17-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
உண்மையிலும் உண்மையான சத்தியமான தந்தையிடமிருந்து சத்தியமான
கதையைக் கேட்டு நரனிலிருந்து (மனிதன்) நாராயணராக ஆகிறீர்கள்.
உங்களுக்கு 21 பிறவிகளுக்கு எல்லையில்லாத தந்தையிடமிருந்து
ஆஸ்தி கிடைத்துவிடுகிறது.
கேள்வி:
தந்தையின் எந்த கட்டளையை பாலனை
செய்யும் குழந்தைகள் தான் தங்கப் புத்தி உடையவர்களாக ஆகிறார்கள்?
பதில்:
தந்தையின் கட்டளை ஆவது -
தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து தந்தையை மற்றும்
இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். இதுவே சத்கதிக்கான சத்குருவின்
ஸ்ரீமத் ஆகும். யார் இந்த ஸ்ரீமத்தை பாலனை செய்கிறார்களோ,
அதாவது ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகிறார் களோ அவர்களே தங்கப்
புத்தியுடையவர்களாக ஆகிறார்கள்.
பாடல்:
இன்று மனிதன் இருளில் இருக்கிறான்
......
ஓம் சாந்தி.
இது கலியுக உலகம் ஆகும். எல்லோரும் இருளில் இருக்கிறார்கள். இதே
பாரதம் சொர்க்கமாக இருக்கும்பொழுது வெளிச்சத்தில் இருந்தது.
இப்பொழுது தங்களை இந்து என்று அழைத்துக் கொள்ளும் இதே
பாரதவாசிகள் உண்மையில் தேவி தேவதை களாக இருந்தார்கள்.
பாரதவாசிகள் சொர்க்கவாசியாக இருக்கும்பொழுது வேறு எந்த தர்மமும்
இருக்கவில்லை. ஒரே ஒரு தர்மம் இருந்தது. சொர்க்கம், வைகுண்டம்,
பஹிஷ்த், ஹெவென் - இவை எல்லாமே பாரதத்தினுடைய பெயர்களாக
இருந்தன. பாரதம் பழமையானதாக தூய்மையானதாக அதிக செல்வம் நிறைந்து
இருந்தது. இப்பொழுது பாரதம் ஏழை ஆகி விட்டுள்ளது. ஏனெனில்
இப்பொழுது கலியுகத்தினுடையதாக இருக்கிறது. அது சத்யுகமாக
இருந்தது. நீங்கள் அனைவரும் பாரதவாசி கள் ஆவீர்கள். நாம்
இருளில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சொர்க்கத்தில்
இருக்கும் பொழுது வெளிச்சத்தில் இருந்தீர்கள்.
சொர்க்கத்தினுடைய இராஜ-ராஜேஷ்வராக, இராஜ-ராஜேஷ்வரியாக, இலட்சுமி
நாராயணராக இருந்தார்கள். அதற்கு சுகதாமம் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது எல்லோரும் பந்தனத் தில் இருக்கிறார்கள். குறிப்பாக
பாரதம் பொதுவாக உலகம் இராவணனுடைய சிறையில் சோகவனத்தில் இருந்தது.
அப்படியின்றி இராவணன் இலங்கையில் மட்டும் இருந்தான் மற்றும்
இராமர் பாரதத்தில் இருந்தார். மேலும் அவர் வந்து சீதையை
திருடிச் சென்றார் என்பதெல்லாம் கிடையாது. இவை எல்லாம் கட்டுக்
கதைகள் ஆகும். கீதை முக்கிய மான அனைத்து சாஸ்திரங்களுக்கும்
சிரோமணி ஸ்ரீமத். அதாவது பகவானால் கூறப்பட்ட கீதை. மனிதர்கள்
யாருக்குமே சத்கதி செய்ய முடியாது. சத்யுகத்தில் ஜீவன்முக்தரான
தேவி தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் இந்த ஆஸ்தியை கலியுகத்தின்
கடைசியில் அடைந் திருந்தார்கள். பாரதத்திற்கு இது தெரியாமல்
இருந்தது. எந்த சாஸ்திரத்திலும் இல்லை. சாஸ்திரங் களோ அனைத்தும்
பக்தி மார்க்கத்திற்காக உள்ளது. அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் ஞானம் ஆகும். சத்கதி மார்க்கத்தின் ஞானம் எந்த
மனிதர்களிடமும் கிடையாது. மனிதர்கள் மனிதர்களின் குரு ஆக
முடியாது என்று தந்தை கூறுகிறார். குருக்கள் யாருக்குமே சத்கதி
அளிக்க முடியாது. அந்த குருக்கள் பக்தி செய்யுங்கள், தான
புண்ணியம் செய்யுங்கள் என்பார்கள். பக்தி துவாபரம் முதல் நடந்து
வந்துள்ளது. சத்யுக திரேதாவில் இருப்பது ஞானத்தின் பிராப்தி.
