16-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நமக்கு எந்தவொரு தேகதாரியும் கற்பிக்கவில்லை, அசரீரியான தந்தை சரிரீரத்தில் பிரவேசமாகி நமக்காகவே கற்பிக்க வந்திருக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் எப்பொழுதும் இருங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் ஏன் கிடைத் திருக்கிறது?

பதில்:
சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தைக் காண்பதற்காக நமக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இந்த கண்கள் மூலமாக காணும் பழைய உலகம், உற்றார்-உறவினர்கள் ஆகிய அனைத்திலிருந்தும் புத்தியை விலக்க வேண்டும். குப்பையிலிருந்து வெளியேற்றி மலர் (தேவதை) போன்று ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கிறார், ஆகவே அப்படிப்பட்ட தந்தைக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்காக சிவபகவான் வாக்கியம். சிவ பகவான் சத்தியமான பாபா என அழைக்கப் படுகிறார், ஏனென்றால் படைப்பவராக இருக்கிறார் அல்லவா! இப்பொழுது குழந்தைகள், உங்களை பகவான், பகவதியாக ஆக்குவதற்கு, பகவான் கற்பிக்கின்றார். இதனை ஒவ்வொருவரும் நன்றாக புரிந்துள்ளீர்கள், தனது படிப்பு, தனது ஆசிரியர் மற்றும் படிப்பின் ரிசல்ட் பற்றி தெரியாமல் எந்த மாணவரும் இருக்க மாட்டார்கள். பகவான் கற்பிக்கின்றார், ஆகவே, குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்! இந்த மகிழ்ச்சி ஏன் நிலையாக இருப்பதில்லை? நமக்கு எந்த தேகதாரியும் படிப்பிக்க வில்லையென உங்களுக்குத் தெரியும். அசரீரியான தந்தை சரீரத்தில் பிரவேசம் செய்து குழந்தைகள் உங்களுக்குப் கற்பிக்க வந்திருக்கிறார், பகவான் வந்து கற்பிக் கின்றார் என்பது வேறு யாருக்கும் தெரியாது. நாம் பகவானின் குழந்தைகள், அவரே நமக்கு படிப்பிக்கின்றார், அவரே ஞானக்கடலாக இருக்கின்றார் என நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபாவின் எதிரில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு இப்பொழுது மட்டுமே ஏற்படுகிறது, இதனை மறக்கக்கூடாது. ஆனால், மாயா மறக்க வைக்கின்றது. பகவான் நமக்குக் கற்பிக்கின்றார் என்ற நஷா இருக்க வேண்டும். அவரை நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால், சிலர் முற்றிலும் மறந்து விடுகின்றனர். துளியளவும் புரியாமல் இருக் கின்றனர். நிறைய குழந்தைகள் மறந்து விடுகின்றனர் என பகவான் தானே கூறுகின்றார். மறக்க வில்லையெனில் அந்த மகிழ்ச்சி இருக்குமல்லவா! நாம் பகவானின் குழந்தைகள், அவரே நமக்கு கற்பிக்கின்றார். ஆனாலும், மாயா அவ்வளவு சக்திசாலியாக இருக்கிறது, முற்றிலும் மறக்க வைத்துவிடுகிறது. இந்த கண்களால் பார்க்கக்கூடிய பழைய உலகம், உற்றார் - உறவினர்களின் பக்கம் புத்தியைக் கொண்டு செல்கிறது. இப்பொழுது குழந்தைகளுக்கு தந்தை மூன்றாவது கண்ணை தருகின்றார். நீங்கள் சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள், இது துக்கமான உலகம், மிகவும் கெட்ட உலகம். பாரதம் சொர்க்கமாக இருந்தது, இப்பொழுது நரகமாக இருக்கிறது. தந்தை மீண்டும் வந்து மலராக ஆக்குகின்றார், அங்கு உங்களுக்கு 21 பிறவிகளுக்கான சுகம் கிடைக்கிறது, இதற்காகவே