20-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களது உயர்ந்த
அதிர்ஷ்டத்தை உயர்வாக்குவதற்காக சத்குரு வந்திருக்கின்றார்,
ஆகையால் உங்களது நடத்தை மிக மிக உன்னதமாக (ராயலாக) இருக்க
வேண்டும்.
கேள்வி:
யாரையும் குற்றம் கூற முடியாதபடி
எந்த திட்டம் நாடகத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது?
பதில்:
நாடகத்தில் இந்த பழைய உலக
விநாசத்திற்கான திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு
யாரையும் குற்றம் கூற முடியாது. இந்த நேரத்தில் இந்த
விநாசத்திற்காக இயற்கைக்கு மிக அதிகமாக கோபம் ஏற்பட்டுள்ளது
நாலாபுறமும் பூகம்பம் ஏற்படும், கட்டிடங் கள் சாய்ந்து விழுந்து
விடும், வெள்ளம் ஏற்படும், பஞ்சம் ஏற்படும். அதனால் தான் தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! இப்பொழுது இந்த பழைய உலகிலிருந்து
நீங்கள் தனது புத்தி யின் தொடர்பை நீக்கி விடுங்கள்,
சத்குருவின் ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். உயிருடன் இருந்து
கொண்டே தேக உணர்வை விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து
கொண்டு தந்தையை நினைவு செய்வதற்கான முயற்சி செய்து கொண்டே
இருங்கள்.
பாடல்:
நாம் அவரது வழிப்படி நடக்க
வேண்டும் .........
ஓம் சாந்தி.
எந்த வழிப்படி நடக்க வேண்டும்? குருவின் வழிப்படி நடக்க
வேண்டும். இவர் எப்படிப் பட்ட குரு? எழுந்தாலும், அமர்ந்தாலும்
மனிதர்களின் வாயில் ஆஹா குருவே! என்று வந்து விடுகிறது.
குருக்கள் பலர் உள்ளனர். ஆஹா குரு என்று யாரைக் கூறலாம்?
யாருடைய மகிமை பாடலாம்? சத்குருவானவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
பக்தி மார்க்கத்தில் பல குருக்கள் உள்ளனர். சிலர் இந்த குருவின்
மகிமையையும், சிலர் அந்த குருவின் மகிமையும் செய்கின்றனர்.
சத்தியமான குரு அவர் ஒருவர் மட்டுமே, அவரைத் தான் ஆஹா! ஆஹா
என்று கூற முடியும் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது.
சத்தியமான சத்குரு இருக்கின்றார் எனில் அவசியம் பொய்யானவர்களும்
இருப்பர். சத்தியமானவர் சங்கமயுகத்தில் தான் வருகின்றார். பக்தி
மார்க்கத்திலும் சத்தியத்திற்கு மகிமை பாடுகின்றனர்.
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தான் சத்திய மானவர், அவர் தான்
விடுவிப்பவராக, வழிகாட்டியாகவும் ஆகின்றார். இன்றைய நாட்களில்
குருக்கள் கங்கையில் நீராடு வதற்கு மற்றும் தீர்த்த
யாத்திரைகளுக்கு அழைத்துச் செல்ல வழி காட்டிகளாக ஆகின்றனர்.
இந்த சத்குரு அவ்வாறு கிடையாது. இவரைத் தான் பதீத பாவனரே!
வாருங்கள் என்று அனைவரும் நினைவு செய்கின்றனர். பதீத பாவன்
என்று சத்குரு தான் அழைக்கப்படுகின்றார். அவர் தான் தூய்மையாக
மாற்ற முடியும். அந்த குரு மார்கள் தூய்மை ஆக்க முடியாது. என்
ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று அவர்கள் கூறுவது கிடையாது.
