30-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! மாயை எதிரி உங்கள் முன்னால் இருக்கிறது ஆகையினால் தங்களை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஒருவேளை போகப்போக மாயையிடம் மாட்டிக் கொண்டீர்கள் என்றால் தங்களுடைய அதிர்ஷ்டத்தில் குறுக்குக்கோடு (வரையரை) போட்டு விடுவீர்கள்

கேள்வி:
இராஜயோகி குழந்தைகளாகிய உங்களுடைய முக்கிய கடமை என்ன?

பதில்:
படிப்பது மற்றும் படிப்பிப்பது, இது தான் உங்களுடைய முக்கிய கடமையாகும். நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடக்கிறீர்கள். நீங்கள் ஒன்றும் காட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை. வீடு குடும்பத்தில் இருந்து கொண்டே அமைதியாக அமர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். அல்லா மற்றும் ஆஸ்தி, இந்த இரண்டு வார்த்தைகளிலேயே உங்களுடைய படிப்பு முழுவதும் வந்து விடுகிறது.

ஓம் சாந்தி.
பாபாவும் கூட பிரம்மாவின் மூலம் குட் மார்னிங் என்று சொல்கிறார். ஆனால் குழந்தைகளும் உடன் பதில் கொடுக்க வேண்டும். இங்கே தந்தை மற்றும் குழந்தையுடனான தொடர்பு தான் இருக்கிறது. எதுவரை முழுமையாகவில்லையோ, அதுவரை புதியவர்கள் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இது படிப்பாகும், பகவானுடைய மகாவாக்கியம் என்று எழுதப் பட்டுள்ளது. பகவான் நிராகாரமானவராவார். யாருக்கும் புரிய வைப்பதற்கு இதை பாபா நல்ல விதத்தில் உறுதியாக்குகின்றார். ஏனென்றால் அந்தப் பக்கம் மாயையின் வேகம் இருக்கிறது. இங்கே அந்த விசயம் இல்லை. யாரெல்லாம் கல்பத்திற்கு முன்னால் ஆஸ்தி எடுத்திருந்தார் களோ, அவர்கள் தாங்களாகவே வந்து விடுவார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இன்னார் வெளியேறி விடக்கூடாது, இவரை பிடித்து வைக்க வேண்டும் என்பது கிடையாது. போகிறார்கள் என்றால் போகட்டும். இங்கு வாழ்ந்து கொண்டே இறக்கும் விசயமாகும். பாபா தத்தெடுக்கின்றார். ஏதாவது ஆஸ்தியை அளிப்பதற்குத் தான் தத்தெடுக்கப்படுகிறது. குழந்தைகள் ஆஸ்தியின் ஆசையில் தான் தாய்-தந்தையரிடம் வருகிறார்கள். செல்வந்தர்களின் குழந்தைகள் ஏழைகளிடம் எப்போதாவது தத்தெடுக்கப்படுவார்களா என்ன! இவ்வளவு செல்வம் சொத்துக்கள் போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு எப்படி செல்வார்கள்? செல்வந்தர்கள் தான் தத்தெடுப்பார்கள். பாபா நமக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர் கள். ஏன் நாம் அவருடையவர்களாக ஆகக் கூடாது. ஒவ்வொரு விசயத்திலும் ஆசை என்பது இருக்கத் தான் செய்கிறது. எந்தளவிற்கு அதிகமாக படிக்கிறார்களோ அந்தளவிற்கு அதிகமாக ஆசை இருக்கும். எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்காக பாபா நம்மை தத்தெடுத்திருக் கின்றார் என்பதை நீங்களும் தெரிந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போலவே மீண்டும் தத்தெடுக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். பாபா நாங்கள் தங்களுடையவர்கள் என்று நீங்களும் கூறுகின்றீர்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட தங்களுடையவர்களாக ஆகியிருந்தோம். நடைமுறையில் எவ்வளவு பிரம்மாகுமார-குமாரிகள் இருக்கின்றீர்கள். பிரஜாபிதாவும் கூட பெயர்பெற்றவராக இருக்கின்றார். எதுவரை சூத்திரனிலி ருந்து பிராமணனாக ஆகவில்லையோ, அதுவரை தேவதைகளாக ஆக முடியாது. நாம் சூத்திரர் களாக இருந்தோம், இப்போது பிராமணர்களாக ஆகியிருக்கிறோம் பிறகு தேவதைகளாக ஆக வேண்டும், என்ற இந்த சக்கரம் உங்களுடைய புத்தியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் சத்யுகத்தில் இராஜ்யம் செய்வோம். எனவே இந்தர் பழைய உலகம் கண்டிப்பாக வினாசம் ஆகத்தான் வேண்டும். முழுமையாக நிச்சயம் ஏற்படவில்லை யென்றால் சென்று விடுகிறார்கள். நிறைய குழந்தைகள் விழுந்து மாறி விடுகிறார்கள், இது கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. மாயை எதிரி முன்னால் நிற்கிறது எனும்போது அது தன்பக்கம் இழுத்துக் கொள்கிறது. மாயை யிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது, இல்லையென்றால், தங்களுடைய அதிர்ஷ்டத்தில் குறுக்குக் கோடு (குறையாகி) விழுந்து விடும் என்று பாபா அடிக்கடி உறுதி செய்து கொள்ள வைக்கின்றார். முன்னால் எப்போதாவது சந்தித்துள்ளீர்களா என்று பாபா தான் கேட்க முடியும் வேறு யாருக்கும் இப்படிக் கேட்கும் புத்தி வரவே வராவது. மீண்டும் கீதையை சொல்வதற்கு நான் வர வேண்டி யிருக்கும் என்று பாபா கூறுகின்றார். வந்து இராவணனுடைய சிறையிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற விசயத்தைப் புரிய வைக்கின்றார். இப்போது இராவணனுடைய இராஜ்யமாக இருக்கிறது, தூய்மையற்ற இராஜ்யமாக இருக்கிறது, இது அரைக்கல்பத்திலிருந்து ஆரம்பானது. இராவணனுக்கு 10 தலைகளைக் காட்டுகிறார்கள், விஷ்ணு விற்கு 4 கைகளைக் காட்டுகிறார்கள். இப்படி எந்த மனிதர்களும் இருக்க மாட்டார்கள். இது இல்லற மார்க்கத்தைக் காட்டு கிறார்கள். இது தான் குறிக்கோளாகும், விஷ்ணுவின் மூலம் வளர்ப்பு. விஷ்ணுபுரியை கிருஷ்ணபுரி என்றும் சொல்கிறார்கள். கிருஷ்ணருக்கு 2 கைகளைத் தான் காட்டு வார்கள் அல்லவா? மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதே இல்லை. பாபா ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைக்கின்றார். அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இப்போது உங்களுக்கு ஞானம் இருக்கிறது, உங்களுடைய குறிக்கோளே நரனிலிருந்து நாராயணன் ஆவதாகும். இந்த கீதை பாடசாலையே ஜீவன் முக்தியை அடைவதற்காக ஆகும். கண்டிப்பாக பிராமணர்கள் வேண்டும். இது ருத்ர ஞான யக்ஞமாகும். சிவனை ருத்ரன் என்று சொல்கிறார்கள். ஞான யக்ஞம் கிருஷ்ணருடையதா அல்லது சிவனுடையதா? என்று இப்போது பாபா கேட்கிறார். சிவனை பரமாத்மா என்று தான் சொல்கிறார்கள், சங்கரரை தேவதை என்று சொல்கிறார்கள். அவர்கள் சிவன் மற்றும் சங்கரை ஒன்றாக்கி விட்டார்கள். நான் இவருக்குள் பிரவேசித்திருக்கின்றேன் என்று இப்போது பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதா என்று சொல்கிறீர்கள். அவர்கள் சிவசங்கர் என்று சொல்கிறார்கள். ஞானக்கடல் ஒருவரே ஆவார்.

பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக ஞானத்தின் மூலம் ஆகின்றார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சித்திரங்களையும் சரியாக உருவாக்குகிறார்கள். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார். இதனுடைய அர்த்தத்தைக் கூட யாரும் புரிந்து கொள்ள முடியாது. பிரம்மாவின் கைகளில் சாஸ்திரங்களைக் காட்டியுள்ளனர். இப்போது சாஸ்திரங்களின் சாரத்தை பாபா வந்து சொல்கிறாரா? அல்லது பிரம்மாவா? இவர் கூட மாஸ்டர் ஞானக்கடலாக ஆகின்றார். மற்றபடி இவ்வளவு அதிகமான சித்திரங்கள் உருவாக்கியிருக்கிறார்களே, அவை ஒன்றும் யதார்த்தமான வைகள் அல்ல. அவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவைகளாகும். 8-10 கைகளையுடைய மனிதர்கள் யாரும் இருப்பதில்லை. இது குடும்ப மார்க்கத்தைக் காட்டுவதற்காகவே ஆகும். அரைக்கல்பம் இராவண இராஜ்யம், இரவு என்று இராவணன் என்பதின் அர்த்தத்தையும் கூறியுள்ளார். அரைக்கல்பம் இராமராஜ்யம், பகலாகும். பாபா ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைக்கின்றார். நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளாவீர்கள். பாபா பிரம்மாவின் மூலம் விஷ்ணு புரியினை ஸ்தாபனை செய்விக்கின்றார் மற்றும் உங்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றார். கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் இராஜயோகத்தை கற்றுக் கொடுப்பார். துவாபர யுகத்தில் கீதை சொன்னார் என்பது தவறாகி விடுகிறது. பாபா உண்மையைக் கூறு கின்றார். நிறைய பேருக்கு பிரம்மாவினுடைய, கிருஷ்ணருடைய காட்சி கிடைக்கிறது. பிரம்மா வினுடைய வெள்ளை உருவத்தைத் தான் பார்க்கிறார்கள். சிவபாபா புள்ளியாக இருக்கின்றார். புள்ளியின் காட்சி கிடைத்தால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் ஆத்மாக்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆத்மாவைப் பார்த்தது யார்? யாருமே இல்லை. அது புள்ளியாக இருக்கிறது. புரிந்து கொள்ள முடியும் அல்லவா? யார் எந்த பாவனையில் யாருடைய பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த காட்சியே ஏற்படும். ஒருவேளை வேறு எந்த ரூபத்தையாவது பார்த்தார்கள் என்றால் குழம்பி விடுவார்கள். ஹனுமானுடைய பூஜை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு அவரேதான் காட்சியாகத் தெரிவார். கணேசனின் பூஜாரியாக இருந்தால் அவர் தான் தெரிவார். நான் உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக மாற்றினேன்! வைர வைடூரியங்களினால் ஆன மாளிகைகள் இருந்தன! உங்களுக்கு அளவிட முடியாத செல்வம் இருந்தது, நீங்கள் இப்போது அவையனைத்தையும் எங்கே இழந்தீர்கள்? என்று பாபா கேட்கின்றார் இப்போது நீங்கள் ஏதும் இல்லாதவர்களாக ஆகி விட்டீர்கள், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபா சொல்லலாம் அல்லவா? பாபா வந்திருக்கிறார், நாம் மீண்டும் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். இந்த நாடகம் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் நாடகத்தில் அவரவருடைய நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு சரீரத்தை விட்டு விட்டு சென்று மற்றொன்றை எடுக்கிறார்கள், இதில் அழுவதற்கான விசயம் என்ன இருக்கிறது? சத்யுகத்தில் ஒருபோதும் அழுவதில்லை. இப்போது நீங்கள் மோகத்தை வென்றவர்களாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். இந்த இலஷ்மி-நாராயணன் போன்றவர்கள் மோகத்தை வென்ற இராஜாக்களாவர். அங்கே