27-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய
துக்கத்தின் நாட்கள் இப்பொழுது முடிந்து விட்டன. நீங்கள்
இப்பொழுது அவ்வாறான உலகத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்
அங்கு இதுவரையும் அடையப்பெறாத (அப்ராப்தி) எந்த ஒரு பொருளும்
இருக்க முடியாது.
கேள்வி:
எந்த இரண்டு வார்த்தைகளின்
இரகசியம் உங்களுடைய புத்தியில் இருக்கும் காரணத்தால் பழைய
உலகத்தின் மீது எல்லையில்லாத வைராக்கியம் இருக்கிறது?
பதில்:
இறங்கும் கலை மற்றும் ஏறும்
கலையின் இரகசியம் உங்கள் புத்தியில் இருக்கிறது. அரைக் கல்பம்
நாம் இறங்கி கொண்டே வந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது ஏறுவதற்கான நேரமாகும். தந்தை நரனிலிருந்து நாராயணனாக
ஆக்குவதற்கான உண்மையான ஞானத்தினை அளிக்க வந்துள்ளார். நமக்கு
இப்பொழுது கலியுகம் முடிந்து விட்டது. புது உலகத்திற்குச்
செல்ல வேண்டும். எனவே இதன் மீது எல்லையில்லாத வைராக்கியம்
உள்ளது.
பாடல்:
பொறுமையாக இருப்பாய் மனிதனே.. ..
..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்.
ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார். இது ஒரே ஒரு
புருஷோத்தம சங்கமயுகமாகும். இதில் தான் கல்ப கல்பமாக தந்தை
வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். இராஜயோகம்
கற்பிக் கிறார். மனிதா அதாவது ஆத்மா, ஹே ஆத்மா பொறுமையாக
இருப்பாய் என்று தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகிறார்.
ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். இந்த சரீரத்தின் எஜமானன் ஆத்மா !
நான் அழிவேயில்லாத ஆத்மா ! இந்த என்னுடைய உடல் அழியக் கூடியது
என்று ஆத்மா கூறுகிறது. நான் ஒரே ஒரு முறை கல்பத்தின்
சங்கமத்தில் வந்து இப்பொழுது சுகத்தின் நாட்கள் வரப்போகின்றது
என்று குழந்தைகளுக்கு தைரியமூட்டுகிறேன். இப்பொழுது நீங்கள்
துக்க தாமம், பயங்கரமான நரகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள்
மட்டுமல்ல, முழு உலகமே பயங்கரமான நரகத்தில் இருக்கிறது.
என்னுடைய குழந்தைகளாக ஆகி இருக்கும் நீங்கள் பயங்கரமான நரகத்
திலிருந்து வெளியேறி சொர்க்கத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறீர்கள். சத்யுகம், திரேதா, துவாபரம் கடந்து போய்
விட்டது. கலியுகம் கூட உங்களைப் பொருத்தவரை கடந்து விட்டது.
உங்களுக்காக இந்த புருஷோத்தம சங்கமயுகம் இருக்கிறது. இப்பொழுது
நீங்கள் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகிறீர்கள்.
ஆத்மா சதோபிர தானமாக ஆகி விடும் பொழுது இந்த சரீரத்தையும்
விட்டு விடும். சதோபிரதானமான ஆத்மாவிற்கு சத்யுகத்தில் புதிய
சரீரம் வேண்டும். அங்கு எல்லாமே புதியதாக இருக்கும். குழந்தைகளே
இப்பொழுது துக்க தாமத் திலிருந்து சுக தாமத்திற்குச் செல்ல
வேண்டும். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். சுக தாமத்தில் இந்த
இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நீங்கள் நரனிலிருந்து
நாராயணர் ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்து
கொண்டிருக்கிறீர்கள். இது சத்திய நரனிலிருந்து நாராணயர்
ஆவதற்கான ஞானம் ஆகும். பக்தி மார்க்கத்தில் ஒவ்வொரு பௌர்ணமி
அன்றும் கதை கேட்டபடியே வந்துள்ளீர்கள். ஆனால் அது இருப்பதே
பக்தி மார்க்கம் ஆகும். அதை சத்திய மார்க்கம் என்று கூற
மாட்டார்கள். ஞான மார்க்கம் சத்திய மார்க்கம் ஆகும். நீங்கள்
படி இறங்கி இறங்கி பொய்யான கண்டத்தில் வருகிறீர்கள். நாம்
சத்தியமான தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைப் பெற்று 21
பிறவிகளுக்கு தேவி தேவதை ஆகிடுவோம் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நாம் தேவி தேவதைகளாக இருந்தோம். பிறகு படி
இறங்கி வந்தோம். ஏறும் கலை மற்றும் இறங்கும் கலையின் ரகசியம்
உங்கள் புத்தியில் உள்ளது. ஹே! பாபா வந்து எங்களை
தூய்மையாக்குங்கள் என்று முறையிடவும் செய்கிறார்கள். ஒரு தந்தை
தான் தூய்மை ஆக்குபவர் ஆவார். குழந்தைகளே ! நீங்கள்
சத்யுகத்தில் உலகத்தின் அதிபதியாக இருந்தீர்கள் என்று தந்தை
கூறுகிறார். மிகவும் செல்வந்தராக மிகவும் சுகமுடைவர்களாக
இருந்தீர்கள். இப்பொழுது இன்னும் சிறிது நேரமே மீதி உள்ளது.