கீதையும் படிக்கின்றனர், ஆனால் அதன் பொருள் தெரியாது. ஒருவேளை
சத்குரு ஒருவர் தான் என்று புரிந்து கொண்டால் தன்னை குரு என்று
கூறிக் கொள்ளமாட்டார்கள். நாடகப்படி பக்தி மார்க்கத்தின் பிரிவு
தனிப்பட்டதாகும். அதில் பல குருமார்கள், பல பக்தர்கள் உள்ளனர்.
ஆனால் இங்கு ஒரே ஒருவர் ஆவார். பிறகு இந்த தேவி தேவதை கள் முதல்
நம்பரில் வருகின்றனர். இப்பொழுது கடைசியில் இருக் கின்றனர்.
தந்தை வந்து இவர் களுக்கு சத்யுகத்தின் இராஜ்யத்தை
கொடுக்கின்றார். ஆக மற்ற அனைவரும் தானாகவே திரும்பிச் செல்ல
வேண்டும், அதனால் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்
என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமத்தில் தான்
தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் உத்தம புருஷர்களாக ஆகிறீர்கள்.
மற்ற எந்த காரியமும் செய்வது கிடையாது. கதி, சத்கதியின் வள்ளல்
ஒருவர் தான் என்றும் பாடப்படுகிறது. இது தந்தையின் மகிமையாகும்.
கதி மற்றும் சத்கதி சங்கமத்தில் தான் கிடைக்கிறது. சத்யுகத்தில்
ஒரே ஒரு தர்மம் இருக்கும். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயம் அல்லவா! ஆனால் இந்த புத்தியை கொடுப்பது யார்? தந்தை
வந்து தான் யுக்தி கூறுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்து கொள் கிறீர்கள். யாருக்கு ஸ்ரீமத் கொடுக்கின்றார்?
ஆத்மாக்களுக்கு. அவர் தந்தையாகவும் இருக்கின்றார்,
சத்குருவாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார்.
ஞானம் கற்றுக் கொடுக் கின்றார் அல்லவா! மற்ற அனைத்து
குருக்களும் பக்தி கற்றுக் கொடுக்கின்றனர். தந்தையின் ஞானத்தின்
மூலம் உங்களுக்கு சத்கதி ஏற்படுகிறது. பிறகு இந்த பழைய
உலகிலிருந்து சென்று விடுகிறீர்கள். உங்களது இந்த சந்நியாசம்
எல்லையற்றதாகவும் இருக்கிறது. இப்பொழுது உங்களது 84 பிறவிச்
சக்கரம் முடிவடைந்து விட்டது என்று தந்தை புரிய
வைத்திருக்கின்றார். இப்பொழுது இந்த உலகம் அழிந்து போக வேண்டும்.
யாருக்காவது நோய் முற்றி விட்டால் இவர் மரண தருவாயில், இவரை ஏன்
நினைக்க வேண்டும்? என்று கூறுவர். சரீரம் அழிந்து விடும்.
மற்றபடி ஆத்மா சென்று மற்றொரு சரீரத்தை எடுக்கும்.
நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. வங்காளத்தில் இவ்வாறு
நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் பொழுது உயிர் பிரிய வேண்டும்
என்பதற்காக சென்று கங்கையில் மூழ்க வைத்து விடுகின்றனர்.
மூர்த்திகளுக்கும் பூஜை செய்து விட்டு பிறகு மூழ்கி விடு,
மூழ்கி விடு ....... என்று கூறுகின்றனர். இந்த முழு பழைய உலகம்
மூழ்கிவிடும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.
வெள்ளம் ஏற்படும், நெருப்பு பற்றிக் கொள்ளும், பசியால்
மனிதர்கள் இறந்து விடுவார்கள். இது போன்ற நிலை வரப்போகிறது.
பூகம்பத்தினால் கட்டிடங்கள் உடைந்து விழுந்து விடும். இந்த
நேரத்தில் இயற்கைக்கு கோபம் ஏற்படும் பொழுது அனை வரையும்
அழித்து விடுகிறது. இது போன்று அனைத்தும் பழைய உலகிற்கு ஏற்படப்
போகிறது. பல வகையில் மரணம் ஏற்படும். அணு குண்டிலும் விஷம்
நிறைந்திருக்கிறது. சிறிது சுவாசித்தாலும் மயக்கமடைந்து விடுவர்.
