20-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத் படி நடந்து
அனைவருக்கும் முக்தி-ஜீவன்முக்தி அடைவதற்கான வழி சொல்லுங்கள்.
நாள் முழுவதும் இதே தொழிலைச் செய்து கொண்டிருங்கள்.
கேள்வி:
மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டிய எந்த சூட்சும விஷயங்களை பாபா சொல்லி யிருக்கிறார்?
பதில்:
சத்யுகம் என்பது அமர உலகம். அங்கே
ஆத்மா ஒரு சரீரத்தை மாற்றி வேறொன்றை எடுத்துக் கொள்கின்றது.
ஆனால் மரணத்தின் பெயர் இருக்காது. அதனால் அது மரண உலகம் எனச்
சொல்லப் படுவதில்லை.
2. சிவபாபாவினுடையது எல்லையற்ற படைப்பு. பிரம்மாவின் படைப்பு
இச்சமயம் பிராமணர் களாகிய நீங்கள் மட்டுமே. திரிமூர்த்தி சிவன்
என்று தான் சொல்வார்கள். திரிமூர்த்தி பிரம்மா என்று அல்ல.
இந்த அனைத்து சூட்சும விசயங் களையும் பாபா சொல்லியிருக்கிறார்.
இது மாதிரி யான விசயங்களைப் பற்றி சிந்தனை செய்து புத்திக்காக
தாங்களே உணவைத் தயார் செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி.
திரிமூர்த்தி சிவபகவான் வாக்கு. இப்போது மனிதர்கள் திரிமூர்த்தி
பிரம்மா எனச் சொல்கின்றனர். பாபா சொல்கிறார்- திரிமூர்த்தி
சிவபகவான் வாக்கு என்று. திரிமூர்த்தி பிரம்மா பகவான் வாக்கு
எனச் சொல்வதில்லை. நீங்கள் திரிமூர்த்தி சிவபகவான் வாக்கு எனச்
சொல்லலாம். அவர்களோ, சிவ-சங்கர் எனச் சொல்லி இருவரையும்
ஒன்றாக்கி விட்டனர். இதுவோ நேரடியானது. திரிமூர்த்தி
பிரம்மாவுக்கு பதில் திரிமூர்த்தி சிவபகவான் வாக்கு. மனிதர்களோ,
சங்கர் கண்ணைத் திறந்தால் விநாசம் ஆகி விடும் எனச் சொல்லி
விடுகின்றனர். இவை யனைத்தும் புத்தி மூலம் புரிந்து
கொள்ளப்படுகின்றன. மூவருக்குத் தான் முக்கியமான நடிப்பின் பாகம்.
பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கோ, பெரிய பாகம்-84 பிறவிகளுக்கானது.
விஷ்ணு மற்றும் பிரஜாபிதா பிரம்மாவின் அர்த்தமும் புரிந்து
கொண்டு விட்டீர்கள். இந்த மூவருக்கும் நடிப்பின் பாகம் உள்ளது.
பிரம்மாவின் பெயரோ ஆதி தேவ், ஆடம் (ஆதாம்) எனப் பாடப்பட்டுள்ளது.
பிரஜாபிதாவுக்குக் கோவிலும் உள்ளது. இது விஷ்ணுவுக்கு அல்லது
கிருஷ்ணருக்கு இது கடைசி 84-வது பிறவி. அவருடைய பெயர் பிரம்மா
என வைக்கப்பட்டுள்ளது. பிரம்மா மற்றும் விஷ்ணுவைப் பற்றித்
தெளிவு படுத்த வேண்டும். இப்போது பிரம்மாவையோ
தத்தெடுக்கப்பட்டவர் எனச் சொல்வார்கள். இந்த இருவரும் சிவனுடைய
குழந்தைகள். உண்மையில் குழந்தை ஒருவர் தான். கணக்குப்படி
பார்த்தால் பிரம்மா, சிவனுடைய குழந்தை ஆவார். தந்தை மற்றும்
தாதா.(மூத்த சகோதரன்) விஷ்ணுவின் பெயர் இதில் வராது. பிரஜாபிதா
பிரம்மா மூலம் சிவபாபா ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். விஷ்ணு
மூலம் ஸ்தாபனை செய்வதில்லை. சிவனுக்கும் குழந்தைகள் உள்ளனர்.
