06-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எதிர்காலத்தில்
உயர்ந்த வம்சத்தில் வருவதற்கான ஆதாரம் படிப்பாகும், இந்த
படிப்பின் மூலம் தான் நீங்கள் எதுவுமற்ற நிலையிலிருந்து
இளவரசனாக ஆக முடியும்
கேள்வி:
வாயில் தங்க கரண்டியோடு பிறப்பது
இரண்டு விதங்களில் பலனை அடைய முடியும், எப்படி?
பதில்:
ஒன்று பக்தியில் தானம் புண்ணியம்
செய்வதின் மூலம், மற்றொன்று, ஞானத்தில் படிப்பின் மூலம் ஆகும்.
பக்தியில் தானம்-புண்ணியம் செய்கிறார்கள் என்றால் ராஜா (அரச
குடும்பம்) அல்லது செல்வந்தர்களிடத்தில் பிறவி எடுக்கிறார்கள்,
ஆனால் அது எல்லைக்குட்பட்டதாகும். நீங்கள் ஞானத்தில் படிப்பின்
மூலம் வாயில் தங்கக் கரண்டியோடு பிறக்கின்றீர்கள். இது
எல்லையற்ற விசயமாகும். பக்தியில் படிப்பின் மூலம் இராஜ்யம்
கிடைப்பதில்லை. இங்கே யார் எந்தளவிற்கு நல்ல விதத்தில்
படிக்கிறார்களோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைகிறார்கள்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை
வந்து புரிய வைக்கின்றார், இதை ஆன்மீக ஞானம் என்று
சொல்லப்படுகிறது. பாபா வந்து பாரதவாசி குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் மற்றும்
தந்தையை நினைவு செய்யுங்கள், என்று பாபா குறிப்பாக
கட்டளையிட்டுள்ளார் என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?
உயர்ந்த திலும் உயர்ந்த தந்தையின் ஸ்ரீமத் புகழ்பெற்ற தாகும்.
சிவபாபாவை மட்டும் தான் ஸ்ரீ ஸ்ரீ என்று சொல்ல முடியும்
என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர் தான்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார், ஸ்ரீ என்றால்
உயர்ந்தது என்பதாகும். இவர்களை (இலஷ்மி நாராயணனை) பாபா இப்படி
மாற்றியுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது
தெரிந்துள்ளது. நாம் இப்போது புதிய உலகத்திற்காக படித்துக்
கொண்டிருக்கிறோம். புதிய உலகத்தின் பெயரே சொர்க்கம், அமரபுரி
என்பதாகும். மகிமை பாடுவதற்கு நிறைய பெயர்கள் இருக்கின்றன.
சொர்க்கம் மற்றும் நரகம் என்று சொல்கிறார்கள். இன்னார்
சொர்க்கவாசியாகி விட்டார் என்று சொல்கிறார்கள் என்றால்
நரகவாசியாக இருந்தார் என்றாகிறது அல்லவா? ஆனால் மனிதர்களுக்கு
அந்தளவிற்கு புத்தி இல்லை, சொர்க்கம்-நரகம், புதிய உலகம், பழைய
உலகம் என்று எதை சொல்லப்படுகிறது, இதையும் தெரிந்திருக்கவில்லை.
வெளியில் எவ்வளவு பகட்டு இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களில்
கூட நமக்கு படிப்பிப்பவர் உண்மையில் பாபா என்பதை குறைவானவர்களே
புரிந்துள்ளீர்கள். நாம் இந்த இலஷ்மி- நாராயணன் போல் ஆவதற்காக
வந்துள்ளோம். நாம் எதுவுமற்ற நிலையிலிருந்து இளவரசர்களாக ஆவோம்.
