25-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஆத்மாவை தூய்மையாக
மாற்ற வேண்டும் என்று கவலைப்படுங்கள். எந்த ஒரு குறையும்
இருந்து விடக் கூடாது. மாயை தவறு செய்வித்து விடக் கூடாது.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின்
வாயிலிருந்து எந்த சுப வார்த்தைகள் சதா வெளிப்பட வேண்டும்?
பதில்:
எப்போதும் வாயிலிருந்து நாம்
நரனிலிருந்து நாராயணன் ஆவோம், இது சாதாரண விசய மல்ல நாமே
உலகத்திற்கு அதிபதியாக இருந்தோம், மீண்டும் மாறுவோம் என்ற சுப
வார்த்தைகள் தான் வாயிலிருந்து பேச வேண்டும். ஆனால் இந்த
குறிக்கோள் உயர்ந்தது. ஆகவே மிக மிக எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். உங்களுடைய கணக்கைப் பாருங்கள். குறிக்கோளை எதிரில்
வைத்து முயற்சி செய்துக் கொண்டே இருங்கள். மனம் உடைந்து போகக்
கூடாது.
ஓம் சாந்தி.
பாபா அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.
இங்கே நினைவு யாத்திரையில் அமரும் போது நீங்கள் ஆத்ம உணர்வில்
அமருங்கள், தந்தையை நினையுங்கள் என்று சகோதரன் சகோதரி களுக்குக்
கூறுங்கள். இந்த நினைவை ஏற்படுத்த வேண்டும். இப்போது உங்களுக்கு
இந்த நினைவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் ஆத்மா நம்முடைய
தந்தை நம்மைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நாமும்
கர்மேந்திரியங் கள் மூலமாகப் படிக்கின் றோம். பாபாவும்
கர்மேந்திரியங்களின் ஆதாரத்தை எடுத்து இவர் மூலமாக முதன்
முதலில் தந்தையை நினையுங்கள் என கூறுகிறார். இது ஞான மார்க்கம்
என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பக்தி
மார்க்கம் என்று கூற முடியாது. ஒரே ஒரு ஞானக்கடல் பதீத பாவனர்
தான் ஞானத்தைக் கொடுக்கின்றார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையை நினையுங்கள் என்று உங்களுக்கு முதல் நம்பர் பாடம்
கிடைத் திருக்கிறது. இது மிகவும் அவசியம் ஆகும். வேறு எந்த
சத்சங்கத்திலும் யாரும் கூற முடியாது. ஆனால் இன்று பல
செயற்கையான அமைப்புகள் தோன்றி இருக்கின்றன. உங்களிடம் கேட்டு
யாராவது சொன்னாலும் கூட பொருளைப் புரிந்துக் கொள்ள முடியாது.
புரிய வைப்பதற் கான அறிவு இல்லை. உங்களுக்குத் தான் பாபா
எல்லையற்ற தந்தையை நினைத்தால் விகர்மம் அழிந்து போகும் என்று
கூறுகின்றார். இது பழைய உலகம் என்று விவேகம் கூறுகின்றது. புது
உலகத்திற்கும், பழைய உலகத்திற்கும் நிறைய வித்தியாசம்
இருக்கிறது. அது பரிசுத்தமான உலகம் ஆகும். இது அழுக்கான உலகம்
ஆகும். பதீத பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள்
என அழைக்கிறார்கள். கீதையில் கூட என்னை மட்டுமே நினையுங்கள்
என்ற வார்த்தை இருக்கிறது. தேகத்தின் அனைத்து உறவுகளையும்
தியாகம் செய்து தன்னை ஆத்மா என்று உணருங்கள். இந்த தேக உறவுகள்
முன்பு கிடையாது. ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கே நடிப்பதற்காக
வருகிறீர்கள். தனியாக வந்தோம் தனியாகச் செல்வோம் என்று
பாடப்பட்டிருக்கிறது. இதன் பொருள் மனிதர் களுக்குப் புரியவில்லை.