மோகம் (பற்று) இருப்பதில்லை. பாபா அனேக விதமான விசயங்களைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். பாபா நிராகாரமானவராக இருக்கின்றார். மனிதர்கள் அவரை பெயர்-ரூபத்திலிருந்து விடுபட்டவர் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் பெயர்- ரூபத்திலிருந்து விடுபட்ட பொருள் ஏதாவது இருக்கிறதா என்ன? ஹே பகவான், ஓ இறை தந்தையே என்று சொல்கிறார்கள் அல்லவா? எனவே பெயர்-ரூபம் இருக்கிறது அல்லவா? லிங்கத்தை சிவ பரமாத்மா, சிவபாபா என்றும் சொல்கிறார்கள். உண்மையில் தந்தை அல்லவா? பாபாவிற்கு கண்டிப்பாக குழந்தைகளும் இருப்பார்கள் அல்லவா. நிராகாரமானவரை நிராகாரமான ஆத்மா தான் பாபா என்று சொல்கிறது. கோயிலுக்கு சென்றீர்கள் என்றால் அவரை சிவபாபா என்று சொல்வீர்கள் பிறகு வீட்டிற்கு வந்து தந்தையையும் பாபா என்று சொல்கிறார்கள். அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை, நாம் அவரை ஏன் சிவபாபா என்று சொல்கிறோம். பாபா பெரியதிலும் பெரிய படிப்பை இரண்டு வார்த்தைகளில் படிப்பிக்கின்றார் - அல்லா மற்றும் ஆஸ்தி. அல்லாவை நினைவு செய்தீர்கள் என்றால் இராஜ்யம் உங்களுடையது. இது மிகப்பெரிய தேர்வாகும். மனிதர்கள் பெரிய தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால் முதலில் உள்ள படிப்பை நினைவு வைத்துக் கொள்கிறார்களா என்ன? படித்து-படித்து கடைசியில் சாரம் புத்தியில் வந்து விடுகிறது. இது கூட அப்படித் தான் இருக்கிறது. நீங்கள் படித்துக் கொண்டே வந்துள்ளீர்கள். கடைசியில் பாபா கூறுகின்றார் மன்மனாபவ, அப்போது தேகத்தின் அபிமானம் உடைந்து விடும். இந்த மன்மனாபவ என்பதை பழக்கமாக்கிக் கொண்டால் கடைசியிலும் பாபா மற்றும் ஆஸ்தியும் நினைவில் இருக்கும். முக்கியமானதே இது தான். எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது! அந்த படிப்பில் கூட இப்போது என்னென்ன படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எப்படி இராஜாவோ அப்படி அவர் தன்னுடைய வழக்கத்தை நடத்துகிறார். முன்பு மண் 40 கிலோ கிராம், சேர், பாவு போன்ற எடைக்கணக்கு நடந்தது. இப்போது கிலோ போன்ற அளவு முறை வந்திருக்கிறது. எத்தனை தனித்தனியான பிராந்தியங்களாகி விட்டது. தில்லியில் ஒரு சேர் ஒரு ரூபாய்க்கு கிடைப்பது பாம்பேயில் இரண்டு ரூபாய்க்குத் தான் கிடைக்கும், ஏனென்றால் தனித்தனி பிராந்தியங்களாகும். நாங்கள் எங்களுடைய பிராந்தியத்தை பட்டினியில் சாக விடுவோமா என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். எவ்வளவு சண்டை போன்றவைகள் நடக்கின்றன! எவ்வளவு குழப்பங்கள் இருக்கிறது!

பாரதம் எவ்வளவு தன்னிறைவு பெற்றதாக இருந்தது. பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி எதுவும் இல்லாததாக ஆகி விட்டது. வைரத்தைப் போன்ற வாழ்வு கிடைத்தும் சோழிகளைப் போல வீணடித்தார் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் சோழிகளுக்குப் பின்னால் ஏன் சாகின்றீர்கள் என்று பாபா கேட்கின்றார். இப்போது பாபா விடமிருந்து ஆஸ்தியை அடையுங்கள், தூய்மையாக ஆகுங்கள். ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்கு பவரே! வாருங்கள், வந்து தூய்மை யாக்குங்கள்! என்று அழைக்கவும் செய்கிறீர்கள். எனவே இதன்மூலம் தூய்மையாக இருந்தார்கள் என்பது நிரூபணம் ஆகிறது, இப்போது இல்லை. இப்போது நடப்பதே கலியுகமாகும். நான் தூய்மை யான உலகத்தை உருவாக்குகின்றேன் என்றால் கண்டிப்பாக தூய்மையற்ற உலகம் வினாசம் ஆகும் ஆகையினால் தான் இந்த மகாபாரத சண்டை இருக்கிறது. இது ருத்ர ஞான யக்ஞத் திலிருந்து வெளி வந்திருக்கிறது என்று பாபா கூறுகின்றார். இந்த வினாசம் ஆவதும் கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. முதல்-முதலில் பாபாவிற்கு காட்சி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய இராஜ்யம் கிடைக்கிறது என்பதைப் பார்க்கும் போது மிகவும் குஷி அடைந்து விட்டார், பிறகு வினாசத்தின் காட்சியும் காட்டினார். மன்மனாபவ மத்யாஜி பவ. இது கீதையின் வார்த்தைகள் ஆகும். கீதையின் ஒருசில வார்த்தைகள் சரியாக இருக்கிறது. பாபா கூட சொல்கிறார் - நான் உங்களுக்கு இந்த ஞானத்தை சொல்கிறேன். இது பிறகு மறைந்து போய்விடுகிறது. இலட்சுமி நாராயணன் இராஜ்யம் இருந்தது, அப்போது வேறெந்த தர்மமும் இருக்கவில்லை என்று யாருக்கும் தெரியாது. அப்போது மக்கள் தொகை எவ்வளவு குறைவாக இருந்திருக்கும்! இப்போது எவ்வளவு அதிகமாகிவிட்டது! இது மாற வேண்டும். வினாசமும் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். மஹாபாரத சண்டையும் நடக்க வேண்டும். பகவானும் கண்டிப்பாக வந்திருப்பார் அல்லவா! சிவஜெயந்தி கொண்டாடுகிறோம் என்றால் சிவபாபா வந்து என்ன செய்தார்? அதையும் தெரிந்துகொள்ள வில்லை. இப்போது பாபா புரிய வைக்கிறார், கீதை மூலம் தான் கிருஷ்ணரின் ஆத்மாவுக்கு இராஜ்யம் கிடைத்தது. கீதையை தாய்-தந்தை என சொல்லப்படுகிறது. அதன் மூலம் நீங்கள் மீண்டும் தேவதை ஆகிறீர்கள். ஆகையால் கிருஷ்ணர் கீதையை சொல்லவில்லை என்று படத்திலும் காட்டப்பட்டுள்ளது.கிருஷ்ணர் கீதை ஞானத்தின் மூலம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு இப்படி ஆனார். நாளை மீண்டும் கிருஷ்ணராக ஆவார். அவர்கள் சிவபாபாவுக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டார்கள். ஆக பாபா புரிய வைக்கிறார் - இதை உள்ளுக்குள் மிக உறுதியாக ஆக்கிக்கொள்ளுங்கள். வேறு யாரேனும் உங்களுக்கு தலைகீழான விசயங்களைச் சொல்லி குழப்பமடைய வைத்துவிடக்கூடாது. நிறைய விசயங்களைக் கேட்கிறார்கள் - விகாரம் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்? இது எப்படி நடக்கும்? அட, நீங்களே சொல்கிறீர்கள் - அது விகாரமற்ற உலகமாக இருந்தது. சம்பூர்ண நிர்விகாரி என்று சொல்கிறீர்கள் அல்லவா! பிறகு விகாரத்தின் விசயம் எப்படி நடக்க முடியும்? இப்போது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள், எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட இராஜ்யம் கிடைக்கிறது. ஆக அப்படிப்பட்ட தந்தையை ஏன் நினைவு செய்யக்கூடாது? இதுவோ பதீத (அழுக்கான) உலகம். கும்பமேளாவுக்கு எத்தனை கோடிக்கணக்கான மனிதர்கள் செல்கிறார்கள்! அதில் சொல்கிறார்கள் - ஒரு நதி மறைமுகமாக இருக்கிறது. நதி மறைமுகமாக இருக்கமுடியுமா என்ன? இங்கே கூட பசுவின் வாய் உருவாக்கப்பட்டுள்ளது. கங்கை இங்கே வருகிறது என்று சொல்கிறார்கள். அட, கங்கை தன்னுடைய பாதையில் சமுத்திரத்திற்குச் செல்லுமா அல்லது இங்கே உங்களோடு மலைக்கு வருமா? பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏமாறுகிறார்கள்! ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம். ஒன்று எல்லைக்குட்பட்ட வைராக்கியம், மற்றொன்று எல்லைக்கப் பாற்பட்ட வைராக்கியம். சன்னியாசிகள் வீடு வாசலை விட்டு காட்டில் வசிக்கிறார்கள், இங்கே அந்த விசயம் இல்லை. நீங்கள் புத்தி மூலம் முழு பழைய உலகத்தை சன்னியாசம் செய்கிறீர்கள். இராஜயோகி குழந்தைகளாகிய உங்களின் முக்கிய கடமை படிப்பது மற்றும் படிப்பிப்பது. இராஜயோகத்தை ஏதோ காட்டில் வைத்து கற்றுக்கொடுப்பதில்லை. இது பள்ளிக்கூடமாகும். கிளைகள் உருவாகிக் கொண்டே போகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபாவிடம் கற்றுக் கொண்ட பிராமணிகள் கற்றுத்தருகிறார்கள். ஒரே சிவபாபா அனைவருக்கும் அமர்ந்து கற்றுத்தருவாரா என்ன? இது பாண்டவ அரசாங்கமாகும். நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடக்கிறீர்கள். இங்கே நீங்கள் எவ்வளவு அமைதியில் அமர்ந்துள்ளீர் கள்? வெளியே நிறைய கலகங்கள் நடக்கிறது. பாபா சொல்கிறார் - 5 விகாரங்களின் தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரகணம் நீங்கிவிடும். என்னுடையவர்களாக ஆகுங்கள், அப்போது நான் உங்களது அனைத்து விருப்பங் களையும் பூர்த்தி செய்வேன். இப்போது நாம் சுகதாமத்திற்கு செல்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த துக்கதாமத்தில் தீ பிடிக்கப்போகிறது. குழந்தைகள் வினாசத்தின் சாட்சாத்காரமும் பார்த்துள்ளார்கள். இப்போது நேரம் மிகக்குறைவாக உள்ளது. ஆகையால் நினைவு யாத்திரையில் ஈடுபட்டீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும். மேலும் உயர்ந்த பதவி அடைவீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தையின் ஆஸ்திக்கு முழு அதிகாரம் பெறுவதற்கு வாழ்ந்துகொண்டே இறக்க வேண்டும். தத்தெடுக்கப்பட வேண்டும். ஒருபோதும் தன்னுடைய அதிர்ஷ்டத்தின் மீது குறுக்குக்கோடு போட்டுவிடக்கூடாது.

2) எந்த தலைகீழான விசயத்தையும் கேட்டு சந்தேகத்தில் வரக்கூடாது. சிறிதளவும் நம்பிக்கை அசைந்து விடக்கூடாது. இந்த துக்கதாமத்திற்கு நெருப்பு பற்றப்போகிறது. ஆகையால் இதிலிருந்து தன்னுடைய புத்தியின் தொடர்பை துண்டிக்க வேண்டும்.

வரதானம்:
விசேஷதா என்ற சஞ்சீவி மூலிகை மூலம் மூர்ச்சித்தவர்களை விழிப்புறச் செய்கிற விசேஷ ஆத்மா ஆகுக.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் சிரேஷ்ட ஸ்மிருதியின் விசேஷத் தன்மைகளின் ஸ்மிருதி ரூப சஞ்சீவி மூலிகையை உண்ணக் கொடுப்பீர்களானால் அவர் மூர்ச்சையிலிருந்து விழிப்புற்று விடுவார். விசேஷத் தன்மையின் சொரூபத்தினுடைய கண்ணாடியை அவருக்கு முன்னால் வையுங்கள். மற்றவர்களுக்கு நினைவு படுத்துவதன் மூலம் நீங்கள் விசேஷ ஆத்மாவாகவே ஆகி விடுவீர்கள். நீங்கள் யாருக்காவது பலவீனத்தைச் சொல்வீர்களானால் அவர்கள் மறைப்பார்கள், தவிர்ப்பார்கள். நீங்கள் விசேஷதாவைச் சொல்வீர்களானால் தானே அந்த பலவீனத்தைத் தெளிவாக உணர்வார் கள். இந்த சஞ்சீவி மூலிகையால் மூர்ச்சித்தவர்களை விழிப்புறச் செய்து பறந்து கொண்டே செல்லுங்கள் மற்றும் பறக்க வைத்துக் கொண்டே செல்லுங்கள்.

சுலோகன்:
பெயர், மதிப்பு, புகழ் மற்றும் சாதனங்களை சங்கல்பத்தில் கூடத் தியாகம் செய்வதே மிகப்பெரிய தியாகம் ஆகும்.

அவ்யக்த இஷாரா - சங்கல்பங்களின் சக்தியைச் சேமித்து சிரேஷ்ட சேவைக்கு நிமித்தமாகுங்கள்

நிமித்தமாகியுள்ள குழந்தைகள் விசேஷமாக, தன் ஒவ்வொரு சங்கல்பத்தின் மீதும் கவனம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு விகல்பமற்ற, வீணானவை அல்லாத சங்கல்பங்களாக இருக்கும் போது புத்தி சரியாக நிர்ணயம் செய்யும். நிர்ணயம் சரியாக இருக்குமானால் நிவாரணமும் சகஜ மாகச் செய்வீர்கள். நிவாரணம் செய்வதற்கு பதிலாக நீங்களே காரணம், காரணம் எனச் சொல்வீர் களானால் உங்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் கூட ஒவ்வொரு விஷயத்திலும் காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.