10-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய நினைவு
யாத்திரை முற்றிலும் குப்தமானது. குழந்தைகள் நீங்கள் இப்போது
முக்திதாமம் செல்வதற்கான யாத்திரை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி:
ஸ்தூல வதனவாசியில் இருந்து
சூட்சும வதனவாசி ஃபரிஸ்தா ஆவதற்கான புருஷார்த்தம் என்ன?
பதில்:
சூட்சுமவதனவாசி ஃபரிஸ்தா ஆக
வேண்டுமானால் ஆன்மிக சேவையில் எலும்புகளையும் உடல், மனம்,
பொருள் அனைத்தையும் (ஸ்வாஹா) தியாகம் செய்யுங்கள். (ஈடுபடுத்துங்கள்)
தனது என்கின்ற அனைத்தை யும் (எலும்புகளை) ஸ்வாஹா செய்யாமல் .ஃபரிஸ்தா
ஆக முடியாது. ஏனென்றால் ஃபரிஸ்தாக்கள் எலும்பு சதையின்றி
இருப்பார்கள். இந்த எல்லையற்ற சேவையில் ததீச்சி ரிஷியைப் போல்
எலும்புகளை (உடலையும்) ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான்
வ்யக்தத்திலிருந்து அவ்யக்தமாக (ஸ்தூல சரீரத்தி-ருந்து ஃபரிஸ்தாவாக)
ஆவீர்கள்.
பாடல்:
பொறுமையாக இரு மனமே........
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு இந்தப் பாடல் மூலம் சமிக்ஞை கிடைத்துள்ளது
சுட்டிக்காட்டப் படுகிறது பொறுமையாக இருங்கள் என்று. குழந்தைகள்
அறிவார்கள், நாம் ஸ்ரீமத் படி புருஷார்த்தம் செய்து கொண்டி
ருக்கிறோம். மேலும் இந்த குப்த யோகத்தின் யாத்திரையில் உள்ளோம்
என்பதையும் அறிவார்கள். அந்த உலகாயத யாத்திரை குறிப்பிட்ட
நேரத்தில் (காலத்தில்) முடிவடையும். இந்த யாத்திரை முக்கியமானது,
இதை உங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். யாத்திரையில்
அவசியம் செல்ல வேண்டும். மேலும் அழைத்துச் செல்லும்
வழிகாட்டியும் கூடவே வேண்டும். இதன் பெயரே பாண்டவ சேனை என
வைக்கப் பட்டுள்ளது. இப்போது யாத்திரையில் இருக்கிறீர்கள்.
ஸ்தூல யுத்தத்தின் எந்த ஒரு விஷயமும் கிடையாது. ஒவ்வொரு
விஷயமும் குப்தமானது. யாத்திரையும் கூட மிகவும் குப்தமானது.
சாஸ்திரங்களிலும் உள்ளது - பாபா சொல்கிறார், என்னை நினைவு
செய்வீர்களானால் என்னிடம் வந்து சேர்ந்து விடுவீர்கள். இது கூட
யாத்திரை ஆகிறது இல்லையா? பாபா அனைத்து சாஸ்திரங்களின்
சாரத்தைச் சொல்கிறார். நடைமுறை செயல்பாட்டில் கொண்டு வருகிறார்.
ஆத்மாக்கள் நாம் நம்முடைய நிர்வாண்தாமத்திற்கு யாத்திரையில்
செல்ல வேண்டும். சிந்தனை செய்வீர்களானால் புரிந்துக் கொள்ள
முடியும். இது முக்திதாமத்திற்கான உண்மையான யாத்திரை. நாம்
முக்திதாமம் செல்ல வேண்டும் என்று தான் அனைவரும்
விரும்புகின்றனர். இந்த யாத்திரை செய்வதற்காக யாராவது
முக்திதாமத்திற்கான வழி சொல்ல வேண்டும். ஆனால் பாபாவோ
தமக்குரிய நேரத்தில் தாமாகவே வந்து விடுகிறார். அந்த சமயத்தை
யாருமே அறிந்து கொள்ளவில்லை. பாபா வந்து புரிய வைக்கிறார்
என்றால் குழந்தைகளுக்கு நிச்சயம் ஏற்படுகின்றது. நிச்சயமாக இது
உண்மை யான யாத்திரை. இது பாடப் பட்டுள்ளது. பகவான் இந்த
யாத்திரையைக் கற்றுத் தந்திருந்தார். மன்மனாபவ, மத்யாஜீபவ.
