09-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு
எல்லையற்ற செல்வத்தைக் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட இனிமையான தந்தையை நீங்கள் அன்பாக நினைத்தால்
தூய்மையாகி விடலாம்.
கேள்வி:
வினாசத்தின் நேரம் நெருங்கி
வருகிறது என்பதன் அடையாளம் என்ன?
பதில்:
விநாச நேரம் நெருங்கினால் 1.
நம்முடைய தந்தை வந்து விட்டார் என அனைவருக்கும் தெரிந்துக்
கொண்டே போகும். 2. இப்போது புது உலகின் ஸ்தாபனை, பழைய உலகின்
அழிவு ஏற்பட போகிறது என்பது பலருக்கும் காட்சிகள் கூட
கிடைக்கும். 3. சன்னியாசிகள், ராஜாக்கள் போன்றோருக்கு ஞானம்
கிடைக்கும். 4. எல்லையற்ற தந்தை வந்து விட்டார் என்பதைக்
கேட்கும் போது அவரே சத்கதி அளிப்பார் என்றால் பலர் வருவார்கள்.
5. செய்திதாள்கள் மூலமாக பலருக்கு செய்தி கிடைக்கும். 6.
குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடைவராகிக் கொண்டே போவீர்கள்,
ஒரு பாபாவின் நினைவில் அதீந்திரிய சுகத்தில் இருப்பீர்கள்.
பாடல்:
இந்த பாவ உலகத்திலிருந்து
அழைத்துச் செல்லுங்கள்......
ஓம் சாந்தி.
இதை யார் கூறுகிறார்கள். மற்றும் யாருக்கு கூறுகிறார்கள்?
ஆன்மீகக் குழந்தைகளே, பாபா அடிக்கடி ஆன்மீகம் என்று ஏன்
கூறுகின்றார். ஏனென்றால் இப்போது ஆன்மாக்கள் போக வேண்டும்.
பிறகு மீண்டும் இந்த உலகத்தில் வரும் போது சுகம் கிடைக்கும்.
ஆத்மாக்கள் இந்த அமைதி மற்றும் சுகத்தின் ஆஸ்தியை போன
கல்பத்திலேயே பெற்றனர். இப்போது மீண்டும் இந்த ஆஸ்தி ரீபிட் (திரும்பவும்
கிடைக்கின்றது) ஆகிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு ரீபிட் ஆகும்
போது தான் சிருஷ்டிச் சக்கரமும் மீண்டும் ரீபிட் ஆகிறது.
அனைத்தும் ரீபிட் ஆகிறது அல்லவா? எது முடிந்ததோ அது ரீபிட்
ஆகிறது. அந்த நாடகம் கூட ரீபிட் ஆகிறது. ஆனால் அதில் மாற்றம்
செய்ய முடியும். ஏதாவது வார்த்தைகள் மறந்து விட்டார்கள் என்றால்
பிறகு அதை உருவாக்கிப் போடுகிறார்கள். அதற்கு பயாஸ்கோப் என்று
பெயர். இதில் எதையும் மாற்ற முடியாது. இது உருவாக்கப்பட்ட
நாடகம். அந்த நாடகத்தை (உலகிய நாடகம்) ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்டது என்று கூற முடியாது. இந்த நாடகத்தை
புரிந்துக் கொள்வதால் அதுவும் புரிய வருகிறது. இப்போது
பார்க்கின்ற நாடகங்கள் அனைத்தும் பொய்யானது என குழந்தைகள்
புரிந்துக் கொள்கிறார்கள். கலியுகத்தில் பார்க்கக் கூடிய
பொருட்கள் எதுவும் சத்யுகத்தில் இருக்காது. சத்யுகத்தில் என்ன
நடந்ததோ அது மீண்டும் சத்யுகத்தில் நடக்கும். இந்த எல்லைக்குட்
பட்ட நாடகம் போன்றவை மீண்டும் பக்தி மார்க்கத்தில் தான்
நடக்கும். எந்த விஷயம் பக்தி மார்க்கத்தில் நடக்கிறதோ அது ஞான
மார்க்கம் அதாவது சத்யுகத்தில் நடக்காது. எனவே, இப்போது
எல்லையற்ற தந்தையிட மிருந்து நீங்கள் சொத்தை அடைந்துக்
கொண்டிருக்கிறீர்கள். ஒன்று லௌகீக தந்தையிடமிருந்தும், பரலௌகீக
தந்தையிடமிருந்தும் சொத்து கிடைக்கிறது. மற்றபடி அலௌகீக
தந்தையிடமிருந்து சொத்து கிடைக்காது என தந்தை புரிய
வைத்திருக்கிறார். இவரே அவரிடமிருந்து தான் சொத்தை அடைகிறார்.
