05-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எப்போதும் நாம்
சங்கமயுக பிராமணர்கள் என்ற போதையிலேயே இருங்கள், எந்த தந்தையை
அனைவரும் அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ, அவர் நம்முன்னால்
இருக்கின்றார் என்பதை நாம் தெரிந்துள்ளோம்
கேள்வி:
எந்த குழந்தைகளுடைய புத்தியோகம்
சரியாக இருக்குமோ, அவர்களுக்கு எந்தவொரு காட்சி ஏற்பட்டுக்
கொண்டே இருக்கும்?
பதில்:
சத்யுக புதிய இராஜ்யத்தில்
என்னென்ன இருக்கும், நாம் எப்படி பள்ளியில் படிப்போம் பிறகு
இராஜ்யம் செய்வோம், என்பன போன்ற அனைத்து காட்சிகளும்
எந்தளவிற்கு காலம் அருகாமை யில் வந்து கொண்டிருக்குமோ
அந்தளவிற்கு காட்சிகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால்
யாருடைய புத்தியோகம் சரியாக இருக்கிறதோ, யார் தங்களுடைய
சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்கிறார்களோ, தொழில்
போன்றவற்றை செய்து கொண்டே கூட பாபாவின் நினைவில் இருக்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் இந்தக் காட்சிகள் அனைத்தும் ஏற்படும்.
பாடல்:
ஓம் நமோ சிவாய............
ஓம் சாந்தி.
பக்திமார்க்கத்தில் மற்ற சத்சங்கங்கள் என்னவெல்லாம் இருக்கிறதோ,
அவற்றிற்கு அனைவரும் சென்றிருப்பார்கள். ஒன்று அங்கே அனைவரும்
ஆஹா குருவே ! என்று சொல்லுங் கள் என்பார்கள் அல்லது இராமருடைய
பெயரைச் சொல்வார்கள். இங்கே குழந்தைகள் எதையும் சொல்வதற்கான
அவசியமும் இருப்பதில்லை. ஒரே ஒரு முறை சொல்லியாகி விட்டது,
அடிக்கடி சொல்வதற்கான அவசியமும் இல்லை. தந்தையும் ஒருவர், அவர்
சொல்வதும் கூட ஒன்று தான். என்ன கூறுகின்றார்? குழந்தைகளே என்னை
மட்டும் நினைவு செய்யுங்கள். முதலில் கற்றுக் கொண்டு பிறகு
வந்து இங்கே அமருகிறார்கள். நாம் எந்த தந்தையினுடைய
குழந்தைகளாக இருக் கிறோமோ, அவரை நினைவு செய்ய வேண்டும். இதையும்
கூட இப்போது நீங்கள் பிரம்மாவின் மூலம் தெரிந்துள்ளீர்கள்,
ஆத்மாக்களாகிய நம் அனைவருடைய தந்தை ஒருவரே. உலகம் இதை
தெரிந்திருக்கவில்லை. நாம் அனைவரும் அந்த தந்தையினுடைய
குழந்தைகள், அவரை அனை வரும் இறை தந்தை என்று கூறுகிறார்கள்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது தந்தை கூறுகின்றார்,
நான் உங்களுக்கு படிப்பிக்க இந்த சாதாரண உடலில் வருகின்றேன்.
பாபா இவருக்குள் வந்துள்ளார், நாம் அவருடையவர்களாக ஆகியுள்ளோம்,
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா தான் வந்து தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாவதற்கான வழியைக் கூறுகின்றார். இது முழு
நாளும் புத்தியில் இருக்கிறது. சொல்லப்போனால் அனை வருமே
சிவபாபாவின் குழந்தைகள் தான், ஆனால் நீங்கள் தெரிந்துள்ளீர்கள்
மற்றவர்கள் யாரும் தெரிந்திருக்கவில்லை. நாம் ஆத்மா, என்னை
நினைவு செய்யுங்கள் என்று பாபா நமக்கு கட்டளை யிட்டுள்ளார்,
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நான்
உங்களுடைய எல்லையற்ற தந்தையாக இருக்கின்றேன். தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரே வாருங்கள், நாங்கள் தூய்மையற்றவர்களாக
ஆகியுள்ளோம்! என்று அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை தேகம் சொல்வதில்லை. ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் சொல்கிறது.