இப்போது நீங்கள் நடைமுறையில் அறிகிறீர்கள். நாம் இப்போது நினைவு
யாத்திரையினால் அல்லது நினைவு பலத்தினால் தூய்மையாகிக்
கொண்டிருக்கிறோம். இதுவே இராஜயோகத்தின் பலம் ஆகும். அது ஹடயோகம்
ஆகும். அதனால் மனிதர்கள் சிறிது காலத்திற்கு ஆரோக்கிய மாக
இருக்கிறார்கள். சத்யுகத்தில் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக
இருக்கிறீர்கள். ஹட யோகத்தின் அவசியம் இல்லை. இது அனைத்தும்
இங்கே இந்த சீ,சீ உலகத்தில் செய் கிறார்கள். இதுவே பழைய உலகம்
ஆகும். சத்யுகம் புது உலகம் முடிந்து விட்டது அதில் இந்த லஷ்மி
நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இது யாருக்கும் தெரியவில்லை.
அங்கே ஒவ்வொரு பொருளும் புதியதாக இருக்கிறது. விழித்தெழுங்கள்
மணப் பெண்களே, விழித்தெழுங்கள்...... என்ற பாடல் கூட இருக்கிறது
அல்லவா ! புது யுகம் என்பது சத்யுகம் ஆகும். பழைய யுகம்
கலியுகம் ஆகும். இப்போது இதை சத்யுகம் என்று கூற முடியாது. இது
கலியுகம் என்று பாபா நினைவு படுத்துகிறார். நீங்கள்
சத்யுகத்திற்காகப் படிக்கிறீர்கள். இந்த படிப்பினால் நீங்கள்
புது உலகில் இராஜ்ய பதவி பெறலாம் என்று படிக்க வைப்பவர்கள்
யாரும் கூற முடியாது. யாரும் சொல்ல முடியாது. குழந்தைகளாகிய
உங்களுக்கு ஒவ்வொரு விசயமும் நினைவுபடுத்தப்படுகிறது. தவறு
செய்யக்கூடாது. பாபா அனைவருக்கும் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். எங்கே வேண்டு மானாலும் அமருங்கள், தொழில்,
வேலைகளைச் செய்யுங்கள். தன்னை ஆத்மா என்று உணருங் கள். வேலை
தொழிலில் சிறிது கடினம் ஏற்பட்டாலும் எவ்வளவு முடியுமோ நேரத்தை
ஒதுக்கி நினைவில் அமருங்கள். அப்போது தான் ஆத்மா தூய்மையாகும்.
வேறு எந்த வழியும் இல்லை. நீங்கள் புதிய உலகத்திற்காக இராஜயோகம்
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே கலியுக ஆத்மாக் கள் செல்ல
முடியாது. மாயை ஆத்மாவின் சிறகுகளைத் துண்டித்து விட்டது. ஆத்மா
பறக்கிறது அல்லவா? ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது.
ஆத்மா அனைத்தையும் விட ராக்கெட் வேகமான ஆகும். குழந்தைகளாகிய
உங்களுக்கு இந்த புது புது விஷயங்களைக் கேட்டு அதிசயமாக
இருக்கிறது. ஆத்மா எவ்வளவு சிறிய ராக்கெட். அதில் 84 பிறவிகளின்
நடிப்பு நிச்சயிக்கப்பட்டிருக்
கிறது. இது போன்ற விஷயங்களை
மனதில் நினைவு வைத்திருங்கள், உற்சாகம் வரும். பள்ளிக்
கூடத்தில் மாணவர்களின் புத்தியில் படிப்பு நினை விருக்கிறது
அல்லவா? உங்களுடைய புத்தியில் இப்போது என்ன இருக்கிறது? புத்தி
உடலில் இல்லை. ஆத்மா வில் தான் மனம், புத்தி இருக்கிறது. ஆத்மா
