10-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைத்திலும் பெரிய
வியாதி தேக-அபிமானமாகும் இதனால் தான் வீழ்ச்சி ஏற்பட்டது,
ஆகையினால் இப்போது ஆத்ம-அபிமானி ஆகுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய
கர்மாதீத் நிலை எப்போது ஏற்படும்?
பதில்:
எப்போது யோக பலத்தின் மூலம்
கர்மச் சுமையின் மீது வெற்றி அடைவீர்களோ அப்போது கர்மாதீத் நிலை
ஆகும். முழுமையாக ஆத்ம-அபிமானிகளாக ஆவீர்கள். இந்த தேக-அபிமானம்
எனும் வியாதி தான் அனைத்திலும் பெரியதாகும். இதன் மூலம் உலகம்
தூய்மையற்றதாக ஆனது. ஆத்ம-அபிமானியாக ஆனீர்கள் என்றால் அந்த
குஷி, அந்த போதை இருக்கும், நடத்தையும் முன்போலவே மாறுதலடையும்.
பாடல்:
இரவு பிரயாணிகளே
களைப்படையாதீர்கள்.............
ஓம் சாந்தி.
பிரயாணிகள் என்பதின் அர்த்தத்தை குழந்தைகள் கேட்டீர்கள்.
பிரம்மா வாய்வம்சாவழி பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும்
புரிய வைக்க முடியாது. தேவி-தேவதைகளாக இருந்த நீங்களும்
மனிதர்களாகவே இருந்தீர்கள். ஆனால் உங்களுடைய நடத்தைகள் மிக
நன்றாக இருந்தது. நீங்கள் அனைத்து குணங்களும் நிரம்பியவர்களாக
இருந்தீர்கள், 16 கலைகள் முழுமை யானவர்களாக இருந்தீர்கள்.
நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். வைரத்திற்கு
ஒப்பான நிலையிலிருந்து சோழியைப்போல் எப்படி ஆனீர்கள், என்பதை
மனிதர்கள் யாரும் தெரிந்திருக்கவில்லை. நீங்களும் கூட
வரிசைக்கிரமமான முயற்சியின்படி மாறியுள்ளீர்கள். நீங்கள்
இப்போது தேவதைகளாக இன்னமும் ஆகவில்லை. மாறிக் கொண்டிருக்
கிறீர்கள். சிலர் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள், சிலர் 5 சதவீதம்,
சிலர் 10 சதவீதம்....... நடத்தை மாறிக் கொண்டே இருக்கிறது.
பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது என்பது உலகத்திற்குத்
தெரியவில்லை, கிறிஸ்து விற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
பாரதத்தில் தேவி-தேவதைகள் இருந்தார்கள், அவர் களிடத்தில் பகவான்
- பகவதி என்றழைக்கும் அளவிற்கு குணங்கள் இருந்தன. இப்போது அந்த
குணங்கள் இல்லை. அந்தளவிற்கு செல்வம் நிறைந்ததாக இருந்த பாரதம்
எப்படி வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பாபா அமர்ந்து புரிய வைக்
கின்றார். யாருடைய நடத்தை மாறியிருக் கிறது என்பதை நீங்களும்
கூட புரிய வைக்கலாம். பாபா கூறுகின்றார், குழந்தைகளே நீங்கள்
தேவி-தேவதைகளாக இருந்தபோது ஆத்ம-அபிமானிகளாக இருந்தீர்கள்,
பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமானபோது தேக-அபிமானிகளாக
ஆகிவிட்டீர்கள். இந்த தேக-அபிமானம் எனும் அனைத் திலும் பெரிய
வியாதி உங்களுக்கு இருக்கிறது. சத்யுகத்தில் நீங்கள்
ஆத்ம-அபிமானிகளாக இருந்தீர்கள், அதிக சுக முடையவர்களாக
இருந்தீர்கள், உங்களை யார் இப்படி மாற்றியது. இதையும் யாரும்
தெரிந்திருக்கவில்லை. ஏன் உங்களுடைய வீழ்ச்சி ஏற்பட்டது
என்பதையும் பாபா புரிய வைக்கின்றார். உங்களுடைய தர்மத்தை மறந்து
விட்டீர்கள். பாரதம் ஒரு பைசாவிற்கு கூட மதிப்பற்றதாக
