22.02.26    காலை முரளி            ஓம் சாந்தி 05.02.2009      பாப்தாதா,   மதுபன்


சேவை செய்துக் கொண்டே டபுள் லைட் மனநிலை மூலம் பரிஸ்தா நிலையில் இருங்கள். ஆசரீரி ஆவதற்கான பயிற்சி செய்யுங்கள்.

இன்று பாப்தாதா நாலா பக்கத்திலுமுள்ள குழந்தைகளின் மூன்று ரூபங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் எப்படி பாபாவுக்கு மூன்று ரூபங்கள் தெரியுமோ, அதுபோல குழந்தைகளின் மூன்று ரூபங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது தான் இந்த சங்கமயுகத்தின் லட்சியம் மற்றும் லட்சணமாகும். முதலாவது சொரூபம் பிராமணன், இரண்டாவது பரிஸ்தா, மூன்றாவது தேவதை. பிராமண நிலையிலிருந்து பரிஸ்தா, பரிஸ்தா நிலையிலிருந்து தேவதை. எனவே தற்சமயத்தில் இப்பொழுது விசேஷமாக முன்னால் என்ன இலட்சியம் இருக்கிறது? ஏனெனில் பரிஸ்தா ஆகாமல் தேவதை ஆக முடியாது. எனவே தற்சமயத்தில் மேலும் தனது முயற்சிக்கு தகுந்தவாறு தற்போதைய இலட்சியம் பரிஸ்தா ஆவது. சங்கமயுகத்தின் சம்பன்ன சொரூபம் பரிஸ்தா நிலையிலிருந்து தேவதை ஆவது. பரிஸ்தாவின் வரையறை தெரிந்தும் உள்ளீர்கள். பரிஸ்தா என்றால் பழைய உலகத்தின் சம்பந்தம், சம்ஸ்காரம், எண்ணத்தினால் இலேசாக இருப்பது. பழைய சம்ஸ்காரம் அனைவரிடத் திலும் இலேசாக இருப்பது. தன்னுடைய சம்ஸ்காரம் அனைவரிடத்திலும் இலேசாக இருப்பது. தன்னுடைய சம்ஸ்காரம் சுபாவம் உலகத்திற்கு முன்னால் மட்டும் இலேசாக இருப்பது அல்ல. ஆனால் பரிஸ்தா என்றால் அனைத்து சம்பந்தத் தில் வந்து அனைவரின் சுபாவ சம்ஸ்காரத்தில் இலேசானத் தன்மை. இந்த இலேசானத் தன்மை யின் அடையாளம் என்ன? அப்படிப்பட்ட பரிஸ்தாவின் ஆத்மா அனைவருக்கும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு மட்டும் அன்பானவர் அல்ல. அனைவருக்கும் அன்பானவர்கள். எப்படி பாபாவை, பிரம்மா பாபாவை ஒவ்வொருவரும் என்னுடையவர் என்று புரிந்துக் கொள்கிறரார்கள். என்னுடைய தந்தை என்று புரிந்து கொள்கிறீர்கள். அதுபோல பரிஸ்தா என்றால் அனைவருக்கும் அன்பானவர். சில குழந்தைகள் யோசிக்கிறார்கள், பிரம்மா பாபா பிரம்மாவாகத் தான் இருந்தார், ஆனால் உங்களை போன்ற பிராமண ஆத்மாக்களில் உங்கள் அனைவருக்கும் அன்பான தாதிஜி, இவரை அனைவரும் அன்புடன் அனுபவம் செய்கிறீர்கள், என்னுடைய தாதிஜி என்று தான் அழைக்கிறீர்கள். அனைத்து விதமான சுபாவம், சம்ஸ்காரம் மேலும் இந்த பழைய உலகத்தில் இருந்தாலும், விடுப்பட்டவராகவும், அன்பானவராகவும், அனைவரும் உரிமையுடன் என்னுடைய தாதிஜி என்று சொல்கிறீர்கள். காரணம் என்ன? தனக்கும் சுபாவ, சம்ஸ்காரத்தில் இலேசானத்தன்மை. அனை