10-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்க வேண்டும். உயர்வானவர் ஆகி பிறரையும் உயர்வானவராக ஆக்குவதற்காக உங்களுக்கு உயர்ந்த வழி கிடைக்கிறது.

கேள்வி:
இரக்க மனமுள்ள குழந்தைகளின் உள்ளத்தில் என்ன அலை வீசுகிறது? அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
இரக்க மனமுள்ள குழந்தைகளின் மனம் நாடுகிறது - நாம் கிராமம் கிராமமாகச் சென்று சேவை செய்வோம். இன்றைய நாட்களில் பாவம் அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர், அவர்களிடம் சென்று மகிழ்ச்சியான செய்தி சொல்வோம் - உலகில் தூய்மை, சுகம் மற்றும் அமைதியின் தெய்வீக சுயராஜ்ஜியம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இது அதே மகாபாரதச் சண்டை, அந்த சமயம் தந்தையும் இருந்தார், இப்போதும் கூட தந்தை வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நாம் ஈஸ்வரியக் குழந்தைகள் என கண்டிப்பாக புரிந்து கொள்கிறீர்கள். நிச்சயமாக தம்மை ஆத்மா என்றே புரிந்து கொள்வீர்கள். சரீரம் இருக்கிறது, அப்போது அதன் மூலம் ஆத்மா கேட்கிறது. தந்தை இந்த சரீரத்தை கடனாகப் பெற்றிருக்கிறார், அப்போது பேசுகிறார். நாம் ஈஸ்வரிய குழந்தைகள் மற்றும் சம்பிரதாயத்தவர்கள், பிறகு நாம் தெய்வீக சம்பிரதாயத்தவராக ஆகப் போகிறோம். சொர்க்கத்தின் எஜமானாக ஆகிறவர்களே தேவதைகள் தான். நாம் மீண்டும் 5 ஆயிரம் வருடங் களுக்கு முன்பு போல தெய்வீக சுயராஜ்ஜியத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பிறகு நாம் தேவதைகள் ஆகிவிடுவோம். இந்த சமயத்தில் முழு உலகமும் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக உலகத்தில் அனைத்து மனிதர்களும் ஒருவர் மற்றவருக்கு துக்கத்தைத்தான் கொடுக் கின்றனர். அவர்களுக்கு சுகதாமமும் உருவாகும் என்பதே தெரியாது. பரமபிதா பரமாத்மாவே வந்து அனைவரையும் சுகமிக்கவர்களாக, அமைதி நிறைந்தவர்களாக ஆக்கி விடுகிறார். இங்கேயோ வீடுகள் தோறும் ஒருவர் மற்றவர்களுக்கு துக்கம்தான் கொடுக்கின்றனர். முழு உலகிலும் துக்கமே துக்கம்தான். தந்தை நம்மை 21 பிறவிகளுக்கு எப்போதும் சுகம் மிக்கவர்களாக ஆக்குகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்திருக்கிறீர்கள். எப்போதிலிருந்து துக்கம் தொடங்கியது, பிறகு எப்போது முடிகிறது என்ற சிந்தனை வேறு யாருடைய புத்தியிலும் இருக்காது. நாம் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவராக இருந்தோம் என்பது உங்களுடைய புத்தியில்தான் உள்ளது, பார்க்கப் போனால் முழு உலகின் மனிதர்கள் அனைவரும் ஈஸ்வரிய சம்பிரதாயம் தான். அனைவரும் அவரை தந்தை என்று சொல்லி அழைக்கின்றனர். சிவபாபா நமக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் என இப்போது குழந்தைகள் அறிவார்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானுடையது உயர்ந்ததிலும் உயர்ந்த வழி ஆகும். அவருடைய கதி(நிலை), வழி தனிப் பட்டது என பாடவும் படுகிறது. சிவபாபாவின் ஸ்ரீமத் நம்மை என்னவாக இருந்து என்னவாக ஆக்கி விடுகிறது. சொர்க்கத்தின் எஜமான். மற்ற மனிதர்கள் நரகத்தின் எஜமானாகத்தான் ஆக்குகின்றனர். இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். இது நிச்சயம் அல்லவா. நிச்சய புத்தியுள்ளவர்கள் தான் இங்கே வருகின்றனர், மற்றும் பாபா நம்மை மீண்டும் சுகதாமத்தின் எஜமானாக ஆக்குகிறார். நாம்தான் 100 சதவிகிதம் தூய்மையான இல்லற மார்க்கத்தவர்களாக இருந்தோம். இந்த நினைவு வந்துள்ளது. 