா வந்திருந்தார், சிவஜெயந்தி
கொண்டாடுகின்றனர். நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகளாக ஆகியிருப்பார்கள். பாபாவிடம் உறுதிமொழி
அளிக்கின்றனர் - பாபா, நாங்கள் எங்களுக்குள் ஒருவருக்கொருவர்
துணைவராக ஆகிப் பவித்திரமாக இருப்போம். உங்கள் கட்டளைப்படி
நடக்கிறோம். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இப்போது இது கடைசிப்
பிறவி. இந்த மரண உலகம் அழிந்துவிடப் போகிறது. இப்போது நீங்கள்
புத்திசாலிகளாக ஆகியிருக்கிறீர்கள். யாராவது தன்னை பகவான் எனச்
சொல்லிக் கொள்வார்கள், பிறகு அவர்களே பகவானோ அனைவருக்கும்
சத்கதி அளிப்பவர் என்பார்கள், இவர் பிறகு தன்னை எப்படிச்
சொல்லிக் கொள்ள முடியும்? ஆனால் இது டிராமாவின் விளையாட்டு எனப்
புரிந்து கொண்டுள்ளனர்.
பாபா குழந்தைகளாகிய உங்களை சுயதரிசனச் சக்கரதாரியாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், இப்போது சேவையில்
ஈடுபடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கண்காட்சியைத் திறந்து
வையுங்கள். இதைப் போன்ற மகா புண்ணியம் எதுவும் கிடையாது.
யாருக்காவது பாபாவை அடைய வழி சொல்வது போன்ற தானம் எதுவும்
கிடையாது. பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு
செய்வீர்களானால் பாவங்கள் அழிந்து விடும். அதனால் தான் பாபாவை
அழைக்கின்றனர், பதீத பாவனா, துக்கத்திலிருந்து விடுவிப்பவரே,
வழிகாட்டியே வாருங்கள் என்று. உங்களுடைய பெயரும் பாண்டவர்கள்
எனப் பாடப்பட்டுள்ளது. பாபாவும் வழிகாட்டியாக உள்ளார்.
ஆத்மாக்கள் அனைவரையும் அழைத்துச் செல்வார். இவர் ஆன்மிக
வழிகாட்டி. அது சரீரம் தொடர்பான உலகாயத ரீதியிலான யாத்திரை. இது
ஆன்மிக யாத்திரை. சத்யுகத்தில் பக்தி மார்க்கத்தின் சரீர
சம்மந்த யாத்திரைகள் கிடையாது. அங்கே நீங்கள்
பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். இப்போது பாபா உங்களை எவ்வளவு
புத்திசாலிகளாக ஆக்குகிறார்! ஆக, பாபாவின் வழிமுறைப்படி நடக்க
வேண்டும் இல்லையா? ஏதாவது சந்தேகம் முதலியன இருந்தால் கேட்க
வேண்டும். இப்போது பாபா சொல்கிறார், இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து
பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னுடைய செல்லக்
குழந்தைகள். அரைக்கல்பத்தின் நாயகிகள் நீங்கள். ஒருவருக்குத்
தான் ஏராளமான பெயர்கள் வைத்துள்ளனர். எவ்வளவு பெயர்கள்,
எத்தனைக் கோவில்கள் கட்டுகின்றனர்! நானோ ஒருவன் தான். என்னுடைய
பெயர் சிவன். நான் 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் தான்
வந்திருந்தேன். குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தேன். இப்போதும்
தத்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். பிரம்மாவின் குழந்தைகள் என்ற
காரணத்தால் சிவபாபாவுக்கு நீங்கள் பேரக்குழந்தைகள் ஆகிறீர்கள்.