இந்த வார்த்தைகள் கூட உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
யார் இதைச் சொன்னார் என்பதில் மட்டும் தவறு செய்து விட்டுள்ளனர்.
சொல்கிறார், தேகத்துடன் கூட தேகத்தின் சம்மந்தங்களை மறந்து
விடுங்கள். இவருக்கும் (பிரம்மா பாபா) தேகம் உள்ளது. இவருக்கும்
புரிய வைப்பவர் வேறொருவர் - அவருக்குத் தம்முடைய தேகம் என்பது
கிடையாது. அந்தத் தந்தை விசித்திரமானவர் (சரீர உருவமற்றவர்).
அவருக்கு எந்த ஒரு சரீரமும் (சித்திரம்) கிடையாது. மற்ற
அனைவருக்குமே சரீரம் உள்ளது. முழு உலகமுமே சித்திரசாலையாக
உள்ளது. விசித்திரம் மற்றும் சித்திரம், அதாவது உடல் மற்றும்
ஆத்மாவினால் இந்த மனித சொரூபம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆக,
அந்த தந்தை சித்திரம் இல்லாதவர். அவர் புரிய வைக்கிறார், நான்
இந்த சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நிச்சயமாக சாஸ்திரங்களில் உள்ளது, பகவான் சொல்லியிருந்தார்,
அப்போது மகாபாரத யுத்தம் நடைபெற்றது. இராஜயோகம்
கற்பித்திருந்தார். நிச்சயமாக இராஜ்யம் ஸ்தாபனை ஆயிற்று.
இப்போதோ இராஜ்யம் கிடையாது. இராஜயோகத்தை பகவான்
கற்பித்திருந்தார், புது உலகத்திற்காக. ஏனென்றால் விநாசக்
காட்சி கண் முன்னால் நடக்கவிருந்தது. இப்படியெல்லாம் நடந்தது
எனப் புரிய வைக்கப் படுகிறது, அப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை
ஆகியிருந்தது. அந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் ஸ்தாபனை
ஆகியிருந்தது. இப்போது உங்கள் புத்தியில் உள்ளது, சத்யுகம்
இருந்தது, தற்சமயம் கலியுகம். மீண்டும் பாபா அதே விசயங்களைச்
சொல்லிப் புரிய வைக்கிறார். நான் பரந்தாமத்திலிருந்து
வந்துள்ளேன், உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக என்று இதை
வேறு யாரும் சொல்ல முடியாது. பரமபிதா பரமாத்மா தான் சொல்ல
முடியும், பிரம்மாவின் மூலம், வேறு யார் மூலமாகவும் சொல்ல
முடியாது. சூட்சும வதனத்தில் இருப்பவர்கள்
பிரம்மா-விஷ்ணு-சங்கர். பிரம்மாவைப் பற்றியும் புரிய வைக்கப்
பட்டுள்ளது, அவர் அவ்யக்த பிரம்மா, இங்கே இருப்பவர் வ்யக்த (சாகார்)
பிரம்மா. நீங்கள் இப்போது ஃபரிஸ்தா ஆகிறீர்கள். ஃபரிஸ்தாக்கள்
ஸ்தூல வதனத்தில் இருப்பதில்லை. ஃபரிஸ்தாக்களுக்கு எலும்பு சதை
கிடையாது. இங்கே இந்த ஆன்மிக சேவையில் எலும்பு முதலிய
அனைத்தையும் ஈடுபடுத்தி விடுகின்றனர். பிறகு ஃபரிஸ்தா ஆகி
விடுகின்றனர். இப்போதோ எலும்பு உள்ளது இல்லையா? இதுவும்
எழுதப்பட்டுள்ளது - தன்னுடைய எலும்புகளையும் (உடல், மனம்,
பொருள்) கூட சேவையில் (பயன்படுத்தி) கொடுத்து விட்டனர். அதாவது
தங்களது அனைத்தையும் சமர்ப்பணம் செய்து விட்டனர்.
