26-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள்
புகழ்-இகழ், மானம்-அவமானம், துக்கம்-சுகம் போன்ற அனைத்தையும்
பொறுத்துக் கொள்ள வேண்டும். உங்களது சுகமான நாட்கள் இப்பொழுது
நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது.
கேள்வி:
தந்தை தனது பிராமணக்
குழந்தைகளுக்கு எந்த ஒரு எச்சரிக்கை கொடுக்கின்றார்?
பதில்:
குழந்தைகளே! ஒருபொழுதும்
தந்தையிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒருவேளை தந்தையிடம்
கோபித்துக் கொள்கிறீர்கள் எனில் சத்கதி அடைவதி-ருந்தும்
கோபித்துக் கொள்கிறீர் கள். கோபித்துக் கொள்பவர் களுக்கு
மிகுந்த, கடுமையான தண்டனை கிடைக்கும் என்று தந்தை
எச்சரிக்கின்றார். தங்களுக்குள்ளோ அல்லது நிமித்த
பிராமணியிடத்திலோ கோபித்துக் கொண்டால் மலர் போன்று ஆகி ஆகி
முள்ளாகவே ஆகி விடுவீர்கள். ஆகையால் மிக மிக எச்சரிக்கையுடன்
இருங்கள்.
பாடல்:
மனிதர்களே பொறுமையாக இருங்கள்
.......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய, செல்லக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்
அல்லவா! குழந்தைகளாகிய உங்களது பல பிறவிகளின் துக்கம் அனைத்தும்
தூரமாகி விட வேண்டும். இந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டீர்கள்,
இப்பொழுது நமது துக்கத்தின் பாகம் முடிவடைகிறது, மேலும்
சுகத்தின் பாகம் ஆரம்பமாகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். யார்
முழுமையான முறையில் அறிந்து கொள்ளவில்லையோ அவர்கள் ஏதாவது ஒரு
விசயத்தில் அவசியம் துக்கம் அடைவார்கள். இங்கு பாபாவிடத்தில்
வந்த பின்பும் ஏதாவது ஒரு விசயத்தில் துக்கம் அனுபவிப் பர். பல
குழந்தைகளுக்கு கஷ்டம் ஏற்படத்தான் செய்கிறது என்பதை பாபா
அறிவார். தீர்த்த யாத்திரைகளுக்குச் செல்கின்ற பொழுது சில
இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், மழை பொழிந்து விடுகிறது,
சில நேரங்களில் புயல் வந்து விடுகிறது. யார் உண்மையான
பக்தர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பகவானிடம் செல்கிறேன், இது
ஒன்றும் பெரிய விசயமில்லை என்று கூறுவார்கள். பகவானின் நாமத்தை
கூறிக் கொண்டே யாத்திரைக்குச் செல்கின்றனர். மனிதர் களுக்கு பல
பகவான்கள் உள்ளனர். ஆக யார் நல்ல, உறுதியானவர்களாக
இருக்கிறார்களோ ஒன்றும் பெரிய விசயமில்லை என்று கூறுவார்கள்.
நல்ல காரியம் செய்யும் பொழுது எப்பொழுதும் தடைகள் ஏற்படும்,
திரும்பி வந்து விடமாட்டார்கள். சிலர் திரும்பிச் சென்று விடு
கின்றனர். சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன, சில நேரங்களில்
ஏற்படுவது கிடையாது. தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! இதுவும்
உங்களது யாத்திரை ஆகும். நாம் எல்லையற்ற தந்தையிடத்தில்
செல்கிறோம், அந்த தந்தை அனைவரின் துக்கத்தை நீக்கக் கூடியவர்
என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த நம்பிக்கை இருக்கிறது,
இன்றைய நாட்களில் மதுவனத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது
பாருங்கள்! பலருக்கு கஷ்டமும் ஏற்படலாம் என்ற கவலை பாபாவிடம்
இருக்கிறது. தரையில் தூங்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளை
தரையில் தூங்க வைக்க பாபா விரும்புவது கிடையாது. ஆனால்
நாடகப்படி கூட்டம் ஏற்பட்டு விடுகிறது, கல்பத்திற்கு முன்பும்
ஏற்பட்டது, மீண்டும் ஏற்படும். இதில் துக்கப்படக்கூடாது.