புது உலகத்தின் சொத்தை எல்லையற்ற தந்தை இவர் மூலமாகத் தான்
கொடுக் கிறார். இவர் மூலமாகத் தத்தெடுப்பதால் இவரை தந்தை
என்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் கூட லௌகீக மற்றும் பாரலௌகீக
தந்தை இருவரும் நினைவிற்கு வருகிறார்கள். இவரை (அலௌகீக) நினைவு
செய்வதில்லை. ஏனென்றால் இவரிடமிருந்து சொத்து கிடைப்பதில்லை.
அப்பா என்ற வார்த்தை சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பிரம்மாவும்
படைப்பு அல்லவா? படைப்பிற்கு படைப்பவரிடமிருந்து சொத்து
கிடைக்கிறது. உங்களைக் கூட சிவபாபா தான் படைத்தார்.
பிரம்மாவையும் அவர் தான் படைத்தார். சொத்து படைப்பவரிடமிருந்து
கிடைக் கிறது. அவர் எல்லையற்ற தந்தை. பிரம்மாவிடம் எல்லையற்ற
சொத்து இருக்கிறதா? பாபா இவர் மூலமாகப் புரிய வைக்கின்றார்.
இவருக்கும் சொத்து கிடைக்கிறது. சொத்தை அடைந்து உங்களுக்குக்
கொடுக் கிறார் என்பது கிடையாது. நீங்கள் இவரையும்
நினைக்காதீர்கள் என பாபா கூறுகிறார். இந்த எல்லையற்ற தந்தை
யிடமிருந்து உங்களுக்கு சொத்து கிடைக்கிறது. லௌகீக
தந்தையிடமிருந்து தான் எல்லைக்குட்பட்ட, பரலௌகீக
தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட சொத்து இரண்டும் பதிவு
செய்யப்பட்டு விட்டது. சிவபாபாவிடமிருந்து சொத்து கிடைக்கிறது
என்பது புத்தியில் இருக்கிறது. மற்றபடி பிரம்மா பாபாவின் சொத்து
என்று எதைக் கூறுவோம். புத்தியில் சொத்து நினைவு வருகிறது
அல்லவா. இந்த எல்லையற்ற ராஜ்ஜியம் அவரிடமிருந்து உங்களுக்குக்
கிடைக்கிறது. அவர் பெரிய தந்தையாவார். என்னை நினைக்காதீர்கள்,
என்னிடம் எந்த சொத்தும் இல்லை, உங்களுக்கு கொடுப்பதற்கு என்று
இவரும் கூறுகிறார். யாரிடமிருந்து சொத்து கிடைக் கிறதோ அவரை
நினையுங்கள், அவரே என்னை மட்டும் நினையுங்கள் என்கிறார். லௌகீக
தந்தையின் சொத்திற்காக எவ்வளவு சண்டை நடக்கிறது. இங்கேயோ
சண்டையின் விஷயம் எதுவும் இல்லை. தந்தையை நினைக்கவில்லை என்றால்
எல்லையற்ற சொத்தும் கிடைக்காது. தன்னை ஆத்மா என உணருங்கள் என
பாபா கூறுகிறார். இந்த ரதத்திற்கும் நீங்கள் தன்னை ஆத்மா என்று
உணர்ந்து என்னை நினைத்தால் உலகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கும்
என்று கூறுகின்றார். இதற்குத் தான் நினைவு யாத்திரை என்று பெயர்.
தேகத்தின் அனைத்து உறவு களையும் விட்டுவிட்டு தன்னை அசரீரி என
உணருங்கள். இதில் தான் கடின உழைப்பு இருக்கிறது. படிப்பிற்காக
கடின உழைப்பு வேண்டும் அல்லவா? இந்த நினைவு யாத்திரையினால்
நீங்கள் அழுக்கிலிருந்து தூய்மையாகிறீர்கள். அவர்கள் உடல்
மூலமாக யாத்திரை செய்கிறார்கள். இது ஆத்மாவின் யாத்திரையாகும்.