என்ன என்ன நடக்கப் போகிறது? என்பதை குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள். இவை அனைத்தையும் செய்விப்பது யார்? தந்தை
செய்விப்பது கிடையாது அல்லவா! இவை நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. யாரையும் குற்றம் கூற முடியாது. நாடகத்தில்
திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. பழைய உலகம் பிறகு அவசியம்
புதியதாக ஆகும். இயற்கை சீற்றங் கள் ஏற்படும். விநாசம் ஏற்பட்டே
தீரும். இந்த பழைய உலகிலிருந்து புத்தி யோகத்தை நீக்கி விட
வேண்டும், இது தான் எல்லையற்ற சந்நியாசம் என்று கூறப்படுகிறது.
ஆஹா சத்குரு, ஆஹா ! என்று இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள். அவர்
தான் நமக்கு இந்த வழியை கூறியிருக் கின்றார். அவருக்கு நிந்தனை
ஏற்படும் படியாக நடந்து கொள்ளாதீர்கள் என்று குழந்தை களுக்கு
புரிய வைக்கின்றார். நீங்கள் இங்கு உயிருடன் இருந்து கொண்டே
இறந்து விடுகிறீர்கள். தேக உணர்வை மறந்து தன்னை ஆத்மா என்று
புரிந்து கொள்கிறீர்கள். தேகத்திலிருந்து விடுபட்ட ஆத்மாவாகி
தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆஹா சத்குரு ஆஹா! என்று மிக
நன்றாக கூறுகிறீர்கள். பரலௌகீக சத்குரு விற்குத் தான் ஆஹா ஆஹா
என்று கூறப்படுகிறது. லௌகீக குருக்கள் பலர் இருக்கின்றனர். ஒரே
ஒரு சத்குரு தான் உண்மையிலும் உண்மையானவர், அவரைத்தான் பக்தி
மார்க்கத்திலும் அவ்வாறு பெயருடன் அழைக்கின்றனர். முழு
சிருஷ்டியின் தந்தை ஒரே ஒருவர் ஆவார். புது உலக ஸ்தாபனை எப்படி
ஏற்படுகிறது? என்பதும் யாருக்கும் தெரியாது. பிரளயம் ஏற்பட்டது,
பிறகு ஆல இலையின் மீது ஸ்ரீகிருஷ்ணர் வந்ததாக சாஸ்திரங் களில்
காண்பித்திருக்கின்றனர். ஆல இலையில் எப்படி வருவார்? என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கிருஷ்ணருக்கு மகிமை
செய்வதால் எந்த நன்மையும் கிடையாது. நீங்கள் முன்னேறும் கலையில்
செல்வதற்காக இப்பொழுது சத்குரு கிடைத்திருக்கின்றார். நீங்கள்
முன்னேறினால் அனைவருக்கும் முன்னேற்றம் என்று கூறுகிறீர்கள்
அல்லவா! ஆக ஆன்மீகத் தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய
வைக்கின்றார். 84 பிறவிகளும் ஆத்மா தான் எடுத்திருக் கிறது.
ஒவ்வொரு பிறப்பிலும் பெயர், உருவம் வேறுபட்டு விடுகிறது.