படிப்பவர்களில் சிலர் இராஜாவாக ஆவார்கள், சிலர் பிரஜைகளாக
ஆவார்கள் என்பதையும் அறிவீர்கள். சிலருக்கு உயர்ந்த பதவி,
சிலருக்கு குறை வான பதவி. ஆனால் அவசியம் சுகம் இருக்கும்.
இதையும் பாபா அறிவார் - சிலர் மிகவும் பக்குவமற்று இருக்
கின்றனர், எதையும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர்களுக்கு சிறிது கஷ்டம் ஏற்படலாம். நான் வீணாக விருப்பமின்றி
வந்துள்ளேன் என்று கூறுவர் அல்லது பிராமணி (நிமித்தமானவர்) தான்
என்னை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார் என்று கூறுவர்.
நிமித்தமானவர் தான் என்னை தேவையின்றி மாட்ட வைத்து விட்டார்
என்றும் கூறுவர். நான் விஷ்வ வித்யாலயத்திற்கு வந்திருக்கிறேன்
என்று முழுமையாக அறியாமல் இருக்கின்றனர். இந்த நேரத்திற்கான
படிப்பின் மூலம் சிலர் இராஜாவாக ஆகின்றனர், சிலர் எதிர்
காலத்தில் பிரஜைகளாக ஆகக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
இங்கிருக்கும் இராஜா, பிரஜைக்கும் அங்கிருக்கும் இராஜா,
பிரஜைக்கும் இரவு பகல் வித்தியாசம் இருக்கும். இங்கிருக்கும்
இராஜாக்களும் துக்கமாக இருக்கிறார் எனில் பிரஜைகளும்
துக்கமானவர்களாக இருக்கின்றனர். அங்கு இருவரும் சுகமானவர்களாக
இருப்பர். இது பதீதமான, விகார உலகமாக இருக்கிறது. சிலரிடத்தில்
அதிக செல்வம் இருக்கலாம், ஆனால் இந்த செல்வம், சொத்துக்கள்
அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் என்று தந்தை புரிய
வைக்கின்றார். இந்த சரீரமும் அழிந்து போய் விடும். ஆத்மா
மண்ணோடு மண்ணாகி விடாது, பிர்லா போன்ற எவ்வளவு பெரிய பெரிய
செல்வந்தர்கள் இருக்கின்றனர்! ஆனால் இந்த பழைய உலகம் மாறிக்
கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து
கொண்டால் உடனேயே வந்து விடுவர். இங்கு பகவான் வந்திருக்கின்றார்
என்று கூறுகின்றனர், இருப்பினும் வேறு எங்கு செல்ல முடியும்?
தந்தையைத் தவிர வேறு யாரும் சத்கதி கொடுக்க முடியாது. ஒருவேளை
யாராவது கோபித்துக் கொண்டால் சத்கதி பெறுவதி-ருந்தும்
கோபித்துக் கொண்டனர் என்று கூறலாம். இவ்வாறு பலர் கோபித்துக்
கொண்டே இருப்பர், கீழே விழுந்து கொண்டே இருப்பர். ஆச்சரியமாக
கேட்கின்றனர், நம்பிக்கை யுடையவர்களாக ஆகின்றனர்...... இது
தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் புரிந்து கொள்கின்றனர்.
இவரிடமிருந்து சுகம் மற்றும் அமைதிக்கான ஆஸ்தி கிடைக்கும்.
இவரின்றி சுகம், அமைதி அடைவது என்பது அசம்பவமாகும். எப்பொழுது
அதிக செல்வம் இருக்கிறதோ அப்பொழுது சுகம் கிடைக்கும்.
செல்வத்தில் தான் சுகம் இருக்கும் அல்லவா! அங்கு (மூல வதனத்தில்)
ஆத்மாக்கள் அமைதியாக அமர்ந்திருக்கும். எனக்கு பாகம்
இல்லையெனில் நான் சதா அங்கேயே இருப்பேன் என்று சிலர்
நினைக்கின்றனர், ஆனால் இவ்வாறு கூறுவதன் மூலம் நடந்து விடாது.
இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம் என்று குழந்தைகள் புரிய
வைக்கப் பட்டிருக்கின்றனர். பலர் ஏதாவது ஒரு சந்தேகத்தில் வந்து
பிறகு விட்டுச் சென்று விடுகின்றனர். நிமித்தமானவரிடம்
கோபித்துக் கொள்கின்றனர் அல்லது தங்களுக்குள் கோபித்துக் கொண்டு
படிப்பை விட்டு விடுகின்றனர்.