இது பரந்தாமம் செல்வதற்கான உங்களுடைய யாத்திரை யாகும்.
பரந்தாமம் அல்லது முக்தி தாமத்திற்கு உங்களைத் தவிர யாரும்
இந்த முயற்சி இல்லாமல் செல்ல முடியாது. யார் நன்கு
நினைக்கிறார்களோ அவர்கள் தான் போக முடியும். மேலும் உயர்ந்த
பதவியும் அவர்களே அடைவார்கள். அனைவரும் செல்வார்கள். ஆனால்
அவர்கள் பதீதமானவர்கள் அல்லவா? ஆகையால் அழைக்கிறார்கள். ஆத்மா
நினைக்கிறது. சாப்பிடு வது குடிப்பது அனைத்தும் ஆத்மா செய்கிறது
அல்லவா? இச்சமயம் நீங்கள் ஆத்ம உணர்வுடைய வர்கள் ஆக வேண்டும்.
இதுவே கடின உழைப்பாகும், உழைப்பில்லாமல் எதுவும் கிடைக்காது.
மிகவும் எளிதே. ஆனால் மாயை எதிர்க்கிறது. யாருடைய அதிர்ஷ்டம்
நன்றாக இருக்கிறதோ அவர்கள் உடனே இதில் ஈடுபட்டு விடுகின்றனர்.
சிலர் தாமதமாகவும் வருவார்கள். புத்தியில் நன்கு பதிந்து
விட்டால் நாம் இந்த ஆன்மீக யாத்திரையில் ஈடுபட்டிருக்கிறேன்,
போதும் என கூறுவார்கள். இவ்வாறு தீவிர வேகத்தில் ஈடுபட்டு
விட்டால் நன்கு ஓட முடியும். வீட்டில் இருந்தாலும் மிகவும் இது
நல்ல விஷயம் என்று புத்தியில் தோன்றும். நான் என்னை ஆத்மா என்று
உணர்ந்து பதீத பாவனர் தந்தையை நினைக்கிறேன். பாபாவின்
கட்டளைப்படி நடந்தால் தூய்மையாக முடியும். நிச்சயம் மாறலாம்.
முயற்சியினுடைய விஷயம் ஆகும். மிகவும் எளிதாகும். பக்தி
மார்க்கத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது. இங்கே உங்களுடைய
புத்தியில் நாம் பாபாவிடம் திரும்பப் போக வேண்டும் என்பது
இருக்கிறது. பிறகு இங்கே வந்து விஷ்ணுவின் மாலையில் சுழல்வோம்.
மாலையை கணக்கிட்டுப் பார்ப் போம். பிரம்மாவின் மாலை இருக்கிறது.
விஷ்ணுவின் மாலை இருக்கிறது, ருத்திரனுடையதும் இருக்கிறது.
முதன் முதலில் புது சிருஷ்டி யினுடையவர்கள் அல்லவா? மற்றவர்கள்
அனைவரும் பின்னால் வருகிறார்கள். கடைசியில்
சுழற்றப்படுகிறார்கள். உங்களுடைய உயர்ந்த குலம் எது என்று
கேட்பார்கள். நீங்கள் விஷ்ணுவின் குலம் என்பீர்கள். உண்மையில்
நாம் விஷ்ணு குலத்தினராக இருந்தோம், பிறகு சத்திரிய குலத்தினர்
ஆகிறோம். பிறகு அதிலிருந்து வம்சங்கள் தோன்றியது. இந்த
ஞானத்தின் மூலமாக வம்சங்கள் எப்படி தோன்றுகிறது என்பதை நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். முதன் முதலில் ருத்திரனின் மாலை
உருவாகியது. உயர்ந்ததிலும் உயர்ந்த வம்சம். இது உங்களுடைய மிக
உயர்ந்த குலம் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். முழு
உலகிற்கும் நிச்சயம் செய்தி கிடைக்கும் என்று கூட புரிந்துக்
கொள்கிறீர்கள். பகவான் நிச்சயமாக எங்கேயோ வந்திருக்கிறார்.
