23-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அமைதியாக
இருப்பதும் கூட மிகப் பெரிய சிறந்த குணமாகும். நீங்கள்
அமைதியாக இருந்து பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களானால்
அதிக வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு வார்த்தை கர்ம
சந்நியாசத்தை உறுதி செய்கின்றது, அந்த வார்த்தையை நீங்கள் பேச
முடியாது?
பதில்:
டிராமாவில் இருந்தால் செய்வேன்
என்று சொல்வது, பாபா சொல்கிறார், இதுவோ கர்ம சந்நியாசம்
ஆகின்றது. நீங்கள் கர்மத்தையோ அவசியம் செய்தாக வேண்டும்.முயற்சி
இல்லாமல் தண்ணீர் கூடக்கிடைக்காது. அதனால் டிராமா என்று சொல்லி
விட்டுவிடக் கூடாது. புதிய இராஜ்யத்தில் உயர்ந்த பதவி பெற
வேண்டுமானால் நன்கு முயற்சி செய்யுங் கள்.
ஓம் சாந்தி.
முதல்-முதலில் குழந்தைகளுக்கு எச்சரிக்கை கிடைக்கின்றது -
தந்தையை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.
மன்மனாபவ. இந்த வார்த்தை யையும் வியாசர் எழுதியுள்ளார்.
சம்ஸ்கிருதத்தில் பாபா புரிய வைக்கவில்லை. பாபாவோ இந்தியில்
தான் புரிய வைக்கிறார். குழந்தைகளுக்குச் சொல்கிறார்,
தந்தையையும் ஆஸ்தி யையும் நினைவு செய்யுங்கள் என்று. இது
எளிமையான வார்த்தை - குழந்தைகளே, தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். லௌகிகத் தந்தை இதுபோல் சொல்ல மாட்டார் -
குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள் என்று. இது புதிய விசயம்.
பாபா சொல்கிறார், குழந்தைகளே, நிராகார் தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். ஆன்மிகத் தந்தை ஆத்மாக்களாகிய நம்மோடு பேசுகிறார்
என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். தந்தையை நினைவு
செய்யுங்கள் என்று அடிக்கடி சொல்வது நன்றாக இருக்காது.
ஏனென்றால் குழந்தைகள் அறிவார்கள், ஆன்மிகத் தந்தையை நினைவு
செய்ய வேண்டியது நமது கடமை, அப்போது தான் நம்முடைய விகர்மங்கள்
விநாசமாகும். குழந்தை கள் நிரந்தரமாக நினைவு செய்வதற்கான
முயற்சி செய்ய வேண்டும். இச்சமயம் யாரும் நிரந்தரமாக நினைவு
செய்ய இயலாது. அதிக நேரம் பிடிக்கும். இந்த (பிரம்மா) பாபா சொல்
கிறார், என்னால் கூட நிரந்தரமாக நினைவு செய்ய முடிவதில்லை.
அந்த நிலை கடைசியில் தான் அமையும். குழந்தைகள் உங்கள் முதல்
புருஷார்த்தம் பாபாவை நினைவு செய்வதில் தான் இருக்க வேண்டும்.
சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. இது பாரதவாசிகளின்
விஷயம் தான். தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை நடைபெறுகின்றது. மற்ற
தர்மங்களை ஸ்தாபனை செய்பவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது.
அவர்கள் நமக்குப் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றனர். இங்கே
தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் யார் உள்ளனரோ, அவர்களை
ஞானத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இதில் முயற்சி
செய்ய வேண்டியுள்ளது. கீதை, பாகவத சாஸ்திரங்களில் தந்தை வந்து
சங்கமயுகத்தில் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார் என்பது சொல்லப்
படவில்லை. பாண்டவர்கள் மலைகள் மீது சென்று விட்டதாகவும் பிரளயம்
ஏற்பட்ட தாகவும் மற்றும் இது போன்ற பல விஷயங்கள் கீதையில்
எழுதப்பட்டுள்ளது. உண்மையில் இது போல் எதுவும் நடந்த தில்லை.
