14-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒரு தந்தைதான்
முதல் நம்பர் (முக்கிய) நடிகர், அவர் தூய்மையற்றவர்களை
தூய்மைப்படுத்தும் நடிப்பை நடிக்கிறார், தந்தை செய்வது போன்ற
காரியத்தை வேறு யாரும் செய்ய முடியாது.
கேள்வி:
சன்னியாசிகளின் யோகம்
ஸ்தூலமானதாகும், ஆன்மீக யோகத்தை தந்தைதான் கற்றுத்தருகிறார்,
எப்படி?
பதில்:
சன்னியாசிகள் பிரம்ம தத்துவத்தின்
மீது நினைவின் தொடர்பை ஈடுபடுத்த கற்றுத் தருகின்றனர். அது
வசிக்கக்கூடிய இடமாகும். ஆகவே, அது ஸ்தூலமான யோகம் என்றாகி
விட்டது. தத்துவத்தை பரம் (சுப்ரீம்-உயர்வானவது) என்று கூற
முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சுப்ரீம் ஆத்மாவுடன் (பரம
ஆத்மாவுடன்) நினைவின் தொடர்பை ஈடுபடுத்துகிறீர்கள், ஆகையால்
உங்களுடையது ஆன்மீக யோகமாகும். இந்த யோகத்தை தந்தைதான்
கற்றுத்தர இயலும். வேறு யாரும் கற்றுத்தர இயலாது, ஏனெனில்
அவர்தான் உங்களுடைய ஆன்மீகத் தந்தை ஆவார்.
பாடல்:
நீ அன்புக் கடல் .
ஓம் சாந்தி.
குழந்தைகளே, பலர் ஓம் சாந்தி என சொல்கின்றனர், அதாவது தனது
ஆத்மாவின் அறிமுகத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் தன்னைப் புரிந்து
கொள்ள முடிவதில்லை. ஓம் சாந்தி என்பதற்கு நிறைய அர்த்தங்கள்
சொல்கின்றனர். சிலர் ஓம் என்றால் பகவான் என சொல்கின்றனர். ஆனால்
அப்படி அல்ல, ஓம் சாந்தி என ஆத்மா சொல்கிறது. அஹம் (நான்)
ஆத்மாவின் சுய தர்மமே அமைதி, ஆகையால் நான் சாந்தி சொரூபமான
ஆத்மா என சொல்கின்றனர். இது என்னுடைய சரீரமாகும், இதன் மூலம்
நாம் காரியங்கள் செய்கிறோம். எவ்வளவு சுலபமானது. அது போல்
தந்தையும் ஓம் சாந்தி என சொல்கிறார். ஆனால் நான் அனைவரின்
தந்தையாக இருக்கும் காரணத்தால், விதை ரூபமாக இருப்பதால்,
படைப்பு எனும் மரம், அதாவது கல்ப விருட்சத்தின்
முதல்-இடை-கடைசியை அறிந்திருக்கிறேன். ஏதேனும் மரத்தைப்
பார்த்தால் அதனுடைய முதல், இடை, கடைசியை அறிந்து கொள்கிறீர்கள்,
அந்த விதை ஜடமானதாகும். இது கல்ப விருட்சமாகும், இதன் முதல்,
இடை, கடைசியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, நான்
தெரிந்திருக்கிறேன். என்னை ஞானக்கடல் என்றே சொல்கின்றனர். நான்
குழந்தைகளாகிய உங்களுக்கு முதல், இடை, கடைசியின் இரகசியத்தை
வந்துப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். இது நாடகம், இதை
டிராமா எனவும் சொல்கின்றனர், இதன் நடிகர்களாக நீங்கள்
இருக்கிறீர்கள், நானும் கூட நடிகன் என தந்தை சொல்கிறார். ஓ பாபா,
பதித பாவனா, நடிகராகி வாருங்கள், வந்து தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குங்கள் எனக் குழந்தைகள் சொல்கின்றனர். நான்
நடித்துக் கொண்டிருக்கிறேன் எனத் தந்தை சொல்கிறார். இந்த
சங்கமயுகத்தில்தான் என்னுடைய நடிப்பு இருக்கிறது. எனக்கு
என்னுடையதென்று சரீரம் கிடையாது. நான் இந்த சரீரத்தின் மூலம்
நடிப்பை நடிக்கிறேன். என்னுடைய பெயர் சிவன் என்பதாகும்.