ஆகிவிட்டது. அதனுடைய மூல காரணம் என்ன? தேக-அபிமானம் ஆகும். இது
கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு
செல்வமிகுந்ததாக இருந்த பாரதம் எப்படி ஏழை யாகியது, நாம் ஆதி
சனாதன தேவி-தேவதா தர்மத்தவர்களாக இருந்த நாம் எப்படி தர்மம்
கீழானதாகவும், கர்மம் கீழானதாகவும் ஆனோம் என்பதை மனிதர்கள்
தெரிந்திருக்கவில்லை. இராவண இராஜ்யம் ஆகிவிட்டதால் நீங்கள்
தேக-அபிமானிகளாக ஆனீர்கள், எனவே உங்களுடைய நிலை இப்படி
ஆகிவிட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். எப்படி வீழ்ச்சி
ஏற்பட்டது என்று ஏணிப்படி படத்தில் காட்டப்பட்டுள்ளது, ஒரு
பைசாவிற்கு பயனற்ற நிலையை அடைந்ததிற்கும் முக்கிய காரணம்
தேக-அபிமானமாகும். இதையும் பாபா வந்து புரிய வைக்கின்றார்.
சாஸ்திரங் களில் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான ஆண்டு
களாக்கிவிட்டார்கள். இன்றைக்கு புத்திசாலிகளாக இருப்பவர்கள்
கிறிஸ்துவர்களாவர். அவர்களும் கூட கிறிஸ்து விற்கு 3 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் சொர்க்கம் இருந்தது என்று சொல்கிறார்கள்,
பழமையான பாரதத்தைத் தான் சொர்க்கம், ஹெவன் என்று
சொல்லப்படுகிறது என்பதை பாரதவாசிகள் புரிந்து கொள்ள முடியாது.
இன்றைக்கு பாரதத்தின் முழு வரலாறு-புவியியலை
தெரிந்திருக்கவேயில்லை, சில குழந்தைகளிடத்தில் கொஞ்சம் ஞானம்
வந்துவிட்டால் தேக-அபிமானம் வந்துவிடுகிறது. நம்மைப் போல்
யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். பாரதத்திற்கு
இந்த துர்திசை (கெட்ட காலம்) ஏன் வந்தது என்று பாபா புரிய வைக்
கின்றார்? தேசப்பிதா காந்தி கூட சொன்னார் - தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரே வாருங்கள், வந்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்யுங்கள். ஆத்மாவிற்கு கண்டிப்பாக பாபாவிடமிருந்து சுகம்
கிடைத் திருக்கிறது, எனவே தான் தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரை நினைவு செய்கிறார்கள்.
என்னுடைய குழந்தைகள் யார் சூத்திரனிலிருந்து மாறி பிராமணர்களாக
ஆகிறார்களோ அவர்கள் கூட முழுமையாக ஆத்ம-அபிமானியாக ஆவதில்லை
என்று பாபா புரிய வைக்கின்றார். அடிக்கடி தேக-அபிமானத்தில்
வந்து விடுகிறார்கள். இது அனைத்திலும் பழைய வியாதியாகும்,
இதனால் இந்த நிலை உருவானது. ஆத்ம- அபிமானியாக ஆவதற்கு அதிகம்
உழைக்க வேண்டியிருக்கிறது. எந்தளவிற்கு ஆத்ம-அபிமானியாக
ஆவீர்களோ, அந்தளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்கள். பிறகு
அளவற்ற குஷி இருக்க வேண்டும். தொலை தூரத்தில் பிரம்மத்தில்
இருக்கும் பரமேஷ்வரனைப் பற்றி கவலை இருந்தது, அவர் இப்போது
கிடைத்துவிட்டார், அவர் மூலம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி
கிடைக்கிறது, வேறு என்ன வேண்டும் என்று பாடப்படுகிறது. நீங்கள்
ஆத்ம- அபிமானிகளாக ஆகுங்கள், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்,
அவ்வளவு தான். குடும்ப விவகாரங்களில் வேண்டுமானாலும் இருங்கள்.
