12-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு
சேவைக்கான ஆர்வம் அதிகம் வர வேண்டும், ஞானம் மற்றும் தந்தையின்
நினைவு இருந்தால் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள், சேவையை
அதிகரியுங்கள்
கேள்வி:
சேவையில் ஆர்வம் வராததற்கான
காரணம் என்ன? எந்தவொரு தடையின் காரணத்தினால் ஆர்வம் வருவதில்லை?
பதில்:
அனைத்திலும் பெரிய தடை
குற்றப்பார்வையாகும். இந்த வியாதி சேவையில் ஆர்வம் கொள்ள
விடுவதில்லை. இது மிகவும் கடுமையான வியாதியாகும். ஒருவேளை
குற்றப் பார்வை குறையவில்லை என்றாலும், குடும்ப விவகாரங்களில்
இரண்டு சக்கரங்களும் சரியாக செல்ல வில்லை என்றாலும் குடும்பம்
ஒரு சுமையாகி விடுகிறது, பிறகு (விடுபட்டு) இலேசாக ஆகி சேவையில்
எழுச்சி பெற முடியாது.
பாடல்:
விழித்துக் கொள்ளுங்கள்
பிரியதரிஷினிகளே விழித்துக் கொள்ளுங்கள்.............
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்த பாட்டை கேட்டீர்கள்.
இப்படிப்பட்ட இரண்டு-மூன்று நல்ல பாடல்கள் இருக்கின்றன, இவை
அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் அல்லது டேப்பில் பதிந்து
வைக்க வேண்டும். இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாடல் என்று
சொல்வார்கள். நாடகத்தின்படி தூண்டப்பட்டுள்ளது அது பிறகு
குழந்தைகளுக்கு உதவுகிறது. இப்படிப்பட்ட பாட்டை குழந்தைகள்
கேட்கும்போது போதை ஏறுகிறது. நாம் புதிய உலகத்தை ஸ்தாபனை
செய்கின்றோம், இராவணனிடமிருந்து திரும்ப எடுத்துக்
கொண்டிருக்கிறோம், என்ற போதை குழந்தைகளுக்கு எப்போதும்
அதிகரித்தே இருக்க வேண்டும். யாராவது சண்டையிடு கிறார்கள்
என்றால், நாம் இவருடைய இராஜ்யத்தை எடுக்கின்றோம் என்ற சிந்தனை
இருக்கிறது அல்லவா. இவருடைய கிராமத்தை நாம் நம்முடைய
கையகப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அல்லவா.
அவர்கள் அனைவரும் எல்லைக்குட்பட்டதிற்காக சண்டை யிடுகிறார்கள்.
குழந்தைகளாகிய உங்களுடைய சண்டை மாயையினுடனாகும், இது பிராமணர்
களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நாம் இந்த
உலகத்தின் மீது மறைமுக மான விதத்தில் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய
வேண்டும் அல்லது தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உண்மையில் இதை சண்டை என்றும் சொல்ல
முடியாது. நாடகத்தின்படி சதோபிரதானத் திலிருந்து தமோபிர தானமாக
ஆகியுள்ள நீங்கள் மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். நீங்கள்
உங்களுடைய பிறவி களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இப்போது பாபா
புரிய வைத்திருக்கின்றார். வேறு எந்த தர்மங்கள் எல்லாம் இருக்
கின்றனவோ, அவர்களுக்கு இந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்பது
இல்லை. பாபா குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் அமர்ந்து புரிய
வைக்கின்றார். தர்மத்தில் தான் சக்தி இருக்கிறது என்று
பாடப்பட்டுள்ளது. நம்முடைய தர்மம் எது என்பது பாரதவாசி
களுக்குத் தெரியாது. நம்முடையது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்
என்பது உங்களுக்கு பாபாவின் மூலம் தெரிந்திருக்கிறது. பிறகு
பாபா வந்து உங்களை அந்த தர்மத்திற்கு மாற்று கின்றார்.
நம்முடைய தர்மம் எவ்வளவு சுகம் அளிக்கக் கூடியது என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர் கள். நீங்கள் யாருடனும் சண்டை போன்றவைகள் போட
வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய சுயதர்மத்தில் நிலைத்திருக்க
வேண்டும் மேலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதில் கூட
நேரம் எடுத்துக் கொள்கிறது. வெறுமனே சொல்வதின் மூலம் நிலைத்து
விடுகிறார்கள் என்பது கிடையாது. உள்ளுக்குள் நான் ஆத்மா சாந்த
சொரூபமானவன் என்ற நினைவு இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம்
இப்போது தமோபிர தானமாக தூய்மையற்றவர்களாக ஆகி யுள்ளோம்.
