08.06.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.11.2005      பாப்தாதா,   மதுபன்


உண்மையான உள்ளத்துடன் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு அன்பானவர்களாகி உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆவதற்கான உறுதிமொழி செய்யுங்கள் மற்றும் இலாபம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று பாப்தாதா தனது நாலாப்புறங்களிலும் உள்ள சிரேஷ்ட சுவராஜ்ய அதிகாரி, சுவமானதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். தந்தை குழந்தைகளுக்கு தன்னை விட உயர்ந்த சுவமானம் கொடுத்திருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையையும் காலில் விழுவதிலிருந்து விடுவித்து தலைக்கிரீடமாக ஆக்கி விட்டார். தன்னை சதா அன்பான குழந்தைகளின் சேவாதாரி என்று கூறிக் கொண்டார். இவ்வளவு உயர்ந்த அதாரிட்டிக்கான சுவமானத்தை குழந்தைகளுக்கு கொடுத்தார். ஆக ஒவ்வொருவரும் தன்னை அந்த அளவிற்கு சுவமானதாரி என்று புரிந்திருக் கிறீர்களா? சுவமானதாரிகளின் விசேஷ இலட்சணம் என்ன இருக்கும்? ஒருவர் எந்த அளவிற்கு சுவமானதாரியாக இருப்பாரோ அந்த அளவிற்கு அனைவருக்கும் மரியாதை கொடுப்பவராக இருப்பார். எந்த அளவு சுவமானதாரியோ, அந்த அளவு பணிவு, அனைவருக்கும் பிரியமானவராக இருப்பார். சுவமானதாரியின் அடையாளம் - தந்தைக்குப் பிரியமானவர், கூடவே அனைவருக்கும் பிரியமானவராக இருப்பர். எல்லைக்குட்பட்ட அன்பானவர் அல்ல, எல்லையற்று பிரியமானவர். எவ்வாறு தந்தை அனைவருக்கும் பிரியமானவரோ, ஒரு மாத குழந்தையாக இருந்தாலும், ஆதி இரத்தினமாக இருந்தாலும், ஒவ்வொருவரும் நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் என்று ஏற்றுக் கொள்கின்றனர். இது தான் அனைவருக்கும் பிரியமானவரின், சிரேஷ்ட சுவமானத் தின் அடையாளமாகும். ஏனெனில் அப்படிப்பட்ட குழந்தைகள் தந்தையை பின்பற்றக் கூடியவர்கள். ஒவ்வொரு வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகள், சிறு வயது குழந்தைகளிலிருந்து வயோதிகக் குழந்தைளுக்கு தந்தை சுவமானம் கொடுத்திருக்கின்றார். இளைஞர்களை அழிப்பவர்கள் என்ற நிலையிலிருந்து விஷ்வ கல்யாணகாரி என்ற சுவமானம் கொடுத்திருக்கிறார். மகான் ஆக்கியிருக் கின்றார். இல்லறத்தில் இருப்பவர்களை மகான் ஆத்மாக்களாக, பெரிய பெரிய ஜெகத் குருக்களை விட உயர்ந்தவர்களாக, இல்லறத்தில் இருந்தாலும் விடுபட்ட விருத்தியுடைய, மகாத்மாக்களையும் தலைவணங்க வைக்கக் கூடியவர்களாக ஆக்கியிருக்கின்றார். கன்னிகைகளுக்கு சிவசக்தி சொரூபத்தின் சுவமானம் நினைவுபடுத்தி அவ்வாறு ஆக்கியிருக் கின்றார். வயோதிக குழந்தை களுக்கு பிரம்மா பாபாவின் தோழன் என்ற அனுபவி சுவமானம் கொடுத்தார். இவ்வாறே சுவமான தாரி குழந்தைகள் ஒவ்வொரு ஆத்மாவையும் சுவமானத்துடன் பார்ப்பார்கள். பார்ப்பதுடன் இல்லாமல் சம்பந்தம்-தொடர்பில் வருவார்கள். ஏனெனில் சுவமானம் தேக அபிமானத்தை போக்கக் கூடியது. எங்கு சுவமானம் இருக்கிறதோ அங்கு தேக அபிமானம் இருக்காது. தேக அபிமானத்தை போக்குவதற்கு எளிய சாதனம் - சதா சுவமானத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் சதா சுவமானத்துடன் பார்க்க வேண்டும். குதிரைப் படையினராக இருந்தாலும், 16 ஆயிரம் மாலையில் கடைசி நம்பரில் வருபவர்களாக இருந்தாலும், கடைசி நம்பரிலும் நாடகப்படி தந்தையின் மூலம் ஏதாவது விசேஷதன்மை இருக்கிறது. சுவமானதாரிகள் விசேஷதாவைப் பார்த்து சுவமானம் கொடுப்பார்கள். அவர்களது பார்வை, விருத்தி, செயலில் ஒவ்வொருவரின் விசேஷதாக கலந்திருக்கும். தந்தையின் குழந்தைகளாக ஆனவர்கள் விசேஷ ஆத்மாக்கள் அவர். வரிசைக்கிரமமாக இருக்கலாம், ஆனால் உலகில் கோடியில் சிலராக இருக் கின்றனர். இவ்வாறு அனைவரும் தன்னை விசேஷ ஆத்மா என்று புரிந்திருக் கிறீர்களா? சுவமானத் தில் நிலைத்திருக்க வேண்டும். தேக அபிமானத்தில் வரக் கூடாது, சுவமானம்.