84 பிறவிகளின் கணக்கும் உள்ளதல்லவா! யார் யார் எத்தனை பிறவிகள் எடுக் கின்றனர். பிறகு வரக்கூடிய தர்மத்தவர்களின் பிறவிகளும் கொஞ்சமாக இருக்கும். குழந்தை களாகிய நீங்கள் நாம் ஈஸ்வரிய சந்ததியினர் என்ற நம்பிக்கையை இப்போது வைக்க வேண்டும். அனைவரையும் உயர்வானவர்களாக ஆக்குவதற்கு நமக்கு உயர்ந்த வழி கிடைக்கிறது. நம்முடைய அதே தந்தை நமக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறார். வேத சாஸ்திரம் முதலான அனைத்தும் பகவானைச் சந்திப்பதற்கான வழி என்று மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர், மேலும் பகவான் கூறுகிறார் - இவைகளின் மூலமாக யாரும் என்னை சந்திப்பதில்லை. நான்தான் வருகிறேன், எனவேதான் என்னுடைய ஜெயந்தியையும் கொண்டாடுகின்றனர், ஆனால் எப்போது மற்றும் யார் சரீரத்தில் வருகிறேன் என்பது பிராமணர்களைத் (உங்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்க வேண்டும். உலகில் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கின்றனர். அந்த மனிதர்கள் விகாரத்தில் செல்வது துக்கத்தைக் கொடுப்பது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் இது துக்கத்திலேயே மிகுந்த கடும் துக்கம் என்பதை அறிவீர்கள். தூய்மையாக இருக்கும் குமாரியை தூய்மையற்றவராக ஆக்குகின்றனர். நரகவாசியாக்குவதற்காக எவ்வளவு சடங்குகள் செய்கின்றனர். இங்கேயோ அப்படிப்பட்ட உபத்திரவம் செய்யும் விசயம் எதுவும் இல்லை. நீங்கள் மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். அனைவரும் குஷியாக இருக்கிறீர் கள், முழு உலகையும் சதா சுகம் மிக்கவராக ஆக்குகின்றீர்கள். உங்களுடைய மதிப்பு சிவசக்தி களின் ரூபத்தில் இருக்கிறது. உங்களுக்கு முன்னால் இலட்சுமி நாராயணருடைய மதிப்பு ஒன்றுமே இல்லை. சிவசக்திகளின் பெயர்தான் புகழ் வாய்ந்ததாக உள்ளது, தந்தை எப்படி சேவை செய்தாரோ - அனை வரையும் தூய்மையாக்கி சதா சுகம் மிக்கவராக ஆக்கினார் - அப்படி நீங்கள் கூட தந்தைக்கு உதவியாளராகி யுள்ளீர்கள். ஆகையால் சக்திகள், பாரதமாதாக்களாகிய உங்களுக்கு மகிமை உள்ளது. இந்த லட்சுமி நாராயணர் இராஜா-இராணி மற்றும் பிரஜைகள் அனைவரும் சொர்க்கவாசிகள். அது பெரிய விஷயமா என்ன? அவர்கள் சொர்க்கவாசிகளாக இருப்பது போல இங்குள்ள இராஜா இராணி அனைவரும் நரகவாசிகள். அப்படிப்பட்ட நரகவாசிகளை நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆக்குகிறீர்கள். மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. முற்றிலும் துச்ச (கீழான) புத்தியுள்ளவர்கள். என்னென்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு சண்டைகள் முதலானவை உள்ளன. அனைத்து விசயங்களிலும் துக்கமே துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். சத்யுகத்தில் அனைத்து சூழ்நிலையிலும் சுகமே