வருக்கும் என்னுடையவர் என்று அனுபவம் ஆனது. எனவே அனை வருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். ஜகத்தம்பாவை பர்த்தீர்கள், ஆனால் அவரோ ஜகத்தம்பா என்று அனைவரும் நினைப்பீர்கள், ஆனால் பிராமண குடும்பத்திற்கு துணையாக இருந்தார். அவருடைய வாயிலிருந்து எப்பொழுதும் ஒருவேளை முயற்சியை பற்றி சொல்கிறோம் அல்லது கேட்கிறோம் என்றால், அவர்கள் சொல்வது ஒரே வார்த்தை - இப்பொழுது கர்மாதீத் ஆக வேண்டும். கர்மாதீத் ஆக வேண்டும் என்ற அன்பில் மற்றவர்களுக்கும் கூட இதே வார்த்தையை திரும்ப திரும்ப நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எனவே ஒவ்வொரு பிராமணனின் இப்பொழுது இலட்சியம் மற்றும் இலட்சணம் விசேஷமாக இது தான் இருக்க வேண்டும், ஆனால் நம்பர்வாராக இருக்கிறார்கள். இதே தீவிரத்தன்மையோடு இப்பொழுது பரிஸ்தா ஆக வேண்டும். பரிஸ்தா என்றால் இந்த தேகம், சாகார தேகத்திலிருந்து விடுபட்டு, சதா ஒளியின் தேகம் உடையவர். பரிஸ்தா என்றால் பரிஸ்தா என்றால் கர்மேந்திரியங்களின் இராஜா.

பாப்தாதா ஏற்கனவே கூறியிருந்தார், முழு உலக சக்கரத்திற்குள் என்னுடைய ஒவ்வொரு குழந்தைகளும் இராஜா குழந்தை என்று பாப்தாதா பெருமிதத்தோடு கூறுகிறார். சுயராஜ்ய அதிகாரியாக இருக்கிறீர்கள். எனவே பரிஸ்தா என்றால் சுயராஜ்ய அதிகாரி. அப்படிப்பட்ட சுயராஜ்ய அதிகாரி ஆத்மா, ஒளியின் சொரூபதாரி, யாராவது அப்படிப்பட்ட டபுள் இலேசானத் தன்மையின் ஸ்திதியில் நிலைத்திருந்து, ஒருவேளை யாரையாவது சந்திக்கிறீர்கள் என்றால் அவர்களின் நெற்றியில் ஆத்ம ஜோதி சொரூபம் நடந்தாலும், சுற்றினாலும் தென்படும். இப்பொழுது இந்த தீவிர முயற்சியின் இலட்சியம் மற்றும் இலட்சணம் சதா இமர்ஜ் (வெளிப்படுத்துங்கள்) நிலையில் வையுங்கள். எப்படி பிரம்மா பாபாவை பாருங்கள், ஒருவேளை யாராவது சந்திக் கிறோம், திருஷ்ட்யை பெறும்பொழுது சந்திக்கிறோம், திருஷ்டியை பெற்றுக் கொண்டே பேசும் பொழுது என்ன தென்படும்? மேலும் கடைசியில் பிரம்மா பாபா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, இனிய அசரீரி நிலையில் நிலைத்து விடுவார். எவ்வளவு எவ்வளவு சேவையாக இருந்தாலும், நொடியில் அசரீரித் தன்மையின் அனுபவம் செய்துக் கொண்டே, அடிக்கடி முரளியில் சோதனை செய்யுங்கள், அடிக்கடி நான் அசரீரி ஆத்மா, ஆத்மாவின் பாடத்தை ஒரே முரளியில் எத்தனை முறை நினைவுப் படுத்துகிறார். எனவே தற்சமயத்தில் சின்ன சின்ன விஷ்தாரத்தின் விஷயம், சுபாவ சம்ஸ்காரத்தின் விஷயம் அசரீரி நிலையிலிருந்து விலக்கி விடுகிறது. இப்பொழுது மாற்றம் வேண்டும்.