குழந்தைகளுக்குத்தான் புரிய வைப்பார் அல்லவா. பாடசாலை ஏதோ
குரங்குகளுக்கோ அல்லது விலங்குகளுக்கோ இருப்பதில்லை. ஆனால்,
இந்த 5 விகாரங்கள் இருக்கும் காரணத்தினால் முகம் மனிதர் போல்
இருக்கிறது, ஆனால் காரியங்கள் குரங்குகளைப் போல் இருக்கின்றன
என தந்தை சொல்கிறார். அனைவரும் தன்னை பதிதமானவர் (தூய்மையற்றவர்)
என்று தான் சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் தன்னை பதிதமாக யார்
ஆக்குவது, மேலும் யார் வந்து தூய்மையாக்குகிறார் என்பதும்
தெரியாது என குழந்தைகளுக்கு தந்தைப் புரிய வைக்கிறார். பதித
பாவனர் யார்? யாரை அழைக்கின்றனரோ அவரைப் பற்றி கொஞ்சம் கூட
தெரிந்து கொள்ள முடிவதில்லை. நாம் அனைவரும் நடிகர்கள் என்பதும்
கூட தெரியாது. ஆத்மாக்களாகிய நாம் இந்த சரீரம் எனும் ஆடையை
அணிந்து நடிப்பை நடிக்கிறோம். ஆத்மா பரமதாமத்திலிருந்து
வருகிறது, வந்து நடிப்பை நடிக்கிறது. பாரதத்தில் தான் அனைத்து
விளையாட்டும் உருவாகியுள்ளது. தூய்மை யான பாரதத்தை, பதிதமானதாக
ஆக்கியது யார்? இராவணன். இராவணனுடைய இராஜ்யம் இலங்கையில்
இருந்தது என பாடவும் செய் கின்றனர். தந்தை எல்லைக்கப்பாற்பட்ட
நிலைக்கு அழைத்துச் செல்கிறார். ஓ குழந்தைகளே! இந்த சிருஷ்டி
முழுவதுமே ஒரு எல்லைக்கப்பாற்பட்ட தீவு ஆகும். அது
எல்லைக்குட்பட்ட இலங்கை யாகும். இந்த எல்லைக்கப்பாற்பட்ட
இலங்கையில் இராவணனுடைய இராஜ்யம் உள்ளது. முதலில் இராம இராஜ்யம்
இருந்தது, இப்போது இராவண இராஜ்யம் உள்ளது. பாபா இராம இராஜ்யம்
எங்கிருந்தது என குழந்தைகள் கேட்கின்றனர். குழந்தைகளே அது இங்கே
தான் இருந்தது அல்லவா என தந்தை சொல்கிறார், அதனை அனைவரும்
விரும்புகின்றனர்.