தான் படிக்கிறது. வேலை போன்ற அனைத்தையும் ஆத்மா தான்
செய்கின்றது. சிவபாபாவும் ஆத்மா தான். ஆனால் அவரை பரம்
என்கிறார்கள். அவர் ஞானக் கடல் ஆவார். அவர் மிகவும் சிறிய
புள்ளியாக இருக்கிறார். இதுவும் யாருக்கும் தெரிய வில்லை. அந்த
தந்தைக்குள் எந்த சம்ஸ்காரம் இருக்கிறதோ அதுவே குழந்தைகளுக்குள்
வருகிறது. இப்போது நீங்கள் யோக பலத்தினால் தூய்மையாகிக் கொண்டி
ருக்கிறீர்கள். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். படிப்பில் நாம்
தோல்வி அடையக் கூடாது என்ற கவலை வேண்டும். இதில் முதல் நம்பர்
பாடம் ஆத்மாக்களாகிய நாம் சதோபிரதானமாக வேண்டும். எந்த குறையும்
இருக்கக் கூடாது. இல்லை என்றால் தோல்வி அடைவோம். மாயா உங்களை
ஒவ்வொரு விசயத்திலும் மறக்க வைக்கிறது. ஆத்மா சார்ட் வைக்க
வேண்டும என்று விரும்புகிறது. முழு நாளில் எந்த அசுர வேலையும்
நடக்கக் கூடாது. ஆனால் மாயை சார்ட் வைக்க விடுவதில்லை. நீங்கள்
மாயாவின் ஈர்ப்பில் வந்து விடுகிறீர்கள். சார்ட் வைக்க வேண்டும்
என்று மனம் கூறுகிறது. வியாபாரிகள் எப்போதும் லாப நஷ்டத்தின்
கணக்கு பார்க்கிறார்கள். இது உங்களுடைய மிகப் பெரிய கணக்காகும்.
21 பிறவிகளின் வருமானம். இதில் தவறு நடந்து விடக் கூடாது.
குழந்தைகள் மிகவும் கவனக் குறைவாக இருக்கிறார்கள். இந்த பாபாவை
குழந்தைகளாகிய நீங்கள் சூட்சும வதனத்தில் சொர்க்கத்தில் கூட
பார்க்கிறீர்கள். பாபாவும் மிகவும் முயற்சி செய்கிறார். அதிசயம்
அடைந்துக் கொண்டே இருக்கிறார். பாபாவின் நினைவில் நீராடுகிறேன்,
உணவருந்துகிறேன், இருப்பினும் மறந்து போகிறேன், பிறகு நினைக்க
ஆரம்பிக்கிறேன். இது மிகப் பெரிய பாடம் ஆகும் இந்த விஷயத்தில்
எந்த ஒரு கருத்து வேறுபாடும் வர முடியாது. கீதையில் கூட தேகம்
உட்பட தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுங்கள் என்று
இருக்கிறது. மீதம் ஆத்மா தான் இருக் கிறது. தேகத்தை மறந்து
தன்னை ஆத்மா என்று உணருங்கள். ஆத்மா தான் மிகவும் அழுக்காக
தமோபிரதானமாக மாறுகிறது. ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று
மனிதர்கள் கூறுகிறார்கள். ஆத்மா தான் பரமாத்மா, பரமாத்மாவே
ஆத்மா என நினைப்பதால் ஆத்மாவில் எந்த கணக்கும் ஒட்டாது என
எண்ணுகிறார்கள். தமோகுணம் உடைய மனிதர்கள் தமோகுண மான படிப்
பினையைக் கொடுக்கிறார்கள். சதோகுணம் உடையவர்களாக மாற முடியாது.
பக்தி மார்க்கத் தில் தமோபிரதானம் ஆக வேண்டும். ஒவ்வொரு
பொருளும் முதலில் சதோபிர தானமாகவும் பிறகு ரஜோ தமோவில் வருகிறது.
ஸ்தாபனை மற்றும் அழிவும் நடக்கிறது. பாபா புது உலகத்தை
உருவாக்குகிறார். பிறகு இந்த பழைய உலகம் அழிந்து போகிறது.