தந்தைக்கு ஒவ்வொரு குழந்தையின் மீதும் அன்பு ஏன் இருக்கிறது? ஏனெனில் தந்தை அறிவார் - என்னை அறிந்து கொண்டு என்னுடையவர்களாக ஆகியிருக்கின்றனர் அல்லவா! இந்த மேளாவில் முதல் முறை வந்தவர் களாகவும் இருக்கலாம், இருந்தாலும் பாபா என்று கூறியதும் தந்தையின் அன்பிற்கு பாத்திரமானவர்களாக ஆகிவிடுகின்றனர். நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்து குழந்தைகளும் அனைவரையும் விட ஒருவருக்கொருவர் பாப்தாதாவிற்கு பிரியமானவர்கள். இவ்வாறே தந்தையை பின்பற்றுங்கள். ஒருவர் கூட பிரியமற்றவராக இருக்கக் கூடாது, அனைவரும் பிரியமானவர்களாக ஆக வேண்டும். ஒரு குழந்தை என்னுடைய பாபா என்று கூறு கிறார் எனில் என்னுடையவர் என்று ஆக்கியது எது? அன்பு. இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் அன்பு தான் தந்தை யினுடையவராக ஆக்கியிருக்கிறது என்று புரிந்தருக்கிறீர்கள். தந்தையின் அன்பு காந்தம் ஆகும், அன்பு என்ற காந்தம் மூலம் தந்தையினுடையவர்களாக ஆகி விட்டீர்கள். பெயரளவிற்கான அன்பு கிடையாது, உள்ளப்பூர்வமான அன்பு. உள்ளப்பூர்வமான அன்பு இந்த பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரமாகும். எதற்காக சந்திக்க வருகிறீர்கள்? அன்பு தான் அழைத்து வந்திருக்கிறது அல்லவா! இங்கு அமர்ந்திருப்பவர்கள், வந்திருப்பவர்கள் அனைவரும் ஏன் வந்திருக்கிறீர்கள்? அன்பு ஈர்த்திருக்கிறது அல்லவா! அன்பும் எவ்வளவு இருக்கிறது? 100 சத விகிதம் இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? அன்பில் நான் 100 சதவிகிதம் இருக்கிறேன் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். அன்பில் 100 சதவிகிதம், சிறிதும் குறை கிடையாதா? நன்று. ஆக அதே அன்பு பிராமணர்களாகிய தங்களுக்குள் இருக்கிறதா? இதில் கை உயர்த்து வீர்களா? இதில் சதவிகிதம் இருக்கிறது. எவ்வாறு தந்தைக்கு அனைவரின் மீது அன்பு இருக் கிறதோ, அதே போன்று குழந்தைகளுக்கும் அனைவரின் மீது அன்பு, அனைவருக்கும் பிரியமான வர்களாக இருக்க வேண்டும். பிறரது பலவீனங்களை பார்க்க வேண்டாம். ஒருவர் சம்ஸ்காரத் திற்கு வசமாகி இருக்கிறார் எனில் யாரை பின்பற்ற வேண்டும்? வசமானவரையா? நீங்கள் வசப்படுத்தும் மந்திரம் கொடுக்கக் கூடியவர்கள், வசமானவர்களை விடுவிக்கக் கூடிய மந்திரம், விடுவிக்கக் கூடியவர்கள். அல்லது பார்க்கக் கூடியவர்களா? தென்படுகிறதா? ஏதாவது தீய விசயங்கள் தென்படுகிறது எனில் என்ன செய்வீர்கள்? பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? அல்லது தூரமாகி விடுவீர்களா? ஏனெனில் பாப்தாதா பார்த்தார் - யார் உள்ளப் பூர்வமான அன்புடயவர்களாக இருக்கிறார்களோ, தந்தைக்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அவசியம் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். சம்பன்னம் மற்றும் சம்பூர்ணம் ஆவதற்கான எளிய விதி உள்ளப்பூர்வமான அன்பு. ஒருவர் எவ்வளவு தான் ஞானியாக இருக்கலாம், ஆனால் உள்ளப்பூர்வமான அன்பு இல்லையெனில் பிராமண வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்காது. காய்ந்த வாழ்க்கையாக இருக்கும். ஏனெனில் ஞானத்தில், அன்பில்லாத ஞானம் இருந்தால் ஞானத்தில் ஏன், எதற்கு என்ற கேள்விகள் எழும். ஆனால் அன்பு கலந்த ஞானம் இருந்தது எனில் அன்பானவர்கள் சதா அன்பில் மூழ்கி இருப்பார்கள். அன்பானவர்களை நினைப் பதற்கான முயற்சி செய்ய வேண்டியிருக்காது. ஞானியாக மட்டும் இருந்தால், அன்பு இல்லை யெனில் உழைக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் உழைப்பிற்கான பலன் அடைவார்கள், இவர்கள் அன்பிற்கான பலன் அடைவார்கள். ஞானம் என்பது விதை, ஆனால் விதை அன்பு. விதைக்கு அன்பு என்ற நீர் கிடைக்கவில்லை யெனில் பலன் கிடைக்காது.