நீங்கள் படிக்கின்றீர்கள். ஆனால் முழுமையாகப் படிக்காத காரணத் தினால் புத்தி செல்வம் மற்றும் சொத்து போன்றவற்றில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து புத்தி வெளிவருவதில்லை. சாந்திதாமம், சுகதாமத்தை நோக்கி புத்தியைக் கொண்டு செல்லுங்கள் என தந்தை கூறுகின்றார், ஆனால் இங்கு அமர்ந்திருந்தாலும் புத்தி பழைய உலகத்திலிருந்து துண்டிக் கப்படவில்லை. நல்ல மலர் போன்று தூய்மையானவராக ஆக்குவதற்கு இப்பொழுது தந்தை வந்திருக்கிறார். பாபா நம்மை தூய்மையாக ஆக்கி தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார், ஆகவே அப்படிப்பட்ட தந்தைக்கு எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், என நீங்கள் முக்கியமாக தூய்மைக்காகத்தான் கூறுகின்றீர்கள். அப்படிப்பட்ட பாபாவிடம் முற்றிலும் பலியாக வேண்டும். பரந்தாமத்திலிருந்து வந்து குழந்தைகளாகிய நமக்கு கற்பிக்கின்றார், குழந்தை களுக்காக எவ்வளவு முயற்சி செய்கின்றார். முற்றிலும் குப்பை போன்ற உலகிலிருந்து விடுவிக்கின்றார். இப்பொழுது நீங்கள் மலராக ஆகின்றீர்கள். ஒவ்வொரு கல்பமும் நாம் அவ்வாறு மலராக (தேவதையாக) ஆகின்றோம். மனிதனை தேவதையாக ஆக்குவது வேறு யாராலும் முடியாது. இப்பொழுது நமக்கு தந்தை படிப்பிக்கின்றார். இங்கு நாம் மனிதனிலிருந்து தேவதை யாக ஆவதற்கு வந்திருக்கிறோம். இது கூட இப்பொழுதுதான் உங்களுக்குத் தெரியும். நாம் சொர்க்கவாசியாக இருந்தோம் என இதற்கு முன் நமக்குத் தெரியாது. நீங்கள் இராஜ்யம் செய்தீர் கள். பிறகு இராவணன் இராஜ்யத்தை எடுத்துக் கொண்டான் என தந்தை இப்பொழுது கூறுகின்றார். நீங்கள் மட்டுமே மிகவும் சுகத்தை அடைந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து ஏணியிலிருந்து கீழே இறங்கினீர்கள். இது தான் சீர்கெட்டுப்போன உலகம். மனிதர்கள் எவ்வளவு துக்கத்தில் இருக் கின்றனர், எவ்வளவு பேர் பட்டினியால் இறக்கின்றனர், துளியளவும் சுகம் இல்லை. எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அல்பகால சுகம் தான் இருக்கிறது. இதைத் தான் விஷம் நிறைந்த நதி போன்ற உலகம் எனக் கூறப்படுகிறது. சொர்க்கத்தில் நாம் மிகவும் சுகமாக இருப்போம். இப்பொழுது நீங்கள் கருப்பான நிலையிலிருந்து அழகாக ஆகின்றீர்கள்.

நாம் தேவதைகளாக இருந்தோம், பிறகு மறுபிறவிகள் எடுத்து விஷம் நிறைந்த (விகார) உலகத் திற்கு வந்து விட்டோம் என இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் சிவாலயம் செல்கின்றீர்கள். சிவபாபா சொர்க்கத்தை உருவாக்குகின்றார். உங்களுக்கு கற்பிக் கின்றார். ஆகவே, நல்ல முறையில் படிக்க வேண்டுமல்லவா! படித்து, சக்கரத்தைப் புத்தியில் வைத்து தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும். குழந்தைகள் நீங்கள் ஞானமும், யோகமும் நிறைந்த இனிமையானவர்கள், (ரூப் பஸந்த்) உங்களுடைய வாயிலிருந்து சதா ஞான இரத்தினங்களே வெளிவர வேண்டும், குப்பை போன்ற வார்த்தை வரக்கூடாது. நான் ரூப் பஸந்த் ஆக இருக்கிறேன், நான் பரமாத்மா, ஞானக் கடலாக இருக்கின்றேன், என்று தந்தையே சொல்கிறார், படிப்பு தான் வருமானத்திற்கு மூலதனமாக இருக்கிறது. படித்து வக்கீலாக, டாக்டராக