இன்னார் 84 பிறவிகள் எடுத்தார் என்று கூறுவது கிடையாது. சரீரம்
மாறிக் கொண்டே இருக்கும். உங்களது புத்தியில் இது போன்ற அனைத்து
விசயங்களும் உள்ளன. முழு ஞானமும் புத்தியில் வைத்துக் கொள்ள
வேண்டும். யார் வந்தாலும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ஆரம்பத்தில் தேவி தேவதை களின் இராஜ்யம் இருந்தது, பிறகு
மத்தியத்தில் இராவண இராஜ்யம் ஆரம்ப மானது. ஏணியில் இறங்கி
வந்தீர்கள். சத்யுகத்தை சதோ பிரதானம் என்று கூறுகிறீர்கள்,
பிறகு சதோ, ரஜோ, தமோவிற்கு இறங்குகிறீர்கள். சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது. நம்மை பாபா ஏன் 84 பிறவிச் சக்கரத்தில்
கொண்டு வருகின்றார்? என்று சிலர் கேட்கின்றனர். ஆனால் இந்த
சிருஷ்டிச் சக்கரம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டது ஆகும். இதன்
முதல், இடை, கடையை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களாக இருந்து
கொண்டு ஒருவேளை அறிந்து கொள்ளவில்லையெனில் அவர்கள் நாஸ்திகர்கள்
ஆவர். அறிந்து கொள்வதால் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி
அடைகிறீர்கள்! இந்த படிப்பு எவ்வளவு உயர்ந்தது! உயர்ந்த
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களது உள்ளம் எவ்வளவு குஷியாக
இருக்கும் அல்லவா! நான் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைவேன்.
இந்த லெட்சுமி நாராயணன் அவர்களது கடந்த பிறப்பில் கற்றுக்
கொண்டு பிறகு மனிதனிலிருந்து தேவதைகளாக ஆனர் என்பதை நீங்கள்
அறிவீர்கள்.
இந்த படிப்பின் மூலம் இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. படிப்பின் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவி
அடைகிறீர்கள்! ஆச்சரியம் அல்லவா! இவ்வளவு பெரிய பெரிய கோயில்களை
உருவாக்குகின்றனர், அதாவது பெரிய பெரிய வித்வான் போன்றவர்
களிடம் சத்யுக ஆரம்பத்தில் இவர்கள் எப்படி பிறப்பு எடுத்தனர்?
என்ற கேளுங்கள். அவர்களால் கூற முடியாது. இது கீதைக்கான
இராஜயோகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீதை படித்து வந்தீர்கள்,
ஆனால் அதனால் எந்த லாபமும் கிடையாது. இப்பொழுது தந்தை அமர்ந்து
உங்களுக்கு கூறுகின்றார். பாபா, நாங்கள் உங்களை 5 ஆயிரம்
ஆண்டிற்கு முன்பும் சந்தித்திருந்தோம் என்று நீங்கள்
கூறுகிறீர்கள். ஏன் சந்தித்தீர்கள்? சொர்க்க ஆஸ்தி அடைவ தற்காக!
லெட்சுமி நாராயணன் ஆவதற்காக! சிறியவர்கள், பெரியவர்கள்,
வயதானவர்கள் போன்று வரக் கூடிய அனைவரும் இதை அவசியம் கற்றுக்
கொண்டு வருகின்றனர். இலட்சியமே இது தான். சத்திய நாராயணனின்
சத்திய கதை அல்லவா! இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது
என்பதையும் நீங்கள் அறிவீர்கள். யார் நல்ல முறையில் புரிந்து
கொள்கிறார் களோ அவர்களுக்கு உள்ளார்ந்த குஷியிருக்கும்.
இராஜ்யம் அடைவதற்கு தைரியம் இருக்கிறது அல்லவா! என்று பாபா
கேட்பார். ஏன் இல்லை பாபா, நாங்கள் படிப்பதே நரனிலிருந்து
நாராயணன் ஆவதற்காகவே என்று கூறுகிறீர்கள். இவ்வளவு காலம் நாம்
நம்மை தேகம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், இப்பொழுது தந்தை
நமக்கு சரியான வழி கூறியிருக்கின்றார். ஆத்ம அபிமானியாவதில்
முயற்சி ஏற்படுகிறது. அடிக்கடி தனது பெயர், உருவத்தில் மாட்டிக்
கொள்கிறீர்கள். இந்த பெயர், உருவத்திலிருந்து விடுபட்டு இருக்க
வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா என்பதும் பெயர்
அல்லவா! தந்தை சுப்ரீம் பரம்பிதா ஆவார், லௌகீகத் தந்தையை
பரம்பிதா என்று கூறமாட்டீர்கள். பரம் என்ற வார்த்தை ஒரே ஒரு
தந்தைக்குத் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆஹா குருவே! என்று
இவர் தான் கூறப்படுகின்றார். நீங்கள் சீக்கியர்களுக்கும் புரிய
வைக்க முடியும். கிரந்தத்தில் முழு வர்ணனையும் இருக்கிறது.
