08-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! ஒருபோதும்
அனைத்தும் தெரியும் என்ற அகங்காரத்தில் வராதீர்கள், இந்த
ரதத்திற்கும் முழு மதிப்பு வையுங்கள்
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களில் பதமாபதம்
(பல மடங்கு) பாக்கியசாலி யார் மற்றும் துர்பாக்கியசாலி யார்?
பதில்:
யாருடைய நடத்தை தேவதைகளைப் போல்
இருக்கிறதோ, யார் அனைவருக்கும் சுகம் கொடுக்கிறார்களோ அவர்கள்
பதமாபதம் பாக்கியசாலிகளாவர் மற்றும் யார் தோற்று விடுகிறார் களோ
அவர்களை துர்பாக்கிய சாலிகள் என்று சொல்லப்படுகிறது. சிலர் மகா
துர்பாக்கியசாலி களாகி விடுகிறார்கள், அவர்கள் அனைவருக்கும்
துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சுகம் கொடுப்பதை
தெரிந்திருக்கவே இல்லை. குழந்தைகளே உங்களை நல்ல விதத்தில்
பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
அனைவருக்கும் சுகம் அளியுங்கள். தகுதி யானவர்களாக ஆகுங்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார். நீங்கள் இந்த பாடசாலையில் அமர்ந்து உயர்ந்த
பதவியை அடைகிறீர்கள். நாம் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்த
சொர்க்க பதவியை அடைகிறோம் என்று மனதில் புரிந்து கொள்கிறீர்கள்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும்.
ஒருவேளை அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அனைவரும்
ஒரே மாதிரி இருக்க முடியாது. முதல் நம்பரில் இருந்து கடைசி
நம்பர் வரை இருக்கிறார்கள். சிலர் தோற்றும் விடுவார்கள் சிலர்
தேர்ச்சி பெற்றும் விடுவார்கள். எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய
மனதில் கேட்க வேண்டும் - பாபா என்னை இந்தளவிற்கு உயர்ந்தவராக
மாற்றுகின்றார், நான் எந்தளவிற்கு தகுதியானவனாக ஆகியுள்ளேன்?
இன்னாரை விட நான் சிறந்தவனாக இருக்கிறேனா அல்லது குறைவாக
இருக்கிறேனா? இது படிப்பு அல்லவா. யாராவது சில பாடங்களில்
பலவீனமாக இருக்கிறார்கள் என்றால் கீழே சென்று விழுவதை காண
முடிகிறது. மானிட்டராக (ஸ்கூல் லீடர்) இருந்தாலும் ஏதாவதொரு
பாடத்தில் குறைவாக இருந்தால் கீழே சென்று விடுவார். ஒரு சிலர்
தான் ஸ்காலர்ஷிப் பெறுகிறார்கள். இது கூட பள்ளியாகும். நாம்
படித்துக் கொண்டிருக்கிறோம், இதில் முதல் விசயம் தூய்மை என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தூய்மையாவதற்காக தந்தையை
அழைத்தீர்கள் அல்லவா. ஒருவேளை குற்றப்பார்வை வேலை செய்து
கொண்டிருந்தால் தாங்களே உணருவீர்கள். பாபா நான் இந்த பாடத்தில்
குறைவாக இருக்கின்றேன் என்று பாபாவிற்கு கடிதம் கூட
எழுதுகிறார்கள். நான் இந்த பாடத்தில் மிக-மிக குறைவாக
இருக்கிறேன் என்பது கண்டிப்பாக மாணவர்களுக்கு புத்தியில்
