16-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் செய்கின்ற
கர்மங்கள் அனைத்திற்குமான பலன் நிச்சயமாகக் கிடைக்கிறது. ஆனால்
பலனை எதிர்பாராத சேவையை ஒரே ஒரு தந்தை மட்டுமே செய்கிறார்.
கேள்வி:
இந்த வகுப்பு மிகவும் அற்புதமானது,
எப்படி? இங்கே முக்கியமாக என்ன கடின உழைப்பு செய்ய
வேண்டியுள்ளது?
பதில்:
இந்த ஒரு வகுப்பில் மட்டும் தான்
சின்னக் குழந்தைகளும் அமர்ந்துள்ளனர் மற்றும் முதியவர்களும்
அமர்ந்துள்ளனர். இதில் அகல்யாக்கள், கூனிகள், சாதுக்களும் வந்து
ஒரு நாள் இங்கே அமர்வார்கள். இந்த வகுப்பு அப்படி அற்புதமானது,
இங்கே முக்கியமானது நினைவின் முயற்சி. நினைவின் மூலம் தான்
ஆத்மா மற்றும் சரீரத்திற்கு இயற்கைச் சிகிச்சை நடைபெறு கின்றது.
ஆனால் நினைவு செய்வதற்காகவும் கூட ஞானம் வேண்டும்.
பாடல்:
இரவு நேரப் பயணி களைத்துப் போகக்
கூடாது............
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்.
ஆன்மிகத் தந்தை குழந்தைகளுக்கு இதன் அர்த்தத்தையும் கூடப்
புரிய வைக்கிறார். கீதை அல்லது சாஸ்திரங்கள் முதலியவற்றை
உருவாக்குகிறவர்கள் இதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளவில்லை என்பது
தான் அதிசயம். ஒவ்வொரு விசயத்திலும் அனர்த்தத்தைத் (தவறான) தான்
வெளிப்படுத்து கின்றனர். ஆன்மிகத் தந்தை, ஞானக்கடலாக,
பதித-பாவனராக இருப்பவர் அமர்ந்து இவற்றின் அர்த்தத்தைச்
சொல்கிறார். இராஜயோகத்தையும் தந்தை தான் கற்பிக்கிறார்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இப்போது மீண்டும்
இராஜாவுக்கெல்லாம் மேலான ராஜாவாக ஆகிக் கொண்டிருக் கிறோம்.
ஆனால் பாடசாலைகளில் நாங்கள் மறுபடியும் வக்கீலாகிக்
கொண்டிருக்கிறோம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மீண்டும்
என்ற வார்த்தை யாருக்கும் சொல்ல வராது. நீங்கள் சொல்கிறீர்கள்,
நாங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே மீண்டும் எல்லையற்ற
தந்தையிடம் படிக்கின்றோம். இந்த விநாசமும் கூட மீண்டும்
நிச்சயமாக நடைபெறப் போகிறது. எவ்வளவு பெரிய-பெரிய
அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டே இருக்கின்றனர்! மிகவும்
சக்திமிக்கதாக உருவாக்குகின்றனர். வெறுமனே வைத்திருப்பதற்காக
ஒன்றும் தயாரிக்கவில்லை இல்லையா? இந்த விநாசம் கூட
சுபகாரியத்திற்காகத் தான் அல்லவா? குழந்தைகள் நீங்கள்
பயப்படுவதற்கு அவசியம் எதுவும் கிடையாது. இது நன்மை செய்யக்
கூடிய யுத்தமாகும். பாபா வருவதே நன்மை செய்வதற்காகத் தான்.