ஆனால் தெரியவில்லை என்று பலர் கூறுகிறார்கள். கடைசியில்
அனைவருக்கும் தெரிய வரும். செய்தி தாள்களிலும் வரும். இப்போது
சிறிது போடுகிறார்கள். ஒரே செய்தித்தாளை அனைவரும்
படிக்கிறார்கள் என்பது கிடையாது. நூலகத்தில் படிக்க முடியும்.
சிலர் இரண்டு நான்கு செய்தித் தாள்கள் கூட படிக்கிறார்கள்.
சிலர் முற்றிலும் எதையும் படிப்பதில்லை. தந்தை வந்திருக்கிறார்
என்பது வினாசத்தின் நேரம் நெருங்கும் போது அனைவருக்கும் தெரிய
வரும். புது உலகின் ஸ்தாபனை பழைய உலகின் அழிவு நடக்கிறது.
பலருக்கு காட்சிகள் கூட கிடைக்கலாம். நீங்கள் சன்னியாசிகள்
ராஜாக்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டும். நிறைய பேருக்கு செய்தி
கிடைக்க வேண்டும். எல்லையற்ற தந்தை வந்து விட்டார், அவரே சத்கதி
கொடுப்பவர் என்பதைக் கேட்கும் போது நிறைய பேர் வருவார்கள்.
இதுவரை செய்திதாள்களில் இவ்வாறு மனதிற்குப் பிடித்த வகையில்
எதுவும் வரவில்லை. யாராவது வருவார்கள், விசாரிப்பார்கள். நாம்
ஸ்ரீமத்படி சத்யுகத் தின் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம்
என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். இது உங்களுடைய புதிய
மிஷன் ஆகும். நீங்களே ஈஸ்வரிய மிஷனின் ஈஸ்வரிய குலத்தினர்.
கிறிஸ்துவ மிஷன்களில் எப்படி கிறிஸ்தவ குலத்தினர்
உருவாகிறார்களோ அது போல நீங்கள் ஈஸ்வரிய குலத்தினர். ஆகவே தான்
அதீந்திரிய சுகத்தை கோப கோபியரிடம் கேளுங்கள். அவர்களே ஆத்ம
உணர்வுடையவர்கள் என்று பாடப் பட்டிருக்கிறது. ஒரு தந்தையை
நினைக்க வேண்டும் வேறு யாரையும் நினைக்கக் கூடாது. ஒரு
தந்தைதான் இந்த இராஜயோகத்தைக் கற்பிக் கின்றார். அவரே கீதையின்
பகவான் ஆவார். அனைவருக்கும் இந்த பாபாவின் அழைப்பு அல்லது
செய்தியை அளியுங்கள். மற்ற விஷயங்கள் அனைத்தும் ஞான அலங்காரம்
ஆகும். இந்த சித்திரங்கள் அனைத்தும் ஞானத்தின் அலங்காரமாகும்.
பக்தியினுடையது கிடையாது. மனிதர் களுக்குப் புரிய வைப்பதற்காக
பாபாவே வந்து இதை உருவாக்கியிருக்கிறார். இந்த சித்திரங்கள்
அனைத்தும் மறைந்து போய்விடும். மற்றபடி இந்த ஞானம் ஆத்மாவில்
இருக்கிறது, பாபாவிற்கும் இந்த ஞானம் இருக்கிறது. நாடகத்தில்
நிச்சயிக்கப் பட்டிருக்கிறது.
இப்போது நீங்கள் பக்தி மார்க்கத்தைக் கடந்து ஞான மார்க்கத்தில்
வந்துள்ளீர்கள். நம்முடைய ஆத்மாவில் இந்த நடிப்பு இருக்கிறது.
