09-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! கிரேட் கிரேட்
கிராண்டு ஃபாதர் - அதாவது அனைத்து தர்ம பிதாக்களுக்கும் ஆதி
பிதாவாக இருப்பவர் பிரஜாபிதா பிரம்மா ! அவருடைய தொழில் பற்றி
குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள்.
கேள்வி:
கர்மங்களைச் சிறந்ததாக
ஆக்குவதற்கான யுக்தி (வழிமுறை) என்ன?
பதில்:
இந்த பிறவியில் செய்த எந்த ஒரு
கர்மத்தையும் தந்தையிடமிருந்து மறைக்காதீர்கள். ஸ்ரீமத்படி
கர்மம் செய்தீர்கள் என்றால் ஒவ்வொரு செயலும் சிறந்ததாக
இருக்கும். எல்லாமே கர்மங்களைப் பொருத்துள்ளது. யாராவது பாவ
செயல் செய்து மறைத்து கொண்டு விடுகிறார்கள் என்றால், அதற்கு
100 மடங்கு தண்டனை ஏற்படும். பாவங்கள் அதிகரித்துக் கொண்டே
போகும். தந்தையிடமிருந்து யோகம் அறுபட்டு விடும். பிறகு இது
போல மறைப்பவர்களுக்கு சர்வநாசம் ஏற்பட்டு விடுகிறது. எனவே
உண்மையான தந்தையிடம் உண்மையாக இருங்கள்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான அருமையான குழந்தைகள் இந்த பழைய உலகத்தில்
இப்பொழுது நாம் ஒரு சில நாட்களுக்கான பிரயாணிகள் மட்டுமே ஆவோம்
என்பதைப் புரிந்துள்ளார்கள். உலகத்தின் மனிதர்களோ இங்கு இன்னும்
40 ஆயிரம் வருடங்கள் இருப்போம் என்று நினைக்கிறார்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கோ நிச்சயம் உள்ளது அல்லவா? இந்த
விஷயங்களை மறக்காதீர்கள். இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்றால்
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் மிகவுமே மகிழ்ச்சியால்
புல்லரித்துப் போக வேண்டும். இந்த கண்களால் பார்க்கும்
அனைத்தும் அழியப் போகிறது. ஆத்மாவோ அழியாதது ஆகும். ஆத்மாவாகிய
நாம் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளோம் என்பதும் புத்தியில்
உள்ளது. இப்பொழுது தந்தை அழைத்துச் செல்ல வந்துள்ளார். பழைய
உலகம் முடிவடையும் பொழுது தான் தந்தை புதிய உலகத்தை அமைக்க
வருகிறார். புதிய உலகத்திலிருந்து பழையது, பின் பழைய
உலகத்திலிருந்து புதிய உலகமாக ஆகும். இந்த சக்கரம் பற்றிய ஞானம்
உங்கள் புத்தியில் உள்ளது. அநேக முறை நாம் இந்த சக்கரத்தில்
சுற்றி வந்தோம். இப்பொழுது இந்த சக்கரம் முடிவடைகிறது. பிறகு
புதிய உலகத்தில் நாம் கொஞ்சம் பேர் தான் தேவதைகளாக இருப்போம்.
மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இப்பொழுது நாம் மனித
நிலையிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இதில்
உறுதியான நிச்சயம் உள்ளது அல்லவா? மற்றபடி எல்லாமே கர்மங்களைப்
பொறுத்து தான் இருக்கிறது. மனிதர்கள் தவறான செயல்கள் செய்யும்
பொழுது அது உள்ளுக்குள் அவசியம் உறுத்தும். எனவே இந்த பிறவியில்
அப்பேர்ப்பட்ட எந்த ஒரு பாவமும் செய்யவில்லையே என்று தந்தை
கேட்கிறார். இது இருப்பதே சீ-சீ இராவண இராஜ்யமாக. இதையும்
நீங்கள் புரிந்துள்ளீர்கள். இராவணன் என்ற பெயர் எதற்கு
சொல்லப்படுகிறது என்பது உலகத்திற்குத் தெரியாது. இராம இராஜ்யம்
வேண்டும் என்று பாபுஜீ (காந்தியடிகள்) கூறிக் கொண்டிருந்தார்.
