24-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! வீட்டிற்கான வழி கூறுவதற்காக தந்தை வந்திருக்கின்றார், நீங்கள் ஆத்ம அபிமானியாகி இருந்தால் இந்த வழியை எளிதாக பார்க்க முடியும்.

கேள்வி:
சத்யுக தேவதைகள் மோகத்தை வென்றவர்கள் என்று கூறப்படுமளவிற்கு சங்கமத்தில் எந்த ஞானம் அடைந்திருந்தனர்?

பதில்:
சங்கமத்தில் தந்தை உங்களுக்கு அமரக் கதையை கூறி அழிவற்ற ஆத்மாவின் ஞானத்தை கொடுத்திருக்கின்றார். இது அழிவற்ற, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம், ஒவ்வொரு ஆத்மா வும் அவரவர்களது நடிப்பை நடிக்கின்றனர், அது ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது, இதில் அழுவதற்கான விசயம் ஏதுமில்லை என்ற ஞானம் கிடைத்திருக்கிறது. இந்த ஞானத்தின் மூலம் தான் சத்யுக தேவதைகள் மோகத்தை வென்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அங்கு மரணத்தின் பெயர் கிடையாது. பழைய சரீரத்தை குஷியாக விடுத்து புதியதை எடுப்பர்.

பாடல்:
பார்வையற்றவர்களுக்கு வழி காட்டுங்கள் ......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை கூறுகின்றார் - நான் வழி காண்பிக்கின்றேன், ஆனால் முத-ல் தன்னை ஆத்மா என்ற நம்பிக்கை யுடன் அமருங்கள். ஆத்ம அபிமானியாகி அமர்ந்தால் உங்களுக்கு வழியை எளிதாகப் பார்க்க முடியும். பக்தி மார்க்கத்தில் அரைக் கல்பம் ஏமாற்றம் அடைந்தீர்கள். பக்தி மார்க்கத்தில் பல சடங்குகள் உள்ளன. எல்லையற்ற தந்தை ஒரே ஒருவர் தான் என்பதை இப்பொழுது தந்தை புரிய வைத்திருக்கின்றார். நான் உங்களுக்கு வழி கூறிக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறு கின்றார். எதற்கான வழியை கூறுகின்றார்? என்பதும் உலகத்தினருக்குத் தெரியாது. முக்தி- ஜீவன் முக்தி, கதி-சத்கதிக்கான வழி. சாந்திதாமம் தான் முக்தி என்று கூறப்படுகிறது. ஆத்மா சரீரமின்றி எதுவும் பேச முடியாது. கர்மேந்திரி யங்களின் மூலம் தான் ஓசைகள் ஏற்படுகிறது, வாயின் மூலம் சப்தங்கள் ஏற்படுகிறது. வாய் இல்லையெனில் பிறகு சப்தங்கள் எங்கிருந்து வரும்! காரியங்கள் செய்வதற்காகத் தான் ஆத்மாவிற்கு இந்த கர்மேந்திரியங்கள் கிடைத்திருக்கிறது. இராவண இராஜ்யத்தில் நீங்கள் பாவ காரியங்கள் செய்கிறீர்கள். இந்த பாவ காரியங்கள் அழுக்கான காரியங் களாக ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் இராவணனே இல்லையெனும் பொழுது காரியங்கள் அகர்ம மாக ஆகிவிடு கிறது. அங்கு 5 விகாரங்கள் இருக்கவே இருக்காது. அது தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பாரதவாசிகள் சொர்க்கவாசிகளாக இருந்தனர். இப்பொழுது நரகவாசிகள் என்று கூறப்படுகின்றனர். விஷக் கட-ல் மூழ்கி ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். அனை வரும் ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக் கின்றனர். எங்கு துக்கத்தின் பெயரே கிடையாதோ பாபா, அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இப்பொழுது கூறுகிறீர்கள். எப்பொழுது பாரதம் சொர்க்கமாக இருந்ததோ அப்பொழுது துக்கத்தின் பெயரே இல்லாமல் இருந்தது. சொர்க்கத்தி-ருந்து நரகத்திற்கு வந்தீர்கள், இப்பொழுது மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இது