பாரதவாசிகளாகிய நீங்கள் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள்,
இந்து தர்மத்தவர்கள் அல்ல. இனிமையிலும் இனிமையான காணாமல் போன
கண்டெடுத்த செல்லக் குழந்தைகளே, நீங்கள் தான் முதன் முதலில்
பாரதத்தில் இருந்தீர்கள். உங்களுக்கு அந்த சத்யுகத்தின்
இராஜ்யத்தை யார் கொடுத்திருந்தது? கண்டிப்பாக சொர்க்கத்தின்
இறைத் தந்தை தான் இந்த ஆஸ்தியைக் கொடுப்பார். எவ்வளவு பேர் வேறு
வேறு தர்மத்தில் மாற்றம் அடைந்து சென்றுவிட்டனர் என தந்தை
புரிய வைக்கிறார். முஸ்லிம்களின் இராஜ்யம் இருந்தபோது பலரையும்
முஸ்லிம்களாக ஆக்கினார்கள். கிறிஸ்தவர்களின் இராஜ்யத்தின் போது
பலரை கிறிஸ்தவர்களாக ஆக்கினார்கள். பௌத்தர்களின் இராஜ்யமே இங்கே
இல்லாதிருப்பினும் கூட பலரை பௌத்தர்களாக ஆக்கினார்கள். தமது
தர்மத் திற்கு மாற்றிவிட்டனர். ஆதி சனாதன தர்மம் மறைந்து
போகும்போது பிறகு அந்த தர்மங்கள் ஸ்தாபனை ஆகின்றன. ஆக, தந்தை
பாரதவாசிகளாகிய உங்கள் அனைவருக்கும் சொல்கிறார் - இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே, நீங்கள் அனைவரும் ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள்.
பிராமண, தேவதா, சத்ரிய. . . வர்ணங்களில் வந்தீர்கள். இப்போது
மீண்டும் பிராமண வர்ணத்தில் வந்திருக்கிறீர்கள், தேவதா
தர்மத்தில் செல்வதற்காக. பிராமண தேவதாய நம: என சொல்லவும்
செய்கின்றனர். முதலில் பிராமணர்களின் பெயரை எடுக்கின்றனர்.
பிராமணர்கள்தான் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினர். இதுவே
பாரதத்தின் பழமையான யோகமாகும். முதன் முதலில் இராஜயோகம்
இருந்தது, அது குறித்து கீதையிலும் வர்ணனை உள்ளது. கீதையின்
யோகத்தை யார் கற்றுக் கொடுத்திருந்தது? இதனை பாரதவாசிகள்
மறந்துவிட்டுள்ளனர். குழந்தைகளே யோகத்தை நான் தான் கற்றுக்
கொடுத்திருந்தேன் என தந்தை புரிய வைக்கிறார். இது ஆன்மீக
யோகமாகும். மற்ற அனைத்தும் (ஸ்தூலமான) சரீர சம்மந்தப்பட்ட
யோகமாகும். பிரம்மத்தில் நினைவின் தொடர்பை ஈடுபடுத்துங்கள் என
சன்னியாசிகள் ஸ்தூலமான யோகத்தை கற்றுத் தருகின்றனர். அது தவறாக
ஆகிவிடுகிறது. பிரம்ம தத்துவம் வசிக்கக் கூடிய இடமாகும். அது
ஏதும் பரம ஆத்மா அல்ல. தந்தையை மறந்துவிட்டுள்ளனர். நீங்களும்
கூட மறந்துவிட்டிருந்தீர்கள். நீங்கள் உங்கள் தர்மத்தை
மறந்துவிட்டீர்கள். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் யோகம் என்பது இருக்கவில்லை. ஹட யோகமும்
இராஜயோகமும் இங்குதான் உள்ளன. அந்த துறவற மார்க்கத்தின்
சன்னியாசிகள் இராஜ யோகத்தை ஒருபோதும் கற்றுத் தர இயலாது.
யாருக்குத் தெரியுமோ அவர்தான் கற்றுத்தர முடியும். சன்னியாசிகளோ
இராஜ்யத்தையே விட்டுச் சென்றுவிடுகின்றனர். கோபிசந்த் இராஜாவின்
உதாரணம் உள்ளதல்லவா. இராஜ்யத்தை விட்டு விட்டு காட்டிற்குச்
சென்றுவிட்டார். அவருடைய கதையும் உள்ளது. சன்னியாசிகளோ
இராஜ்யத்தை விட வைப்பவர்கள், அவர்கள் எப்படி இராஜயோகம் கற்றுத்
தர இயலும். இந்த சமயத்தில் முழு மரமும் உளுத்துப் போன நிலைக்கு
வந்துவிட்டுள்ளது. இப்போது விழுந்தே விட்டது. எந்த மரம்
என்றாலும் உளுத்துப் போன நிலைக்கு வந்துவிட்டால் அதனை வெட்டி
சாய்க்க வேண்டியுள்ளது. அதுபோல இந்த மனித சிருஷ்டி எனும் மரமும்
கூட தமோபிரதானமாக உள்ளது. இதில் எந்த சாரமும் இல்லை. இது
கண்டிப் பாக வினாசம் ஆகப்போகிறது. இதற்கு முன்பாக ஆதி சனாதன
தேவி தேவதா தர்மம் இங்கே ஸ்தாபனை செய்ய வேண்டியிருக்கும்.