ஆக இன்று அனைத்து குழந்தைகளின் உள்ளப்பூர்வமான அன்பை பாப்தாதா பரிசோதித்துக் கொண்டிருந்தார். தந்தையிடம் மற்றும் அனைவரிடம். நீங்கள் அனைவரும் தன்னை என்ன நினைக்கிறீர்கள்? அன்பானவர்களாக இருக்கிறீர்களா? இருக்கிறீர்களா? உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். (அதிகபட்சம் அனைவரும் கை உயர்த்தினர்). நன்று அனைவருக்கும் பிரியமானவர்கள். தந்தைக்குப் பிரியமானவர் களாக இருக் கிறீர்கள், அனைவருக்கும் பிரியமானவர்களாக இருக்கிறீர்களா? அனைவருக்கும்? இவர் என்னுடைய சகோதரன்-சகோதரி என்று ஒவ்வொரும் நினைக்கிறீர்களா? இவர்கள் என்னுடைய வர்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர்களா? நினைக்கிறீர்களா? அல்லது சிலர் மட்டும் நினைக் கிறீர்களா? எவ்வாறு தந்தையின் அன்பில் அனைவரும் கை உயர்த்துகிறீர்களோ, ஆம், தந்தைக்குப் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள், அவ்வாறு நீங்கள் ஒவ்வொருவருக்காகவும் கை உயர்த்துவீர்களா? ஆம் இவர் அனைவருக்கும் பிரியமானவர்? இந்த சான்றிதழ் கிடைக்குமா? ஏனெனில் பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார் - தந்தையிடமிருந்து மட்டும் சான்றிதழ் அடையக் கூடாது, பிராமணக் குடும்பத்தினரிடமிருந்தும் அடைய வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தந்தை தர்மம் மற்றும் இராஜ்யம் இரண்டையும் சேர்த்து ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இராஜ்யத்தில் தந்தை மட்டுமே இருக்க மாட்டார், குடும்பமும் இருக்கும். தந்தைக்கும் பிரிய மானவர், குடும்பத்தினருக்கும் பிரியமானவர்.