விளையாட் டாகும். தந்தை தான் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். உண்மையிலும் உண்மையான சத்சங்கம் இது தான். நீங்கள் இங்கு சத்தியமான தந்தையை நினைவு செய்கிறீர்கள், அவர் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். அவர் படைப்பவர் ஆவார், அவர் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது. தந்தை தான் குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப் பார். எல்லைக்குட்பட்ட தந்தையும் கூட ஹே பகவான்! ஹே பரம்பிதா பரமாத்மா! கருணை காட்டுங்கள் என்று கூறுகின்றனர். இதை தந்தை தான் கொடுக்க முடியும், அதுவும் 21 பிறவிகளுக்கு. கணக்குப் பார்க்க வேண்டும். சத்யுகத்தில் இவரது (லட்சுமி-நாராயணன்) இராஜ்யம் இருந்த பொழுது நிச்சயமாக குறைந்த மனிதர்கள் தான் இருப்பர். ஒரு தர்மம் மட்டுமே இருந்தது, ஒரே இராஜ்யம் மட்டுமே இருந்தது. அது தான் சொர்க்கம், சுகதாமம் என்று கூறப்பட்டது. புது உலகம் சதோபிர தானம் என்று கூறப்படுகிறது, பழைய உலகை தமோபிரதானம் என்று கூறுகிறோம். ஒவ்வொரு பொருளும் முத-ல் சதோபிரதானமாக இருக்கும், பிறகு சதோ, ரஜோ, தமோ நிலையடைகிறது. சிறிய குழந்தையை சதோபிரதானம் என்று கூறலாம். சிறிய குழந்தை மகாத்மாவை விட உயர்ந்தது என்று கூறப்படுகிறது. மகாத்மாக்கள் பிறந்து, பெரியவர்களாகி விகாரத்தின் அனுபவம் செய்த பிறகு தான் வீட்டை விட்டு செல்கின்றனர். சிறிய குழந்தைகளுக்கு விகாரம் என்றால் என்னவென்றே தெரியாது. முற்றிலும் கள்ளங்கபடமற்றவர்களாக இருக்கின்றனர். அதனால் தான் மகாத்மாவை விட உயர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றனர். அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் ...... என்று தேவதைகளுக்கு மகிமை செய்கின்றனர். இந்த மகிமை ஒருபொழுதும் சாதுக்களுக்கு கூறுவது கிடையாது. இம்சை மற்றும் அகிம்சைக்கான பொருளை தந்தை புரிய வைத்திருக்கின்றார். மற்றவர்களை துன்புறுத்துவது இம்சை என்று கூறப்படுகிறது. அனைத்தையும் விட மிகப் பெரிய இம்சை காமத்தில் செல்வதாகும். தேவதைகள் மற்றவர்களுக்கு இம்சை தருபவர்கள் கிடையாது. காம விகாரத்தில் செல்வது கிடையாது. உங்களை மனிதனி-ருந்து தேவதைகளாக ஆக்குவதற்காக நான் வந்திருக் கிறேன் என்று தந்தை கூறுகின்றார். தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். இங்கு யாரும் தன்னை தேவதை என்று கூறிக் கொள்ள முடியாது. நாம் கீழானவர்கள், பாவிகள், விகாரிகள் என்று நினைக்கின்றனர். பிறகு தன்னை எப்படி தேவதைகள் என்று கூறிக் கொள்ள முடியும்? அதனால் தான் இந்து தர்மம் என்று கூறி விட்டனர். உண்மையில் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இந்து என்பது இந்துஸ்தானி-ருந்து உருவானது. அவர்கள் இந்து தர்மம் என்று கூறிவிட்டனர். நாம் தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் என்று நீங்கள் கூறினாலும் இந்துக்கள் என்று கூறிவிடுவர். எங்களிடம் இந்து என்று குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் மட்டும் தான் இருக்கிறது என்று கூறுவர். பதீதமாக இருக்கின்ற காரணத்தினால் தன்னை தேவதை என்று கூறிக் கொள்ள முடியாது.

