09-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்த புருஷோத்தம
சங்கமயுகம் கல்யாணகாரி யுகம் ஆகும். இதில் தான் படிப்பின் மூலம்
நீங்கள் ஸ்ரீகிருஷ்ணபுரிக்கு அதிபதி ஆக வேண்டி உள்ளது.
கேள்வி:
தந்தை, தாய்மார்களின் மீது ஞான
கலசம் ஏன் வைக்கிறார்? எந்த ஒரு வழக்கம் பாரதத்தில் தான்
நடக்கிறது?
பதில்:
பவித்திரத்தாவின் (தூய்மை) ராக்கி
கட்டி அனைவரையும் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து
தூய்மையாக்குவதற்காக தந்தை தாய்மார்களின் மீது ஞான கலசம்
வைக்கிறார். ரக்ஷ்ô பந்தனத்தின் வழக்கம் கூட பாரதத்தில் தான்
உள்ளது. சகோதரி, சகோதரனுக்கு ராக்கி கட்டுகிறார். இது
பவித்திரத்தாவின் அடையாளம் ஆகும். தந்தை கூறுகிறார், குழந்தைகளே!
நீங்கள் என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனமாகி பாவன
உலகத்திற்கு எஜமானர் ஆகி விடுவீர்கள்.
பாடல்:
போலாநாத்தை விட ஒப்பானவர் வேறு
யாருமில்லை....
ஓம் சாந்தி.
இது போலாநாத்தின் மகிமை ஆகும். இவருக்கு அளிப்பவர் என்று
கூறுகிறார்கள். ஸ்ரீலட்சுமி, நாராயணருக்கு இந்த ராஜ்ய பாக்கியம்
யார் அளித்தார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
அவசியம் பகவான் அளித்திருக்க வேண்டும். ஏனெனில் சொர்க்கத்தின்
ஸ்தாபனையையோ அவரே செய்கிறார். சொர்க்கத்தின் அரசாட்சி எப்படி
லட்சுமி நாராயணருக்கு அளித்தாரோ அவ்வாறே தான் கிருஷ்ணருக்கும்
அளித்தார். இராதை கிருஷ்ணர் அல்லது லட்சுமி நாராயணரின் விஷயம்
என்னவோ ஒன்றே தான். ஆனால் ராஜதானி இல்லை. அவர்களுக்கு பரமபிதா
பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் ராஜ்யம் அளிக்க முடியாது.
அவர்களது ஜென்மம் சொர்க்கத்தில் தான் என்று கூறுவோம். இதை
குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர் கள். குழந்தைகளாகிய
நீங்கள் தான் ஜென்மாஷ்டமி பற்றி புரிய வைப்பீர்கள். கிருஷ்ணரின்
ஜென்மாஷ்டமி என்றால் ராதைக்கும் ஆக வேண்டும். ஏனெனில் இருவருமே
சொர்க்கவாசியாக இருந்தார்கள். ராதை கிருஷ்ணர் தான்
சுயம்வரத்திற்குப் பின்னர் லட்சுமி நாராயணர் ஆகிறார்கள்.
முக்கியமான விஷயம் அவர்களுக்கு இந்த ராஜ்யத்தை யார் அளித்தார்
என்பதே ஆகும். இந்த இராஜயோகம் எப்பொழுது மற்றும் யார்
கற்பித்தார்? சொர்க்கத்திலோ ஒன்றும் கற்பித்திருக்க மாட்டார்கள்.
சத்யுகத்திலோ அவர்கள் இருப்பதே உத்தம புருஷர்களாக
கலியுகத்திற்குப் பின்னால் வருவது சத்யுகம். எனவே அவசியம்
கலியுகக் கடைசியில் இராஜயோகம் கற்றிருக்கக் கூடும்.