பாப்தாதா பார்க்கிறார், சேவையில் ரிசல்ட் நன்றாக நடந்துக் கொண்டிருக்கிறது. சேவைக்காக அதிக மானவரிடம் ஊக்கம் உற்சாகம் இருக்கிறது. திட்டங்களை உருவாக்குகிறீர்கள், ஆனால் சேவையின் கூடவே, சந்தேஷ் (செய்தியை) கொடுப்பது, இதுவும் கூட அவசியமாக இருக்கிறது. மேலும் பாப்தாதா இன்றும் வித விதமான சேவையில் பலவித இடங்களின் சேவை நல்ல முறையில் இருக்கிறது, ஆனால் அசரீரித் தன்மையின் சூழ்நிலையில் குறைந்த முயற்சியில், தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. கேட்கும் பொழுது நன்றாக தான் இருக்கிறது, ஆனால் சூழ்நிலையின் மூலம் அசரீரித்தன்மை திருஷ்டியின் மூலம் அனுபவம் செய்கிறார்கள், அனுபவம் மறந்து போகாது. எனவே இப்பொழுது சேவையில் விசேஷமான பரிஸ்தா தன்மையின் ஒலியை இசைக்க செய்யுங்கள். விசேஷமாக அனுபவம் செய்யுங்கள். ஏதாவதொரு அனுபவத்தை செய்ய வையுங்கள். எப்படி உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் இருக்கிறோம், அதுபோல உருவாக்கப் பட்ட குடும்பத்தின் அன்பு வேறு எங்கும் கிடைப்பது கிடையாது. அதுபோல இப்பொழுது ஏதாவ தொரு சக்தியின், ஏதாவதொரு பிராப்தியின் அனுபவத்தை செய்ய வையுங்கள். இப்பொழுது 70-72 வருடம் முடிவடைந்திருக்கிறது, இந்த நேரத்தில் ரிசல்ட் என்ன பார்த்தீர்கள். மிகுந்த உழைப்பு. ஆனால் இதுவரை பிரம்மா குமாரிகள் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். பிரம்மா குமாரிகளின் ஞானம் நன்றாக இருக்கிறது. கொடுக்கக் கூடியவர் யார்? நடத்துபவர் யார்? மூல கரு யார்? பாபா என்ற வார்த்தையை நாம் அனைவரும் சொல்வதால், அவர்களும் உங்களின் பாபா என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவர்தான் என்னுடைய பாபா என்று சொல்வதில்லை. பாபாவின் பிரத்யக்ஷம் மறைமுகமாக இருக்கிறது. பாபா பாபா என்று சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய பாபா. நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர். இப்படி கோடியில் சிலர் தான் இருக்கிறார்கள்.

அதனால் சங்கமயுகத்தில் என்ன இலட்சியம் என்ன? ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை வந்துள்ளார், பாபாவின் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது அல்லவா. அந்த தாக்கம் பரிஸ்தா நிலையின் மூலம் சுற்று சுழலில் பரவு கிறது. இவர்களின் திருஷ்டி மூலம் லைட் (ஒளி) கிடைக்கிறது. இவர்களின் திருஷ்டியில் ஆன்மீகத் தன்மையின் ஒளி பார்வையில் வருகிறது. எனவே இப்பொழுது தீவிர முயற்சியின் நான் டபுள் பரிஸ்தா என்ற இலட்சியம் வையுங்கள். நடந்தாலும் சுற்றினாலும் பரிஸ்தா சொரூபத்தின் அனுபவத்தை அதிகரியுங்கள். அசரிரீ தன்மையின் அனுபவத்தை அதிகரியுங்கள். நொடியில் ஏதாவது எண்ணங்களை சமாப்தி செய்வதில், சம்ஸ்கார சுபாவத்தில் டபுள் லைட். பல