ஸ்தூலவதனத்திலிருந்து சூட்சுமவதன வாசி ஆக வேண்டும். இங்கே நாம்
அனைத்தையும் கொடுத்து சூட்சுமமாக ஆகி விடுகிறோம். இந்த சேவையில்
அனைத்தையும் ஸ்வாஹா செய்துவிட வேண்டும். நினைவில்
இருந்து-இருந்தே நாம் ஃபரிஸ்தா ஆகி விடுவோம். இதுவும் பாடப்
பட்டுள்ளது - வேட்டைக் காரனுக்குக் கொண்டாட்டம், வேட்டையாடப்
படும் மிருகத்துக்குத் திண்டாட்டம் (மிரூவா மௌத் மலூக்கா ஷிகார்).
இதில் மலூக்-வேட்டைக்காரன் எனச் சொல்லப்படுவது ஃபரிஸ்தா ஆகும்.
நீங்கள் மனிதரில் இருந்து ஃபரிஸ்தா ஆகிறீர்கள். உங்களை தேவதை
எனச் சொல்லப்பட முடியாது. இங்கோ உங்களுக்கு சரீரம் உள்ளது
இல்லையா? சூட்சும வதனத்தின் வர்ணனை இப்போது தான் நடைபெறுகின்றது.
யோகத்தில் அமர்ந்து பிறகு ஃபரிஸ்தா ஆகி விடுகின்றனர். கடைசியில்
நீங்கள் ஃபரிஸ்தா ஆகி விடுவீர்கள். உங்களுக்கு அனைத்தும்
சாட்சாத்காரம் ஆகும் மற்றும் குஷி இருக்கும். மனிதர்களோ
அனைவரும் காலனின் வேட்டைப் பொருள் ஆகி விடுவார்கள். உங்களில்
யார் மகாவீராக உள்ளனரோ, அவர்கள் ஆடாத நிலையில் இருப்பார்கள்.
மற்றபடி என்னென்னவோ நடைபெற்றுக் கொண்டிருக்கும்! விநாசத்தின்
காட்சியோ நடைபெறப் போகிறது இல்லையா? அர்ஜுனனுக்கு விநாசத்தின்
சாட்சாத்காரம் கிடைத்தது. ஒரு அர்ஜுனனின் விஷயம் கிடையாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு விநாசம் மற்றும் ஸ்தாபனையின் சாட்சாத்
காரம் கிடைக்கின்றது. முதல்-முதலில் (பிரம்மா) பாபாவுக்கு
சாட்சாத்காரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஞானமோ
எதுவும் இல்லாதிருந்தது. சிருஷ்டியின் விநாசம் நடைபெற்றுக்
கொண்டிருப்பதைப் பார்த்தார். பிறகு சதுர்புஜ விஷ்ணுவின்
சாட்சாத்காரம் கிடைத்தது. இதுவே நல்லது எனப் புரிந்து கொண்டார்.
விநாசத்திற்குப் பிறகு நாம் உலகத்தின் எஜமானர் ஆகப் போகிறோம்
என்பதால் குஷி வந்து விட்டது. இப்போது இந்த உலகத்திற்குத்
தெரியாது, விநாசமோ நல்லது தான் இல்லையா? அமைதிக்காக முயற்சி
செய்கின்றனர். ஆனால் கடைசியில் விநாசமோ நடைபெறத் தான் போகிறது.
