18-02-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் பழைய
உலகத்திலிருந்து இறந்து புது உலகத்திற்குச் செல்வதற்காக இந்தப்
பல்கலைக் கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். இப்போது உங்களது
அன்பு ஒரு பகவானிடம் உள்ளது.
கேள்வி:
எந்த விதியின் மூலம் தந்தையின்
நினைவு உங்களைப் செல்வந்தர்களாக ஆக்கி விடுகின்றது?
பதில்:
தந்தை பிந்துவாக (புள்ளி) உள்ளார்.
நீங்களும் பிந்து ஆகி, பிந்துவாகிய தந்தையை நினைவு
செய்வீர்களானால் செல்வந்தர்களாக ஆகி விடுவீர்கள். எப்படி
ஒன்றோடு புள்ளி வைத்தால் 10. இன்னொரு புள்ளி வைத்தால் 100,
பிறகு 1000 ஆகி விடும். அதுபோல் பாபாவின் நினைவு மூலம் புள்ளி
வைக்கப்பட்டுக் கொண்டே போகிறது. நீங்கள் செல்வந்தராக ஆகிக்
கொண்டே போகிறீர்கள். நினைவில் தான் உண்மையான வருமானம் உள்ளது.
பாடல்:
கூட்டத்தில் ஜோதி எழுந்தது..........
ஓம் சாந்தி.
இந்தப் பாடலின் அர்த்தம் எவ்வளவு விசித்திரமாக (வியப்பாக)
உள்ளது - யாருக்காக அன்பு உருவாகியுள்ளது. யாரிடம் அன்பு
ஏற்பட்டுள்ளது? பகவானிடம். ஏனென்றால் இந்த உலகத்தி-ருந்து
இறந்தவராகி அவரிடம் செல்ல வேண்டும். இது போல் எப்போதாவது
யாரிடமாவது அன்பு ஏற்படுகிறதா என்ன? ஒருவருக்கு நாம் இறந்து
விடுவோம் என்ற சிந்தனை வரும்போது யாராவது யார் மீதாவது அன்பு
வைப்பார்களா? பாடலின் அர்த்தம் எவ்வளவு அற்புதமாக உள்ளது!
ஜோதியின் மீது விட்டில் பூச்சிகள் பிரியம் வைத்து சுற்றி
வந்து-வந்து மடிந்து போகின்றன. நீங்களும் கூட பாபாவின் அன்பில்
இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டும். இந்தப் பாடல் ஒருவருக்காக
மட்டும் தான். அந்த தந்தை எப்போது வருகிறாரோ, அப்போது யார்
அவரிடம் அன்பு வைக் கின்றனரோ, அவர்கள் இந்த உலகத்தில் இருந்து
இறந்துவிட வேண்டி உள்ளது. பகவானிடம் அன்பு வைக் கின்றனர்
என்றால் இறந்து எங்கே செல்வார்கள்? நிச்சயமாக பகவானிடம் தான்
செல்வார்கள். மனிதர்கள் பகவானிடம் செல்வதற்காகத் தான்
தான-புண்ணியம், தீர்த்த யாத்திரை முதலியன செய்கின்றனர்.
சரீரத்தை விடும் போதும் கூட பகவானை நினைவு செய்யுங்கள் என்று
மனிதர் களுக்குச் சொல்கின்றனர். பகவான் எவ்வளவு புகழ் பெற்றவர்!
அவர் வருகிறார் என்றால் முழு உலகத்தையும் அழித்து விடுகின்றார்.
நீங்கள் அறிவீர்கள், நாம் இந்தப் பழைய உலகத்தில் இருந்து
இறந்தவராகிப் புதிய உலகத்திற்குச் செல்வதற்காக இந்தப்
பல்கலைக்கழகத்திற்கு வருகிறோம். பழைய உலகம் பதித், (அசுத்தமானது)
நரகம் எனச் சொல்லப் படுகின்றது. தந்தை புது உலகத்திற்குச்
செல்வதற்கான வழி சொல்கிறார். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
நான் ஹெவன்லி காட் ஃபாதர் (சொர்க்கத்தைப் படைக்கிற தந்தை).
அந்தத் தந்தையிடமிருந்து உங்களுக்கு செல்வம் கிடைக்கிறது.