முழு உலகமும் தேக-அபிமானத்தில் இருக்கிறது. அந்தளவிற்கு
உயர்ந்ததாக இருந்த பாரதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வரலாறு-புவியியல் என்னவென்று யாரும் சொல்ல முடியாது. இந்த
விசயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. தேவதைகள்
ஆத்ம-அபிமானிகளாக இருந்தனர். ஒரு சரீரத்தை விட்டு விட்டு
மற்றொன்றை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள்.
பரமாத்ம-அபிமானிகளாக இல்லை. நீங்கள் எந்தளவிற்கு தந்தையை நினைவு
செய்வீர்களோ, ஆத்ம-அபிமானியாக இருப்பீர்களோ, அந்தளவிற்கு
இனிமையானவர்களாக ஆவீர்கள். தேக-அபிமானத்தில் வருவதின் மூலம்
தான் சண்டை, சச்சரவு, குரங்குத்தனம் வந்துவிடுகிறது, என்பதை
பாபா புரிய வைக்கின்றார். இந்த பாபாவும் (பிரம்மா) புரிந்து
கொண்டிருக்கிறார். குழந்தைகள் தேக-அபிமானத்தில் வந்து சிவபாபா
வை மறந்து விடுகிறார்கள். நல்ல - நல்ல குழந்தைகள் தேக-
அபிமானத்தில் இருக்கிறார்கள். ஆத்ம-அபிமானிகளாக ஆவதே இல்லை.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எல்லையற்ற வரலாறு-புவியியலை
புரிய வைக்கலாம். உண்மையில் சூரிய வம்ச சந்திர வம்ச இராஜ்யம்
இருந்தது. நாடகத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. பாரதம்
இந்தளவிற்கு வீழ்ந்து விட்டது, வீழ்ச்சியின் வேர் (மூல காரணம்)
தேக-அபிமானம் ஆகும். குழந்தைகளிடத்திலும் கூட தேக-அபிமானம்
வந்துவிடுகிறது. நமக்கு யார் டைரக்ஷன் கொடுப்பது என்பதையும்
புரிந்து கொள்வ தில்லை. சிவபாபா கூறுகின்றார் என்றே எப்போதும்
புரிந்து கொள்ளுங்கள். சிவபாபாவை நினைவு செய்யாததினால் தான்
தேக-அபிமானத்தில் வந்துவிடு கிறார்கள். முழு உலகமும்
தேக-அபிமான முடையவர்களாக ஆகிவிட்டது, ஆகையினால் தான் பாபா
கூறுகின்றார், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், தங்களை ஆத்மா
என்று புரிந்துக் கொள்ளுங்கள். ஆத்மா இந்த சரீரத்தின் மூலம்
கேட்கிறது, நடிப்பை நடிக்கிறது. பாபா எவ்வளவு நல்ல விதத்தில்
புரிய வைக்கின்றார். நன்றாக சொற்பொழிவாற்றுகிறார்கள் ஆனால்
நடத்தையும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா. தேக-அபிமானம்
இருக்கின்ற காரணத்தினால் தோற்று விடுகிறார்கள். அந்த குஷி
அல்லது போதை இருப்பதில்லை. பிறகு அவர்களின் மூலம் பெரிய
விகர்மமும் நடக்கிறது, இதன் காரணமாக மிகுந்த
தண்டனைக்குறியவர்களாக ஆகி விடுகிறார்கள். தேக-அபிமானிகளாக
ஆவதினால் அதிக நஷ்டம் அடைகிறார்கள். அதிக தண்டனை அனுபவிக்க
வேண்டியிருக்கிறது. பாபா கூறுகின்றார் இது இறைவனுடைய உலக
அரசாங்கம் அல்லவா. இறைவனுடைய அரசாங்கத்தின் வலக்கரமாக தர்மராஜன்
இருக்கிறார். நீங்கள் நல்ல கர்மம் செய்கிறீர்கள் என்றால்
அதனுடைய பலன் நல்லதாக கிடைக்கிறது. கெட்ட கர்மம் செய்கிறீர்கள்
என்றால் அதற்கு தண்டனை அனுபவிக்கிறீர்கள். அனைவரும்
கர்பசிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். அதைப்பற்றிக் கூட ஒரு
கதை இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த
சமயத்தினுடையதாகும். அனைத்தும் ஒரு பாபாவினுடைய மகிமையே ஆகும்.