சத்யுகத்தில் துர்க்கதியில் யாரும் இருப்பதில்லை. வெளி நாட்டில்
சென்று யோகம் கற்பிக் கின்றனர், ஆனால் அது ஹடயோகமாகும். ஞானம்
முற்றிலுமாக இல்லை. பல விதமான ஹட யோகங்கள் உள்ளன. இது
இராஜயோகமாகும், இது ஆன்மீக யோகம் என சொல்லப்படுகிறது.
அவையனைத்தும் ஸ்தூலமாக உடலுக்கான யோகமாகும். மனிதர்கள்
மனிதர்களுக்கு கற்பிப் பவர்கள் ஆவர். நான் உங்களுக்கு ஒரு
முறைதான் இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன், வேறு யாரும்
கற்பிக்க முடியாது என தந்தை புரிய வைக்கிறார். என்னை மட்டும்
நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய அனைத்து பாவங்களும்
நீங்கிவிடும் என ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு
கற்றுத் தருகிறார். ஹடயோகிகள் ஒருபோதும் இப்படி சொல்ல முடியாது.
தந்தை ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். இது புதிய விஷயமாகும்.
தந்தை இப்போது உங்களை ஆத்ம அபிமானிகளாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். தந்தைக்கு தேகம் கிடையாது. இவருடைய (பிரம்மாவின்)
உடலில் வருகிறார், இவருடைய பெயரை மாற்றிவிடுகிறார், ஏனெனில்
உயிருடன் இருந்து கொண்டே மறுபிறவி அடைந்துள்ளார். இல்லறவாசி
சன்னியாசி ஆகும்போது, மறுபிறவி அடைந்து, இல்லற ஆசிரமத்தை விட்டு
துறவற மார்க்கத்தை எடுத்துக் கொண்டது போல. ஆக நீங்களும் கூட
மறுபிறப்பை (மர்ஜீவா) அடைந்ததன் மூலம் பெயர் மாறிவிடுகிறது.
முதலில் ஆரம்பத்தில் அனைவருடைய பெயர்களை (வதனத்திலிருந்து)
கேட்டு வந்துக் கொண்டிருந்தனர், பிறகு அவர்கள்
ஆச்சரியப்படும்படியாக கேட்டு, சொல்லி, ஓடிப் போய்விட்டனர், ஆகவே
பெயர்கள் வருவது நின்றுப் போய்விட்டது. ஆகையால் நான் பெயர்
கொடுக்க, பிறகு அவர்கள் ஓடிப் போய்விட்டால் அது பொய்யானதாக
ஆகிவிடுகிறது என தந்தை சொல்கிறார். முதலில் வந்தவர் களுக்கு
வைத்த பெயர்கள் மிகவும் ரமணீகரமாக (அழகாக) இருந்தன. இப்போது
பெயர் வைப்ப தில்லை. யார் எப்போதும் நிலையாக இருக்கின்றனரோ
அவர்களுக்கு வைக்கலாம். பலருக்கு பெயர் வைத்தார், பிறகு தந்தையை
விட்டுப் போய்விட்டனர், ஆகையால் இப்போ தெல்லாம் பெயர் களை
மற்றுவதில்லை. இந்த ஞானம் கிறிஸ்தவர்களின் புத்தியிலும் கூட
பதியும் என தந்தைப் புரிய வைக்கிறார். பாரதத்தின் யோகத்தை
நிராகார தந்தைதான் வந்து கற்றுக் கொடுத்திருந்தார் என்ற அளவு
புரிந்துக் கொள்வார்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலமே
பாவங்கள் பஸ்மம் ஆகும் மற்றும் நாம் நம்முடைய வீடு திரும்புவோம்.
யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களோ, மதம் மாறிச்
சென்றிருப்பார்களோ அவர்கள் தற்கா-கமாக அங்கே இருப்பார்கள்.
மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதியை வழங்க முடியாது என நீங்கள்
அறிவீர்கள். இந்த தாதாவும் (பிரம்மா பாபா) கூட மனிதர்தான், நான்
யாருக்கும் சத்கதியை வழங்க முடியாது என இவர் சொல்கிறார்.
உங்களுடைய சத்கதி நினைவின் மூலம் ஏற்படும் என பாபா நமக்கு
கற்றுத் தருகிறார். குழந்தைகளே, ஓ ஆத்மாக்களே, என்னுடன்
நினைவின் தொடர்பை ஈடுபடுத்தினால் உங்களுடைய பாவ கர்மங்கள்
அழியும் என தந்தை சொல்கிறார். நீங்கள் முதலில் தங்க யுகத்தின்
அன்பானவர்களாக இருந்தீர்கள், பிறகு துரு படிந்துவிட்டது.
முதலில் தேவி தேவதைகள் 24 கேரட் தங்கமாக இருந்தனர், இப்போது
இரும்பு யுகத்தில் வந்து சேர்ந்திருக்கின்றனர். இந்த யோகத்தை
ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் கற்க வேண்டியிருக்கிறது. நீங்கள்
அறிவீர்கள், அதிலும் சிலர் முழுமையாக அறிந்துள்ளனர், சிலர்
குறைவாக அறிந்துள்ளனர். சிலர் இங்கே என்ன கற்றுத் தருகின்றனர்
என்று சும்மா பார்ப்பதற்காக வருகின்றனர். பிரம்மாகுமார்,
பிரம்மாகுமாரிகள் இவ்வளவு அளவற்ற குழந்தைகள் உள்ளனர்.
கண்டிப்பாக பிரஜாபிதா பிரம்மா இருப்பார் அல்லவா, அவருக்கு
இவ்வளவு குழந்தைகள் ஆகியுள்ளனர், கண்டிப்பாக ஏதாவது இருக்கும்,
எனவே சென்று அவர்களைக் கேட்பதே சரி. உங்களுக்கு பிரஜாபிதா
பிரம்மாவிடம் என்ன கிடைக்கிறது? என்று கேட்க வேண்டும் அல்லவா.
ஆனால் அவ்வளவு கூட புத்தி இல்லை. பாரதத்தைக் குறித்து
குறிப்பாக சொல்கின்றனர். கல் புத்தியிலிருந்து தங்கபுத்தி,
தங்கபுத்தியிலிருந்து கல்புத்தி என பாடவும் செய்கின்றனர்.
சத்யுகம், திரேதாவில் தங்கயுகம் தங்கபுத்தியாக இருந்தது, பிறகு
வெள்ளி யுகமாக இரண்டு கலைகள் குறைந்தது, ஆகையால்
சந்திரவம்சத்தவர் என பெயர் ஏற்பட்டது, ஏனென்றால் தேர்ச்சி
அடையவில்லை (தோல்வி அடைந்தனர்). இதுவும் கூட பாடசாலையாகும். 33
மதிப்பெண்களுக்கும் குறைவாக எடுப்பவர்கள், தோல்வி அடைகின்றனர்.
இராமன் சீதை பிறகு அவர்களின் இராஜ்யம் சம்பூரணமாக இல்லை,
ஆகையால் சூரிய வம்சத்தவராக ஆக முடிய வில்லை. தேறாதவர்களும்
இருப்பார்கள் அல்லவா, ஏனெனில் பரீட்சையும் மிகப் பெரியது.