முதன்-முதலில் நாம் சென்று ராஜகுமாரர்களாக ஆவோம். இது
படிப்பாகும், எப்படி வக்கீல் போன்றவற்றிற்கு படிக்கிறார்கள்
என்றால், நாம் வீடு கட்டுவோம் இதை-அதை செய்வோம் என்பது
புத்தியில் இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கடமை
நினைவில் வருகிறது. குழந்தைகளாகிய நீங்கள் சென்று இந்த
படிப்பின் மூலம் பெரிய மதிப்பு மிகுந்த வீட்டில் பிறவி எடுக்க
வேண்டும். யார் எந்தளவிற்கு அதிகமாக படிப்பார்களோ அந்தளவிற்கு
மதிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறவி எடுப்பார்கள். ராஜாவின்
வீட்டில் பிறவி எடுத்து பிறகு இராஜ்யம் செய்ய வேண்டும். வாயில்
தங்கக் கரண்டியுடன் பிறந்தார் என்று பாடப்பட்டுள்ளது. ஒன்று
ஞானத்தின் மூலம் இந்த வாயில் தங்கக் கரண்டியுடன் பிறக்க
முடியும். மற்றொன்று, நல்ல விதத்தில் தானம்- புண்ணியம்
செய்தார்கள் என்றால் கூட ராஜாவின் வீட்டில் பிறவி கிடைக்கும்.
அது எல்லைக்குட் பட்டதாகி விட்டது. இது எல்லைக்கு
அப்பாற்பட்டதாகும். ஒவ்வொரு விசயத்தையும் நன்றாகப் புரிந்து
கொள்ளுங்கள். எதுவும் புரியவில்லை என்றால் கேட்கலாம்.
இந்த-இந்த விசயங்களை பாபாவிடம் கேட்க வேண்டும் என்று
குறிப்பெடுத்து வையுங்கள். முக்கியமான விசயமே பாபாவின்
நினைவினுடைய விசயம் தான். மற்றபடி ஏதாவது சந்தேகம் போன்றவைகள்
இருந்தால் அவற்றை சரி செய்து விடலாம். எந்தளவிற்கு பக்தி
மார்க்கத்தில் தானம்-புண்ணியம் செய்கிறார் களோ, அந்தளவிற்கு
செல்வந்தர்களின் வீட்டில் பிறவி எடுக்கிறார்கள் என்பதை
குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். யாராவது ஏதாவது தவறான கர்மம்
செய்கிறார்கள் என்றால் பிறகு பிறவியும் அதற்கேற்றபடி
கிடைக்கிறது, பாபாவிடம் வருகிறார்கள்.சிலருக்கு அப்படி
கர்மபந்தனம் இருக்கிறது கேட்கவே கேட்காதீர்கள். இவையனைத்தும்
கடந்த கால கர்மபந்தனங்களாகும். சில ராஜாக்களும் கூட அப்படி
இருக்கிறார்கள், அதிக கர்மபந்தனம் கடுமையானதாக இருக்கிறது.
இந்த இலஷ்மி-நாராயணனுக்கு எந்த கர்மபந்தனமும் இல்லை. அங்கே யோக
பலத்தின் படைப்பாகும். யோக பலத்தின் மூலம் நாம் உலக இராஜ்யத்தை
அடையும்போது குழந்தைகளைப் பிறக்க வைக்க முடியாதா என்ன!
முதலிலேயே காட்சி கிடைத்து விடுகிறது. அங்கே இது சாதாரண
விசயமாகும். குஷியில் இசைக் கருவியை இசைத்துக் கொண்டே
இருப்பார்கள். வயதான நிலையிலிருந்து குழந்தையாக ஆகி
விடுகிறார்கள். மகாத்மாவை விடவும் குழந்தைகளுக்கு அதிக மரியாதை
கொடுக்கப்படுகிறது ஏனென்றால், அந்த மகாத்மாக்கள் முழு
வாழ்க்கையையும் கடந்து பெரியவர் களாகியுள்ளார்கள். விகாரங்களைப்
பற்றித் தெரிந்திருக்கிறார்கள். சிறிய குழந்தை தெரிந்திருக்க
வில்லை, ஆகையினால் மகாத்மாவை விடவும் உயர்ந்தது என்று
சொல்லப்படுகிறது. கிருஷ்ணரை கூட மகாத்மா என்று சொல்கிறார்கள்.