ஆத்மாக்களாகிய நாம் சாந்திதாமத்தில் இருந்தபோது தூய்மையாக
இருந்தோம், பிறகு நடிப்பை நடித்து-நடித்து தமோபிரதானமாக
ஆகிவிட்டோம். இப்போது மீண்டும் தூய்மையாக ஆகி நாம் வீட்டிற்கு
திரும்பிச் செல்ல வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தியை
பெறுவதற்காக தங்களை ஆத்மா என்று உறுதி செய்து தந்தையை நினைவு
செய்ய வேண்டும். நாம் ஈஸ்வரனுடைய குழந்தைகள் என்ற போதை நமக்கு
அதிகரிக்கும். தந்தையை நினைவு செய்வதின் மூலம் தான் விகர்மம்
வினாசம் ஆகிறது. நினைவின் மூலம் நாம் தூய்மையாகி பிறகு சாந்தி
தாமத்திற்கு சென்று விடுவோம், எவ்வளவு சகஜமாக இருக்கிறது. உலகம்
இந்த சாந்திதாமம், சுகதாமத்தை கூட தெரிந்திருக்க வில்லை. இந்த
விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. ஞானக்கடலானவருடையது ஒரு
கீதையே ஆகும், இதில் பெயரை மட்டும் மாற்றி விட்டார்கள்.
அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல், ஞானக்கடல் என்று அந்த
பரமபிதா பரமாத்மாவைத் தான் சொல்லப்படுகிறது. வேறு யாரையும்
ஞானமுடைய்வர்கள் என்று சொல்ல முடியாது. அவர் ஞானத்தை கொடுத்தால்
தான் நீங்கள் ஞானமுடையவர்களாக ஆவீர்கள். இப்போது அனைவரும்
பக்திவான்களாக இருக்கிறார்கள். நீங்களும் அப்படியே இருந்தீர்கள்.
இப்போது ஞானமுடையவர்களாக ஆகிக் கொண்டே செல்கிறீர்கள்.
வரிசைகிரமமான முயற்சியின் படி சிலரிடத்தில் ஞானம் இருக்கிறது,
சிலரிடத்தில் இல்லை. என்ன சொல்வது? அந்த கணக்கின்படி உயர்ந்த
பதவியை அடைய முடியாது. பாபா சேவைக்காக எவ்வளவு ஆர்வம்
கொள்கிறார்கள். யாருக்கும் நல்ல விதத்தில் புரிய வைக்கும்
அளவிற்கு இப்படி-இப்படியெல்லாம் யுக்திகளை உருவாக்குவோம் என்று
குழந்தைகளிடத்தில் இன்னும் அந்த மாதிரி சக்தி வரவில்லை. குழந்தை
கள் உழைத்து மாநாடுகள் போன்றவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்,
கோபர்களிடம் கொஞ்சம் சக்தி இருக்கிறது, குழுவை அமைத்து அதில்
யுக்திகளை கொண்டு வர வேண்டும், சேவையை எவ்வாறு வளர்ப்பது, என்று
மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், பெயர் என்னவோ சக்தி
சேனை என்று இருக்கிறது. ஆனால் படித்தவர்களாக இல்லை. பிறகு சிலர்
படிக்காதவர்கள் கூட படித்தவர்களுக்கு நன்றாக படிப்பிக்கிறார்கள்.
குற்றப்பார்வை மிகவும் நஷ்டம் ஏற்படுத்துகிறது என்று பாபா
புரிய வைத்துள்ளார். இந்த வியாதி மிகவும் கடுமையானதாகும்
ஆகையினால் மனதில் உத்வேகம் வருவதில்லை. எனவே பாபா கேட்கின்றார்
தம்பதிகளாகிய நீங்கள் இரு சக்கரங்களும் சரியாகச் சென்று
கொண்டிருக்கிறீர்களா? அந்தப்பக்கத்தில் எவ்வளவு பெரிய-பெரிய
சேனைகள் இருக்கின்றன, பெண்களும் கூட்டமாக இருக்கிறார்கள்,
படித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியும் கிடைக்கிறது.