நீங்கள் இப்போது வரப்போகிற 21 பிறவிகளுக்காகப் படித்துக்
கொண்டிருக் கிறீர்கள். மற்றப் பாடசாலைகளில் இந்தப் பிறவிக்காக
மட்டுமே படிக்கின்றனர். சாது சந்நியாசி கள் அனைவருமே
வருங்காலத்திற்காகத் தான் கற்பிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள்
புரிந்து கொண்டுள்ளனர், நாம் சரீரத்தை விட்டு முக்திதாமம்
சென்று விடுவோம், பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று.
ஆத்மா பரமாத்மாவோடு சேர்ந்து விடும் என நினைக் கின்றனர். ஆக,
இதுவும் கூட வருங்காலத்திற்காக என்றாகிறது. ஆனால் வருங்காலத்
திற்காகக் கற்றுத் தருபவர் ஒரே ஓர் ஆன்மிகத் தந்தை மட்டுமே.
வேறு யாரும் கிடையாது. அனைவருக் கும் சத்கதி அளிப்பவர் ஒருவரே
என்று பாடப்பட்டும் உள்ளது. மற்ற அனைத்துமோ உண்மையல்லாத வையாக
ஆகி விடுகின்றன. அந்தத் தந்தை தான் வந்து புரிய வைக்கிறார்.
அவர்களும் சாதனை செய்து கொண்டே இருக்கின்றனர். பிரம்மத்தில்
ஐக்கியமாவதற்கான சாதனை தான் யதார்த்த மல்லாதது ஆகும். யாருமே
அது போல் ஐக்கியமாக முடியாது. பிரம்ம மகதத்துவம் ஒன்றும் பகவான்
கிடையாது. இவையனைத்தும் தவறாகும். பொய்யான கண்டத்தில் அனைவரும்
பொய் பேசுபவர்கள். சத்தியமான கண்டத்தில் அனைவரும் சத்தியத்தையே
பேசுபவர்கள். நீங்கள் அறிவீர்கள், உண்மையான கண்டம் பாரதத்தில்
இருந்தது. இப்போது பொய்யான கண்டம். பாபாவும் பாரதத்தில் தான்
வருகிறார். சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். ஆனால் சிவபாபா வந்து
பாரதத்தை உண்மையான கண்டமாக ஆக்கினார் என்பது அவர்களுக்குத்
தெரியாது. அவர் வருவதே இல்லை, பெயர் வடிவங் களுக்கு
அப்பாற்பட்டவர் என அவர்கள் நினைக்கின்றனர். பதித-பாவனர்,
ஞானக்கடல் என்று மகிமை மட்டும் பாடுகின்றனர். ஆக, இப்படியே
கிளிப்பிள்ளை போல் சொல்லி விடுகின்றனர். தந்தை தான் வந்து
புரிய வைக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர். கீதா
ஜெயந்தியும் உள்ளது. கிருஷ்ணர் வந்து கீதை சொன்னதாகச்
சொல்கின்றனர். சிவ ஜெயந்தி பற்றி யாருக்கும் தெரியாது, சிவன்
வந்து என்ன செய்கிறார் என்று. அதுவும் எப்படி வருவார் என்றும்
தெரியாது. ஏனென்றால் பெயர் வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் என்று
சொல்கின்றனர். தந்தை சொல்கிறார், நான் தான் அமர்ந்து
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறேன். பிறகு இந்த ஞானம் மறைந்து
போகும்.