ஞானியாக ஆகிவிட்டீர்கள், கூடவே பிரியமானவர்களாக ஆவதும் அவசியமாகும். சுவமானத்தில் இருக்க வேண்டும் மற்றும் மரியாதை கொடுக்க வேண்டும், இந்த இரண்டும் அவசியமாகும். பிராமணப் பிறப்பு எடுத்ததும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை மரியாதை கொடுத்தார், அதனால் தான் உயர்ந்த நிலை அடைந்திருக்கிறீர்கள். இந்த ஒரு பிறவியில் மரியாதை கொடுக்க வேண்டும், முழு கல்பமும் அதற்கான பலனாக மரியாதை கிடைக்கும். அரை கல்பம் இராஜ்ய அதிகாரிக்கான மரியாதை கிடைக்கும், அரை கல்பம் பக்தியில் பக்தர்களின் மூலம் மரியாதை கிடைக்கும். ஆனால் இதற்கு, முழு கல்பத்திற்கு ஆதாரம் இந்த ஒரு பிறவியில் மரியாதை கொடுக்க வேண்டும், மரியாதை அடைய வேண்டும்.

இப்பொழுது பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார் - நாலாப்புறமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் சிலர் இரவில், சிலர் பகவில் சந்திப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். முயற்சியின் வேகத்தை நன்றாக அதிகப்படுத்த உங்களுக்கு தாதி (தாதி ஜானகி) கிடைத்திருக்கின்றார். அப்படித் தானே? ஏதாவது ஒரு குறை பார்த்து விட்டார் உடனேவே அதைப் பற்றி வகுப்பு எடுத்து விடுகின்றார். எந்த ஒரு குழந்தையாக இருந்தாலும், உள்நாடு அல்லது வெளி நாட்டு குழந்தை, எந்த ஒரு பாடத்திலும் உழைப்பு ஏற்படுகிறது எனில் அதற்கு முல காரணம் - உள்ளப் பூர்வமான அன்பில் குறை இருக்கிறது. அன்பு என்றால் அன்பில் மூழ்கியிருப்பதாகும். நினைக்க வேண்டி யிருக்காது, நினைவு மறப்பது கடினமாக இருக்கும். ஒருவேளை உழைக்க வேண்டியிருக்கிறது எனில் உள்ளப்பூர்வமான அன்பு சோதியுங்கள் - எங்கும் கசிவு இல்லை தானே? பற்றுதல் மனிதன் மீதோ, மனிதனின் விசேஷதா மீதோ, சாதனத்தின் மீதோ, பாதுகாப்பின் மீதோ, நியமப்படி பாதுகாப்பு என்பது சரி தான், ஆனால் அதிகபட்ச பாதுகாப்பு இருக்கும் போது அதன் மீதும் அன்பு, பற்று ஏற்படு கிறது. அந்த பாதுகாப்பு நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். அதன் அடையாளம் - எதிலாவது கசிவு இருந்தது எனில் சதா வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்தினால் திருப்தியின் அனுபவம் ஏற்படாது. ஏதாவது காரணத்தினால் அதிருப்தியின் அனுபவம் ஏற்படுத்தும். எங்கு திருப்தி இருக்கிறதோ, அதன் அடையாளம் சதா மகிழ்ச்சி இருக்கும். சதா ஆன்மிக ரோஜா போன்று புன்முறுவலுடன் இருப்பார்கள், மலர்ந்திருப்பார்கள். மூட் ஆப் ஆகமாட்டார்கள், சதா டபுள் லைட். ஆக புரிந்து கொண்டீர்களா! கடின உழைப்பிலிருந்து இப்பொழுது விடுபட்டு விடுங்கள். குழந்தை களின் உழைப்பு பாப்தாதாவிற்கு பிடிக்கவில்லை. அரை கல்பம் உழைப்பு செய்தீர்கள், இப்பொழுது மகிழ்ச்சியாக இருங்கள். அன்பில் மூழ்கி விடுங்கள், ஞானக் கடலின் ஆழத்தில் சென்று அனுபவம் என்ற முத்துக்களை அனுபவம் செய்யுங்கள். வெறுமனே தலை மட்டும் குளித்து விட்டு வராதீர் கள், அன்பில் மூழ்கி விடுங்கள்.