நீங்கள் மறைமுகமாக இருக்கின்றீர்கள். இந்த பிரம்மாகுமார
குமாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை யாரும்
தெரிந்திருக்கவில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமாகவே
இருக்கின்றீர்கள். குடும்ப விவகாரங்களின் சுமை தலையின் மீது
இருக்கின்ற காரணத்தினால் வளைந்திருக்கிறீர்கள். பிரம்மாகுமார
குமாரிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் அந்த
குற்றப்பார்வை தணிவதில்லை. இரண்டு சக்கரங்களும் ஒன்றாக இருப்பது
மிகவும் கடினமாக இருக்கிறது. பாபா குழந்தைகளுக்கு சேவை செய்ய
முன்வருவதற் காக புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். சிலர்
செல்வந்தர்களாக இருந்தாலும் கூட ஆர்வம் கொள்வதில்லை.
செல்வத்தின் பசியில் இருக்கிறார்கள், குழந்தை இல்லை என்றால்
கூட தத்தெடுக்கிறார்கள். பாபா நாங்கள் இருக்கிறோம், பெரிய வீடு
எடுத்து தருகிறோம், என்று ஆர்வம் வருவதில்லை.
பாபாவின் பார்வை விசேஷமாக தில்லியின் மீது இருக்கிறது ஏனென்றால்
தில்லி தலை நகரம், தலைமை அலுவலகமாகும். தில்லியில் விசேஷமாக
சேவையின் முற்றுகையிடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் புரிய
வைப்பதற்கு உள்ளுக்குள் நுழைந்து விட வேண்டும். பாண்டவர்களுக்கு
கௌரவர்களிடமிருந்து 3 அடி நிலம் கூட கிடைக்கவில்லை என்று
பாடப்பட்டுள்ளது. இந்த கௌரவர் என்பது கீதையின் வார்த்தையாகும்.
பகவான் வந்து இராஜயோகம் கற்றுக் கொடுத்தார், அதனுடைய பெயர் கீதை
என்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கீதையின் பகவானை மறந்து
விட்டார்கள் ஆகையினால் இந்த பாயிண்டை கையில் எடுங்கள் என்று
பாபா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறார். பனாரசின் விதூத்
மண்டலிகாரர்களுக்கு சென்று புரிய வையுங்கள் என்று பாபா முன்னால்
சொன்னார். பாபா யுக்திகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.
முதலில் தில்லியில் யுக்தியை உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து
கூட சிந்தனை செய்யுங்கள். முக்கிய மான விசயம் பெரிய விழாக்களை
தில்லியில் எப்படி நடத்துவது என்பதே ஆகும். அவர்கள் தில்லியில்
நிறைய உண்ணாவிரத போராட்டங்கள் போன்றவைகளை செய்கிறார்கள்.
நீங்கள் அப்படிப்பட்ட காரியங்கள் எதையும் செய்வதில்லை. சண்டை
எதுவும் போடுவதில்லை. நீங்கள் உறங்கிக் கொண்டிருப்பவர்களை
விழிக்கச் செய்கிறீர்கள் அவ்வளவு தான். தில்லிக்காரர்கள் தான்
உழைக்க வேண்டும். நாம் பிரம்மாண்டத்திற்கும் எஜமானர்கள் பிறகு
கல்பத்திற்கு முன் போல உலகத்திற்கும் எஜமானர்களாக ஆவீர்கள். இது
கண்டிப்பாக உறுதியாகும். உலகத்திற்கு எஜமானர் களாக ஆகத்தான்
வேண்டும். இப்போது 3 அடி நிலம் கூட தலை நகரத்தில் தான் வேண்டும்,
அப்போது அங்கே ஞான (அணு) குண்டுகளை போட முடியும். போதை வேண்டும்
அல்லவா. பெரியவர்களின் குரல் வேண்டும் அல்லவா. இப்போது பாரதம்
முழுதும் ஏழ்மையில் இருக்கிறது. ஏழைகளுக்கு சேவை செய்வதற்குத்
தான் பாபா வருகின்றார். தில்லியில் மிகவும் நன்றாக சேவை நடக்க
வேண்டும். பாபா சைகை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். பாபா
நம்முடைய கவனத்தை இழுக்கின்றார் என்று தில்லிவாசிகள் புரிந்து
கொள்கிறார்கள். தங்களுக்குள் இனிமை யானவர்களாக இருக்க வேண்டும்.
தங்களுடைய பாண்டவ கோட்டையை உருவாக்குங் கள். தில்லியில் தான்
உருவாக்க வேண்டும். இதில் மிகவும் நல்ல புத்தி வேண்டும். நிறைய
செய்ய முடியும். பாரதம் எங்களுடைய தேசம், நாங்கள் இப்படி
செய்வோம், அப்படி செய்வோம் என்று அவர்கள் நிறைய பாடுகிறார்கள்.