தந்தை தாமே சொல்கிறார், நான் வந்து பாரதத்தை மீண்டும்
சொர்க்கமாக ஆக்குகிறேன். யாராவது ஒருவர் பதித-பாவனராக இருப்பார்
இல்லையா? முக்கியமாக பாரதத்தின் விஷயம் தான். பாரதம் தான்
பதித்தாக உள்ளது. பதித-பாவனரையும் பாரதத்தில் தான்
அழைக்கின்றனர். தாங்களே சொல்கின்றனர், உலகத்தில் சைத் தானின்
இராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது என்று. வெடிகுண்டுகள்
முதலியவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். அவற்றால்
விநாசம் நடைபெறப் போகின்றது. ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்
கின்றனர். அவர்கள் இராவணனால் தூண்டப் பட்டது போல் செய்து
கொண்டிருக்கின்றனர். இராவணனின் இராஜ்யம் எப்போது முடிவுக்கு
வரும்? பாரதவாசிகள் சொல்வார்கள், கிருஷ்ணர் வரும் போது முடிவு
வரும் என்று. நீங்கள் புரிய வைக்கிறீர்கள், சிவபாபா வந்தே
விட்டார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். பாபா
சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று. இந்த வார்த்தையை
வேறு யாரும் சொல்ல முடியாது. தந்தை தான் சொல்கிறார், என்னை
நினைவு செய்வீர்களானால் கறை நீங்கி விடும். நீங்கள் சதோபிர
தானமாக இருந்தீர்கள். இப்போது உங்களுடைய ஆத்மாவில் கறை
படிந்துள்ளது. அது நினைவின் மூலம் தான் நீங்கும். இது நினைவு
யாத்திரை எனச் சொல்லப் படுகின்றது. நான் தான் பதித-பாவன். என்னை
நினைவு செய்வதால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். இது யோக
அக்னி எனச் சொல்லப்படும். தங்கத்தை நெருப்பில் இட்டு அதிலுள்ள
கறையை நீக்குகின்றனர். பிறகு தங்கத்தில் அலாய்
சேர்ப்பதற்காகவும் நெருப்பில் இடுகின்றனர். பாபா சொல்கிறார்,
அது காமசிதை. இது ஞானச் சிதை. இந்த யோக அக்னியால் கறை நீங்கும்.
அப்போது நீங்கள் கிருஷ்ணபுரி செல்வதற்குத் தகுதியானவர்களாக ஆகி
விடுவீர்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரை அழைக்கின்றனர்.
நீங்கள் அறிவீர்கள், கிருஷ்ணருக் கும் பாபாவிடமிருந்து தான்
ஆஸ்தி கிடைக்கின்றது. கிருஷ்ணர் சொர்க்கத்தின் எஜமானராக
இருந்தார். பாபா கிருஷ்ணருக்கு இந்தப் பதவியைக் கொடுத்தார்.
இராதை-கிருஷ்ணர் தான் பிறகு லட்சுமி-நாராயணர் ஆகின்றனர்.
இராதை-கிருஷ்ணரின் ஜென்ம தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
லட்சுமி-நாராயணர் பற்றி யாருக்குமே தெரியாது. மனிதர்கள்
முற்றிலும் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது குழந்தைகள் நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் புரிய
வைக்க வேண்டும். முதல்-முதலில் கேட்க வேண்டும் - கீதையில் என்னை
மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று யார் சொன்னார்? அவர்கள்
கிருஷ்ணர் சொன்னதாகப் புரிந்து கொண்டுள்ளனர். நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், பகவான் நிராகார். அவரிடமிருந்து தான்
உயர்ந்த, அதாவது சிரேஷ்டமான வழிமுறை கிடைக் கின்றது.
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா தான். அவருடையது
தான் உயர்ந்ததிலும் உயர்வான வழிமுறையாகும். அந்த ஒருவரின்
ஸ்ரீமத் மூலமாகத் தான் அனைவருக்கும் சத்கதி கிடைக்கின்றது.