அனைவரும் உறுதிமொழி எடுத்தீர்கள் அல்லவா! கூடவே இருப்பேன், கூடவே செல்வேன்? உறுதி எடுத்தீர்களா? கூடவே வருவீர்களா? அல்லது பின்னால் வருவீர்களா? கூடவே வருவதற்கு தயாராக இருப்பவர்கள் கை உயர்த்துங்கள். தயாராக இருக்கிறீர்களா? யோசித்து உயர்த்துங்கள், தயாராக இருப்பது என்றால் பாப்சமான் இருப்பதாகும். யார் கூடவே வர முடியும்? சமமாக இருப்பவர்கள் தான் கூடவே வருவார்கள் அல்லவா! ஆக போகலாமா? எவரெடியாக இருக்கிறீர்களா? முதல் வரிசையில் உள்ளவர்கள் எவரெடியாக இருக்கிறீர்களா? செல்வதற்கு நாளை ஆர்டர் செய்தால் வருவீர்களா? இல்லறத்தில் உள்ளவர்கள் வருவீர்களா? குழந்தையின் நினைவு வராதா? தாய்மார்கள் வருவீர்களா? எந்த பொருளின் நினைவும் வராதா? ஆசிரியர்களுக்கு சேவை நிலையத்தின் நினைவு வரும், மாணவர்களின் நினைவு வருமா? நினைவிற்கு வராதா? நல்லது. அனைவரும் பற்றறவர் களாக ஆகிவிட்டீர்களா? மிகவும் நல்ல விசயம் தான். பிறகு கடின உழைப்பு செய்ய வேண்டி யிருக்காது அல்லவா!