இருக்கும். நாம் தேர்வில் தோற்று விடுவோம் என்றும் சிலர்
புரிந்து கொள்கிறார்கள். இதில் முதல் பாடம் தூய்மையாகும். பாபா
நான் தோற்றுவிட்டேன் என்று நிறைய பேர் எழுதுகிறார்கள்,
அவர்களுக்கு என்ன சொல்வது? இப்போது நான் முன்னேற முடியாது என்று
அவர்களுடைய மனம் புரிந்திருக்கும். நீங்கள் தூய்மையான உலகத்தை
ஸ்தாபனை செய்கிறீர்கள் அல்லவா. உங்களுடைய குறிக்கோளே இதுபோல் (லஷ்மி-நாராயணன்)
ஆவது தான் ஆகும். பாபா கூறு கின்றார், குழந்தைகளே என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாக ஆனீர்கள் என்றால் இந்த
லஷ்மி-நாராயணனுடைய வம்சத்திற்குச் செல்ல முடியும். இவர்
உயர்ந்த பதவியை அடைய முடியுமா இல்லையா என்பதை டீச்சர்
புரிந்திருப்பார். அவர் பரம ஆசிரியர் ஆவார். இந்த தாதா கூட
பள்ளியில் படித்திருக்கிறார் அல்லவா. சில குழந்தைகள் ஆசிரியர்
தண்டனை கொடுக்கும் அளவிற்கு மோசமான காரியங்களைச் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் மிக அதிகமான தண்டனை கொடுத்தார்கள். இப்போது தண்டனை
தருவதை குறைத்துக் கொண்டுள்ளார்கள். எனவே மாணவர்கள் அதிகம்
கெட்டுப் போகிறார்கள். தற்காலத்தில் மாணவர்கள் எவ்வளவோ கலவரம்
(அடிதடி) செய்கிறார்கள். மாணவர்களை இளரத்தம் என்று
சொல்கிறார்கள் அல்லவா. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று
பாருங்கள்! தீ வைத்து விடுகிறார்கள், தங்களுடைய இளமை யைக்
காட்டுகிறார்கள். இந்த உலகமே அசுர உலகமாகும். இளைஞர்கள் தான்
அதிகம் கெட்டவர் களாக இருக்கிறார்கள், அவர்களுடைய பார்வை
குற்றமுடையதாக இருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் நல்லவர்களாக
இருக்கிறார்கள். எப்படி ஈஸ்வரனை அடி-முடி காணமுடியாதவர் என்று
சொல்லப்படுகிறதோ, அதுபோல் இவர்களையும் எப்படிப் பட்டவர்கள்
என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய நடத்தை
எப்படி இருக்கிறது, எப்படி படிக்கிறார்கள் என்பது புத்தியின்
மூலம் தெரிகிறது. சிலர் வாயிலிருந்து மலர்கள் உதிர்வதைப் போல்
பேசுகிறார்கள், சிலர் கற்கள் வருவதைப் போல் பேசுகிறார்கள்.
பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறார்கள், ஞானக்கருத்துகள்
போன்றவற்றையும் எழுதுகிறார்கள், ஆனால் கல்லுபுத்தியுடையவர்களாக
இருக்கிறார்கள். பகட்டான வெளித் தோற்றம் மட்டுமே இருக்கிறது.
மாயை மிகவும் பலசாலியாக இருக்கிறது ஆகையினால் தான் ஆச்சரியமாக
கேட்கிறார்கள், தங்களை சிவபாபாவின் குழந்தை கள் என்று
சொல்கிறார்கள், மற்றவர்களுக்கு ஞானத்தை கூறுகிறார்கள்,
சொல்கிறார்கள் பிறகு வெளியே சென்று விடுகிறார்கள், துரோகிகளாக
ஆகிவிடுகிறார்கள் என்று பாடப்படுகிறது. புத்திசாலிகள்
துரோகிகளாக ஆவதில்லை என்பது கிடையாது, நல்ல - நல்ல