ஆனால் அர்த்தம் தெரியாமல் இருந்தனர். இராம இராஜ்யம் எந்தவிதமாக
இருக்கும் என்பதை இப்பொழுது எல்லை யில்லாத தந்தை புரிய
வைக்கிறார். இதுவோ இருண்ட உலகம் ஆகும். இப்பொழுது எல்லை
யில்லாத தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தியை அளித்துக்
கொண்டிருக்கிறார். இப்பொழுது நீங்கள் பக்தி செய்வதில்லை.
இப்பொழுது தந்தையின் கை (உதவிக்கரம்) கிடைத்துள்ளது. தந்தையின்
ஆதரவு இன்றி நீங்கள் விகாரக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தீர்கள்.
அரைக்கல்பம் இருப்பதே பக்தி. ஞானம் கிடைப்பதால் நீங்கள் புது
உலகமான சத்யுகத்திற்குச் சென்று விடுகிறீர்கள். நாம் பாபாவை
நினைவு செய்து செய்து தூய்மையாக ஆகி விடுவோம் என்ற நிச்சயம்
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. பிறகு தூய்மையான
இராஜ்யத்தில் வருவீர்கள். இந்த ஞானம் கூட இப்பொழுது புருஷோத்தம
சங்கமயுகத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது. இது புருஷோத்தம
சங்கமயுகம் ஆகும். இப்பொழுது நீங்கள் சீ-சீயிலிருந்து அழகாக,
முட்களிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். யார்
ஆக்குகிறார்? தந்தை அவரை அறிந்துள்ளீர்கள். ஆத்மாக் களாகிய
நமக்கு அவர் எல்லையில்லாத தந்தை ஆவார். லௌகீக தந்தையை
எல்லையில்லாத தந்தை என்று கூற மாட்டார்கள். பரலோகத் தந்தை
ஆத்மாக்களின் கணக்குப்படி அனைவரின் தந்தை ஆவார். பிறகு
பிரம்மாவின் தொழில் கூட வேண்டும் அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள்
அனைவரின் தொழில் பற்றி அறிந்து கொண்டு விட்டீர்கள். விஷ்ணுவின்
தொழிலைக் கூட அறிந்துள்ளீர்கள். எவ்வளவு அலங்கரிக்கப்பட்டு
இருக்கிறார். சொர்க்கத்தின் அதிபதி ஆவார் அல்லவா? இவரோ (பிரம்மா)
சங்கமத்தினுடையவர் என்று தான் கூறுவார்கள். மூலவதனம்,
சூட்சுமவதனம், ஸ்தூல வதனம் - அது கூட சங்கமத்தில் வருகிறது
அல்லவா? பழைய உலகம் மற்றும் புதிய உலகத்தினுடைய இது சங்கமம்
ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். ஹே, பதீத பாவனரே !
வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். தூய்மையான உலகம்
என்பது புது உலகம் மற்றும் தூய்மையற்ற உலகம் என்பது பழைய உலகம்.
எல்லையில்லாத தந்தைக்கும் நடிப்பின் பாகம் உள்ளது என்பதையும்
அறிந்துள்ளீர்கள். படைப்பவர் (கிரியேட்டர்) இயக்குநர் (டைரக்டர்)
ஆவார் அல்லவா? எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே அவசியம்
அவருடையது ஏதாவது செயல்கள் இருக்கும் தானே! அவரை மனிதன் என்று
கூறப்படுவதில்லை. அவருக்கோ சரீரம் கிடையாது. மற்றவர்கள்
அனைவரையும் ஒன்று மனிதன் என்று கூறுவார்கள் அல்லது தேவதை என்று
கூறுவார்கள். சிவபாபாவையோ தேவதை என்றும் கூற முடியாது, மனிதன்
என்றும் கூறமுடியாது. ஏனெனில் அவருக்கு சரீரமே இல்லை. இதுவோ (பிரம்மா
உடலை) தாற்காலிகமாக எடுத்துள்ளார். இனிமையிலும் இனிமையான
குழந்தைகளுக்கு நான் சரீரம் இன்றி எப்படி இராஜயோகம் கற்பிக்க
முடியும் என்று அவரே கூறுகிறார். என்னை மனிதர்கள் கல், மண்ணில்
இருப்பதாக கூறி விட்டுள்ளார்கள். ஆனால் நான் எப்படி வருகிறேன்
என்பதை இப்பொழுதோ குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள்.