சுகம்தான் இருக்கும். இப்போது அனைவருக்கும் சுகத்தைக் கொடுப்பதற் காகத்தான் பாபா உயர்ந்த வழி கொடுக்கிறார். ஸ்ரீமத் பகவானுடைய மஹா வாக்கியம் என்று பாடவும் செய்கின்றனர். ஸ்ரீமத் மனிதருடைய வாக்கியம் அல்ல. சத்யுகத்தில் தேவதைகளுக்கு வழி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இங்கே உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. தந்தையுடன் கூட நீங்களும் சிவசக்திகள் என பாடப்படுகிறீர்கள். இப்போது மீண்டும் அந்த நடிப்பு நடைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தந்தை கூறுகிறார் – குழந்தை களாகிய நீங்கள் மனம், சொல், செயலால் அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். அனை வருக்கும் சுகதாமத்தின் வழி காட்ட வேண்டும். உங்கள் தொழிலே இதுதான். சரீர நிர்வாகத் திற்காக ஆண்கள் தொழில் செய்யத்தான் வேண்டும். மாலை நேரத்தில் தேவதைகள் ஊர்வலமாக வெளியில் வருகின்றனர் என சொல்கின்றனர். இப்போது தேவதைகள் இங்கே எங்கிருந்து வந்தனர்? ஆனால் இந்த சமயத்தை சுத்தமானது என்று சொல்கின்றனர். இந்த சமயத்தில் அனை வருக்கும் ஓய்வும் கிடைக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் நடந்து, சுற்றியபடி, எழுந்து அமர்ந்தபடி நினைவு செய்ய வேண்டும். அவ்வளவுதான், எந்த தேகதாரிக்கும் தொண்டு முதலானது செய்யக் கூடாது. திரௌபதியின் காலை அமுக்கினார் என தந்தை பற்றிய பாடல் உள்ளது. இதன் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. ஸ்தூலத்தில் காலை அமுக்கி விடும் விசயம் அல்ல. பாபாவிடம் மூதாட்டிகள் முதலானவர்கள் நிறைய பேர் வருகின்றனர், பக்தி செய்து செய்து களைத்து விட்டனர் என அறிவார். அரைக் கல்ப காலம் நிறைய அடி வாங்கினார்கள் அல்லவா. ஆக இந்த கால் அமுக்குவது என்ற விசயத்தை எடுத்துக் கொண்டார்கள். இப்போது கிருஷ்ணர் எப்படி காலை அமுக்குவார்? நன்றாக இருக்குமா? நீங்கள் கிருஷ்ணரை கால் அமுக்க வைப்பீர் களா? கிருஷ்ணரைப் பார்க்கும் போதே அவர்கள் பிரமித்துப் போவார்கள். அவரிடம் மிகவும் ஈர்ப்புத் தன்மை இருக்கும். கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த விசயமும் புத்தியில் இருப்பதில்லை. அவர்தான் அனைவரையும் விட தேஜோமயமானவர் (பிரகாச மானவர்). குழந்தையாகிய கிருஷ்ணர் பிறகு முரளி வகுப்பு நடத்தினார் என்றால் விசயமே பொருத்தமானதாக இல்லை. இங்கே நீங்கள் சிவபாபாவை எப்படி சந்திப்பீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் பேச வேண்டி யிருக்கிறது, சிவபாபாவை நினைவு செய்து பிறகு இவரிடம் வாருங்கள் என்று. குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும் - 21 பிறவிகளுக்கு நம்மை சிவபாபா சுக மிக்கவர்களாக ஆக்குகிறார். இப்படிப்பட்ட தந்தையின் மீது பலியாக வேண்டும். நல்ல குழந்தைகள் யாராவது இருந்தால் தந்தை பலியாகி விடுகிறார். தந்தையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுகின்றனர். சில குழந்தைகள் இப்படியும் இருக்கின்றனர், தந்தையையே இரத்தம் சிந்த வைத்து விடுகின்றனர். இங்கேயோ நீங்கள் மிகவும் அன்பானவர்களாக