சொத்து கிடைக்கிறது, வீடு முதலியவை கிடைக்கும். பெண்
குழந்தைகளுக்கோ ஆஸ்தி கிடைப் பதில்லை. அவர்களை வேறு வீட்டுக்கு
அனுப்பி விடுகின்றனர். அதாவது அவர்கள் வாரிசு கிடையாது. இந்த
பகவானோ, அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். இவரிடம் அனைவரும்
வந்தாக வேண்டும். ஏதோ ஒரு சமயம் தந்தை நிச்சயமாக வருகிறார்,
அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக. ஏனென்றால் புது
உலகத்தில் மிகக் கொஞ்சம் மனிதர்களே இருப்பார்கள். பழைய
உலகத்திலோ ஏராளமான பேர் உள்ளனர். புது உலகத்தில் மனிதர்களும்
கொஞ்சம் பேர், சுகமும் அதிகமாக இருக்கும். பழைய உலகத்தில்
ஏராளமான மனிதர்கள் என்றால் துக்கமும் அதிகம். அதனால்
அழைக்கின்றனர். பாபு காந்திஜியும் அழைத்தார் - ஹே பதித-பாவனா
வாருங்கள். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை, அவ்வளவு தான்.
புரிந்து கொள்ளவும் செய்கின்றனர், பதித-பாவனர் பரமபிதா பரமாத்மா,
அவர் தான் உலகத்தை துக்கத்திலிருந்து விடுவிப்பவர் (லிபரேட்டர்).
இராம்- சீதாவையோ முழு உலகமும் ஏற்றுக் கொள்ளாது. முழு உலகமும்
பரமபிதா பரமாத்மாவை லிபரேட்டர், கைடு (வழிகாட்டி) என்று ஏற்றுக்
கொள்கின்றது. துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். நல்லது,
துக்கம் கொடுப்பது யார்? தந்தையோ துக்கம் கொடுக்க முடியாது.
ஏனென்றால் அவரோ பதீத-பாவனர். தூய்மையான உலகமாகிய சுகதாமத்திற்கு
அழைத்துச் செல்பவர். நீங்கள் அந்த ஆன்மிகத் தந்தையின் ஆன்மிகக்
குழந்தைகள். தந்தை எப்படியோ குழந்தைகளும் அப்படியே! லௌகிகத்
தந்தையுடையவர்கள் லௌகிக், அதாவது சரீர சம்மந்தமான குழந்தைகள்.
இப்போது குழந்தைகள் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்,
நாம் ஆத்மா, பரமபிதா பரமாத்மா நமக்கு ஆஸ்தி தருவதற்காக
வந்துள்ளார். நாம் அவருடைய குழந்தைகளாக ஆவோமானால் சொர்க்கத்தின்
ஆஸ்தி அவசியம் கிடைக்கும். அவரே சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர்.
நாம் மாணவர்கள். இதை மறக்கக் கூடாது. குழந்தைகளின் புத்தியில்
உள்ளது, சிவபாபா மதுபனில் முரளி இசைக்கிறார். அந்த (மூங்கிலின்)
முரளியோ அங்கே கிடையாது. கிருஷ்ணர் நாட்டியமாடுவது, முரளி
இசைப்பது இவை எல்லாம் பக்தி மார்க்கத்தினுடையவை. மற்றப்படி
ஞானத்தின் முரளியோ சிவபாபா தான் இசைக்கிறார். உங்களிடம்
நல்ல-நல்ல பாடல்களை இயற்றுபவர்கள் வருவார்கள். பாடல்களை
அனேகமாக ஆண்கள் தான் இயற்றுகின்றனர். நீங்கள் ஞானத்தின்
பாடல்களைத் தான் பாட வேண்டும். அதன் மூலம் தான் சிவபாபாவின்
நினைவு வரும். பாபா சொல்கிறார் அலஃப் (தந்தை) ஆகிய என்னை நினைவு
செய்யுங்கள். சிவா என்றால் பிந்து (புள்ளி) எனச் சொல்கின்றனர்.
வியாபாரிகள் பிந்து வைப்பார்களானால் சிவா எனச் சொல்வார்கள்.
