07-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். பூஜைக்குரிய தந்தை உங்களை தனக்குச் சமமாக பூஜைக்குரியவராக மாற்றுவதற்காக வந்திருக்கிறார்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குள் எந்த உறுதியான நம்பிக்கை வேண்டும்?

பதில்:
நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டே பாபாவிடமிருந்து சொத்தை (ஆஸ்தி) அடைந்தே தீருவோம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். பாபாவின் நினைவில் இந்த பழைய உடலை விட்டு விட்டு பாபாவோடு செல்வோம். பாபா நமக்கு வீட்டிற்கான எளிய வழியைக் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்.

பாடல்:
ஓம் நமச்சிவாய......

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. பல மனிதர்கள் ஓம் சாந்தி என கூறிக் கொண்டு இருக்கிறார்கள். குழந்தை களும் ஓம் சாந்தி என்று சொல்கிறீர்கள். உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா தான் ஓம் சாந்தி என்று கூறுகின்றது. ஆனால் ஆத்மாக்கள் யதார்த்தமாக தன்னையும் அறியவில்லை, தந்தையையும் அறியவில்லை. ஆனால் அழைக்கிறார்கள். நான் யார் எப்படி இருக்கிறேன் என்பதை யாரும் அறிய வில்லை என பாபா கூறுகின்றார். தாங்களும் நான் யார், எங்கிருந்து வந்தேன் என தன்னைப்பற்றி அறியாமல் தான் இருந்தீர்கள். ஆத்மா ஆண் அல்லவா? ஆண் குழந்தை ஆகும். தந்தை பரமாத்மா ஆவார். எனவே ஆத்மாக்கள் தங்களுக்குள் சகோதரர்கள் ஆகிவிட்டனர். பிறகு உடலில் வருகின்ற காரணத்தினால் சிலரை ஆண் என்றும் சிலரை பெண் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் யதார்த்த மாக ஆத்மா என்ன, என்பதை எந்த மனிதரும் அறியவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது. அதை நீங்கள் உடன் எடுத்துச் செல்கிறீர்கள். நாம் ஆத்மா இந்த பழைய உடலை விட்டு மற்றொன்றை எடுக்கின்றோம் என்ற இந்த ஞானம் அங்கே இருக்கிறது. ஆத்மாவின் அறிமுகத்தை உடன் எடுத்துச் செல்கின்றனர். முதலில் ஆத்மாவைப் பற்றி கூட அறியவில்லை. நாம் எப்போதிருந்து நடிக்கிறோம் எதையும் அறியவில்லை. இதுவரை கூட ஒரு சிலர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. பெரிய லிங்க ரூபத்தில் நினைக்கிறார்கள். நான் ஆத்மா புள்ளியாக இருக்கிறேன். தந்தையும் புள்ளியாக இருக்கிறார். அந்த ரூபத்தில் நினைக்க வேண்டும். இவ்வாறு சிலரே இருக்கிறார்கள். புத்தி வரிசைக்கிரமத்தில் இருக்கிறதல்லவா ! சிலரே நன்கு புரிந்து கொண்டு பிறருக்கும் நன்கு புரிய வைக்கிறார்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள் என நீங்கள் புரிய வைக்கிறீர்கள். அவரே பதீத பாவனர். முதலில் மனிதர்களுக்கு ஆத்மாவைப் பற்றிய அறிமுகமே இல்லை. எனவே அதையும் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்திக் கொண்டால் தான் தந்தையைப் புரிய வைக்க முடியும். ஆத்மாவைப் பற்றியே அறியவில்லை. ஆகவே தந்தை யைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. இப்போது ஆத்மாக்களாகிய நாம் புள்ளியாக இருக் கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இவ்வளவு சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகியிருக்கிறது. இதையும் நீங்கள் புரிய வைக்க வேண்டும். இல்லையென்றால் ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று மட்டும் கூறுகிறார்கள். பகவானை சந்திக்கும் வழியை மிக நன்றாகக் கூறுகிறார்கள். ஆனால் நான் யார், தந்தை யார், இதை அறியவில்லை, நல்லது, நல்லது என்று கூறுகிறார்கள். ஒரு சிலரோ இவர்கள் நாஸ்திகர்களாக மாற்றுகிறார்கள் என்று