அரசாங்கத்தின் ஐ.சி.எஸ். எனும் மிகப் பெரிய பரீட்சை நடந்து
கொண்டிருந்தது. அனைவருமே படிக்க முடியவில்லை. கோடியில் சிலர்
வெளிப்படுகின்றனர். நாம் சூரிய வம்சத்து மஹாராஜா மஹாராணி ஆகலாம்
என யாராவது விரும்பினால், அதிலும் கூட அதிக உழைப்பு தேவை. மம்மா
பாபாவும் கூட ஸ்ரீமத் மூலம் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் முதல் நம்பரில் படிக் கின்றனர், பிறகு யார் தாய்
தந்தையை பின்பற்றுகின்றனரோ அவர்கள் தான் அவர்களின்
சிம்மாசனத்தில் அமருவார்கள். சூரிய வம்சத்தவரின் பரம்பரையாக 8
இராஜ்யங்கள் நடக்கின்றன. முதலாம் எட்வர்டு, இரண்டாம் எட்வர்டு
என இருப்பது போல. இந்த கிறிஸ்தவர்களுடன் உங்களுடைய தொடர்பு
நிறைய உண்டு. கிறிஸ்தவ குலம் பாரதத்தின் இராஜ்யத்தை விழுங்கியது.
பாரதத்தின் அளவற்ற செல்வங்களை எடுத்துச் சென்றனர், பிறகு
சிந்தித்துப் பாருங்கள் - சத்யுகத்தில் எவ்வளவு அளவற்ற செல்வம்
இருக்கும்! அதனை ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கே எதுவும் இல்லை.
சத்தியயுகத்தில் அனைத்து சுரங்கங்களும் நிரம்பி இருக்கும்.
இப்போதோ அனைத்து பொருட்களின் சுரங்கங்களும் காலியாகிக் கொண்டே
செல்கின்றன. மீண்டும் சக்கரத்தின் அடுத்த சுழற்சி தொடங்கும்
போது மீண்டும் அனைத்து சுரங்கங் களும் நிறைந்து விடும்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது நீங்கள் இராவணன் மீது
வெற்றி அடைந்து இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்,
பிறகு அரைக் கல்பத்திற்குப் பின் இந்த இராவணன் வருவான், நீங்கள்
இராஜ்யத்தை இழந்து விடுவீர்கள். இப்போது பாரதவாசிகளாகிய நீங்கள்
சோழிகள் போல் ஆகிவிட்டீர்கள். நான் உங்களை வைரத்தைப் போல்
ஆக்கியிருந்தேன். இராவணன் உங்களை சோழிகள் போல் ஆக்கிவிட்டான்.
இந்த இராவணன் எப்போது வந்தான், நாம் ஏன் அவனை எரிக்கிறோம்? என
புரிந்து கொள்வதில்லை. இந்த இராவணன் பரம்பரை பரம்பரையாக இருந்து
வருகிறான் என சொல்கின்றனர். அரைக் கல்ப காலத்திற்குப் பிறகு
இந்த இராவண இராஜ்யம் தொடங்குகிறது என தந்தைப் புரிய வைக்கிறார்.
விகாரிகள் ஆனதால் தம்மை தேவி தேவதை என சொல்ல முடிவதில்லை.
உண்மையில் நீங்கள் தேவி தேவதா தர்மத் தினராக இருந்தீர்கள்.
உங்கள் அளவுக்கு சுகத்தை யாரும் காண முடியாது. அனைவரை விடவும்
அதிக ஏழையாகவும் நீங்கள் ஆகிவிட்டீர்கள். பிற தர்மத்தினர்
பின்னர் விருத்தி (வளர்ச்சி) அடை கின்றனர். கிறிஸ்து வந்தார்,
முதலில் மிகவும் குறைந்தவர்கள் இருந்தனர். அதிகமாக ஆனபோது
இராஜ்யம் செய்ய முடிந்தது. உங்களுக்கு முதலில் இராஜ்யம்
கிடைக்கிறது. இவை அனைத்தும் ஞானத்தின் விஷயங்களாகும். ஓ ஆத்மாக்
களே, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார்.