கலியுகத்தில் இருப்பது அநேக தர்மங்கள். சத்யுகத்தில் ஒரே ஒரு
தேவி தேவதா தர்மம் இருந்தது. சங்கமத்தில் இருந்த எந்த ஒரு
தர்மம் மூலமாக இவர்கள் இந்த புருஷார்த்தம் செய்து இராஜ யோகம்
கற்றார்கள் மற்றும் சத்யுகத்தில் பிராப்தியை அனுபவித்தார்கள்?
சங்கமயுகத்தில் பிரம்மா மூலமாகத் தான் பிராமணர்கள் பிறந்தார்கள்
என்று புரிய வைக்கப்படுகிறது. படத்தில் கூட பிரம்மா மூலமாக
கிருஷ்ணபுரியின் ஸ்தாபனை என்று உள்ளது. விஷ்ணு அல்லது
நாராயணபுரி என்று கூறினாலும் விஷயமோ ஒன்றே ஒன்று தான். இந்த
படிப்பின் மூலமாக மற்றும் பாவனம் ஆவதால் நாம் கிருஷ்ணபுரியின்
எஜமானர் ஆகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர் கள்.
சிவபகவான் கூறுகிறார் அல்லவா? கிருஷ்ணரின் ஆத்மா தான் அநேக
பிறவிகளின் கடைசி பிறவியில் மீண்டும் இவராக ஆகிறார். 84
பிறவிகள் எடுக்கிறார் அல்லவா? இது 84வது பிறவி. இவருக்குத் தான்
பின் பிரம்மா என்று பெயர் வைக்கிறார். இல்லாவிட்டால் பின்
பிரம்மா எங்கிருந்து வந்தார்? இறைவன் படைப்பைப் படைத்தார்
என்றால் பிரம்மா, விஷ்ணு சங்கர் எங்கிருந்து வந்தார்கள்? எப்படி
படைத்தார்? அவர்கள் பிறப்பதற்காக என்ன சூ-மந்திரம் செய்தாரா
என்ன? தந்தை தான் அவர்களுடைய சரித்திரத்தைக் கூறுகிறார்.
சுவீகாரம் (தத்தெடுத்தல்) செய்யப் படும் பொழுது பெயர்
மாறுகின்றது. முதலில் பிரம்மா என்ற பெயரோ இருக்கவில்லை அல்லவா?
அநேக பிறவிகளின் கடைசியில் என்று கூறுகிறார்கள் எனவே அவசியம்
பதீதமான மனிதர் ஆனார். பிரம்மா எங்கிருந்து வந்தார் யாருக்குமே
தெரியாது. அநேக பிறவிகளின் கடைசி பிறவி யாருடையது? அது லட்சுமி
நாராயணர் தான் அநேக பிறவிகள் எடுத்த பிறகு பெயர், ரூபம், தேசம்,
காலம் மாறிக் கொண்டே செல்கிறது. கிருஷ்ணரின் படத்தில் 84
பிறவிகளின் கதை தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஜென்மாஷ்டமியின்
பொழுது கிருஷ்ணரின் படங்கள் கூட நிறைய விற்பனை ஆகிக்
கொண்டிருக்கக் கூடும். ஏனெனில் கிருஷ்ணரின் கோவிலுக்கோ
எல்லோரும் செல்வார்கள் அல்லவா? இராதை கிருஷ்ணரின் இளவரசன்
இளவரசி தான் லட்சுமி நாராயணர் மகாராஜா, மகாராணி ஆகிறார்கள்.