ஒன்றுக்கு முன்னால் பிந்து வைத்தால் 10 ஆகி விடும். இன்னும் ஒரு
பிந்து வைத்தால் 100 ஆகி விடும். அதன் பிறகு ஒரு பிந்து
வைத்தால் 1000 ஆகி விடும். ஆக, நீங்களும் கூட அந்த சிவனை நினைவு
செய்ய வேண்டும். எவ்வளவு சிவனை நினைவு செய்து கொண்டே
இருக்கிறீர்களோ, பிந்தி-பிந்தி எனச் சேர்ந்து கொண்டே போகும்.
நீங்கள் அரைக்கல்பத்திற்கு செல்வந்தராக ஆகி விடுவீர்கள். அங்கே
ஏழை இருப்பதே இல்லை. அனைவரும் சுகமாக இருப்பார்கள். துக்கத்தின்
பெயரே இருக்காது. பாபாவின் நினைவினால் விகர்மங்கள் விநாசமாகிக்
கொண்டே போகும். நீங்கள் பெரும் செல்வந்தராக ஆகி விடுவீர்கள்.
இது உண்மையான தந்தையின் மூலம் உண்மையான வருமானம் எனச்
சொல்லப்படும். இது தான் கூட வரும். மனிதர்கள் அனைவரும் வெறும்
கையோடு செல் கின்றனர். நீங்கள் நிரம்பிய கையோடு செல்ல வேண்டும்.
பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா புரிய வைத்துள்ளார், தூய்மை
இருக்குமானால் அமைதியும் செல்வச் செழிப்பும் கிடைக்கும். ஆத்மா
நீங்கள் முதலில் தூய்மையாக இருந்தீர்கள். பிறகு
தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறீர்கள். சந்நியாசிகளைக் கூட பாதி
தூய்மை யானவர்கள் எனச் சொல்வார்கள். உங்களுடையது முழு
சந்நியாசம். அவர்கள் எவ்வளவு சுகம் பெறுகிறார்கள் என்பதை
நீங்கள் அறிவீர்கள். கொஞ்சம் சுகம், பிறகு துக்கம் தான். முன்பு
அவர்கள் சர்வவியாபி எனச் சொன்னதில்லை. சர்வவியாபி எனச்சொன்னதால்
கீழே இறங்கியே வந்துள்ளனர். உலகத்தில் அநேக விதமான
திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஏனென்றால் வருமானமோ கிடைக்கிறது
இல்லையா? இதுவும் அவர்களுக்கு ஒரு தொழிலாக உள்ளது. தொழில்கள்
அனைத்திலும் தூசி உள்ளது எனச் சொல்கின்றனர். தொழில் இன்றி
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கானது. இந்தத் தொழிலை அபூர்வமாக
யாரேனும் செய்வார்கள். தந்தை யுடையவர்களாக ஆகி விட்டு,
தேகத்துடன் கூட அனைத்தையும் தந்தையிடம் கொடுத்து விட வேண்டும்.
ஏனென்றால் புது சரீரம் வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்.
பாபா சொல் கிறார், நீங்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்ல முடியும்.
ஆனால் ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆன பிறகு தான்
செல்ல முடியும். கிருஷ்ணபுரியில் இது போல் சொல்ல மாட்டார்கள் -
எங்களைப் தூய்மையாக்குங்கள் என்று. இங்கே மனிதர்கள் அனைவருமே
அழைக் கின்றனர் - ஓ ! விடுவிப்பவரே வாருங்கள்! இந்தப்
பாவாத்மாக்களின் உலகத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்.
இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா வந்துள்ளார், நம்மைத் தம்மோடு
கூட அழைத்துச் செல்வதற் காக. அங்கே செல்வதோ நல்லது தானே?
மனிதர்கள் சாந்தியை விரும்புகின்றனர். இப்போது சாந்தி என்று
எதைச் சொல்கின்றனர்? கர்மம் இல்லாமலோ யாருமே இருக்க முடியாது.
சாந்தியோ சாந்திதாமத்தில் தான் இருக்கும். பிறகும் கூட சரீரத்தை
எடுத்து கர்மத்தையோ செய்து தான் ஆக வேண்டும். சத்யுகத்தில்
கர்மம் செய்யும் போதும் சாந்தி உள்ளது. அசாந்தியில்
மனிதர்களுக்கு துக்கம் ஏற்படுகின்றது. அதனால் சாந்தி எப்படிக்
கிடைக்கும் எனக் கேட்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள்
தெரிந்து கொண்டீர்கள், சாந்திதாமமோ நம்முடைய வீடு. சத்யுகத்தில்
சாந்தியும் இருக்கும். சுகமும் இருக்கும். அனைத்தும் இருக்கும்.