அது நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நாம் தந்தையிடமிருந்து
இராஜ யோகத்தை கற்றுக் கொண்டிருக்கிறோம். தந்தையே வந்து இந்த
ஞானத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆத்மாவில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அங்கே செல்வோம், அடைவோம். பிறகு
மீண்டும் புது உலகத்தின் பாகம் ரிபீட் ஆகும். ஆத்மாவின் அனைத்து
பதிவுகளையும் ஆரம்பத்திலிருந்து இப்போது நீங்கள் புரிந்துக்
கொண்டீர்கள். பிறகு அது அனைத்தும் முடிந்து விடும். பக்தி
மார்க்கத் தின் நடிப்பு கூட முடிந்து விடும். பிறகு
சத்யுகத்தில் உங்களுடைய நடிப்பு என்னவோ அது நடக்கும். என்ன
நடக்கும் என்பதை பாபா தெரிவிப்பதில்லை. என்ன நடந்ததோ அது
நடக்கும். சத்யுகம் என்பது புது உலகம் என்பது புரிய
வைக்கப்படுகிறது. நிச்சயம் அங்கே அனைத்தும் புதிய தாக
சதோபிரதானமாக மலிவாக இருக்கும். போன கல்பத்தில் என்ன நடந்ததோ
அதுவே நடக்கும். இந்த லஷ்மி நாராயணனுக்கு எவ்வளவு சுகம்
இருக்கிறது என பார்க்கிறீர்கள். வைர வைடூரியங்களின் பணம் நிறைய
இருக்கிறது. செல்வம் இருக்கிறது என்றால் சுகமும் இருக்கிறது.
இங்கே நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம், அங்கே ஒப்பிட முடியாது.
இவ்விடத்தின் விஷயங்கள் அங்கே மறந்து போகும். இது புது
விஷயங்கள் ஆகும். பாபா தான் குழந்தைகளுக்குப் புரிய வைக் கிறார்.
ஆத்மாக்கள் அங்கே போக வேண்டும். அங்கே செயல்பாடுகள் அனைத்தும்
நின்று விடுகிறது. கணக்கு வழக்கு அனைத்தும் முடிந்து விடுகிறது.
ரிக்கார்டு முடிந்து விடுகிறது. ஒரே ஒரு ரிகார்டு மிகப் பெரிய
தாகும். ஆத்மாவும் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்று கூறு
கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. இவ்வளவு சிறிய ஆத்மாவில் 84
பிறவிகளின் பதிவு இருக்கிறது. ஆத்மா அழிவற்றது. இவைகளுக்கு
அதிசயம் என்று தான் கூறலாம். இவ்வாறு ஆச்சரியப்படக் கூடிய
விஷயங்கள் வேறு எதுவும் கிடையாது. சத்யுகம் திரேதாவின்
சமயத்தில் பாபா ஓய்வில் இருப்பார் என்று கூறுகிறார்கள். நாம்
முழு சுற்றிலும் நடிக்கிறோம். எல்லோரையும் விட அதிகமாக
நம்முடைய பாகமே இருக்கிறது. எனவே பாபா சொத்தும் உயர்ந்ததாக
கொடுக்கிறார். 84 பிறவிகள் கூட நீங்கள் தான் எடுக் கிறீர்கள்
என கூறுகிறார். நம்முடைய பாகமே இப்படித்தான் இருக்கிறது.
அதைவேறு யாரும் நடிக்க முடியாது. அதிசயமான விஷயங்கள் அல்லவா?
ஆத்மாக்களுக்கு பாபா புரிய வைக்கின்றார். இதுவும் அதிசயமாக
இருக்கின்றது. ஆத்மா ஆண் பெண் என்று கூற முடியாது. சரீரத்தை
எடுக்கும் போது தான் ஆண் பெண் என்று கூற முடிகிறது. ஆத்மாக்கள்
அனைவரும் குழந்தைகள் என்றால் சகோதர சகோதரன் ஆகிவிடு கிறார்கள்.