இப்பொழுது நீங்கள் இங்கு மலர் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள்.
உண்மையில் நாம் முள்ளி-ருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறோம்
என்பதை உணர்கிறீர்கள். மலராக அவசியம் ஆக வேண்டும். சிலருக்கு
ஏதாவது சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது - இன்னார் இதைச் செய்கிறார்,
இவர் இப்படி இருக்கிறார், அதனால் நான் வரமாட்டேன். அவ்வளவு தான்!
கோபித்துக் கொண்டு சென்று வீட்டில் அமர்ந்து விடுகின்றனர்.
மற்ற அனைவரிடத்திலும் கோபித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு
தந்தையிடம் ஒருபொழுதும் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று தந்தை
கூறுகின்றார். பாபா எச்சரிக்கை கொடுக்கின்றார், அதிக தண்டனைகள்
கிடைக்கும். கர்பத்திலும் என்ன தண்டனைகள் கிடைக்குமோ
அனைத்தையும் சாட்சாத்காரம் செய்விப்பார். சாட்சாத்காரமின்றி
தண்டனைகள் அடைய முடியாது. இங்கும் சாட்சாத்காரம் ஏற்படும்.
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே சண்டையிட்டுக் கொண்டு,
கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டீர்கள் என்பது தெரியும்.
நாம் தந்தையிடம் படிக்க வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். ஒருபொழுதும் படிப்பை விட்டு விடக்
கூடாது. மனிதனி-ருந்து தேவதை ஆவதற்காகத் தான் நீங்கள் இங்கு
படிக்கிறீர்கள். இப்படிப்பட்ட உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை
சந்திப்பதற்காக நீங்கள் வருகிறீர்கள். சில நேரங்களில் அதிகமாக
வந்து விடுகிறீர்கள், நாடகப்படி சில கஷ்டங்கள் அடைய
வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு பல புயல்கள் வருகின்றன. இந்த
பொருள் கிடைக்க வில்லை, இது கிடைக்கவில்லை, இதுவெல்லாம் ஒன்றுமே
கிடையாது. எப்பொழுது இறக்கும் நேரம் வருகிறதோ அப்பொழுது
மனிதர்கள் நான் என்ன பாவம் செய்தேன், தேவையின்றி என்னை
துன்புறுத்து கின்றனர் என்று கூறுவர். அப்படிப்பட்ட கடைசி நேர
பாகத்திற்குத் தான் இரத்த ஆறுக்கான பாகம் என்று கூறப்படுகிறது.
எதிர்பாராமல் அணுகுண்டு விழும், பல பேர் இறந்து விடுவர். இது
இரத்த ஆறாக ஆகிவிடுகிறது அல்லவா! அஞ்ஞானி மனிதர்கள் கதறுவார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் குஷியாக இருப்பீர்கள், ஏனெனில்
இந்த உலகம் அழிந்தே தீரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பல
தர்மங்கள் அழிந்து போகவில்லை யெனில் ஒரு சத்திய தர்மம் எப்படி
ஸ்தாபனை ஆகும்? சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா
தர்மம் இருந்தது. சத்யுக ஆரம்பத்தில் என்ன இருந்தது? என்று
யாருக்குத் தெரியும். இது புருஷோத்தம சங்கமயுகமாகும்.
அனைவரையும் புருஷோத்தமர்களாக ஆக்குதவற்காக தந்தை
வந்திருக்கின்றார். அனைவருக்கும் தந்தை அல்லவா! நாடகத்தை
நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அனைவரும் சங்கமயுகத்திற்கு வந்து
விடமாட்டார்கள். கோடிக்கணக்கான ஆத்மாக்களும் சத்யுகத்திற்கு
வந்து விடமாட்டார்கள். இது விரிவான விசயமாகும். பல குழந்தைகள்
எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. பக்தி மார்க்கத்தில்
மூழ்கியிருக்கின்றனர். ஞானம் புத்தியில் அமர முடியாது.
பக்தியின் பழக்கம் இருக்கிறது. பகவானால் என்ன செய்ய முடியாது?
என்று கேட்கின்றனர். இறந்தவருக்கும் உயிர் கொடுக்க முடியும்.