பழைய உலகத்தின் விநாசம் முன்னால் நின்றுள்ளது. புது உலகத்தில்
ஒரு இராஜ்யம் ஒரு மொழி இருந்தது. அதற்கு அத்வைத இராஜ்யம் என்று
கூறப்படுகிறது. இப்பொழுது எவ்வளவு பிரிவுகள் உள்ளன. அநேக
மொழிகள் உள்ளன. எப்படி மனிதர்களுடைய விருட்சம் வளர்ந்து கொண்டே
போகிறது. அதே போல மொழி களினுடைய விருட்சம் விருத்தி அடைந்து
கொண்டே போகிறது. பிறகு ஒரு மொழி இருக்கும். உலக சரித்திரம்
பூகோளம் மீண்டும் நடைபெறும் என்ற பாடல் உள்ளது அல்லவா?
மனிதர்களின் புத்தியில் பதிவதில்லை. தந்தை தான் துக்கமான பழைய
உலகத்தை மாற்றி சுகமான புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார்.
பிரஜாபிதா பிரம்மா மூலம் தேவதா தர்மத்தின் ஸ்தாபனை என்று
எழுதப்பட்டுள்ளது. இது இராஜயோகத்தின் படிப்பாகும். இந்த ஞானமோ
கீதையில் எழுதப்பட்டுள்ளது. தந்தை நேரிடையாக கூறியதை பிறகு
மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எழுதி உள்ளார்கள். அதன் காரணமாக
நீங்கள் இறங்கிய படியே வந்துள்ளீர்கள். இப்பொழுது மேலே
ஏறுவதற்காக பகவான் உங்களுக்கு கற்பிக்கிறார். பக்திக்கு
இறங்கும் கலையின் மார்க்கம் என்று கூறப்படுகிறது. ஞானம் என்பது
ஏறும் கலையின் மார்க்கம். இதைப் புரிய வைப்பதற்கு நீங்கள்
பயப்படாதீர்கள். இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளாத காரணத்தால்
எதிர்க்கவும் செய்வார்கள் தான். சாஸ்திர விளக்கம் தருவார்கள்.
ஆனால் நீங்கள் யாருக்குமே சாஸ்திர விளக்கம் அளிக்க
வேண்டியதில்லை. சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் அல்லது
கங்கை ஸ்நானம் செய்வது, தீர்த்தங்கள் ஆகியவற்றிற்குச் செல்வது
ஆகிய இவை அனைத்தும் பக்தி காண்டமாகும். பாரதத்தில் உண்மையில்
இராவணனும் இருக்கிறார். அவனுக்கு கொடும்பாவி செய்து எரிக்கிறார்
கள். அப்படியும் எதிரிகளுக்கு குறுகிய காலத்திற்கு கொடும்பாவி
செய்து எரிக்கிறார்கள். இந்த ஒரு இராவணனுடைய கொடும்பாவி ஒவ்வொரு
வருடமும் எரித்தபடியே வந்துள்ளார்கள். தந்தை கூறுகிறார் -
நீங்கள் தங்கயுக புத்தி யிலிருந்து இரும்பு யுக புத்தியாக ஆகி
உள்ளீர்கள். நீங்கள் எவ்வளவு சுகமுடையவார்களாக இருந்தீர்கள்.