இங்கே ஆஸ்தி கிடைப்பது ஆத்மாவுக்குத் தான். அதில் சகோதர-சகோதரி
என்ற கேள்வி எழுவதில்லை. ஆத்மா தான் படிக்கின்றது, ஆஸ்தி
பெறுகின்றது. அனைவருக்கும் உரிமை உள்ளது. குழந்தைகள் நீங்கள்
இந்தப் பழைய உலகில் என்னென்ன பார்க்கிறீர்களோ - இவை அனைத்தும்
அழிந்தாக வேண்டும். மகாபாரத யுத்தமும் நிச்சய மாக உள்ளது.
எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். எல்லையற்ற ஞானத்தைச் சொல்லிக் கொண்டி
ருக்கிறார். ஆக, தியாகமும் எல்லையற்றதாக இருக்க வேண்டும்.
நீங்கள் அறிவீர்கள், கல்பத்திற்கு முன்பும் கூட பாபா இராஜயோகம்
கற்பித்திருந்தார். இராஜஸ்வ அஸ்வமேத யாகம் படைத் திருந்தார்.
பிறகு இராஜ்யத்திற்காக சத்யுக புது உலகம் அவசியம் வேண்டும்.
பழைய உலகத்தின் விநாசமும் நடைபெற்றது. இது 5000 ஆண்டுகளின்
விஷயம். இதே யுத்தம் நடைபெற்றது. அதன் மூலம் (கேட்)
சொர்க்கவாசல் திறந்தது. போர்டிலும் எழுதி வையுங்கள் -
சொர்க்கத்தின் கேட் எப்படித் திறக்கிறது என்பதை வந்து புரிந்து
கொள்ளுங்கள். உங்களால் புரிய வைக்க முடிய வில்லை என்றால் வேறு
யாரையாவது அழைக்கலாம். பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக விருத்தி யாகிக்
கொண்டே போகும். நீங்கள் எவ்வளவு ஏராளமான பிராமண்-பிராமணிகள் -
பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்! ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து
கிடைக்கின்றது. அவர் தாம் அனைவருடைய தந்தை ஆவார். இதையோ
புத்தியில் நல்லபடியாக நினைவு வைக்க வேண்டும் - பிராமணர்களாகிய
நாம் தான் பிறகு தேவதை ஆகிறோம். நாம் தான் தேவதையாக இருந்தோம்.
பிறகு சக்கரத்தைச் சுற்றி வந்தோம். நாம் இப்போது பிராமணர்
ஆகியிருக்கிறோம். பிறகு விஷ்ணு புரிக்குச் செல்வோம். ஞானம்
மிகவும் சுலபமானது. ஆனால் கோடியில் சிலர் தான் வெளிப்படு
கின்றனர். கண்காட்சியில் எவ்வளவு ஏராளமான பேர் வருகின்றனர்!
அதில் அபூர்வமாகச் சிலரே வெளிப்படுகின்றனர். சிலரோ மகிமை
செய்கின்றனர், மிக நன்றாக உள்ளது, நாங்கள் வருவோம் எனச்
சொல்கின்றனர். அபூர்வமாக சிலர் 7 நாள் கோர்ஸ் எடுத்துக்
கொள்கின்றனர். 7 நாள் விஷயமும் இப்போது என்ன? கீதையின் பாடமும்
7 நாள் வைக்கின்றனர். 7 நாள் நீங்களும் கூட பட்டியில் இருக்க
வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வதன்
மூலம் குப்பை முழுவதும் வெளியேறி விடும். அரைக்கல்பத்தினுடைய
அசுத்தமான நோய் தேக அபிமானத் தினுடையது. அதை வெளியேற்ற வேண்டும்.
ஆத்ம அபிமானி ஆக வேண்டும். 7 நாள் கோர்ஸ் ஒன்றும் பெரிதல்ல.