பகவான் புது உலகத்தைப் படைக்கக் கூடியவர். இந்த பழைய உலகம் மாறி
புதிய தாக மாறும். புது உலகின் அடையாளம் இந்த லஷ்மி நாராயணன்
அல்லவா? இவர்கள் புது உலகத்தின் அதிபதியாவர். திரேதாவைக் கூட
புது உலகம் என்று கூற முடியாது. கலியுகத்தைப் பழையது என்றும்,
சத்யுகம் புதியது என்றும் கூறப்படுகிறது. கலியுக முடிவு மற்றும்
சத்யுகத்தின் ஆரம்பம் தான் இந்த சங்கமயுகம் ஆகும். சிலர் எம்.ஏ,
பி.ஏ., படிக்கிறார்கள் என்றால் உயர்ந்தவர்கள் ஆகி விடுகிறார்கள்
அல்லவா?. நீங்கள் இந்த படிப்பினால் எவ்வளவு உயர்ந்தவர்
ஆகிறீர்கள். உலகத்தில் இருப்பவர்கள் இந்த விஷயத்தைத் தெரிந்துக்
கொள்ளவில்லை. அதாவது இவரை இவ்வளவு உயர்ந்தவராக மாற்றி யவர் யார்?
இப்போது நீங்கள் முதல் இடை கடையை தெரிந்துக் கொண்டீர்கள்.
அனைவரின் வாழ்க்கைக் கதையை நீங்கள் அறிகிறீர்கள். இதுவே ஞானம்
ஆகும். பக்தியில் ஞானம் இல்லை. மேலும் கர்ம காண்டத்தைக்
கற்பிக்கிறார்கள். பக்தி அளவற்றதாகும். எவ்வளவு
வர்ணிக்கிறார்கள். எவ்வளவு அழகாகத் தெரிகிறது. விதையில் என்ன
அழகு இருக்கிறது, இவ்வளவு சிறிய விதை எவ்வளவு பெரியதாகிறது.
பக்தி என்ற மரம் இருக்கிறது, அளவற்ற கர்ம காண்டங்கள் இருக்
கின்றன. ஞானத்தின் சிறிய புத்தகம் மன்மனா பவ ஒன்று தான். தமோ
பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக மாறுவதற்காக என்னை
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். பதீத பாவனா வந்து எங்களை
பாவனமாக்குங்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இராவண
இராஜ்யத்தில் அனைவரும் அழுக்காக துக்கத்தில் இருக்கிறார்கள்.
இராம இராஜ்யத்தில் அனைவரும் தூய்மை யாக சுகம்
நிறைந்திருக்கிறார்கள். இராம ராஜ்ஜியம், இராவண இராஜ்யம் என்ற
பெயர் இருக்கிறது. குழந்தை களாகிய உங்களைத் தவிர இராம
இராஜ்யத்தைப் பற்றி தெரியவில்லை. இப்போது நீங்கள் முயற்சி
செய்துக் கொண்டிருக்கிறீர்கள். 84 பிறவிகளின் ரகசியம் பற்றி
கூட உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பகவான் வாக்கு -
மன்மனாபவ என்று கூறுகிறார்கள். அதனால் நீங்கள் 84 பிறவிகளை
எப்படி முழுமை யாக எடுக்கிறேன் என்று கூற முடியாது. இப்போது
சக்கரம் முடியப் போகிறது. கீதையில் என்ன கூறப்பட்டிருக்கிறது
என்று கீதையை விளக்கம் செய்பபவர் களுக்கு சென்று கூறுங்கள்.
உங்களுடைய புத்தியில் ஞானம் முழுவதும் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது முன்பு எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா என்று
பாபா கேட்கின்றார். ஆம், பாபா போன கல்பத்தில் சந்தித்தோம் என
கூறுகிறார்கள். பாபா கேட்கிறார். நீங்கள் பொருளுடன்
பதிலளிக்கிறீர்கள். கிளியைப் போன்று கூறுவது கிடையாது. பிறகு
பாபா ஏன் சந்தித்தீர்? என்ன அடைந்தீர் என்று கேட்கிறார்.