ஆகி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், சாப்பிடக்கூட நேரம் இல்லை. நீங்களும் இப்போது படிக் கின்றீர்கள். நீங்கள் என்னவாக ஆகின்றீர்கள்? உலகிற்கு எஜமானர். ஆகவே இந்த படிப்பின் நஷா இருக்க வேண்டுமல்லவா! குழந்தைகள் உங்களிடம் இராயலாக பேசக்கூடிய பழக்கம் வேண்டும். நீங்கள் இராயலாக (அரசாள தகுதியாக) ஆகின்றீர்கள். இராஜாக்களின் நடத்தை எப்படி இருக்கும் என பாருங்கள். பாபா அனுபவசாலி அல்லவா! இராஜாக்களுக்கு காணிக்கை கொடுத்தால் அதனை ஒருபோதும் கையில் வாங்க மாட்டார்கள். வாங்குவதாக இருந்தால் செகரட்டரி யிடம் கொடுக்குமாறு சைகை காட்டுவார்கள். மிகவும் இராயலாக இருப்பார்கள். இன்னாரிடம் வாங்கினால் பிறகு திரும்ப கொடுக்க வேண்டுமென யோசிப்பார்கள். சில இராஜாக்கள் பிரஜை களிடம் எதுவும் வாங்க மாட்டார்கள். சிலர் அதிகமாகவே வாங்கிக் கொள்வார்கள். இராஜாக் களுக்குள்ளும் நிறைய வேறுபாடு இருக்கும். இப்பொழுது நீங்கள் சத்யுகத்தின் இரட்டை கிரீடத்தாரி இராஜாவாக ஆகின்றீர்கள். இரட்டை கிரீடத்திற்காக தூய்மை மிகவும் அவசியமானது. இந்த விகார உலகத்தை விட்டு விட வேண்டும். குழந்தைகள் நீங்கள் விகாரங்களை விட்டு விட்டீர்கள், விகாரிகள் யாரும் இங்கு அமர முடியாது. ஒருவேளை இங்கு வந்து அமர்ந்தால் தனக்குத்தான் நஷ்டமடைவார்கள். யாருக்கும் தெரியப் போவதில்லை, சிலர் சமாளித்து விடு கின்றனர். தந்தை பார்த்தாலும், பார்க்கா விட்டாலும் அவர்கள் தானாகவே பாவ ஆத்மாவாக ஆகி விடுகின்றனர், நீங்களும் பாவ ஆத்மாவாக இருந்தீர்கள். இப்பொழுது முயற்சி செய்து புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும். குழந்தைகள் உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைத்திருக்கிறது. இந்த ஞானத்தின் மூலமாக நீங்கள் கிருஷ்ணபுரியின் எஜமானராக ஆகின்றீர்கள். தந்தை எவ்வளவு அலங்கரிக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் கற்பிக்கின்றார், ஆகவே எவ்வளவு மகிழ்ச்சி யோடு படிக்க வேண்டும். இப்படிப்பட்ட படிப்பினை சௌபாக்கியசாலிகளே படிக்கின்றனர். மேலும் சர்டிபிகேட்டும் வாங்க வேண்டும். நீங்கள் சரியாக படிக்காமல், புத்தி அலைபாய்கின்றது என பாபாவும் கூறுவார், பிறகு என்ன ஆவீர்கள்? இவ்வாறு இருந்தால் பெயிலாகி விடுவாய் என லௌகீக தந்தையும் கூறத் தான் செய்வார். சிலர் படித்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், சிலர் அலைந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் தாய், தந்தையைப் பின்பற்ற வேண்டும். யார் நன்றாகப் படித்து, படிப்பிக்கின்றனரோ அவர்கள், இதே காரியத்தைச் செய்கின்றார்கள் கண்காட்சி யில் நிறைய பேருக்கு படிப்பிக்கின்றனர் அல்லவா! நாளடைவில் எவ்வளவு துக்கம் அதிக மாகின்றதோ அந்தளவு மனிதர்களுக்கு வைராக்கியம் ஏற்படும், பிறகு படிப்பில் ஈடுபடுவார்கள். துக்கமான நேரத்தில் பகவானை மிகவும் நினைவு செய்வார்கள். துக்கமாக, இறக்கும் நேரத்தில் ஹே இராம்! ஐயோ பகவானே! என மனிதர்கள் அலறுகின்றனர். நீங்கள் அவ்வாறு எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் மகிழ்ச்சியோடு தயாராகிக் கொண்டு இருக்கின்றீர்கள். இந்த பழைய சரீரத்தை விட வேண்டும், நாம் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு அங்கே அழகான சரீரம் கிடைக்கும். முயற்சி செய்து படிப்பிக்கின்றவர்களை விட படிப்பவர்களின் நிலை மிகவும் நன்றாக ஆகிவிடுகின்றது, அப்படியும் இருக்கின்றனர். தந்தை ஒவ்வொரு வரைப் பற்றியும் அறிந்திருக் கிறார் அல்லவா! தன்னைப் பற்றி குழந்தைகள் நீங்களே, தன்னிடம் என்ன குறை இருக்கிறது என பார்க்க வேண்டும். மாயாவின் தடைகளைக் கடந்து செல்ல வேண்டும், அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

மாயா மிகவும் சக்திசாலியாக இருக்கிறது, நம்மால் எப்படி முயற்சி செய்வது என ஒருவேளை யாரேனும் யோசித்தால், பிறகு மாயா முற்றிலும் காயாகவே (முழுமையாக) சாப்பிட்டு விடும். முதலை யானையை விழுங்கியது என்று கதை உள்ளது. மிகவும் நல்ல குழந்தைகளைக் கூட மாயா எனும் முதலை பிடித்து ஒரேயடியாக விழுங்கி விடுகிறது. பிறகு தன்னைத்தான் விடுவித்துக் கொள்ள முடியாமல் ஆகின்றனர். நாங்கள் மாயாவின் பிடியில் இருந்து விடுபட விரும்புகின்றோம் என தாமே புரிந்துள்ளனர். ஆனாலும் மாயா விடுபட விடுவதில்லை. பாபா மாயாவிடம் எங்களை பிடிக்க வேண்டாம் எனக் கூறுங்கள் என சொல்கின்றனர். அட! இது யுத்த மைதானம் அல்லவா! மைதானத்திற்கு வந்த பிறகு எங்களை தாக்குதல் செய்ய (அம்பு எய்ய) வேண்டாம் என இன்னாரிடம் கூறுங்கள் என சொல்ல முடியுமா! விளையாட வந்த பிறகு என் பக்கம் பந்து போட வேண்டாம் என சொல்வார்களா? யுத்த மைதானத்திற்கு வந்து விட்டீர்கள் சண்டையிடத்தான் வேண்டும், மாயா மிகவும் வேகமாக வீழ்த்த முயற்சி செய்யும். நீங்கள் மிகவும் உயர்ந்த பதவி பெற முடியும். பகவான் படிப்பிக்கின்றார் என்பது சிறிய விசயமா? இப்பொழுது வரிசைப்படி முயற்சியின் அனுசாரப்படி உங்களுக்கு முன்னேறும் கலை ஏற்படுகிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நமது எதிர்கால வாழ்க்கையை வைரம் போன்று ஆக்கிக் கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். தடைகளை நீக்க வேண்டும். எப்படியாவது முயற்சி செய்து தந்தையிடமிருந்து பிராப்தியை (ஆஸ்தி) அவசியம் அடைய வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு கல்பமும் நாம் தோல்வி அடைவோம். செல்வந்தர் வீட்டுக் குழந்தையாக இருந்து, அந்த தந்தை இந்தப் படிப்புக்கு தடை ஏற்படுத்தினால் நாங்கள் இந்த இலட்சக்கணக்கான செல்வத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உலக இராஜ்யத்தை அடைய வேண்டும் எனக் கூற வேண்டும். இந்த இலட்சம், கோடிப்பணம் அனைத்தும் நெருப்பில் சாம்பலாகக் கூடியது. சிலருடைய பொருள் மண்ணில் புதைந்தும், சிலருடைய பொருள் நெருப் பிலும் அழிந்துவிடும், முழு உலகமும் தீப்பற்றி எரியப் போகிறது. இது முழுவதும் இராவணனின் இலங்கையாகும். நீங்கள் அனைவரும் சீதைகள், இராமர் வந்திருக்கிறார். முழு பூமியும் ஒரு இராவண இராஜ்யத்தின் தீவு போன்றது. இராவண இராஜ்யத்தை முடிக்க வைத்து உங்களை இராம இராஜ்யத்திற்கு எஜமானராக ஆக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார். அதீந்திரிய சுகத்தைப்பற்றிக் கேட்க வேண்டுமானால் இந்த குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள் எனக் கூறப்படுகிறது, ஆகவே உங்களுக்கு