அவர்கள் தான் 84 பிறவிகள் எடுத்தார்கள். பின் கடைசி பிறவியில்
பிரம்மா சரஸ்வதி ஆனார்கள். அநேக பிறவிகளின் கடைசியில் தந்தை
பிரவேசம் செய்தார். மேலும் இவருக்குத்தான் (பிரம்மா பாபாவிற்கு)
நீங்கள் உங்கள் ஜென்மங்களைப் பற்றி அறியாமல் உள்ளீர்கள் என்று
கூறுகிறார். நீங்கள் முதல் பிறவியில் லட்சுமி நாராயணராக
இருந்தீர்கள். பிறகு இந்த பிறவி எடுத்தீர்கள். அவர்கள் அர்ஜுனன்
என்ற பெயர் கூறி விட்டுள்ளார்கள். அர்ஜுனர் அல்ல. பிரம்மாவின்
வாழ்க்கை சரித்திரம் வேண்டும் அல்லவா? ஆனால் பிரம்மா மற்றும்
பிராமணர்களின் வர்ணனை எங்குமே இல்லை. இந்த விஷயங்களை தந்தை தான்
வந்து புரிய வைக் கிறார். எல்லா குழந்தைகளும் கேட்பார்கள் பிறகு
குழந்தைகள் மற்றவர்களுக்குப் புரிய வைப்பார்கள். கதை கேட்டு
பிறகு மற்றவர்களுக்குக் கூறுவார்கள். நீங்களும் கேட்கிறீர்கள்
மற்றும் கூறுகிறீர்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் லீப் யுகம்
ஆகும். எக்ஸ்ட்ரா யுகம். புருஷோத்தம மாதம் வரும்போது 13
மாதங்கள் ஆகி விடு கிறது. இந்த சங்கமயுகத்தின் பண்டிகை தான்
ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள். இந்த புருஷோத்தம
சங்கமயுகம் பற்றி யாருக்குமே தெரியாது. இந்த சங்கம யுகத்தில்
தான் தந்தை வந்து பவித்திரமாக ஆவதற்கான உறுதி எடுக்கு மாறு
செய்விக்கிறார். இரக்ஷ்ô பந்தனத்தின் வழக்கம் கூட பாரதத்தில்
தான் உள்ளது. சகோதரி சகோதரனுக்கு இராக்கி கட்டுகிறார். ஆனால்
அந்த குமாரி கூட பின் அபவித்திரமாக ஆகி விடுகிறார். இப்பொழுது
தந்தை தாய்மார்களாகிய உங்கள் மீது ஞான கலசம் வைத்துள்ளார்.
அந்த பிரம்மாகுமார் பிரம்மா குமாரிகள் பவித்திரத்தாவின் (தூய்மை)
உறுதி எடுக்குமாறு செய்விக்க இராக்கி கட்டுகிறார்கள். தந்தை
கூறுகிறார் என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள்
பாவனமாகி பாவனமான உலகிற்கு எஜமானர் ஆகி விடுவீர்கள். மற்றபடி
எந்த ஒரு இராக்கியும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை இது புரிய
வைக்கப்படுகிறது. எப்படி சாது சந்நியாசிகள் தானம்
வேண்டுகிறார்கள். ஒரு சிலர் கூறுகிறார்கள், கோபத்தின் தானம்
கொடுங்கள், ஒரு சிலர் கூறுகிறார்கள், வெங்காயம் சாப்பிடாதீர்கள்.
சுயம் யார் சாப்பிடுவதில்லையோ அவர்கள் தானம் பெற்றுக் கொண்டு
இருப்பார்கள். இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த உறுதியை
எல்லையில்லாத தந்தை நம்மை எடுக்குமாறு செய்விக்கிறார். நீங்கள்
பாவனமாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், பதீத பாவன
தந்தையை நினைவு செய்யுங்கள். துவாபரயுகம் முதல் கொண்டு நீங்கள்
பதீதமாக ஆகிக் கொண்டே வந்துள்ளீர்கள். இப்பொழுது முழு உலகமும்
தூய்மையானதாக வேண்டும். அதை தந்தை தான் அமைக்க முடியும் அனை
வருக்கும் கதி சத்கதி தாதா என்று எந்த ஒரு மனிதனும் ஆக முடியாது.
தந்தை தான் பாவனம் ஆவதற்கான உறுதியை நம்மிடம் வாங்குகிறார்.