நாம் பூஜைக்குரிய தேவி தேவதைகளாக இருந்தோம், இப்பொழுது பூஜாரிகளாக இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பூஜையும் முத-ல் சிவனுக்குத் தான் செய்தீர்கள், பிறகு கலப்பட பூஜாரிகளாக ஆகிவிட்டீர்கள். தந்தை ஒருவர் தான், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. மற்றபடி தேவதைகள் பலர் இருக்கின்றனர். அவர்களிட மிருந்து எந்த ஆஸ்தியும் கிடைப்பது கிடையாது. இந்த பிரம்மாவிடமிருந்தும் உங்களுக்கு ஆஸ்தி எதுவும் கிடைக்காது, ஒருவர் நிராகார தந்தை, மற்றொருவர் சாகார தந்தை. சாகார தந்தை இருந்தாலும் கூட ஹே பகவான்! ஹே பரம்பிதா! என்று கூறிக் கொண்டே இருக்கிறீர்கள். லௌகீகத் தந்தையை இவ்வாறு கூறமாட்டீர்கள். ஆக ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. கணவன் மற்றும் மனைவி இருவரும் பங்குதாரர்களாக (பார்ட்னர்) இருந்தால் அவருக்கு பாதி பங்கு கிடைக்க வேண்டும். முதல் பாதி அவருக்காக ஒதுக்கி வைத்து விட்டு பிறகு தான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய நாட்களில் குழந்தைகளுக்கே முழு செல்வமும் கொடுத்து விடுகின்றனர். சிலருக்கு அதிகமான மோகம் இருக்கிறது. நாம் இறந்த பின்பு குழந்தைகள் தான் உரிமை யாளர்களாக இருப்பர் என்று நினைக் கின்றனர். இன்றைய நாட்களில் தந்தை இறந்த பின்பு தாயை கவனிப்பதும் கிடையாது. சிலர் தாயன்பு உடையவர்களாக இருக்கின்றனர், சிலர் தாய்க்கு துரோகம் செய்பவர்களாக இருக் கின்றனர். இன்றைய நாட்களில் பலர் தாய்க்கு துரோகம் செய்பவர்களாகத் தான் இருக்கின்றனர். அனைத்து செல்வங்களையும் அபகரித்து சென்று விடுகின்றனர். நல்ல தர்மத்தில் உள்ள குழந்தை களிலும் சிலர் அவ்வாறு அதிகம் தொந்தரவு செய்பவர்களாக ஆகிவிடுகின்றனர். இப்பொழுது குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்! பாபா, எமக்கு சுகத்திற்கான, எங்கு அமைதி இருக்குமோ அதற்கான வழி கூறுங்கள் என்று கூறுகிறீர்கள். இராவண இராஜ்யத்தில் சுகம் இருக்கவே முடியாது. சிவன் வேறு, சங்கர் வேறு என்பதைக் கூட பக்தி மார்க்கத்தில் புரிந்து கொள்வது கிடையாது. தலை வணங்கிக் கொண்டே இருங்கள், சாஸ்திரம் படித்துக் கொண்டே இருங்கள், அவ்வளவு தான். நல்லது, இதனால் என்ன கிடைக்கும்? என்பது தெரியாது. அனைவருக்கும் அமைதி கொடுக்கும், சுகத்தின் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். சத்யுகத்தில் சுகமும் இருக்கும், அமைதியும் இருக்கும். பாரதத்தில் சுகம், சாந்தி இருந்தது. இப்பொழுது கிடையாது. ஆகையால் பக்தி செய்து செய்து ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வபவர் ஒரே ஒரு தந்தை தான் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பாபா, நாங்கள் உங்களை மட்டுமே நினைவு செய்வோம், உங்களிடமிருந்து ஆஸ்தி அடைவோம். தேக சகிதமாக தேகத்தின் அனைத்து சம்மந்தங்களை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா இங்கேயே தூய்மையாக ஆக வேண்டும். நினைவு செய்ய வில்லையெனில் பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். பதவியும் குறைந்து விடும். அதனால் தான் நினைவிற்கான முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாக்களுக்கு புரிய வைக்கின்றார். ஹே ஆன்மீகக் குழந்தைகளே! என்று அழைக்கக்கூடிய சத்சங்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. இது ஆன்மீக ஞானம், இது ஆன்மீகத் தந்தையிடமிருந்து தான் குழந்தை களுக்குக் கிடைக்கிறது. ஆத்மா என்றால் நிராகாரமானது. சிவனும் நிராகாரமானவர் அல்லவா! உங்களது ஆத்மாவும் பிந்துவானது, மிகவும் சிறியதாக இருக்கிறது. அதை யாரும் தெய்வீகப் பார்வையின்றி