வேறு யாருடைய மகிமையும் அல்ல, ஆகையினால் தான் திருமூர்த்தி
சிவஜெயந்தி என்பது வைரத்திற்கு ஒப்பானதாகும். மற்றவை அனைத்தும்
சோழிக்கு ஒப்பானதாகும். சிவபாபாவைத் தவிர வேறு யாரும்
தூய்மையாக்க முடியாது. தூய்மையா கிறார்கள் பிறகு இராவணன்
தூய்மையற்றவர்களாக்குகின்றான். அந்த காரணத்தினால் தான் அனைவரும்
தேக-அபிமானிகளாக ஆகிவிட்டார்கள். நீங்கள் இப்போது
ஆத்ம-அபிமானிகளாக ஆகின்றீர்கள். இந்த ஆத்ம-அபிமான நிலையானது 21
பிறவிகள் வரை செல்கிறது. எனவே பலியாதல் அனைத்தும் ஒருவருக்கே
என்று பாடப்படுகிறது. பாரதத்தை சொர்க்கமாக்கக் கூடியவர் சிவபாபா
ஆவார், சிவபாபா எப்போது வந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை,
அவருடைய வரலாறு முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். பரமபிதா
பரமாத்மாவைத் தான் சிவன் என்று சொல்லப்படுகிறது.
தேக-அபிமானத்தின் காரணத்தால் தான் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அந்த நிலை ஏற்படும் போது தான்
மீண்டும் எழுச்சி பெறச் செய்ய பாபா வருவார். எழுச்சி மற்றும்
வீழ்ச்சி, பகல் மற்றும் இரவு, ஞான சூரிய எழுந்தால், அஞ்ஞான
இருள் அழியும். அனைத்திலும் அதிகமான அஞ்ஞானம் தேக-அபிமானமாகும்.
ஆத்மாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆத்மா தான்
பரமாத்மாவாகிறது என்று சொல்லிவிட்டார்கள் எனும்போது எவ்வளவு
பாவாத்மாக் களாகி விட்டார்கள், ஆகையினால் தான் வீழ்ச்சி
ஏற்பட்டது. 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்கள், ஏணிப்படி இறங்கி
வந்துள்ளார்கள். இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
உலத்தின் வரலாறு புவியியலை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள், உலகத்தின் விழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது
என்பதை வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அறிவியலின்
மூலம் அதிக முன்னேற்றம் நடந்துள்ளது என்று நினைத்துக்
கொள்கிறார்கள். இந்த உலகம் இன்னும் தூய்மை யற்ற நரகமாக
ஆகிவிட்டது என்பதை புரிந்து கொள்வதில்லை. அதிக தேக-அபிமானம்
இருக்கிறது. நீங்கள் இப்போது ஆத்ம-அபிமானியாக ஆக வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். நல்ல நல்ல மகாரதிகள் அதிகம் இருக்கிறார்கள்.