புத்திசாலிகள் கூட துரோகிகளாகி விடுகிறார்கள். அந்த சேனையில்
கூட அப்படி நடக்கிறது. விமானத்தோடு அடுத்த நாட்டிற்கு சென்று
விடுகிறார்கள். இங்கேயும் அப்படி நடக்கிறது, ஸ்தாபனைக்கு அதிக
உழைப்பு தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கும் படிப்பில் உழைக்க
வேண்டியுள்ளது, ஆசிரியருக்கும் கற்பிப் பதில் உழைப்பு
அதிகமாகிறது. பள்ளியில் ஒருவர் படிப்பதில்லை, மற்றவர்களை
தொந்தரவு செய்கிறார் என்றால் அவருக்கு தகுந்த தண்டனை கொடுப்பதை
பார்க்கிறோம். இங்கே இவர் தந்தையாவார், பாபா எதையும்
சொல்வதில்லை. பாபாவிடம் இந்த சட்டம் இல்லை, இங்கே முற்றிலும்
அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. பாபா சுகத்தை வழங்கும் வள்ளல்
ஆவார், அன்புக் கடல் ஆவார். எனவே குழந்தைகளுடைய நடத்தையும்
அப்படி இருக்க வேண்டும் அல்லவா, தேவதைகளைப் போல் நடத்தைகள்
இருக்க வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களை எப்போதும் பதமாபதம்
பாக்கியசாலிகள் என்று கூறுகின்றார். ஆனால் பதமாபதம்
துர்பாக்கியசாலிகளாகவும் ஆகிறார்கள். யார் தோற்று விடுகிறார்களோ,
அவர்களை துர்பாக்கிய சாலிகள் என்று தானே சொல்ல முடியும். கடைசி
வரை இது நடந்து கொண்டிருப்பதை பாபா பார்க்கின்றார். யாராவது
சிலர் மகா துர்பாக்கியசாலியாக கண்டிப்பாக ஆகிறார்கள். இவர்
நிலைத்திருக்க முடியாது என்பது நடத்தையின் மூலமே புரிந்து
கொள்ளப்படுகிறது. அந்தளவிற்கு உயர்ந்தவர்களாக ஆவதற்கு
தகுதியானவர்களாக இல்லை, அனைவருக்கும் துக்கம் கொடுத்துக் கொண்டே
இருக்கிறார்கள். சுகம் கொடுப்பதை தெரிந்திருக்கவே இல்லை என்றால்
அவர்களுடைய நிலை என்னவாக இருக்கும்! பாபா எப்போதும்
கூறுகின்றார் - குழந்தைகளே, தங்களை நல்ல விதமாகப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள், இது கூட நாடகத்தின்படி நடக்கத் தான் வேண்டும்,
இன்னும் இரும்பை விடவும் மோசமானவர்களாக ஆகி விடுகிறார்கள்.
இருந்தாலும் நல்ல - நல்ல குழந்தைகள் கூட ஒருபோதும் கடிதம்
எழுதுவதில்லை. பாவம் அவர்களுடைய நிலை என்னவாக இருக்கும்.
நான் அனைவருக்கும் நன்மை செய்வதற்கு வந்துள்ளேன் என்று பாபா
கூறுகிறார். இன்று அனைவரையும் சத்கதி அடைய வைக்கின்றேன், நாளை
துர்கதியாகி விடுகிறது. நாம் நேற்று உலகத்திற்கு எஜமானர்களாக
இருந்தோம், இன்றைக்கு அடிமையாகிவிட்டோம் என்று நீங்கள்
சொல்வீர்கள். இப்போது முழு மரமும் குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் இருக்கிறது. இது அதிசயமான மரமாகும். மனிதர்களுக்கு
இது கூட தெரியவில்லை. கல்பம் என்றால் முழுமையாக 5 ஆயிரம்
ஆண்டுகளின் துல்லியமான மரம் என்பதை இப்போது நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். ஒரு வினாடி கூட வித்தியாசப்பட முடியாது.