பாரதம் தூய்மையான சொர்க்கமாக இருந்தது அல்லவா? பதீதபாவனர் அந்த
பரமபிதா பரமாத்மா தான் ஆவார். கிருஷ்ணரை பதீதபாவனர் என்று
கூறமாட்டார்கள். அவருக்கு பிறவி ஏற்படு கிறது. தாய் தந்தை கூட
காண்பிக்கிறார்கள். ஒரே ஒரு சிவனுக்கு மட்டுமே அலௌகீக ஜென்மம்
ஆகும். அவர் சுயம் தானே வந்து நான் சாதாரண சரீரத்தில் பிரவேசம்
செய்கிறேன் என்று தனது அறிமுகத்தை அளிக்கிறார். சரீரத்தின்
ஆதாரம் அவசியம் எடுக்க வேண்டி உள்ளது. நான் ஞானக்கடல் பதீத
பாவனர் இராஜ யோகம் கற்பிப்பவன் ஆவேன், தந்தை தான் சொர்க்கத்தின்
படைப்பு கர்த்தா ஆவார். மேலும் நரகத்தின் விநாசமும் செய்விக்
கிறார். சொர்க்கம் இருக்கும் பொழுது நரகம் இல்லை. இப்பொழுது
முழுமையாக பயங்கர நரக மாகும். முற்றிலுமே தமோபிரதான நரகம் ஆகும்
பொழுது தான் தந்தை வந்து சதோபிரதான சொர்க்கத்தை
ஸ்தாபிக்கின்றார். 100 சதவிகிதம் பதீத நிலையிலிருந்து 100
சதவிகிதம் பாவனமாக ஆக்குகிறார். முதல் பிறவி அவசியம்
சதோபிரதானமான தாகத்தான் கிடைக்கும். குழந்தைகள் சிந்தனை கடலை
கடைந்து சொற்பொழிவாற்ற வேண்டும். புரிய வைத்தல் என்பது
ஒவ்வொருவருடையதும் தனித் தனியாக இருக்கும். தந்தை கூட இன்று ஒரு
விஷயம், நாளை பின் மற்றொரு விஷயம் புரிய வைப்பார். ஒரே மாதிரி
விளக்கவுரையோ இருக்க முடியாது. உதாரணமாக டேப் ஒலிநாடா மூலம்
மிகச்சரியாக ஒருவர் கேட்டாலும் கூடமறுபடியும் அவ்வாறே
மிகச்சரியாகக் கூற முடியாது. அவசியம் வித்தியாசம் இருக்கும்.
தந்தை என்ன கூறுகிறாரோ அவை முழுவதும் நாடகத்தில் பொருந்தி
உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வார்த்தைக்கு வார்த்தை
முந்தைய கல்பத்தில் என்ன கூறினாரோ அதையே மீண்டும் இன்று
கூறுகிறார். இது ரிகார்டு நிரம்பி உள்ளது. சுயம் பகவான்
கூறுகிறார், நான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் வார்த்தைக்கு
வார்த்தை என்ன கூறினேனோ அதையே கூறுகிறேன். இது ஷுட் (படமாக
பதிவு) செய்யப்பட்ட டிராமா ஆகும். இதில் சிறிதளவு கூட
வித்தியாசம் ஏற்பட முடியாது. இவ்வளவு சிறிய ஆத்மாவிற்குள்
ரிகார்டு நிரம்பி உள்ளது. இப்பொழுது கிருஷ்ண ஜென்மாஷ்டமி
எப்பொழுது ஆகி இருந்தது என்பதையும் குழந்தைகள்
புரிந்துள்ளார்கள். இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங் களுக்கு ஒரு
சில நாட்கள் குறைவு என்றுகூறுவார்கள். ஏனெனில் இப்பொழுது
படித்துக் கொண்டி ருக்கிறோம்; புது உலகத்தின் ஸ்தாபனை
ஆகிக்கொண்டிருக்கிறது. குழந்தைகளின் இதயத்தில் எவ்வளவு குஷி
உள்ளது. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவியின் சக்கரம் சுற்றியுள்ளார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் கிருஷ்ணர்
என்ற பெயர் ரூபத்தில் வந்து கொண்டி ருக்கிறார். பழைய உலகத்தை
எட்டி உதைத்து கொண்டிருக்கிறார் என்று படத்தில் காண்பித்
துள்ளார்கள். புது உலகம் கையில் உள்ளது. இப்பொழுது படித்துக்
கொண்டிருக்கிறார். எனவே ஸ்ரீகிருஷ்ணர் வந்து கொண்டிருக்கிறார்
என்று கூறப்படுகிறது. அவசியம் தந்தை அநேக பிறவிகளின் கடைசியில்
தான் கற்பிப்பார். இந்த படிப்பு முடிந்தவுடன் கிருஷ்ணர் பிறவி
எடுப்பார். மற்றபடி கற்பிப்பதற்கு சிறிது காலமே மீதி உள்ளது.