பிரம்மாவுக்கும் குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுவின் குழந்தைகள்
எனச் சொல்ல முடியாது. லட்சுமி-நாராயணருக்கும் அநேகக் குழந்தைகள்
இருக்க முடியாது. இது புத்திக்கான உணவு. தாங்களாகவே
புத்திக்கான விசார் சாகர் மந்தன் (உணவு சமைக்க) செய்ய வேண்டும்.
அனைவரைக் காட்டிலும் அதிக பாகம் விஷ்ணுவுக்கு எனச் சொல்வார்கள்.
84 பிறவிகளின் விராட ரூபமும் விஷ்ணுவுக்குக் காட்டுகின்றனர்.
பிரம்மாவுக்குக் காட்டப்படுவதில்லை. விராட ரூபத்தை
விஷ்ணுவுக்குத் தான் உருவாக்குகின்றனர். ஏனென்றால்
முதல்-முதலில் பிரஜாபிதா பிரம்மாவின் பெயரை வைக்கின்றனர்.
பிரம்மாவுக்கோ மிகச்சிறிய பாகம். அதனால் விராட ரூபத்தை
விஷ்ணுவுக்குக் காட்டுகின்றனர். சதுர்புஜமும் விஷ்ணுவுக்கு
உருவாக்குகின்றனர். உண்மையில் இந்த அலங்காரமோ உங்களுடையது. இவை
கூட மிகவும் புரிந்து கொள்வதற்கான விசயங் களாகும். எந்த ஒரு
மனிதராலும் புரிய வைக்க முடியாது. பாபா புதுப்புது வகைகளில்
புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். பாபா
சொல்கிறார்-திரிமூர்த்தி சிவபகவான் வாக்கு என்பது சரி தானே?
விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவன். இதிலும் பிரஜாபிதா பிரம்மா தான்
குழந்தை. விஷ்ணுவைக் குழந்தை எனச்சொல்ல மாட்டார்கள். படைப்பு
எனச் சொல் கின்றனர் என்ற போதிலும் படைப்போ பிரம்மா வினுடையதாக
இருக்கும் இல்லையா? அது பலவிதமான பெயர் வடிவங்களை எடுக்கிறது.
முக்கிய பாகமோ அவருடையதாகும். பிரம்மாவின் பாகமும் இச்சமயம்
மிகக் கொஞ்சம் தான். விஷ்ணுவுக்கு எவ்வளவு காலம் இராஜ்யம்
உள்ளது! முழு மரத்தின் விதை வடிவமாக இருப்பவர் சிவபாபா.
அவருடைய படைப்பை சாலிகிராம் எனச் சொல்வார்கள். பிரம்மாவின்
படைப்பை பிராமண்-பிராமணி எனச் சொல்வார்கள். இப்போது எவ்வளவு
சிவனுடைய படைப்புகள் உள்ளனரோ, அவ்வளவு பிரம்மாவுக்குக் கிடையாது.
சிவனுடைய படைப்புகளோ ஏராளம். ஆத்மாக்கள் அனைவரும் அவருடைய
குழந்தைகள். பிரம்மாவின் படைப்பு களோ பிராமணக் குழந்தைகளாகிய
நீங்கள் மட்டும் தான். எல்லைக்குட் பட்டதில் வந்து விட்டீர்கள்
இல்லையா? சிவபாபா வினுடையது எல்லையற்ற படைப்பாகும் - ஆத்மாக்கள்
அனை வரும் அவருடைய படைப்புகள். எல்லையற்ற ஆத்மாக்களுக்கு நன்மை
செய்கிறார். பிரம்மா மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார்.
பிராமணர்களாகிய நீங்கள் தான் போய் சொர்க்கவாசி ஆவீர்கள். வேறு
யாரையும் சொர்க்கவாசி எனச் சொல்ல மாட்டார்கள். நிர்வாண் வாசி
அல்லது சாந்திதாம வாசியாகவோ அனைவருமே ஆகின்றனர். அனைத்திலும்
உயர்ந்த சேவை சிவபாபாவுடைய சேவையாகும். அனைத்து ஆத்மாக்களையும்
அழைத்துச் செல்கிறார். இப்போதைய பாகம் தனித்தனியாக உள்ளது.