இந்த எல்லையற்ற மரத்தின் ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு
கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஞானத்தை கொடுக்கக் கூடியவர்
விருட்சபதியாவார். விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது,
அதிலிருந்து பழம் எவ்வளவு பெரியதாக வருகிறது. இது அதிசயமான
மரமாகும், இதனுடைய விதை மிகவும் சிறிய தாகும். ஆத்மா எவ்வளவு
சிறியதாக இருக்கிறது. பாபாவும் சிறியதாக இருக்கின்றார், இந்த
கண் களினால் பார்க்கக் கூட முடியாது. விவேகானந்தரைப் பற்றி
சொல்கிறார்கள், இராம கிருஷ்ணரிடமிருந்து ஜோதி வெளிவந்து என்னுள்
கலந்து விட்டது என்று விவேகானந்தர் சொன்னார். அப்படி ஜோதி
எதுவும் வெளிவந்து கலந்து விட முடியுமா என்ன? என்ன வந்தது
என்பதை புரிந்து கொள்வதில்லை. இப்படி நிறைய காட்சிகள் தெரிகிறது,
ஆனால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், பிறகு மகிமைகளையும்
எழுதுகிறார்கள். பகவானுடைய மகாவாக்கியம் - எந்த மனிதருக்கும்
மகிமை கிடையாது. மகிமை இருக்கிறது என்றால் தேவதைகளுக்கு மட்டுமே
ஆகும் மேலும் யார் தேவதைகளாக மாற்றக் கூடியவரோ அவருக்கு
மகிமையாகும். பாபா நல்ல வாழ்த்து அட்டை உருவாக்கியிருந்தார்.
ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்றால் ஒரு சிவபாபாவின் ஜெயந்தி தான்
கொண்டாட வேண்டும். இந்த லஷ்மி - நாராயணனைக் கூட அப்படி ஆக்கக்
கூடியவர் சிவபாபா அல்லவா. ஒருவருக்குத் தான் மகிமையாகும், அந்த
ஒருவரையே நினைவு செய்யுங்கள். இதை அவரே (பிரம்மாவே)
கூறுகின்றார், நான் உயர்ந்ததிலும் உயர்ந்த வனாக ஆகின்றேன் பிறகு
கீழான நிலைக்கும் இறங்குகின்றேன். இது யாருக்கும் தெரிவதில்லை
- உயர்ந்ததிலும் உயர்ந்த லஷ்மி - நாராயணன் தான் பிறகு 84
பிறவிகளுக்குப் பிறகு கீழே இறங்குகின்றனர், அவர்களே தான்
இவர்கள். நீங்கள் தான் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள்
பிறகு என்னவாக ஆகி விட்டீர்கள். சத்யுகத்தில் இருந்தது யார்?
நீங்கள் அனைவரும் தான் வரிசைகிரமமான முயற்சியின்படி
இருந்தீர்கள். ராஜா-ராணிகளும் இருந்தனர், சூரியவம்சத் தவர்-
சந்திரவம்சத்தவர்களும் இருந்தனர். பாபா எவ்வளவு நல்ல விதத்தில்
புரிய வைக்கின்றார். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானம்
குழந்தைகளாகிய உங்களுக்கு நடக்கும்போதும் சுற்றும் போதும்
இருக்க வேண்டும். நீங்கள் உயிருள்ள கலங்கரை விளக்குகளாவீர்கள்.
படிப்பு முழுவதும் புத்தியில் இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை
உருவாகவில்லை, உருவாக வேண்டியுள்ளது. யார் மதிப்புடன் தேர்ச்சி
பெறக்கூடியவர்களோ அவர்களுக்கு இந்த நிலை இருக்கும். முழு நாளும்
புத்தியில் இருக்கும். அப்போது தான் பாபாவின் அன்பான, செல்லக்
குழந்தைகள் என்று அழைக்கப் படுவார்கள். அப்படிப்பட்ட
குழந்தைகளுக்கு பாபா சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார்.
நான் இராஜ்யம் செய்வதில்லை, உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்று
கூறுகின்றார், இதைத் தான் பலனை எதிர்பார்க்காத சேவை என்று
சொல்லப்படுகிறது. பாபா நம்மை தலைக்கு மேல் உயர்த்துகின்றார்
என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள், எனவே அப்படிப்பட்ட
தந்தையை எந்தளவு நினைவு செய்ய வேண்டும். இப்படியும் நாடகம்
உருவாக்கப்பட்டுள்ளது. பாபா சங்கம யுகத்தில் வந்து அனைவருக்கும்
வரிசைகிரமமான முயற்சியின்படி சத்கதியை கொடுக்கின்றார். நம்பர்
ஒன் உயர்ந்த முற்றிலும் தூய்மையானவர்கள், கடைசி நம்பரில்
உள்ளவர்கள் முழுமையாக தூய்மையற்றவர்கள். அன்பு- நினைவுகள்
அனைவருக்கும் கொடுக்கின்றார்.