பார்க்க முடியாது. தெய்வீகப் பார்வையை தந்தை தான் கொடுக்கின்றார். பக்தர்கள் அமர்ந்து விநாயகர், ஹனுமான் போன்றவர்களை பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். அவர் களுக்கு அந்த சாட்சாத்காரம் எப்படி ஏற்படும்? தெய்வீகப் பார்வை கொடுக்கும் வள்ளல் நான் தான் என்று தந்தை கூறுகின்றார். யார் அதிகமாக பக்தி செய்கிறார் களோ அவர்களுக்கு நான் தான் சாட்சாத்காரம் செய்விக்கிறேன். ஆனால் இதனால் எந்த லாபமும் கிடையாது. குஷியடைந்து விடுகின்றனர், அவ்வளவு தான். இருப்பினும் பாவங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர், பலனாக அடைவது எதுவும் கிடையாது. படிப்பு படிக்காமல் எதுவும் அடைந்து விட முடியாது. தேவதைகள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்கள் ஆவர். நீங்களும் அவ்வாறு ஆக வேண்டும் அல்லவா! மற்றபடி அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாட்சாத்காரம் ஆகும். உண்மையில் கிருஷ்ணருடன் ஊஞ்சலாடுங்கள், சொர்க்கத்தில் அவருடன் இருங்கள். அது படிப்பில் தான் இருக்கிறது. எந்த அளவிற்கு ஸ்ரீமத் படி நடப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடை வீர்கள். பகவானால் கூறப்பட்டதை தான் ஸ்ரீமத் என்று கூறப்பட்டிருக்கிறது. கிருஷ்ணரின் ஸ்ரீமத் என்று கூறுவது கிடையாது. பரம்பிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் மூலம் கிருஷ்ணரின் ஆத்மா இந்த பதவி அடைந்திருக்கிறது. உங்களது ஆத்மாவும் தேவதா தர்மத்தில் இருந்தது, அதாவது கிருஷ்ணரின் பூமியில் இருந்தது. இராதை கிருஷ்ணர் தங்களுக்குள் என்ன உறவுடன் இருக்கின்றனர்? என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. இருவரும் தனித்தனியான இராஜ்யத்தில் இருந்தனர். சுயம் வரத்திற்குப் பிறகு லெட்சுமி நாராயணனாக ஆகின்றனர். இவையனைத்து விசயங்களையும் தந்தை வந்து தான் புரிய வைக்கின்றார். சொர்க்கத்தின் இளவரசர், இளவரசி ஆவதற்காகத் தான் நீங்கள் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இளவரசர், இளவரசிக்கு சுயம்வரம் ஆன பின்பு பெயர் மாறி விடும். ஆக தந்தை குழந்தைகளை இவ்வாறு தேவதைகளாக ஆக்குகின்றார். ஆனால் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நீங்கள் வாய்வழிவம்சத்தினர்களாக இருக்கிறீர்கள், அவர்கள் விகார வம்சத்தினர்கள். அந்த பிராமணர்கள் காமச் சிதையில் அமரச் செய்வதற்கான தா- கயிற்றை கட்டச் செய்கின்றனர். ஆக அதை விட வேண்டியிருக்கும். இந்த காலத்து குழந்தைகள் சண்டை சச்சரவுகளில் சென்று முழு செல்வத்தையும் வீணாக்கி விடு கின்றனர். இன்றைய நாட்களில் உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. அனைத்தையும் விட மிக மோசமான நோய் சினிமா ஆகும். நல்ல குழந்தைகளும் சினிமாவிற்குச் செல்வதால் கெட்டு விடு கின்றனர். ஆகையால் பி.கு.-கள் சினிமா செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. யார் உறுதியானவர்களாக இருக்கிறார்களோ, நீங்கள் அங்கும் சென்று சேவை செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். இது எல்லைக்குட்பட்ட சினிமா என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். இது எல்லையற்ற சினிமா ஆகும். எல்லையற்ற சினிமாவின் மூலம் தான் இந்த எல்லைக்குட்பட்ட பொய்யான சினிமா உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆத்மாக்கள் வசிக்குமிடம் மூலவதனம், பிறகு இடையில் இருப்பது சூட்சுமவதனம் என்பதை இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றார். இது சாகார வதனமாகும். விளையாட்டு அனைத்தும் இங்கு