சிவபாபாவும் சொல்கிறார், எனது பாகம் தனி என்பதாக. அனைவரின்
கணக்கு-வழக்கை முடிக்க வைத்து தூய்மையற்ற உங்களை தூய்மை யாக்கி
ஆக்கி அழைத்துச் செல்கிறேன். நீங்கள் இங்கே தூய்மை ஆவதற்காக
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். மற்ற அனைவரும் விசாரணை
மற்றும் தீர்ப்பின் சமயம் கணக்கு-வழக்கை முடித்து விட்டுச்
சென்று விடுவார்கள். பிறகு முக்திதாமத்தில் அமர்ந்து
கொள்வார்கள். சிருஷ்டி யின் சக்கரமோ சுற்றியாக வேண்டும்.
குழந்தைகள் நீங்கள் பிரம்மா மூலம் பிராமணர் ஆகி பிறகு தேவதை ஆகி
விடுகிறீர்கள். பிராமணர் கள் நீங்கள் ஸ்ரீமத்படி சேவை
செய்கிறீர்கள். மனிதர்களுக்கு - முக்தி-ஜீவன்முக்தி அடைய வேண்டு
மானால் இப்படி அடைய முடியும் என்று வழி மட்டும் சொல்கிறீர்கள்.
இரண்டு சாவிகளும் கையில் உள்ளன. இதையும் அறிவீர்கள், யார்-யார்
முக்தியில், யார்-யார் ஜீவன் முக்தியில் செல்வார்கள் என்று.
உங்களுக்கு நாள் முழுவதும் இது தான் தொழில். யாராவது தானியங்கள்
முதலியவற்றின் தொழில் செய்கிறார்கள் என்றால் புத்தியில் நாள்
முழுவதும் அது தான் இருக்கும். உங்களுடைய தொழில் படைப்பின்
முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்வது மற்றும் யாருக்காவது
முக்தி-ஜீவன் முக்திக்கான வழி சொல்வது. யார் இந்த தர்மத்தைச்
சேர்ந்தவர்களோ, அவர்கள் வெளிப்படுவார்கள். அதுபோல் அநேக
தர்மத்தினர் உள்ளனர், அவர்கள் மாற முடிவதில்லை. எப்படி
ஆங்கிலோ-இந்தியக் கிறிஸ்தவர்கள் கறுப்பாக உள்ளனர். வடிவமோ
மாறுவதில்லை. அப்படியே (வேறு தர்மத்திற்கு) மாறி விடுவார்கள்.
அவர்களின் தோற்ற அமைப்பு மாறிவிடும் என்பதல்ல. வேறொரு தர்மத்தை
ஏற்றுக் கொள்கின்றனர், அவ்வளவு தான். அநேகர் பௌத்த தர்மத்தை
ஏற்றுக் கொள்கின்றனர். ஏனென்றால் தேவி-தேவதா தர்மமோ மறைந்து
விட்டது இல்லையா? ஒருவர் கூட நாங்கள் ஆதி சநாதன தேவி-தேவதா
தர்மத்தினர் எனச் சொல்லிக் கொள்பவர் கிடையாது. தேவதைகளின்
சித்திரங்கள் பயன்படுகின்றன. ஆத்மாவோ அழியாதது. அது ஒருபோதும்
இறப்பதில்லை. ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்து பாகத்தை
நடிக்கின்றது. அதை (சத்யுகம்) மரண உலகம் எனச் சொல்லப்படுவதில்லை.
அதுவே அமர உலகம். சரீரம் மாறுகின்றது, அவ்வளவு தான்.
இவ்விசயங்கள் மிகவும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ள வேண்டியவை.
மொத்தமாக அல்ல. எப்படி திருமணத்தின் போது சிலருக்குச் சில்லறை,
சிலருக்கு மொத்தமாகக் கொடுக்கின்றனர். சிலர் அனைத்தையும்
காண்பித்துக் கொடுக்கின்றனர். சிலர் மூடிய பெட்டியைத் தான்
கொடுக்கின்றனர். விதவிதமாக உள்ளனர். உங்களுக்கோ ஆஸ்தி
மொத்தமாகக் கிடைக் கின்றது. ஏனென்றால் நீங்கள் அனைவரும்
மணமகள்கள். பாபா மணமகன். குழந்தைகள் உங்களை அலங்கரித்து
உலகத்தின் ராஜபதவியை மொத்தமாகக் கொடுக்கிறார். உலகின் எஜமானராக
நீங்கள் ஆகிறீர்கள்.
முக்கியமானது நினைவின் விஷயம். ஞானமோ மிகவும் சுலபமானது.