பாபா எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார், ஒருபோதும்
அனைத்தும் தெரியும் என்ற அகங்காரம் வரக்கூடாது. எச்சரிக்கையாக
இருக்க வேண்டும், ரதத்திற்கும் மதிப்பு வைக்க வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். இவர் மூலமாகத் தான் பாபா சொல்கிறார் அல்லவா.
இவர் ஒருபோதும் திட்டு வாங்கியதில்லை. அனைவரும் நேசித்தார்கள்.
இப்போது பாருங்கள் எவ்வளவு திட்டு வாங்குகிறார். நிறைய பேர்
துரோகம் செய்து விட்டு சென்று விட்டார்கள் என்றால் அவர் களுடைய
நிலை என்னவாகும், தோற்று விடுவார்கள் அல்லவா. மாயை
அப்படிப்பட்டது ஆகையினால் மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள்
என்று பாபா புரிய வைக்கின்றார். மாயை யாரையும் விடுவதில்லை.
அனைத்து விதமான நெருப்பையும் வைத்து விடுகிறது. பாபா
கூறுகின்றார், என்னுடைய குழந்தைகள் அனைத்தும் காம சிதையில் ஏறி
கருப்பாக கரியாகி விட்டார்கள். அனைவரும் ஒரே மாதிரி
இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி நடிப்பு இல்லை. இதனுடைய
பெயரே வேசியாலயமாகும், எத்தனை முறை காம சிதையில் ஏறியிருப்
பார்கள். இராவணன் எவ்வளவு பலசாலியாக இருக்கின்றான், புத்தியையே
தூய்மையற்றதாக்கி விடுகின்றான். இங்கே வந்து பாபாவிடம்
படிப்பினை பெறுபவர்கள் கூட அப்படி ஆகி விடுகிறார் கள்.பாபாவின்
நினைவு இல்லாமல் குற்றப்பார்வை ஒருபோதும் மாறாது அதற்காக
சூர்தாசருடைய கதை கூட இருக்கிறது. உருவாக்கப்பட்ட விசயம் தான்,
உதாரணம் கூட கொடுக்கிறார்கள். இப்போது குழந்தை களாகிய
உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது. அஞ்ஞானம்
என்றால் இருளாகும். நீங்கள் குருடர்கள், அஞ்ஞானிகள் என்றும்
சொல்கிறார்கள் அல்லவா. இப்போது ஞானம் மறைமுகமாக இருக்கிறது,
இதில் சுலோகம் போன்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒரு வினாடியில்
ஞானம் முழுவதும் வந்து விடுகிறது, அனைத்திலும் சுலபமானது
ஞானமாகும். இருந்தாலும் கடைசி வரை மாயையின் சோதனை நடந்து கொண்டே
இருக்கும். இந்த சமயம் புயல்களுக்கு இடையே இருக்கிறீர்கள்,
முழுமையாகி விட்டீர்கள் என்றால் அந்தளவிற்கு புயல் வராது, விழ
மாட்டீர்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய மரம் எவ்வளவு வளருகிறது.
பெயர் புகழ் பெறத்தான் வேண்டும். மரம் வளரத்தான் செய்கிறது.
கொஞ்சம் வினாசம் நடந்தால் தான் பிறகு எச்சரிக்கையாக
இருப்பார்கள். பிறகு பாபாவின் நினைவில் ஒரேயடியாக ஈடுபட்டு
விடுவார்கள். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று புரிந்து
கொள்வார்கள். தங்களுக்குள் மிகவும் அன்போடு நடந்து கொள்ளுங்கள்
என்று பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். கோபத்தில்
கண்களை காட்டாதீர்கள். கோபம் என்ற பூதம் வருவதின் மூலம் முகம்
ஒரேயடியாக மாறி விடுகிறது. நீங்கள் லஷ்மி-நாராயணன் போன்ற
முகமுடையவர்களாக ஆக வேண்டும். குறிக்கோள் முன்னால் இருக்கிறது.