எதிரில் அமர்ந்தவர்களாக இருந்தாலும், தூரத்தில் அமர்ந்திருந்தாலும் தந்தையின் உள்ளத்தில் அமர்ந்திருக் கிறீர்கள். அனைவரும் இன்றைய நாள் கடின உழைப்பிலிருந்து முக்தி கொண்டாட பாப்தாதா விரும்புகின்றார். ஆவீர்களா? கை தட்டி விட்டீர்கள், ஆவீர்களா? நாளை ஒருவரும் தாதி களிடத்தில் வரமாட்டீர்கள். கடின உழைப்பு செய்விக்கமாட்டீர்களா? மகிழ்ச்சியாக சந்திப்பீர்களா? மண்டல பொறுப்பாளிடம் செல்லமாட்டீர்களா? புகார் கொடுக்க மாட்டீர்களா? முழுமையாகி விட வேண்டும். சரி தானே? இப்பொழுது கை உயர்த்துங்கள். யோசித்து கை உயர்த்துங்கள், அப்படியே உயர்த்தி விடக் கூடாது. எந்த புகாரும் கிடையாது, எனது-எனது என்று எதுவும் கிடையாது. நானும் கிடையாது, எனதும் கிடையாது, அழிந்து விட்டது. உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள், நல்லது, வாழ்த்துக்கள். ஆனால் உறுதிமொழியின் இலாபத்தை எடுத்துக் கொள்வது கிடையாது. உறுதி மொழி மிக வேகமாக எடுத்து விடுகிறீர்கள். ஆனால் இலாபம் அடைவதற்கு தினமும் ஒன்று புரிந்து கொண்டு ரிவைஸ் செய்யுங்கள், என்ன உறுதிமொழி எடுத்தேன்? என்று உறுதிமொழியை தினமும் ரிவைஸ் செய்யுங்கள். அமிர்தவேளை சந்திப்பிற்குப் பிறகு உறுதிமொழி மற்றும் இலாபம் இரண்டின் சார்ட்டையும் சமமாக ஆக்குங்கள். என்ன உறுதிமொழி எடுத்தேன்? மேலும் என்ன இலாபம் அடைகிறேன்? ரியலைஸ் செய்யுங்கள், ரிவைஸ் செய்யுங்கள், சமம் ஆகிவிடும், சரியாகி விடும். மீட்டிங் வந்தவர்கள் உறுதிமொழி எடுத்ததை பாப்தாதா அறிவார்.