எந்த ஒரு மனிதனும் கற்பிக்க முடியாது. தேவதை கள் சத்யுக
இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள்? அவசியம் புருஷோத்தம
சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றுக் கொண்டு இருந்திருக்கக் கூடும்.
எனவே இதை நினைவு செய்து இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு
ஏராளமான குஷி இருக்க வேண்டும். நாம் இப்பொழுது 84ன் சக்கரத்தை
முடித்து விட்டோம். தந்தை கல்ப கல்பமாக வருகிறார். இது அநேக
பிறவிகளின் கடைசி பிறவி ஆகும் என்று சுயம் தந்தை கூறுகிறார்.
சத்யுகத்தில் இளவரசனாக இருந்த ஸ்ரீகிருஷ்ணர் தான் மீண்டும்
84ன் சக்கரம் சுற்றி வருகிறார். நீங்கள் சிவனுக்கோ 84 பிறவிகள்
என்று கூற மாட்டீர்கள். உங்களிலும் கூட வரிசைக் கிரமமாக
முயற்சிக்கேற்ப அறிந்துள்ளீர்கள். மாயை மிகவும் கடுமையானது.
யாரையுமே விடுவதில்லை. இந்த தந்தை நல்ல முறையில் அறிந்துள்ளார்.
தந்தை அந்தர்யாமி (உள்ளே இருப்பதை அறிந்து கொள்பவர்) என்று
நினைக்கா தீர்கள். இல்லை. எல்லோருடைய செயல்கள் மூலமாக அறிந்து
கொள்கிறார். சமாச்சாரம் வருகிறது. மாயை ஒரேயடியாக பச்சையாக
வயிற்றில் போட்டுக் கொண்டு விடுகிறது. இது போன்ற நிறைய
விஷயங்கள் குழந்தைகளாகிய உங்களுக்கு தெரிந்து வருவதில்லை.
தந்தைக்கோ எல்லாமே தெரிந்து விடுகிறது. மனிதர்கள் பின் பாபா
அந்தர்யாமி என்று நினைக்கிறார்கள். நான் அந்தர்யாமி இல்லை என்று
தந்தை கூறுகிறார். ஒவ்வொரு வருடைய நடத்தை மூலமாக எல்லாமே
தெரிந்து விடுகிறது. மிகவுமே சீ-சீ நடத்தையில் நடக்கிறார்கள்.
தந்தை குழந்தைகளை எச்சரிக்கிறார். மாயையிடமிருந்து
பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டும். மாயை எப்பேர்ப் பட்டது
என்றால் ஏதாவதொரு ரூபத்தில் ஒரேயடியாக விழுங்கி விடுகிறது.
பிறகும் தந்தை புரிய வைக்கிறார் தான். ஆனாலும் கூட புத்தியில்
பதிவதில்லை. எனவே குழந்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். காமம் மகா எதிரி ஆகும். நாம் விகாரத்தில்
சென்றுள்ளோம் என்பது கூட தெரிவதில்லை. எனவே தந்தை கூறுகிறார்:
ஏதாவது தவறு ஏற்பட்டு விடுகிறது என்றால், தெளிவாகக்
கூறிவிடுங்கள். மறைக்காதீர்கள். இல்லை என்றால் நூறு மடங்கு
பாவம் ஆகி விடும். பின் உள்ளுக்குள் உறுத்தி கொண்டே இருக்கும்.
ஒரேயடியாக விழுந்து விடுவீர்கள். உண்மையான தந்தையிடம்
முற்றிலுமே உண்மையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மிக மிக
நஷ்டம் ஏற்படும். மாயை இச்சமயத்தில் மிகவும் கடுமையாக உள்ளது.