ஞானத்தை மிகவும் நன்றாக கூறுகிறார்கள் ஆனால் தேக-அபிமானம்
முழுவதுமாக நீங்கவில்லை. தேக-அபிமானத்தின் காரணத்தால்
சிலரிடத்தில் கோபத்தின் அம்சம் இருக்கிறது, சிலரிடத்தில்
மோகத்தின் அம்சம் இருக்கிறது, ஏதாவதொன்று இருக்கிறது. நடத்தை
மாற வேண்டும் அல்லவா. மிக-மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும்.
ஆகையினால் தான் சிங்கமும் ஆடும் ஒன்றாக நீர் அருந்துவதாக
உதாரணம் காட்டுகிறார்கள். அங்கே இப்படி துக்கம் அளிக்கும்
மிருகங்கள் கூட இருப்பதில்லை. இந்த விஷயங்களைக் கூட கஷ்டப்பட்டு
யாராவது புரிந்து கொள் கிறார்கள். புரிந்துக் கொள்ளக்
கூடியவர்கள் வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள். கர்மச்சுமை
நீங்கிவிட்டால், கர்மாதீத் நிலை ஏற்பட்டுவிடும், இது
கஷ்டப்பட்டு நடக்கிறது. அதிகமாக தேக-அபிமானத்தில் வருகிறார்கள்.
நமக்கு இந்த வழியைச் சொல்வது யார் என்பது தெரிவதில்லை. ஸ்ரீமத்,
கிருஷ்ணரின் மூலம் எப்படி கிடைக்கும்? இவர் (பிரம்மா) இல்லாமல்
நான் எப்படி ஸ்ரீமத் கொடுப்பேன் என்று சிவபாபா கேட்கிறார்.
என்னுடைய நிலையான ரதம் இவரே ஆவார். தேக-அபிமானத்தில் வந்து
தலைகீழான காரியங்களைச் செய்து தானாகவே தங்களை அழித்துக்
கொள்ளாதீர்கள். இல்லையென்றால் விளைவு என்னவாக இருக்கும்!
மிகவும் குறைந்த பதவியை அடைவீர்கள். படித்தவர்களுக்கு முன்னால்
படிக்காதவர்கள் சுமை தூக்குகிறார்கள் (தலை வணங்கு வார்கள்).
முழுமையாக இருக்க வேண்டிய பாரதத்தின் வரலாறு-புவியியல் அப்படி
இல்லை என்று நிறைய பேர் கூறுகிறார்கள். எனவே அவர்களுக்குப்
புரிய வைக்க வேண்டும். உங்களைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க
முடியாது. ஆனால் ஆத்ம-அபிமான நிலை வேண்டும், அவர்கள் தான்
உயர்ந்த பதவி அடைய முடியும். இப்போது யாருக்கும் கர்மாதீத் நிலை
ஏற்படவில்லை. இவருக்கு நிறைய சிக்கல் இருக்கிறது. எவ்வளவு கவலை
இருக்கிறது. நாடகத்தின்படி நடக்கிறது என்று என்னவோ புரிந்து
கொள்கிறார்கள். இருந்தாலும் புரிய வைப்பதற்கு யுக்திகள்
உருவாக்க வேண்டியுள்ளது அல்லவா, ஆகையினால் தான் பாபா
கூறுகின்றார் நீங்கள் அதிகம் ஆத்ம-அபிமானிகளாக ஆக முடியும்.
உங்களுக்கு எந்த சுமையும் இல்லை, பாபாவிற்கு சுமை இருக்கிறது.