84 பிறவிகளைக் கூட ஆத்மா தான் எடுக்கிறது அல்லவா! நாம்
நடிகர்கள் என்பது புத்தியில் இருக்க வேண்டும். பாபா நம்மை
இப்போது திரிகாலதரிசியாக மாற்றியுள்ளார்.
முதல்-இடை-கடைசியினுடைய ஞானத்தைக் கொடுத்துள்ளார். அனைவரும்
பாபாவைத் தான் அழைக்கிறார்கள் அல்லவா. இப்போதும் கூட அவர்கள்
சொல்வார்கள், வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,
மேலும் சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள், பாபா வந்துள்ளார்
என்று கூறுகின்றீர்கள். இந்த சங்கமயுகத்தையும் கூட நீங்கள் தான்
தெரிந்துள்ளீர்கள், இது புருஷோத்தம யுகம் என்று பாடப்படுகிறது.
புருஷோத்தம யுகம் கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின்
ஆரம்பத்திற்கும் இடையில் தான் நடக்கிறது. சத்யுகத்தில் சத்திய
புருஷர்களும், கலியுகத்தில் பொய்யான புருஷர்களும்
இருக்கிறார்கள். யார் சத்யுகத்தில் இருந்துவிட்டு சென்றார்களோ,
அவர்களுடைய சித்திரங்கள் இருக்கின்றன. அனைத் திலும் பழையதிலும்
பழையது இந்த (இலஷ்மி-நாராயணனுடைய) சித்திரமாகும், இதைவிட பழைய
சித்திரம் வேறு எதுவும் இல்லை. ஆனால் நிறைய மனிதர்கள் அமர்ந்து
தவறான சித்திரங் களை உருவாக்குகிறார்கள். யார்-யார்
இருந்துவிட்டு சென்றுள்ளார்கள் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். எப்படி கீழே அம்பாளுடைய சித்திரம் அல்லது
காளியினுடைய சித்திரம் உருவாக்கியுள்ளார்கள், அப்படி கை கலை
யுடையவர்கள் எப்படி இருக்க முடியும்? அம்பாளுக்கும் இரண்டு
கைகள் தான் இருக்கும் அல்லவா! மனிதர்கள் சென்று கையெடுத்து
கும்பிடுகிறார்கள், பூஜை செய்கிறார்கள். பக்திமார்க்கத்தில்
அநேக விதமான சித்திரங்களை உருவாக்கியுள்ளார்கள். மனிதர்கள் மீது
தான் அநேக விதமான அலங்காரம் செய்கிறார்கள் எனும்போது ரூபம் மாறி
விடுகிறது. உண்மையில் இந்த சித்திரம் போன்றவைகள் எதுவும் இல்லை.
இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். இங்கே மனிதர்கள் குருடர்களாக,
ஊனமானவர்களாக பிறக்கிறார்கள். சத்யுகத்தில் இப்படி நடப்ப தில்லை.
சத்யுகத்தையும் கூட நீங்கள் தெரிந்துள்ளீர்கள், ஆதி சனாதன
தேவி-தேவதை களுடைய தர்மம் இருந்தது. இங்கே ஆடையைப் பாருங்கள்!
ஒவ்வொருவருக்கும் தனக் கென எவ்வளவு வகைகள் இருக்கின்றன! அங்கே
எப்படி இராஜா-இராணியோ அப்படி பிரஜைகளும் இருக்கிறார்கள்.