சொல்லவும் செய்கின்றனர், தந்தை வந்து பிரம்மா மூலம் ஸ்தாபனை,
சங்கர் மூலம் விநாசத்தின் காரியத்தைச் செய்விக்கிறார். ஆகவே
இந்த அணுகுண்டுகள் முதலானவை விநாசத்திற்காகத் தான். இவற்றைக்
காட்டிலும் அதிகமாக (அழிவுக்கான) வேறு பொருள்கள் எதுவும்
கிடையாது. அதோடு கூடவே இயற்கைச் சேதங்கள் கூட நடைபெறும். அதை
யாரும் ஈஸ்வரிய சேதங்கள் எனச் சொல்ல மாட்டார்கள். இந்த
இயற்கையின் ஆபத்துகள் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளன. இது
ஒன்றும் புது விசயம் கிடையாது. எவ்வளவு பெரிய-பெரிய
அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டே உள்ளனர்! சொல்கின்றனர்,
நாங்கள் நகரங்கள் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று. ஜப்பான்
மீது யுத்தத்தில் போடப்பட்ட அணுகுண்டு மிகச் சிறியதாக இருந்தது.
இப்போதோ பெரிய-பெரிய அணுகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். எப்போது
அதிகமான கஷ்டங்கள் (தொல்லைகள்) வருகின்றனவோ, சகித்துக் கொள்ள
முடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போது அணுகுண்டுகளைப் போடத்
தொடங்குகின்றனர். எவ்வளவு நஷ்டம் ஏற்படும்! அதையும் ஒத்திகை
செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பல கோடிக் கணக்கான
ரூபாய் செலவழிக்கின்றனர். இவற்றை உருவாக்குபவர் களுக்கு
சம்பளமும் அதிகம் கிடைக்கிறது. ஆக, குழந்தைகளாகிய உங்களுக்குக்
குஷி இருக்க வேண்டும். பழைய உலகம் தான் விநாசமாகப் போகின்றது.
குழந்தைகள் நீங்கள் புது உலகத்திற்காகப் புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். விவேகமும் சொல்கிறது, பழைய உலகம் அவசியம்
விநாசமாகும். கலியுகத்தில் என்ன உள்ளது, சத்யுகத்தில் என்ன
உள்ளது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். நீங்கள்
இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஆக,
அனைவரும் விநாசமாகி விடுவார்கள். இந்த இயற்கையின் ஆபத்துகள்
கல்பத்திற்கு முன்பும் கூட நடந்தன. சேதங்களோ, இதுபோல் அநேகம்
நடந்தே வந்துள்ளன. ஆனால் அது குறைந்த எண்ணிக்கையில் நடக்கிறது.
இப்போது இந்தப் பழைய உலகம் முழுவதும் அழிந்துவிடப் போகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கோ மிகுந்த குஷி இருக்க வேண்டும்.
ஆன்மிகக் குழந்தைகளாகிய நமக்குப் பரமபிதா பரமாத்மா தந்தை வந்து
புரிய வைக்கிறார். இந்த விநாசம் உங்களுக்காகவே நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது. ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் விநாச ஜுவாலை
கொழுந்து விட்டு எரிந்தது என்ற பாடல் கூட உள்ளது. அநேக
விசயங்கள் கீதையில் உள்ளன, அவற்றின் அர்த்தம் மிக நன்றாக உள்ளது.
ஆனால் யாரும் அதைப் புரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் சாந்தியை
வேண்டிக் கொண்டே இருக்கின்றனர். நீங்கள் சொல்கிறீர்கள்,
சீக்கிரம் விநாசமானால் நாம் போய் சுகமாக இருக்கலாம் என்று. பாபா
சொல்கிறார், எப்போது சதோபிரதானமாக ஆகிறீர்களோ, அப்போது தான்
சுகமாக இருப்பீர்கள். பாபா அநேக விதமான கருத்துகளைத் தருகிறார்.
பிறகு சிலரது புத்தியில் நன்கு பதிகிறது, சிலரது புத்தியில்
குறைவாகப் பதிகிறது. வயதான மாதாக்கள் சிவபாபாவை நினைவு செய்ய
வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்காகப்
புரிய வைக்கப்படுகிறது - தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை
நினைவு செய்யுங்கள். இருப்பினும் ஆஸ்தியை அடைந்து விடுகின்றனர்.
துணையுடன் இருக்கின்றனர். கண்காட்சியில் அனைவரும் வருவார்கள்.