மனதிற்குள் அளவற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். நீங்கள் சுகமாக இருப்பதைப் பற்றி கண்காட்சியில் கூறுகின்றீர்கள் அல்லவா! நாங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றோம். ஸ்ரீமத்படி நடந்து பாரதத்திற்கு சேவை செய்கின்றோம். எந்தளவு ஸ்ரீமத்படி நடக்கின்றீர்களோ அந்தளவு உயர்ந்த நிலை அடைவீர்கள். உங்களுக்கு பலபேர் பல வழி சொல்வார்கள், எனவே அவற்றை கண்டறிந்து தன்னைத்தான் பாது காத்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே மாயாவின் இரகசியமான பிரவேசமும் ஏற்படுகிறது. உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சி இருக்க வேண்டும், நீங்கள் உலகத்திற்கு எஜமானர் ஆகின்றீர்கள். பாபா நாங்கள் உங்களிடமிருந்து சொர்க்கத்தின் பிராப்தியை அடைய வந்திருக்கிறோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். சத்திய நாராயணன் கதையைக் கேட்டு நாங்கள் நரனிலிருந்து நாராயணராக, நாரியிலிருந்து இலட்சுமியாக ஆவோம். நீங்கள் அனைவரும் பாபா நாங்கள் உங்களிடமிருந்து முழு பிராப்தியை அடையாமல் விடமாட்டோம் என கை உயர்த்துகிறீர்கள். இல்லையெனில் ஒவ்வொரு கல்பமும் நாங்கள் இழந்துவிடுவோம் எந்த தடை வந்தாலும் நாங்கள் சமாளித்து விடுவோம், அந்தளவு தைரியம் வேண்டும். நீங்கள் முன்பு கூட அவ்வளவு தைரியத்தை காட்டியுள்ளீர்கள் அல்லவா! யாரிடமிருந்து பிராப்தி கிடைக்கிறது, அவரை விடக்கூடாது அல்லவா! சிலர் நிலைத்து விட்டனர், சிலர் வெளியேறி விட்டனர். மிகவும் நல்ல குழந்தைகளைக் கூட மாயா சாப்பிட்டு விட்டது. மாயா எனும் முதலை விழுங்கி சாப்பிட்டு விட்டது.

இப்பொழுது தந்தை ஹே! ஆத்மாக்களே, என மிகவும் அன்பாக புரிய வைக்கின்றார். நான் அழுக்கான உலகத்தை பாவனமான உலகமாக ஆக்குகின்றேன். இப்பொழுது அழுக்கான உலகத் தின் முடிவு எதிரில் இருக்கிறது. நான் உங்களை இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன். பதீத இராஜாவுக்கெல்லாம் இராஜா. ஒற்றை கிரீடம் உடைய இராஜா, இரட்டைக் கிரீடம் உடைய இராஜாக்களுக்கு ஏன் தலை வணங்குகின்றனர்? அரை கல்பத்திற்குப் பிறகு அவர்களுடைய தூய்மை நீங்கி, இராவண இராஜ்யத்தில் அனைவரும் விகாரியாக மற்றும் பூஜாரியாக ஆகி விடுகின்றனர். ஆகவே, இப்பொழுது எந்த விசயத்திலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம், மறக்க வேண்டாம், நன்றாகப் படியுங்கள் என இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக் கின்றார். தினமும் வகுப்புக்கு வரமுடியவில்லையென்றால் அதற்கு ஏற்றவாறு பாபா அனைத்து ஏற்பாடுகளும் கொடுத்திருக்கின்றார். 7 நாள் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். முரளியை சகஜ மாகப் புரிந்து கொண்டு, எங்கு சென்றாலும் இரண்டு வார்த்தையை மட்டுமாவது நினைவு செய்யுங் கள். இதுதான் மகாமந்திரமாகும். தன்னைத்தான் ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். தேக அபிமானத்தினால் பாவ கர்மம் ஏற்படுகிறது. பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் புத்தியின் அன்பை ஒரு தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும். எந்த தேகதாரியிடமும் புத்தி செல்லாமல் ஒருவரிடம் மட்டுமே ஈடுபட வேண்டும்.