அரைக் கல்பம் நீங்கள் தேக அபிமானிகளாக இருந்தீர்கள். இப்போது
ஆத்ம அபிமானி ஆகுங்கள். அடிக்கடி இதனை மறந்துவிடுகிறீர்கள்,
ஏனென்றால் அரைக் கல்பத்தின் துரு ஏறியுள்ளது. இந்த சமயத்தில்
பிராமணர்களான நீங்கள் உச்சிக் குடுமி போன்றவர் களாக
இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரை விடவும் உயர்ந்தவர்கள்.
சன்னியாசிகள் பிரம்மத்தில் நினைவின் தொடர்பை ஈடுபடுத்துகின்றனர்,
அதனால் பாவ கர்மங்கள் அழிவதில்லை. அனைவருமே சதோ, ரஜோ, தமோவில்
கண்டிப்பாக வரவேண்டும். யாரும் திரும்பப் போக முடியாது.
அனைவரும் தமோபிரதானமாக ஆகும்போது தந்தை வந்து அனைவரையும்
சதோபிர தானமாக ஆக்குகிறார் அதாவது அனைவரின் ஜோதியும்
ஏற்றப்பட்டு விடுகிறது. அனைத்து ஆத்மாக்களுக்கும் தத்தமது
நடிப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் கதாநாயகன், கதாநாயகி
நடிகர்களாக இருக்கிறீர்கள். பாரதவாசிகளான நீங்கள் அனைவரையும்
விட உயர்ந்தவர்கள், நீங்கள் இராஜ்யத்தை அடைகிறீர்கள், பிறகு
இழக்கிறீர்கள், வேறு யாரும் இராஜ்யத்தை அடைவதில்லை. அவர்கள்
தோள் பலத்தின் மூலம் இராஜ்யத்தை அடைகின்றனர். உலகின் எஜமானாக
இருந்தவர்கள்தான் மீண்டும் ஆவார்கள். ஆக, உண்மையான இராஜயோகம்
தந்தையைத் தவிர வேறு யாரும் கற்றுத் தர முடியாது. மற்றவர்கள்
கற்றுத் தருபவை அனைத்தும் தவறான யோக மாகும். திரும்பி யாரும்
செல்ல முடியாது. இது இறுதிக்காலம். அனைத்து
துக்கங்களிலிருந்தும் விடுபடுகிறீர்கள், பின்னர்
வரிசைக்கிரமமாக வரவேண்டும். முதலில் சுகத்தைப் பார்க்க வேண்டும்,
பிறகு துக்கத்தைப் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் புரிந்துக்
கொள்ள வேண்டிய விஷயங் களாகும். கை காரியம் செய்ய வேண்டும், மனம்
நினைவு செய்ய வேண்டும் என சொல்லப் படுகிறது. வேலை செய்தபடி
இருங்கள், மற்றபடி புத்தி தந்தையிடம் இருக்க வேண்டும்.
ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு பிரியதர்ஷனின் பிரியதர்ஷினிகள்.
இப்போது அந்த பிரியதர்ஷன் வந்துவிட்டார். அனைத்து
ஆத்மாக்களையும் (பிரியதர்ஷினிகளை) மலர்களாக்கி அழைத்துச்
செல்வார். எல்லைக்கப்பாற்பட்ட பிரியதர்ஷன், எல்லைக்கப்பாற்பட்ட
பிரியதர்ஷினிகள். நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என
சொல்கிறார். பிறகு வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல்
சென்று பதவியை அடைவீர்கள். இல்லற விஷயங்களில் இருங்கள்,
குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். ஓ ஆத்மாவே! உன் உள்ளம்
தந்தையிடம் இருக்கட்டும். இந்த நினைவின் பயிற்சியையே செய்தபடி
இருங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் இப்போது நாம்
சொர்க்கவாசி ஆகிறோம் என குழந்தைகள் அறிவார்கள். மாணவர்கள்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது மிகவும் சகஜமேயாகும்.