அஜாமில் போன்ற பாவாத்மாக்கள், கணிகைகள் முதலான அனைவரும்
உயர்வடைய வேண்டும். கடை நிலை ஊழியர்கள் கூட நல்ல ஆடைகள் அணிந்து
வருகின்றனர். காந்திஜி தீண்டத் தகாதவர் களுக்கு சுதந்திரம்
அளித்தார். அவர்களுடன் சாப்பிடவும் செய்கிறார். தந்தையோ வேறு
எந்த ஒரு தடையும் செய்வதில்லை. இவர்களுக்கும் உதவத் தான்
வேண்டும் எனப் புரிந்து கொண்டுள்ளார். தொழில் சம்மந்தப்பட்ட
எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இதில் பாபாவோடு புத்தியோகத்தை
இணைப்பதில் தான் அனைத்து ஆதாரமும் உள்ளது. பாபாவை நினைவு செய்ய
வேண்டும். ஆத்மா சொல்கிறது, என்னைத் தீண்ட முடியாது என்று.
இப்போது நாம் புரிந்து கொண்டுள்ளோம், நாம் சதோபிரதான
தேவி-தேவதைகளாக இருந்தோம். பிறகு புனர்ஜென்மம் எடுத்து-எடுத்து
கடைசியில் வந்து தூய்மையற்றவராகியுள்ளோம். இப்போது மீண்டும்
ஆத்மா நான் தூய்மையாக வேண்டும். உங்களுக்குத் தெரியும்,
சிந்துவில் ஒரு மலைஜாதிப் பெண் வந்து கொண்டிருந்தார். அவர்
டிரான்ஸில் சென்றார். ஓடி வந்து பாபாவை சந்தித்தார்.
இவருக்குள்ளும் ஆத்மா உள்ளது என்பது புரிய வைக்கப்பட்டது.
ஆத்மாவுக்கு உரிமை உள்ளது, தன்னுடைய தந்தையிடம் (பரமாத்மா
விடமிருந்து) ஆஸ்தி பெறுவதற்கு. அவரின் வீட்டாருக்குச்
சொல்லப்பட்டது - இவரை ஞானம் எடுத்துக் கொள்ள விடுங்கள். நமது
இனத்தில் தொந்தரவு ஏற்படும் எனச் சொன்னார்கள். அடிக்கு பயந்து
அவரை அழைத்துச் சென்றனர். ஆக, உங்களிடம் வருகின்றனர். நீங்கள்
யாரையும் தடை செய்ய இயலாது. அபலைகள், கணிகைகள், மலை ஜாதியினர்
முதலானோர் அனைவரையும் உயர்த்துகிறார் எனப் பாடப்பட்டுள்ளது.
சாதுக்கள் தொடங்கி மலைஜாதியினர் வரை.
குழந்தைகள் நீங்கள் இப்போது யக்ஞத்தின் சேவை செய்கிறீர்கள்
என்றால் இந்த சேவையினால் மிகுந்த பலன் ஏற்படுகின்றது.
அநேகருக்கு நன்மை ஏற்படுகிறது. நாளுக்கு நாள் கண்காட்சி
சேவையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். பாபா பேட்ஜ் கூட செய்ய
வைத்துக் கொண்டிருக் கிறார். எங்கே சென்றாலும் நீங்கள் இது
பற்றிப் புரிய வைக்க வேண்டும். இவர் தந்தை, இவர் தாதா, இது
தந்தையின் ஆஸ்தி. இப்போது தந்தை சொல்கிறார் - என்னை நினைவு
செய்வீர் களானால் தூய்மையாகி விடுவீர்கள். கீதையிலும்
உள்ளது-மாமேகம் யாத் கரோ (என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்).
அதில் என் பெயரை மட்டும் எடுத்து விட்டுக் குழந்தையின் பெயரைக்
கொடுத்துள்ளனர். பாரதவாசிகளுக்கும் இது தெரியாது,
இராதை-கிருஷ்ணருக்கிடையில் அவர்களுக் குள் என்ன சம்மந்தம்?