அப்படியின்றி அங்கும் ஞானம் நடந்து வருகிறது என்பதல்ல. பாரதத்
திற்கு இந்த ஆஸ்தி தந்தையிடமிருந்து சங்கமத்தில் தான்
கிடைத்திருந்தது. இப்பொழுது மீண்டும் உங்களுக்கு கிடைத்துக்
கொண்டிருக் கிறது. பாரதவாசிகள், நரகவாசியாக, மகான் துக்க
முடையவர்களாக ஆகிவிடும்பொழுது தான் ஹே பதீத பாவனரே துக்கத்தை
நீக்கி சுகம் அளிப்பவரே என்று அழைக்கிறார்கள். யாருடைய துக்க
ஹர்த்தா சுக கர்த்தா? அனைவருடையவர். ஏனெனில் குறிப்பாக பாரதம்
பொதுவாக உலகத்தில் 5 விகாரங்கள் இருக்கவே இருக்கிறது. தந்தை
பதீத பாவனர் ஆவார். நான் கல்ப கல்ப மாக கல்பத்தின் சங்கமத்தில்
வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். மேலும் அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல் ஆகிறேன். அபலைகள், அகலிகைகள், வேசியர்கள்
மற்றும் குருமார்கள் ஆகியோருக்கும் நான் உத்தாரம் செய்ய
வேண்யுள்ளது. ஏனெனில் இதுவே பதீத உலகம், பாவன உலகம் என்று
சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. பாரதத்தில் இந்த இலட்சுமி-
நாராயணருடைய இராஜ்யம் இருந்தது. இவர்கள் சொர்க்கத்திற்கு
அதிபதியாக இருந்தார்கள் என்பதை பாரதவாசிகள் அறியாமல் உள்ளார்கள்.
பதீதமான கண்டம் என்றால் பொய்யான கண்டம். பாவன கண்டம் என்றால்
உண்மையான கண்டம். பாரதம் பாவன கண்டமாக இருந்தது. இந்த இலட்சுமி
நாராயணரின் சூரிய வம்ச பரம்பரை இருந்தது. இந்த பாரதம் அவினாஷி
கண்டம் ஆகும். அது ஒருபொழுதும் விநாசம் ஆவதில்லை. இவர்களுடைய
இராஜ்யம் இருக்கும்பொழுது வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. அவை
எல்லாம் பின்னால் வருகின்றன. சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுளை
லட்சக்கணக்கான வருடங்கள் என்று எழுதிவிட்டு எல்லாவற்றையும்விட
பெரிய தவறு செய்துள்ளார்கள். கல்பத்திற்கு இலட்சக்கணக்கான
வருடங்களும் இருப்பதில்லை. சத்யுகத்திற்கும் இலட்சக்கணக்கான
வருடங்கள் இருப்பதில்லை என்று தந்தை கூறுகிறார். கல்பத்தின்
ஆயுள் 5 ஆயிரம் வருடங் கள் ஆகும். இவர்கள் பிறகு மனிதர்கள் 84
இலட்சம் பிறவிகள் எடுக்கிறார்கள் என்று கூறிவிடுகிறார்கள்.