கிரந்தத்தில் எந்த அளவிற்கு வர்ணிக்கப்பட்டிருக்கிறோ அந்த
அளவிற்கு வேறு எந்த சாஸ்திரத்திலும் கிடையாது. எஜமானை நினைவு
செய்து சுகமாக இருங்கள். இந்த இரண்டு வார்த்தைகள் தான் மிகவும்
உயர்ந்தது ஆகும். எஜமானை நினைவு செய்தால் 21 பிறவிகளுக்கு சுகம்
கிடைக்கும் என்று தந்தை கூறுகின்றார். இதில் குழப்பமடைவதற்கான
விசயம் எதுவும் கிடையாது. தந்தை மிக எளிதாக்கிப் புரிய
வைக்கின்றார். எத்தனையோ இந்துக்கள் மாற்றல் ஆகி சீக்கியர்களாக
மாறியிருக் கின்றனர்!
மனிதர்களுக்கு வழி காண்பிப்பதற்கு நீங்கள் எவ்வளவு சித்திரங்களை
உருவாக்குகிறீர்கள்! எவ்வளவு எளிதாக்கி புரிய வைக்கிறீர்கள்!
நீங்கள் ஆத்மாக்கள், வித விதமான தர்மங்களில் வருகிறீர்கள். இது
பல வகையான தர்மங்கள் நிறைந்த மரமாகும். மேலும் கிறிஸ்து எப்படி
வருகின்றார்? என்பது வேறு யாருக்கும் தெரியாது. புது ஆத்மா
கர்ம கணக்கு அனுபவிக்க முடியாது என்பதை தந்தை புரிய
வைத்திருக்கின்றார். தண்டனை அடையுமளவிற்கு கிறிஸ்துவின் ஆத்மா
எந்த பாவ காரியமும் செய்யவில்லை. அவர் சதோ பிரதானமான ஆத்மாவாக
வருகின்றார், அவர் எதில் பிரவேசம் செய்கிறாரோ அவரைத் தான்
சிலுவையில் ஏற்றுகின்றனரே தவிர கிறிஸ்துவை அல்ல. அவர் அடுத்த
பிறவி எடுத்து உயர்ந்த பதவி அடைகின்றார். போப்பின் சித்திரமும்
இருக்கிறது.
இந்த நேரத்தில் முழு உலகமும் முற்றிலும் ஒரு பைசாவிற்கும்
உதவாததாக ஆகிவிட்டது. நீங்களும் இருந்தீர்கள். இப்பொழுது
நீங்கள் மதிப்பானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களது
வாரிசாக இருப்பவர்கள் கடைசி கால கட்டத்தில் அனுபவிப்பார்கள்
என்பது கிடையாது, எதுவும் இருக்காது. நீங்கள் தங்களது கைகளை
நிறைத்துக் கொண்டு செல்கிறீர்கள், மற்ற அனைவரும் வெறும்
கைகளுடன் செல்வர். நிறைத்துக் கொள்வதற்காகவே நீங்கள்
படிக்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பு யார் வந்தார்களோ அவர்கள்
தான் வருவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சிறிது
கேட்டாலும் வந்து விடுவார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து
பார்க்க முடியாது. நீங்கள் பல பிரஜைகளை உருவாக்குகிறீர்கள்,
அனைவரையும் பாபா பார்க்க முடியாது. சிறிது கேட்டாலே பிரஜைகளாக
ஆவார்கள், உங்களால் எண்ணிக்கை செய்யவும் முடியாது.