அவர்களுடைய திருமணம் முதலியவற்றின் சரித்திரம் பற்றி எதுவும்
சொல்வதில்லை. இருவரும் தனித்தனி இராஜதானியைச் சேர்ந்தவர்கள்.
இந்த விசயங்களை பாபா வந்து புரிய வைக்கிறார். இதைப் புரிந்து
கொண்டு சிவபகவான் வாக்கு எனச் சொல்வார்களானால் அவரை அனைவரும்
விரட்டி விடுவார்கள். நீங்கள் இதைப் பிறகு எங்கிருந்து
கற்றீர்கள், அவர் எந்த குரு எனக் கேட்பார்கள். பி.கே. எனச்
சொன்னால் சண்டை பிடிப்பார்கள். இந்த குருக்களின் இராஜ்யமே
முடிந்து போகும். இதுபோல் அநேகர் வருகின்றனர். எழுதியும்
கொடுக்கின்றனர். பிறகு மறைந்து போகின்றனர்.
தந்தை குழந்தைகளுக்கு எந்த ஒரு கஷ்டமும் கொடுப்பதில்லை. மிகவும்
சகஜமான யுக்தி சொல்கிறார். யாருக்காவது குழந்தை இல்லை என்றால்
பகவானிடம் சொல்கின்றனர், குழந்தை வரம் கொடு என்று. பிறகு
குழந்தை பிறந்து விட்டால் அதை மிக நன்றாகப் பராமரிக்கின்றனர்.
படிக்க வைக்கின்றனர். பிறகு பெரியவனாக ஆனால் நீ உன்னுடைய
தொழிலைப் பார் எனச் சொல்கின்றனர். தந்தை குழந்தைகளை வளர்த்து
அவர்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறார் என்றால் குழந்தைகளின்
சேவகர் ஆகிறார் இல்லையா? இந்தத் தந்தையோ குழந்தைகளுக்கு சேவை
செய்து கூடவே அழைத்துச் செல்கிறார். அந்த லௌகிக் தந்தை
நினைப்பார், குழந்தை பெரியவனானதும் தனது தொழிலில் ஈடுபடுவான்.
பிறகு நமக்கு வயதாகி விட்டால் நமக்கு சேவை செய்வான் என்று.
இந்தத் தந்தையோ சேவை கேட்பதில்லை. இவர் பலனை எதிர்பார்க்கா தவர்.
லௌகிக் தந்தை புரிந்து கொள்கிறார்-எது வரை நான் உயிருடன்
இருக்கிறேனோ, அது வரை என்னைப் பராமரிப்பது குழந்தைகளின் கடமை
என்று. இந்த ஆசை வைக்கின்றனர். இந்தத் தந்தையோ சொல்கிறார், நான்
பலனை எதிர்பார்க்காத சேவை செய்கிறேன். நான் இராஜ்யம்
செய்வதில்லை. நான் எவ்வித பலன் பற்றிய எதிர்பார்ப்பின்றி
இருக்கிறேன்! மற்றபடி யார் என்ன செய்தாலும் அதன் பலன்
அவர்களுக்கு அவசியம் கிடைக்கிறது. இவரோ அனைவரின் தந்தை. இவர்
சொல்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சொர்க்கத்தின்
இராஜ்யத்தைத் தருகிறேன். நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி
பெறுகிறீர்கள்! நானோ பிரம்மாண்டத்துக்கு மட்டுமே அதிபதியாக
உள்ளேன். நீங்களும் எஜமானர்களாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள்
இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள், மற்றும் இழக்கிறீர்கள். நான்
இராஜ்யத்தைப் பெறுவதும் இல்லை, இழப்பதும் இல்லை. எனக்கு
டிராமாவில் இந்தப் பார்ட் உள்ளது. குழந்தைகள் நீங்கள்
சுகத்திற்கான ஆஸ்தி பெறுவதற்காகப் புருஷார்த்தம் செய்கிறீர்கள்.