நினைவு செய்கின்றனர், பதித-பாவனா வாருங்கள் என்று. ஆகவே தந்தை
நிச்சயமாக வருவார், தூய்மையான உலகத்தை ஸ்தாபனை செய்வார். அதில்
நாம் இராஜ்யம் செய்வோம். இது நல்லது தான் இல்லையா? பதித-பாவனரை
ஏன் நினைவு செய்கின்றனர்? ஏனென்றால் துக்கம் உள்ளது. தூய்மையான
உலகத்தில் தேவதைகள் இருப்பார்கள். அசுத்தமான உலகத்திலோ
தேவதைகளின் கால் பதிக்க முடியாது. ஆகவே நிச்சயமாக அசுத்தமான
உலகத்தின் விநாசம் நடைபெற்றாக வேண்டும். மகாவிநாசம்
நடைபெற்றதாகப் பாடப் பட்டும் உள்ளது. அதன் பிறகு என்ன நடக்கிறது?
ஒரு தர்மத்தின் ஸ்தாபனையோ அப்படியே நடை பெறும் இல்லையா?
இங்கிருந்து இராஜயோகம் கற்றுக் கொள்வார்கள். விநாசம் ஆகும்.
மற்றப்படி பாரதத்தில் என்ன மிஞ்சும்? யார் இராஜயோகம் கற்றுக்
கொள் கின்றனரோ, ஞானம் கொடுக் கின்றனரோ, அவர்கள் தான் மீதி
இருப்பார்கள். மற்ற அனைவருமே விநாசமாகி விடுவார்கள். இதில்
பயப்படுவதற்கான விஷயம் கிடையாது. பதித-பாவனரை அழைக்கின்றனர்.
அவர் வருகிறார் என்றால் குஷி இருக்க வேண்டும் இல்லையா? பாபா
சொல்கிறார், விகாரங்களில் செல்லாதீர்கள். இந்த விகாரங்கள் மீது
வெற்றி பெறுங்கள், அல்லது தானம் கொடுத்து விட்டால் கிரஹணம்
அவசியம் விட்டுப் போகும். கருப் பிலிருந்து வெள்ளையாக ஆக
வேண்டும். சத்யுகத்தில் தூய்மையான தேவதைகள் இருந்தனர். அவர்கள்
நிச்சயமாக இங்கே (சங்கம யுகத்தில்) இருக்கக் கூடும்..
நீங்கள் அறிவீர்கள், நாம் ஸ்ரீமத் படி விகாரமற்றவர்களாக ஆகிறோம்.
பகவான் சொல்கிறார், இது குப்தமானது. ஸ்ரீமத்படி நடந்து நீங்கள்
இராஜபதவி பெறுகிறீர்கள். பாபா சொல்கிறார், நீங்கள் நரனில்
இருந்து நாராயணன் ஆக வேண்டும். ஒரு விநாடியில் இராஜ்யம்
கிடைக்க முடியும். ஆரம்பத்தில் பெண்குழந்தைகள் 4-5 நாள் கூட
வைகுண்டத்தில் போய் இருந்தனர். சிவபாபா வந்து குழந்தைகளுக்கு
வைகுண்டத்தின் சாட்சாத்காரமும் செய்வித்தார். தேவதைகள்
வந்தனர்-எவ்வளவு மதிப்பு-பெருமையோடு வந்தனர்! ஆக,
குழந்தைகளுக்கு மனதுக்குள் தோன்றுகிறது-நிச்சயமாக குப்த
வேடத்தில் வரக்கூடிய தந்தை நமக்குப் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். பிரம்மாவின் உடலில் வருகிறார். பிரம்மாவின்
சரீரமோ இங்கே தான் இருக்க வேண்டும் இல்லையா? பிரஜாபிதா
பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை. பாபா புரிய வைத்துள்ளார்-யாராவது
வந்தால் அவர்களிடம் கேளுங்கள், யாரிடம் வந்திருக்கிறீர்கள்?