அவர் தான் உண்மையான மகாத்மா ஆவார். சத்யுகத்தில் தான் மகான்
ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல் இங்கு யாரும்
இருக்க முடியாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க
வேண்டும். நாம் இப்போது புதிய உலகத்தில் பிறவி எடுக்கப்போகிறோம்.
இந்த பழைய உலகம் முடியப்போகிறது. வீடு பழைய தாகி விட்டால்
புதிய வீட்டின் நினைவில் குஷி ஏற்படுகிறது அல்லவா? எவ்வளவு
நல்ல-நல்ல மார்பிள்களினால் வீட்டைக் கட்டுகிறார்கள். ஜெயின்
மக்களிடம் அதிக பணம் இருக்கிறது, அவர்கள் தங்களை உயர்ந்த
குலத்தவர்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இங்கே
எந்த உயர்ந்த குலமும் இல்லை. உயர்ந்த குலத்தில்
திருமணத்திற்காக வீடு தேடுகிறார்கள். அங்கே குலம் போன்ற விசயம்
எதுவும் இருப்பதில்லை. அங்கு ஒரே தேவதா குலம் தான் இருக்கிறது,
வேறு எதுவும் இல்லை. அதற்காக நீங்கள் சங்கமயுகத்தில் நாம் ஒரே
தந்தையின் குழந்தைகள் அனைவரும் ஆத்மாக்கள் என்ற பயிற்சியை
செய்கிறீர்கள். ஆத்மா முதலில் பிறகு சரீரம். உலகத் தில்
அனைவரும் தேக-அபிமானிகளாக இருக்கிறார்கள். நீங்கள் இப்போது
ஆத்ம-அபிமானிகளாக ஆக வேண்டும். குடும்ப விவகாரங்களில் இருந்து
கொண்டே தங்களுடைய மனோ நிலையை உயர்வானதாக வைத்திருக்க வேண்டும்.
பாபாவிற்கு எவ்வளவு குழந்தைகள், எவ்வளவு பெரிய குடும்பம்,
எவ்வளவு சிந்தனை இருக்கும். இவரும் (பிரம்மா) கூட உழைக்க
வேண்டியிருக்கிறது. நான் ஒன்றும் சன்னியாசி கிடையாது. பாபா
இவருக்குள் பிரவேசித்திருக்கிறார். பிரம்மா-விஷ்ணு-சங்கரருடைய
சித்திரம் கூட இருக்கிறது அல்லவா? பிரம்மா அனைவரிலும்
உயர்ந்தவர் ஆவார். அப்படி எனும்போது அவரை விட்டுவிட்டு பாபா
யாருக்குள் வருவார்? பிரம்மா ஒன்றும் புதியதாக பிறப்பதில்லை.
இவரை எப்படி தத்தெடுக்கின்றேன் என்று பார்க்கின்றீர்கள் அல்லவா?
நீங்கள் எப்படி பிராமணர்களாக ஆகின்றீர்கள் என்ற விசயங்களை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள் வேறு யார் என்ன தெரிந்து கொள்ள
முடியும். இவர் நகை வியாபாரியாக இருந்தார், இவரைப் போய் நீங்கள்
பிரம்மா என்று சொல்கிறீர்களே என்று கேட்கிறார்கள்! இவை மிகவும்
ஆழமான விசயங்கள் அல்லவா? இந்த பிரம்மா பௌதீகத்தில்
இருக்கின்றார், அவர் சூட்சுமத்தில் இருக்கின்றார். இவர்
தூய்மையாக ஆகி, பிறகு அவ்யக்தமாகி (ஃபரிஷ்தா) விடுகின்றார்.
