20-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய
உங்களுக்கு அழிவற்ற வருமானம் பெற வைப்பதற்காக தந்தை
வந்திருக்கின்றார், இப்பொழுது நீங்கள் ஞான இரத்தினங்களால் எந்த
அளவு வருமானம் அடைய விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு அடைய
முடியும்.
கேள்வி:
அசுர சம்ஸ்காரங்களை மாற்றி
தெய்வீக சம்ஸ்காரங்களை உருவாக்குவதற்கு எந்த விசேஷ முயற்சி
செய்ய வேண்டும்?
பதில்:
சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு
எவ்வளவு முடியுமோ ஆத்ம அபிமானிக்கான முயற்சி செய்யுங்கள். தேக
அபிமானத்தில் வருவதனால் தான் அசுர சம்ஸ்காரங்கள் ஏற்படுகின்றன.
தந்தை அசுர சம்ஸ்காரங்களை தெய்வீக சம்ஸ்காரங்களாக
மாற்றுவதற்காக வந்திருக்கின்றார், முதலில் நான் ஆத்மா, பிறகு
தான் இந்த சரீரம் என்ற முயற்சி செய்யுங்கள்.
பாடல்:
நீங்கள் இரவெல்லாம் தூங்கிக்
கழித்தீர்கள் .........
ஓம் சாந்தி.
இந்தப் பாட்டை குழந்தைகள் பலமுறை கேட்டிருக்கிறீர்கள். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே
இருக்கின்றார் - இது இழப்பதற்கான நேரம் அல்ல. மிக அதிகமான
வருமானம் சேமிக்கக் கூடிய நேரம் இதுவாகும். வருமானம்
செய்விப்பதற் காகவே தந்தை வந்திருக் கின்றார். வருமானமும்
அளவற்று இருக்கிறது, யாருக்கு எவ்வளவு வருமானம் அடைய வேண்டுமோ
அடைய முடியும். இது அழிவற்ற ஞான இரத்தினங்களினால் புத்தி என்ற
பையை நிறைக்கக் கூடிய வருமானமாகும். இது எதிர்காலத்திற்கானது
ஆகும். அது பக்தி, இது ஞானமாகும். எப்பொழுது இராவண இராஜ்யம்
ஆரம்பமாகிறதோ அப்பொழுது தான் பக்தியும் ஆரம்பமாகிறது என்பதும்
மனிதர்களுக்குத் தெரியாது. எப்பொழுது தந்தை வந்து இராம இராஜ்யம்
ஸ்தாபனை செய்கிறாரோ அப்பொழுது தான் ஞானம் ஆரம்பமாகிறது. ஞானம்
புது உலகிற்காக, பக்தி பழைய உலகத்திற்காக. இப்பொழுது தந்தை
கூறுகின்றார் - முத-ல் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள
வேண்டும். முத-ல் ஆத்மா, பிறகு தான் சரீரம் என்பது குழந்தை
களாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. நாடகப்படி மனிதர்கள்
அனைவரும் தவறானவர்களாக ஆகிவிட்டனர், அதனால் தான் முத-ல் நான்
உடல், பிறகு தான் ஆத்மா என்று தலைகீழாகப் புரிந்து கொள்கின்றனர்.
இது அழியக் கூடியது என்று தந்தை கூறுகின்றார். இதை நீங்கள்
எடுத்துக் கொள்கிறீர்கள், பிறகு விட்டு விடுகிறீர்கள்.
சம்ஸ்காரம் ஆத்மாவில் இருக்கிறது. தேக அபிமானத் தில் வருவதால்
அசுர சம்ஸ்காரம் ஆகிவிடுகிறது. பிறகு அசுர சம்ஸ்காரங்களை
தெய்வீகமாக மாற்றுவதற்கு தந்தை வர வேண்டியிருக்கிறது. இந்தப்
படைப்புகள் முழுவதும் படைப்பவராகிய அந்த ஒரு தந்தையினுடையது
ஆகும். அவரை அனைவரும் தந்தை என்று கூறுகின்றனர். எவ்வாறு
லௌகீகத் தந்தையும் கூட தந்தை என்று கூறப்படுகின்றனர்! பாபா
மற்றும் மம்மா இந்த இரண்டு வார்த்தைகளும் மிக இனிமையானதாகும்.