யாருக்கும் ஒரு விநாடியில் கூட புத்தியில் பதியும். தாமதமாக
வருபவர்கள் முன்னால் செல்ல முடியும். அவர்கள் சொல்வார்கள்,
நாங்கள் போட்டி போட்டு (தீவிர முயற்சி செய்) பாபாவிடம் ஆஸ்தி
பெற்றே தீருவோம். அநேகரோ பழையவர்களை விடவும் முன்னேறிச் சென்று
விடுகின்றனர். ஏனென்றால் நல்ல-நல்ல பாயின்ட்டுகள் தயாராகக்
கிடைக் கின்றன. கண்காட்சி முதலியவற்றைப் புரிய வைப்பதில்
எவ்வளவு சுலபமாக உள்ளது! தான் புரிய வைக்க முடியவில்லை என்றால்
சகோதரியை அழைக்க வேண்டும். தினம் வந்து ஞானம் கற்பித்துச்
செல்லுங்கள் எனச் சொல்ல வேண்டும். 5000 ஆண்டுகளுக்கு முன் இந்த
இலட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அது 1250 ஆண்டுகள்
நடந்தது. எவ்வளவு சிறிய கதை! நாம் தான் தேவதையாக இருந்தோம்.
பிறகு நாம் தான் சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆனோம். நாம் ஆத்மா
பிராமணர் ஆனோம், ஹம் ஸோ என்பதன் அர்த்தம் எவ்வளவு யுக்தியுடன்
புரிய வைக்கப்படுகின்றது! விராட ரூபமும் உள்ளது. ஆனால் அதில்
பிராமணர்களையும் சிவபாபாவை யும் மறைத்து விட்டார்கள். அர்த்தம்
எதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது குழந்தை களாகிய நீங்கள்
நினைவின் முயற்சி செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு சந்தேகத்திலும்
வரக் கூடாது. விகர்மாஜீத் ஆகி உயர்ந்த பதவி பெற வேண்டுமானால்
கவலையை முடித்துவிட வேண்டும்-இது ஏன் நடக்கிறது, இவர் இப்படி
ஏன் செய்கிறார்? இந்த அனைத்து விஷயங்களையும் விட்டு ஒரே
சிந்தனையில் இருக்க வேண்டும்-நாம் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக ஆக வேண்டும். எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறீர்களோ,
அவ்வளவு விகர்மாஜீத் ஆகி உயர்ந்த பதவி பெறுவீர்கள். மற்றபடி
தவறான விஷயங்களைக் கேட்டுத் தனது புத்தியைக் கெடுத்துக் கொள்ளக்
கூடாது. அனைத்து விஷயங்களிலும் ஒரு விஷயம் முக்கியமானது-அதை
மறக்காதீர்கள். யாருடனும் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள்
நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. புயல்களைக் கண்டு பயப்படக்
கூடாது. அதிகக் கஷ்டங்கள் வரும், நஷ்டம் ஏற்படும். ஆனால்
பாபாவின் நினைவை ஒருபோதும் மறக்கக் கூடாது. நினைவின் மூலம் தான்
பாவனமாக வேண்டும். முயற்சி செய்து உயர்ந்த பதவி பெற வேண்டும்.
இந்த வயதான (பிரம்மா) பாபா இந்தளவு உயர்ந்த பதவி பெறுகிறார்.
நாம் ஏன் ஆக மாட்டோம்? இதுவும் படிப்பு இல்லையா? நீங்கள் இதில்
புத்தகம் முதலிய எதையும் எடுப்பதற்கான தேவை கிடையாது.
புத்தியில் கதை முழுவதும் உள்ளது. எவ்வளவு சிறிய கதை! ஒரு
விநாடியின் விஷயம். ஜீவன் முக்தி ஒரு விநாடியில் கிடைக்கின்றது.
முக்கியமான விஷயம் பாபாவை நினைவு செய்யுங்கள். உங்களை உலகின்
மாலிக் ஆக்குகிற பாபாவை நீங்கள் மறந்து போகிறீர்களா!