நாடகத்தின்படி அனைவருக்கும் வழி காட்ட வேண்டும். யாரிடமும்
வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்போது உங்களுடைய புத்தியில்
அனைத்து ஞானமும் வந்து விட்டது. மனிதர்கள் நோயிலிருந்து
விடுபட்டால் வாழ்த்து கள் தெரிவிக்கின்றனர். இங்கேயோ முழு
உலகமும் நோயாளியாக உள்ளது. இன்னும் சிறிது காலத்தில் வெற்றி
கோஷம் எழும்பும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உண்மையிலும் உண்மையான பிரியதர்ஷினி ஆகி கைகளால் காரியங்கள்
செய்தபடி இருந்தாலும் புத்தியின் மூலம் பிரியதர்ஷனை நினைவு
செய்யும் பயிற்சி செய்ய வேண்டும். தந்தையின் நினைவின் மூலம்
நாம் சொர்க்கவாசி ஆகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.
2. சூரிய வம்சத்து இராஜ்யத்தின் சிம்மாசனத்தின் அதிகாரி
ஆவதற்காக தாய் தந்தையை முழுமையிலும் முழுமையாக பின்பற்ற
வேண்டும். தந்தைக்குச் சமமாக ஞானம் நிறைந்தவராகி அனைவருக்கும்
வழி காட்ட வேண்டும்.
வரதானம்:
விஸ்தாரத்தின் வண்ணமயமான விஷயங்களிலிருந்து விலகி கடினமானதை
எளிதாக உருவாக்கக்கூடிய சகஜயோகி ஆகுக.
பாபாவை பார்ப்பதற்கு பதிலாக விஷயங்களை பார்க்க தொடங்கிவிட்டால்,
பல கேள்விகள் உருவாகின்றன. மேலும் சகஜமான விஷயமும் கூட கடினமாக
அனுபவம் ஆகிறது. ஏனெனில் விஷயங்கள் என்பது மரம், பாபா என்பவர்
விதை. யார் விஷ்தாரம் என்ற மரத்தை கையில் எடுக்கிறார்களோ,
அவர்கள் பாபாவை விலக்கி விடுகிறார்கள். அதன் பிறகு விஷ்தாரம்
ஒரு வலையாக மாறிவிடுகிறது. இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.
விஷயங்களின் விஷ்தாரத்தில் (ஆழத்தில்) வண்ணமயமான விஷயங்கள்
வந்து விடுகிறது. அது தனது ஈர்ப்பை காண்பிக்கிறது. ஆகையால் விதை
சொரூபமான பாபாவின் நினைவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து
அதிலிருந்து விலகி விட்டீர்கள் என்றால் சகஜயோகி ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
நான் மற்றும் எனது என்பதின் கலப்படத்தை சமாப்தி செய்வது தான்
உண்மையான தங்கம் ஆவது.
அவ்யக்த இஷாரா - நிச்சயத்தின் அஸ்திவாரத்தை உறுதியாக்கி சதா
பயமற்றவராக, கவலையற்றவராக இருங்கள்
இப்பொழுது அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக சேவைக்கான
எந்தவிதமான காரியத்தை யும் வெகு விமர்சியாக செய்து
முன்னேறுங்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் உதவியின் மூலம், நல்ல
உணர்வு, நல்ல விருப்பத்தின் மூலம் சேவையை கோலாகலமாக
கொண்டாடுங்கள். ஒருவேளை சிலரால் வார்த்தை களின் பேச
முடியவில்லையென்றால் (வார்த்தைகளின் சேவை) மனதின்
வாயுமண்டலத்தின் மூலம் சுகமான உள்ளுணர்வின், சுகம் நிறைந்த
மனநிலை மூலம் சுகம் நிறைந்த உலகமாக உருவாக்குங்கள். எங்கும்
செல்ல முடிவதில்லை, உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட வீட்டில்
அமர்ந்தவாறே சேவை செய்யுங்கள். சேவையில் சகயோக அவசியம்
செய்யுங்கள். அப்பொழுது தான் சுகமான உலகமாக ஆகும்.