மனிதர்களை நாய் பூனை ஆகியவையாக செய்து விட்டார்கள். ஆனால்
அவைகளுடைய பிறவிகள் தனி. 84 இலட்ச (வெரைட்டி) வகைகள் உள்ளன.
மனிதர் களுடைய வகை ஒன்று தான். அவர்களுடையதே 84 பிறவிகள் ஆகும்.
குழந்தைகளே! நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தினராக
இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். பாரதவாசிகள் தங்களுடைய
தர்மத்தை நாடகத் திட்டப்படி மறந்து விட்டுள்ளார்கள். கலியுகக்
கடைசியில் முற்றிலுமே பதீதமாக ஆகிவிட்டுள்ளார்கள். பிறகு தந்தை
வந்து சங்கமத் தில் பாவனமாக ஆக்குகிறார். இதற்கு துக்கதாமம்
என்று கூறப்படுகிறது. பிறகு பார்ட் சுக தாமத்தில் தான். ஹே
குழந்தைகளே, பாரதவாசிகளாகிய நீங்கள் தான் சொர்க்கவாசியாக
இருந்தீர் கள் என்று தந்தை கூறுகிறார். பிறகு நீங்கள் 84
பிறவிகளின் படி இறங்குகிறீர்கள். சதோவிலிருந்து ரஜோ, தமோவில்
அவசியம் வர வேண்டும். தேவதை களாகிய உங்களைப் போல செல்வந்தர்
களாக எவர் ஹேப்பி எவர் ஹெல்தி (என்றுமே மகிழ்ச்சியாக
ஆரோக்கியமாக) வேறு யாருமே ஆவதில்லை. பாரதம் எவ்வளவு
செல்வந்தராக இருந்தது. வைரம் வைடூரியங்களோ பெரிய பெரிய கற்கள்
போல் இருந்தன. அதில் எவ்வளவோ உடைந்து போய்விட்டன. உங்களை
எவ்வளவு செல்வந்தராக ஆக்கி இருந்தேன் என்று தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார். நீங்கள் சர்வகுண
சம்பன்னராக 16 கலை சம்பூர்ணமாக இருந்தீர்கள். இராஜா இராணி
எப்படியோ..... இவர் களுக்கு பகவான் பகவதி என்றும் கூறலாம்.
ஆனால் பகவான் ஒருவர் ஆவார். அவர் தந்தை ஆவார் என்று தந்தை
புரிய வைத்துள்ளார். இறைவன் அல்லது பிரபு என்று மட்டுமே
கூறுவதால் கூட அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார் என்பது
நினைவிற்கு வருவதில்லை. இவரோ எல்லையில்லாத தந்தை ஆவார். அவர்
புரிய வைக்கிறார், பாரதவாசிகளே நீங்கள் ஜெயந்தி கொண்டாடு
கிறீர்கள். ஆனால் உண்மையில் தந்தை எப்பொழுது வந்திருந்தார்
என்பது யாருக்குமே தெரியாது. இருப்பதே இரும்பு யுகத்தினராக,
கல்புத்தியினராக - பாரஸ்நாத் ஆக இருந்தார்கள். இப்பொழுது
கல்லுக்கு நாதனாக உள்ளார்கள். நாதன் என்றும் கூற முடியாது.
ஏனெனில் இராஜா இராணியோ இல்லை. முதலில் இங்கு தெய்வீக இராஜஸ்தான்
இருந்தது. இப்பொழுது அசுர இராஜ்யமாக ஆகிவிடுகிறது. இது நாடகம்
ஆகும். அது எல்லைக்குட் பட்ட நாடகம் ஆகும். இது எல்லையில்லாத
நாடகம் ஆகும். உலகத்தின் சரித்திரம் பூகோளம் ஆரம்ப முதல் கடைசி
வரைக்கும் நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். வேறு யாருக்குமே
தெரியாது. பாரதத்தில் தேவி தேவதைகள் இருக்கும்பொழுது முழு
படைப்பிற்கு அதிபதியாக இருந்தார்கள். மேலும் பாரதத்தில் தான்
இருந்தார்கள். தந்தை பாரதவாசிகளுக்கு நினைவூட்டுகிறார்.