படைப்பவர் என்று தந்தையைத் தான் கூற முடியும். அவர் முத-ல் (பிரஜா
பிதா) தாயைத் தான் தத்தெடுக்கின்றார், பிறகு தான் படைப்புகளை
படைக்கின்றார். எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார் - நான் வந்து
இவரிடத்தில் பிரவேசம் செய்கின்றேன். இவரது பெயர் பிரபலமாக
இருக்கிறது. பாக்யரதம் என்றும் கூறுகின்றனர். மனிதனின்
சித்திரம் தான் காண்பிக்கின்றனர். எந்த காளை மாடும் கிடையாது.
பாக்யரதம் மனித உடலுடன் இருக்கின்றார். தந்தை வந்து தான்
குழந்தைகளுக்கு தனது அறிமுகம் கொடுக்கின்றார். நான்
பாப்தாதாவிடம் செல்கிறேன் என்று எப்பொழுதும் கூற வேண்டும்.
தந்தை என்று கூறும் பொழுது அவர் நிராகாரமாக ஆகிவிடுகின்றார்,
நிராகார தந்தையிடத்தில் சரீரம் விடும் பொழுது தான் செல்ல
முடியும். இப்படியே யாரும் சென்று விட முடியாது. இந்த ஞானத்தை
தந்தை தான் கொடுக்கின்றார். இந்த ஞானம் இருப்பதே தந்தையிடம்
தான். அழிவற்ற ஞான இரத்தினங்களின் பொக்கிஷம் இருக்கிறது. தந்தை
ஞான இரத்தினங்களின் கடலாக இருக்கின்றார். தண்ணீருக்கான விசயம்
கிடையாது. ஞான இரத்தினங்களின் களஞ்சியமாக இருக்கின்றார்.
அவரிடத்தில் ஞானம் இருக்கிறது. தண்ணீரை ஞானம் (அறிவு) என்று
கூறுவது கிடையாது. எவ்வாறு மனிதர் களிடத்தில் வக்கீல்,
மருத்துவர் போன்றவைகளின் ஞானம் இருக்கிறதோ, அதுபோல இதுவும்
ஞானமாகும். இந்த ஞானத்திற்காகத் தான் அனைத்து ரிஷி,
முனிவர்களும் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையை
நாங்கள் அறியவில்லை என்று கூறிவந்தனர். அதை ஒரு படைப்பவர்
மட்டுமே அறிவார். மரத்தின் விதையானவரும் அவர் தான்.
சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் அவரிடத்தில் இருக்கிறது.
அவர் எப்பொழுது வருகின்றாரோ அப்பொழுது கூறுவார். இப்பொழுது
உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது எனில் நீங்கள் இந்த
ஞானத்தின் மூலம் தேவதைகளாக ஆகிறீர்கள். ஞானத்தை அடைந்து பிறகு
பிராப்தியை அடைகிறீர்கள். அங்கு இந்த ஞானத்திற்கான அவசியம்
இருக்காது. தேவதைகளிடத்தில் இந்த ஞானம் இல்லாததால் அவர்கள்
அஞ்ஞானிகள் என்பது கிடையாது. அவர்கள் இந்த ஞானத்தின் மூலம்
பதவியை பிராப்தியாக அடைந்து விட்டனர். பாபா, வாருங்கள், நாங்கள்
பதீதத்தி-ருந்து பாவனமாக எப்படி ஆவது? அதற்கான வழி கூறுங்கள்,
அதாவது ஞானம் கூறுங்கள் என்று தந்தையை அழைக்கின்றனர். ஏனெனில்
அறியாமல் இருக்கின்றனர். ஆத்மாக்களாகிய நாம்
சாந்திதாமத்தி-ருந்து வந்திருக் கிறோம் என்பதை இப்பொழுது
நீங்கள் அறிவீர்கள். அங்கு ஆத்மாக்கள் அமைதியாக இருக்கும்.
நடிப்பு நடிப்பதற்காக இங்கு வந்திருக்கிறது. இது பழைய உலகம்
எனில் அவசியம் புது உலகம் இருந்திருக்க வேண்டும். அது எப்பொழுது
இருந்தது? யார் இராஜ்யம் செய்தனர்? என்பதை யாரும் அறியவில்லை.