மட்டும் கூறுகிறார்கள். ஞானத்தைப் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என நீங்கள் அறிகிறீர்கள். இப்பொழுது நாம் பூஜைக்குரியவராக மாறிக் கொண்டு இருக்கிறோம் என நீங்கள் புரிய வைக்கிறீர் கள். நாம் யாரையும் பூஜை செய்வதில்லை. ஏனென்றால் அனைவராலும் பூஜிக்கப்படக் கூடியவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். நாம் அவருடைய வாரிசுகள், நாம் அவரே பூஜைக்குரிய பிதா ஸ்ரீ. இப்பொழுது பிதா ஸ்ரீ நம்மை அவருடைய குழந்தையாக மாற்றி படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த பூஜைக்குரியவர் ஒருவரே! அவரைத் தவிர வேறு யாரும் பூஜைக்குரியவராக மாற்ற முடியாது. பூஜாரி (பக்தர்) நிச்சயமாக பூஜாரியாகத்தான் மாற்றுவார்கள். உலகத்தில் அனைவரும் பூஜாரிகளாக இருக்கிறார்கள். உங்களுக்கு இப்பொழுது பூஜைக்குரியவர் கிடைத்து விட்டார். அவர் தனக்குச் சமமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார். நீங்கள் பூஜை செய்வதை விடுவித்துவிட்டார். தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இது சீ சீ உலகம் ஆகும். இது மரண உலகம் ஆகும். இராவண இராஜ்ஜியம் ஆரம்ப மாகும் பொழுது பக்தியும் ஆரம்பமாகின்றது. பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரி ஆகிறார்கள். பிறகு பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக மாற்ற தந்தை வரவேண்டியிருக்கிறது. இப்பொழுது நீங்கள் பூஜைக்குரிய தேவதைகளாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக நடித்துக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது பாபா ஆத்மாவை தூய்மையாக்கு வதற்காக நம்மை பூஜைக்குரிய தேவதையாக மாற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே குழந்தை களாகிய நீங்கள் தந்தையை நினைப்பதால் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராகி விடலாம் என்ற வழி கூறப்படுகிறது. ஏனென்றால், அந்த தந்தையே அனைவராலும் பூஜிக்கப்படுபவர் ஆவார். யார் அரைகல்பத்திற்கு பூஜாரி ஆகிறார்களோ அவர்களே அரைக் கல்பத்திற்கு பூஜைக்குரியவர் ஆகிறார்கள். இதுவும் நாடகத்தில் இருக்கிறது. நாடகத்தில் முதல், இடை, கடைபற்றி யாரும் அறிய வில்லை. இப்பொழுது பாபா மூலமாக குழந்தை களாகிய நீங்கள் அறிகிறீர்கள். மேலும் பிறருக்கும் புரிய வைக்கிறீர்கள். முதன்முதலில் முக்கியமான விசயம் தன்னை ஆத்மா புள்ளி என உணருங் கள் என்பதை உணர வைக்க வேண்டும். ஆத்மாவின் தந்தை நிராகாரர், அந்த ஞானம் நிறைந்தவரே வந்து படிக்க வைக்கின்றார். சிருஷ்டியின் முதல், இடை, கடைபற்றிய ரகசியத்தைப் புரிய வைக் கின்றார். பாபா ஒரு முறை தான் வருகின்றார். அவரைத் தெரிந்து கொள்வதும் ஒரு முறை தான். சங்கமயுகத்தில் ஒரு முறை தான் வருகிறார். பழைய பதீத உலகத்தை பரிசுத்தமாக மாற்றுகிறார். இப்பொழுது பாபா நாடகத்தின் படி வந்திருக்கிறார். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. கல்ப கல்பமாக இவ்வாறே வருகின்றேன். ஒரு நொடி கூட முன்பின் ஆகாது. உண்மையில் பாபா ஆத்மாக்களாகிய நமக்கு உண்மையான ஞானம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். மீண்டும் கல்பத்திற்கு பின் பாபா வரவேண்டியிருக்கும் என குழந்தைகளின் மனதில் தோன்றுகிறது. இச் சமயம் பாபா மூலமாக யார் புரிந்து கொள்வார்களோ அவர்களே கல்பத்திற்குப் பிறகு மீண்டும் புரிந்து கொள்வார்கள். இந்த பழைய உலகம் அழியப் போகின்றது, மீண்டும் சத்யுகத்தில் வந்து நமது பாகத்தை நடிப்போம் என அறிகிறீர்கள். சத்யுகத்தின் சொர்க்கவாசி ஆவோம், இது புத்தியில் நினைவிருக்கிறதல்லவா? நினைவிருப்பதால் குஷியிருக்கிறது. மாணவ வாழ்க்கை அல்லவா?