ஆக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. இரக்கமனமுள்ள குழந்தைகளுக்கு நாம் கிராமம் கிராம மாகச் சென்று சேவை செய்வோம் என்று மனம் விரும்புகிறது. இன்றைய நாளில் பாவம் அவர்கள் மிகவும் துக்கமுற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் சென்று குஷி நிறைந்த செய்தியைச் சொல்லுங்கள் - உலகில் தூய்மை, சுகம், அமைதி நிறைந்த தெய்வீக சுயராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இது அதே மஹாபாரதச் சண்டை. அந்த சமயத்தில் தந்தையும் இருந்தார். இப்போதும் கூட தந்தை வந்து விட்டுள்ளார். பாபா நம்மை புருஷோத்தமர்களாக ஆக்கிக் கொண்டி ருக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். இது புருஷோத்தம சங்கமயுகமேயாகும். நாம் எப்படி உத்தம புருஷர்களாக ஆகிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய நோக்கம் என்ன என உங்களிடம் கேட்கிறார்கள். மனிதரிலிருந்து தேவதைகளாக வேண்டும் எனச் சொல்லுங்கள். தேவதைகள் என்றாலே புகழ் வாய்ந்தவர்கள். தேவதைகளின் பக்தர்களுக்குப் புரிய வையுங்கள் என பாபா சொல்கிறார். பக்தியும் கூட நீங்கள்தான் முதன் முதலாக சிவனுடையதை தொடங்கினீர்கள், பிறகு தேவதைகளுடையது. ஆக, முதன் முதலாக சிவபாபாவின் பக்தர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சொல்லுங்கள் - என்னை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா சொல்கிறார். சிவனுடைய பூஜை செய்கின்றனர், ஆனால் தந்தை பதீத பாவனர் என்பது புத்தியில் வருவதில்லை. பக்தி மார்க்கத்தில் பாருங்கள் எவ்வளவு அடி வாங்கு கிறார்கள் என்று. சிவலிங்கத்தை வீட்டில் கூட வைக்க முடியும். அவருக்கு பூஜை செய்ய முடியும், பிறகு அமர்நாத், பத்ரிநாத் முதலான இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஆனால் பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் கண்டிப்பாக அடி வாங்க வேண்டியுள்ளது. உங்களை அதிலிருந்து விடுவிக்கிறார். நீங்கள் சிவசக்தியர், சிவனின் குழந்தைகள். நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியை எடுக்கிறீர்கள். அதுவும் நினைவின் மூலம் கிடைக்கும். பாவ கர்மங்கள் அழியும். பதீத பாவனர் தந்தை அல்லவா! நினைவின் மூலம் தான் நீங்கள் விகர்மங்களை வென்றவர்களாக தூய்மை யானவராக ஆகிறீர்கள். அனைவருக்கும் இந்த வழியைக் காட்ட வேண்டும். நீங்கள் இப்போது இராமனுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். இராமராஜ்யத்தில் சுகம் உள்ளது, இராவண இராஜ்யத்தில் துக்கம் உள்ளது. பாரதத்தில்தான் அனைவரின் சித்திரங்கள் (சிலைகள்) உள்ளன, அவர் களுடைய பூஜை இவ்வளவு நடக்கிறது. அளவற்ற கோவில்கள் உள்ளன. சிலர் அனுமனின் பூஜாரிகளாக உள்ளனர், சிலர் வேறு யாருக்கோ! இவர்கள் குருட்டு நம்பிக்கையாளர்கள் எனப்படுகின்றனர். நாமும் குருடர்களாக இருந்தோம் என நீங்கள் அறிவீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரன் இவர்கள் எல்லாம் யார், என்ன என்பதெல்லாம் இவருக்கும் (பிரம்மாவுக்கும்) தெரிந்திருக்கவில்லை. பூஜைக்குரியவர்களே பிறகு பூஜாரிகள் ஆகினார்கள். சத்யுகத் தில் பூஜைக்குரியவர்கள் இருக் கின்றனர், இங்கே