பிரஜாபிதா பிரம்மா தான் தலைவர் அல்லவா. ஆனால் இவருக்குள்
சிவபாபா அமர்ந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
உங்களில் கூட கஷ்டப் பட்டு சிலர் தான் அந்த நிச்சயத்தில்
இருக்கிறார்கள். எனவே இந்த உலகத்தின் வரலாறு-புவியியலை
தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. பாரதத்தில் எப்போது சொர்க்கம்
இருந்தது, பிறகு எங்கே சென்றது? எப்படி வீழ்ச்சி ஏற்பட்டது?
என்பது யாருக்கும் தெரியவில்லை. எதுவரை நீங்கள்
புரியவைக்கவில்லையோ அதுவரை யாரும் புரிந்து கொள்ள முடியாது,
ஆகையினால் தான் பாபா டைரக்ஷன் கொடுக்கின்றார். எழுதுகிறீர்கள்,
படிக்கிறீர்கள் என்றால் பள்ளிகளில் கூட உலகத்தின் வரலாறு-
புவியியலை சொல்ல வேண்டும். வீழ்ச்சியைப் பற்றி சொற்பொழிவாற்ற
வேண்டும். பாரதம் வைரத்திற்கு ஒப்பானதாக இருந்தது பிறகு
சோழிக்கு ஒப்பானதாக எப்படி ஆயிற்று? எத்தனை ஆண்டுகள் ஆனது?
என்பதை நாங்கள் புரிய வைக்கின்றோம். இப்படி கைப்பிரதிகளை
விமானத்திலிருந்து போடலாம். புரிய வைக்கக் கூடியவர்கள் மிகுந்த
புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அரசாங்கம் விரும்பினால்
அரசாங்க கட்டடம் விஞ்ஞான பவன் இருக்கிறது அங்கே அனைவரையும்
அழைக்க வேண்டும். நாளேடுகளிலும் போடலாம். அனைவருக்கும்
அழைப்பிதழ் அனுப்புங்கள். நாங்கள் உங்களுக்கு முழு உலகத்தின்
வரலாறு-புவியியலை ஆரம்பம் முதல் கடைசி வரை புரிய வைக்கின்றோம்.
நீங்களே வந்து செல்லலாம். பணம் போன்ற கட்டணம் எதுவும் இல்லை.
எங்களுக்கு ஏதோ கிடைத்திருக்கிறது அதை வழங்குகிறோம், எனவே
நாங்கள் பரிசு அல்லது காணிக்கை போன்று எதுவும் பெற முடியாது.
சேவை செய்வதற்கு காரியத்தில் கொண்டு வருவோம், மற்றபடி நாங்கள்
பெற்றுக் கொள்ள முடியாது. நான் உங்களிடமிருந்து தானம் பெற்றுக்
கொண்டு என்ன செய்வேன், பிறகு அதை நிறைத்து கொடுக்க
வேண்டியிருக்குமே என்று பாபா கேட்கிறார். நான் கனவான் (ஜென்டில்மேன்)
ஆவேன். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தேக-அபிமானத்தில் வந்து எந்தவொரு தலைகீழான காரியத்தையும்
செய்யக் கூடாது. ஆத்ம-அபிமானியாக ஆவதற்கு முழுமையாக முயற்சி
செய்ய வேண்டும். தங்களுடைய நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
2) மிக-மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். உள்ளுக்குள் கோபம்,
மோகத்தினுடைய பூதம் எது இருக்கிறதோ, அதை நீக்கி விட வேண்டும்.
வரதானம்:
மதிப்பு அளிக்கக்கூடிய பதிவேட்டினை சரியாக வைத்து குஷியின்
மகாதானம் செய்யக்கூடிய புண்ணிய ஆத்மா ஆவீர்களாக.
நிகழ்காலத்தில் நாலாபுறங்களிலும் மதிப்பு கொடுக்கக்கூடிய
பதிவேட்டினை சரி செய்யக்கூடிய அவசியம் இருக்கிறது. இதே ரிகார்டு
இசைத்தட்டு பின் நாலாபுறங்களிலும் ஒலிக்கும். மதிப்பு கொடுப்பது
மற்றும் மதிப்பு பெறுவது - சிறியவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்,
பெரியவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள். இந்த ரிகார்டு மதிப்பு
கொடுக்கக்கூடிய ரெகார்டு - சாதனை இப்பொழுது வெளிப்பட வேண்டும்.