நல்ல நல்ல திட்டங்களை உருவாக்குகிறீர்கள், பாப்தாதாவிற்கு பிடித்திருக்கிறது. பாப்தாதா என்ன விரும்புகின்றார்? பாப்தாதா ஒரே ஒரு சப்தத்தைத் தான் விரும்புகின்றார் - வெற்றி ஆக்குங்கள், வெற்றியாளர் ஆகுங்கள். என்ன பொக்கிஷங்கள் இருக்கிறதோ, சக்திகள், சங்கல்பம், வார்த்தை, செயலும் சக்தியாகும். இந்த நேரமும் சக்தியாகும், பொக்கிஷமாகும். அனைத்தையும் வெற்றியாக்க வேண்டும். ஸ்தூல செல்வமானாலும், அலௌகீக பொக்கிஷங் களானாலும் அனைத்தையும் வெற்றியாக்க வேண்டும். வெற்றி மூர்த்திக்கான சான்றிதழ் அடைந்தே ஆக வேண்டும். வெற்றி ஆக்குங்கள் மற்றும் வெற்றி செய்வியுங்கள். ஒருவர் வெற்றி ஆக்கவில்லையெனில் வார்த்தை களின் போதனையினால் அல்ல, தனது சுப பாவணை, சுப விருப்பம் மற்றும் சதா சுபமான மரியாதை கொடுப்பதன் மூலம் வெற்றி செய்விக்க வேண்டும். வெறும் போதனை மட்டுமே கொடுக்காதீர்கள், ஒருவேளை போதனை கொடுக்க வேண்டியிருந்தால் மன்னிப்பு மற்றும் போதனை, மன்னிப்பு செய்து போதனை கொடுங்கள். கருணையுடையவர்களாக ஆகுங்கள், இரக்கம் உடையவர்களாக ஆகுங்கள். உங்களுடைய கருணை ரூபம் போதனைக்கான பலன் அவசியம் காண்பிக்கும். பாருங்கள், இன்றைய நாட்களில் விஞ்ஞான மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யும் போது முதலில் என்ன செய்கின்றனர்? முதலில் தூங்க வைத்து விடுகின்றனர், பிறகு அறுவை சிகிச்சை செய்கின்றனர். ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்து விடமாட்டார்கள். டின்ஜர் போட்டாலும் முதலில் ஊதி விடுவார்கள், பிறகு டின்ஜர் போடுவார்கள். ஆக நீங்களும் முதலில் கருணை உடையவர்களாக ஆகுங்கள், பிறகு போதனை செய்தால் பிரபாவம் ஏற்படும். இல்லையெனில் நீங்கள் போதனை கொடுப்பீர்கள், ஆனால் அவர் முன் கூட்டியே உங்களை விட அதிக போதனையாளராக இருக்கிறார். எனவே ஒரு போதனையாளர் மற்றொரு போதனை யாளரின் போதனையை ஏற்றுக் கொள்ளமாட்டார். இப்படி செய்யாதீர்கள், இப்படி செய்யுங்கள் என்று நீங்கள் என்ன போதனை கொடுப்பீர்களோ, அதை துண்டிப்பதற்கு அவரிடம் 10 கருத்துக்கள் இருக்கும். ஆகையால் மன்னிப்பு மற்றும் போதனை சேர்ந்தே இருக்க வேண்டும். ஆக இந்த 70 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் (தீம்) - வெற்றி ஆக்குங்கள், வெற்றி செய்வியுங்கள். வெற்றி மூர்த்திகளாக ஆகுங்கள், அனைத்தையும் வெற்றி ஆக்குங்கள். டபுள் லைட் ஆக வேண்டும் அல்லவா, எனவே வெற்றியாக்கி விடுங்கள். சம்ஸ்காரத்தையும் வெற்றி ஆக்குங்கள். எது உங்களது ஒரிஜினல் ஆதி சம்ஸ்காரமோ, தேவதை சம்ஸ்காரம், ஆத்மாவின் அநாதி சன்ஸ்காரமோ அதை வெளிப் படுத்துங்கள். தவறான சம்ஸ்காரங்கள் அழித்து விடுங்கள். ஆதி, அநாதி சம்ஸ்காரங்களை வெளிப்படுத்துங்கள். இப்பொழுது அனைவரின் புகார் விசேஷமாக ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது - சம்ஸ்காரம் மாறுவது கிடையாது, சம்ஸ்காரம் மாறுவது கிடையாது.

அனைவரும் கடின உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள் அல்லவா! (அனைவரும் கை உயர்த்தினர்). நல்லது-இதை போட்டோ எடுங்கள். இப்பொழுது ஒரு நிமிடத்திற்கு தனது உள்ளத்தில் இந்த உறுதிமொழிக்கு திடமான அடிக்கோடு போடுங்கள். தனது மனதில் பக்கா செய்யுங்கள். (டிரில்) நல்லது.