குழந்தைகள் சொல்கிறார்கள், நாங்கள் இலேசாகத் தான் இருக் கிறோம், ஆனால் மற்றவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட டபுள் லைட் பரிஸ்தா, டபுள் லைட் , டபுள் லைட் அவர்களின் ஒளியை மறைக்க முடியாது. சின்ன சிறிய லைட்டாக இருக்கலாம், தீக்குச்சியின் ஒளியாகவும் இருக்கலாம், ஒளி எங்கு வேண்டுமென்றாலும் சுடர்விடும். மறைக்க முடியாது, மேலும் இந்த ஆன்மீக ஒளியாக இருப்பதால், தனது சுற்று சுழலில் அவர்களுக்கு யார் என்பதை அனுபவம் செய்ய வையுங்கள். ஜகதம்பாவாக இருக்கலாம், தாதிஜி யாக இருக்கலாம், எனக்கு தெரியவில்லை என்று சொல்லவில்லை. தனது சுற்று சுழலில் அனை வருக்கும் அன்பானவராக இருந்தார்கள். அதனால் தாதியை உதாரணமாக கூறுகிறோம், ஏனெனில் பிரம்மா பாபாவிற்காக, பிரம்மா பாபாவிற்குள் (சிவ) பாபா இருக்கிறார் என்று யோசிக்கிறோம், சிவ பாபாவை பற்றி அவரோ நிராக்கார், விடுப்பட்டவர், நிராகாராக இருக்கிறார் என்று யோசிக்கிறோம். நாமோ ஸ்தூல சரீரதாரி. இத்தனை பெரிய குழுவில் இருக்கக்கூடியவர்கள், சம்ஸ்காரங்கள் இணைவது என்றால் பரிஸ்தா ஆவது. சம்ஸ்காரங்களை பார்த்து பலர் மனமுடைந்து போகிறார்கள், பாபா மிகவும் நல்லவர், பிரம்மா பாபாவும் மிகவும் நல்லவர், ஞானம் மிக நன்றாக இருக்கிறது. பிராப்திகளும் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் சம்ஸ்காரம் ஒன்றாக இணைய வேண்டும் என்றால் அனைவருக்கும் அன்பாவனவர் ஆவது. சிலருக்கு மட்டும் அன்பானவர் அல்ல. ஏனெனில் ஒரு சிலரிடம் விசேசத்தன்மையை பார்த்து அன்பு வருகிறது என்று சிலர் சொல்கிறார்கள். இவர்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது, இவர்களிடத்தில் இந்த விசேஷத் தன்மை மிக நன்றாக இருக்கிறது. பேசுவது நன்றாக இருக்கிறது பரிஸ்தா ஆவதில் இந்த தடை வருகிறது. அன்பானவர் ஆகுங்கள், ஆனால் ஆத்மாவாகிய நான் விடுப்பட்டவனாக இருக்கிறேன். விடுப்பட்ட மனநிலையில் அன்பானவர் ஆகுங்கள். விசேஷத் தன்மையை பொறுத்து அன்பானவர் ஆவது அல்ல. இவருடைய இந்த குணம் நன்றாக இருக்கிறதா, அதை நன்றாக தாரணை செய்யுங்கள். ஆனால் இந்த காரணத்தினால் மட்டும் அன்பானவர் ஆவது தவறானது ஆகும். பரிஸ்தா என்றால்; அனைவருக்கும் அன்பானவராக இருப்பது. ஒவ்வொருவரும் சொல்கிறார்கள் என்னுடையது, எனது, அப்படிப்பட்ட பரிஸ்தா மனநிலையில் தடையாக இரண்டு பொருட்கள் இருக்கிறது. முதலாவது தேக உணர்வு, இது இயல்பாகவே அனைவருக்கும் அனுபவம் இருக்கிறாது, 63 பிறாவிகளாக திரும்ப திரும்ப தேக உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டாவது தேக அபிமானம், தேக உணர்வு மற்றும் தேக அபிமானம், ஞானத்தில் எந்தளவு முன்னேறுகிறோம், அதனால் தனக்காக எப்பொழுதாவது தேக அபிமானம் வந்து விடுகிறது. அந்த அபிமானம் நம்மை கீழே விழ்த்தி விடுகிறது. தேக அபிமானம் ஏன் வருகிறது? என்னவெல்லாம் விசேˆத்தன்மை இருக்கிறதோ, அந்த