பி.கே.இடம். நல்லது, பிரம்மா என்ற பெயரை எப்போதாவது
கேட்டிருக்கிறீர்களா? பிரஜாபிதாவோ இருக்கிறார் இல்லையா? நாம்
அனைவரும் வந்து அவருடையவர்களாக ஆகியிருக்கிறோம். நிச்சயமாக
முன்பும் கூட ஆகியிருந் தோம். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
என்றால் கூடவே பிராமணர்களும் வேண்டும். தந்தை பிரம்மாவின் மூலம்
யாருக்குப் புரிய வைக்கிறார்? சூத்திரர்களுக்கோ புரிய வைக்க
மாட்டார். இது பிரம்மா முகவம்சாவளி பிராமணர்கள். சிவபாபா,
பிரம்மா மூலம் உங்களைத் தம்முடையவர்களாக ஆக்கியிருக்கிறார்.
பிரம்மாகுமார்-குமாரிகள் எவ்வளவு ஏராளமான பேர் உள்ளனர்! எவ்வளவு
சென்டர்கள்! அனைத்திலும் பிரம்மாகுமாரிகள் கற்பிக்கின்றனர்.
இங்கே நமக்கு தாதாவின் ஆஸ்தி கிடைக்கிறது. பகவான் சொல்கிறார்,
உங்களுக்கு நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். அவர் சரீரமின்றி
இருக்கும் காரணத்தால் இவருடைய சரீரத்தை ஆதாரமாக எடுத்து நமக்கு
ஞானம் சொல்கிறார். பிரஜாபிதாவுக்கோ அனைவரும் குழந்தைகள் இல்லையா?
நாம் பிரஜாபிதா பிரம்மாகுமார்-குமாரிகள். சிவபாபா தாத்தா ஆவார்.
அவர் தத்தெடுத்துள்ளார். நீங்கள் அறிவீர்கள், நாம் தாத்தாவிடம்
கல்வி கற்றுக் கொண்டுள்ளோம், பிரம்மாவின் மூலமாக. இந்த
லட்சுமி-நாரயாணர் இருவரும் சொர்க்கத்தின் எஜமானர்கள் பகவானோ ஒரே
ஒரு உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான சரீரமற்றவர். குழந்தைகளின்
தாரணை மிக நன்றாக இருக்க வேண்டும்.. முதல்-முதலில் புரிய
வையுங்கள், இரண்டு தந்தையர் பக்தி மார்க்கத்தில் உள்ளனர்.
சொர்க்கத்தில் ஒரு தந்தை. பரலௌகிக் தந்தை மூலம் இராஜ்யம்
கிடைத்தது, பிறகு ஏன் நினைவு செய்வார்கள்? துக்கமே கிடையாது,
நினைவு செய்வதற்கு! துக்கத்தைப் போக்கி சுகம் தருபவர் எனப் பாடு
கின்றனர். அது இப்போதைய விசயம். எது கடந்து சென்று விட்டதோ,
அதற்குப் பாடல் உள்ளது. மகிமை ஒருவருக்குத் தான். அந்த ஒரு
தந்தை தான் வந்து அசுத்தமானவர்களை தூய்மை யாக்குகிறார்.
மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களோ கடந்த காலத்தின்
கதைகளை உட்கார்ந்து எழுதுகின்றனர். நீங்கள் இப்போது புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்- நிச்சயமாக பாபா இராஜயோகம்
கற்பித்திருந்தார். அதன் மூலம் இராஜ்யம் கிடைத்தது. 84 பிறவிச்
சக்கரத்தைச் சுற்றி வந்தோம். இப்போது மீண்டும் நாம் படித்துக்
கொண்டி ருக்கிறோம். பிறகு 21 பிறவிகளுக்கு இராஜ்யம் செய்வோம்.