எந்தளவிற்கு அருகில் சென்று கொண்டே இருப்பீர்களோ, அப்போது
உங்களுக்கு தங்களுடைய இராஜ்யத்தினுடைய ஆடை போன்ற வற்றின் காட்சி
கள் கூட தெரிந்து கொண்டே இருக்கும். நாம் இப்படிப்பட்ட
பள்ளியில் படிக்கிறோம், இதை செய்கிறோம் என்பதை பார்த்துக்
கொண்டே இருப்பீர்கள். யாருடைய புத்தியோகம் நன்றாக இருக்கிறதோ,
யார் சாந்திதாமம்-சுகதாமத்தை நினைவு செய்கிறார்களோ, அவர்கள்
தான் பார்ப்பார்கள். தொழில் போன்றவற்றை செய்யத் தான் வேண்டும்.
பக்திமார்க்கத்தில் கூட தொழில் போன்றவற்றை செய்கிறார்கள் அல்லவா!
ஞானம் எதுவும் இருக்கவில்லை. இவையனைத்தும் பக்தியாகும். அதனை
பக்தியின் ஞானம் என்று சொல்லலாம். அவர்கள், நீங்கள் உலகத்திற்கு
எஜமானர்களாக எப்படி ஆவது என்ற ஞானத்தைக் கொடுக்க முடியாது.
இப்போது நீங்கள் இங்கே படித்து எதிர்காலத்தில் உலகத்திற்கு
எஜமானர்களாக ஆகின்றீர் கள். இந்தப் படிப்பே புதிய உலகத்திற்காக,
அமரலோகத்திற்காக என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மற்றபடி
அமர்நாத்தில் ஒன்றும் சங்கர் பார்வதிக்கு அமரக்கதையை
சொல்லவில்லை. அவர்கள் சிவனையும் சங்கரனையும் ஒன்றாக்கி
விட்டார்கள்.
இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார், இவரும் கேட்கின்றார். பாபா அல்லாமல்
உலகத்தின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தை யார் புரிய வைக்க
முடியும்? இவர் (பிரம்மா) ஒன்றும் சாது-சந்நியாசி போன்றல்ல.
எப்படி நீங்கள் குடும்ப விவகாரங்களில் இருந்தீர்களோ, அதுபோல்
இவரும் இருக்கிறார். உடை போன்ற அனைத்தும் அதே உடை தான். எப்படி
வீட்டில் தாய் தந்தை குழந்தைகள் இருக்கிறார்களோ, அதுபோலாகும்,
வித்தியாசம் எதுவும் இல்லை. பாபா இந்த இரதத்தில் சவாரி செய்து
குழந்தைகளிடம் வருகின்றார். இது பாக்கியசாலி இரதம் என்று
பாடப்படுகிறது. சில நேரங்களில் எருதின் மீது சவாரி செய்வதாகவும்
காட்டுகிறார்கள். மனிதர்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டார்கள்.
கோயிலில் எருது இருக்க முடியுமா என்ன? கிருஷ்ணர் இளவரசர் ஆவார்,
அவர் எருதின் மீது அமருவாரா என்ன.! பக்தி மார்க்கத்தில்
மனிதர்கள் நிறைய குழம்பியுள்ளார்கள். மனிதர்களுக்கு பக்தி
மார்க்கத்தின் போதை இருக்கிறது. உங்களுக்கு ஞான மார்க்கத்தின்
போதை இருக்கிறது. இந்த சங்கமயுகத்தில் பாபா நமக்கு
படிப்பித்துக் கொண்டிருக் கின்றார் என்று நீங்கள் சொல்
கிறீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள், ஆனால்
பிராமணர்களாகிய நாம் இந்த சங்கம யுகத்தில் இருக்கின்றோம் என்பதை
புத்தியின் மூலம் தெரிந்துள்ளீர்கள். மற்ற மனிதர்கள் அனைவரும்
கலியுகத்தில் இருக்கிறார்கள். இது அனுபவத்தின் விசயங்களாகும்.
நாம் கலியுகத் திலிருந்து விலகி வந்துள்ளோம் என்று புத்தி
சொல்கிறது. பாபா வந்திருக்கின்றார். இந்தப் பழைய உலகமே
மாறப்போகிறது. இது உங்களுடைய புத்தியில் இருக்கிறது, வேறு
யாரும் தெரிந்திருக்க வில்லை. ஒரே வீட்டில் இருக்கக்
கூடியவர்கள் தான், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்,
அதிலேயே தந்தை சொல்வார் நாம் சங்கமயுகத்தவர்கள் என்று, குழந்தை
சொல்லாது, நாம் கலியுகத்தில் இருக்கின்றோம் என்று சொல்வார்.