விசேஷத் தன்மையின் காரணத்தினால் அபிமானம் வருகிறது. நான் என்ன குறைந்தவனா, எனது சொற்பொழிவு அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நான் செய்யும் சேவையில் பிரபாவம் (தாக்கம்) ஏற்படுகிறது. நான் மிக நன்றாக கையாளுகிறேன், நான் கோர்ஸ் எடுக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது. யாராவது ஞானத்தில் முன்னேறும் பொழுது, சேவையில் முன்னேறும் பொழுது இந்த அபிமானம் தனக்காவும் வந்து விடுகிறது. மற்றவர்களின் குணம், கலைகளில், விசேஷத்தன்மையில் அன்பு வருகிறது. ஆனால் யார் நினைவில் வருவார்கள்? தேக உணர்வு தான் நினைவில் வரும் அல்லவா. இவருடைய புத்தி மிக நன்றாக இருக்கிறது, நான் கையாளுவது மிக நன்றாக இருக்கிறது. இந்த அபிமானம் தான் சேவை மற்றும் முயற்சியில் முன்னேற்றம் அடைபவர்களுக்கு அபிமானமாக வருகிறது. எனவே இதையும் சோதனை செய்ய வேண்டும். மேலும் அபிமானம் உள்ளவருக்கு அபிமானம் இருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்கான சாதனம் இருக்கிறது. அபிமானம் உள்ளவர் களுக்கு சிறிதளவு அவர்களின் சிந்தனையை, ஆலோசனையை, அவர்களின் கலையை, கையாளும் தன்மையை அவமதிப்பு செய்தால், அவர்களுக்கு மிக எளிதாக அவமானம் உணர்வார்கள். மேலும் அவமானம் உணர்வதால், அதனுடைய சூட்சம அடையாளம் கோபத்தின் அம்சமான பயம், வெறுப்பு உருவாகிறது. அது பரிஸ்தாவாக மாற விடாது. எனவே தற்காலத்திற்கு தகுந்தாற்போல் பாப்தாதா மீண்டும் இஷாரா தருகிறார். தன்னுடைய சங்கமயுகத்தின் கடைசி சொரூபம் பரிஸ்தா. இப்பொழுது இதை வாழ்க்கையில் தாரணை செய்யுங்கள். நடைமுறையில் கொண்டு வாருங்கள். பரிஸ்தா ஆவதினால் ஆசரீரி ஆவது மிகவும் எளிதாகிவிடும்.. தனது மற்றும் மற்றவர்களின் ஏதாவது விசேஷத் தன்மை சூட்சம ரூபத்தில் கூட பற்றுதல் இருக்கிறாதா என்பதை தன்னை சோதனை செய்யுங்கள். அபிமானம் இல்லை தானே? பல குழந்தைகளின் ஏதாவது சின்ன விஷயம் நடந்தாலும் கூட மனநிலை மேலும் கீழே ஆகிவிடுகிறது. மகிழ்ச்சி நிறைந்த இதயம், மகிழ்ச்சி யான முகத்திற்கு பதிலாக, கவலையான முகம் வாடிப்போன முகம் இருந்தால் போக போக மனம் உடைந்து போய்விடும். மன நிறைவுக்கு பதிலாக, மனம் உடைந்து போய்விடுகிறது. எனவே புரிந்ததா, இப்பொழுது தனது சங்கமயுகத்தின் கடைசி நிலையான பரிஸ்தா தன்மையை எமர்ஜ் செய்யுங்கள். பிரம்மா பாபாவை பார்த்தீர்கள், தந்தையை பின்பற்ற வேண்டுமல்லவா. பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பல குழந்தைகள் அனுபவம் செய்திருக்கிறார்கள், ஏதாவது விஷயங் களில் வந்திருப்பார்கள், ஆனால் விஷயங்களிலிருந்து விடுபட்டு, சப்தங்களை கடந்த மன நிலையை அனுபவம் செய்ய வைத்தை பார்த்தீர்கள். விஷயங்களை சொல்ல வேண்டும், பல திட்டங்களை உருவாக்கி, இதை சொல்ல வேண்டும், இதை சொல்ல வேண்டும், இவற்றை கேட்க வேண்டும், ஆனால் முன்னால் சென்றாதுமே