தான் நடைபெறுகிறது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆக வேண்டும், தேவதைகள் அல்ல. ஆனால் பிராமணர்களுக்கு இந்த அலங்காரம் கொடுக்கப்படுவது கிடையாது. ஏனெனில் முயற்சியாளர்களாக இருக்கின்றனர். இன்று நன்றாக நடந்து கொண்டிருக் கின்றனர், நாளை விழுந்து (வழிமாறி) விடுகின்றனர். ஆகையால் தேவதைகளுக்கு கொடுத்து விட்டனர். சுயதரிசன சக்கரத்தின் மூலம் கிருஷ்ணர் அகாசுரன், பகாசுரன் போன்ற அசுசுர்களை அழித்ததாக காண்பிக்கின்றனர். அவர் (மிக உயர்ந்த தேவதைகளில்) அகிம்சா பரமோதர்மத்தைச் சார்ந்தவர் என்று கூறப்படும் பொழுது எப்படி இம்சை செய்ய முடியும்? இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சடங்குகளாகும். எங்கு சென்றாலும் சிவ-ங்கம் இருக்கும். பெயர்கள் மட்டும் தனித் தனியாக வைத்து விட்டனர். மண்ணால் செய்யப்பட்ட தேவிகளை (சிலைகளை) எவ்வளவு உருவாக்குகின்றனர்! அலங்காரம் செய்கின்றனர், ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். உருவாக்குகின்றனர், பூஜை செய்கின்றனர், பாலனை செய்கின்றனர், பிறகு (கட-ல்) கரைத்து விடு கின்றனர். பொம்மை பூஜைக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்! பலன் அடைவது எதுவும் கிடையாது. இவையனைத்தும் பணத்தை வீணாக்கும் பக்தி என்று தந்தை கூறுகின்றார், ஏணியில் இறங்கியே வந்தீர்கள். தந்தை வருகின்றார் எனில் அனைவருக்கும் முன்னேறும் கலை ஏற்படுகிறது. அனைவரையும் சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பணத்தை செல வழிக்கும் விசயம் கிடையாது. பக்தியில் நீங்கள் பணம் செலவு செய்து செய்து ஏழைகளாக ஆகி விட்டீர்கள். செல்வந்தர், ஏழை ஆவதற்கான கதையை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். நீங்கள் இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யத்தில் இருந்தீர்கள் அல்லவா! இப்பொழுது நீங்கள் நரனி-ருந்து நாராயணன் ஆவதற்கான கல்வியை தந்தை கொடுக்கின்றார். அவர்கள் தீஸ்ரி கதை (மூன்றாவது ஞானம் என்ற கண் கொடுக்கும் கதை) அமரக் கதையை கூறுகின்றனர். அனைத்தும் பொய்யானது ஆகும். தீஸ்ரியின் கதை இதுவாகும். இதன் மூலம் ஆத்மாவிற்கு ஞானம் என்ற மூன்றாவது கண் திறக்கப்படுகிறது. முழு சக்கரமும் புத்தியில் வந்து விடுகிறது. உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துக் கொண்டிருக்கிறது, அமரக் கதையையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அமரர் பாபா உங்களுக்கு கதை கூறிக் கொண்டிருக்கின்றார், அமரபுரிக்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். அங்கு நீங்கள் ஒருபொழுதும் மரணம் அடைய மாட்டீர்கள். இங்கு மனிதர்களுக்கு காலனைப் பற்றிய பயம் எவ்வளவு இருக்கிறது! அங்கு பயப்படுவதற்கான, கண்ணீர் விடுவதற்கான விசயம் கிடையாது. பழைய சரீரத்தை குஷியாக விடுத்து புதியதை எடுப்பீர்கள். இங்கு மனிதர்கள் எவ்வளவு கண்ணீர் வடிக்கின்றனர்! இது அழுது கொண்டிருக்கும் உலகம் ஆகும். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும் என்று தந்தை கூறுகின்றார். ஒவ்வொருவரும் அவரவர்களது நடிப்பை நடித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த தேவதைகள் மோகத்தை வென்றவர்கள் அல்லவா! இங்கு உலகில் பல குருக்கள் உள்ளனர், அவர்களிடமிருந்து பல வழி முறைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரின் வழிமுறையும் தனிப்பட்டதாக இருக்கிறது. சந்தோஷி தேவிக்கும் பூஜை நடை பெறுகிறது. சந்தோஷி தேவி உண்மையில் சத்யுகத்தில் தான் இருக்க முடியும். இங்கு எப்படி இருக்க முடியும்? சத்யுகத்தில் தேவதைகள் எப்பொழுதும் திருப்தியாக இருப்பார்கள். இங்கு ஏதாவது