இருந்தாலும் தந்தையை (அலஃப்) மட்டும் நினைவு செய்ய வேண்டும்.
ஆனால் சிந்தனை செய்யப் படுகின்றது-நினைவே விட்டுப்போய் (நழுவி)
விடுகின்றது. பாபா, நினைவு மறந்து போகிறது என்று அதிகமாகச்
சொல்கின்றனர். நீங்கள் யாருக்குப் புரிய வைப்பதாக இருந்தாலும்
எப்போதுமே நினைவு என்ற சொல்லைச் சொல்லுங்கள். யோகா என்ற சொல்
தவறானது. ஆசிரியருக்கு மாணவனின் நினைவு இருக்கிறது. தந்தை
சுப்ரீம் ஸோல் (மிக மேலான ஆத்மா). ஆத்மாவாகிய நீங்கள் சுப்ரீம்
கிடையாது. நீங்கள் பதீத். இப்போது தந்தையை நினைவு செய்யுங்கள்.
ஆசிரியர், தந்தை, குரு நினைவு செய்யப்படுகின்றனர். குருமார்கள்
அமர்ந்து சாஸ்திரங்களைச் சொல்வார்கள், மந்திரம் தருவார்கள்.
பாபாவின் மந்திரம் ஒன்றே ஒன்று தான்-மன்மனாபவ. பிறகு என்னாகும்?
மத்யாஜீபவ (திரிமூர்த்திகளில் மத்தியில் இருக்கும் விஷ்ணுவைப்
போல் ஆகி விடுவீர்கள்). நீங்கள் விஷ்ணுபுரிக்குச் சென்று
விடுவீர்கள். நீங்கள் அனைவருமே ராஜா-ராணி ஆகிவிட மாட்டீர்கள்.
ராஜா-ராணி மற்றும் பிரஜைகள் இருப்பார்கள். ஆக, முக்கியமானது
திரிமூர்த்தி. சிவபாபாவுக்குப் பிறகு பிரம்மா- மனித சிருஷ்டியை,
அதாவது பிராமணர்களைப் படைக்கின்றார். பிறகு அமர்ந்து
பிராமணர்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இது புது விசயம்
இல்லையா? பிராமண்-பிராமணி களாகிய நீங்கள் சகோதர-சகோதரிகள்
ஆகிறீர்கள். வயதானவர்கள் கூட சொல்வார்கள், நாங்கள்
சகோதர-சகோதரிகள் என்று. இதை உள்ளுக்குள் புரிந்து கொள்ள
வேண்டும். யாரையும் தவறாக அப்படியே சொல்லிவிடக் கூடாது. பகவான்
பிரஜாபிதா பிரம்மா மூலம் சிருஷ்டியைப் படைத்தார் என்றால்
சகோதர-சகோதரி ஆகிறார்கள் இல்லையா? ஒரு பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் எனும்போது இவை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும்.
குழந்தைகளாகிய உங்களுக்கோ மிகுந்த குஷி இருக்க வேண்டும்-நமக்கு
யார் படிப்பு சொல்லித் தருகிறார்? சிவபாபா. திரிமூர்த்தி சிவன்.
பிரம்மாவுக்கும் கூட மிகக் குறைந்த சமயத்தின் பாகம் தான்.
விஷ்ணுவுக்கு சத்யுக ராஜதானியில் 8 பிறவி களின் பாகம்
நடைபெறுகின்றது. பிரம்மாவுக்கோ ஒரே ஒரு ஜென்மத்தின் பாகம்.
விஷ்ணுவின் பாகம் பெரியது எனச் சொல்வார்கள். திரிமூர்த்தி சிவன்
முக்கியமானவர். பிறகு வருகிறது பிரம்மாவின் பாகம். அவர்
குழந்தைகளாகிய உங்களை விஷ்ணுபுரிக்கு எஜமானர் ஆக்குகிறார்.
பிரம்மாவின் மூலம் பிராமணர்கள், பிராமணர்களிலிருந்து பிறகு
தேவதை ஆகின்றனர். ஆக, இவர் அலௌகீகத் தந்தை ஆகிறார். கொஞ்ச
சமயத்திற்கு இவர் தந்தையாக உள்ளார். அவரை இப்போது ஏற்றுக்
கொண்டுள்ளனர். ஆதிதேவ், ஆடம் மற்றும் பீபி. இவர்களை யன்றி
சிருஷ்டியை எப்படிப் படைப்பார்? ஆதி தேவ் மற்றும் ஆதி தேவி
உள்ளனர் இல்லையா? பிரம்மாவின் பாகமும் சங்கமயுகத்தில் மட்டும்
தான். தேவதைகளின் பாகமோ பிறகும் கூட அதிகம் நடைபெறுகின்றது.