அப்பொழுது மகிழ்ச்சியை தானம் செய்யக்கூடிய மகாதானி புண்ணிய
ஆத்மா ஆகிவிடுவீர்கள். எவரொருவருக்கும் மதிப்பு கொடுத்து
குஷிப்படுத்தி விடுவது -இது பெரியதிலும் பெரிய புண்ணிய காரியம்
ஆகும், சேவை ஆகும்.
சுலோகன்:
ஒவ்வொரு கணத்தையும் கடைசி கனம் என்று புரிந்து நடந்தீர்கள்
என்றால் எவரெடியாக இருப்பீர்கள்.
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்
1. தமோகுணம் நிறைந்த மாயாவின் வளர்ச்சி: சதோகுணம், இரஜோகுணம்,
தமோகுணம் இந்த மூன்று வார்த்தைகளை சொல்கிறார்கள், இதை சரியாக
புரிந்துக் கொள்வது அவசியமானதாகும். இந்த மூன்று குணங்களும்
இணைந்தே நடைமுறை செயல்படுகிறது என்று மனிதர்கள் புரிந்திருக்
கிறார்கள். ஆனால் விவேகம் என்ன சொல்கிறது - இந்த மூன்றுமே
இணைந்தே செயல்படுகிறதா? அல்லது மூன்று குணங்களும் தனித்தனி
யுகங்களில் வருகிறதா? இந்த மூன்றும் ஒட்டு மொத்தமாக சேர்ந்தே
செயல்பட முடியாது என்று விவேகம் சொல்கிறது அல்லவா? சத்யுகத்தில்
சதோகுணம் இருக்கிறது, துவாபர யுகத்தில் இரஜோகுணம் இருக்கிறது,
கலியுகத்தில் தமோகுணம் இருக்கிறது. சதோகுணம் இருக்கும்பொழுது
தமோ, இரஜோ இருக்காது, இரஜோ குணம் இருக்கும் சதோகுணம் இருக்காது.
இந்த மூன்று குணகளும் இணைந்தே செயல்படுகிறது என்று மனிதர்கள்
அப்படியே புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம்
முற்றிலும் தவறானது. மனிதர்கள் உண்மையை பேசும் பொழுது பாவ
காரியம் செய்வதில்லை, எனவே அது சதோகுணமுடைய தாகும் என்று
மனிதர்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால் நாம் சதோகுணம் என்று
சொல்லும் பொழுது, இந்த சதோகுணம் என்றாலே முழுமையான சுகம் அதாவது
முழு உலகமே சதோ குணமாக இருப்பதாகும் என்று விவேகம் சொல்கிறது.
யார் உண்மையை பேசுகிறார்களோ, அவர்கள் சதோபிரதானமாகவும், யார்
பொய் பேசுகிறார்களோ, அவர்கள் கலியுக என்ற தமோபிர தானமாகவும்
இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வாறு உலகம் நடக்காது.
நாம் சத்யுகம் என்று சொல்லும் பொழுது இதனுடைய பொருள் முழு
உலகத்திலும் சதோகுணம் நிறைந்த சதோபிரதானமாக இருக்க வேண்டும்.
ஆமாம், ஒரு காலம் அவ்வாறு சதோபிரதானமாக இருந்தது, அப்பொழுது
முழு உலகமும் சதோகுண முடையவர்களாக இருந்தார்கள். இப்பொழுதோ
சத்யுகம் இல்லை, இப்பொழுது கலியுகமாக நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது, முழு உலகமும் தமோபிர தானத்தின் இராஜ்யம்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தமோகுணம் நிறைந்த நேரத்தில்,
சதோகுணம் எங்கிருந்து வரும்! இப்பொழுது காரிருள், இதை
பிரம்மாவின் இரவு என்று சொல்லப் படுகிறது. பிரம்மாவின் பகல்
சத்யுகம் என்றும், பிரம்மாவின் இரவு கலியுகமாகும், இவர்கள்
இருவரும் சந்திக்க முடியாது.