ஆனால் அவர்களிடத்தில் எந்த பலமும் இல்லை. வெளி நாட்டின் உதவி
இல்லாமல் முன்னேற முடியாது. உங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து
நிறைய உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு உதவியை வேறு
யாரும் செய்ய முடியாது. இப்போது விரைவாக கோட்டையை உருவாக்க
வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா உலக இராஜ்யத்தை
கொடுக்கின்றார் என்றால் அதிக உற்சாகம் வேண்டும். நிறைய பேருடைய
புத்தி கோள் சொல்வதில் மாட்டிக் கொண்டிருக்கிறது. தாய்மார்களின்
மீது பந்தனங்களின் சங்கடம் இருக்கிறது. ஆண்களுக்கு எந்த
பந்தனமும் இல்லை. தாய்மார்களை அபலைகள் என்று சொல்லப்படுகிறது.
ஆண்கள் பலமிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் திருமணம்
புரிகிறார்கள் என்றால் அவர்களுக்கு பலமளிக்கப் படுகிறது- நீ
தான் குரு ஈஸ்வரன் அனைத்தும். மனைவி வால் போல் ஆவார். பின்னால்
மாட்டிக் கொண்டிருப் பவர்கள் என்றால் கண்டிப்பாக வாலாகத் தான்
மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கணவனிடத்தில் பற்று, குழந்தை
களிடத்தில் பற்று, ஆண்களுக்கு அந்தளவிற்கு பற்று இருப்பதில்லை.
அவர்கள் ஒரு செருப்பு போனால் இரண்டாவது மூன்றாவது என்று
எடுத்துக் கொள்கிறார்கள். பழக்கமாகி விட்டது. இதை-இதையெல்லாம்
நாளேடுகளில் போடுங்கள் என்று பாபா புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இதை
புரிய வைப்பது உங்களுடைய வேலை யாகும். பாபாவோடு தாதாவும்
இருக்கின்றார். எனவே இவர் செல்ல முடியாது. எங்களுக்கு ஆபத்துகள்
வந்திருக்கிறது, இதில் சிவபாபா நீங்கள் வழி சொல்லுங்கள் என்று
கேட்பார்கள். இப்படிப்பட்ட விசயங்களைக் கேட்பார்கள். பாபா
தூய்மையற்றவர் களை தூய்மையாக்க பாபா வந்துள்ளார்.
குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து ஞானமும் கிடைக்கிறது என்று
பாபா கூறுகின்றார். முயற்சி செய்து தங்களுக்குள் ஒன்று சேர்ந்து
வழி கண்டுபிடியுங்கள். குழந்தை களாகிய நீங்கள் இப்போது
விரிவுப்படுத்துவதற்கு சேவைக்கான வழிமுறைகளை செய்து காட்ட
வேண்டும். எறும்புபோல் ஊர்ந்து செல்லும் சேவை நடந்து வந்து
கொண்டிருக்கிறது. நிறைய பேருக்கு நன்மை நடக்கும் அளவிற்கு சேவை
செய்து காட்டுங்கள். இதை பாபா கல்பத்திற்கு முன்பு கூட புரிய
வைத்திருந்தார், இப்போதும் கூட புரிய வைக்கின்றார். நிறைய
பேருடைய புத்தி எங்கெங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறது. உற்சாகம்
இல்லை. உடனே தேக-அபிமானத்தில் வந்து விடுகிறார்கள்.
தேக-அபிமானம் தான் சத்தியநாசம் செய்தது. இப்போது பாபா
சத்தியத்தை உயர்த்துவதற்கு எவ்வளவு சகஜமான விசயத்தை
கூறுகின்றார். பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சக்தி
கிடைக்கும். இல்லையென்றால் சக்தி வருவதில்லை. சென்டரைப்
பராமரிக்கிறார் கள், ஆனால் போதை இல்லை ஏனென்றால் தேக-அபிமானம்
இருக்கிறது. ஆத்ம-அபிமானிகளாக ஆனீர்கள் என்றால் போதை
அதிகரிக்கும். நாம் எந்த தந்தையினுடைய குழந்தைகளாக இருக்கிறோம்.
நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம- அபிமானி களாக இருப்பீர்களோ
அந்தளவிற்கு பலம் வரும் என்று பாபா கூறுகின்றார். அரைக்
கல்பத்தினுடைய தேக-அபிமானத்தின் போதை இருக்கிறது எனும்போது
ஆத்ம-அபிமானியாக ஆவதில் அதிக உழைப்பு எடுத்துக் கொள்கிறது. பாபா
ஞானக்கடலாக இருக்கின்றார், நாமும் ஞானத்தை பெற்றுள்ளோம் என்பது
கிடையாது, நிறைய பேருக்கு புரிய வைக்கிறார்கள் ஆனால் நினைவின்
கூர்மையும் வேண்டும். அது இல்லை என்றால் கூர் மழுங்கிய
கத்தியாகி விடுகிறது. சீக்கிய மக்கள் வாளுக்கு எவ்வளவு மரியாதை
கொடுக்கிறார்கள். அது ஹிம்சை அளிக்கக் கூடியதாக இருந்தது,
அதன்மூலம் சண்டை செய்தார் கள். உண்மையில் குருமார்கள் சண்டை
செய்யலாமா என்ன? குரு என்றால் அஹிம்சை யாளர்களாக இருக்க
வேண்டும் அல்லவா. சண்டையினால் சத்கதி ஏற்படுமா என்ன?
உங்களுடையது யோகத்தினுடைய விசயமாகும். நினைவு பலம் இல்லாமல்
ஞானம் எனும் வாள் வேலை செய்யாது. குற்றப்பார்வை அதிக நஷ்டம்
ஏற்படுத்தக் கூடியதாகும். ஆத்மா காதுகளின் மூலம் கேட்கிறது,
நீங்கள் நினைவில் மூழ்கி இருந்தீர்கள் என்றால் சேவை
அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று பாபா கூறுகின்றார். பாபா,
உறவினர்கள் கேட்பதே இல்லை என்று சில நேரங்களில் சொல்கிறார்கள்.
நினைவு யாத்திரையில் அரை-குறையாக இருக்கின்றீர்கள் ஆகையினால்
ஞான வாள் வேலை செய்வதில்லை என்று பாபா கூறுகின்றார்.
நினைவினுடைய முயற்சி செய்யுங்கள். இது மறைமுகமான உழைப்பாகும்.
முரளி வாசிப்பது வெளிப்படை யானதாகும். நினைவு தான் மறைமுகமான
முயற்சியாகும், அதன்மூலம் சக்தி கிடைக்கிறது. ஞானத்தின் மூலம்
சக்தி கிடைப்பதில்லை. நீங்கள் நினைவின் மூலம் தான் தூய்மையற்ற
நிலை யிலிருந்து தூய்மையாக ஆகின்றீர்கள். வருமானத்திற்காகத்
தான் முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு நினைவு ஒரே நிலையில் இருக்கும்போது, மன நிலை
நன்றாக இருக்கிறது என்றால் மிகுந்த குஷி இருக்கிறது மேலும்
நினைவு சரியாக இல்லை, எந்த விசயத்திலாவது தடுமாறுகிறார்கள்
என்றால் குஷி மறைந்து விடுகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர் நினைவு
வராமல் இருப்பாரா என்ன? இங்கே வீட்டில் இருக்கிறார்கள்,
அனைத்தையும் செய்து கொண்டே ஆசிரியரை நினைவு செய்ய வேண்டும்.