நீங்கள் மாறும்போது கடைசியில் காட்சி ஏற்படுகிறது. எப்படி
ஆரம்பத்தில் காட்சி ஏற்பட்டதோ, அதுபோல் கடைசி சமயத்திலும் கூட
நிறைய நடிப்பை பார்ப்பீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள். வேட்டையாடப்பட்ட விலங்கின் இறப்பு
வேட்டைக்காரனுக்கு மகிழ்ச்சி....... கடைசியில் நிறைய காட்சிகளை
பார்க்க வேண்டும் அப்போது தான், நான் இப்படி செய்து விட்டேனே
என்று பச்சாதாபப் படுவார்கள் அல்லவா. பிறகு அதற்கான தண்டனையும்
மிகக்கடுமையாக கிடைக்கிறது. பாபா வந்து கற்பிக் கின்றார்,
அதற்கு மதிப்பு வைக்க வில்லை என்றால் தண்டனை கிடைக்கும்.
அனைத்திலும் அதிக தண்டனை யார் விகாரத்தில் செல்கிறார்களோ
அவர்களுக்கு கிடைக்கும், யார் விகாரத்தில் செல்கிறார்களோ அல்லது
யார் சிவபாபாவை அதிகம் நிந்தனை செய்வதற்கு பொறுப்பா கிறார்களோ,
அவர்களுக்கு கிடைக்கும். மாயை மிகவும் பலம்வாய்ந்ததாகும்.
ஸ்தாபனையின் போது என்னவெல்லாம் நடக்கிறது. நீங்கள் இப்போது
தேவதைகளாக ஆகின்றீர்கள் அல்லவா. சத்யுகத்தின் ஆரம்பத்தில்
அசுரர்கள் போன்றோர் இருப்பதில்லை. இது சங்கமயுகத்தின் விசயமே
ஆகும். இங்கே விகார மனிதர்கள் எவ்வளவு துக்கம் கொடுக் கிறார்கள்.
திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று பெண்களை அடிக்கிறார்கள்.
விகாரத்திற்காக பெண்களை எவ்வளவு அடிக்கிறார் கள், எவ்வளவு
எதிர்கொள்கிறார்கள். சன்னியாசிகளால் கூட இருக்க முடியவில்லை
என்றால் பிறகு யார் தூய்மையாக இருந்து காட்டுகிறார்கள். இன்னும்
போகப்போக கண்டிப்பாகப் புரிந்து கொள்வார்கள். தூய்மை இல்லாமல்
தேவதையாக ஆக முடியாது. நமக்கு எவ்வளவு பலன் கிடைக் கிறது அதை
இழந்து விடுவீர்கள் என்று நீங்கள் புரிய வைக்கிறீர்கள் அல்லவா.
பகவானுடைய மகாவாக்கியம் - காமத்தை வென்றவர்கள், உலகத்தை
வென்றவர் களாவர். இப்படிப்பட்ட லஷ்மி-நாராயணனாக ஆவீர்கள்
என்றால் தூய்மையாக மாட்டீர்களா என்ன. பிறகு மாயையும் அதிகம்
பச்சாதாபம் பட வைக்கிறது. உயர்ந்த படிப்பு அல்லவா. பாபா வந்து
படிப்பிக்கின்றார் - குழந்தைகள் இந்த சிந்தனை செய்வதில்லை
என்றால் பிறகு மாயை அடி கொடுத்து விடுகிறது. மாயை நிறைய
அவமரியாதையை செய்ய வைக்கிறது, பிறகு அவர்களுடைய நிலை என்னவாகும்.
மாயை அந்தளவிற்கு கவனமில்லாதவர்களாக மாற்றி விடுகிறது,
அகங்காரத்தில் கொண்டு வருகிறது, கேட்கவே கேட்காதீர்கள்.