சத்யுகத்தில் ஆதிசனாதன தேவி தேவதைகள், இவர்களுடைய சிறந்த தர்மம்
சிறந்த கர்மம் இருந்தது. பிறகு 84 பிறவிகளில் இறங்க வேண்டி
வருகிறது. இது தந்தை வந்து கதை கூறுகிறார் - இப்பொழுது
உங்களுடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். ஒருவரது விஷயம்
அல்ல. யுத்த மைதானம் கூட கிடையாது. இவர்களுடைய (இலட்சுமி
நாராயணரினுடைய) இராஜ்யம் இருந்தது என்பதையும் பாரதவாசிகள்
மறந்துவிட்டுள்ளார்கள். சத்யுகத்தின் ஆயுளை நீண்டதாக ஆக்கியதால்
மிகவும் தூரத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டுள்ளார்கள்.
மனிதனை பகவான் என்று கூற முடியாது என்று தந்தைப் புரிய
வைக்கிறார். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி வழங்க முடியாது.
அனைவரின் சத்கதி தாதா பதீதர்களின் பாவன கர்த்தா ஒருவர் என்று
பழமொழி உள்ளது. இது பொய்யான கண்டம் ஆகும். உண்மையான பாபா உண்மை
யான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர் ஆவார். பக்தர்கள் பூஜை செய்
கிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் யாருக்கெல்லாம் பூஜை
செய்து கொண்டே வந்துள்ளார் களோ அவர்களில் ஒருவருடைய வாழ்க்கை
சரித்திரம் பற்றிக் கூட அறியாமல் உள்ளார்கள். சிவஜெயந்தி
கொண்டாடுகிறார்கள். தந்தை புதிய உலகத்தின் படைப்பு கர்த்தா
ஆவார். ஹெவென்லி காட்ஃபாதர் - எல்லையில்லாத சுகம் அளிப்பவர்.
சத்யுகத்தில் சுகம் இருந்தது. அதை எப்படி யார் ஸ்தாபனை செய்தார்?
நரகவாசிகளை சொர்க்கவாசியாக ஆக்கினார். இழிவானவர்களை சிறந்த
தேவதையாக ஆக்கினார். இதுவோ தந்தையினுடைய காரியம் ஆகும்.
குழந்தைகளாகிய உங்களை பாவனமாக ஆக்குகிறேன். நீங்கள்
சொர்க்கத்தின் அதிபதி ஆகிறீர்கள். பிறகு உங்களை யார் பதீதமாக
ஆக்குகிறார்? இந்த இராவணன். சுகம் துக்கம் இறைவன் அளிக்கிறார்
என்று மனிதர்கள் கூறிவிடு கிறார்கள். நானோ அனை வருக்கும் சுகம்
அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். அரை கல்பத் திற்கு பிறகு
நீங்கள் தந்தையை நினைவு செய்யமாட்டீர்கள். பிறகு இராவண இராஜ்யம்
ஆகும் பொழுது அனை வருக்கும் பூஜை செய்ய முற்பட்டு விடுகிறார்கள்.