குழந்தைகளாகிய நீங்கள் சேவையில் இருக்கிறீர்கள். பாபாவும்
சேவையில் இருக்கிறார். பாபாவினால் சேவையின்றி இருக்க முடியாது.
தினமும் காலையில் சேவை செய்ய வருகின்றார். சத்சங்கம்
போன்றவைகளும் அதிகாலையில் செய்கின்றனர். அந்த நேரத்தில்
அனைவருக்கும் நேரம் கிடைக்கிறது. மிகவும் அதிகாலையிலேயே நீங்கள்
வந்து விடவும் கூடாது, மற்றும் இரவிலும் வரக் கூடாது என்று பாபா
கூறுகின்றார். ஏனெனில் நாளுக்கு நாள் உலகம் மிகவும் கெட்டதாக
ஆகிக் கொண்டே செல்கிறது, ஆகையால் தெருவிற்குத் தெரு சென்டர்
இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியேறியதும் சென்டருக்கு
வந்து விட வேண்டும், எளிதாகி விட வேண்டும். உங்களுக்கு
முன்னேற்றம் ஏற்படும் பொழுது தான் இராஜ்யம் ஸ்தாபனை ஆகும்.
தந்தை எளிதாக புரிய வைக்கின்றார். இந்த இராஜயோகத்தின் மூலம்
ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறேன். மற்றபடி இந்த முழு உலகமும்
இருக்காது. அதிக பிரஜைகள் உருவாகிக் கொண்டிருக் கின்றனர்.
மாலையும் உருவாக வேண்டும். முக்கியமான விசயம் என்னவெனில் யார்
பலருக்கு சேவை செய்து தனக்குச் சமமாக ஆக்குகிறார்களோ, அவர்கள்
தான் மாலையில் மணிகளாக ஆகின்றனர். மனிதர்கள் மாலை
உருட்டுகின்றனர், ஆனால் அர்த்ததைப் புரிந்து கொள்வது கிடையாது.
பல குருக்கள் மாலை உருட்டுவதற்கு கொடுக்கின்றனர், புத்தி
இதிலேயே ஈடு பட்டிருக்க வேண்டும். காமம் மிகப் பெரிய எதிரி,
நாளுக்கு நாள் மிக அதிமாக ஆகிக் கொண்டே செல்லும். தமோபிரதானமாக
ஆகிக் கொண்டே செல்லும். இந்த உலகம் மிகவும் அசுத்தமானது. நாம்
மிகவும் களைப்படைந்து விட்டோம், எங்களை விரைவில் சத்யுகத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள் என்று பலர் பாபாவிடம் கூறு கின்றனர்.
பாபா கூறுகின்றார் - பொறுமையாக இருங்கள், சத்யுகம் ஸ்தாபனை ஆக
வேண்டும். இது தான் வளர்ப்பு ஆகும். இந்த வளர்ப்பு தான் உங்களை
அழைத்துச் செல்லும். ஆத்மாக் களாகிய நீங்கள்
பரந்தாமத்திலிருந்து வந்தீர்கள், மீண்டும் அங்கு செல்ல வேண்டும்,
மீண்டும் நடிப்பை நடிக்க வருவீர்கள் என்பதையும்
குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கின்றார். ஆக பரந்தாமத்தை
நினைவு செய்ய வேண்டும். என் ஒருவனை நினைவு செய்தால் விகர்மங்கள்
விநாசமாகும் என்று தந்தையும் கூறுகின்றார். இந்த செய்தியைத்
தான் அனை வருக்கும் கொடுக்க வேண்டும், வேறு யாரும் தூதுவர்களாக
கிடையாது. அவர்கள் முக்திதாமத்திலிருந்து கீழே அழைத்து
வருகின்றனர். பிறகு அவர்கள் ஏணியில் கீழே இறங்கியே ஆக வேண்டும்.