நாம் சொர்க்கவாசி ஆவதற்காகப் படித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த குஷி படிப்பு முடியும் வரை நிலையாக இருக்க வேண்டும். வினாசத்திற்காக பொருட்கள் தயாராகும் பொழுது படிப்பு நிறைவடையும் என பாபா புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார். பிறகு தீப்பற்றி எரியும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறதல்லவா?. ஒருவர் மற்றொருவர் மீது எவ்வளவு எரிச்சல் அடைகிறார்கள். நாலாபுறமும் விதவிதமான படைகள் உள்ளன. அனைவரும் சண்டையிடுவதற்காகத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது ஒரு விதத்தில் போர் ஏற்படுவது போல தாக்குகிறார்கள். போன கல்பத்தைப் போன்று அழிவு வரப் போகின்றது. குழந்தை களாகிய நீங்கள் பார்ப்பீர்கள். முன்பு கூட ஒரு தீப்பொறியிலிருந்து எவ்வளவு பெரிய போர் நடந்தது என்பதை குழந்தைகள் பார்த்தீர்கள். ஒருவருக்கொருவர் பயமுறுத்திக் கொண்டேயிருக் கிறார்கள். இப்படிச் செய்யுங்கள் இல்லையெனில் நாங்கள் கையில் அணுகுண்டுகளை எடுப்போம் என்கிறார்கள். மரணம் எதிரில் வந்திருக்கிறது. எனவே உருவாக்காமல் இருக்க முடியாது. முன்பு கூட போர் நடந்த போது அணு குண்டுகளை வீசினர். விதி அல்லவா? இப்போதோ ஆயிரக் கணக்கான அணுகுண்டுகள் உள்ளன.

இப்பொழுது பாபா அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் என்பதை குழந்தைகள் நிச்சயமாக அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். ஓ பதீத பாவனா! வாருங்கள் என அனைவரும் அழைக் கின்றார்கள். இந்த சீ சீ உலகத்திலிருந்து பாவன உலகத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். முக்தி மற்றும் ஜீவன் முக்தி என இரண்டு பாவனமான உலகங்கள் இருக்கின்றன என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். அனைவரின் ஆத்மாக்களும் தூய்மை யாகி முக்தி தாமத்திற்குச் சென்று விடும். இந்த துக்க உலகம் வினாசம் ஆகிவிடும். இதற்கு மரண உலகம் என்று பெயர். முதலில் அமர உலகமாக இருந்தது. பிறகு சக்கரம் சுழன்று கொண்டே இப்பொழுது மரண உலகத்திற்கு வந்துள்ளீர்கள். பிறகு அமர உலகத்தின் ஸ்தாபனை நடக்கின்றது. அங்கே அகால மரணம் எதுவும் கிடையாது. ஆகவே அதற்கு அமரலோகம் என்று பெயர். சாஸ்திரங்களில் கூட வார்த்தைகள் உள்ளது. ஆனால் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள வில்லை. இப்போது பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். மரண உலகம் நிச்சயம் அழிய வேண்டும். இது 100 சதவீதம் நிச்சயம் ! தனது ஆத்மாவை யோக பலத்தினால் தூய்மை யாக்குங்கள் என பாபா புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார். ஆனால் இதையும் குழந்தைகள் நினைக்க முடியாது. தந்தையிடமிருந்து ஆஸ்தி மற்றும் இராஜ்யத்தை அடைவதில் உழைப்பு (முயற்சி) வேண்டும் அல்லவா? எவ்வளவு முடியுமோ நினைவில் இருக்க வேண்டும். எவ்வளவு நாம் நினைவில் இருக்க வேண்டும், மற்றும் எவ்வளவு பேருக்கு நினைவு ஏற்படுத்துகின்றோம் என தன்னைப் பாருங்கள். மன்மனாபவ. இதற்கு மந்திரம் என்று கூட சொல்ல முடியாது. இது பாபாவின் நினைவு ஆகும். தேக உணர்வை விட வேண்டும். நீங்கள் ஆத்மா. இது உங்களுடைய ரதம். இதன் மூலமாக நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்கள் ! சத்யுகத்தில் நீங்கள் தேவி தேவதைகளாக எப்படி இராஜ்யம் செய்கிறீர்கள்! பிறகு நீங்கள் இதே அனுபவத்தைப் பெறுவீர்கள். அச்சமயம் ஆத்ம உணர்வில் இருக்கிறீர்கள். நம்முடைய இந்த உடல் வயதாகிவிட்டது. இதை விட்டு விட்டு புதியதை எடுப்பார்கள். துக்கத் தின் விசயம் கிடையாது. இங்கே சரீரத்தை விடக் கூடாது என்பதற்காக மருத்துவர்களின் மருந்துகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி முயற்சி எடுக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நோய் ஏற்படும் போது கூட பழைய உடலினால் ஒரு போதும் துன்புறக்கூடாது. ஏனென்றால் இந்த உடலினால் தான் உயிரோடு தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும் என அறிகிறீர்கள். சிவபாபாவின் நினைவினால் தான் பவித்திர மாகி விடுவீர்கள். இதுவே கடின உழைப்பாகும். ஆனால் முதலில் ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக உங்களுடையது நினைவு யாத்திரையாகும். நினைவில் அமர்ந்து அமர்ந்து மூலவதனத்திற்குச் சென்றுவிடுவோம். நாம் அவ்விடத்தின் வாசிகள். அதுவே நம்முடைய சாந்தி தாமம் ஆகும். சாந்தி தாமம் சுகதாமத்தை நீங்கள் அறிகிறீர்கள். மேலும் நினைக்கிறீர்கள். வேறு யாருக்கும் தெரியாது. யார் போன கல்பத்தில் சொத்தை அடைந்தனரோ அவரே அடைவார்கள்.