நீங்கள் இப்பொழுது தந்தையின் மூலம் அறிந்திருக்கிறீர்கள். தந்தை
தான் ஞானக் கடலாக, சத்கதியின் வள்ளலாக இருக்கின்றார். அவரைத்
தான் அழைக்கின்றனர் - பாபா, வந்து எமது துக்கத்தை நீக்குங்கள்,
சுகம், சாந்தி கொடுங்கள்! ஆத்மா அறிந்திருக்கிறது, ஆனால் தமோ
பிரதானமாக ஆகிவிட்டது, அதனால் தான் தந்தை மீண்டும் வந்து தனது
அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். மனிதர்கள்
ஆத்மாவையோ, பரமாத்மாவையோ அறியாமல் இருக்கின்றனர். ஆத்மாவிற்கு
ஞானமே இல்லையெனும் பொழுதும் பரமாத்ம அபிமானிகளாக எப்படி ஆக
முடியும்? முன்பு நீங்களும் அறியாமல் இருந்தீர்கள், இப்பொழுது
ஞானம் கிடைத் திருப்பதால் புரிந்து கொள்கிறீர்கள் - முகம்
மனிதனாக இருந்தது, ஆனால் தோற்றம் குரங்கு போன்று இருந்தது.
இப்பொழுது தந்தை ஞானம் கொடுத்திருப்பதால் நாமும் ஞானம்
நிறைந்தவர்களாக ஆகி விட்டோம். படைப்பவர் மற்றும் படைப்பின்
ஞானம் கிடைத்திருக்கிறது. நமக்கு பகவான் கற்பிக் கின்றார்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் எனில் எவ்வளவு போதை
இருக்க வேண்டும்! பாபா ஞானக்கடலானவர், அவரிடத்தில் எல்லையற்ற
ஞானம் இருக்கிறது. நீங்கள் யாரிடம் வேண்டு மென்றாலும்
செல்லுங்கள் - சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானம் மட்டுமின்றி
ஆத்மாவாகிய நான் எப்படிப்பட்டவன் என்பதையும் அறியாமல்
இருக்கின்றனர். தந்தையை நினைக்கவும் செய் கின்றனர், துக்கத்தை
நீக்கி சுகம் கொடுப்பவர், இருப்பினும் ஈஸ்வரன் சர்வவியாபி என்று
கூறிவிடு கின்றனர். நாடகப்படி இது அவர்களது குற்றம் கிடையாது
என்று தந்தை கூறுகின்றார். மாயை முற்றிலும் கீழான
புத்தியுடையவர்களாக ஆக்கிவிடுகிறது. புழுக்களுக்கு அசுத்தத்தில்
தான் சுகம் கிடைக்கிறது. அசுத்தத்தி-ருந்து நீக்குவதற்காக தந்தை
வருகின்றார். மனிதர்கள் சாக்கடையில் மாட்டியிருக்கின்றனர்.
ஞானம் பற்றி அறியவேயில்லை எனில் என்ன செய்வது! புதை குழியில்
மாட்டியிருக்கின்றனர் எனில் பிறகு அவர்களை வெளியேற்றுவது
மிகவும் கடினமாகி விடுகிறது. பாதி அல்லது முக்கால் பங்கு
வெளியேற்றி கொண்டு வந்த பிறகு ஒருவேளை கைவிட்டு விட்டால் கீழே
விழுந்து விடுகின்றனர். சில குழந்தைகள் மற்றவர்களுக்கு ஞானம்
கொடுத்து கொடுத்து சுயம் மாயையிடம் அடி வாங்கி விடுகின்றனர்.
ஏனெனில் தந்தையின் கட்டளைக்குப் புறம்பாக காரியம் செய்து
விடுகின்றனர். மற்றவர்களை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து,
தானே கீழே விழுந்து விடுகின்றனர். பிறகு அவர்களை
வெளியேற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது!
ஏனெனில் மாயையிடம் தோற்று விடுகின்றனர். அவர்களுக்கு தனது
பாவங்களே உறுத்திக் கொண்டிருக்கும். மாயையிடம் யுத்தம்
நடைபெறுகிறது அல்லவா! இப்பொழுது நீங்கள் யுத்த மைதானத்தில்
இருக்கிறீர்கள். அவர்கள் புஜ பலத்தினால் யுத்தம் செய்யக் கூடிய
இம்சை சேனைகள் ஆவர். நீங்கள் அகிம்சாதாரிகளாக இருக்கிறீர்கள்.
நீங்கள் அகிம்சையின் மூலம் இராஜ்யம் அடைகிறீர்கள். இம்சைகளில்
இரண்டு வகைகள் உள்ளன அல்லவா! ஒன்று காமத்தில் செல்வது, மற்றொரு
இம்சை மற்றவரை துன்புறுத்துவது. நீங்கள் இப்பொழுது இரட்டை
அகிம்சாதாரிகளாக ஆகிறீர்கள். ஞான பலத்தின் இந்த யுத்தத்தைப்
பற்றி யாரும் அறியவேயில்லை. அகிம்சை என்றால் என்ன? என்றும்
யாரும் அறியவில்லை. பக்தி மார்க்கத்தின் சடங்குகள் எவ்வளவு
இருக் கின்றன! பதீத பாவனனே வாருங்கள்! என்று பாடு கின்றனர்.