இவர்கள் போல் தேவதை ஆவோம். இதுபோல் கல்பத்திற்கு முன்பும்
ஆகியிருந்தோம். புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் முழுமையாக
84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றியிருக்கிறோம். இப்போது
மீண்டும் சத்யுக-திரேதாவில் செல்வோம். அதனால் தான் பாபா
கேட்கிறார், இதற்கு முன் எத்தனைத் தடவை சந்தித்திருக்கிறாய்?
இது நடைமுறை விசயம் இல்லையா? புதியவர்கள் யாராவது கேட்டாலும்
புரிந்து கொள்வார்கள், 84 பிறவிச் சக்கரம் நிச்சயமாக உள்ளது.
யார் முதலில் வருகிறவர்களோ, அவர்களுக்குத் தான் சக்கரம் முழுமை
அடைந்திருக்கும். புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தக்
கட்டடத்தில், இந்த ஆடையில், பாபா, நாங்கள் உங்களோடு அநேக தடவை
சந்திக்கிறோம், சந்தித்துக் கொண்டே இருப்போம். தூய்மை
யற்றதிலிருந்து தூய்மையாக, தூய்மையி-ருந்து தூய்மை இழந்தே
வந்துள்ளோம். எந்த ஒரு பொருளும் சதா புதியதாகவே இருப்பதென்பது
நடக்க முடியாதது. பழையதாக நிச்சயம் ஆகின்றது. ஒவ்வொரு பொருளும்
சதோ-ரஜோ-தமோவில் வருகின்றது. இப்போது குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், புது உலகம் வந்து கொண்டி ருக்கிறது. அது சொர்க்கம்
எனச் சொல்லப் படுகின்றது. இது நரகமாகும். அது தூய்மையான உலகம்.
அதிகமாக அழைக்கின்றனர் - ஹே பதித-பாவனா, எங்களை வந்து
தூய்மையாக்குங்கள். ஏனென்றால் துக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது
இல்லையா? ஆனால் நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பிறகு
பூஜாரி ஆகியிருக் கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
துவாபரயுகத்தில் பூஜாரி ஆனோம். அநேக தர்மங்கள் உருவாகிக் கொண்டே
இருந்துள்ளன. நிச்சயமாகப் தூய்மை இல்லாமலிருந்து தூய்மை, தூய்மை
யிலிருந்து தூய்மை இழந்தவர் களாகியே வந்துள்ளோம். பாரதத்தில்
தான் இந்த விளையாட்டு.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது நினைவு வந்து விட்டது.
இப்போது நீங்கள் சிவஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். மற்றவர்கள்
யாருமே சிவனைப் பற்றி அறிந்து கொள்ளவே இல்லை. நாம் அறிவோம்.
நிச்சயமாக நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். பிரம்மா மூலம்
சொர்க்கத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
நிச்சயமாக யார் இராஜ யோகத்தைக் கற்றுக் கொள் கிறார்களோ, அவர்கள்
ஸ்தாபனை செய்வார்கள். அவர்கள் தான் பிறகு இராஜ்ய பாக்கியத்தைப்
பெறுவார்கள். நாம் சொல்கிறோம், நிச்சயமாக நாம் கல்ப-கல்பமாக
பாபாவிடம் இந்த இராஜ யோகத்தைக் கற்றிருக்கிறோம். பாபா புரிய
வைத்துள்ளார் - இப்போது இந்த 84 பிறவிகளின் சக்கரம்
முடிவடைகின்றது. பிறகு புதிதாகச் சக்கரத்தைச் சுற்ற வேண்டும்.
சக்கரத்தையோ அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? இந்தச் சித்திரமே
(படம்) இல்லையென்றாலும் கூட உங்களால் புரிய வைக்க முடியும்.