கடைசி வரை நினைவு செய்வதனால் எந்த பாவமும் ஏற்படாது. இது அழுகிப்போன சரீரமாகும். இதனுடைய அபிமானத்தை விடுங்கள். நாடகம் முடிகின்றது, இப்பொழுது நம்முடைய 84 பிறவிகள் முடிகின்றது. இது பழைய ஆத்மாவின் பழைய சரீரமாகும். இப்பொழுது தமோ பிரதானத்திலிருந்து சதோபிரதானமாக வேண்டும். பிறகு சதோபிரதானமான சரீரம் கிடைக்கும். ஆத்மாவை சதோபிரதானமாக ஆக்க வேண்டும் என்ற ஈடுபாடு இருக்க வேண்டும். மனதால் என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள், இந்த ஒரு கவலை மட்டுமே இருக்க வேண்டும் என தந்தை கூறுகின்றார். பாபா நாங்கள் வெற்றி அடைந்தே காட்டுவோம் என நீங்களும் கூறுகின்றீர்கள். படிப்பவர்கள் அனைவருக்கும் ஸ்காலர்ஷிப் கிடைப்பதில்லை, இருந்தாலும் அனைவரும் மிகவும் முயற்சி செய்கின்றார்கள் அல்லவா! நாம் நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும் என நீங்களும் புரிந்துள்ளீர்கள். குறைவான பதவி ஏன் அடைய வேண்டும்? வேறு எந்த விசயத்தின் கவலையும் இல்லை. யுத்தம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பாபா நிறைய புயல், கனவு வருகிறது என கூறுகின்றனர், இதெல்லாம் வரத்தான் செய்யும். நீங்கள் ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். மாயா எதிரியின் மீது வெற்றி அடையுங்கள். சில நேரங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கனவுகள் வரும், சோர்வு ஏற்படுத்தும். இது எல்லாம் மாயாவாகும். நாம் மாயாவை வெற்றி அடைகின்றோம். அரை கல்பத்திற்கான எதிரியிடம் இருந்து இராஜ்யத்தை அடைகின்றோம், நமக்கு வேறு எந்த கவலையும் இல்லை. பலசாலிகள் ஒருபோதும் புலம்ப மாட்டார்கள். யுத்தம் செய்ய மகிழ்ச்சி யோடு செல்வார்கள். இங்கு நீங்கள் மிகவும் சௌகரியமாக தந்தையிடமிருந்து பிராப்தி அடை கின்றீர்கள். இந்த கெட்டுப்போன சரீரத்தை விடத்தான் வேண்டும். இப்பொழுது இனிமையான அமைதியான வீட்டிற்குச் செல்ல வேண்டும். நான் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறேன் என தந்தை கூறுகின்றார். என்னை நினைவு செய்தால் பாவனமாவீர்கள். அழுக்கான ஆத்மா வீட்டிற்குச் செல்ல முடியாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தை யுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் புத்தியின் அன்பை ஒரு தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும், இந்த அழுகிப்போன சரீரத்தின் மீதான அபிமானத்தை விட்டு விட வேண்டும்.

2. நாம் போர் வீரர்கள் என்ற நினைவில் இருந்து மாயா எனும் எதிரியின் மீது வெற்றி பெற வேண்டும், அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. மாயா இரகசியமான ரூபத்தில் பிரவேசமாகின்றது. எனவே, அதனை கண்டறிந்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
மனம்,சொல், செயலில் முழுமையான தூய்மையெனும் மதிப்பெண் பெற்று கீழ்படிதலில் முதல் நம்பர் ஆகுக !

மனத்தூய்மையென்பது எண்ணத்தாலும் தூய்மையல்லாத சம்ஸ்காரம் வெளிப்படக் கூடாது. எப்போதும் ஆத்மீக சொரூபம் அதாவது சகோதரர், சகோதரர் எனும் உன்னத நினைவு இருப்பதாகும். சொல்லில் எப்போதும் சத்யமும், இனிமையும் வேண்டும். செயலில் எப்போதும் பணிவு, திருப்தி, இன்முகம் வேண்டும் இதன் அடிப்படை யிலேயே நம்பர் கிடைக்கின்றது. அத்தகைய முழுத் தூய்மையை கையாளுவதில் கீழ்படிகின்ற குழந்தைகளின் மகிமையை தந்தையே பாடுகின்றார். தனது ஒவ்வொரு செய-லும் தந்தையின் செயலை உறுதி செய்பவரே அருகேயுள்ள ரத்தினமாவார்.

சுலோகன்:
சொந்த பந்தங்களின் உறவில் மற்றும் மனோ நிலையில் இலகுவாக இருங்கள், தினசரி வாழ்வில் அல்ல.

அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக நிலையிலிருக்கும் பயிற்சி செய்க, உள்முகமாகுக.

உள்முகமாக இருக்கும் ஆத்மாக்கள் வருகின்ற சூழ்நிலை எதுவாயினும் நன்மை, தீமை எந்த சமயம், சூழ் நிலையிலும் தன்னைத்தானே அனுசரித்துச் செல்வார்கள். தனிமையில் இருப்பினும் குழுவில் இருப்பினும் அனுசரித்துச் செல்வது, இதுவே பிராமண வாழ்க்கை.