இது இராவணனின் உலகம் ஆகும். நாம் இந்த பழைய உலகத்தை ஏன் தான்
நினைவு செய்ய வேண்டும். நாமோ புதிய உலகத்தை நினைவு செய்வோம்.
அங்கு இப்பொழுது சென்று கொண்டிருக்கிறோம். தந்தை புதிய வீடு
கட்டுகிறார் என்றால், நமக்காக வீடு தயாராகிக் கொண்டிருக்கிறது
என்று குழந்தைகள் புரிந்திருப்பார்கள். குஷி இருக்கும். இது
எல்லையில்லாத விஷயம் ஆகும். நமக்காக புதிய உலகம் சொர்க்கம்
அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் அவசியம்
வசிப்பதற்காக வீடுகள் கூட இருக்கும். இப்பொழுது நாம் புதிய
உலகிற்குச் செல்லப் போகிறோம். எந்த அளவு தந்தையை நினைவு
செய்வீர்களோ அந்த அளவு அழகான மலராக ஆகி விடுவீர்கள். நாம்
விகாரங் களுக்கு வசப்பட்டு முட்களாக ஆகி இருந்தோம். மாயை பாதி
பேரை ஒரேயடியாக சாப்பிட்டு விடுகிறது என்பதை தந்தை
அறிந்துள்ளார். யார் வருவதில்லையோ அவர்கள் மாயைக்கு வசப்பட்டு
விட்டார்கள் அல்லவா என்பதை நீங்களும் புரிந்துள்ளீர்கள்.
தந்தையிடம் வருவதே இல்லை. இது போல மாயை அநேகரை விழுங்கி
விடுகிறது. நாம் இப்படி செய்வோம், இது செய்வோம், நாங்களோ
யக்ஞத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மிகவுமே நல்ல
நல்ல வார்த்தைகளைக் கூறிவிட்டுப் போகிறார்கள். இன்று அவர்கள்
இல்லவே இல்லை. உங்களுடைய சண்டையே மாயையுடன் தான். மாயையுடன்
சண்டை எவ்வாறு நடக்கிறது என்பது உலகத்தில் யாருக்கும் தெரியாது.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை ஞானத்தின் மூன்றாவது
கண் கொடுத்துள்ளார். அதன் மூலம் நீங்கள் இருளிலிருந்து
வெளிச்சத்தில் வந்து விட்டுள்ளீர்கள். ஆத்மாவிற்குத் தான் இந்த
ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அதனால் தான் நீங்கள் உங்களை ஆத்மா
என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். எல்லையில்லாத தந்தையை
நினைவு செய்யுங்கள். பக்தியில் நீங்கள் நினைவு செய்து
கொண்டிருந்தீர்கள் அல்லவா? நீங்கள் வந்தீர்கள் என்றால்
சமர்ப்பணம் ஆகிடுவோம் என்றும் கூறிக் கொண்டிருந்தீர்கள். எப்படி
சமர்ப்பணம் ஆவீர்கள் என்பதை அறிந்திருந் தீர்களா என்ன? எப்படி
நாம் ஆத்மா ஆவோமோ அதே போல தந்தையும் இருக்கிறார் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையினுடையது அலௌகீக
ஜன்மம் ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு எப்படி நல்ல முறையில்
படிப்பிக்கிறார். இவரோ கல்ப கல்பமாக நமக்கு தந்தையாக ஆகக்
கூடிய அதே தந்தை ஆவார் என்று சுயம் நீங்களே கூறுகிறீர்கள். நாம்
கூட பாபா பாபா என்று கூறுகிறோம். தந்தை கூட குழந்தைகளே,
குழந்தைகளே ! என்கிறார். அவரே ஆசிரியரின் ரூபத்தில் இராஜயோகம்
கற்பிக்கிறார். வேறு யாருமே இராஜயோகம் கற்பிக்க முடியாது.
உங்களை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார் என்றால் அப்பேர்ப்பட்ட
தந்தையினுடையவராக ஆகி பிறகு அதே ஆசிரியரின் கல்வியும் பெற
வேண்டும் அல்லவா? குஷியில் புல்லரித்துப் போய் விட வேண்டும்.