தந்தை வருவதே சுகதாமத்தின் ஸ்தாபனை செய்வதற்காக. பிறகு பக்தி
மார்க்கம் பின்னால் ஆரம்பமாகும் பொழுது துக்கமுடையவர்களாக
ஆகிறார்கள். பிறகு சுகமளிக்கும் வள்ளலை நினைவு செய்கிறார்கள்.
அது கூட பெயரளவில்! ஏனெனில், அவரை அறியாமல் உள்ளார்கள்.
கீதையில் பெயரை மாற்றி விட்டுள்ளார்கள். உயர்ந்த திலும்
உயர்ந்த பகவான் ஒருவர் ஆவார், அவரைத் தான் நினைவு செய்ய
வேண்டும் என்பதை முதன் முதலில் நீங்கள் புரிய வையுங்கள். ஒருவரை
நினைவு செய்வது அதற்குத் தான் கலப்படமற்ற (அவ்யபிசாரி) நினைவு,
கலப்படமற்ற ஞானம் என்று கூறப்படுகிறது. நீங்கள் இப்பொழுது
பிராமணர் ஆகி உள்ளீர்கள். எனவே பக்தி செய்வதில்லை. உங்களுக்கு
ஞானம் இருக்கிறது. தந்தை கற்பிக்கிறார். இதன் மூலம் நாம் இந்த
தேவதை ஆகிறோம். தெய்வீக குணங் களையும் தாரணை செய்யவேண்டும்.
எனவே நீங்கள் சார்ட் வைத்தீர்கள் என்றால், உங்களுக்குள் எந்த
ஒரு அசுர குணமும் இல்லை என்று தெரிய வரும் என்று பாபா
கூறுகிறார். தேக அபிமானம் என்பது முதலாவது ஆகும். பிறகு அடுத்த
எதிரி காமம். காமத்தின் மீது வெற்றி அடையும் பொழுதே நீங்கள்
உலகத்தை வென்றவராகி விடுவீர்கள். உங்களுடைய உத்தேசமே இது தான்.
இந்த இலட்சுமி நாராயணருடைய இராஜ்யத்தில் அநேக தர்மங்கள்
இருக்கவில்லை. சத்யுகத்தில் தேவதைகளின் இராஜ்யம் தான் இருக்கும்.
மனிதர்கள் கலி யுகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கூட மனிதர்கள்
தான். ஆனால் தெய்வீக குணங்கள் உடையவர்கள். இச்சமயம் அனைத்து
மனிதர் களும் அசுர குணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள்.
சத்யுகத்தில் காமம் என்ற மகா எதிரி இருப்பதில்லை. இந்த காமம்
என்ற மகா எதிரி மீது வெற்றி அடைவதால் நீங்கள் உலகத்தை வென்றவர்
ஆகிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். அங்கு இராவணன்
இருப்பதில்லை. இதையும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாமல்
இருக்கிறார்கள். தங்க யுகத்தியிலிருந்து இறங்கி இறங்கி
தமோபிரதான புத்தி உடையவர்களாக ஆகி உள்ளார்கள். இப்பொழுது
மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். அதற்காக ஒரே ஒரு மருந்து
கிடைக்கிறது - தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு
செய்தீர் கள் என்றால், ஜன்ம ஜன்மாத்திரத்தின் பாவங்கள்
சாம்பலாகி விடும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள்
அமர்ந்திருப்பதே பாவங்களை சாம்பலாக்க. எனவே மேற் கொண்டு பாவம்
செய்யக் கூடாது. இல்லை என்றால் அது நூறு மடங்கு ஆகி விடும்.
விகாரத்தில் சென்றீர்கள் என்றால் நூறு மடங்கு தண்டனை ஏற்பட்டு
விடும். பிறகு அவர்களால் ஏற முடிவது கடினமாக இருக்கும். இந்த
காமம் முதல் நம்பர் எதிரி ஆகும்.5 அடுக்கு மாடி யிலிருந்து
விழுந்தார்கள் என்றால் எலும்புகள் முற்றிலுமே நொறுங்கிப் போய்
விடும். ஒரு வேளை இறந்தும் போகலாம். மேலிருந்து விழுவதால்
ஒரேயடியாக சுக்கு நூறு ஆகி விடுகிறார்கள். தந்தையிடம் கொடுத்த
வாக்குறுதியை மீறி கருப்பு முகமாக ஆக்கினார் என்றால் அசுர
உலகத்திற்குச் சென்று விடுவார். அதாவது இங்கிருந்து இறந்து
விட்டார். அவரை பிராமணர் என்றும் கூற மாட்டார்கள். சூத்திரர்
என்றே அழைக்கப்படுவார்கள்.