ஆனால் நான் வந்து எப்படி பாவனமாக ஆக்கு கின்றேன்? என்பது
யாருக்கும் தெரியாது. கீதையிலேயே தவறு செய்து விட்டனர், மனிதனை
பகவான் என்று கூறிவிட்டனர். சாஸ்திரங்களை உருவாக்கியது
மனிதர்கள் தான். மனிதர்கள் தான் படிக்கின்றனர். தேவதைகள்
சாஸ்திரங்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு எந்த
சாஸ்திரங்களும் கிடையாது. ஞானம், பக்தி பிறகு தான் வைராக்கியம்.
எதன் மீது வைராக்கியம்? பக்தியின் மீது, பழைய உலகின் மீது
வைராக்கியம். பழைய சரீரத்தின் மீது வைராக்கியம். இந்தக்
கண்களின் மூலம் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள் இருக்காது
என்று தந்தை கூறுகின்றார். இந்த முழு சீ சீ உலகின் மீது
வைராக்கியம். மற்றபடி புது உலகை நீங்கள் தெய்வீகப் பார்வையின்
மூலம் சாட்சாத்காரம் செய்கிறீர்கள். நீங்கள் புது உலகிற்காகவே
படிக்கிறீர்கள். இந்தப் படிப்பு ஒன்றும் இந்த பிறப்பிற்காக
கிடையாது. வேறு எந்தப் படிப்பாக இருந்தாலும், அது இந்த ஒரு
பிறப்பிற்காகத் தான். இப்பொழுது சங்கமமாகும். ஆகையால் இப்பொழுது
நீங்கள் எது படிக்கிறீர்களோ அதன் பிராப்தி உங்களுக்கு புது
உலகில் கிடைக்கும். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வளவு
உயர்ந்த பிராப்தி உங்களுக்குக் கிடைக்கிறது! எல்லையற்ற
தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகம் பிராப்தி யாக கிடைக்கிறது.
ஆக குழந்தைகள் முழுமையாக முயற்சி செய்து ஸ்ரீமத் படி நடக்க
வேண்டும். தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். அவர் மூலம்
நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள். அவர் சதா சிரேஷ்டமானவராக
இருக்கின்றார். உங்களை சிரேஷ்டமானவர்களாக ஆக்குகின்றார். 84
பிறவிகள் எடுத்து எடுத்து நீங்கள் தாழ்வானவர்களாக
ஆகிவிடுகிறீர்கள். நான் பிறப்பு, இறப்பில் வருவது கிடையாது
என்று தந்தை கூறுகின்றார். நான் இப்பொழுது பாக்கியசா- இரதத்தில்
தான் பிரவேசிக்கின்றúன். அவரை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும்
தான் அறிந்திருக்கிறீர்கள். உங்களது இப்போதைய மரம் மிகவும்
சிறியதாகும். மரத்தை புயலும் தாக்கும் அல்லவா! இலைகள் ஆடிக்
கொண்டே இருக்கின்றன. பல மலர்கள் உருவாகின்றன, பிறகு புயல்
தாக்கியதும் கீழே விழுந்து விடுகின்றன. சில நல்ல பழமாக
உருவாகின்றன, இருப்பினும் மாயையின் புயலால் கீழே விழுந்து
விடுகின்றன. மாயையின் புயல்கள் மிகவும் வேகமாக இருக்கிறது.
அந்தப் பக்கம் புஜபலம், இந்த பக்கம் யோக பலம், அதாவது நினைவு
பலமாகும். நினைவு என்ற வார்த்தையை நீங்கள் பக்கா செய்து
கொள்ளுங்கள். அவர்கள் யோகா, யோகா என்ற வார்த்தையை கூறிக் கொண்டே
இருக்கின்றனர். உங்களுடையது நினைவு ஆகும். நடந்தாலும்,
காரியங்கள் செய்தாலும் தந்தையை நினைவு செய்கிறீர்கள். இதை யோகா
என்று கூறுவது கிடையாது. யோகா என்ற வார்த்தை சந்நியாசிகளுடையது,
மிகவும் பிரபலமானது. பலவிதமான யோக முறைகளை கற்றுக்
கொடுக்கின்றனர். தந்தை எவ்வளவு எளிதாகக் கூறுகின்றார் -
எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், காரியங்கள் செய்தாலும்
தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் பாதி கல்பத்திற் கான
நாயகிகளாக இருக்கிறீர்கள். என்னை நினைவு செய்து வந்தீர்கள்.