இப்போது அது வேண்டுமா அல்லது சாந்தி மட்டும் போதுமா? இங்கோ
துக்கம் உள்ளது. அதனால் பதித-பாவனர் தந்தையையும் இங்கே வருமாறு
அழைக்கின்றனர். பகவானை சந்திப்பதற்காகவே பக்தி செய்கின்றனர்.
பக்தியும் முதலில் (ஒருவரை மட்டுமே வணங்குகிற) கலப்படமற்றதாக
உள்ளது. பிறகு கலப்பட (அநேக உருவங்களை வணங்கும்) பக்தியாக
ஆகிறது. கலப்பட பக்தியில் பாருங்கள், என்ன என்ன வெல்லாம்
செய்கின்றனர்! ஏணிப்படியில் எவ்வளவு நன்றாகக் காட்டப்பட்டுள்ளது.!
ஆனால் முதல்-முதலிலோ தெளிவு படுத்த வேண்டும் - பகவான் யார்?
ஸ்ரீகிருஷ்ணரை இது போல் யார் ஆக்கினார்? முந்தைய ஜென்மத்தில்
யாராக இருந்தார்? இதைப் புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி
வேண்டும். யார் நல்ல சேவை செய்கின்றனரோ, அவர்களின் மனம் கூட
சாட்சி அளிக்கிறது (ஏற்றுக் கொள்கிறது). பல்கலைக்கழகத்தில் யார்
நல்லபடியாகப் படிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக வேகமாக
முன்னேறிச் செல்வார்கள். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே செய்
கின்றனர். சிலர் மந்த புத்தி உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
சிவபாபாவுக்கு ஆத்மா சொல்கிறது - எனது புத்தியின் பூட்டைத்
திறந்து விடுங்கள். பாபா சொல்கிறார், புத்தியின் பூட்டைத்
திறப்பதற்காகவே தான் நான் வந்துள்ளேன். ஆனால் உங்களுடைய கர்மம்
அதுபோல் உள்ளது, பூட்டு திறப்பதே இல்லை. பிறகு பாபா என்ன
செய்வார்? அதிகப் பாவங்கள் செய்துள்ளனர். இப்போது பாபா அவர்களை
என்ன செய்வார்? நாங்கள் எப்படிப் படிக்கிறோம் என்று ஆசிரியரிடம்
மாணவர்கள் கேட்டால் அவர் என்ன சொல்வார்? ஆசிரியர் ஒன்றும்
கிருபையெல்லாம் செய்ய மாட்டார். ஒரு வேளை அவர்களுக்காகக்
கூடுதல் நேரம் ஒதுக்குவார்கள். அவ்வளவு தான். அதில்
உங்களுக்குத் தடையில்லை. கண்காட்சி திறந்துள்ளது, அமர்ந்து
பயிற்சி செய்யுங்கள். பக்தி மார்க்கத்திலோ யாரோ சொல்வார்கள்,
மாலையைச் சுற்றுங்கள். சிலர் சொல்வார்கள், மந்திரத்தை நினைவு
செய்யுங்கள். இங்கோ தந்தை தம்முடைய அறிமுகம் கொடுக்கிறார்.
தந்தையை நினைவு செய்ய வேண்டும் இதன் மூலம் ஆஸ்தி கிடைத்து
விடுகின்றது. ஆகவே நல்லபடியாக பாபாவிட மிருந்து முழு ஆஸ்தி பெற
வேண்டும் இல்லையா? இதிலும் பாபா சொல்கிறார், விகாரத்தில் ஒரு
போதும் செல்லக் கூடாது. கொஞ்சம் விகாரத்தின் ருசி வந்து
விட்டாலும் பிறகு விருத்தியாகி விடும். சிகரெட் முதலியவற்றை ஒரு
முறை ருசி பார்த்து விட்டால் அப்பழக்கம் உடனே தொற்றி விடும்.