பாபாவிடம் வருகின்றனர், இன்னார் இறந்தவருக்கு உயிர் கொடுக்
கின்றார் எனில் பகவானால் கொடுக்க முடியாதா என்ன? என்று
கேட்கின்றனர். யாராவது நல்ல காரியம் செய்கின்றனர் எனில் அவ்வளவு
தான்! அவரது மகிமை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். பிறகு
அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் ஆகிவிடுகின்றனர்.
உங்களிடத்தில் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். பகவான்
கற்பிக்கின்றார் எனில் பிறகு ஏன் குறைவாக வருகின்றனர்? என்று
பலர் கேட்கின்றனர். அட, இங்கு இறக்க வேண்டியிருக்கிறது. அங்கு
காதுக்கு இனிமையான விசயங்கள் உள்ளன. மிகவும் ஆடம்பரமாக அமர்ந்து
கீதையைக் கூறுவர், பக்தர்கள் கேட்கின்றனர். இங்கு காதுக்கு
இனிமை தரும் விசயம் கிடையாது. தந்தையை நினைவு செய்யுங்கள் என்று
மட்டுமே உங்களுக்குக் கூறப்படுகிறது. கீதையிலும் மன்மனாபவ என்ற
வார்த்தை இருக்கிறது. தந்தையை நினைவு செய்தால் விகர்மங்கள்
விநாசம் ஆகும். நல்லது நிமித்தமானவர்களிடம் அல்லது சென்டரில்
கோபித்துக் கொள்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். மற்ற
தொடர்பு களையெல்லாம் துண்டித்து தன்னை ஆத்மா என்று புரிந்து
கொண்டு ஒரே ஒரு தந்தையை நினைவு செய்யும் ஒரே ஒரு காரியம்
செய்தால் போதும் என்று தந்தை கூறுகின்றார். தந்தை தான் பதீத
பாவனாக இருக்கின்றார். தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தால்
போதும். சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் (நினைவு செய்துக்) கொண்டே
இருங்கள். இவ்வளவு நினைவு செய்தால் அவசியம் சொர்க்கத்திற்கு
வருவீர்கள். முயற்சியின் படி தான் சொர்க்கத்தில் உயர்ந்த பதவி
அடைய முடியும். பிரஜைகளை உருவாக்க வேண்டியிருக்கும்.
இல்லையெனில் யார் மீது இராஜ்யம் செய்வீர்கள்? யார் அதிகம்
முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவியும்
அடைவார்கள். உயர்ந்த பதவிக்காகத் தான் தலையை இவ்வளவு உடைத்துக்
கொள்ள வேண்டி யிருக்கிறது. முயற்சியில்லாமல் யாரும் இருக்க
முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர், பதீத பாவனன் தந்தை என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் மகிமை
செய்கின்றனர், ஆனால் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. பாரதம்
எவ்வளவு செல்வமிக்கதாக இருந்தது! பாரதம் சொர்க்கமாக இருந்தது!
உலக அதிசயமாகும். அந்த 7 அதிசயங்கள் மாயை யினுடையது. முழு
நாடகத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்தது சொர்க்கமாகும், மிகவும்
கீழானது நரகமாகும். இப்பொழுது நீங்கள் தந்தையிடம்
வந்திருக்கிறீர்கள். இனிய பாபா மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச்
செல்கிறார் என்பதை அறிவீர்கள். அப்படிப்பட்டவரை யார் மறக்க
முடியும்? வெளியில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஒரே ஒரு
விசயத்தை மட்டும் நினைவில் வையுங்கள் - தந்தையை நினைவு செய்ய
வேண்டும். தந்தை தான் ஸ்ரீமத் கொடுக்கின்றார் - பகவானின்
மகாவாக்கியம். பிரம்ம பகவானின் மகாவாக்கியம் கிடையாது.
எல்லையற்ற தந்தை குழந்தைகளிடம் கேட்கின்றார் - குழந்தைகளே! நான்
உங்களை இவ்வளவு செல்வந்தர் களாக ஆக்கி சென்றிருந்தேன், பிறகு
உங்களுக்கு எப்படி துர்கதி ஏற்பட்டது? ஆனால் கேட்கின்றனரே தவிர
எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. ஆக குழந்தைகளுக்கு சிறிது
கஷ்டங்கள் ஏற்படுகின்றன, துக்கம்-சுகம், புகழ்-இகழ் அனைத்தையும்
பொறுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. இங்கிருக்கும் மனிதர்கள்
எப்படியெல்லாம் இருக்கின்றனர் பாருங்கள்! பிரதம மந்திரியையும்
தாக்குவதற்கு தயங்குவது கிடையாது. பள்ளியில் குழந்தைகளுக்கு
புது இரத்தம் ஓடுகிறது என்று கூறுகின்றனர். அவர்களை அதிகம்
மகிமை செய்கின்றனர். அவர்கள் எதிர்காலத் தின் புது இரத்தங்கள்
என்று கூறுகின்றனர். ஆனால் அதே மாணவர்கள் துக்கம் கொடுக்கக்
கூடியவர்களாக ஆகி விடுகின்றனர். கல்லூரியை எரித்து விடுகின்றனர்.