அவசியம் அநேக தர்மங்களின் விநாசம் ஆன பிறகு கிருஷ்ணரின் பிறவி
ஆகியிருக்கக்கூடும் அதுவும் ஒரு கிருஷ்ணரோ மட்டும் அல்ல. முழு
கிருஷ்ணபுரி இருக்கும். இந்த பிராமணர்கள் தான் மீண்டும் இந்த
இராஜயோகத்தைக் கற்று தேவதா பதவியை அடைவார்கள். தேவதைகள் ஆவதே
ஞானத்தின் மூலமாக தந்தை வந்து மனிதனை தேவதையாக கல்வியின் மூலம்
ஆக்குகிறார். இது பாடசாலை ஆகும். இதில் எல்லா வற்றையும் விட
அதிக நேரம் பிடிக்கிறது. படிப்போ சுலபமானது மற்றது யோகத்தில்
உழைப்பு உள்ளது. கிருஷ்ணருடைய ஆத்மா இப்பொழுது பரமபிதா பரமாத்மா
மூலமாக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள்
கூறலாம். சிவபாபா பிரம்மா மூலமாக ஆத்மாக்களாகிய நமக்கு
கற்பித்துக் கொண்டிருக்கிறார், விஷ்ணு புரியின் இராஜ்யத்தை
அளிக்க. நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்
பிராமணிகள் ஆவோம். இது சங்கமயுகம் ஆகும். இது மிகவும் சிறிய
யுகம் ஆகும். குடுமி எல்லாவற்றையும் விட சிறியதாக இருக்கும்
அல்லவா? பின் அதைவிட பெரியது முகம், அதைவிட பெரியது புஜங்கள்,
அதைவிட பெரியது வயிறு, அதைவிட பெரியது கால்கள். விராட ரூபம்
காண்பிக்கிறார்கள். ஆனால் அதன் விளக்கவுரை யாரும் அளிப்பதில்லை.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தின்
ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். சிவஜெயந்திக்குப் பிறகு
கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த சங்கமயுகம் உள்ளது. உங்களைப்
பொருத்தவரை கலியுகம் முடிந்து விட்டது. தந்தை கூறுகிறார் -
இனிமையான குழந்தைகளே, இப்பொழுது உங்களை சுகதாமம், சாந்திதாமம்
அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன். நீங்கள் சுகதாமத்தில்
வசிப்பவர் களாக இருந்தீர்கள். பின் துக்கதாமத்தில் வந்தீர்கள்.
பாபா ! இந்த பழைய உலகத்தில் வாருங்கள் என்று கூப்பிடுகிறீர்கள்.