சீ-சீ ஆனீர்கள் என்றால் பிறகு அந்த குஷி வராது. எவ்வளவு தான்
தலையிலடித்துக் கொண்டாலும் சரி, பிறகு அவர் நம்முடைய தர்மத்தை
சேர்ந்த சதோதரர் ஆக இருக்க மாட்டார். இங்கு மனிதர்களுக்கு
எவ்வளவு குடும்ப பெயர்கள் (சர்நேம்) இருக்கின்றன. உங்களுடைய
குடும்ப பெயர் பாருங்கள் எவ்வளவு பெரியது. இவர் பெரியதிலும்
பெரிய கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர் பிரம்மா ஆவார். அவரை
யாரும் அறியாமலே இருக்கிறார்கள். சிவபாபாவையோ சர்வ வியாபி என்று
கூறி விட்டுள்ளார்கள். பிரம்மா பற்றி கூட யாருக்குமே
தெரியவருவதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரனின் படங்கள் கூட
உள்ளன. பிரம்மாவை சூட்சுமவதனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
வாழ்க்கை சரித்திரம் எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள்.
சூட்சுமவதனத்தில் பிரம்மாவைக் காண்பிக்கிறார்கள். பிறகு
பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வருவார்? அங்கு குழந்தைகளைத்
தத்து எடுப்பாரா என்ன? யாருக்குமே தெரியாது. பிரஜாபிதா பிரம்மா
என்று கூறுகிறார்கள். ஆனால் வாழ்க்கை சரித்திரத்தை அறியாமல்
உள்ளார்கள். இது என்னுடைய ரதம் ஆகும் என்று பாபா புரிய
வைத்துள்ளார். அநேக பிறவிகளின் கடைசியில் நான் இவரை ஆதாரமாக
எடுத்துள்ளேன். இந்த புருஷோத்தம சங்கம யுகம் கீதையின் இடைக்கதை
(ஒரு பாகம்) ஆகும். தூய்மை கூட முக்கியமானது ஆகும். தூய்மை
இல்லாத நிலையிலிருந்து எப்படி தூய்மை ஆவது என்பது பற்றி இந்த
உலகத்தில் யாருக்குமே தெரியாது. தேகத்துடன் சேர்த்து
எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று இவ்வாறு சாது
சந்நியாசிகள் ஆகியோர் ஒரு பொழுதும் கூற மாட்டார்கள். ஒரு
தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் மாயையின் பாவச் செயல்கள்
எல்லாமே சாம்பலாகி விடும். எந்த ஒரு குருவும் ஒரு பொழுதும்
இப்படி கூற மாட்டார்.
இவர் எப்படி பிரம்மா ஆகிறார் என்பதை தந்தை புரிய வைக்கிறார்.
சிறு வயதில் கிராமத்து சிறுவனாக இருந்தார். முதலிலிருந்து கடைசி
வரை 84 பிறவிகள் எடுத்துள்ளார். ஆக புதிய உலகமே பிறகு பழையதாக
ஆகி விடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியின்
பூட்டு திறந்துள்ளது. உங்களால் புரிந்து கொள்ள முடியும். தாரணை
செய்ய முடியும். இப்பொழுது நீங்கள் புத்திசாலி ஆகி உள்ளீர்கள்.
இதற்கு முன்பு புத்தியற்றவர்களாக இருந்தீர்கள். இந்த இலட்சுமி
நாராயணர் புத்திசாலிகள் ஆவார்கள். மேலும் இங்கு
புத்தியற்றவர்களாக இருக்கிறார்கள். முன்னால் பாருங்கள். இவர்கள்
சொர்க்கத்தின் அதிபதி ஆவார்கள் அல்லவா? கிருஷ்ணர் சொர்க்கத்தின்
அதிபதியாக இருந்தார். பிறகு கிராமத்துச் சிறுவனாக ஆகி உள்ளார்.
குழந்தைகளாகிய நீங்கள் இதை தாரணை செய்து பிறகு அவசியம்
தூய்மையாகவும் ஆக வேண்டும். முக்கியமானதே தூய்மையின் விஷயம்
ஆகும். பாபா மாயை எங்களை வீழ்த்தி விட்டது என்று எழுதவும்
செய்கிறார்கள். கண்கள் (கிரிமினல்) குற்றமானதாக ஆகி விட்டது.
தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுதோ
வீட்டிற்குச் செல்ல வேண்டும் அவ்வளவே ! தந்தையை நினைவு செய்ய
வேண்டும். சிறிது காலத்திற்கு சரீர நிர்வாகத்திற்காக கர்மம்
செய்து பிறகு நாங்கள் போய் விடுகிறோம். இந்த பழைய உலகத்தின்
விநாசத்திற்காக சண்டையும் ஏற்படுகிறது. எப்படி ஏற்படுகிறது
என்பதையும் நீங்கள் பாருங்கள். நாம் தேவதை ஆகிறோம் என்று புத்தி
மூலமாக புரிந்து கொள்கிறீர்கள். எனவே நமக்கு புது உலகம் கூட
வேண்டும். எனவே அவசியம் விநாசம் ஏற்படும். நாம் ஸ்ரீமத் படி
நமது புது உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
நான் உங்களுடைய சேவைக்காக வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார்.
தூய்மை இல்லாத எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள் என்று நீங்கள்
கோரிக்கை விடுத்தீர்கள். எனவே நீங்கள் கூறியதற்காக நான்
வந்துள்ளேன். உங்களுக்கு மிகவும் எளிய வழியைக் கூறுகிறேன்.
மன்மனாபவ பகவான் கூறுகிறார் அல்லவா? கிருஷ்ணரின் பெயரை கூறி
விட்டுள்ளார்கள். அவ்வளவு தான். தந்தைக்கு அடுத்தவர்
ஸ்ரீகிருஷ்ணர். அவரை மிகவும் அன்பு செய்கிறார்கள். இவர்
பரந்தாமத்திற்கு அதிபதி. அவர் உலகத்திற்கு அதிபதி. சூட்சும
வதனத்திலோ எதுவும் நடப்பதே இல்லை. எல்லோரையும் விட முதல்
நம்பரில் இருப்பவர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். அவரை மிகவும் அன்பு
செய்கிறார்கள். மற்றவர்களோ பின்னால் வந்துள்ளார்கள்.
சொர்க்கத்திற்கோ எல்லோரும் போக முடியாது. எனவே இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு ஆழமான குஷி இருக்க வேண்டும்.
செயற்கையான குஷி நடக்காது. வெளியிலிருந்து வித விதமான
குழந்தைகள் பாபா விடம் வருவார்கள். ஒரு பொழுதும் தூய்மையாக
இருக்க மாட்டார்கள். விகாரத்தில் செல்கிறீர்கள். பிறகு எதற்காக
வருகிறீர்கள் என்று பாபா புரிய வைப்பார். என்ன செய்வது இருக்க
முடிய வில்லை. தினமும் வருகிறேன். எப்பொழுதாவது ஏதாவது அம்பு
போல தைத்து (புத்தியில் டச்) விடவும் கூடும். நீங்கள் இல்லாமல்
யார் சத்கதி அளிப்பார்? என்று கூறுவார்கள் வந்து உட்கார்ந்து
விடுவார்கள். மாயை மிகவும் பிரபலமானது. பாபா நம்மை தூய்மை
இல்லாத நிலையிலிருந்து தூய்மையாக அழகாக ஆக்குகிறார் என்ற
நிச்சயம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? பிறகும் உண்மையைக்
கூறிக் கொண்டிருந்தார். இப்பொழுது அவசியம் அவர்
திருந்தியிருக்க கூடும். இவர் மூலமாகத் தான் திருந்திவிடுவோம்
என்ற நிச்சயம் அவருக்கு இருந்தது.
இச்சமயம் எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள். ஒருவர் போல
மற்றவரின் தோற்றம் இருக்காது. பிறகு கல்பத்திற்கு பிறகு அதே
தோற்றங்கள் மூலமாக அவர்கள் பாகத்தை திரும்பவும் நடிப்பார் கள்.