நாங்கள் உலகத்தின் இராஜ்ய பதவியை அடைந்தோம் என்று நீங்கள்
கூறுகிறீர்கள். அதில் அனைத்தும் வந்து விடுகிறது. நரனிலிருந்து
நாராயணன் ஆகினோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அந்த
உலகத்திற்கே அதிபதியாவது, அதில் ராஜா ராணி மற்றும் தெய்வீக
வம்சம் அனைத்தும் இருக்கிறது. அதன் அதிபதியாக ராஜா ராணி பிரஜா
அனைத்தும் உருவா கிறார்கள். இதற்குத் தான் நல்லதைப் பேசுவது
என்று கூறப்படுகிறது. நாமும் நரனிலிருந்து நாராயணன் ஆவோம்
என்றால் சாதாரண விசயம் கிடையாது. ஆம், குழந்தைகளே, முழுமையாக
முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். இந்த நிலையில் நாம்
உயர்ந்த பதவி பெறுவோமோ இல்லையா என்று உங்கள் கணக்கைப் பாருங்கள்.
எத்தனை பேருக்கு வழி காட்டினோம், எத்தனை குருடர்களுக்கு ஊன்று
கோலாக இருந்தோம், ஒரு வேளை சேவை செய்ய வில்லை என்றால் நாம்
பிரஜைகளில் சென்று விடுவோம் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் இந்த உடலை விட்டு விட்டால் என்ன பதவி அடைவோம் என்று உங்கள்
மனதைக் கேளுங்கள். மிகப் பெரிய குறிக் கோள் என்றால்
எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சில குழந்தைகள் நாம் நினைக்கவே
இல்லை என்றால் சார்ட் வைத்து என்ன செய்ய போகிறோம் என நினைக்
கிறார்கள். அதற்கு தான் மனம் உடைந்து போகுதல் என்று
கூறப்படுகிறது. அவர்கள் படிப்பதே அப்படித்தான். கவனம்
கொடுப்பதில்லை. எல்லாம் தெரிந்தவராக உட்கார்ந்துக் கொள்ளக்
கூடாது. கடைசியில் தோல்வி ஏற்பட்டு விடும். தனக்குத் தானே நன்மை
செய்துக் கொள்ள வேண்டும். குறிக்கோள் எதிரில் இருக்கிறது. நாம்
படித்து இப்படி மாற வேண்டும். இதுவும் அதிசயம் அல்லவா?
கலியுகத்திலோ இராஜ்யம் இல்லை. சத்யுகத்தில் இவர்களின் இராஜ்யம்
எங்கிருந்து வரும்? அனைத்திற்கும் ஆதாரம் படிப்பாகும்.
தேவதைகளுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது. அதில் தேவதைகள்
வெற்றி அடைந்து இராஜ்யத்தைப் பெற்றனர் என்பது கிடையாது. இப்போது
அசுரர்கள் மற்றும் தேவதைகளுக்கு இடையே எப்படி போர் நடக்கும்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையேதான் போர் நடக்கிறது.
போர் என்ற விசயமோ விளக்கப்படுகிறது. முதலில் தேகம் மற்றும்
அனைத்து சம்பந்தங்களையும் விட்டு தன்னை ஆத்மா என்று உணருங்கள்
என்று பாபா கூறுகின்றார் என்பதைத் தெரிவியுங்கள். நீங்கள் ஆத்மா
அசரிரீயாக வந்தீர்கள். இப்போது மீண்டும் திரும்பப் போக வேண்டும்.
தூய்மையான ஆத்மாக்கள் தான் திரும்பப் போக முடியும். தமோ
பிரதானமான ஆத்மாக்கள் போக முடியாது. ஆத்மாவின் சிறகுகள்
துண்டிக்கப்பட்டடு இருக்கிறது. மாயை பதீதமாக்க இருக்கிறது-
தமோபிரதானமாக மாறியதால் இவ்வளவு தொலைவான தூய்மை யான
இடத்திற்குப் போக முடியாது. இப்போது ஆத்மாக்களாகிய நீங்கள் நாம்
உண்மையில் பரந்தாமத்தைச் சார்ந்தவர்கள் என கூறுகிறீர்கள். இங்கே
இந்த 5 தத்துவங்களினால் ஆன பொம்மை எடுக்கப் பட்டிருக்கிறது.
இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகிவிட்டனர் என கூறுகிறார் கள்.
அங்கே உடல் சென்றதா? ஆத்மா சென்றதா? உடல் எரிந்து விட்டது.