உங்களுடைய உலகமோ இல்லை. இப்பொழுது நீங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள். யோக பலத்தினாலே உங்களது உலகத்தை ஸ்தாபனை
செய்து கொண்டி ருக்கிறீர்கள். அஹிம்சா பரமோ தேவி தேவதா என்று
கூட கூறப்படுகிறது. நீங்கள் எவருக்கும் இம்சை கொடுக்காதவர்களாக
ஆக வேண்டும். காம வாளையும் செலுத்தக்கூடாது. சண்டை சச்சரவுகள்
கூட செய்யக்கூடாது. நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப்
பின்னரும் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இலட்சக்கணக் கான
வருடங்களின் விஷயமே அல்ல. யக்ஞம், தவம், தானம் புண்ணியம் ஆகியவை
செய்து நீங்கள் கீழே இறங்கியே வந்துள்ளீர்கள் என்று தந்தை
கூறுகிறார். ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. மனிதர்களோ
கும்பகர்ணன் உறக்கத்தில் உறங்கி உள்ளார்கள். விழித்துக் கொள்வதே
இல்லை. எனவே தந்தை கூறுகிறார். நான் கல்ப கல்பமாக வருகிறேன்.
எனக்கும் நாடகத்தில் பாகம் உள்ளது. பாகம் இன்றி நான் கூட
எதுவுமே செய்ய முடியாது. நான் கூட டிராமாவின் பந்தனத்தில்
உள்ளேன். மிகச் சரியான நேரப்படி வருகிறேன். நாடகத்தின்
திட்டப்படி நான் குழந்தைகளாகிய உங்களைத் திரும்ப அழைத்துச்
செல்கிறேன். இப்பொழுது மன்மனாபவ என்று கூறுகிறேன். ஆனால்
இதனுடைய பொருளைக் கூட யாரும் அறியாமல் உள்ளார்கள். தேகத்தின்
சர்வ சம்மந்தங்களை விடுத்து என் ஒருவனை நினைவு செய்தீர்கள்
என்றால் நீங்கள் பாவனம் ஆகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார்.
தந்தை நினைவு செய்வதற்காக குழந்தைகள் உழைத்துக் கொண்டே
இருக்கிறார்கள். இது ஈசுவரிய விஷ்வ வித்யாலயம் ஆகும். முழு
உலகிற்கும் சத்கதி அளிக்கக்கூடிய வேறு எந்த ஈஸ்வரிய விஷ்வ
வித்யாலயமும் இருக்க முடியாது. சுயம் இறைவனாகிய தந்தை வந்து
முழு உலகத்தை மாற்றி விடுகிறார். நரகத்தை சொர்க்கமாக
ஆக்குகிறார். அங்கு பின் நீங்கள் ஆட்சி புரிகிறீர்கள்.
சிவனுக்கு பபுல் நாத் என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் அவர்
வந்து உங்களை காம வாளிலிருந்து விடுவித்து பாவனமாக ஆக்குகிறார்.
பக்தி மார்க்கத்திலோ நிறைய வெளிப்பகட்டு உள்ளது. இங்கோ
அமைதியாக நினைவு செய்ய வேண்டும். அவர்கள் அநேக விதமான ஹடயோகம்
ஆகியவை செய்கிறார்கள். அவர்களுடைய துறவற மார்க்கமே தனியாகும்.
அவர்கள் பிரம்மத்தை நம்புகிறார்கள். பிரம்மயோகி தத்துவயோகி
ஆவார்கள். அதுவோ ஆத்மாக்கள் வசிக்கும் இடம் ஆகும். அது
பிரம்மாண்டம் என்று கூறப்படுகிறது. அவர்கள் பின் பிரம்மத்தை
பகவான் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். அதில் கலந்து
போய் விடுவோம் என்று. அதாவது ஆத்மாவை அழியக்கூடியதாக ஆக்கி
விடுகிறார்கள். நான் தான் வந்து அனைவருக்கும் சத்கதி செய்கிறேன்
என்று தந்தை கூறுகிறார். சிவபாபா தான் அனைவருக்கும் சத்கதி
அளிக்கிறார். எனவே அவர் வைரம் போன்றவர் ஆவார். பின் உங்களை
சத்திய யுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். உங்களுக்கும் இது
வைரம் போன்ற பிறவி ஆகும். பின் தங்க யுகத்தில் வருகிறீர்கள்.