முக்கியமானது நினைவு யாத்திரையாகும். பக்தி மார்க்கத்தின் யாத்திரைகள் இப்போது முடிய வேண்டும். பக்தி மார்க்கமே அழியப்போகிறது. பக்தி மார்க்கம் என்றால் என்ன என்பதை ஞானம் பெறும் பொழுது புரிந்து கொள்ளலாம். பக்தியினால் பகவான் கிடைப்பார் என நினைக்கிறார்கள். பக்தியின் பலனாக என்ன கொடுப்பார்? எதுவும் தெரியவில்லை. பாபா குழந்தைகளுக்கு நிச்சயம் சொர்க்கத்தின் இராஜ்யப் பதவியையும், ஆஸ்தியையும் கொடுப்பார் என குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருக்கும் சொத்து கொடுப்பார். இராஜா இராணி எப்படியோ அப்படியே பிரஜைகள் அனைவரும் சொர்க்கவாசிகளாக இருந்தனர். 5000 வருடங்களுக்கு முன்பு கூட உங்களை சொர்க்கவாசிகளாக மாற்றினேன் என பாபா கூறுகிறார். இப்போது மீண்டும் உங்களை மாற்றுகிறேன். பிறகு நீங்கள் இவ்வாறே 84 பிறவிகளை எடுத்தீர்கள். இதை புத்தியில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மறக்கக்கூடாது. பாபாவிடம் முதல் இடை கடையைப் பற்றி என்ன ஞானம் இருக்கிறதோ அது குழந்தைகளின் புத்தியிலும் ஒலிக்கிறது. நாம் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறோம், இப்போது மீண்டும் பாபாவிடமிருந்து சொத்தை அடைகிறோம், பல முறை தந்தையிடமிருந்து சொத்தை அடைந்தோம், எப்படி அடைந்தீர்களோ மீண்டும் அடையுங்கள் என பாபா கூறுகின்றார். பாபா அனைவரையும் படிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார். தெய்வீக குணங்களைக் கடைப்பிடிப்பதற்கு எச்சரிக்கை கிடைத்துக் கொண்டு இருக்கிறது. தன்னைத்தானே சோதித்துக் கொள்வதற்கு சாட்சியாக இருந்து நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என பார்க்க வேண்டும். சிலர் மிகவும் நன்றாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் என நினைக்கிறார்கள். படக்கண்காட்சிகளை எற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம். அதாவது பகவான் தந்தை வந்து விட்டார் என அனைவருக்கும் தெரிந்துவிடும். மனிதர்கள் அனைவரும் பாவம் ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஞானத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்றால், நிச்சய மாக பக்தியை உயர்ந்ததாக நினைப்பார்கள். முன்பு உங்களுக்குள்ளும் ஏதாவது ஞானம் இருந்ததா? இப்பொழுது ஞானக்கடல் தந்தை தான், அவரே பக்தியின் பலனைக் கொடுக்கின்றார், யார் அதிகமாக பக்தி செய்கின்றனரோ அவர்களுக்கு அதிகமாக பலன் கிடைக்கும் என உங்களுக்குத் தெரியும். அவர்களே உயர்ந்த பதவி அடைவதற்காக நன்கு படிக்கிறார்கள். இது எவ்வளவு இனிமை யிலும் இனிமையான விஷயங்கள். வயதான பாட்டிகளுக்குக் கூட மிக எளிதாக புரிய வைக்கலாம். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினையுங்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் சிவன் ஆவார். சிவபரமாத்மாய நமஹ, என்னை மட்டும் நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என அவரே கூறுகின்றார். வேறு எந்த துன்பமும் கொடுப்பது இல்லை. இன்னும் போகப் போக சிவ பாபாவை நினைக்க ஆரம்பித்துவிடுவர். ஆஸ்தி அடைய வேண்டும். உயிரோடு தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து தான் தீரவேண்டும். சிவபாபாவின் நினைவில் உடலை