சொல்கின்றனர், எல்லாருமே இராஜா ஆகிவிட மாட்டார்கள். அட, நீங்கள்
அனைவரைப் பற்றியும் ஏன் சிந்தனை செய்கிறீர்கள்? பாடசாலையில்
இந்த கவலை கொள்கின்றனரா? அனைவரும் ஸ்காலர்ஷிப் பெற மாட்டார்களா
என்று? படிப்பில் ஈடுபட்டிருப்பார்கள் இல்லையா? ஒவ்வொருவரின்
புருஷார்த்தத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும், இவர்கள்
என்ன பதவி பெறுவார்கள் என்று. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த சமயம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இதை தவறான
விசயங்களினால் இழந்துவிடக் கூடாது. எவ்வளவு தான் புயல்கள்
வந்தாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் பாபாவின் நினைவில் இருக்க
வேண்டும்.
2) தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆவதற்கான சிந்தனை மட்டுமே
செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு சிந்தனையும் இருக்கக் கூடாது.
ஹம் ஸோ, ஸோ ஹம் என்பதன் சிறிய கதையை மிகுந்த யுக்தியுடன்
புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் வேண்டும்.
வரதானம்:
மூழ்கிய நிலையின் அனுபவத்தின் மூலம் மாயாவைத் தன் பக்தையாக
ஆக்கக் கூடிய மாயாஜீத் ஆகுக.
மூழ்கிய நிலையின் அனுபவம் செய்வதற்காகத் தன்னுடைய அநேக
டைட்டில்கள் அல்லது சொரூபம், அநேக குணங்களின் அலங்காரம், அநேக
விதமான குஷியின், ஆன்மிக நஷாவின், படைப்பவர் மற்றும் படைப்பின்
விஸ்தாரத்தின் பாயின்ட்டுகள், பிராப்தியின் பாயின்ட்டுகளை
ஸ்மிருதியில் வையுங்கள். அதில் உங்களுக்குப் பிடித்தவற்றை
சிந்தனை செய்வீர்களானால் மூழ்கிய அவஸ்தா சுலபமாக அனுபவம் ஆகும்.
பிறகு ஒரு போதும் வேறு வசமாக (மாயா வசம்) ஆக மாட்டீர்கள். மாயா
சதா காலத்திற்கும் நமஸ்காரம் செய்யும். சங்கமயுகத்தின் முதல்
பக்தையாக மாயா ஆகி விடும். எப்போது நீங்கள் மாயா ஜீத் மாஸ்டர்
பகவான் ஆவீர்களோ, அப்போது மாயா பக்தை ஆகி விடும்.
சுலோகன்:
எப்போது உங்கள் பேச்சும், பின்பற்றும் நடைமுறையும் பிரம்மா
பாபாவுக்குச் சமமாக ஆகி விடுகிறதோ, அப்போது உண்மையான பிராமணர்
என உங்களைச் சொல்வார்கள்.
அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான
அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்
நிரந்தர நினைவில் இருப்பதற்கான சகஜ சாதனம் - இல்லறத்தில்
இருந்து கொண்டே பர விருத்தி யில் இருப்பதாகும். பரவிருத்தி
என்றால் ஆத்மிக ரூபம். அந்த மாதிரி ஆத்மிக ரூபத்தில் இருப்பவர்
சதா விலகியும் பாபாவுக்கு அன்பானவராகவும் இருப்பார். அவர் எதைச்
செய்தாலும், அவர் காரியம் செய்யவில்லை. ஆனால் விளையாடினார்
என்பதாக அனுபவம் ஆகும். இந்த ஆன்மிகக் கண்கள், இந்த ஆன்மிக
மூர்த்தி, அந்த மாதிரி தெய்வீகக் கண்ணாடி ஆகி விடும் - அந்தக்
கண்ணடியில் ஒவ்வொரு ஆத்மாவும் கடின முயற்சி இல்லாமல் ஆன்மிக
சொரூபத்தையே பார்ப்பார்கள்.