நான் இந்த சமயத்தில் தூய்மை யாக இல்லை என்று இவர் கூறுகின்றார்.
சூட்சும பிரம்மாவைப் போல் தூய்மையாகிக் கொண்டி ருக்கின்றேன்.
பிரஜாபிதா இங்கே இருக்க வேண்டும் அல்லவா? இல்லையென்றால்
எங்கிருந்து வருவார். நான் தூய்மையற்ற சரீரத்தில் வருகின்றேன்
என்று பாபா அவரே கூறுகின்றார், எனவே இவரைத்தான் பிரஜாபிதா என்று
சொல்ல முடியும். சூட்சும வதனத்தில் இருப்பவரை சொல்ல முடியாது.
அங்கே பிரஜைகள் என்ன செய்வார்கள். இவர் தனியாக தூய்மையாகி
விடுகின்றார். எப்படி இவர் முயற்சி செய்கிறாரோ அதுபோல் நீங்கள்
முயற்சி செய்து தனியாக தூய்மையாகி விடுகிறீர்கள். உலகத்திற்கு
எஜமானர்களாக ஆகின்றீர்கள் அல்லவா? சொர்க்கம் தனி, நரகம் தனிப்
பட்டதாகும். இப்போது எவ்வளவு துண்டு - துண்டாகி விட்டது. 5
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயமாகும், அப்போது இந்த
இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் இருந்து. அவர்கள் இலட்சக் கணக்கான
வருடங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். இதைக்கூட யார்
கல்பத்திற்கு முன்பு புரிந்திருப்பார்களோ, அவர்கள் தான்
புரிந்து கொள்வார்கள். இங்கே முஸ்லீம்கள், பாரசீகர்கள் போன்ற
அனைவரும் வருவதை நீங்கள் பார்க்கின்றீர்கள். முஸ்லீம்களாகிய
அவர்களே ஹிந்துக் களுக்கு ஞானத்தை கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா? யாராவது
சீக்கிய தர்மத்தவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக்
கொள்ளுங்கள், அவர்களும் வந்து இராஜயோகத்தை கற்றுக்
கொடுக்கிறார்கள். யார் இங்கிருந்து மாறி சென்றிருக்கிறார்களோ
அவர்கள் மீண்டும் மாறி தேவதா குலத்திற்கு வந்து விடுவார்கள்.
நாற்று நடப்படுகிறது. உங்களிடத்தில் கிறிஸ்துவர்கள்,
பாரசீகர்களும் கூட வருகிறார்கள், பௌத்தர்களும் கூட வருவார் கள்.
நேரம் அருகில் வரும்போது நாலாபுறமிருந்தும் நம்முடைய பெயர்
வெளிவரும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒரு
சொற்பொழிவாற்றினீர்கள் என்றால், உங்களிடம் நிறைய பேர் வந்து
விடுவார்கள். நம்முடைய உண்மையான தர்மம் இது தான் என்று அனைவருக்
கும் நினைவு வந்து விடும். யார் நம்முடைய தர்மத்தவர்களாக
இருப்பார்களோ அவர்கள் அனை வரும் வந்து விடுவார்கள் அல்லவா?
லட்சக்கணக்கான ஆண்டுகளின் விசயம் அல்ல. நீங்கள் நேற்று
தேவதைகளாக இருந்தீர்கள், இப்போது மீண்டும் தேவதைகளாக ஆவதற்காக
பாபாவிட மிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று
பாபா வந்து புரிய வைக்கின்றார்.
நீங்கள் உண்மையிலும் உண்மையான பாண்டவர்களாவீர்கள், பாண்டவர்கள்
என்றால் வழிகாட்டி கள் ஆவர். அவர்கள் உலகீய வழிகாட்டிகள்.