தந்தை எவ்வளவு சுலபமாகப் புரிய வைக்கிறார். முதலிலேயே இந்த போதை
இருக்க வேண்டும். ஒரு வேளை கிருஷ்ண பகவானின் மகா வாக்கியம்,
என்று இருந்திருந்தாலும் கூட அவரும் அவசியம் படிப்பித்து
தனக்குச் சமமாக ஆக்குவார் அல்லவா? ஆனால் கிருஷ்ணரோ பகவான் ஆக
முடியாது. அவரோ மறு பிறவியில் வருகிறார். நான் மறு பிறப்பு
அற்றவன் ஆவேன் என்றே தந்தை கூறுகிறார். இராதை கிருஷ்ணர் லட்சுமி
நாராயணர் அல்லது விஷ்ணு ஒரே ஒரு விஷயம் ஆகும். விஷ்ணுவின்
இரண்டு ரூபம் லட்சுமி நாராயணர் மற்றும் லட்சுமி நாராயணருடைய
குழந்தைப் பருவமே இராதை கிருஷ்ணர் ஆகும். பிரம்மாவின் ரகசியம்
கூட புரிய வைத்துள்ளார். பிரம்மா சரஸ்வதி தான் லட்சுமி நாராயணர்.
இப்பொழுது டிரான்ஸ்ஃபர் ஆகிறார்கள். கடைசியில் இவருடைய பெயர்
பிரம்மா என்று வைக்கப்படுள்ளது. மற்றபடி இந்த பிரம்மாவையோ
பாருங்கள். ஒரேயடியாக இரும்பு யுகத்தில் நின்றுள்ளார். இவரே
பிறகு தவம் செய்து கிருஷ்ணர் அல்லது ஸ்ரீநாராயணர் ஆகிறார்.
விஷ்ணு என்று கூறும் பொழுது அதில் இருவரும் வந்து விடுகிறார்கள்.
பிரம்மாவின் மகள் சரஸ்வதி ஆவார். இந்த விஷயங்களை யாரும்
புரிந்து கொள்ள முடியாது. 4 புஜங்கள் பிரம்மாவிற்கும்
கொடுக்கிறார்கள். ஏனெனில் இல்லற மார்க்கம் ஆகும் அல்லவா? துறவற
மார்க்கத்தினர் இந்த ஞானம் கொடுக்க முடியாது. நிறைய பேரை
வெளிநாடுகளிலிருந்து தன் வசமாக்கி கூட்டி வருகிறார்கள். போகலாம்
வாருங்கள், நாங்கள் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறோம்
என்கிறார்கள். இப்பொழுது சந்நியாசிகள் இராஜயோகம் கற்பிக்க
முடியாது. இப்பொழுது இறைவன் வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது
அவருடைய குழந்தைகள் ஈசுவரிய சம்பிரதாயத்தினராக ஆகி உள்ளீர்கள்.
இறைவன் உங்களுக்கு கற்பிக்க வந்துள்ளார். உங்களுக்கு இராஜயோகம்
கற்பித்து கொண்டிருக்கிறார். அவரோ நிராகாரமானவர் ஆவார். பிரம்மா
மூலமாக உங்களை தன்னுடையவராக ஆக்கி உள்ளார். பாபா பாபா என்று
நீங்கள் அவருக்கு கூறுகிறீர்கள். பிரம்மாவோ இடையில் விளக்கம்
தருபவர் பாக்கியசாலி ரதம் ஆவார். இவர் மூலமாக பாபா உங்களுக்குக்
கற்பிக்கிறார். நீங்கள் கூட தூய்மை இல்லாத நிலையிலிருந்து
தூய்மையாக ஆகிறீர்கள்.மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குவதற்காக
தந்தை கற்பிக்கிறார். இப்பொழுதோ இராவண ராஜ்யம், அசுர
சம்பிரதாயம் ஆகும் அல்லவா? இப்பொழுது நீங்கள் ஈசுவரிய
சம்பிரதாய மாக ஆகி உள்ளீர்கள். பிறகு தெய்வீக
சம்பிரதாயத்தினராக ஆகிவிடுவீர்கள். இப்பொழுது நீங்கள்
புருஷோத்தம சங்கமயுகத்தில் உள்ளீர்கள். தூய்மை யானவர்களாக ஆகிக்
கொண்டு இருக்கிறீர்கள். சந்நியாசிகள் வீடு வாசலை விட்டு
விட்டுச் செல்கிறார்கள். இங்கு தந்தையோ கூறுகிறார் - கணவன்
மனைவி வீட்டில் தாராளமாக சேர்ந்திருங்கள். பெண் என்பவர் ஒரு
பெண் பாம்பை போல. அதனால் நாம் பிரிந்து போய் விட்டோம் என்றால்,
விடுபட்டு விடுவோம் என்று நினைக்கா தீர்கள். நீங்கள் ஓட
வேண்டியது இல்லை. அவ்வாறு ஓடுபவர்களுடையது எல்லைக்குட்பட்ட
சந்நியாசம் ஆகும். நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். ஆனால்
உங்களுக்கு இந்த விகாரி உலகத்தின் மீது வைராக்கியம் உள்ளது.