இது உங்களுடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். பாபா நாங்கள்
எத்தனை பிறவிகள் எடுத்தோம் என்று கேட்கிறார்கள். குழந்தைகளே
நீங்கள் உங்கள் பிறவிகளைப் பற்றி அறியாமல் உள்ளீர்கள் என்று
தந்தை கூறுகிறார். நீங்கள் முழுமையாக 84 பிறவிகள்
எடுத்துள்ளீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு எல்லையில்லாத
தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்துள்ளீர்கள். அதாவது
உண்மையிலும் உண்மையான சத்ய பாபாவிடமிருந்து சத்ய கதை,
நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான ஞானத்தைக் கேட்கிறீர்கள். இது
ஞானம் ஆகும். அது பக்தி ஆகும். இந்த ஆன்மீக ஞானம் சுப்ரீம் ரூஹ்
பரம ஆத்மா வந்து அளிக்கிறார். குழந்தைகள் ஆத்ம உணர்வுடையவராக
ஆக வேண்டியுள்ளது. தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து என்
ஒருவனை நினைவு செய்யுங்கள். சிவபாபா அனைத்து ஆத்மாக்களின் தந்தை
ஆவார். ஆத்மாக்கள் அனைவரும் பரந்தாமத்திலிருந்து தத்தம் பாகத்தை
ஏற்று நடிக்க சரீரத்தில் வருகிறார்கள். இதற்கு கர்மக்ஷேத்திரம்
என்று கூறப்படுகிறது. மிகப் பெரிய நாடகம் ஆகும். ஆத்மாவில் தீய
மற்றும் நல்ல சம்ஸ்காரம் இருக்கிறது. அதற்கேற்ப தான் மனிதனுக்கு
நல்லதோ கெட்டதோ பிறவி கிடைக்கிறது. பாவனமாக இருந்த இவர்
பதீதமாக இருக்கிறார் (தத்த-த்வம்) நீங்களும் அதே போல.
தந்தையாகிய நான் இந்த அந்நிய இராவணனின் உலகத்தில் பதீத
சரீரத்தில் வர வேண்டியுள்ளது. யார் முதல் நம்பரில் செல்ல வேண்டி
யுள்ளதோ அவருக்குள் தான் வர வேண்டியிருக்கிறது. சூரிய
வம்சத்தினர் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இவர்
பிரம்மா மற்றும் பிராமணர் கள். தந்தை தினமும் புரிய வைக்கிறார்.
ஆனால் கல்புத்தியினரை தங்க புத்தியினராக ஆக்குவது சித்தி வீடு
(மிக எளிதானது) அல்ல. ஹே ஆத்மாக்களே! இப்பொழுது ஆத்ம
உணர்வுடையவர் ஆகுங்கள். ஹே ஆத்மாக்களே ஒரு தந்தையை நினைவு
செய்யுங்கள் மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். தேகத்தின்
சம்பந்தங்களை விட்டு விடுங்கள். அப்பொழுது தங்க புத்தி
ஆகிவிடும். எல்லோருமே தான் இறக்க வேண்டும். எல்லோருக்கும்
இப்பொழுது வானப் பிரஸ்த நிலை ஆகும். ஒரு சத்குரு இல்லாமல்
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் வேறு யாரும் இருக்க
முடியாது. ஹே பாரதவாசி குழந்தைகளே! நீங்கள் முதலில் தங்க
புத்தியாக இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்மாக்கள்
பரமாத்மாவை விட்டு வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள்..... என்று
பாடப்பட்டுள்ளது. எனவே முதன் முதலில் பாரதவாசி தேவி தேவதா
தர்மத்தினராகிய நீங்கள் தான் வந்தீர்கள். மற்ற தர்மத்தினர்
பின்னால் வந்தார்கள். எனவே அவர்களுடைய பிறவிகள் கூட குறைவாக
இருக்கும். முழு சிருஷ்டியின் விருட்சம் எப்படி சுற்றுகிறது
என்பதை தந்தை வந்துப் புரிய வைக்கிறார். யாரால் தாரணை செய்ய
முடியுமோ அவர்களுக்கு மிகவும் சுலபம் ஆகும். ஆத்மா தாரணை