இப்பொழுது நான் வந்திருக் கிறேன். யாரும் ஆத்மாவை அறியவில்லை,
அதனால் தான் தந்தை வந்து உணர வைக்கின்றார். இதுவும் புரிந்து
கொள்வதற்கு மிக ஆழமான விசயமாகும். ஆத்மா மிகவும் சூட்சுமமானது
மற்றும் அழிவற்றது ஆகும். ஆத்மாவும் அழியாதது, அதில்
பதிவாகியிருக்கும் பாகமும் அழிவில்லாததாகும். இந்த விசயங்களை
மேலோட்டமான புத்தியுடையவர்கள் புரிந்து கொள்வது கடினமாகும்.
சாஸ்திரங்களிலும் இந்த விசயங்கள் கிடையாது.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு மிகுந்த
முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது. ஞானம் மிகவும் எளிது.
மற்றபடி விநாச காலத்தில் அன்பான புத்தியுடையவர் மற்றும் விபரீத
புத்தியுடையவர் என்று நினைவிற்காகத் தான் கூறப்பட்டிருக்கிறது.
நினைவு நன்றாக இருக்கிறது எனில் அன்பான புத்தியுடையவர் என்று
கூறப்படுவர். அன்பும் கலப்படமின்றி இருக்க வேண்டும். நான்
பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறேன்? என்று தனக்குள் கேட்க
வேண்டும். பாபாவின் மீது அன்பு வைத்து வைத்து எப்பொழுது
கர்மாதீத நிலை ஏற்பட்டுவிடுமோ அப்பொழுது இந்த சரீரத்தை விட்டு
விடுவோம், மேலும் யுத்தம் ஆரம்பமாகி விடும். எந்த அளவிற்கு
தந்தையின் மீது அன்பு இருக்குமோ அந்த அளவு தமோ
பிரதானத்தி-ருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். தேர்வு ஒரே
நேரத்தில் தான் நடக்கும் அல்லவா! எப்பொழுது முடிவு நேரம்
நெருக்கத்தில் வருமோ, அப்பொழுது அனைவரின் புத்தியும் அன்பானதாக
ஆகிவிடும். பிறகு அந்த நேரத்தில் விநாசமும் ஆரம்பமாகி விடும்.
அதுவரை சண்டைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மரணம் எதிரில்
இருக்கிறது, யாரோ தூண்டுதல் கொடுப்பதால் தான் நாம் அணுகுண்டு
தயாரிக்கிறோம் என்று அயல்நாட்டினரும் புரிந்து கொள்கின்றனர்.
ஆனால் என்ன செய்ய முடியும்? நாடகத்தில் பதிவாகியிருக்கிறது
அல்லவா! தனது அறிவியல் பலத்தின் மூலம் தனது குலத்தையே விநாசம்
செய்து கொள்கின்றனர். பாவன உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்
என்று குழந்தைகள் கூறுகின்றனர் எனில் சரீரத்தை எடுத்துச்
செல்லமாட்டார். தந்தை காலனுக் கெல்லாம் காலன் அல்லவா! இந்த
விசயங்களை யாரும் அறியவில்லை. மிருகம் இறந்தால்
வேட்டைக்காரனுக்கு மகிழ்ச்சி என்று பாடப்பட்டிருக்கிறது.
விநாசம் நின்று விட வேண்டும், அமைதி ஏற்பட வேண்டும் என்று
அவர்கள் கூறுகின்றனர். அரே!, விநாசம் ஆகாமல் சுகம், சாந்தி
எப்படி ஸ்தாபனை ஆகும்? ஆகையால் சக்கரத்தைப் பற்றி அவசியம்
புரிய வையுங்கள். இப்பொழுது சொர்க்கக் கதவு திறக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது. சாந்திதாமம்-சுகதாமத்திற்கான வாசற்கதவு (நுழைவாயில்)
என்பதைப் பற்றியும் ஒரு புத்தகம் வெளியிடுங்கள் என்று தந்தை
கூறியிருக்கின்றார். இதன் பொருளையும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
மிக எளிதானது தான், ஆனால் கோடியிலும் சிலர் மட்டும் தான்
புரிந்து கொள்கின்றனர். நீங்கள் கண்காட்சி போன்றவைகளில்
ஒருபொழுதும் மனம் உடைந்து விடக் கூடாது. பிரஜைகள் உருவாகின்றனர்
அல்லவா! இலட்சியம் மிகவும் உயர்ந்தது, உழைப்பு தேவைப்படுகிறது.