இந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் நல்ல முறையில் தாரணை செய்ய
வேண்டும். குறித்து கொள்ள வேண்டும். மேலும் கட்டுப்பாடு கூட
மேற் கொள்ள வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணரின் குணங்கள் பாடப்படுகின்றது அல்லவா? இது
உங்களுடைய லட்சியம் மற்றும் நோக்கமாகும். தந்தை அப்படி ஆவது
இல்லை. உங்களை அவ்வாறு ஆக்குகிறார். பிறகு அரைக் கல்பத்திற்கு
பின்னர் நீங்கள் கீழே இறங்கி தமோபிரதானமாக ஆகிறீர்கள். நான்
ஆவது இல்லை. இவர் ஆகிறார். 84 பிறவிகள் கூட இவர் எடுத்துள்ளார்.
இவரும் கூட இப்பொழுது சதோபிரதானமாக ஆக வேண்டி உள்ளது. இவர் (புருஷார்த்தி)
முயற்சியாளர் ஆவார். புது உலகத்தை சதோபிரதானமானது என்று
கூறுவார்கள். ஒவ்வொரு பொருளும் முதலில் சதோபிர தானமாக இருக்கும்.
பிறகு சதோ ரஜோ தமோவில் வருகிறது. சிறிய குழந்தை களுக்கு கூட
மகாத்மா என்று கூறப்படுகிறது. ஏனெனில், அவர்களிடம் விகாரம்
இருப்ப தில்லை. எனவே அவர்களுக்கு மலர் என்று கூறப்படுகிறது.
சந்நியாசிகளை விட சிறிய குழந்தைகளை உத்தமமானவர்கள் என்று
கூறுவார்கள். ஏனெனில் சந்நியாசிகளோ பிறகும் வாழ்க்கையைக் கடந்து
தான் வருகிறார்கள் அல்லவா? 5 விகாரங்களின் அனுபவம் இருக்கிறது.
குழந்தைகளுக்கோ அது பற்றித் தெரியாது. எனவே குழந்தைகளைப்
பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. உயிரூட்டமுள்ள மலர்கள்
ஆவார்கள். நம்முடையதோ இருப்பதே இல்லற மார்க்கமாக !
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த பழைய உலகத்திலிருந்து
புது உலகிற்குச் செல்ல வேண்டும். அமரலோகத்திற்குச் செல்வதற்காக
நீங்கள் எல்லோரும் முயற்சி செய்கிறீர்கள். மரண உலகத்திலிருந்து
டிரான்ஸ்ஃபர் ஆகிறீர்கள். தேவதை ஆக வேண்டும் என்றால் அதற்காக
இப்பொழுது முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் சகோதர சகோதரி ஆகி விடுகிறார்கள். சகோதர சகோதரிகளாக
இருந்தீர்கள் அல்லவா? பிரஜாபிதா பிரம்மா வின் குழந்தைகள்
தங்களுக்குள் என்ன ஆகிறார்கள்? பிரஜாபிதா பிரம்மா என்று
பாடப்படுகிறது. பிரஜா பிதாவின் குழந்தை ஆகாதவரைக்கும்
சிருஷ்டியின் படைப்பு எப்படி ஆக முடியும்? பிரஜாபிதா
பிரம்மாவிற்கு எல்லோரும் ஆன்மீகக் குழந்தைகள் ஆவார்கள். அந்த
பிராமணர்கள் ஸ்தூல யாத்திரை யினர் ஆவர். நீங்கள் ஆன்மீக
யாத்திரையினர். அவர்கள் அசுத்தமானவர்கள். நீங்கள் தூய்மை
யானவர்கள். அவர்கள் ஒன்றும் பிரஜாபிதாவின் குழந்தைகள் அல்ல. இதை
நீங்கள் புரிந்துள்ளீர்கள். சதோதர சகோதரி என்று உணர்ந்தால்
விகாரத்தில் செல்ல மாட்டார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள் என்று
தந்தையும் கூறுகிறார். என்னுடைய குழந்தையாக ஆகி எந்த ஒரு (கிரிமினல்)
குற்றமான செயலும் செய்யாதீர்கள். இல்லை என்றால் கல்புத்தி
ஆகிவிடுவீர்கள். இந்திர சபையின் கதை கூட இருக்கிறது அல்லவா?