ஆத்மாக்களோ எல்லோரும் நிலையானவர்கள் அல்லவா? எல்லா நடிகர்களும்
முற்றிலும் மிகச் சரியான பாகத்தை ஏற்று நடித்து கொண்டே
இருக்கிறார்கள். எதுவுமே வித்தியாசம் ஏற்பட முடியாது. எல்லா
ஆத்மாக்களுமே அழிவில்லாத வர்கள் ஆவார்கள். அவர்களுக்குள் பாகம்
கூட அழிவற்றதாக பொருந்தி உள்ளது. எவ்வளவு புரிய வைக்க வேண்டிய
விஷயங்கள்! எவ்வளவு புரிய வைக்கிறார்! பிறகும் மறந்து
விடுகிறார்கள். புரிய வைக்க முடியாமல் உள்ளார்கள். இதுவும்
நாடகத்தில் நடக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு கல்பமும் இராஜ்யமோ
ஸ்தாபனை ஆகியே விடுகிறது. சத்யுகத்தில் வருவதே கொஞ்சம் பேர்.
அதுவும் வரிசைக்கிரமமாக. இங்கு கூட வரிசைக் கிரமமாக உள்ளார்கள்
அல்லவா? ஒருவருடைய பாகம் ஒருவருக்குத் தான் தெரியும். வேறு
யாரும் தெரிந்து கொள்ள முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உண்மையான தந்தையிடம் எப்பொழுதும் உண்மையானவராக இருக்க
வேண்டும். தந்தையின் மீது முழுமையாக சமர்ப்பணம் ஆக வேண்டும்.
2. ஞானத்தை தாரணை செய்து புத்திசாலிகளாக ஆக வேண்டும்.
உள்ளுக்குள் ஆழமான குஷியில் இருக்க வேண்டும். ஸ்ரீமத்திற்கு
புறம்பாக எந்த ஒரு காரியத்தையும் செய்து குஷி மறைந்து போகச்
செய்துவிடக் கூடாது.
வரதானம்:
நாடகம் என்ற கருத்தின் அனுபவத்தின் மூலம் சதா சாட்சி நிலையில்
இருக்கக் கூடிய ஆடாத, அசையாதவர் ஆகுக.
நாடகம் என்ற கருத்தில் அனுபவியாக இருப்பவர்கள் சதா சாட்சி
நிலையில் நிலைத்திருந்து ஏக்ரஸ், ஆடாத-அசையாத நிலை அனுபவம்
செய்வார்கள். நாடகம் என்ற கருத்தின் அனுபவி ஆத்மா ஒருபோதும்
தீயவற்றில் தீயதை பார்க்காமல் நல்லதை மட்டுமே பார்ப்பார்கள்.
அதாவது சுய நன்மைக்கான பாதை தென்படும். தீமைக்கான கணக்கு
முடிவடைந்து விடும். நன்மை செய்யக் கூடிய தந்தையின்
குழந்தைகளாக இருக்கிறீர்கள், நன்மைக்கான யுகம் - இந்த ஞானம்
மற்றும் அனுபவ அதாரிட்டி மூலம் ஆடாத-அசையாதவர் ஆகுங்கள்.
சுலோகன்:
யார் நேரத்தை விலைமற்றதாக புரிந்து கொண்டு
வெற்றியாக்குகிறார்களோ, அவர்கள் சரியான நேரத்தில் ஏமாற்றம்
அடையமாட்டார்கள்.
அவ்யக்த இஷாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
ஞான பொக்கிஷத்தின் மூலம் இந்த நேரத்திலேயே
முக்தி-ஜீவன்முக்தியின் அனுபவம் செய்ய வேண்டும். துக்கம்
மற்றும் அசாந்திக்கான காரணம் எதுவாக இருந்தாலும், விகாரமாக
இருந்தாலும் அதிலிருந்து முக்தி அடையுங்கள். ஒருவேளை ஏதாவது
விகாரம் வந்தாலும் கூட வெற்றி அடைந்து விட வேண்டும், தோல்வி
அடையக் கூடாது. அநேக வீண் எண்ணங்கள் மற்றும் விகார எண்ணங்கள்,
தீய காரியங்களிலிருந்து முக்தி அடைய வேண்டும் - இது தான்
ஜீவன்முக்தி நிலையாகும்.