தேவதைகளும் கூட சத்யுகத்தில் மட்டும் என்று தான் சொல்வார்கள்.
திரேதாவில் சத்திரியர் எனச் சொல்லப் படுகிறார்கள். இவை மிக
ஆழத்திலும் ஆழமான பாயின்ட்டுகள் ஆகும். அனைத்தையுமே ஒரே
சமயத்தில் வர்ணனை செய்ய முடியாது. அவர்கள் திரிமூர்த்தி பிரம்மா
எனச் சொல் கின்றனர். சிவனை விட்டு விட்டார்கள். நாம் பிறகு
திரிமூர்த்தி சிவன் எனச் சொல்கிறோம். இந்தச் சித்திரங்கள்
முதலிய அனைத்தும் பக்தி மார்க்கத் தினுடையவை. பிரஜைகளை பிரம்மா
மூலம் படைக்கிறார், பிறகு நீங்கள் தேவதை ஆகிறீர்கள்.
விநாசத்தின் சமயம் இயற்கைச் சேதங்களும் வருகின்றன. விநாசமோ
நடந்தேயாக வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு மீண்டும் சத்யுகம்
வரும். இத்தனை சரீரங்கள் அனைத்தும் விநாசமாகியே தீர வேண்டும்.
அனைத்தும் நடைமுறையில் வேண்டும் இல்லையா? வெறுமனே கண்களைத்
திறப்பதால் ஒன்றும் நடைபெற்று விடாது. எப்போது சொர்க்கம்
மறைந்து விடுகிறதோ, அப்போது நிலநடுக்கம் முதலியன ஏற்படும்.
அந்தச் சமயமும் சங்கர் அதுபோல் கண்ணைத் திறக்கிறாரா என்ன?
துவாரகை அல்லது இலங்கை நீருக்கடியில் சென்று விட்டது
எனப்பாடுகின்றனர் இல்லையா?
இப்போது பாபா புரிய வைக்கிறார் - நான் வந்துள்ளேன், கல்
புத்தியுள்ளவர்களைப் பாரஸ் (தங்க) புத்தி யுள்ளவர்களாக
ஆக்குவதற்காக. மனிதர்கள் அழைக்கின்றனர்-ஹே பதீத-பாவனா வாருங்கள்,
வந்து பாவன உலகை உருவாக்குங்கள். ஆனால் இப்போது கலியுகம், இதன்
பிறகு சத்யுகம் வரும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.
குழந்தைகள் நீங்கள் குஷியில் நாட்டியமாட வேண்டும். வக்கீல்
முதலிய பரீட்சைகள் பாஸ் பண்ணுகின்றனர் என்றால் உள்ளுக்குள்
சிந்தனை செய் கின்றனர் இல்லையா? நாம் பணம் சம்பாதிப்போம், பிறகு
வீடு கட்டுவோம், இதைச் செய்வோம்..... என்று? ஆக, நீங்கள்
இப்போது உண்மையான வருமானத்தைச் சம்பாதித்துக்
கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கத்தில் உங்களுக்கு அனைத்தும்
புதிய பொருள்களாகக் கிடைக்கும். சிந்தித்துப் பாருங்கள்,
சோமநாதர் ஆலயம் என்னவாக இருந்தது? ஒரு கோவில் மட்டுமே இருக்காது.
அந்தக் கோவிலுக்கு 2500 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கட்டுவதில்
சில காலம் பிடித்திருக்கும். பூஜை நடை பெற்றிருக்கும். அதன்
பிறகு அதைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். உடனே வந்திருக்க
மாட்டார்கள். அநேகக் கோவில்கள் இருக்கும். பூஜைக்காக அமர்ந்து
கோவில்களைக் கட்டியுள்ளனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபாவை
நினைவு செய்து-செய்தே நாம் பொற் காலத்திற்குச் சென்று விடுவோம்.
ஆத்மா தூய்மையாகி விடும். முயற்சி செய்ய வேண்டியுள்ளது. முயற்சி
இன்றி காரியம் நடைபெறாது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்று
பாடப்படவும் செய்கிறது. ஆனால் சும்மா அப்படியே கிடைத்து விடாது.