ஒருவருக்கொருவர் நிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். உலகின்
நிலை எப்படி ஆகிவிட்டது? என்பதை தந்தை புரிய வைக்கின்றார்.
நாடக நடிகனாக இருந்து கொண்டு நாடகத்தின் முதல், இடை, கடை
மற்றும் முக்கிய நடிகர் போன்றவர்களை அறிய வில்லையெனில் அவர்களை
என்ன சொல்வது? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார்? அவரது
சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! எதையும் அறியாமல்
இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு என்ன பாகம்
இருக்கிறது? தர்ம ஸ்தாபகர்களுக்கு என்ன பாகம் இருக்கிறது?
மனிதர்கள் குருட்டு நம்பிக்கையில் வந்து அனைவரை யும்
தீர்க்கதரிசிகள் என்று கூறிவிடுகின்றனர். சத்கதி செய்பவர்கள்
தான் குருக்கள் ஆவர். அனை வருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்
ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா ஆவார். அவர் பரம குருவாகவும்
இருக்கின்றார், பிறகு ஞானத்தையும் கொடுக்கின்றார்.
குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றார், அவரது
பாகமே அதிசயமானது ஆகும். தர்மத்தையும் ஸ்தாபனை செய்கின்றார்,
மேலும் அனைத்து தர்மங்களையும் அழிக்கவும் செய்கின்றார்.
மற்றவர்கள் தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கின்றனர், ஸ்தாபனை
மற்றும் விநாசம் செய்பவரைத் தான் குரு என்று கூறலாம் அல்லவா!
நான் காலனுக்கெல்லாம் காலன் என்று தந்தை கூறுகின்றார். ஒரு
தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் பிற தர்மங்கள் அனைத்தும் விநாசம்
ஆகிவிடும் அதாவது இந்த ஞான வேள்வியில் சுவாஹா ஆகிவிடும். பிறகு
எந்த யுத்தமும் நடைபெறாது, எந்த யக்ஞமும் படைக்கப் படமாட்டாது.
நீங்கள் முழு உலகின் முதல், இடை, கடையை அறிவீர்கள். மற்ற
அனைவரும் தெரியாது தெரியாது என்று கூறிவிட்டனர். நீங்கள்
இவ்வாறு கூற முடியாது. தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க
முடியாது. ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகக் குஷி ஏற்பட
வேண்டும். ஆனால் மாயை அவ்வாறு எதிர்கொள்கிறது, அதாவது நினைவை
நீக்கிவிடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் துக்கம்-சுகம், மானம்-
அவமானம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இங்கு யாரும்
அவமானப்படுத்த முடியாது. ஒருவேளை ஏதாவது விசயங்கள் நடந்தால்
தந்தையிடம் முறையிட வேண்டும். முறையிடவில்லை எனில் மிகுந்த
பாவம் ஏற்பட்டு விடும். தந்தையிடம் கூறுவதன் மூலம் உடனேயே
அவர்களுக்கு எச்சரிக்கை கிடைத்துவிடும். இந்த மருத்துவரிடம்
மறைக்கக் கூடாது. மிகப் பெரிய மருத்துவர் ஆவார். ஞானத்தை ஊசி
என்றும், கண் மை என்றும் கூறுகிறோம். ஞானக்கண் மை என்றும்
கூறப்படுகிறது. மாயா ஜாலத்திற்கான விசயம் எதுமில்லை.
பதீதத்தி-ருந்து பாவனம் ஆவதற்கான யுக்தியை உங்களுக்குக்
கூறுவதற்காக நான் வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
தூய்மை ஆகவில்லையெனில் தாரணையும் ஏற்படாது. இந்த காமத்தினால்
தான் பாவங்களும் ஏற்படுகின்றன. இதன் மீது வெற்றியடைய வேண்டும்.