ஆசையுடன் இருக்கின்றனர். அங்கு எந்த ஆசையும் இருக்காது. தந்தை அனைவரையும் திருப்திபடுத்தி விடுகின்றார். நீங்கள் பல மடங்கு செல்வந்தர் களாக ஆகிவிடுகிறீர்கள். கவலைப்படும் அளவிற்கு எந்த பொருளிலும் குறை இருக்காது. அங்கு கவலையே இருக்காது. அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் நான் தான் என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்கு குஷியோ குஷி கொடுக்கிறேன். இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் உங்களது பாவங்கள் அழிந்து போகும், மேலும் நீங்கள் சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதிகமாக புரிய வைப்பீர்களோ அந்த அளவிற்கு பிரஜைகள் உருவாகிக் கொண்டே செல்வார்கள் மற்றும் உயர்ந்த பதவி அடை வீர்கள். இது சாது போன்றவர்களின் கதை அல்ல. பகவான் அமர்ந்து இவரது வாயின் மூலம் புரிய வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் திருப்தியான தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். சதா தூய்மையாக இருப்பதற்கான விரதம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பாவன உலகிற்குச் செல்ல வேண்டுமெனில் தூய்மை இழந்தவர் ஆகக் கூடாது. தந்தை இந்த விரதத்தை கற்றுக் கொடுத்திருக்கின்றார். மனிதர்கள் பல வகையான விரதங்களை உருவாக்கி விட்டனர். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒரு தந்தையின் வழிப்படி நடந்து சதா திருப்தியாக இருந்து திருப்தியான தேவி (சந்தோஷி தேவி) ஆக வேண்டும். இங்கு எந்த ஆசையும் இருக்கக் கூடாது. தந்தையிடமிருந்து அனைத்து பிராப்திகளையும் அடைந்து பல மடங்கு செல்வந்தர்களாக ஆக வேண்டும்.

2) அனைத்தையும் விட மிகவும் அசுத்தமானவர்களாக ஆக்கக் கூடியது சினிமா. சினிமா பார்ப்பதற்கு உங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. துணிவுள்ள நீங்கள் புத்திசா-களாகி எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லையற்ற சினிமாவின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சேவை செய்யுங்கள்.

வரதானம்:
முயற்சி மற்றும் சேவையில் விதிப்பூர்வமாக விருத்தி அடையக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

பிராமணன் என்றால் விதிப்பூர்வமான வாழ்க்கை. எந்த ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் விதிப்படி செய்ய வேண்டும். எந்த ஒரு விசயத்திலும் அது சுய முயற்சியாக இருக்கலாம் அல்லது சேவையில் விருத்தி ஏற்படவில்லை எனில் அவசியம் ஏதாவது ஒரு விதியில் குறை இருக்கிறது. ஆகையால் சோதனை செய்யுங்கள் - அமிர்தவேளையி-ருந்து இரவு வரை எண்ணம்-சொல்-செயல் அல்லது சம்பந்தம் விதிப் பூர்வமாக இருந்ததா? அதாவது விருத்தி ஏற்பட்டதா? ஒருவேளை ஏற்படவில்லை எனில் அதற்கான காரணம் யோசித்து நிவாரணம் செய்யுங்கள், பிறகு மனம் உடைந்து போக மாட்டீர்கள். விதிப்பூர்வமான வாழ்க்கை இருக்கிறது எனில் அவசியம் விருத்தி ஏற்படும் மற்றும் தீவிர முயற்சியாளர் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
தூய்மை மற்றும் சத்தியத்தில் நிறைந்தவர்களாக ஆவது தான் உண்மையான பவித்திரதா ஆகும்.

அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.

எங்கு வார்த்தைகளின் மூலம் ஒரு காரியம் வெற்றி அடையவில்லையோ - வார்த்தைகளின் மூலம் புரிந்து கொள்ளமாட்டார்கள், மாறாக சுப பாவனை மூலம் மாறி விடுவார்கள் என்று கூறுவர். எங்கு வார்த்தைகள் காரியத்தில் வெற்றியாக்க முடியவில்லையோ, அங்கு அமைதி சக்தியின் சாதனமாகிய சுப சங்கல்பம், சுப பாவணை, கண்களின் மொழி மூலம் கருணை மற்றும் அன்பின் அனுபவம் காரியத்தை வெற்றியாக்கி விடும்.