பிறகு அந்தப் பழக்கத்தை விடுவதும் கடினமாகி விடும். சாக்குப்
போக்கு எவ்வளவு சொல்கின்றனர்! எதுவும் பழக்கமாகிவிடக் கூடாது.
அசுத்தமான பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும். உயிருடன்
இருக்கும் போதே சரீர உணர்வை விட்டு என்னை நினைவு செய்யுங்கள்.
தேவதைகளுக்கு எப்போதுமே பவித்திரமான (சுத்தமாக) போக் (பிரசாதம்)
வைக்கப்படுகின்றது. ஆகவே நீங்களும் பவித்திரமான உணவைச்
சாப்பிடுங்கள். தற்சமயமோ உண்மையான நெய் கிடைப்பதில்லை.
எண்ணெயைச் சாப்பிடுகின்றனர். அங்கே (சத்யுகத்தில்) எண்ணெய்
முதலியன கிடையாது. இங்கோ பால் பண்ணையில் பாருங்கள், தூய்மையான
நெய்யும் வைக்கப்பட்டுள்ளது, பொய்யான நெய்யும்
வைக்கப்பட்டுள்ளது. இரண்டிலுமே தூய்மையான நெய் என்று எழுதப்
பட்டுள்ளது. விலையில் வித்தியாசம் உள்ளது. இப்போது நீங்கள்
பூக்களைப் போல் மலர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
சொர்க்கத்திலோ இயற்கையான அழகு இருக்கும். அங்கே இயற்கையும் கூட
சதோபிரதானமாக ஆகி விடும். லட்சுமி-நாராயணர் போன்ற இயற்கை அழகை
இங்கே யாராலும் உருவாக்க முடியாது. அவர்களை இந்தக் கண்களால்
யாரும் பார்க்க இயலாது. சாட்சாத்காரம் கிடைக்கிறது. ஆனால்
சாட்சாத்காரம் ஆவதால் யாரும் அப்படியே சித்திரத்தை உருவாக்கி
விட முடியாது. யாராவது ஓவியக் கலைஞருக்கு சாட்சாத்காரம் ஆகி,
அந்த நேரமே அமர்ந்து உருவாக்க வேண்டும்..... ஆனால் மிகவும்
கடினமாகும். ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த நஷா இருக்க
வேண்டும். இப்போது நம்மை அழைத்துச் செல்வதற்காக பாபா
வந்துள்ளார். பாபாவிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி
கிடைக்க இருக்கிறது. இப்போது நம்முடைய 84 பிறவிகள் முடிந்தது.
இப்படி-இப்படி சிந்தனைகள் புத்தியில் இருப்பதால் குஷி இருக்கும்.
விகாரத்தின் சிந்தனை ஒரு சிறிதும் வரக்கூடாது. பாபா சொல்கிறார்,
காமம் மகா சத்ரு. திரௌபதியும் கூட இதனால் தான் அழைத்தார்
இல்லையா? அவருக்கு ஒன்றும் 5 கணவர்கள் என்பது கிடையாது. அவரோ
இந்த துச்சாதனன் என்னை மானபங்கம் செய்கிறான், இதிலிருந்து
என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி அழைத்தார். பிறகு 5 கணவர்
என்பது எப்படி இருக்க முடியும்? இப்படிப்பட்ட விஷயம் இருக்கவே
முடியாது. அடிக்கடி குழந்தைகள் உங்களுக்குப் புதுப்புதுப்
பாயின்ட்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன என்றால் மாற்றம்
செய்ய வேண்டும். ஏதாவது மாற்றம் செய்து வார்த்தையைப் போட
வேண்டும்.
நீங்கள் எழுதுகிறீர்கள், கொஞ்ச காலத்திற்குள் நாங்கள் இந்த
பாரதத்தைப் ஃபரிஸ்தானாக (தேவதை கள் உலகமாக) ஆக்குவோம். நீங்கள்
சவால் விடுகிறீர்கள். குழந்தைகளிடம் பாபா சொல்வார், மகன்
தந்தையைக் காட்டுவான், தந்தை மகனைக் காட்டுவார். எந்தத் தந்தை?
சிவன் மற்றும் சாலிகிராம் - பாடல் இவர்களைப் பற்றியதாகும்.
சிவபாபா என்ன சொல்லிப் புரிய வைக்கிறாரோ, அதனைப் பின்பற்றுங்கள்.