கீதையின் பகவான் என்று பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் கூடச்
சொல்ல முடியாது. அவர்கள் பிறகு சரீரதாரி கிருஷ்ணரைச் சொல்லி
விடுகின்றனர். ஆக, எங்கோ தவறு உள்ளது என்று இதிலிருந்து
உறுதியாகின்றது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இது
மனிதர்களுடைய மிகப் பெரிய தவறு என்று. இராஜ யோகத்தையோ தந்தை
கற்றுக் கொடுத்துள்ளார். அவர் தான் பதீத-பாவனர். மிகப்
பெரிய-பெரிய தவறுகள் என்னென்ன உள்ளனவோ அவற்றின் மீது அழுத்தம்
கொடுத்துச் சொல்ல வேண்டும். ஒன்று, ஈஸ்வரனை சர்வவியாபி எனச்
சொல்வது, இரண்டாவது கிருஷ்ணர் கீதையின் பகவான் எனச் சொல்வது,
கல்பத்தின் இலட்சக் கணக்கான வருடங்கள் எனச் சொல்வது - இவை மிகப்
பெரிய பிழைகளாகும். கல்பம் இலட்சக் கணக்கான வருடங்களோ இருக்க
முடியாது. பரமாத்மா சர்வ வியாபியாக இருக்க முடியாது. அவர்
பிரேரணை (தூண்டுதல்) மூலம் அனைத்தையும் செய்கிறார் எனச்
சொல்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. பிரேரணை மூலம் பாவனமாக்க
மாட்டார். இதுவோ பாபா அமர்ந்து நேரில் வந்து புரிய
வைக்கிறார்-என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். பிரேரணை என்ற
வார்த்தையே தவறானதாகும். சங்கரின் பிரேரணையினால் பாம்ஸ் (வெடி
குண்டுகள்) முதலியவற்றைத் தயாரிப்பதாகச் சொல்கின்றனர். ஆனால்
இவையனைத்தும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளன. இந்த யக்ஞத்தின்
மூலம் தான் விநாச ஜுவாலை எழுந்துள்ளது. பிரேரணை செய்வதில்லை.
இவையோ விநாசத்திற்காக நிமித்தமாகி உள்ளன. டிராமாவில் விதிக்கப்
பட்டுள்ளது. சிவபாபாவுக்குத் தான் இந்தப் பார்ட் முழுவதும்
உள்ளது. அவருக்குப் பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரின் பார்ட்
உள்ளது. பிரம்மா பிராமணர்களைப் படைக்கின்றார். அவர்கள் தான்
பிறகு விஷ்ணுபுரிக்கு எஜமானர் ஆகின்றனர். பிறகு 84 பிறவிச்
சக்கரத்தைச் சுற்றி வந்து நீங்கள் பிரம்மா வம்சத்தினராக
ஆகியிருக்கிறீர்கள். லட்சுமி-நாராயணர் தான் பிறகு
பிரம்மா-சரஸ்வதி ஆகின்றனர். இதுவும் புரிய வைக்கப் பட்டுள்ளது,
பிரம்மா மூலமாகத் தத்தெடுக்கிறார். அதனால் இவரைப் பெரிய அம்மா
எனச் சொல்கின்றனர். அவர் பிறகு நிமித்தமாக ஆகியிருக் கிறார்.
கலசம் மாதாக்களுக்குக் கொடுக்கப் படுகின்றது. அனைத்திலும்
பெரிய வீணை சரஸ்வதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்திலும்
புத்திசா-யானவர். மற்றப்படி வீணை அல்லது இசைக்கருவி முதலிய
எதுவும் கிடையாது. சரஸ்வதியின் ஞான முரளி நன்றாக இருந்தது.
அவரது மகிமை நன்றாக இருந்தது. பெயர்களோ அநேகம் வைத்து விட்டனர்.
தேவிகளுக்குப் பூஜை நடைபெறுகின்றது. நீங்கள் இப்போது அறிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் தான் இங்கே பூஜைக்குரியவர்களாக
ஆகிறோம். பிறகு பூஜாரி ஆகி தனக்கே பூஜை செய்வோம். இப்போது நாம்
பிராமணர்கள். பிறகு நாம் தான் பூஜைக் குரிய தேவி- தேவதை ஆவோம்.
இராஜா-ராணி எப்படியோ அப்படியே பிரஜைகளும் இருப்பார்கள்.
தேவிகளில் யார் உயர்ந்த பதவி பெறுகிறார் களோ, அவர்களுக்குக்
கோவில் களும் அநேகம் கட்டுகின்றனர். யார் நல்ல படியாகப்
படிக்கவும் கற்பிக்கவும் செய்கிறார் களோ, அவர்களுக்குத் தான்
பெயரும் புகழும் கிடைக்கின்றது. ஆக, இப்போது நீங்கள் அறிவீர்கள்,
பூஜைக்குரியவர்களாகவும் பூஜாரிகளாகவும் நாம் தான் ஆகிறோம்.