விட்டர்கள் என்றால், அவர்கள் அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வர். சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். எவ்வளவு நினைவோ அவ்வளவு பலன் கிடைக்கும். போகும் பொழுதும் வரும் பொழுதும் எவ்வளவு முடியுமோ நினைவில் இருப்தே முக்கியமான விசய மாகும். தனது தலையில் இருந்து சுமையை இறக்க வேண்டும். நினைத்தால் போதும். வேறு எந்த துன்பமும் தந்தை கொடுக்கவில்லை. அரைக்கல்பமாக குழந்தைகள் துன்பத்தைப் பார்த்துள்ளீர்கள் என தெரியும். ஆகவே இப்பொழுது உங்களுக்கு ஆஸ்தி அடைவதற்கான எளிய வழியை காண்பிப்பதற்காக வந்திருக்கிறேன். பாபாவை மட்டும் நினையுங்கள். முன்பு கூட நினைத்தீர்கள். ஆனால் ஞானம் எதுவும் இல்லை. இப்போது இவ்வாறு என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என பாபா ஞானம் அளித்திருக்கிறார். உலகில் பலர் சிவனுடைய பக்தியை செய்கிறார்கள். நிறைய நினைக்கிறார்கள். ஆனால் அவரைப்பற்றி தெரிய வில்லை. இச்சமயம் பாபாவே வந்து என்னை நினையுங்கள் என அறிமுகம் கொடுக்கிறார். இப்போது நாம் நன்கு தெரிந்து கொண்டோம் என புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் பாப்தாதாவிடம் செல்கிறோம் என நீங்கள் கூறுகிறீர்கள். பாபா இந்த பாக்கிய ரதத்தை எடுத்துள்ளார். இந்த பாக்கியரதன் கூட புகழ் வாழ்ந்தவராவார். இவர் மூலமாக ஞானம் கொடுக்கிறார். இதுவும் நாடகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு கல்பத்திலும் இந்த பாக்கிய சாலி ரதத்தில் வருகிறார். ஷியாம் சுந்தர் என யாரைக் கூறினோமோ அவரே இவர் என நீங்கள் அறிகிறீர்கள். இதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு மனிதர்கள் அர்ஜுனன் பெயரை வைத்து விட்டனர். பிரம்மா விலிருந்து விஷ்ணு, விஷ்ணு விலிருந்து பிரம்மாவாக எப்படி மாறுகின்றனர் என்பதை பாபா யதார்த்தமாகப் புரிய வைக்கின்றார். நாம் பிரம்மா புரியைச் சார்ந்தவர்கள். பிறகு விஷ்ணு புரியைச் சாந்தவர்களாக மாறுவோம் என குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். விஷ்ணு புரியிலிருந்து பிரம்மா புரிக்கு வருவதற்கு 84 பிறவிகள் ஆகின்றது. இதையும் பல முறை புரிய வைத்து இருக்கின்றேன். மீண்டும் அதை நீங்கள் கேட்கிறீர்கள். என்னை மட்டும் நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும் என ஆத்மாக்களுக்கு பாபா கூறுகின்றார். ஆகவே உங்களுக்கு குஷியும் ஏற்படுகிறது. இந்த ஒரு பிறவி துய்மையாக மாறினால் நாம் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகலாம், பிறகு ஏன் தூய்மை யாக ஆகக்கூடாது? ஒவ்வொரு பாபாவின் குழந்தையும் பிரம்மாவின் குழந்தைகள். இருப்பினும் அந்த உலகீய உணர்வு மாறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல கடைசியில் கர்மாதீத நிலை ஏற்படும். இச்சமயம் யாருக்கும் கர்மாதீத நிலை ஏற்படுதல் முடியாததாகும். கர்மாதீத நிலையை அடைந்து விட்டால் இந்த உடல் கூட இருக்காது. இதை விடவேண்டும். போர் ஏற்பட்டு விடும். ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். இதில் தான் கடின உழைப்பு இருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சாட்சியாக இருந்து நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம்? போகும் பொழுதும் வரும் பொழுதும் காரியங்கள் செய்தாலும் எவ்வளவு நேரம் தந்தையின் நினைவில் இருக்கிறோம்? என தன்னைத் தானே பாருங்கள்.