மற்றபடி ஆத்மா தான் இருக்கிறது. அது சொர்க்கத்திற்குப் போக
முடியாது. மனிதர்கள் யார் எதை சொல் கிறார்களோ அதை கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பக்தியையும்
கற்பித்து இருக்கிறார்கள். தொழிலைப் பற்றி யாருக்கும்
தெரியவில்லை. அனைத்தையும் விட உயர்ந்தது சிவனின் பூஜை
என்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவன். அவரையே
நினையுங்கள், உச்சரியுங்கள் மாலை கூட கொடுக்கிறார்கள். சிவ சிவா
என கூறிக் கொண்டே மாலையை உருட்டிக் கொண்டே இருங்கள்
என்கிறார்கள். பொருள் புரியாமல் மாலையை எடுத்து சிவ சிவா என
கூறிக் கொண்டே இருக்கிறார்கள். பல்வேறு விதமான போதனைகளை
குருமார் கள் கூறு கிறார்கள். இங்கேயோ என்னை நினைவு செய்தால்
பாவம் அழியும் என்று தந்தையே கூறு கின்றார். சிவ சிவா என்று
வாயில் கூற வேண்டியதில்லை. பாபாவின் பெயரை பிள்ளை உச்சரித்துக்
கொண்டே இருக்க மாட்டார்கள். இது அனைத்தும் மறைவான விசயம் ஆகும்.
நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது யாருக்கும்
தெரியவில்லை. யார் போன கல்பத்தில் புரிந்துக் கொண்டார்களோ
அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். புதுப்புது குழந்தைகள் வந்துக்
கொண்டே இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்துக் கொண்டே
இருக்கிறார்கள். இன்னும் போகப்போக நாடகம் எதைக் காண்பிக்கிறதோ
அதை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். முதலிலேயே இது இது
நடக்கும் என்று பாபா காட்சி கொடுப்பதில்லை. பிறகு செயற்கை
ஆகிவிடும். இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் ஆகும்.
உங்களுக்குப் புரிந்துக் கொள்ளும் திறன் கிடைத்துவிட்டது. பக்தி
மார்க்கத்தில் முட்டாளாக இருந்தீர்கள். நாடகத்தில் பக்தியும்
நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்று அறிகிறீர்கள்.
நாம் இந்த பழைய உலகத்தில் வசிக்கக் கூடியவர்கள் இல்லை என்று
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
மாணவர்களுக்கு இந்த படிப்பு புத்தியில் இருக்கிறது. நீங்கள்
கூட முக்கியமான கருத்துக்களைப் புத்தியில் வைத்துக் கொள்ள
வேண்டும். நம்பர் ஒன் விஷயம் தந்தையை உறுதிப் படுத்திக் கொண்டு
பிறகு அடுத்து செல்லுங்கள். இல்லை என்றால் வீணான வைகளைக்
கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கீதையின் பகவான் சிவன் என்று
எழுதி கொடுத் தனர் என்று குழந்தைகள் எழுதுகிறார்கள். இது
முற்றிலும் சரி, இவ்வாறு கூறுகிறார்கள். ஆனால் புத்தியில்
எதுவும் பதியவில்லை. ஒரு வேளை தந்தை வந்து விட்டார் என்று
புரிந்துக் கொண்டால் இப்படிப்பட்ட தந்தையை நாம் சென்று
சந்திக்க வேண்டும், சொத்து அடைய வேண்டும் என்று கூறுவார்கள்.
ஒருவருக்கு கூட நிச்சயம் ஏற்படவில்லை. உடனடியாக ஒருவரின்
கடிதமும் வரவில்லை. ஞானம், யோகம் நன்றாக இருக்கிறது என்று கூட
எழுதுகிறார்கள். ஆனால் ஆஹா, பாபா அவரிடமிருந்து நாம் இவ்வளவு
காலம் பிரிந்திருக்கிறோம். பக்தி மார்கத்தில் ஏமாற்றம்
அடைந்திருக்கிறோம், இப்போது அந்த தந்தை உலகத்திற்கே
அதிபதியாக்க வந்திருக்கின்றார், என்று புரிந்துக் கொள்ளும் அளவு
தைரியம் இல்லை. புரிந்துக் கொண்டால் ஓடி வந்து விடுவார்கள்.