இந்த ஞானத்தை உங்களுக்குத் தந்தை தான் படிப்பிக்கிறார். இதன்
மூலம் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். பின் இந்த ஞானம் மறைந்து போய்
விடுகிறது. இந்த லட்சுமி நாராயணருக்குக் கூட படைப்பவர் மற்றும்
படைப்பின் ஞானம் இல்லை நல்லது.
இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை
பாப்தாதாவின் அன்பு நினைவுகள்மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த பழைய உலகத்தில் இருந்துக் கொண்டே டபுள் அஹிம்சாவாதி ஆகி,
யோக பலத்தினால் தங்களது புது உலகை ஸ்தாபனை செய்ய வேண்டும்.
தங்கள் வாழ்க்கையை வைரம் போல ஆக்க வேண்டும்.
2. தந்தை கூறுவதைப் பற்றி ஞான மனனம் செய்து மற்றவர்களுக்குக்
கூற வேண்டும். இந்த கல்வி முடிந்தவுடன் நாங்கள் கிருஷ்ணபுரி
செல்வோம் என்ற போதை எப்பொழுதும் இருக்க வேண்டும்.
வரதானம்:
அபவித்ரதாவின் பெயர் அடையாளத்தைக் கூட சமாப்தி செய்து
புனிதமானவர் என்ற பட்டத்தைப் பெறக்கூடிய தூய அன்னப்பறவை ஆகுக.
எவ்வாறு அன்னம் ஒருபொழுதும் கல்லை கிரஹிப்பதில்லை, இரத்தினங்களை
கிரஹிக் கின்றதோ, அதுபோல் தூய அன்னப்பறவையாக இருப்பவர்கள்
ஒருபோதும் அவகுணத்தை அதாவது கல்லை தாரணை செய்ய மாட்டார்கள்.
அவர்கள் வீணானவை மற்றும் சக்திசாலி யானவற்றை பிரித்து
வீணானவற்றை விட்டுவிடுகின்றார்கள், சக்திசாலியானதை தனதாக்கிக்
கொள்கின்றார்கள். அப்பேற்பட்ட தூய அன்னப்பறவை தான் பவித்ரமான
சுத்த ஆத்மாக்கள் ஆவார்கள், அவர்களுடைய ஆகாரம், நடத்தை போன்ற
அனைத்தும் சுத்தமாகிவிடுகின்றது. எப்பொழுது அசுத்தம் அதாவது
அபவித்ரதாவின் பெயர் அடையாளம் கூட சமாப்தி ஆகிவிடுகின்றதோ,
அப்பொழுதே எதிர்காலத்தில் புனிதமானவர் என்ற பட்டம்
கிடைக்கின்றது, ஆகையினால், ஒருபொழுதும் தவறுதலாகக்கூட யாருடைய
அவகுணத்தையும் தாரணை செய்ய வேண்டாம்.
சுலோகன்:
யார் பழைய சுபாவ சமஸ்காரத்தின் வம்சத்தையும் தியாகம்
செய்கின்றார்களோ, அவர்களே சர்வம்ச தியாகி ஆவார்கள்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
எந்தவொரு காரியம் செய்தாலும் தந்தையின் நினைவில் லவ்லீன் (அன்பில்
மூழ்கியிருத்தல்) ஆகியிருங்கள். எந்தவொரு விசயத்தின்
விஸ்தாரத்தில் செல்லாமல், விஸ்தாரத்திற்கு புள்ளி வைத்து,
புள்ளியில் கரைத்துவிடுங்கள், புள்ளி ஆகிவிடுங்கள், புள்ளி
வைத்துவிடுங்கள், அப்பொழுது முழு விஸ்தாரமும், முழு வலையும் ஒரு
நொடியில் கரைந்துவிடும் மற்றும் சமயம் சேமிப்பாகி விடும்,
உழைப்பில் இருந்து விடுபட்டுவிடுவீர்கள். புள்ளி ஆகி புள்ளியில்
லவ்லீன் ஆகிவிடுவீர்கள்.