2. இந்த உடலினால் ஒருபோதும் துன்புறக்கூடாது. இந்த உடலில் வாழ்ந்து கொண்டே தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். இந்த வாழ்க்கையில் சொர்க்கவாசி ஆவதற்காக முழுமையாகப் படிக்க வேண்டும்.

வரதானம்:
திரிகாலதரிசி மற்றும் சாட்சி பார்வையாளர் ஆகி ஒவ்வொரு கர்மம் செய்துகொண்டே பந்தன்முக்த் ஸ்திதியின் அனுபவம் மூலம் உதாரண ரூபம் ஆகுக.

திரிகாலதரிசி நிலையில் நிலைத்திருந்து, கர்மத்தின் முதல், இடை, மற்றும் கடை நிலையை அறிந்து கர்மம் செய்கின்றீர்கள் என்றால் எந்தவொரு கர்மமும் விகர்மம் ஆக முடியாது, சதா சுகர்மம் செய்வீர்கள். அப்பேற்பட்ட சாட்சி பார்வையாளராகி கர்மம் செய்வதனால் எந்தவொரு கர்மத்தின் பந்தனத்தில் கட்டுண்ட கர்ம பந்தனம் உடைய ஆத்மா ஆகமாட்டீர்கள். கர்மத்தினுடைய பலன் சிரேஷ்டமானதாக ஆகுவதன் காரணத்தினால் கர்ம சம்பந்தத்தில் வருவீர்கள், பந்தனத்தில் அல்ல. கர்மம் செய்யும்பொழுது விடுபட்டவராகவும் மற்றும் அன்பானவராகவும் இருந்தீர்கள் என்றால், அனேக ஆத்மாக்களுக்கு முன்னால் உதாரண ரூபம் அதாவது எடுத்துக்காட்டு ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
யார் மனதால் சதா திருப்தியாக இருக்கின்றார்களோ, அவர்களே டபுள் லைட் ஆவார்கள்.

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

எந்தவொரு சக்திசாலியான சங்கல்பமும் ஆன்மிக சக்தி அதாவது எனர்ஜியை சேமிப்பு செய்கிறது, சமயமும் வெற்றி உடையதாகின்றது. வீணான சங்கல்பமானது சக்தி மற்றும் சமயத்தை வீணாக இழக்கச் செய் கின்றது, ஆகையினால், இப்பொழுது வீணான சங்கல்பங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள். இந்த படைப்பு தான் படைப்பாளராகிய ஆத்மாவை குழப்பமடையச் செய்கின்றது. எனவே, சதா நான் ஆத்மா மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற பெருமையில் இருங்கள், சக்தி சாலியான ஆத்மாவாக இருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் குழப்பம் அடைய மாட்டீர்கள் மற்றும் அனேகருடைய குழப்பத்தை அழிக்கக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.