பூஜாரிகள். தந்தை எவ்வளவு நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். பூஜைக் குரியவர்கள் இருப்பதே சத்யுகத்தில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே பூஜாரிகள் இருப்ப தால் பூஜைதான் செய்கின்றனர். நீங்கள் சிவசக்திகள். இப்போது நீங்கள் பூஜாரிகளும் அல்ல, பூஜைக்குரியவர்களும் அல்ல. தந்தையை மறந்து போய்விடாதீர்கள். இது சாதாரண உடல் அல்லவா! இதில் உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை வருகிறார். நீங்கள் தந்தையை உங்களிடம் வருவதற்காக அழைப்பு விடுக்கிறீர்கள் அல்லவா! பாபா வாருங்கள், நாங்கள் தூய்மையற்றவர் ஆகிவிட்டோம். பழைய பதீத உலகம், பதீத சரீரத்தில் வந்து எங்களை பாவனமாக்குங்கள் என்று. குழந்தைகள் அழைப்பு விடுக்கின்றனர். இங்கே யாரும் தூய்மையானவர் இல்லவே இல்லை. கண்டிப்பாக அனைத்து பதீதர்களையும் தூய்மைப்படுத்தி அழைத்துச் செல்வார் அல்லவா!. ஆக, அனைவரும் சரீரத்தை விட வேண்டியுள்ளது அல்லவா! மனிதர்கள் சரீரத்தை விடுகிறார்கள் என்றால், எவ்வளவு கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சியுடன் செல்கிறீர்கள். இப்போது உங்களுடைய ஆத்மா (நினைவின்) ரேஸில் (ஓட்டப் பந்தயத்தில்) - ஈடுபட்டிருக்கிறீர்கள். பார்க்கலாம், யார் சிவபாபாவை அதிகமாக நினைவு செய்கிறீர்கள் என்று. சிவபாபாவின் நினைவில் இருந்து இருந்தே சரீரம் விடுபட்டது என்றால் ஆஹா சௌபாக்கியம்! படகே கரை சேர்ந்து விட்டது. இப்படிப்பட்ட முயற்சி செய்யுங்கள் என்று அனைவருக்கும் தந்தை சொல்கிறார். சந்நியாசிகளும் கூட சிலர் இப்படி இருக்கின்றனர் - பிரம்மத்தில் ஐக்கியமா வதற்காக பயிற்சி செய்கின்றனர். பிறகு கடைசி காலத்தில் அப்படியே அமர்ந்தபடி சரீரத்தை விட்டு விடு கின்றனர். அமைதி நிலவுகிறது.

சுகத்தின் நாட்கள் பிறகு வரும். இதற்காகத்தான் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் - பாபா நாங்கள் உங்களிடம் வருவோம். உங்களையே நினைவு செய்து செய்து எங்களுடைய ஆத்மா தூய்மை யடையும்போது நீங்கள் எங்களை உடன் அழைத்துச் செல்வீர்கள். முன்னர் காசியில் கல்வெட்டில் (கிணற்றில்) விழுந்து இறந்த போது மிகவும் அன்புடன் இறந்து கொண்டிருந்தனர், அவ்வளவுதான், நாம் முக்தியடைந்து விடுவோம் என்று நினைத்தனர். இப்போது நீங்கள் தந்தையை நினைவு செய்தபடி சாந்தி தாமத்திற்குச் சென்று விடுகிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள் எனும்போது இந்த நினைவின் சக்தியின் மூலம் பாவங்கள் நீங்கும், அவர்கள் தம்முடைய பாவங்கள் நீரின் மூலம் நீங்கும், முக்தி கிடைத்து விடும் எனப் புரிந்து கொள்கின்றனர். அது ஏதும் யோகபலம் அல்ல என தந்தை புரிய வைக்கிறார். பாவங்களின் தண்டனை அனுபவித்து அனுபவித்து பிறகு சென்று பிறவி எடுக்கின்றனர், பிறகு பாவங்களின் கணக்கு புதிதாக தொடங்கு கிறது. கர்மம், அகர்மம், விகர்மத்தின் கதியை(நிலை) தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். இராம ராஜ்யத்தில் கர்மங்கள், அகர்மங்களாக ஆகின்றன, இராவண இராஜ்யத்தில் கர்மங்கள் விகர்மங்கள் ஆகி விடுகின்றன. அங்கே விகாரம் எதுவும் இருப்பதில்லை.