இந்த ஆசிரியரின் மூலம் உயர்ந்த பதவி கிடைக்கிறது. குடும்ப
விவகாரங்களிலும் இருக்க வேண்டும். ஆசிரியருடைய நினைவு இருந்தால்
கூட பாபா மற்றும் குரு கண்டிப்பாக நினைவு வருவார். எத்தனை
விதத்தில் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் வீட்டில்
செல்வம்-பொருட்கள், குழந்தைகள் போன்றவர்களை பார்த்து மறந்து
விடுகிறார்கள். நிறைய புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் ஆன்மீக
சேவை செய்ய வேண்டும். பாபாவின் நினைவு தான் உயர்ந்ததிலும்
உயர்ந்த சேவையாகும். மனம்- சொல்-செயல் செய்யும் போது பாபாவின்
நினைவு இருக்க வேண்டும். வாயின் மூலம் ஞானத்தின் விசயங்களைச்
சொல்லுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. செய்யக்
கூடாத காரியங்கள் எதையும் செய்யக் கூடாது. முதல் விசயம் அல்லாவை
புரிந்து கொள்ளவில்லை என்றால் எதையும் புரிந்து கொள்ள
மாட்டார்கள். முதலில் அல்லாவை உறுதியாக்குங்கள் அதுவரை
மேற்கொண்டு செல்லக் கூடாது. சிவபாபா இராஜயோகத்தை கற்றுக்
கொடுத்து உலகத்திற்கு எஜமானர்களாக மாற்று கின்றார். இந்த
மோசமான உலகத்தில் மாயையின் பகட்டு அதிகமாக இருக்கிறது. எவ்வளவு
நவ நாகரிகமாக (பேஷன்) ஆகி விட்டது. இந்த மோசமான உலகத்தின் மீது
வெறுப்பு வர வேண்டும். ஒரு தந்தையை நினைவு செய்வ தின் மூலம்
உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும். தூய்மையாக ஆகி
விடுவீர்கள். நேரத்தை வீணாக்கா தீர்கள். நல்ல விதத்தில் தாரணை
செய்யுங் கள். மாயை எதிரி நிறைய பேருடைய புத்தியை மழுங்கச்
செய்து விடுகிறது. கமாண்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை
டிஸ்மிஸ் கூட செய்கிறார்கள். கமாண்டர் அவருக்கே கூட வெட்கம்
வருகிறது பிறகு ராஜினாமா கூட செய்து விடுகிறார்கள். இங்கேயும்
கூட அப்படி நடக்கிறது. நல்ல - நல்ல கமாண்டர்கள் கூட சில
நேரங்களில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நினைவினுடைய மறைமுகமான முயற்சி செய்ய வேண்டும். நினைவின்
போதையில் மூழ்கி இருப்பதின் மூலம் தானாகவே சேவை அதிகரிக்கும்.
மனம்-சொல்-செயலில் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய
வேண்டும்.
2) வாயினால் ஞானத்தின் விசயங்களையே சொல்ல வேண்டும், யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது. செய்யக் கூடாத காரியங்கள் எதையும்
செய்யக் கூடாது. ஆத்ம-அபிமானியாக ஆவதற்கான முயற்சி செய்ய
வேண்டும்.
வரதானம்:
இரும்பு போன்ற ஆத்மாவை தங்கம் போல ஆக்கி விடக்கூடிய மாஸ்டர்
பாரஸ்நாத் ஆகுக
நீங்கள் எல்லோரும் பாரஸ்நாத் தந்தையின் குழந்தைகள் மாஸ்டர்
பாரஸ்நாத் ஆவீர்கள். எனவே எப்பேர்ப்பட்ட இரும்பு போன்ற
ஆத்மாவாக இருக்கட்டும் - ஆனால் உங்களது சேர்க்கை மூலமாக
இரும்பும் தங்கம் ஆகிவிட வேண்டும். இவர் இரும்பாக இருக்கிறார்
- இவ்வாறு ஒரு பொழுதும் யோசிக்காதீர்கள் -பாரஸ் மணியின் வேலையே
இருப்பையும் தங்கமாக ஆக்குவது - இதே லட்சியம் மற்றும் லட்சணத்தை
எப்பொழுதும் நினைவில் கொண்டு ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் ஒவ்வொரு
செயலையும் செய்யுங்கள். அப்பொழுது ஆத்மாவாகிய என்னிடமிருந்து
ஒளி கிரணங்கள் வெளிப்பட்டு அநேக ஆத்மாக்களை தங்கமாக ஆக்கக்
கூடிய சக்தி அளித்து கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் ஆகும்.
சுலோகன்:
ஒவ்வொரு செயலையும் துணிவுடன் செய்தீர்கள் என்றால் அனைவரது
நன்மதிப்பு பிராப்தி ஆகும்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
பரமாத்ம அன்பு இந்த சிரேஷ்ட பிராமண ஜென்மத்தின் ஆதாரம் ஆகும்.
அன்பு இருந்தால் தான் உலகம் இருக்கிறது, உயிர் இருக்கிறது என்று
கூறவும் படுகிறது. அன்ப இல்லை என்றால் உயிரும் இல்லை உலகமும்
இல்லை. அன்பு கிடைத்து விட்டது என்றால் உலகமே கிடைத்து விட்டது.
உலகம் ஒரு துளி அன்பிற்காக தாகம் கொண்டுள்ளது. மேலும்
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பிரபு அன்பு சொத்து ஆகும். இதே
பிரபு அன்பில் வளர்கிறீர்கள். அதாவது பிராமண வாழ்க்கையில்
முன்னேறுகிறீர்கள். எனவே எப்பொழுதும் அன்புக்கடலில்
லயித்திருங்கள்.