என்ன பேச வேண்டுமோ, அது மறந்து விடுகிறாது. இது தான் பரிஸ்தாவின் மனநிலை. எனவே இன்றைய பாடம் உறுதி செய்து விட்டீர்களா? நான் யார்? பரிஸ்தா. அனைத்து விஷயங்களிலிருந்து, மற்றவர்களின் விசேஷத் தன்மையிலிருந்து, தனது விசேஷத் தன்மையிலிருந்து, தேக அபிமானத்திலிருந்து விடுபட்டு, டபுள் லைட் பரிஸ்தா. ஏனெனில் பரிஸ்தா ஆகாமல், தேவதையின் உயர்ந்த பதவி கிடைக்காது. சத்யுகத்திற்கு வந்துவிடுவோம், ஏனெனில் குழந்தைகள் ஆகிவிட்டோம். ஆஸ்தியும் கிடைத்து விடும், ஆனால் சிரேஷ்ட பதவி. எப்பொழுதும் கூடவே இருப்போம், ஒன்றாகவே இராஜ்யம் செய்வோம், சிம்மாசனத்தில் அமராமல் இருக்கலாம், ஆனால் இராஜ்ய அதிகாரி ஆகி, அங்குள்ள இராஜ்ய சபையை பார்த்துள்ளீர்கள் அல்லவா. யாரெல்லாம் இராஜய சபையின் அதிகாரியாக இருக் கிறீர்கள், அவர்கள் திலகம் மற்றும் கீரிடதாரி, இராஜ்ய திலகம், இராஜ்யத்தின் அடையாளம் கீரிடம். அதனால் நீண்ட காலத்திற்கு சுயராஜ்ய அதிகாரி. இடை - இடையில் அல்ல. நீண்ட காலத்திற்கு சுயராஜ்ய அதிகாரி, சிமாசனத்தில் அமரவில்லை யென்றாலும் இராயல் குடும்பத்தின் அதிகாரி ஆகிவிடுவார்கள். நல்லது.

நல்லது இன்று யார் முதல் முறையாக வந்துள்ளார்களோ, அவர்கள் எழுந்திருங்கள். நல்லது . சபையில் முக்கால் பகுதியினர் எழுந்திருத்துள்ளனர். நல்லது யாரெல்லாம் முதல் முறை வந்துள்ளனரோ, அவர்கள் அனைவருக்கும் சாகாரத்தில் பாபாவை சந்தித்து, முதலாவது பிறந்த நாளின் வாழ்த்துக்கள். வந்திருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் இது தான் வரதானமாக இருக்கிறது. கடைசி காலகட்டமாக இருக்கிறது, ஆனால் புதியதாக வந்த குழந்தைக்காக ஒரு விசேஷமான வரதானம் - நாங்கள் எப்படி முன்னேறுவது என்ற எண்ணம் வரக் கூடாது? மிக தாமதமாக வந்திருந்தாலும் கூட தாமதமாக தான் வந்துள்ளீர்கள், மிகதாமதமாக இல்லை. மேலும் இப்பொழுது உங்கள் அனைவருக்கும் விசேஷமாக பாப்தாதா மற்றும் நிமித்தமாக உள்ள பிராமண குடும்பத்தின் சகோதர சகோதரிகளின் விசேஷமான உதவியின் பாவணை இருக்கிறது, ஒருவேளை நீங்கள் சிறிது நேரத்திற்கு ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்துவதற்கான, ஏனெனில் சிறிது நேரத்தில் அதிகமான பலனை அடைய முடியும், ஒரு நொடி கூட வீணாக இழக்க வேண்டாம். கர்மயோகியாக இருந்து செயல் பட வேண்டும், செயலை விட்டு விட வேண்டாம். கர்மத்தில் யோகத்தை இணைத்து, கர்மம் மற்றும் யோகம் சமநிலை வைக்க வேண்டும். சமநிலை வைப்பதின் மூலம் ஆசீர்வாதமும் அதிகமாக கிடைக்கும். யாரெல்லாம் தாமதமாக வந்துள்ளீர் களோ, மிக தாமதம் என்பது போக போக வரும், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிறிது காலத்தில் மிகுந்த முயச்சி செய்ய முடியும். தைரியமுள்ள குழந்தைகளுக்கு பாபாவின் உதவி கிடைக்கும் என்பது பாப்தாதாவின் வரதானம் ஆகும்.