சிவபாபாவோ எப்போதுமே பூஜைக்குரியவராக இருக்கிறார்.
சூரியவம்சத்தினராக தேவி-தேவதை களாக யார் இருந்தார்களோ, அவர்கள்
பிறகு பக்தர்களாக ஆகின்றனர். தாங்களே பூஜாரி, தாங்களே
பூஜைக்குரியவர் என்ற ஏணிப்படி மிக நன்கு புரிய வைக்கின்றது.
சித்திரம் இல்லாமலும் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய
வைக்க முடியும். யார் கற்றுக் கொண்டு செல்கின்றனரோ, அவர்களின்
புத்தியில் முழு ஞானமும் உள்ளது. 84 பிறவிகளின் ஏணிப் படியில்
பாரதவாசிகள் ஏறவும் இறங்கவும் செய்கின்றனர். அவர்களுக்கு 84
பிறவிகள். பூஜைக்குரியவர்களாக இருந்தோம். பிறகு நாம் பூஜாரி
ஆனோம். ஹம் ஸோ, ஸோ ஹம் என்பதன் அர்த்தத்தையும் நீங்கள் நல்ல
விதமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாவே பரமாத்மா ஆக
முடியாது. பாபா ஹம் ஸோ ஸோ ஹம் என்பதன் பொருளைப் புரிய
வைத்துள்ளார். நாம் தான் தேவதையாக இருந்தோம், நாம் தான்
சத்திரியராக ஆனோம்...... ஹம் ஸோ என்பதற்கு வேறு எந்த ஓர்
அர்த்தமும் கிடையாது. பூஜைக்குரியவர்களாகவும், பூஜாரிகளாகவும்
பாரதவாசிகள் தாம் ஆகின்றனர்.வேறு தர்மங்களில் யாரும்
பூஜைக்குரியவர் களாகவும் பூஜாரிகளாகவும் ஆவதில்லை. நீங்கள் தான்
சூரியவம்சம், சந்திரவம்சத்தினராக ஆகிறீர்கள். எவ்வளவு நல்ல
ஞானம் கிடைத்துள்ளது! நாம் தான் தேவி-தேவதைகளாக இருந்தோம். நாம்
ஆத்மாக்கள் நிர்வாண்தாமத்தில் வசிப்பவர்கள். இந்தச் சக்கரம்
சுற்றிக் கொண்டே உள்ளது. எப்போது துக்கத்தை எதிர்கொள்ள
வேண்டிருக் கின்றதோ,, அப்போது தந்தையை நினைவு செய்கின்றனர்.
தந்தை சொல்கிறார், நான் துக்கத்தின் சமயத்தில் தான் வந்து
சிருஷ்டியை மாற்றுகிறேன். புதிய சிருஷ்டியைப் படைக்கிறேன் என்ப
தில்லை. பழையதைப் புதியதாக ஆக்குவதற்காக நான் வருகிறேன். பாபா
வருவதே சங்கம யுகத்தில் தான். இப்போது புதிய உலகம் உருவாகிக்
கொண்டிருக்கிறது. பழைய உலகம் அழிந்துவிடப் போகிறது. இது
எல்லையற்ற விஷயமாகும்.
நீங்கள் தயாராகி விட்டீர்களானால் முழு இராஜதானியும் தயாராகி
விடும். கல்ப-கல்பமாக யார் என்ன பதவி அடைந்தார்களோ, அதன்
அனுசாரம் புருஷார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
டிராமாவில் என்ன புருஷார்த்தம் செய்திருக்கிறோமோ, அது நடக்கும்
என்பதில்லை. புருஷார்த்தம் செய்ய வேண்டியுள்ளது. பிறகு சொல்லப்
படுகின்றது, கல்பத் திற்கு முன்பும் இது போல் புருஷார்த்தம்
செய்திருக்கிறோம். எப்போதுமே புருஷார்த்தம் முக்கியமாக
கூறப்படுகின்றது. பலன் கிடைக்கும் என்று சும்மா அமர்ந்துவிடக்
கூடாது. புருஷார்த்தம் இல்லாமல் பலன் கிடைக்க முடியாது.