செய்கிறது. புண்ணிய ஆத்மா மற்றும் பாவ ஆத்மாவாக ஆத்மா தான்
ஆகிறது. உங்களுடைய கடைசி 84வது பிறவி ஆகும். நீங்கள்
வானப்பிரஸ்த நிலையில் உள்ளீர்கள். வானப்பிரஸ்த நிலையினர்
மந்திரம் பெறுவதற்காக குருவை வைத்துக் கொள் கிறார்கள். நீங்கள்
இப்பொழுது வெளியில் இருக்கும் மனிதர்களை குருவாக வைத்துக்
கொள்ள வேண்டியதில்லை. உங்கள் அனைவருக்கும் நான் தந்தை, ஆசிரியர்,
சத்குரு ஆவேன். எனக்கு கூறுவதே ஹே பதீத பாவனரே என்று தான்,
சிவபாபா அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார் என்பது இப்பொழுது
நினைவிற்கு வந்துள்ளது. ஆத்மா சத்தியமானது. உயிரோட்டம் (சைதன்யம்)
உடையது. ஏனெனில் அமரமானது. அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் அதனதன்
பாகம் நிரம்பியுள்ளது. தந்தையும் சத்தியமானவர், சைதன்யமானவர்
ஆவார். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கும்
காரணத்தினால் நான் முழு விருட்சத்தின் முதல் இடை கடையை
அறிந்துள்ளேன் என்று கூறுகிறார். எனவே தான் எனக்கு நாலேஜ்ஃபுல்
என்று கூறப்படுகிறது. விதையிலிருந்து விருட்சம் எப்படி
வெளிப்படுகிறது என்ற முழு ஞானம் உங்களுக்கும் உள்ளது. விருட்சம்
வளருவதில் நேரம் பிடிக்கிறது. நான் விதை ரூபம் ஆவேன் என்று
தந்தை கூறுகிறார். கடைசியில் முழு விருட்சம் பட்டுப்போன நிலையை
அடைந்துவிடுகிறது. இப்பொழுது தேவி தேவதா தர்மத்தின் அஸ்திவாரம்
இல்லை. பெரும்பாலும் மறைந்துவிட்டுள்ளது. தேவி தேவதா தர்மம்
மறைந்துவிடும் பொழுது தந்தை வர வேண்டியுள்ளது. ஒரு தர்ம ஸ்தாபனை
செய்து மற்ற அனைத்தையும் விநாசம் செய்வித்துவிடுகிறார்.
பிரஜாபிதா பிரம்மா மூலமாக தந்தை ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள்
தாழ்ந்த நிலையிலிருந்து (ப்ரஷ்ட்டாச்சாரி) சிறந்த (சிரேஷ்டாச்சாரி)
தேவதையாக ஆக வந்துள்ளீர்கள். இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முடிவு இல்லை. தந்தை வருகிறார். ஆத்மாக்கள் அனைவரும்
மூலவதனத்தில் இருக்கக் கூடிய சகோதரர்கள் ஆவார்கள். அனைவரும்
அந்த ஒரு தந்தையை நினைவு செய்கிறார்கள். துக்கத்தில் எல்லோருமே
நினைவு செய்கிறார்கள்.. .. .. இராவண இராஜ்யத்தில் துக்கம்
இருக்கிறது. இங்கு நினைவு செய்கிறார்கள். எனவே தந்தை
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் ஆவார். அவருக்கு
மகிமை உள்ளது. தந்தை வராமலிருந்தால் பின் யார் பாவனமாக ஆக்குவது!
கிறித்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகிய யாரெல்லாம் மனிதர்கள்
இருக்கிறார்களோ அவர்கள் இந்த நேரத்தில் எல்லோருமே தமோபிர
தானமாக உள்ளார்கள். அனைவரும் அவசியம் புனர்ஜென்மம் எடுக்க
வேண்டியுள்ளது. இப்பொழுது புனர்ஜென்மம் கிடைப்பது நரகத்தில்.
அப்படியின்றி சுகத்தில் சென்றுவிடுகிறார்கள் என்பதல்ல. எப்படி
இந்து தர்மத்தினர் சொர்க்கவாசி ஆனார் என்று கூறுகிறார்கள்
என்றால், இதுவரை நரகத்தில் இருந்தார் அல்லவா? இப்பொழுது
சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார், உங்கள் வாயில் குலோப் ஜாமுன்!
சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்றால் பின்னர் அவருக்கு நரகத்தின்
அசுர பொருட்களை ஏன் படைக்கிறீர்கள்! பித்ருக்களுக்கு
படைக்கிறார்கள் அல்லவா? வங்காளத்தில் மீன், முட்டை ஆகியவற்றைப்
படைக்கிறார்கள். அட, அவர்கள் இவை அனைத்தையும் சாப்பிட வேண்டிய
அவசியம் என்ன இருக்கிறது! திரும்பி யாருமே போக முடியாது. முதல்
நம்பரில் இருப்பவர்களே 84 பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. இந்த
ஞானத்தில் எந்த கஷ்டமும் இல்லை. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
உழைப்பு உள்ளது. இராம் இராம் என்று ஜபிக்கையில் புல்லரித்துப்
போய்விடுகிறது. இவை எல்லாமே பக்தி மார்க்கம் ஆகும். இந்த
சூரியன், சந்திரன் ஆகியவை வெளிச்சம் தரக்கூடியவை ஆகும். இவைகள்
தேவதைகளா என்ன? உண்மையில் ஞான சூரியன், ஞான சந்திரன் மற்றும்
ஞான நட்சத்திரங்கள். இந்த இடத்தின் மகிமை ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த கடைசி 84வது பிறவியில் எந்த ஒரு பாவச் செயலும் (விகர்மம்)
செய்யக் கூடாது. புண்ணிய ஆத்மா ஆவதற்கான முழுமையான முயற்சி
செய்ய வேண்டும். முழுமையாக தூய்மை ஆக வேண்டும்.
2. தங்களுடைய புத்தியை தங்க புத்தியாக ஆக்குவதற்காக தேகத்தின்
அனைத்து சம்பந்தங்களையும் மறந்து ஆத்ம உணர்வுடையவராக ஆவதற்கான
அப்பியாசம் செய்ய வேண்டும்.
வரதானம்:
பழைய சம்ஸ்காரங்கள் மற்றும் தடைகளிலிருந்து விடுதலை பெற்று
விடக்கூடிய எப்பொழுதும் சக்திகளில் நிறைந்தவர் ஆவீர்களாக.
எந்த ஒருவிதமான தடைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் அல்லது
பழைய சம்ஸ்காரங் களிலிருந்தும் விடுதலை பெற விரும்புகிறீர்கள்
என்றால் சக்தியை தாரணை செய்யுங்கள் அதாவது அலங்கரிக்கப்பட்ட
ரூபமாகி இருங்கள். யார் எப்பொழுதும் அலங்காரங் களால்
அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் வருங்காலத்தில்
விஷ்ணு வம்சத்தினர் ஆகிறார்கள். ஆனால் இப்பொழுது வைஷ்ணவர் ஆகி
விடுகிறார்கள். அவர்களை எந்த ஒரு தமோ குணமான சங்கல்பம் அல்லது
சம்ஸ்காரம் தீண்ட முடியாது. அவர்கள் பழைய உலகம் அல்லது
உலகத்தின் எந்த ஒரு பொருட்கள் அல்லது மனிதர்களிடமிருந்து சுலப
மாகவே ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களை காரணம் இருக்கிறதோ
இல்லையோ எதுவுமே தீண்ட முடியாது.
சுலோகன்:
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு செயலிலும் சமநிலை கொண்டிருப்பது தான்
அனைவரது ஆசிகள் பெறுவதற்கான சாதனம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை: நிச்சயத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி
எப்பொழுதும் பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
எப்படி இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குள் நட்பு
இருக்கும் பொழுது அவர்களுக் கிடையில் யாராவது அவர்களது நிந்தனை
செய்ய வருகிறார் என்றால் அவர் மற்றவரது உணர்வை மாற்றி
விடுகிறார். எங்கு நிச்சயம் இருக்கிறதோ அங்கு வார்த்தைகளின்
பாவம் மாறி சாதாரண விஷயம் ஆகி விடுகிறது.எனவே ஒவ்வொருவரின்
விசேஷத் தன்மையை பாருங்கள். அப்பொழுது அநேகராக இருந்தாலும்
ஒன்று என்று தென்படுவார் கள். ஒருவழியின் ஒற்றுமையின்
கூட்டமைப்பு ஆகிவிடும். யாராவது ஒருவர் பற்றிய நிந்தனையின்
விஷயங்கள் கூறினார்கள் என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பதற்கு
பதிலாக சொல்பவர்களுடைய ரூபத்தை பரிவர்த்தனை செய்து விடுங்கள்.