நினைவில் தான் உழைப்பு தேவைப்படுகிறது. இதில் பலர் தோல்வி
அடைந்து விடுகின்றனர். நினைவும் கலப்படமில்லாமல் இருக்க
வேண்டும். மாயை அடிக்கடி மறக்க வைத்து விடுகிறது. உழைப்பின்றி
யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது. முழு முயற்சி
செய்ய வேண்டும் - நாம் சுகதாமத்திற்கு எஜமானர்களாக இருந்தோம்.
பலமுறை சுற்றி வந்திருக்கிறோம். இப்பொழுது தந்தையை நினைவு
செய்ய வேண்டும். மாயை அதிக தடைகளை ஏற்படுத்துகிறது.
பாபாவிடத்தில் சேவைக்கான செய்தியும் வருகிறது. இன்று வித்வான்
மண்ட-க்கு புரிய வைத்தேன், இன்று இவருக்கு ........ நாடகப்படி
தாய்மார்களின் பெயர் பிரபலமாக வேண்டும். தாய்மார்களை முன்
வைக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளாகிய உங்களிடத்தில்
இருக்க வேண்டும். இது சைத்தன்ய தில்வாலா கோயிலாகும். நீங்கள்
சைத்தன்யமாக ஆகிவிட்டால் பிறகு நீங்கள் இராஜ்யம் செய்து கொண்டே
இருப்பீர்கள். பக்திமார்க்கத்தின் கோயில்கள் இருக்காது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒரு தந்தையின் மீது கலப்படமற்ற அன்பு வைத்து வைத்து
கர்மாதீத நிலையடைய வேண்டும். இந்தப் பழைய தேகம் மற்றும் பழைய
உலகின் மீது எல்லையற்ற வைராக்கியம் ஏற்பட வேண்டும்.
2) எந்தக் காரியமும் தந்தையின் கட்டளைக்குப் புறம்பாக செய்யக்
கூடாது. யுத்த மைதானத்தில் ஒருபொழுதும் தோல்வியடையக் கூடாது.
இரட்டை அகிம்சாதாரிகளாக ஆக வேண்டும்.
வரதானம்:
சுப பாவனையுடன் சேவை செய்பவர்களாக பாப்சமான் (பாபாவிற்கு சமமாக)
அபகாரிகளுக்கும் உபகாரம் (தீங்கு செய்பவர்களுக்கும் உதவி
செய்பவர்) ஆகுக
எப்படிப்பட்ட ஆத்மாவாயினும் தனது இரக்க உணர்வால், சுப பாவனையால்
அவர்களை மாற்றி விடுங்கள். இதுவே உண்மையான சேவை., விஞ்ஞானிகள்
கட்டாந்தரையிலும் பயிர் விளைவிப் பதைப் போன்று அமைதி சக்தியால்
இரக்க மனதுடன் அபாரிகளுக்கும் உபகாரம் செய்து பூமியை
மாற்றுங்கள். சுய மாற்றத்தால், சுப பாவனையால் எப்படிப்பட்ட
ஆத்மாவும் மாறிவிடும், ஏனெனில் சுபபாவனை அவசியம் வெற்றியை
பெற்றுத் தரும்.
சுலோகன்:
ஞான சிந்தனை செய்வதே சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கான ஆதாரம்
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும்
ஆளுமையையும் கையாளுங்கள்.
பிராமணர்களான உங்களைப் போன்று ஆன்மீக ஆளுமை முழு கல்பத்திலும்
வேறு எவரிடமும் இல்லை. ஏனெனில் உங்கள் அனைவருடைய ஆளுமையை
உருவாக்குபவர் அனைத்திலும் உயர்ந்த சுயம் பரமாத்மா. அனைத்திலும்
உயர்ந்த ஆளுமை உங்களுடையது. கனவிலும் நினை விலும் முழுத் தூய்மை.
இந்த தூய்மை மட்டுமின்றி முகத்திலும், நடத்தையிலும் ஆன்மீக
பொலிவும் உள்ளது. தனது இந்த கௌரவத்தில் எப்போதும்
நிலைத்திருந்தால் சேவை தானாகவே நடைபெறும்.