இது புரிய வைக்கப் படுகின்றது- பாபாவின் குழந்தையாக ஆனால்
நிச்சயமாகக் கிடைக்கும். இப்போது நீங்கள் முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள், முக்திதாமம் செல்வதற்காக. பாபாவின்
நினைவில் இருக்க வேண்டியுள்ளது. நாளுக்கு நாள் குழந்தைகளாகிய
உங்களைத் தெளிவான (தூய்மையான) புத்தி உள்ளவர்களாக ஆக்குகிறார்.
பாபா சொல்கிறார், உங்களுக்கு மிக-மிக ஆழமான விசயங்களைச்
சொல்கிறேன். ஆத்மாவும் ஒரு புள்ளி, பரமாத்மாவும் ஒரு புள்ளி
என்பதை முதலில் சொல்லவில்லை. முதலில் ஏன் இதைச் சொல்லவில்லை
எனக் கேட்பார்கள். ஆனால் டிராமாவில் இல்லை. முதலிலேயே
உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தால் புரிந்து கொண்டிருக்க
மாட்டீர்கள். கொஞ்சம்- கொஞ்ச மாகப் புரிய வைத்துக் கொண்டே
இருக்கிறார். இது இராவண இராஜ்யம். இராவண இராஜ்யத்தில் அனைவரும்
தேக அபிமானி ஆகி விடுகின்றனர். சத்யுகத்தில் இருப்பவர்கள் ஆத்ம
அபிமானிகள். தங்களை ஆத்மா என அறிந்துள்ளனர். நமது சரீரம்
பெரியதாகி (வயதாகி) விட்டது. இப்போது இதை விட்டு மீண்டும்
சிறியதாக ஒன்றை எடுத்துக் கொள்ள (குழந்தை ஆக) வேண்டும் என
அறிந்துள்ளனர். ஆத்மாவின் சரீரம் முதலில் சிறியதாக உள்ளது.
பிறகு பெரியதாகின்றது. இங்கோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக
ஆயுள் உள்ளது. சிலருக்கு அகால மரணம் ஏற்பட்டு விடுகின்றது. ஒரு
சிலருக்கு 125 வருடம் கூட ஆயுள் உள்ளது. ஆகவே பாபா புரிய
வைக்கிறார், உங்களுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம்
என்ற மிகுந்த குஷி இருக்க வேண்டும். கந்தர்வ விவாகம் செய்தால்
அது ஒன்றும் குஷியின் விசயம் கிடையாது. இதுவோ பலவீனமாகும். நான்
பவித்திரமாக இருக்க விரும்புகிறேன் எனச் சொன்னால் அதற்காக
யாரும் அடிக்க முடியாது. ஞானம் குறைவாக இருந்தால் பயந்து
கொள்கின்றனர். சிறிய குமாரியைக் கூட யாரேனும் அடித்தால்,
இரத்தம் முதலியன வெளிவந்தால், போலீசில் புகார் செய்தால்,
அவருக்கும் தண்டனை கிடைக்கும். மிருகங்களைக் கூட யாராவது கொன்று
விட்டால் அவர்கள் மீது வழக்கு வரும். தண்டனை அடைய நேரிடும்.
குழந்தைகளாகிய உங்களையும் யாராலும் அடிக்க முடியாது. குமாரையும்
அடிக்க முடியாது. அவர்களோ தங்கள் வருமானத்தைச் சம்பாதித்துக்
கொள்ள முடியும். சரீர நிர்வாகம் செய்து கொள்ள முடியும். வயிறு
ஒன்றும் அதிகமாகச் சாப்பிடாது. ஒரு மனிதரின் வயிறு 4-5 ரூபாய்,
ஒரு மனிதரின் வயிறு 400-500 ரூபாய். பைசா அதிகம் இருக்கு மானால்
அளவுக்கதிகமாக உண்பவர்களாக ஆகி விடுகிறார்கள். ஏழைகளிடம் பணமே
இல்லை யென்றால் உண்பதில் பேராசையும் இருக்காது. அவர்கள்
காய்ந்த ரொட்டியிலேயே குஷியடைந்து விடுவார்கள். குழந்தைகள்
அதிக உணவு-பானத்தின் உபத்திரவத்திலும் செல்லக் கூடாது.
சாப்பிடுவதில் ஆர்வம் இருக்கக் கூடாது.