மற்ற அனைவரும் சாந்தி மட்டும் வேண்டுகின்றனர். அந்த குருமார்
சொல்கின்றனர்-சுகம் காக்கையின் எச்சத்திற்குச் சமமானது. அதனால்
அவர்கள் சாந்தியைத் தான் வேண்டு கின்றனர். அவர்கள் இந்த ஞானத்தை
எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சுகத்தைப் பற்றித்
தெரியவே தெரியாது. பாபா புரிய வைக்கிறார், சாந்தி மற்றும்
சுகத்தைக் கொடுப்பது நான் மட்டும் தான். சத்யுக-திரேதாவில் குரு
இருப்பதில்லை. அங்கே இராவணனே கிடையாது. அதுவே ஈஸ்வரிய இராஜ்யம்.
இந்த டிராமா உருவாக்கப்பட்டதாகும். இந்த விஷயங்கள் வேறு
யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. ஆக, குழந்தைகள் நல்லபடியாக
தாரணை செய்து உயர்ந்த பதவி பெற வேண்டும். இப்போது நீங்கள்
சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். புது உலகத்தின் இராஜதானி
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். ஆக, நீங்கள்
இருப்பது சங்கமயுகத்தில். மற்ற அனைவரும் கலியுகத்தில் உள்ளனர்.
அவர்களோ, கல்பத்தின் ஆயுளே இலட்சக் கணக்கான ஆண்டுகள் எனச்
சொல்லி விடுகின்றனர். பயங்கர இருளில் உள்ளனர் இல்லையா?
பாடப்பட்டும் உள்ளது, கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கிப்
போயுள்ளனர் என்பதாக. வெற்றியோ பாண்டவர்களுக்கு எனப் பாடப்
பட்டுள்ளது.
நீங்கள் பிராமணர்கள். யக்ஞத்தை பிராமணர்கள் தான் படைக்கின்றனர்.
இதுவோ அனைத்திலும் பெரிய எல்லையற்ற ஈஸ்வரிய ருத்ர ஞான
யக்ஞமாகும். அந்த எல்லைக்குட்பட்ட யக்ஞங்கள் அநேக விதமாக உள்ளன.
இந்த ருத்ர யக்ஞம் ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றது.
சத்யுக-திரேதாவில் பிறகு எந்த ஒரு யக்ஞமும் நடைபெறாது.
ஏனென்றால் அங்கே எந்த ஓர் ஆபத்து முதலானவற்றின் விசயமும்
கிடையாது. அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட யக்ஞம். இது
எல்லையற்றது. இது எல்லையற்ற தந்தையால் படைக்கப் பட்ட யக்ஞமாகும்.
இதில் எல்லையற்ற பல பொருட்கள் இடப்படுகின்றது. பிறகு
அரைக்கல்பத்திற்கு எந்த ஒரு யக்ஞமும் இருக்காது. அங்கே இராவண
இராஜ்யமே கிடையாது. இராவண இராஜ்யம் ஆரம்பமாவதால் பிறகு இவை
அனைத்தும் ஆரம்பமாகும். எல்லையற்ற யக்ஞம் ஒரு முறை மட்டுமே
நடைபெறும். அதில் இந்த முழு உலகமும் விநாசமாகி விடும். இது
எல்லையற்ற ருத்ர ஞான யக்ஞமாகும். இதில் முக்கியமானது ஞானம்
மற்றும் யோகத்தின் விசயம். யோகம் என்றால் நினைவு. நினைவு என்ற
சொல் மிக இனிமையானதாகும். யோகம் என்ற சொல் பொதுவானதாக ஆகி
விட்டது. யோகத்தின் அர்த்தம் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
நீங்கள் புரிய வைக்க முடியும் - யோகம் என்றால் தந்தையை நினைவு
செய்வது. பாபா, நீங்களோ எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்
கிறீர்கள். ஆத்மா உரையாடுகிறது-பாபா, நீங்கள் மீண்டும்
வந்திருக்கிறீர்கள். நாங்களோ உங்களை மறந்து விட்டிருந்தோம்.