அதிசயமாக இருக்கிறது அல்லவா! நம்முடைய படிப்பு முடிந்து
விட்டால் விநாசம் நடக்கும் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள்.
கண்டிப்பாக வினாசம் நடக்க வேண்டும். உங்களில் கூட சிலர்
தெரிந்திருக்கிறார்கள், ஒருவேளை உலகம் வினாசம் ஆகப்போகிறது
என்று புரிந்து கொண்டால் புதிய உலகத்திற்கான ஏற்பாடுகளில்
ஈடுபடு வார்கள். மூட்டை முடிச்சுகளை தயார் செய்வார்கள். இன்னும்
கொஞ்சம் நேரம் (காலம்) தான் இருக்கிறது,
பாபாவினுடையவர்களாகவாவது ஆகி விடுங்கள். பட்டினி கிடந்து
இறந்தாலும் முதலில் தந்தை பிறகு தான் குழந்தைகள். இது பாபாவின்
பண்டாரா (சமையல் அறை) ஆகும். நீங்கள் சிவபாபாவின்
பண்டாராவிலிருந்து சாப்பிடுகிறீர்கள். பிராமணர்கள் உணவு
சமைக்கிறார் கள் ஆகையினால் பிரம்மா போஜனம் என்று
சொல்லப்படுகிறது. யார் தூய்மையான பிராமணர் களாக இருக்கிறார்களோ,
அவர்கள் (சிவபாபா) நினைவில் இருந்து சமைக்கிறார்கள், பிராமணர்
களைத் தவிர வேறு யாரும் சிவபாபாவின் நினைவில் இருக்க முடியாது.
அந்த பிராமணர்கள் சிவபாபாவின் நினைவில் இருக்கிறார்களா என்ன!
இது தான் சிவபாபாவின் பண்டாரா ஆகும், இங்கே பிராமணர்கள் உணவு
சமைக்கிறார்கள். பிராமணர்கள் யோகத்தில் (நினைவில்) இருக்கிறார்
கள். தூய்மையாக இருக்கவே இருக்கிறார்கள். மற்றபடி யோகத்தின்
விசயமாகும். இதில் தான் உழைப்பு எடுக்கிறது. கதை விடுதல்
நடக்காது. நான் முழுமையாக யோகத்தில் இருக்கின்றேன் அல்லது 80
சதவீதம் யோகத்தில் இருக்கின்றேன் என்று யாரும் சொல்ல முடியாது.
யாரும் சொல்லவே முடியாது. ஞானமும் வேண்டும். யார் தங்களுடைய
பார்வையின் மூலமாகவே யாரையும் அமைதியாக்கி விடுகிறார்களோ,
அவர்கள் தான் குழந்தைகளாகிய உங்களில் யோகி ஆவர். இது கூட
சக்தியாகும். ஒரேயடியாக அசைவற்றுப் போய்விடும், எப்போது நீங்கள்
அசரீரி யாக ஆகி விடுகிறீர்களோ பிறகு பாபாவின் நினைவில்
இருக்கிறீர்கள் என்றால் இது தான் உண்மையான நினைவாகும். மீண்டும்
இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். எப்படி நீங்கள் இங்கே
நினைவில் அமருகிறீர்களோ, அதுபோல் இந்தப் பயிற்சி
செய்விக்கப்படுகிறது. இருந்தாலும் அனைவரும் ஒன்றும் நினைவில்
இருப்பதில்லை. எங்கெங்கோ புத்தி ஓடிக் கொண்டிருக்கிறது என்றால்
அது நஷ்டம் ஏற்படுத்தி விடுகிறது. யார் தங்களை டிரில் டீச்சர்
என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களை இங்கே கதியில் அமர
வைக்க வேண்டும். பாபாவின் நினைவில் முன்னால்
அமர்ந்திருக்கிறார்கள். புத்தியோகம் வேறு எந்தப் பக்கமும்
செல்லக் கூடாது. அசை வற்றுப் போய் விடும். நீங்கள் அசரீரியாக
ஆகி விடுகிறீர்கள் மேலும் பாபாவின் நினைவில் இருக் கின்றீர்கள்.