நீங்கள் அறிவீர்கள், அங்கே நமக்கு என்ன தான் கிடைக்காது?
எல்லையற்ற ராஜ்யம். எல்லையற்ற சுகம் கிடைக்கின்றது. அங்கே எந்த
ஒரு நோய் முதலிய எதுவும் இருக்காது. ஆரோக்கியம், செல்வம்,
மகிழ்ச்சி அனைத்தும் இருக்கும். முதுமையும் கூட அங்கே மிக
நன்றாக இருக்கும். குஷி இருக்கும். எந்த விதமான கஷ்டமும்
இருக்காது. பிரஜைகளும் கூட அதுபோல் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அதற்காக பிரஜை என்றால் பிரஜையாக இருந்தாலே போதும் என
இருந்துவிடக் கூடாது. பிறகோ இங்குள்ள மலை ஜாதியினர் போல்
இருப்பார்கள். சூரியவம்சி லட்சுமி-நாராயணர் ஆக வேண்டுமானால்
பிறகு முயற்சியும் அவ்வளவு செய்ய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் பிரம்மாவின் புதிய படைப்புகள், நமக்குள்
சகோதர-சகோதரிகள்-இதை உள்ளுக்குள் புரிந்து கொள்ள வேண்டும்.
யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு சிவபாபா
படிப்பு சொல்லித் தருகிறார் என்ற இதே குஷியில் இருக்க வேண்டும்.
2) உணவு-பானத்தின் விருப்பத்தில் அதிகம் செல்லக் கூடாது.
பேராசையை விட்டுவிட்டு எல்லையற்ற இராஜ்யத்தின் சுகங்களை நினைவு
செய்ய வேண்டும்.
வரதானம்:
அநேக விதமான வாழ்வியல் தொடர்பான விவகாரங்களில் இருந்து
விடுபட்டு இருக்கக் கூடிய நஷ்டோமோகா (மோகத்தை அழித்த) ஸ்மிருதி
சொரூபம் ஆகுக.
சுயத்தின் பிரவிருத்தி (உலகியல் வாழ்வின் ஈடுபாடு), தெய்வீகப்
பரிவாரத்தின் பிரவிருத்தி, சேவையின் பிரவிருத்தி,
எல்லைக்குட்பட்ட பிராப்திகளின் பிரவிருத்தி, இந்த
அனைத்திலிருந்தும் நஷ்டோமோகா, அதாவது விலகியவராக ஆவதற்காக
பாப்தாதாவின் அன்பு ரூபத்தை முன்னால் வைத்து நினைவு சொரூபம்
ஆகுங்கள். நினைவு சொரூபம் ஆவதன் மூலம் மோகத்தை அழித்தவராக
தானாகவே ஆகி விடுவீர்கள். உலகியல் வாழ்வில் இருந்து விடுபடுவது
என்றால் நான் என்பதை முடித்து விட்டு நஷ்டோமோகா ஆவதாகும். அந்த
மாதிரி நஷ்டோமோகா ஆகக்கூடிய குழந்தைகள் நீண்ட காலப் பயனை
அடைவதற்கு அதிகாரி ஆவார்கள்.
சுலோகன்:
தாமரை மலருக்கு சமமாக விலகி இருப்பீர்களானால் பிரபுவின் அன்பு
கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அவ்யக்த இஷாரா : சகஜயோகி ஆக வேண்டுமானால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
யார் நம்பர் ஒன் விட்டில் பூச்சியாக இருக்கிறார்களோ,
அவர்களுக்கு சுயததின், அதாவது இந்த தேக உணர்வின், இரவு-பகலின்,
பசி-தாகத்தின், தன் சுகத்திற்கான சாதனங்களின், ஓய்வின், எந்த
விஷயத்தின் ஆதாரமும் இல்லை. அவர்கள் அனைத்து வித தேக
ஸ்மிருதிகளை இழந்து விட்ட, அதாவது நிரந்தரமாக ஜோதியின் அன்பில்
கலந்து விட்டவராக இருக்கிறார்கள். எப்படி தீபம், ஜோதி சொரூபமாக
உள்ளதோ, ஒளி- சக்தியின் (லைட்-மைட்) ரூபமாக உள்ளதோ, அது போல்
தீபத்திற்கு சமமாக தாங்களும் ஒளி-சக்தி ரூபம் ஆகி விடுகின்றனர்.