சூத்திரரை கூட்டி வந்ததால் இந்திர சபையில் அவரது துர்நாற்றம்
வீச ஆரம்பித்தது. பிறகு அவருக்கு சாபம் கொடுத்து விட்டார்.
உண்மையில் இந்த சபையில் கூட எந்த ஒரு பதீதமானவரும் (தூய்மையற்றவர்)
வர முடியாது. இந்த தந்தைக்குத் தெரியுமோ இல்லையோ, தங்களுக்குத்
தாங்களே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் மேலும்
நூறு மடங்கு தண்டனை ஏற்பட்டு விடுகிறது. (பதீதமானவர்கள்)
தூய்மையற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்களுக்கு (விஸிட்டிங்
ரூம்) வரவேற்பு அறை போதுமானது. தூய்மை ஆவதற்கான உத்திரவாதம்
கொடுத்தால், தெய்வீக குணங்களை தாரணை செய்தால், பிறகு தான்
அனுமதிக்க வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் நேரம்
பிடிக்கிறது. தூய்மை ஆவதற்கான ஒரே ஒரு வாக்குறுதி ஆகும்.
தேவதைகள் மற்றும் பரமாத்மாவின் மகிமை தனித் தனி ஆகும் என்பதும்
புரிய வைக்கப் பட்டுள்ளது. பதீத பாவனர், லிபரேட்டர், கைடு ஒரே
ஒரு தந்தையே ஆவார். எல்லா துக்கங்களி லிருந்தும் விடுவித்து
தன்னுடைய சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். சாந்தி
தாமம், சுக தாமம் மற்றும் துக்க தாமம் இதுவும் சக்கரம் ஆகும்.
இப்பொழுது துக்க தாமத்தை மறந்து விட வேண்டும். யார்
வரிசைக்கிரமமாக தேர்ச்சி அடை கிறார்களோ அவர்களே
சாந்திதாமத்திலிருந்து சுக தாமத்திற்கு வருவார்கள். அவர்கள்
தான் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்கிறது. ஏராளமான ஆத்மாக்கள் இருக்கிறார்கள். எல்லோருடைய
பாகமும் வரிசைக்கிரமமாக உள்ளது. செல்வது கூட வரிசைக்கிரமமாக.
அதற்கு சிவபாபாவின் பரம்பரை அல்லது ருத்ரமாலை என்று
கூறப்படுகிறது. வரிசைக்கிரமமாக செல்கிறார்கள் மற்றும் வரிசைக்
கிரமமாக வருகிறார்கள். மற்ற தர்மத்தினருடையதும் அவ்வாறே ஆகிறது.
குழந்தைகளுக்கு தினமும் புரிய வைக்கப் படுகிறது. பள்ளிக்
கூடத்தில் தினமும் படிக்கவில்லை, முரளி கேட்கவில்லை என்றால்
ஆப்சென்ட் (வராதவராக) ஆகி விடுவீர்கள். படிப்பினுடைய லிஃப்ட் (உயர்த்தும்
சாதனம்) அவசியம் வேண்டும். காட்லி யுனிவர்சிட்டியில் ஆப்சென்ட்
ஆகலாமா என்ன? படிப்பு எவ்வளவு உயர்ந்தது ! இதன் மூலம் நீங்கள்
சுகதாமத்திற்கு அதிபதி ஆகிறீர்கள். அங்கோ தானியங்கள் எல்லாமே
இலவசமாக கிடைக்கும். பைசா கொடுக்க வேண்டி இருக்காது. இப்பொழுதோ
எவ்வளவு விலைவாசி உயர்ந்து விட்டுள்ளது. 100 வருடங்களுக் குள்
எவ்வளவு விலை அதிகமாக ஆகி விட்டுள்ளது .அங்கு கஷ்டப்படும்
வகையில் எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்றே இருக்காது. அது
இருப்பதே சுகதாமமாக. நீங்கள் இப்பொழுது அங்கு செல்வ தற்காக
ஏற்பாடு செய்து கெண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏழை யிலிருந்து
இளவரசர் ஆகிறீர்கள். பணக்காரர்கள் தங்களை ஏழை என்று நினைப்ப
தில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையிடம் முழுமையாக தூய்மை ஆவதற்கான வாக்குறுதி
இருக்கின்றது. அந்த வாக்குறுதியை விட்டு விடக் கூடாது. மிக மிக
பத்தியத்துடன் இருக்க வேண்டும். எனக்குள் எந்த ஒரு அவகுணம்
இல்லையே என்று தங்களது சார்ட் (பதிவேடு) வைக்க வேண்டும்.