பிராமணர்களாகிய நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளா வீர்கள். நீங்கள்
இப்போது எல்லையற்ற தந்தையிடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த போதை உங்களுக்கு அதிகம் இருக்க வேண்டும். நாம் பாபாவிடம்
செல்கின்றோம், அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது. அவர்
நம்முடைய தந்தை, ஆசிரியராகவும் இருக்கின்றார், இதில் மேசை,
நாற்காலி போன்றவற்றிற்கு எந்த அவசியமும் இல்லை. இதை நீங்கள்
எழுதுகிறீர் கள் என்றாலும் கூட தங்களுடைய முயற்சிக்காகவே ஆகும்.
உண்மையில் இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். சிவபாபா பேனா
போன்றவற்றினால் எழுதுவாரா என்ன! உங்களுக்கு கடிதம்
எழுதுவதற்காக பென்சில் போன்றவற்றை எடுக்க வேண்டியுள்ளது.
சிவபாபாவினுடைய சிவப்பு எழுத்துக்கள் வந்திருக்கின்றன என்று
புரிந்து கொள்வார்கள். பாபா ஆன்மீக குழந்தைகளே என்று
எழுதுகிறார். குழந்தைகளும் ஆன்மீக தந்தை என்று புரிந்து
கொள்கிறார்கள். அவர் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார்,
அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். காமம் மிகப்பெரிய எதிரி என்று
பாபா கூறுகின்றார். இது முதல்-இடை-கடைசி வரை துக்கம் கொடுக்கக்
கூடியதாகும். அந்த பூதத்திற்கு வசமாகாதீர்கள். தூய்மையாக
ஆகுங்கள். ஹே தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவரே! என்று
அழைக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இராஜ்யம்
செய்வதற்கான பெரிய சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை யாரும்
வெல்ல முடியாது. நீங்கள் எவ்வளவு சுகமுடையவர்களாக ஆகின்றீர்கள்.
எனவே இந்த படிப்பின் மீது எவ்வளவு கவனமளிக்க வேண்டும். நமக்கு
இராஜ்யம் கிடைக்கிறது. நாம் எந்த நிலையிலிருந்து என்னவாக
ஆகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பகவானுடைய
மகாவாக்கியம் அல்லவா. நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்
கின்றேன், ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக்குகின்றேன். யாரை பகவான்
என்று சொல்லப்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. ஓ
பாபா! என்று ஆத்மா அழைக்கிறது. எனவே அவர் எப்போது மற்றும்
எப்படி வருவார்? என்பதும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா.
மனிதர்கள் தான் நாடகத்தின் முதல்-இடை-கடைசியை, கால அளவு போன்ற
வற்றை தெரிந்து கொள்வார்கள் அல்லவா? தெரிந்து கொள்வதின் மூலம்
நீங்கள் தேவதை களாக ஆகி விடுகிறீர்கள். ஞானமே சத்கதிக்காகவே
ஆகும். இது கலியுகத்தின் கடைசி நேரமாகும். அனைவரும் துர்கதியில்
இருக்கிறார்கள். சத்யுகத்தில் சத்கதி இருக்கிறது. அனைவரையும்
சத்கதி அடையவைக்க இப்போது பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். அனை வரையும் விழிக்கச் செய்ய பாபா
வந்துள்ளார். யாராவது பிணமாகி விட்டார்களா என்ன? ஆனால்
காரிருளில் இருக்கிறார்கள், அவர்களை விழிக்கச் செய்ய
வருகின்றார். எந்த குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
விழித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்குள் நாம் சிவபாபாவின்
குழந்தைகள், எந்தவிதமான கவலையும் இல்லை என்று அதிக குஷி
ஏற்படுகிறது. பாபா நம்மை உலகத்திற்கு எஜமானர்களாக
மாற்றுகின்றார். அழுகை என்ற வார்த்தையே இல்லை. இது அழுகின்ற
உலக மாகும். அது மகிழ்ச்சியாக இருப்பதற்கான உலகமாகும்.