2. கலியுகம் என்ற சாரமற்ற உலகத்திலிருந்து சத்யுகம் என்ற சாரம்
நிறைந்த உலகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்வது, ஒரு
பரமாத்மாவின் வேலையாக இருக்கிறது: நாம் கலியுகத்தை சாரமற்ற
உலகம் என்று ஏன் சொல்கிறோம்? ஏனெனில் இந்த உலகத்தில் எந்தவித
சாரமும் இல்லை, அதாவது எந்தவொரு பொருளிலும் சக்தி இல்லை,
சுகம்-சாந்தி-தூய்மை இல்லை, அவையனைத்தும் இந்த உலகத்தில் ஒரு
காலத்தில் சுகம்- சாந்தி-தூய்மை இருந்தது. இப்பொழுது அந்தளவு
சக்தி இல்லை, ஏனெனில் இந்த உலகத்தில் 5 பூதங்களின் (விகாரங்கள்)
தாக்கம் ஏற்பட்டிருக்கிறது, ஆகையால் தான் இந்த உலகத்தை பயத்தின்
கடல் அதாவது கர்மபந்தனத்தின் கடல் என்று சொல்கிறார்கள், ஆகையால்
தான் மனிதர் துக்கத்தில் இருக்கிறார்கள், எங்களை பயத்தின்
கடலிலிருந்து அக் கûரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று
பரமாத்மாவை அழைக் கிறார்கள், ஏதோ ஒரு காலத்தில் பயமற்ற தைரியம்
நிறைந்த உலகம் இருந்தது என்று இதன் மூலம் நிரூபணம் ஆகிறது இந்த
உலகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள் அதனால் தான் இந்த உலகத்தை
பாவத்தின் கடல் என்று சொல்லபடுகிறோம். இதிலிருந்து விடுபட்டு
புண்ணிய ஆத்மாக்கள் இருக்கக் கூடிய உலகத்திற்கு செல்ல விருப்பம்
ஏற்படுகிறது. எனவே இதே பூமியில் உலகம் இரண்டு இருக்கிறது, ஒன்று
சத்யுகம் சாரம் நிறைந்த உலகம், மற்றொரு உலகம் கலியுகம்
சாரமில்லாத உலகமாக இருக்கிறது. இரண்டு உலகங்களுமே இதே உலகத்தில்
தான் இருக்கிறது இப்பொழுது பரமாத்மா அந்த சாரம் நிறைந்த உலகத்தை
ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். நல்லது ஒம்சாந்தி.
அவ்யக்த இஷாரா - நிச்சயத்தின் அஸ்திவாரத்தை உறுதியாக்கி சதா
பயமற்றவராக, கவலையற்றவராக இருங்கள்
எப்படி ஞானத்தின் பாடம் இருக்கிறதோ அதே போல சேவையினுடையதும்
பாடம் இருக்கிறது. யார் இதில் விசுவாசத்துடனும்
நிச்சயபுத்தியுடனும் இருக்கிறார்களோ அவர்கள் முன்னால் நம்பரில்
போக முடியும். காலை முதல் இரவு வரை உங்களது நிகழ்ச்சி நிரலை
நிச்சயித்து கொள்ளுங்கள். தினசரி குறிப்பேடு அமைத்து
கொள்ளுங்கள். ஏனெனில் பொறுப்புள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே
யார் எந்த அளவிற்கு பெரிய மனிதர் களாக இருப்பார்களோ அந்த
அளவிற்கு அவர்களது தினசரி அமைக்கப்பட்டு இருக்கும்.