இது தான் உண்மையான நினைவாகும். சந்நியாசிகள் கூட அமைதியில்
அமருகிறார் கள், அவர்கள் யாருடைய நினைவில் இருக்கிறார்கள்? அது
ஒன்றும் உண்மையான நினைவு இல்லை. யாருக்கும் நன்மை அளிக்க
முடியாது. அவர்கள் உலகத்தை அமைதியாக்க முடியாது. பாபாவை
தெரிந்திருக்கவே இல்லை. பிரம்மத்தை தான் பகவான் என்று புரிந்து
கொண்டிருக் கிறார்கள். அது ஒன்றும் பகவான் இல்லை. இப்போது
உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது - என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள். நாம் 84 பிறவிகள் எடுக்கின்றோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர் கள். ஒவ்வொரு பிறவியிலும் கொஞ்சம்- கொஞ்சமாக
கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. சந்திரனின் கலைகள் குறைந்து
கொண்டே செல்வதைப் போல் ஆகும். பார்ப்பதற்கு அந்தளவிற்கு
தெரிகிறதா என்ன! இப்போது யாரும் சம்பூரணமாக ஆகவில்லை. இன்னும்
போகப்போக உங்களுக்கு காட்சி கிடைக்கும். ஆத்மா எவ்வளவு
சிறியதாக இருக்கிறது! அதனுடைய காட்சியும் கிடைக்கலாம்.
இல்லையென்றால் இவர்களிடத்தில் ஒளி குறைவாக இருக்கிறது,
இவர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது என்று குழந்தைகள் எப்படி
சொல்வார்கள்? திவ்ய திருஷ்டியின் மூலம் தான் ஆத்மாவை
பார்க்கிறார்கள். இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. என்னுடைய
கைகளில் எதுவும் இல்லை. நாடகம் என் மூலமாக செய்ய வைக்கிறது,
இவையனைத்தும் நாடகத்தின்படி நடந்து கொண்டிருக்கிறது. போக்
வைப்பது போன்ற அனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. வினாடிக்கு
வினாடி நடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது எப்படி தூய்மையாக வேண்டும் என்று பாபா படிப்பினை
கொடுக்கின்றார். பாபாவை நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய
ஆத்மா தூய்மையற்றதாக ஆகியுள்ளது பிறகு தூய்மையாகவும் ஆக
வேண்டும். அதிசயமான விசயமாக இருக்கிறது அல்லவா! இயற்கை என்று
சொல்கிறார்கள் அல்லவா. நீங்கள் தந்தையிடமிருந்து இயற்கையான
விசயங்கள் அனைத்தையும் கேட்கிறீர்கள். அனைத்திலும் இயற்கையான
விசயம் - ஆத்மா மற்றும் பரமாத்மாவினுடைய தாகும், இதை யாரும்
தெரிந்திருக்கவில்லை. ரிஷிகள் முனிவர்கள் போன்ற யாரும்
தெரிந்திருக்க வில்லை. இவ்வளவு சிறிய ஆத்மா தான் கல்புத்தியாக
இருந்து பிறகு தங்கபுத்தியாக ஆகின்றது. புத்தியில்
ஆத்மாக்களாகிய நாம் கல்புத்தியுடையவர்களாக ஆகியிருந்தோம்,