இதுவோ முற்றிலும் சுலபமான விசயமாகும். நிச்சயமாக பாரதம்
சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக உள்ளது. அந்த மனிதர்கள்
இதை மட்டும் புரிந்து கொண்டுள்ளனர், அதாவது கலியுகம் இன்னும்
குழந்தையாக உள்ளது. நீங்கள் சொல்கிறீர்கள், இதுவோ கலியுகத்தின்
இறுதி என்பதாக. சக்கரம் முடிவடைகின்றது. பாபா புரிய வைக்கிறார்,
நான் தூய்மையற்ற உலகத்தைத் தூய்மையாக்குவதற்காக வருகிறேன்.
நீங்கள் அறிவீர்கள், நாம் தூய்மையான உலகத்திற்குச் செல்ல
வேண்டும். நீங்கள் முக்தி, ஜீவன்முக்திதாம், சாந்திதாம்,
சுகதாம் மற்றும் துக்கதாம் பற்றியும் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பிறகு
இந்தச் சிந்தனை செய்வதில்லை, அதாவது நாம் ஏன் சுகதாமத்திற்குச்
செல்லக் கூடாது? நிச்சயமாக ஆத்மாக் களாகிய நம்முடைய வீடு அந்த
சாந்திதாம். அங்கே ஆத்மாவுக்கு உடல் உறுப்புகள் இல்லாத
காரணத்தால் எதுவும் பேசுவதில்லை. சாந்தி அங்கே அனைவருக்கும்
கிடைக்கின்றது. சத்யுகத்தில் இருப்பது ஒரு தர்மம். இந்த அநாதி,
அவிநாசி (ஆதி, அந்தம் இல்லாத அழிவற்ற) உலக நாடகம் சுற்றிக்
கொண்டே உள்ளது. ஆத்மா ஒருபோதும் விநாசம் ஆவதில்லை.
சாந்திதாமத்திலும் கொஞ்ச சமயம் இருக்கத் தான் வேண்டும். இவை
மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். கலியுகம் என்பது
துக்கதாமம். எவ்வளவு அநேக தர்மங்கள் உள்ளன! எவ்வளவு தொந்தரவுகள்!
எப்போது முற்றிலும் துக்கதாமமாக ஆகிறதோ, அப்போது பாபா வருகிறார்.
துக்கதாமத்திற்குப் பிறகு முழு சுகதாமம். சாந்தி
தாமத்திலிருந்து நாம் சுகதாமத்திற்கு வருகிறோம். பிறகு
துக்கதாமமாக ஆகின்றது. சத்யுகத்தில் சம்பூர்ண விகாரமற்றவர்கள்.
இங்கே இருப்பவர்கள் சம்பூர்ண விகாரிகள். இதைப் புரிய வைப்பதோ
மிகவும் சுலபம் இல்லையா? தைரியம் வேண்டும். எங்கே
வேண்டுமானாலும் சென்று புரிய வையுங்கள். இதுவும் எழுதப்
பட்டுள்ளது - ஹனுமான் சத்சங்கத்தில் பின்னால் செருப்புகள் மீது
போய் அமர்ந்திருந்தார் என்று. ஆக, யார் மகாவீரராக உள்ளனரோ,
அவர்கள் எங்கே வேண்டு மானாலும் சென்று யுக்தியோடு கேட்பார்கள்,
என்ன பேசுகிறார்கள் பார்க்கலாம் என்று. நீங்கள் ஆடையை மாற்றிக்
கொண்டு எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியும், அவர்களுக்கு நன்மை
செய்வதற்காக. பாபாவும் கூட குப்த வேடத்தில் உங்களுக்கு நன்மை
செய்து கொண்டிருக்கிறார் இல்லையா? கோவில்களில் எங்கே அழைப்புக்
கிடைத்தாலும் சென்று புரிய வைக்க வேண்டும். நாளுக்கு நாள்
நீங்கள் சாமர்த்தியசாலி ஆகிக் கொண்டே செல்கிறீர்கள்.