தேவதைகளின் முகத்தை எவ்வளவு சிரித்த முகமாக உருவாக்கு கிறார்கள்.
அங்கே இருக்கும் முக அமைப்பை இங்கே கொண்டுவர முடியாது. முகம்
பார்ப்பதற்கு இவர்களைப் போல் இருக்கலாம் என்று புத்தியின் மூலம்
புரிந்து கொள்கிறோம். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய
உங்களுக்கு நாம் எதிர்காலத்தில் அமரபுரியின் இளவரசர்களாக ஆவோம்
என்ற நினைவு வந்துள்ளது. இந்த மரணலோகத்தை, இந்த
வைக்கோல்போருக்கு தீ வைக்கப்பட வேண்டும். உள் நாட்டுப் போரில்
கூட ஒருவர்-மற்றவரை எப்படி கொலை செய்கிறார்கள், நாம் யாரை
கொல்கிறோம் என்பது கூட தெரிவதில்லை. குழப்பத் திற்குப் பிறகு
வெற்றி முழக்கம் ஏற்பட வேண்டும். உங்களுக்கு வெற்றியும், மற்ற
அனைவரும் அழிந்தும் போவார்கள். ருத்ர மாலையில் கோர்க்கப்பட்டு
பிறகு விஷ்ணுவின் மாலையில் கோர்க்கப்படுவீர்கள். இப்போது
நீங்கள் உங்களுடைய வீட்டிற்குப் போவதற்கு முயற்சி செய்கிறீர்
கள். பக்தி எவ்வளவு பரந்து விரிந்திருக்கிறது. எப்படி மரத்தின்
இலைகள் நிறைய இருக்கிறதோ அதுபோல் பக்தி பரந்து
விரிந்திருக்கிறது. ஞானம் விதையாகும். விதை எவ்வளவு சிறியதாக
இருக்கிறது. விதை பாபா ஆவார், இந்த மரத்தின் ஸ்தாபனை மற்றும்
வளர்ப்பு மற்றும் வினாசம் எப்படி நடக்கிறது, என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். இது வித-விதமான தர்மங்களின் தலைகீழ்
மரமாகும். உலகத்தில் ஒருவர் கூடத் தெரிந்திருக்கவில்லை. இப்போது
குழந்தைகள் தந்தையை நினைவு செய்வதற்கு அதிகம் உழைக்க வேண்டும்,
அப்போது தான் விகர்மங்கள் வினாசமாகும். அந்த கீதை சொல்பவர்கள்
கூட மன்மனாபவ என்று சொல்கிறார்கள். அனைத்து தேகத்தின்
தர்மங்களையும் விட்டு விட்டு தங்களை ஆத்மா என்று புரிந்து
தந்தையை நினைவு செய்யுங்கள். மனிதர்கள் இதனுடைய அர்த்தத்தைப்
புரிந்து கொள்கிறார்களா என்ன? அது பக்தி மார்க்கமாகும். இது
ஞான மார்க்கமாகும். இப்போது இராஜ்யமானது ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. கவலைப்படுவதற்கான விசயம் எதுவும் இல்லை.