நீங்கள் எங்களுக்கு இராஜ்யத்தைத் தந்திருந்தீர்கள். இப்போது
மீண்டும் வந்து சந்தித்திருக்கிறீர்கள். உங்களின் ஸ்ரீமத் படி
நாங்கள் நிச்சயமாக நடப்போம். இப்படி-இப்படி உள்ளுக்குள்
தனக்குத் தான் உரையாட வேண்டும். பாபா, நீங்களோ எங்களுக்கு மிக
நல்ல வழி சொல்கிறீர்கள். நாங்கள் கல்ப-கல்பமாக மறந்து
விடுகிறோம். இப்போது பாபா மீண்டும் மறதியற்ற வர்களாக
ஆக்குகிறார். அதனால் இப்போது பாபாவையே நினைவு செய்ய வேண்டும்.
நினைவின் மூலம் தான் ஆஸ்தி கிடைக்கும். நான் எப்போது உங்கள்
முன் நேராகா வருகிறேனோ, அப்போது உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.
அது வரை பாடிக் கொண்டே உள்ளனர் - நீங்கள் துக்கத்தைப் போக்கி
சுகம் தருபவர். மகிமை பாடுகின்றனர். ஆனால் ஆத்மா பற்றியோ,
பரமாத்மா பற்றியோ தெரியாது. இப்போது நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள் - இவ்வளவு சிறிய புள்ளிக்குள் அழிவற்ற
நடிப்பின் பாகம் அடங்கியுள்ளது. இதையும் பாபா புரிய வைக்கிறார்.
அவர் பரமபிதா பரமாத்மா, அதாவது பரம (மிக மேலான) ஆத்மா எனச்
சொல்லப் படுகிறார். மற்றப்படி ஒன்றும் பெரிய ஆயிரம் சூரியனுக்கு
சமமாக இல்லை. நானோ ஆசிரியர் போல் படிப்பு சொல்லித் தந்து கொண்டே
இருக்கிறேன். எவ்வளவு ஏராளமான குழந்தைகள்! இந்த வகுப்போ
பாருங்கள், எவ்வளவு அற்புதமானது! யார்-யார் இதில் படிக்கின்றனர்?
அபலைகள், கூனிகள், சாதுக்களும் கூட ஒரு நாள் வந்து அமர்வார்கள்.
வயதான மாதாக்கள், சின்னக் குழந்தைகள் முதலான அனைவரும்
அமர்ந்துள்ளனர். இப்படி ஒரு பாடசாலையை எப்போதாவது
பார்த்திருக்கிறீர்களா? இங்கே இருப்பது நினைவின் முயற்சி. இந்த
நினைவு தான் நேரம் எடுத்துக் கொள்கிறது. நினைவின் புருஷார்த்தம்
செய்வது கூட ஞானம் தான் இல்லையா? நினைவுக்காகவும் தான் ஞானம்.
சக்கரத்தைப் புரிய வைப்பதற்காகவும் ஞானம் தேவை. இயற்கையான
உண்மையிலும் உண்மையான இயற்கைச் சிகிச்சை (வைத்தியம்) என்று இது
தான் சொல்லப்படுகின்றது. ஆத்மா நீங்கள் முற்றிலும் தூய்மையாக
ஆகி விடுகிறீர்கள். அது சரீரத்திற்கான சிகிச்சை. இது
ஆத்மாவுக்கான சிகிச்சை. ஆத்மா மீது தான் கறை படிகின்றது.
உண்மையான தங்கத்தில் செய்தது உண்மையான நகையாக இருக்கும்.
இப்போது இங்கே குழந்தைகள் அறிவார்கள், சிவபாபா முன்னிலையில்
வந்துள்ளார். குழந்தைகள் தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
நாம் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இந்தக் கரையிலிருந்து
அந்தக் கரைக்குச் செல்ல வேண்டும். தந்தையை, ஆஸ்தியை, மற்றும்
வீட்டையும் நினைவு செய்யுங்கள். அது இனிமையான அமைதியான வீடு.