தந்தை நமக்கு அனைத்து யுக்திகள், அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறார் என இனிமையிலும் இனிமையான பூக்களைப் போன்ற குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதே முக்கியமான விசயமாகும். பதீத பாவன தந்தை உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார், எவ்வளவு பணிவு நிறைந்தவராக இருக்கிறார். முற்றிலும் சாதாரணமாக நடந்தபடி இருக்கிறார். பாப்தாதா இருவருமே குழந்தைகளின் சேவகர்கள். உங்களுடைய சேவகர் கள் இருவர் உள்ளனர் - உயர்ந்தவரிலும் உயர்ந்த சிவபாபா பிறகு பிரஜாபிதா பிரம்மா. அந்த மனிதர்கள் திரிமூர்த்தி பிரம்மா எனச் சொல்லி விடுகின்றனர். அர்த்தத்தை அறிவதில்லை. திரிமூர்த்தி பிரம்மா என்ன செய்கிறார் என கொஞ்சமும் தெரியாது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் ஈஸ்வரிய வாரிசுகள், நாம் உயர்ந்த வழிப்படி நடக்க வேண்டும் என்ற நிச்சயத்தில் எப்போதும் இருக்க வேண்டும். அனைவருக்கும் சுகத்திற்கான வழியைக் காட்ட வேண்டும்.

2. நல்ல குழந்தைகளாகி தந்தை மீது பலியாக வேண்டும், தந்தையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும். பாப்தாதா பணிவு மிக்கவராகவும், அகங்காரமற்றவராகவும் இருப்பது போல தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும்.

வரதானம்:
சுய முன்னேற்றம் மூலம் சேவையில் முன்னேற்றம் செய்து கொண்டிருக்கக்கூடிய உண்மையான சேவாதாரி ஆவீர்களாக.

சுய முன்னேற்றம் சேவையில் முன்னேற்றத்திற்கான விசேஷ ஆதாரம் ஆகும். சுய முன்னேற்றம் குறைவாக இருக்கிறது என்றால் சேவையும் குறைவாக இருக்கும்.எவரொருவருக்கும் வாயால் அறிமுகம் கொடுப்பது மட்டும் சேவை கிடையாது. ஆனால் ஒவ்வொரு செயல் மூலமாக சிறந்த செயல் புரிவதற்கான தூண்டுதல் கொடுப்பது கூட சேவை ஆகும். யார் மனம் சொல் செயலில் எப்பொழுதும் சேவையில் மும்முரமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சேவை மூலமாக சிறந்த பாக்கியத்தின் அனுபவம் ஏற்படுகிறது. எவ்வளவு சேவை செய்கிறார்களோ அவ்வளவு சுயம் தாங்களும் முன்னேறுகிறார்கள்.தங்களது சிறந்த செயல்கள் மூலமாக சேவை செய்பவர்கள் எப்பொழுதும் (பிரத்யட்ச) கண்கூடான பலனை அடைந்து கொண்டே இருப்பார்கள்.

சுலோகன்:
(தந்தைக்கு) சமீபத்தில் வர வேண்டும் என்றால், யோசிப்பது பேசுவதுமற்றும் செய்வது மூன்றையும் சமமானதாக ஆக்குங்கள்.

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

ஒருமுக நிலையின் ஆதாரம் அகநோக்கு தன்மை ஆகும்.உள்முகமாக இருக்கும் போது சூட்சும சக்திகளின் லீலைகளை அனுபவம் செய்வீர்கள்.ஆத்மீக ஸ்திதியில் இருந்து ஆத்மாக்களை அழைப்பது, ஆத்மாக்களுடன் ஆன்மீக உரையாடல் நிகழ்த்துவது, ஆத்மாக்களின் சம்ஸ்கார சுபாவங்களை பரிவர்த்தனை செய்வது, தந்தையுடன் ஆத்மாக்களின் தொடர்பை இணைக்கச் செய்வது -அப்பேர்ப்பட்ட ஆன்மீக நிலையின் அனுபவம் ஏற்படும்.