யாரெல்லாம் கொஞ்சம் ஞானம் கேட்டார் களோ, அவர்கள் பிரஜையில்
வந்து விடுவார்கள். ஞானம் ஒருபோதும் அழிவதில்லை. மற்றபடி யார்
யதார்த்தமாக தெரிந்து கொண்டு முயற்சி செய்கிறார்களோ, அவர்கள்
தான் உயர்ந்த பதவி அடைகிறார்கள். புத்தியில் இந்த ஞானம்
இருக்கிறது அல்லவா? நாம் புதிய உலகத்தில் இளவரசர் களாக
ஆகக்கூடியவர்கள். மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்
என்றால், அவர்களுக்கு எவ்வளவு குஷி ஏற்படுகிறது. உங்களுக்கு
ஆயிரம் மடங்கு அதிகமாக அதீந்திரிய சுகம் இருக்க வேண்டும். நாம்
முழு உலகத்திற்கும் எஜமானர்களாக ஆகின்றோம். எந்தவொரு
விசயத்திலும் கோபித்துக் கொள்ளக் கூடாது. பிராமணியிடம் (சகோதரிகளிடம்)
ஒத்துப்போகவில்லை என்றால் பாபாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள்,
அட நீங்கள் பாபாவிடம் புத்தியோகத்தை ஈடுபடுத்துங் களேன். அவரை
அன்போடு நினைவு செய்யுங்கள். பாபா தங்களை மட்டும் நினைவு
செய்து-செய்து நாங்கள் வீட்டிற்கு வந்து விடுவோம் என்று
சொல்லுங்களேன். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது, எப்போது
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் சிவபாபாவின் குழந்தைகள்
என்பது நினைவிருக்க வேண்டும், பாபா நம்மை உலகத்திற்கு
எஜமானர்களாக்க வந்துள்ளார்.
2) தங்களுடைய நிலையை (ஏக்ரஸ்) ஒரு நிலைப்பாட்டில் ஆக்குவதற்காக
ஆத்ம- அபிமானி யாவதற்கான முயற்சி செய்ய வேண்டும். இந்த பழைய
வீட்டிலிருந்து பற்றை நீக்கி விட வேண்டும்.
வரதானம்:
சிந்தனை சக்தியின் மூலம் புத்தியை சக்திசாலியாக ஆக்கக் கூடிய
மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.
சிந்தனை சக்தி தான் தெய்வீக புத்தியின் சத்தான உணவாகும்.
பக்தியில் ஜெபிக்கும் பயிற்சி இருப்பது போன்று ஞானத்தில்
சிந்தனை சக்தி இருக்கிறது. இந்த சக்தியின் மூலம் மாஸ்டர் சர்வ
சக்திவான் ஆகுங்கள். தினமும் அமிர்தவேளையில் தனது ஒரு பட்டத்தை
நினைவில் கொண்டு வாருங்கள் மற்றும் சிந்தனை செய்து கொண்டே
இருங்கள். சிந்தனை சக்தியின் மூலம் புத்தி சக்திசாலியாக
இருக்கும். சக்திசாலியான புத்தியின் மீது மாயை யுத்தம் செய்ய
முடியாது, அடிமை ஆக முடியாது. ஏனெனில் மாயை முதலில் வீண்
எண்ணங்கள் என்ற அம்பு மூலம் தெய்வீக புத்தியை பலவீனம்
ஆக்குகிறது. இந்த பலவீனத்திலிருந்து தப்பிப்பதற்கான சாதனமும்
சிந்தனை சக்தியாகும்.
சுலோகன்:
கட்டளைப்படி நடக்கும் குழந்தைகள் தான் ஆசிர்வாதத்திற்கு
தகுதியானவர்கள். ஆசிர்வாதத்தின் பிரபாவம் உள்ளத்தை சதா
திருப்தியாக வைத்துக் கொள்ளும்.
அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான
அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்
சதா எல்லையற்ற ஆன்மிக திருஷ்டி, சகோதர-சகோதரர் என்ற
சம்பந்தத்தின் விருத்தியின் மூலம் எப்படிப்பட்ட ஆத்மாவின்
மீதும் சுப பாவனை வைப்பதன் பலன் அவசியம் கிடைக்கும். ஆகையால்
முயற்சியின் களைப்படையாதீர்கள், மனம் உடைந்து விடாதீர்கள்.
நிச்சய புத்தியுடையவர்களாகி, எனது என்ற சம்பந்த்தி-ருந்து
விடுபட்டு அமைதி மற்றும் சக்தியின் உதவி ஆத்மாக்களுக்கு
கொடுத்துக் கொண்டே இருங்கள்.