எப்பொழுது முற்றிலும் தமோ பிரதானமாக ஆகிவிடுகிறீர்களோ அப்பொழுது
மீண்டும் தந்தை வந்து அனைவரையும் சதோ பிரதானமாக ஆக்குகின்றார்.
உங்கள் காரணத் தினால் அனைவரும் திரும்பிச் செல்ல
வேண்டியிருக்கிறது, ஏனெனில் உங்களுக்கு புது உலகம் தேவை அல்லவா
! இதுவும் நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு
மிகுந்த போதை இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த தேகத்தின் பெயர், உருவத்திலிருந்து விடுபட்டவராகி ஆத்ம
அபிமானியாக ஆக வேண்டும். சத்குருவின் பெயர் கெடும் படியாக
நடந்து கொள்ளக் கூடாது.
2) மாலையின் மணியாவதற்காக பலரை தனக்குச் சமமாக ஆக்கக் கூடிய
சேவை செய்ய வேண்டும்.நான் இராஜ்யம் அடைவதற்காக படித்துக்
கொண்டிருக்கிறேன், இந்த படிப்பே நரனிலிருந்து நாராயணன்
ஆகுவதற்காக என்ற உள்ளார்ந்த குஷியில் இருக்க வேண்டும்.
வரதானம்:
நிரந்தர நினைவு மூலம் அழிவற்ற வருமானத்தை சேமிப்பு
செய்யக்கூடிய அனைத்து பொக்கிஷங்களின் அதிகாரி ஆகுக.
நிரந்தர நினைவு மூலம் ஒவ்வொரு அடியில் வருமானத்தை சேமிப்பு
செய்துகொண்டே இருங்கள், அப்பொழுது சுகம், சாந்தி, ஆனந்தம்,
அன்பு, . . . இந்த அனைத்து பொக்கிஷங்களுடைய அதிகாரத்தினை
அனுபவம் செய்துகொண்டே இருப்பீர்கள். எந்தக் கஷ்டமும் கஷ்டமாக
அனுபவம் ஆகாது. சங்கமயுகத்தில் பிராமணர்களுக்கு எந்தக் கஷ்டமும்
இருக்க முடியாது. ஒருவேளை, ஏதாவது கஷ்டம் வருகிறதென்றாலும், அது
தந்தையின் நினைவை ஏற்படுத்துவதற்காக வருகிறது. எவ்வாறு ரோஜா
மலரின் கூடவே முள் அதனைக் காப்பாற்றுவதற்கான சாதனமாக உள்ளதோ,
அதுபோல் இந்த கஷ்டங்கள் இன்னும் அதிகமாகத் தந்தையின் நினைவை
ஏற்படுத்துவதற்கு நிமித்தம் ஆகின்றன.
சுலோகன்:
அன்பு ரூபத்தின் அனுபவத்தையோ கூறுகின்றீர்கள், இப்பொழுது சக்தி
ரூபத்தின் அனுபவத்தைக் கூறுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
எவ்வாறு சாகாரத்தில் (சாகார பாபாவிடம்) கடைசி கர்மாதீத்
நிலையின் பாகம் ஆசீர்வாதம் கொடுப்பதாக மட்டும் இருந்தது,
சமநிலையினுடைய விசேஷத்தன்மையும் இருந்தது மற்றும்
ஆசீர்வாதத்தின் அதிசயமும் இருந்தது என்பதைப் பார்த்தீர்கள்.
அதுபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். இதுவே சகஜ மற்றும் சக்திசாலி
சேவை ஆகும். இப்பொழுது ஆசீர்வாதம் கொடுப்பதே விசேஷ ஆத்மாக்களின்
பாகம் ஆகும். கண்களின் மூலமாகவோ, நெற்றியின் மணி மூலமாகவோ
கொடுங்கள்.