இன்னும் போகப் போக இவ்வாறு வருவார்கள். ஒரு வேளை பாபாவைப்
புரிந்துக் கொண்டார்கள் என்றால், உயர்ந்ததிலும் உயர்ந்த
பகவானுடையவராக மாற வேண்டும் அல்லவா? மூளை திறந்துக் கொள்ளும்
அளவிற்குப் புரிய வைக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. வேலை போன்றவைகளை செய்துக் கொண்டே ஆத்மாவை தூய்மையாக்குவதற்கு
நேரம் ஒதுக்கி நினைவிலிருக்க உழைக்க வேண்டும். எந்த அசுர
வேலையும் ஒரு போதும் செய்யக் கூடாது.
2. தனக்கும் பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும். படிப்பை
படிக்கவும், படிக்க வைக்கவும் வேண்டும். எல்லாம் தெரிந்தவர்
என்று இருக்கக் கூடாது. நினைவின் பலத்தை சேமிக்க வேண்டும்.
வரதானம்:
பெயர் மற்றும் மதிப்பினுடைய தியாகம் மூலமாக அனைவருடைய அன்பை
பெற்று விடக்கூடிய பாக்கியத்தை அமைப்பவர் (பாக்கிய விதாதா)
ஆவீர்களாக.
எப்படி தந்தையை பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர்
என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோரை யும் விட அதிகமாக
பெயருக்கான பாடல் தந்தையினுடையதாகத்தான் இருக்கிறது. அதேபோல
நீங்களும் கூட அல்பகால பெயர் மற்றும் மதிப்பிலிருந்து
விலகியவராக ஆனீர்கள் என்றால் எக்காலத்திற்குமாக அனைவருக்கும்
பிரியமானவராக இயல்பாகவே ஆகி விடுவீர்கள். யார் பெயர் புகழை
விரும்பக்கூடிய யாசிக்கும் தன்மையை தியாகம் செய்கிறார்களோ
அவர்கள் உலகத்தின் அதிர்ஷ்டத்தை அமைக்கக் கூடியவர்களாக ஆகி
விடுகிறார்கள். கர்மத்தின் பலனோ இயல்பாகவே உங்களுக்கு முன்னால்
முழுமையான ரூபத்தில் வந்து விடும். எனவே அல்ப காலத்தின் "இச்சா
மாத்ரம் அவித்யா" ஆசை என்றால் என்னவென்றே அறியாதவராக ஆகி
விடுங்கள். பழுக்காத பழத்தை உட்கொள்ளாதீர்கள். அதை தியாகம்
செய்தீர்கள் என்றால் பாக்கியம் உங்களுக்கு பின்னால் வந்து
விடும்.
சுலோகன்:
பரமாத்ம தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். எனவே புத்தி என்ற பாதம்
என்றுமே தந்தையின் இதய சிம்மாசனத்தில் நிலைத்திருக்கட்டும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்
எந்த ஒரு சேவையின் திட்டங்கள் அமைக்கிறீர்கள் என்றால் தாராளமாக
அமையுங்கள். தாராளமாக சிந்தனை செய்யுங்கள். ஆனால் என்ன
ஆகப்போகிறதோ ... என்று ஆச்சரியப்பட்டு யோசிக்காதீர்கள். விதேஹி,
சாட்சி ஆகி யோசியுங்கள். யோசித்தீர்களா, திட்டம் அமைத்தீர்களா,
பின் ஒரு நொடியில் "பிளெயின் ஸ்திதி" தெளிவான நிலையை அமைத்து
கொண்டே செல்லுங்கள். இப்பொழுது நிலையின் 'ஸ்திதி' அவசியம்
உள்ளது. இந்த விதேஹி நிலை நிலைமைகளை மிகவும் சுலபமாக கடக்க
செய்து விடும். எப்படி மேகங்கள் வந்தன, சென்று விட்டது என்பது
போல. விதேஹி ஆடாது அசையாதவராக ஆகி விளையாட்டை பார்த்து
கொண்டிருப் பார்கள்.