தந்தையைப் பின்பற்றுங் கள் என்ற பாடலும் அவர் பற்றியது தான்.
ஆனால் (லௌகிக்) தந்தையைப் பின்பற்றுவதாலோ நீங்கள் தூய்மை
இழந்தவராகி விடுகிறீர்கள். இவரோ (பரலௌகிகத் தந்தை)
தூய்மையாக்குவதற்காகப் பின்பற்றச் செய் விக்கிறார். வித்தியாசம்
உள்ளது இல்லையா? பாபா சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே,
பின்பற்றி, தூய்மை யாகுங்கள். பின்பற்றுவதால் தான்
சொர்க்கத்தின் மாலிக் ஆவீர்கள். லௌகிக் தந்தையைப் பின்பற்றுவதன்
மூலம் 63 பிறவிகளாக நீங்கள் ஏணிப்படியில் கீழே இறங்கியே
வந்திருக்கிறீர்கள். இப்போது பாபாவைப் பின்பற்றி மேலே உயர
வேண்டும். பாபாவுடன் கூடவே செல்ல வேண்டும். பாபா சொல்கிறார்,
இந்த ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக் கணக்கான ரூபாய் பெறும்.
நீங்கள் பாபாவை அறிந்து கொண்டு பாபாவிடமிருந்து ஆஸ்தி
பெறுகிறீர்கள். அவர்களோ பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் எனச்
சொல்கின்றனர். ஐக்கியமாவதோ கிடையாது, மீண்டும் வருவார்கள். பாபா
தினந்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே, முதன் முதலில் அனைவருக்கும் தந்தையின்
அறிமுகம் கொடுக்க வேண்டும். பரலௌகிகத் தந்தை தூய்மை ஆவதற்கான
ஆஸ்தியைத் தருகிறார். அதனால் எங்களை தூய்மையாக்குங்கள் என்று
எல்லையற்ற தந்தையிடம் வாருங்கள் என சொல்கின்றனர். அவர் தான்
பதீத-பாவனர். லௌகிகத் தந்தையைப் பதித-பாவனர் எனச் சொல்ல
மாட்டார்கள். அவர்கள் தாங்களே அழைத்துக் கொண்டே இருக்கின்றனர்
- ஹே பதித-பாவனா வாருங்கள் என்று. அதனால் இரண்டு தந்தையரின்
அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். திருமணம் செய்து
கொண்டு தூய்மை இழக்க லௌகிகத் தந்தை சொல்வார். பரலௌகிகத் தந்தை
சொல்கிறார், தூய்மையாகுங்கள் என்று. என்னை நினைவு செய்வதன்
மூலம் நீங்கள் பாவனமாகி (தூய்மையாகி) விடுவீர்கள். ஒரே ஒரு
தந்தை அனைவரையும் பாவனமாக்கக் கூடியவர். இந்தப் பாயின்ட்டுகள்
புரிய வைப்பதற்கான மிக நல்ல பாயின்ட்டுகளாகும். விதவிதமான
பாயின்ட்டுகளை விசார் சாகர் மந்தன் செய்து புரிய வைத்துக்
கொண்டே இருங்கள். இது உங்களுடைய தொழில் தான். நீங்கள் தான்
தூய்மையற்றவர் களைப் தூய்மையாக்குபவர்கள். பரலௌகிக் தந்தை
இப்போது சொல்கிறார், விநாசம் முன்னாலேயே நின்று (தயராகி)
கொண்டிருப்பதால் தூய்மையாகுங்கள். இப்போது என்ன செய்ய வேண்டும்?
நிச்சயமாக பரலௌகிக் தந்தையின் வழிமுறைப்படி நடக்க வேண்டும்
இல்லையா? கண்காட்சியில் இந்த உறுதிமொழியையும் எழுத வேணடும் -
பரலௌகிக் தந்தையைப் பின்பற்றுவோம். தூய்மை இழப்பதை தவிர்ப்போம்.
தந்தையிடம் வாக்குறுதி அளிக்கிறோம் என்று எழுதுங்கள். அனைத்து
விஷயங்களும் தூய்மை பற்றியவை. குழந்தை களாகிய உங்களுக்கு இரவும்
பகலும் குஷி இருக்க வேண்டும் - பாபா நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி
தந்து கொண்டிருக்கிறார். அலஃப் (தந்தை) மற்றும் பே (இராஜபதவி).
இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், சிவஜெயந்தி என்றாலே
பாரதத்தின் சொர்க்கத்தினுடைய ஜெயந்தி. கீதை தான் அனைத்து
சாஸ்திரங்களின் தாய் ஆகும். கீதா மாதா. ஆஸ்தியோ
தந்தையிடமிருந்து தான் கிடைக்கும். கீதையைப் படைப்பவரே சிவபாபா
தான். பரலௌகிக் தந்தையிடமிருந்து பாவன மாவதற்கான ஆஸ்தி
கிடைக்கின்றது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் இறை மாணவர்கள். இதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
எந்த ஒரு தீய பழக்கமும் இருக்கக் கூடாது. அவற்றை விட்டுவிட
வேண்டும். விகாரத்தின் சிந்தனை சிறிதளவும் கூட வரக் கூடாது.
2) உயிருடன் இருந்து கொண்டே சரீர உணர்வை மறந்து பாபாவை நினைவு
செய்ய வேண்டும். விதவிதமான பாயின்ட்டுகளை விசார் சாகர் மந்தன்
(ஞான சிந்தனை) செய்து தூய்மை இழந்தவர்களை
தூய்மையானவர்களாக்குகிற தொழிலைச் (சேவை) செய்ய வேண்டும்.
வரதானம்:
திருப்தியின் திரிமூர்த்தி சான்றிதழ் (சர்ட்டிஃபிக்கேட்) மூலம்
சதா வெற்றி பெறக்கூடிய உயர்ந்த பதவிக்கு அதிகாரி ஆகுக.
சதா வெற்றி பெறுவதற்கு தந்தை மற்றும் பரிவாரத்துடன் சரியான
தொடர்பு வேண்டும். ஒவ்வொருவரும் மூன்று சான்றிதழ்கள் (ஸ்ரீங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீ
ஹற்ங்ள்)
பெற வேண்டும் - தந்தை, நீங்கள் மற்றும் பரிவாரம். பரிவாரத்தைத்
திருப்திப் படுத்துவதற்கு ஒரு சிறு விஷயத்தை நினைவில் வையுங்கள்
- மதிப்பு (ழ்ங்ஞ்ஹழ்க்) கொடுப்பதற்கான பதிவேடு (ழ்ங்ஸ்ரீர்ழ்க்)
நிரந்தர மாக நடந்து கொண்டிருக்க வேண்டும். இதில் பலனை
எதிர்பாராதவர் (நிஷ்காம்) ஆகுங்கள். மற்றும் சுயத்திடம்
திருப்தியாக இருப்பதற்கு சதா ஸ்ரீமத்தின் கோட்டுக்குள் இருங்கள்.
இந்த மூன்று சான்றிதழ்கள் உங்களை உயர்ந்த பதவிக்கு அதிகாரி
ஆக்கி விடும்.
சுலோகன்:
யார் சித்திரத்தை (சரீரத்தை)ப் பார்க்காமல் சரித்திரத்தைப்
பார்க்கிறாரோ, அவர் தாம் சிரேஷ்ட சரித்திரவான் ஆவார்.
அவ்யக்த இஷாரா : ஒற்றுமை மற்றும் விசுவாசத்தின் விசேஷத் தன்மை
மூலம் வெற்றி நிறைந்தவர் ஆகுக
எப்படி ஆத்மாக்கள் அனைவருக்கும் ஞானத்தின் ஒளி கொடுப்பதற்காக
சதா சுப பாவனை மற்றும் நன்மையின் பாவனை வைக்கிறீர்களோ, அது போல்
இந்த தெய்விகக் குழுவையும் கூட ஏக்ரஸ் ஸ்திதியில்
நிலைத்திருக்கச் செய்து, குழுவின் சக்தியை அதிகரிப்பதற்கான
முயற்சி செய்யுங்கள். அப்போது உங்கள் இந்த தெய்விகக் குழுவின்
மூர்த்தியில் ஒற்றுமை மற்றும் ஏக்ரஸ் ஸ்திதியின் பிரத்தியட்ச
ரூபத்தில் சாட்சாத்காரம் ஆகும்.