நிச்சயம் சொத்து அடைவதற்காக சகோதர சகோதரன் ஆவர். ஆத்மா பாபாவின்
குழந்தை அல்லவா? தந்தை யிடமிருந்து சொத்தை அடைகின்றனர் என்றால்,
ஆண் என்று கூறுவர். அனைத்து ஆத்மாக் களுக்கும் தந்தையிடமிருந்து
சொத்து அடைய உரிமை இருக்கிறது. அதற்காக தந்தையை நினைக்க
வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். நாம் அனைவரும்
சகோதரர்கள். ஆத்மா ஆத்மாவாகத் தான் இருக்கிறது. அது ஒரு போதும்
மாறுவதில்லை. மற்றபடி சரீரம் தான் சில நேரம் ஆணுடைய தாகவும்
சில நேரம் பெண்ணுடைய சரீரமாகவும் எடுக்கிறது. இது பெரிய
குழப்பமான, ஆனால் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். வேறு
யாரும் சொல்ல முடியாது. தந்தையிடமிருந்து அல்லது குழந்தை
களாகிய உங்களிடமிருந்து தான் கேட்க முடியும். பாபா
குழந்தைகளாகிய உங்களிடம் தான் பேசுகிறார். முன்பு அனைவரையும்
சந்தித்தார், அனைவரிடமும் பேசினார். இப்போது செய்து செய்து
கடைசியில் யாரிடமும் பேசுவதில்லை. குழந்தைகள் அப்பாவை
வெளிப்படுத்த வேண்டும் அல்லவா? குழந்தைகள் தான் படிக்க வைக்க
வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பலருக்கு சேவை செய்து அழைத்து
வருகிறீர்கள். இவர்கள் பலரை தனக்குச் சமமாக மாற்றி அழைத்து
வருகின்றனர் என பாபா புரிந்துக் கொள்வார். இவர் பெரிய ராஜாவாக
மாறுவார், இவர் சிறிய ராஜா ஆவார். நீங்கள் ஆன்மீக சேனையர். அனை
வரையும் இராவணனின் சங்கிலியில் இருந்து விடுவித்து தன்னுடைய
அமைப்பில் அழைத்து வருகிறீர்கள். யார் எவ்வளவு சேவை
செய்கிறார்களோ அவ்வளவு பலன் கிடைக்கிறது. யார் எவ்வளவு பக்தி
செய்கிறார்களோ அவர்களே அதிகமாக புத்திசாலி ஆகிறார்கள். மேலும்
ஆஸ்தியும் அடைகிறார்கள். இது படிப்பாகும். நன்கு படிக்க வில்லை
என்றால் தோல்வி அடைய நேரிடலாம். படிப்பு மிகவும் எளிதே.
புரிந்துக் கொள்வதும் புரிய வைப்பதும் கூட எளிதே. கடினத்தின்
விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. அதில்
அனைவரும் வேண்டும் அல்லவா? முயற்சி செய்ய வேண்டும். அதில் நாம்
உயர்ந்த பதவி பெறலாம். மரண உலகத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி
அமர உலகத்திற்குப் போக வேண்டும். எவ்வளவு படிக்கிறீர்களோ
அவ்வளவு அமர புரியில் உயர்ந்த பதவி பெறலாம்.
பாபாவிடம் அன்பும் செய்ய வேண்டும். ஏனென்றால் இவரே அன்பிலும்
அன்பான பொருள். அன்பின் கடலாகவும் இருக்கிறார். ஒரே மாதிரியான
அன்பு இருக்க முடியாது. சிலர் நினைக் கிறார்கள், சிலர்
நினைப்பதும் இல்லை. சிலருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற
பெருமிதமும் இருக்கிறது. மிகப் பெரிய ஆர்வம் ஆகும். இது
பல்கலைக் கழகம் என்று யாருக்காவது தெரிவிக்க வேண்டும். இது
ஆன்மீகப் படிப்பாகும். இது போன்ற படங்கள் வேறு எந்த பள்ளியிலும்
காண்பிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் மேலும் படங்கள் வந்துக்
கொண்டே இருக்கும். அதை மனிதர்கள் பார்க்கும் போதே புரிந்துக்
கொள்வார்கள். ஏணிப்படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் தேவதா
தர்மத்தினராக இல்லை என்றால் அவர்களுக்குப் புரியாது. யார் இந்த
குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்களுக்கு அம்பு பாயும். நம்முடைய
தேவதா தர்மத்தின் இலையாக யார் இருக்கிறார்ளோ அவர்களே வருவார்கள்.
இவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை உங்களால் உணர முடியும். சிலரோ அப்படியே சென்று
விடுவார்கள். ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களை
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருககிறார். சேவை
செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். யார் சேவையில்
ஈடுபட்டிருக்கிறார்களோ அவர்களே மனதில் இடம் பிடிப்பார்கள்.
சிம்மாசனத்தில் அமர்வார்கள். இன்னும் செல்லச் செல்ல உங்களுக்கு
நிறைய காட்சிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த
மகிழ்ச்சியில் நீங்கள் இருப்பீர்கள். உலகிலோ அய்யோ அய்யோ என்ற
குரல் நிறைய கேட்கும். ரத்த நதிகள் கூட பெருகும். சக்திசாலியான
சேவையாளர்கள் ஒரு போதும் பசியில் இறக்க மாட்டார்கள். ஆனால்
இங்கேயே நீங்கள் வனவாசத்தில் இருக்க வேண்டும். சுகம் அங்கே
கிடைக்கும். கன்னியாவை வன வாசத்தில் அமர வைக்கிறார்கள் அல்லவா?