புருஷார்த்தம் செய்யாமல் தண்ணீர் கூட அருந்த இயலாது. கர்ம
சந்நியாசம் என்ற சொல் தவறானதாகும். பாபா சொல்கிறார், இல்லற
விவகாரங்களிலும் இருங்கள். பாபா அனை வரையுமே இங்கே இருக்க
வைக்கவும் மாட்டார். சரணாகதி பாடப் பட்டுள்ளது. பட்டி நடக்க
வேண்டும் என இருந்தது. ஏனென்றால் அவர்கள் தொந்தரவு செய்யப்
பட்டார்கள். ஆக, வந்து பாபாவிடம் சரணடைந்தார்கள். அடைக்கலமோ தர
வேண்டும் இல்லையா? ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவிடம் தான் சரணடைய
வேண்டி உள்ளது. குரு முதலானவர்களிடம் சரணடை வதில்லை. எப்போது
அதிக துக்கம் ஏற்படுகிறதோ, அப்போது சலிப்படைந்து வந்து சரணடை
கின்றனர். குருமார் களிடம் யாரும் சலிப்படைந்து போவதில்லை.
அங்கோ அப்படியே (சரணடைவது என்றில்லாமல்) சென்று விடுகின்றனர்.
நீங்கள் இராவணனிடம் அதிக சலிப்படைந் திருக்கிறீர்கள். இப்போது
இராவணனிடமிருந்து விடுவிப்பதற்கு இராம் வந்து விட்டார். அவர்
உங்களை அடைக்கலமாக ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் சொல்கிறீர்கள்,
பாபா, நாங்கள் உங்களுடையவர்கள். இல்லற விவகாரங்களில்
இருந்தாலும் சிவபாபாவிடம் சரணடைந் துள்ளோம். பாபா, நாங்கள்
உங்களுடைய வழிமுறைப்படியே நடப்போம்.
பாபா ஸ்ரீமத் தருகிறார் - இல்லறத்தில் இருந்து கொண்டே என்னை
நினைவு செய்யுங் கள். மற்ற அனைவரின் நினைவையும் விட்டு
விடுங்கள். என்னை நினைவு செய்வதன் மூலம் தான் விகர்மங்கள்
விநாசமாகும். வெறுமனே சரணடைவதற்கான விஷயம் கிடையாது. எல்லாமே
நினைவின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாபாவைத் தவிர வேறு யாரும்
இது போல் புரிய வைக்க முடியாது. குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர், பாபாவிடம் இத்தனை இலட்சம் பேர் எங்கே வந்து
இருப்பார்கள்? பிரஜைகளும் கூட அவரவர் வீட்டில் இருப்பார்கள்.
இராஜாவிடம் வந்து இருக்க மாட்டார்கள். ஆக, ஒருவரை நினைவு
செய்யுங்கள் என்று மட்டும் உங்களுக்குச் சொல்லப்படு கின்றது.
பாபா நாங்கள் உங்களுடையவர்கள். நீங்கள் தான் விநாடியில்
சத்கதியின் ஆஸ்தி அளிப்பவர். இராஜ யோகத்தைக் கற்பித்து
இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜா ஆக்குகிறீர்கள். பாபா சொல்கிறார்,
யார் கல்பத்திற்கு முன் பாபாவிடம் ஆஸ்தி பெற்றார்களோ, அவர்கள்
தான் வந்து பெற்றுக் கொள்வார்கள். கடைசி வரை அனைவரும் வந்து
பாபாவிடம் ஆஸ்தி பெற்றாக வேண்டும். இப்போது நீங்கள் பதித்தாக
இருக்கும் காரணத்தால் தங்களை தேவதை எனச் சொல்லிக் கொள்ள
முடியாது. பாபா அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். பாபா
சொல்கிறார் - என்னுடைய கண்ணின் மணிகளே, நீங்கள் சத்யுகத்தில்
வரும் போது 01-01 இல் (சகாப்தம் ஆரம்பம்) இராஜ்யம் செய்வீர்கள்.