இராஜ்யம் வரிசைக்கிரமமாக படிப்படியாக உருவாகிறது என்றால் ஏதாவது
காரணம் இருக்கும் அல்லவா. இப்போது உங்களுக்கு கடந்தகால,
நிகழ்கால, எதிர்கால ஞானம் கிடைக்கிறது என்றால் எவ்வளவு அதிகமான
கவனம் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்தது என்றால் இறந்தார்கள்.
மாயை ஒரேயடியாக ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் அற்றவர் களாக ஆக்கி
விடுகிறது. தந்தைக்கு அவமரியாதை நடந்தது என்றால் பிறகு தந்தையை
நினைவு செய்ய முடியாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தங்களுக்குள் மிகவும் அன்போடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒருபோதும் கோபத்தில் வந்து ஒருவர்-மற்றவரை கோபத்தில் கண்களை
காட்டக் கூடாது. பாபாவை அவமதிக்கக் கூடாது.
2) மதிப்புடன் தேர்ச்சி பெறுவதற்காக புத்தியை படிப்பின் மீது
வைக்க வேண்டும். உயிரோட்டமுள்ள லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்காக)
ஆக வேண்டும். இரவும்-பகலும் புத்தியில் ஞானம் சுற்றிக் கொண்டே
இருக்க வேண்டும்.
வரதானம்:
சர்வ சக்திவானாகிய தந்தையின் அதிகாரத்தின் மூலமாக ஒவ்வொரு
காரியத்தையும் சகஜமாக செய்யக் கூடிய சதா உறுதியான நிச்சயபுத்தி
உடையவர் ஆகுக.
நாம் அனைவரைக் காட்டிலும், உயர்ந்த சர்வ சக்திவானாகிய தந்தையின்
அதிகாரத்தின் மூலம் அனைத்து காரியங்களையும் செய்பவர்கள் (நாம்)
என்ற நம்பிக்கை(நிச்சயம்) உறுதியாக இருக்கட்டும் அப்போது யாரும்
அசைக்க முடியாது. இதன் மூலம் எத்தனை பெரிய காரியத்தையும் மிக
சகஜமாக அனுபவம் செய்வீர்கள். இன்றைய காலகட்டத்தில் அறிவியலானது
- எந்த ஒரு கேள்விக்கும் சகஜமாக பதில் கிடைக்கும்படியான
இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளது, புத்தியை ஈடுபடுத்த வேண்டிய
அவசியம் இல்லை; அதே போல் சர்வ சக்திவானானின் அதிகாரத்தை
முன்னால் வைத்தீர்கள் என்றால் அனைத்து கேள்விகளுக்கமான பதில்
சகஜமாகவே கிடைத்து விடும் மேலும் சகஜமான மார்கத்தின் அனுபவம்
ஏற்படும்.
சுலோகன்:
மனஒருநிலைப்பாட்டின் சக்தி – வசப்பட்ட மனோநிலையை கூட மாற்றம்
செய்து விடக் கூடியது.
அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தன் முக்த் ஆக
இருந்து ஜீவன்முக்த் மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
பிராமண வாழ்க்கையின் ஆனந்தம் (மஜா) என்பது ஜீவன்முக்த்
மனோநிலையில் இருக்கிறது. விடுபட்ட வராக ஆகுவது எனில் முக்தி
அடைவது. சன்ஸ்காரத்திற்கு கூட அடிபணிதல் கூடாது. என்ன செய்வது,
எப்படி செய்வது, செய்ய விரும்பவில்லை ஆனால் நடந்து விட்டது -
இது தான் ஜீவன் பந்தன் ஆகுவது. விருப்பம் (இச்சா) இல்லாமல்
இருந்தது ஆனால் நன்றாக (அச்சா) இருந்தது, படிப்பினை
கொடுக்கப்பட்டு இருந்தது ஆனாலும் கோபம் வந்துவிட்டது-இது தான்
ஜீவன் பந்தன் மனோ நிலை. பிராமணன் என்றால் ஜீவன் முக்த்.
ஒருபோதும் அப்படிப்பட்ட எந்த பந்தனத்தின் கட்டுப்பாட்டிலும் வர
முடியாது.