நாலா பக்கத்திலுமுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமான ஆசீர்வாதங்கள், பலமடங்கு வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் என்ன வெல்லம் கடிதங்கள், இ-மெயில் வந்திருக்கின்றனவோ, அவர்களுக்கு நொடி பொழுதை குறைவான நேரத்தில் பாபாவிடம் வந்தடைகின்றன. அவர்களுக்கும் கூட மேலும் பாப்தாதாவை சந்திக்க தாகத்திலுள்ள ஆத்மாக்களுக்கு, பந்தனத்திலுள்ள அடியை கூட கழுத்தின் மாலையாக மாறிவிடு கிறது. அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு, அன்பு நினைவுகள் மற்றும் புதியதாக வந்துள்ள அன்பான ஆத்மாக்கள் வருகிறார்கள், ஆனால் குறைவாக உள்ளார்கள். அன்பான மற்றும் இரட்டிப்பு உதவியாளர் ஆக வேண்டும். எனவே நாலாபக்கத்திலுமுள்ள அனைத்து இளைஞர்கள், வயோதி கர்கள், குழந்தைகள், தாய்மார்கள், பாண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்லது.

ஆசீர்வாதம்:
சாகார் மற்றும் நிராகார் பாபாவின் உதவி மூலம் ஒவ்வொரு எண்ணத்திலும் வெற்றியடைய கூடிய சதா வெற்றி மூர்த்தி ஆகுக.

எப்படி நிராகார ஆத்மா மற்றும் சாகார உடல் இரண்டின் சம்மந்ததின் மூலம் ஒவ்வொரு செயலை செய்ய முடிகிறது. அதுபோல நிராகார தந்தை மற்றும் சாகார தந்தை இருவரின் கூடவே மற்றும் முன்னால் வைத்து ஒவ்வொரு செயல் மற்றும் எண்ணத்தை நினைத்தால் வெற்றி மூர்த்தி ஆகி விடலாம். ஏனெனில் பாப்தாதா அருகாமையில் இருந்தால், அவரிடம் சரிபார்த்துக் கொண்டு, நம்பிக்கையுடனும் பயமற்ற நிலையில் செய்ய முடியும். இதனால் நேரம் மற்றும் எண்ணம் சேமிப்பு ஆகும். சிறிதளவு வீண் ஆகாது. ஒவ்வொரு செயலும் இயல்பாகவே வெற்றி கிடைக்கும்.

சுலோகன்:
ஆன்மீக அன்பு செல்வத்தையும் விடவும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஆகையால் மாஸ்டர் அன்பு கடல் ஆகுங்கள்.


அவ்யக்த இஷாரா - ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் விசேஷத்தன்மையின் மூலம் வெற்றியில் முழுமையானவர் ஆகுங்கள்.

மத தலைவர்களுக்கு முன்னால் தூயமையின் சக்தி, மற்றும் அரசியம் தலைவர்களுக்கு முன்னால் ஒற்றுமையின் சக்தியை நிரூபணம் செய்யுங்கள். இந்த இரண்டு சக்திகளை நிரூபணம் செய்வதின் மூலம் ஈஸ்வரிய குடும்பத்தின் கொடி மிக எளிதாக பறக்கும். இப்பொழுது இந்த இரு தரப்பினருக்கு முக்கிய கவனம் கொடுங்கள். எந்தளவு தூயமையின் எந்தளவு தூயமை மற்றும் ஒற்றுமையின் சக்தியின் மூலம் அவர்களை அருகாமையில் நெருக்கத்தில் கொண்டு வருகிறீர் களோ, அந்தளவு அவர்கள் தானாகவே நம்மை வர்ணனை செய்வார்கள்.