நாலாப்புறங்களிலும் உள்ள சுவமானதாரி குழந்தைகளுக்கு, சதா தந்தையின் உள்ளப்பூர்வமான அன்பிற்குரியவர் கள், அனைவருக்கும் பிரியமான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா கடின உழைப் பிலிருந்து விடுபட்டு, ஜீவன் முக்தியின் அனுபவம் செய்யக் கூடிய தீவிர முயற்சியாளர் குழந்தை களுக்கு, சதா உறுதிமொழி மற்றும் உறுதிமொழியின் இலாபம் அடையக் கூடிய, சமநிலையில் இருக்கும் சுகமான குழந்தைகளுக்கு, சதா மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய, மற்றவர்களையும் மகிழ்விக்கக் கூடியவர்களுக்கு, இவ்வாறு சங்கமயுக சிரேஷ்ட பாக்கியத்திற்கு அதிகாரி குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் திலாராமின் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதம் ஏற்றுக் கொள்ளுங்கள். அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாதிகளிடம்: சரி தானே! அனைவரும் உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். தந்தை மற்றும் குழந்தைகள், இருவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். இருவரும் சமமானவர்கள். அனைவருக்கும் செல்ல மானவர்களாக இருக்கிறீர்கள். அனைவருக்கும் தாதிகளின் மீது விசேஷ அன்பு இருக்கிறது அல்லவா! அதிக அன்பு இருக்கிறது. ஏனெனில் யார் நிமித்தம் ஆகிறார்களோ, நிமித்தம் ஆகின்றவர் மீது பொறுப்பும் இருக்கிறது, அன்பும் அந்த அளவிற்கு இருக்கும். ஏனெனில் அனைவரின் அன்பு மற்றும் ஆசிர்வாதம் என்ற லிப்ட் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. நிமித்தமாக இருக்கும் உங்களுக்கும் லிப்ட் கிடைக்கிறது. ஆனால் லிப்ட் என்ற பரிசை சதா பாதுகாப்பாக வைத்திருந்தால் அதிக நன்மை ஏற்படும். இந்த வரதானம் கூடுதலாக கிடைக்கிறது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும், ஈஸ்வரிய காரியத்தில் அல்லது யக்ஞ சேவையில் யார் ஒருவர் நிமித்தம் ஆகிறார்களோ அவருக்கு ஆசிர்வாதம் மற்றும் அன்பு இரண்டின் லிப்ட் கிடைக் கிறது. அன்பு என்பது அப்படிப்பட்டது - எப்படிப்பட்டவர்களை எப்படி ஆக்கி விடுகிறது! இன்று உலகத்தினருக்கும் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால் அன்பு வேண்டும் என்று கூறுவார்கள். அமைதி வேண்டும், அதுவும் அன்பிருந்தால் தான் கிடைக்கும். ஆக அன்பு, ஆன்மிக அன்பு அனைத்தையும் விட சிரேஷ்டமானது. நல்லது.

ஆசீர்வாதம்:
இணைந்த சொரூப நினைவின் மூலம் மறதியற்றவர்களாக ஆகக் கூடிய நிரந்தர யோகி ஆகுங்கள்.

எந்தக் குழந்தைகள் தன்னை தந்தையுடன் இணைந்திருக்கும் அனுபவம் செய்கிறார்களோ, அவர் களுக்கு நிரந்தர யோகி ஆகுங்கள் என்ற வரதானம் தானாகவே கிடைத்து விடும். ஏனெனில் அவர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு சந்திப்பு விழா நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அவரை ஒருவர் எவ்வளவு தான் மறக்க வைப்பதற்கு முயற்சி செய்தாலும் அவர்கள் மறதியற்ற வர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மறதியற்ற குழந்தைகள் தான் தந்தைக்கு மிகவும் பிரியமான வர்கள். அவர்கள் தான் நிரந்தர யோகிகள். ஏனெனில் அன்பின் அடையாளம் - தானாகவே நினைவு இருக்கும். அவர்களது சங்கல்பம் என்ற நகத்தைக் கூட மாயை அசைக்க முடியாது.

சுலோகன்:
காரணம் கூறுவதற்குப் பதிலாக அதை நிவாரணம் செய்யும் போது ஆசிர்வாதங்களுக்கு அதிகாரி ஆகிவிடுவீர்கள்.


அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

உள்நோக்கு முகமுடையவர் ஆகி ஞானச் சிந்தனைக்கான பயிற்சியின் மூலம் அலௌகீக போதை யில் சதா மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் குழப்பங்கள் தன் பக்கம் ஈர்க்காது. இராணுவத் தினர் நிலப்பரப்பிற்கு அடியில் சென்று விடும் போது வெளியில் நிகழும் அணுகுண்டின் பாதிப்பு ஏற்படாது. அதுபோல் நீங்கள் உள்நோக்கில், அன்டர்கிரவுண்ட் ஆன்மிக ஸ்திதியில் இருப்பதற்கான பயிற்சி செய்யும் போது வெளி விசயங்கள் தொந்தரவு செய்யாது.