மாமியார் வீட்டிற்குச் சென்று நிறைய அணிந்து கொள்ள வேண்டும்.
நீங்களும் மாமியார் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்ற பெருமிதம்
இருக்கிறது. அதுவே சுகதாமம் ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மாலையில் சுழற்றப்பட வேண்டும் எனில், ஆத்ம உணர்வுடையவராகி
தீவிர வேகத்தில் நினைவு யாத்திரை செய்ய வேண்டும். பாபாவின்
கட்டளைப்படி நடந்து தூய்மையாக வேண்டும்.
2. பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்து பலரை தனக்குச் சமமாக மாற்றம்
செய்யக் கூடிய சேவை செய்ய வேண்டும். இங்கே வனவாசத்தில் இருக்க
வேண்டும். அய்யோ ! அய்யோ ! என்ற கடைசி காட்சிகளைப் பார்ப்பதற்கு
மகாவீர் ஆக வேண்டும்.
வரதானம்:
பந்தனங்களின் கூண்டினை உடைத்து ஜீவன்முக்தி நிலையை அனுபவம்
செய்யக்கூடிய உண்மையான டிரஸ்டி ஆவீர்களாக.
சரீரத்தின் அல்லது சம்பந்தத்தின் பந்தனம் தான் கூண்டு ஆகும்.
கடமையை நிறைவேற்றுவது என்பதையும் கூட (நிமித்தம்) பெயரளவில்
மட்டுமே கடைபிடிக்க வேண்டுமேயன்றி பற்றுதலுடன் அல்ல.
அப்பொழுதுதான் பந்தனமற்றவர் என்று கூறுவார்கள். யார் டிரஸ்டி
ஆகி நடக்கிறார்களோ அவர்களே பந்தனமற்றவர்கள். எந்த ஒரு எனது
என்ற தன்மை இருந்தாலும் அவர்கள் கூண்டில் அடைக்கப்பட்டவர்கள்
தான். இப்பொழுது கூண்டு பறவையிலிருந்து பரிஷ்தா ஆகி விட்டீர்கள்.
எனவே எங்குமே சிறிதளவும் கூட பந்தனம் இல்லாமல் இருக்கட்டும்.
மனதினுடைய பந்தனம் கூட இருக்க கூடாது. என்ன செய்வது, எப்படி
செய்வது, விரும்புகிறேன் ஆனால் நடப்பதில்லை -இது கூட மனதின்
பந்தனம் ஆகும். எப்பொழுது மறுவாழ்வு உடையவர் ஆகி விட்டீர்களோ
பின் எல்லா விதமான பந்தனங்களும் முடிந்து போய்விட்ட நிலையில்
என்றுமே ஜீவன் முக்தி நிலையின் அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கும்.
சுலோகன்:
எண்ணங்களை மீதப்படுத்தினீர்கள் என்றால் சமயம், சொற்கள் எல்லாமே
இயல்பாகவே மிச்சப்படுத்தப்பட்டு விடும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
கர்மாதீத் நிலை என்றால் கர்மத்தின் எந்த ஒரு பந்தனத்தின்
ஸ்பரிசத்திலிருந்து (ஈர்ப்பு) கூட விலகி இருப்பது.
இப்பேர்ப்பட்ட அனுபவங்களே அதிகரித்து கொண்டு இருக்கட்டும்.
எந்த ஒரு காரியம் கூட ஸ்பரிசக்கக் கூடாது. மேலும் காரியம்
செய்த பிறகு வெளிப்படும் பலன் கூட நம்மை ஸ்பரிசக்கக் கூடாது.
முற்றிலும் விலகிய நிலையின் அனுபவம் ஏற்பட்டு கொண்டே இருக்க
வேண்டும். எப்படி மற்றவர் யாரோ செய்வித்தார் மற்றும் நான்
செய்தேன். கருவியாக இருப்பதில் கூட அந்த விலகிய தன்மை அனுபவம்
ஆக வேண்டும். எது நடந்து முடிந்ததோ, அதற்கு முற்றுப் புள்ளி
வைத்து விட்டு விலகியவராக ஆகி விடுங்கள்.