இப்போது மீண்டும் பாபாவை நினைவு செய்து தங்கபுத்தியாக ஆகிக்
கொண்டிருக்கிறது என்ற சிந்தனையே ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
லௌகீக ரீதியாக தந்தையும் பெரியவர் பிறகு டீச்சர், குருவும் கூட
பெரியவர்களாகக் கிடைகிறார்கள். இவர் ஒரே புள்ளியானவர்
தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார்,
குருவாகவும் இருக்கின்றார். முழு கல்பமும் தேகதாரியை நினைவு
செய்தீர்கள். இப்போது பாபா கூறுகின்றார் - என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள். உங்களுடைய புத்தியை எவ்வளவு நுட்பமானதாக
மாற்றுகின்றார்! உலகத்திற்கு எஜமானர்களாக ஆவது என்ன குறைந்த
விசயமா என்ன! இந்த இலட்சுமி-நாராயணன் எப்படி எஜமானர்களாக
ஆனார்கள் என்பதைக் கூட யாரும் சிந்திப்பதில்லை. நீங்களும் கூட
வரிசைக்கிரமமான முயற்சியின்படி தெரிந்துள்ளீர்கள். புதியவர்கள்
யாரும் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. முதலில்
மேலோட்டமாகவும் பிறகு ஆழமாகவும் புரிய வைக்கப்படுகிறது. பாபா
புள்ளியாக இருக்கின்றார், பிறகு அவர்கள் இவ்வளவு பெரிய-பெரிய
லிங்க ரூபங்களை உருவாக்கி விடுகிறார்கள். மனிதர் களுடைய
சித்திரங்களைக் கூட பெரிது-பெரிதாக உருவாக்கு கிறார்கள். ஆனால்
அப்படி இருப்ப தில்லை. மனிதர்களுடைய சரீரம் இப்படித் தான்
இருக்கிறது. பக்தியில் அமர்ந்து என்னென்ன உருவாக்கியுள்ளார்கள்.
மனிதர்கள் எவ்வளவு குழம்பியுள்ளார்கள். எது கடந்து விட்டதோ அது
மீண்டும் நடக்கும் என்று பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள்
பாபாவின் ஸ்ரீமத்படி செல்லுங்கள். இவருக்கும் கூட பாபா ஸ்ரீமத்
கொடுத்துள்ளார், காட்சி காட்டினார் அல்லவா! நான் உங்களுக்கு
இராஜ்யத்தைக் கொடுக்கின்றேன், இப்போது இந்த சேவையில்
ஈடுபடுங்கள். தங்களுடைய ஆஸ்தியை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இவையனைத்தையும் விட்டு விடுங்கள். எனவே இவரும் கூட
பொறுப்பாகியுள்ளார். அனைவரும் இதுபோல் பொறுப்பாவது கிடையாது,
யாருக்கு போதை ஏறியதோ அவர்கள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
எங்களுக்கு இராஜ்யம் கிடைக்கிறது. பிறகு இந்தப் பைசாவை வைத்துக்
கொண்டு என்ன செய்வது. எனவே பாபா இப்போது குழந்தை களை முயற்சி
செய்ய வைக்கின்றார், இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது,
நாங்கள் இலஷ்மி-நாராயண பதவியை விட குறைவாக அடைய மாட்டோம் என்று
கூறுகிறார்கள். அப்படி என்றால் ஸ்ரீமத்படி நடந்து காட்டுங்கள்.