மற்றவர்களுக்கோ, எப்போது எண்ணிக்கையில் அதிக மாகிறார்களோ,
இலட்சக் கணக்கில் ஜனத்தொகை ஆகின்றதோ, அப்போது இராஜ்யம்
நடைபெறும். நீங்கள் சண்டையிடுவதற்கான தேவை கிடையாது. நீங்கள்
யோகபலத்தினால் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள். அமைதியாக
இருந்து பாபாவையும் ஆஸ்தியையும் மட்டும் நினைவு செய்யுங்கள்.
கடைசியில் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். பிறகு இந்தச்
சித்திரங்கள் முதலியவை பயன்படாது. நீங்கள் புத்திசா- ஆகி
விடுவீர்கள். பாபா சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்வதால்
விகர்மங்கள் விநாசமாகி விடும். இப்போது செய்வதோ,
செய்யாமலிருப்பதோ உங்கள் விருப்பம். எந்த ஒரு தேகதாரியின் பெயர்
வடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. பாபாவை நினைவு
செய்வீர்களானால் அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். நீங்கள் என்னிடம்
வந்து விடுவீர்கள். முழுத் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு இராஜ்யம்
கிடைக்கும். அனைத்தும் நினைவு யாத்திரையின் ஆதாரத்தில் உள்ளது.
இன்னும் போகப் போக புதியவர்களும் கூட மிகவும் முன்னேறிச் சென்று
கொண்டிருப் பார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்த ஒரு தேகதாரியின் பெயர் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளக்
கூடாது. ஒரு தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து சத்கதி அடைய வேண்டும்.
அமைதியாக இருக்க வேண்டும்.
2) வருங்கால 21 பிறவிகளுக்காக நல்லபடியாகப் படிக்கவும்
மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் வேண்டும்.
வரதானம்:
தன் மனவழி, பிறர் வழி விடுத்து ஸ்ரீமத்படி நடந்து ஒவ்வொரு
அடியிலும் பன்மடங்கு வருமானம் சேமிப்பு செய்து பத்மாபதம்
பாக்கியசாலி ஆகுக
ஸ்ரீமத் வழி நடப்பவர்கள் ஒரு எண்ணத்தாலும் தன் மனவழி, பிறர்
வழியில் நடக்க முடியாது. மனோ நிலையின் சேவைகம் விரைவாக
இல்லையெனில் ஸ்ரீமத்தில் ஏதோ கலப்படம் இருப்ப தாகும். மனவழி
என்பது இடைகால சம்ஸ்காரத்தின் வசமாகி எழும் எண்ணம் மனனோ நிலையை
பேதளிக்கச் செய்கின்றது. எனவே சோதனை செய்யுங்கள், செய்ய
வையுங்கள். ஒரு அடி கூட ஸ்ரீமத் இன்றி இருக்கக்கூடாது. அப்போதே
ஒவ்வொரு அடியிலும் வருமானம் சேமித்து பன்மடங்கு பாக்கியசாலி
ஆவீர்கள்.
சுலோகன்:
மனதில் அனைவர் பொருட்டும் நன்மைக்கான உயர்ந்த எண்ணம் கொள்க.
இதுவே விஷ்வ கல்யாணகாரி ஆத்மாவின் செயலாகும்.
அவ்யக்த சமிக்ஞை: நிச்சயத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி
எப்பொழுதும் பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
சூழ்நிலைகள் எவ்விதமாக இருந்தாலும், நம்பிககை உள்ள குழந்தைகள்
தனது மனோ நிலையின் சக்தியால் என்றென்றும் வெற்றியை அனுபவம்
செய்வார்கள். உககினரோ, பிராமண குடும்பத்த வரோ, உற்றார் உறவினரோ
பிறர் உங்களைப் பார்த்து இவர் தோற்றுப் போனார் என்றாலும் அது
தோல்வி அல்ல. வெற்றியே. எந்த ஒரு சேவையோ குழுவோ இயற்கையோ எந்த
இன்னலும் தன் மனதின் உயர் நிலையை தடுமாறச் செய்தால் இதுவும்
பந்தன் முக்த் நிலை ஆகாது. இந்த பந்தனத்திலிருந்தும் விடுபடுக.