2. காட்லி யுனிவர்சிட்டியில் ஒரு பொழுதும் ஆப்ஸென்ட் ஆகக்
கூடாது. (இறைவனின் பல்கலை கழகத்தில் ஒருபோதும் வராமல் இருக்கக்
கூடாது) சுக தாமத்திற்கு அதிபதி ஆவதற்கான உயர்ந்த படிப்பை ஒரு
நாளும் தவற விடக் கூடாது. தினமும் முரளியை அவசியம் கேட்க
வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு எண்ணத்தின் மகத்துவத்தை அறிந்து
புண்ணியத்தின் மூலதனத்தை சேமிப்பு செய்யக்கூடிய பத்மாபதம்பதி
ஆகுக.
புண்ணிய ஆத்மாக்களாகிய உங்களுடைய சங்கல்பத்தில் அந்தளவு விசேஷ
சக்தி இருக் கின்றது, அந்த சக்தி மூலம் அசம்பவத்தைக் கூட
சம்பவம் ஆக்கமுடிகிறது. எவ்வாறு தற்காலத் தில் இயந்திரங்களின்
மூலம் பாலைவனத்தைக் கூட பசுமை நிறைந்ததாக ஆக்கிவிடுகின்றார்கள்,
மலைகளின் மீது மலர்களை மலரச் செய்கின்றார்கள், அதுபோல், நீங்கள்
தங்களுடைய சிரேஷ்ட எண்ணங்களின் மூலம் நம்பிக்கையற்றவர்களை
நம்பிக்கை உடையவர்களாக ஆக்கமுடியும். ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு
சங்கல்பத்தின் மதிப்பை மட்டும் அறிந்துகொண்டு, சங்கல்பம்
மற்றும் நொடியை பயன்படுத்தி புண்ணியத்தின் மூலதனத்தை சேமிப்பு
செய்யுங்கள். உங்களுடைய சங்கல்ப சக்தி அந்தளவு சிரேஷ்டமானது,
உங்களுடைய ஒரு சங்கல்பம் கூட உங்களை பத்மாபதம்பதியாக (பல கோடி
மடங்கு பாக்கியவான்) ஆக்கிவிடுகிறது.
சுலோகன்:
அதிகாரி என்ற நம்பிக்கை மற்றும் போதையோடு ஒவ்வொரு கர்மமும்
செய்தீர்கள் என்றால் கடின உழைப்பு முடிவடைந்துவிடும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
கர்மாதீத ஸ்திதியை அடைவதற்காக விசேஷமாக தனக்குள் தயாராகும்
சக்தி மற்றும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை தாரணை செய்வது
அவசியமானதாகும். கர்மபந்தனம் உள்ள ஆத்மாக்கள் எங்கே
இருக்கின்றார்களோ, அங்கே மட்டுமே காரியம் செய்யமுடிகிறது
மற்றும் கர்மாதீத் ஆத்மாக்கள் ஒரே நேரத்தில் நாலாபுறங்களிலும்
தங்களுடைய சேவைக்கான பாகத்தை நடிக்க முடிகிறது, ஏனெனில்,
கர்மாதீத்தாக இருக்கின்றார்கள். அவர்களுடைய வேகம் மிகவும்
தீவரமாக உள்ளது, நொடியில் எங்கு விரும்புகின்றார்களோ, அங்கு
சென்றடைய முடியும், எனவே, இந்த அனுபவத்தை அதிகரித்திடுங்கள்.