அனைவருக்கும் பாபாவின் அறிமுகமோ கொடுக்கத் தான் வேண்டும். சோதனை
(டிரயல்) செய்து பார்க்க வேண்டியுள்ளது. இதுவோ பாடப் பட்டுள்ளது,
கடைசியில் சந்நியாசிகள், இராஜாக்கள் முதலானோர் வந்தார்கள்.
இராஜா ஜனகருக்கு ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது. அவர்
பிறகு போய்த் திரேதாவில் அனுஜனகராக ஆனார். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) கடைசி விநாசத்தின் காட்சியைப் பார்ப்பதற்காக தனது மனநிலையை
மகாவீர் போல் பயமற்ற, ஆடாததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். குப்த
நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும்.
2) அவ்யக்த வதனவாசி ஃபரிஸ்தா ஆவதற்காக எல்லையற்ற சேவையில்
ததீச்சி முனிவரைப் போல் தனது ஒவ்வோர் எலும்பையும் ஸ்வாஹா
செய்துவிட (சரீரம்,சக்தி அனைத்தாலும் ஈடுபடுத்த) வேண்டும்.
வரதானம்:
முதல் ஸ்ரீமத்தில் விசே‘மான கவனம் கொடுத்து அஸ்திவாரத்தை
உறுதியானதாக ஆக்கக்கூடிய சகஜயோகி ஆகுக.
தன்னை ஆத்மா என்று புரிந்துகொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள்
என்பதே பாப்தாதாவின் நம்பர்ஒன் ஸ்ரீமத் ஆகும். ஒருவேளை, ஆத்மா
என்பதற்கு பதிலாக தன்னை சாதாரண சரீரதாரி என்று
புரிந்திருந்தீர்கள் என்றால் நினைவு நீடித்திருக்க முடியாது.
ஏதாவது இரண்டு பொருட்கள், எப்பொழுது இணைக்கப்படுகின்றனவோ,
அப்பொழுது முதலில் சமமானதாக ஆக்குகின்றார்கள், அதுபோன்று, ஆத்மா
என்று புரிந்துகொண்டு நினைவு செய்தீர்கள் என்றால் நினைவு
சகஜமானதாக ஆகிவிடும். இந்த ஸ்ரீமத் தான் முக்கியமான அஸ்திவாரம்
ஆகும். இந்த விசயத்தின் மீது அடிக்கடி கவனம் கொடுத்தீர்கள்
என்றால் சகஜயோகி ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
கர்மம் ஆத்மாவின் தரிசனத்தை காண்பிக்கக்கூடிய கண்ணாடி ஆகும்,
ஆகையினால், கர்மத்தின் மூலம் சக்தி சொரூபத்தை பிரத்யட்சம்
செய்யுங்கள்.
அவ்யக்த இஷாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்தி-ருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
பிராமணரில் இருந்து ஃபரிஷ்தா என்றால் ஜீவன்முக்தி நிலை ஆகும்.
ஜீவன் பந்தனம் அல்ல, தேக பந்தனம் அல்ல, தேக சம்பந்தத்தின்
பந்தனம் அல்ல, தேகத்தினுடைய பதார்த்தங்களின் பந்தனம் அல்ல.
ஒருவேளை, தன்னுடைய தேகப் பற்றை அழித்துவிட்டீர்கள் என்றால்
தேகத்தின் சம்பந்தம் மற்றும் பதார்த்தங்களின் பந்தனம் தானாகவே
முடிவடைந்துவிடும். முயற்சி செய்வேன் என்பது கூடாது. முயற்சி
என்ற வார்த்தையே பழைய உலகத்தின் ஈர்ப்பு உள்ளது என்பதை
நிரூபிக்கின்றது. ஆகையினால், முயற்சி என்ற வார்த்தையை
முடிவடையச் செய்யுங்கள். தேக உணர்வை விட்டு விடுங்கள்.