சாக்குப்போக்கு சொல்லாதீர்கள். குழந்தை குட்டிகளுடைய நிலை
என்னவாகும் என்று பாபா (பிரம்மா) சொன்னாரா என்ன? திடீரென்று
விபத்தில் யாராவது இறந்து விட்டார்கள் என்றால் யாராவது
பட்டினியாக இருக்கிறார்களா என்ன? யாராவது நண்பர்களோ-உறவினர்களோ
சாப்பிடுவதற்கு கொடுக்கிறார்கள். இங்கே பாருங்கள் பாபா பழைய
கொட்டகையில் (குடிலில்) இருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள்
வந்து மாளிகைகளில் இருக் கின்றீர்கள். குழந்தைகள் நல்ல
விதத்தில் இருக்கட்டும், சாப்பிடட்டும், அருந்தட்டும் என்று
பாபா சொல்வார். யார் எதுவுமே கொண்டு வரவில்லையோ அவர்களுக்கும்
கூட அனைத்தும் நல்ல விதத்தில் கிடைக்கிறது. இந்த பாபாவை விடவும்
நல்ல விதத்தில் இருக்கிறார்கள். நாம் ரம்தா (நடமாடும்)
யோகிகளாக இருக்கின்றோம் என்று சிவபாபா கூறுகின்றார். யாருக்கு
வேண்டு மானாலும் நன்மை செய்வதற்கு செல்ல முடியும். யார் ஞானம்
நிறைந்த குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு போதும் காட்சி
போன்ற விசயங்களினால் குஷி அடைய மாட்டார்கள். யோகத்தைத் தவிர
வேறு எதுவும் இல்லை. இந்த காட்சி போன்ற விசயங்களில் குஷி அடையக்
கூடாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒரு பார்வையின் மூலமே யாரையும் அமைதியாக்கும் அளவிற்கு
யோகத்தின் நிலையை உருவாக்க வேண்டும். ஒரேயடியாக நிசப்தமாகி (அசைவற்றுப்போய்)
விட வேண்டும். அதற்கு அசரீரியாக ஆவதற்கான பயிற்சி செய்ய
வேண்டும்.
2) ஞானத்தின் உண்மையான போதையில் இருப்பதற்காக நாம் சங்கம
யுகத்தவர்கள், இப்போது இந்தப் பழைய உலகம் மாறப் போகிறது, நாம்
நம்முடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருக் கிறோம் என்பது
நினைவிருக்க வேண்டும். எப்போதும் ஸ்ரீமத்படி நடந்து
கொண்டிருக்க வேண்டும், சாக்குப் போக்கு சொல்லக் கூடாது.
வரதானம்:
பரமாத்மா சந்திப்பு மூலமாக ஆன்மீக உரையாடலுக்கு சரியான பதிலை
பெறும் தந்தைக்கு நிகரான பல ரூபம் எடுப்பவர் ஆகுக
தந்தை சிவன் பல ரூபதாரி (பகுருபி). ஒரு நொடியில் நிராகார
நிலையிலிருந்து ஆகாரி ஆடை அணிகின்றார். அவ்வாறே நீங்களும் இந்த
மண்ணாலான ஆடையை விடுத்து ஆகாரி பரிஸ்தா எனும் பளப்பளப்பான ஆடையை
அணிந்துக் கொண்டால் சந்திப்பும் சுலபமாகும். ஆன்மீக உரை யாடலும்
தெளிவாக புரிய வரும். ஏனெனில் இந்த ஆடை பழைய உலகீய உள்ளுணர்வு
மற்றும் அதிர்வலையி-ருந்தும் மாயாவின் நீராலும், நெருப்பாலும்
காக்க வல்லது. இதில் மாயை தலையிட முடியாது.
சுலோகன்:
உறுதித்தன்மை நடவாத காரியத்தையும் நடந்தேறச் செய்யும்
அவ்யக்த சமிக்கை: ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும்
கையாளுங்கள்
பிரம்மா குமார் என்பதன் பொருளே எப்போதும் தூய்மையெனும்
ஆளுமையிலும் ஆன்மீக கௌரவத்தையும் கையாளுபவர். இந்த தூய்மையின்
ஆளுமையே உலக ஆத்மாக்களை தன் வசம் ஈர்க்கும். இந்த தூய்மையெனும்
ராயல்டியே தர்மராஜ புரியின் ராயல்டியி-ருந்து (அபராதம்)
விடுவிக்கின்றது. இந்த ராயல்டியின் அடிப்படையிலேயே எதிர்கால
ராயல் குடும்பத்தில் வரச் செய்கின்றது. எவ்வாறு உட-ன்
பரிசனாலிட்டி தேக உணர்வில் வரவைக்கிறதோ அவ்வாறே தூய்மையின்
பர்சனாலிட்டி ஆத்மாபிமானியாக மாற்றி தந்தைக்கு அருகே
வரவைக்கின்றது.