சுயம் விகாரத்தில் சென்று கொண்டிருந்தால் மற்றவர்களுக்குக் கூற
முடியாது. அது மகா பாவம் ஆகிவிடும். தந்தை கதையும் கூறுகின்றார்
- இராம் இராம் என்று கூறினால் கடலை கடந்து விடுவீர்கள் என்று
பண்டிதர் கூறினார். தண்ணீர் கடல் என்று மனிதர்கள்
நினைக்கின்றனர். எவ்வாறு ஆகாயத்திற்கு முடிவு கிடையாதோ, அதே
போன்று கடலுக்கும் முடிவு கிடையாது. இங்கு மனிதர்கள் முடிவை
அடைவதற்கான முயற்சி செய்கின்றனர், அங்கு யாரும் முயற்சி செய்வது
கிடையாது. இங்கு எவ்வளவு தான் தூரத்தில் சென்றாலும் பிறகு
திரும்பி வந்து விடு கின்றனர். பெட்ரோல் இல்லையெனில் பிறகு
எப்படி திரும்பி வர முடியும்? இது விஞ்ஞானிகளின் அளவுக்
கதிகமான அகங்காரமாகும். அதன் மூலம் விநாசம் செய்து விடுகின்றனர்.
விமானத்தின் மூலம் சுகமும் இருக்கிறது, பிறகு அதன் மூலம் அதிக
துக்கமும் இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்தக் காரணத்தினாலும் படிப்பை விட்டு விடக் கூடாது. அதிக
தண்டனைகளி-ருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு மற்ற தொடர்புகளை
துண்டித்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். கோபித்துக்
கொள்ளக் கூடாது.
2) ஞான ஊசி அல்லது (ஞானக்) கண் மை கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு
தந்தை ஆவார். அந்த அழிவற்ற மருத்துவரிடத்தில் எதையும் மறைக்கக்
கூடாது. தந்தையிடம் கூறுவதன் மூலம் உடனேயே எச்சரிக்கை கிடைத்து
விடும்.
வரதானம்:
உடலின் ஆரோக்கியம், மனதின் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின்
செழிப்பு மூலமாக சிரேஷ்ட பாக்கியவான் ஆகுக.
சங்கமயுகத்தில் சதா சுயஸ்திதியில் இருப்பதனால் உடலின் கர்மவினை
என்ற சூலாயுதம் முள்ளாகி விடுகின்றது, உடலின் நோய்யை
யோகத்தினால் மாற்றிவிடுகின்றீர்கள். ஆகையால் சதா ஆரோக்கியம்
இருக்கின்றது. மன்மனாபவ இருப்பதனால் குஷியின் பொக்கிஷங்கள் சதா
நிறை கின்றன, ஆகையால் மனதின் குஷியும் கிடைக்கின்றது மற்றும்
ஞானச் செல்வம் அனைத்து செல்வங்களைக்காட்டிலும் சிறந்தது. ஞானச்
செல்வமுடைய ஆத்மாக்களிடம் இயற்கை தானாக அடிமையாகிவிடுகின்றது.
அனைத்து சம்பந்தமும் ஒருவருடன் இருக்கின்றது, தொடர்பும் புனித
அன்னங்களுடன் இருக்கின்றது... எனவே சிரேஷ்ட பாக்கியவானின்
வரதானம் தானாக பிராப்தம் ஆகின்றது.
சுலோகன்:
நினைவு மற்றும் சேவை இரண்டிற்கான சமநிலைதான் இரட்டை பூட்டாகும்.
அவ்யக்த பிரேரணை - ஆத்மிக ஸ்திதியில் இருக்கும் பயிற்சி
செய்யுங்கள், அந்தர்முகி (உள்நோக்குமுகம்) ஆகுங்கள்.
எப்படி அனேக பிறவியில் தனது தேகத்தின் சொரூபத்தின் நினைவு
இயற்கையாக இருகின்றதோ, அது போன்று தனது உண்மையான சொரூபத்தின்
நினைவு கொஞ்ச சமயம் கூட செய்யமுடியாதா என்ன? இந்த முதல் பாடத்தை
பூர்த்தி செய்யுங்கள். அப்பொழுது தனது ஆத்மிக அபிமானி ஸ்திதி
மூலம் அனைத்து ஆத்மாக்களை சாட்சாத்காரம் செய்விக்க நிமித்தம்
ஆவீர்கள்.