அசாந்தியினால் தான் துக்கம் ஏற்படுகின்றது. சாந்தியினால் சுகம்
இருக்கும். சத்யுகத்தில் சுகம்-சாந்தி-செல்வம் அனைத்தும்
இருக்கும். அங்கே சண்டை-சச்சரவின் விஷயம் இருக்காது.
குழந்தைகளுக்கு இதே அக்கறை இருக்க வேண்டும் - நாம்
சதோபிரதானமாக, உண்மையான தங்கமாக ஆக வேண்டும். அப்போது தான்
உயர்ந்த பதவி பெறுவீர்கள். இது ஆன்மிக உணவு உங்களுக்குக்
கிடைக்கின்றது. அதைப் பிறகு அசை போட வேண்டும். இன்று என்னென்ன
முக்கியமான பாயின்ட்டுகள் கேட்டோம்? இதுவும் புரிய வைக்கப்
பட்டுள்ளது - யாத்திரை இரண்டு வகை உள்ளன - ஆன்மிக யாத்திரை
மற்றும் சரீர சம்மந்தமான யாத்திரை. இந்த ஆன்மிக யாத்திரை தான்
பயனுள்ளதாக இருக்கும். பகவான் வாக்கு-மன்மனாபவ. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த விநாசமும் கூட சுப காரியத்திற்காகத் தான். அதனால்
பயப்படக் கூடாது. கல்யாண்காரி (நன்மை செய்பவராகிய) பாபா சதா
நன்மையின் காரியத்தையே செய்விக்கிறார். இந்த நினைவோடு சதா
குஷியில் இருக்க வேண்டும்.
2) சதோபிரதானமாக உண்மையான தங்கம் ஆகி உயர்ந்த பதவி அடைய
வேண்டும். சதா இந்த ஒரே கவலை தான் இருக்க வேண்டும்.
கிடைக்கின்ற ஆன்மிக உணவை அசை போட வேண்டும் (ஆழமாகச் சிந்தனை
செய்ய வேண்டும்).
வரதானம்:
தன்னை பொறுப்பாளி என்று உணர்ந்து ஒவ்வொரு செயலும் யதார்த்த
விதிப்படி செய்யக் கூடிய சம்பூர்ண வெற்றி சொரூபம் ஆகுக.
இந்த நேரத்தில் சங்கமயுக சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களது ஒவ்வொரு
சிரேஷ்ட செயலும் முழு கல்பத்திற்கும் சட்டமாக ஆகிக்
கொண்டிருக்கிறது. எனவே தன்னை சட்டத்தை உருவாக்கக் கூடியவன்
என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு செயலும் செய்யுங்கள். இதனால்
சோம்பல் தானாகவே அழிந்து விடும். சங்கமயுகத்தில் நான் சட்டதை
உருவாக்குபவன், பொறுப்பான ஆத்மா - இந்த நிச்சயத்துடன் ஒவ்வொரு
செயலும் செய்யும் போது யதார்த்த விதியினால் செய்யப்பட்ட செய-ன்
சம்பூர்ண வெற்றி அவசியம் கிடைக்கும்.
சுலோகன்:
சர்வசக்திவான் தந்தை கூட இருக்கும் பொழுது மாயை காகிதப்
புலியாகி விடும்.
அவ்யக்த இசாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
சதா ஜீவன் முக்தி நிலையில் இருப்பதற்கான எளிய சாதனம் - நான்
மற்றும் என்னுடைய பாபா ஏனெனில் என்னுடையது என்னுடையது என்பது
தான் பந்தனமாக இருக்கிறது. என்னுடைய பாபா என்று ஆகிவிட்டால்
அனைத்து என்னுடையதும் அழிந்து விடும். என்னுடைய ஒன்றில் மற்ற
அனைத்து என்னுடையது என்னுடையது என்று அழிந்து விட்டது எனில்
பந்தன்முக்த் ஆகிவிட்டீர்கள். எனவே நான் பிராமணன் ஜீவன் முக்த்
ஆத்மா என்பதை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.