26-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தீய நட்பிலிருந்து
தற்காத்துக் கொண்டு படிப்பின் மீது முழு கவனம் கொடுத்தீர்கள்
என்றால் எந்த புயலும் வர முடியாது, மற்றபடி மாயையை குற்றம்
சொல்லாதீர்கள்
கேள்வி:
எந்தவொரு விசயத்தை எப்போதும்
கவனத்தில் வைத்தீர்கள் என்றால் துக்கம் தூர விலகிப் போய்விடும்?
பதில்:
பாபா உங்களுடைய கட்டளை இது, என்று
எப்போதும் பாபாவின் கட்டளைப் படி நடந்து கொண்டே இருந்தீர்கள்
என்றால் உங்களுடைய துக்கம் தூரமாக விலகிப் போய்விடும். கட்டளைப்
படி நடக்கக் கூடியவர்கள் மாயையின் யுத்தத்திலிருந்து தப்பித்து
விடுகிறார்கள், புத்தியின் பூட்டு திறந்து கொள்கிறது. அளவற்ற
குஷி இருக்கிறது. தலைகீழான கர்மம் எதுவும் நடப்பதில்லை.
பாடல்:
உங்களை அடைந்த நாங்கள் உலகத்தையே
அடைந்தோம்.........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான அனைத்து செண்டர்களைச் சேர்ந்த
குழந்தைகளும் பாட்டை கேட்டீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து
மீண்டும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போலவே நாம் உலகத்தின்
இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும்
தெரிந்துள்ளீர்கள். கல்பம்-கல்பமாக அடைந்து வந்துள்ளோம்.
இராஜ்யத்தை அடைகிறோம் பிறகு இழக்கிறோம். இப்போது நாம்
எல்லையற்ற தந்தையின் மடியை அடைந்துள் ளோம் அல்லது அவருடைய
குழந்தைகளாகியுள்ளோம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார் கள்.
அது சரியும் கூட. வீட்டில் இருந்துகொண்டே முயற்சி செய்கிறார்கள்.
எல்லையற்ற தந்தையிட மிருந்து உயர்ந்த பதவி அடைவதற்காக படிப்பு
நடந்து கொண்டிருக்கிறது. ஞானக்கடல், தூய்மை யற்றவர்களை தூய்மை
யாக்குபவர் அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் சிவபாபா தான்
நம்முடைய தந்தையாகவும் இருக் கின்றார், டீச்சராகவும்
இருக்கின்றார் மற்றும் சத்குருவாகவும் இருக்கின்றார் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் அவரிடமிருந்து ஆஸ்தியை அடை
கின்றோம் என்றால் உயர்ந்த பதவி அடைவதற்காக எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டும். அஞ்ஞான காலத்தில் கூட பள்ளியில் படிக்கிறார்கள்
என்றால் அவர்களுடைய படிப்புக்கேற்றவாறு வரிசைக்கிரமமான
மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுகிறார்கள். அங்கே மாயை எங்களுக்கு
தடை ஏற்படுத்துகிறது அல்லது புயல் வருகிறது என்று யாரும் சொல்ல
மாட்டார்கள். சரியாக படிப்பதில்லை அல்லது கெட்ட சகவாசத்தில்
சென்று மாட்டிக் கொள்கிறார்கள். விளையாட்டில் ஈடுபட்டு
விடுகிறார்கள் ஆகையினால் படிப்பதில்லை. தேர்வில் தோற்று
விடுகிறார்கள். மற்றபடி இதை மாயையின் புயல் என்று சொல்ல
முடியாது. நடத்தை சரியாக இல்லை என்றால் டீச்சர் கூட இவருடைய
நடத்தை சரியில்லை என்று சான்று அளிப்பார். கெட்ட சகவாசத்தால்
கெட்டு விட்டார்கள், இதில் மாயை இராவணனை குற்றவாளி ஆக்குவதற்
கான விசயம் இல்லை. பெரிய-பெரிய நல்ல மனிதர்களின் குழந்தைகள்
சிலர் நன்கு உயர்ந்து விடுகிறார்கள், சிலர் சாராயம் போன்றவற்ற
குடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தீய வழியின் பக்கம் சென்று
விடுகிறார்கள் என்றால் தந்தையும் கெட்டு விட்டான் என்று
சொல்கிறார்கள். அந்த படிப்பில் நிறைய பாடங்கள் இருக்கின்றன. இது
ஒரே விதமான படிப்பாகும். அங்கே மனிதர்கள் கற்பிக்கிறார்கள்.
இங்கே நமக்கு பகவான் கற்பிக்கின்றார் என்று குழந்தைகள்
தெரிந்துள்ளார்கள். நாம் நல்ல விதத்தில் படித்தோம் என்றால்
உலகத்திற்கு எஜமானர் களாகலாம். நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள்,
கெட்ட சகவாசத்தில் வந்து படிக்க முடிவதில்லை. இதனை ஏன் மாயையின்
புயல் என்று சொல்ல வேண்டும்? கெட்ட சகவாசத்தால் சிலர்
படிப்பதில்லை என்றால் இதில் மாயை அல்லது டீச்சர் அல்லது தந்தை
என்ன செய்வார்கள்! படிக்க முடியவில்லை என்றால் தன்னுடைய
வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். நாடகத்தின்படி முதலில்
பட்டியில் அமர வேண்டியிருந்தது. சிலர் வந்து சமர்ப்பணம்
ஆனார்கள். சிலரை கணவன் அடித்தார், துன்புறுத்தினார் என்றால்
சிலருக்கு வைராக்கியம் வந்து விட்டது. வீட்டில் இருக்க
முடியாமல் சிலர் இங்கே வந்து விட்ட பிறகும் கூட திரும்பிச்
சென்று விட்டார்கள், படிக்க முடியவில்லை என்றால் சென்று வேலை
போன்ற வற்றில் சேர்ந்து விட்டார்கள் அல்லது திருமணம் செய்து
கொண்டார்கள். மாயையின் புயலால் படிக்க முடியவில்லை என்பதெல்லாம்
ஒரு சாக்கு-போக்காகும். கெட்ட சகவாசத்தினால் இது நடந்தது என்பதை
புரிந்து கொள்வதில்லை மேலும் நம்மிடத்தில் விகாரம் அதிகம்
இருந்தது என்பதை புரிந்து கொள்வதில்லை. மாயையின் புயல் வந்தது
ஆகையினால் தான் விழுந்து விட்டேன் என்று ஏன் சொல்கிறீர்கள். இது
தங்கள் ஆதரவில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது.
தந்தை, டீச்சர், சத்குருவின் மூலம் என்ன அறிவுரை கிடைக்கிறதோ,
அதன்படி நடக்க வேண்டும். அதன்படி நடந்து கொள்வதில்லை என்றால்
ஏதாவது கெட்ட சகவாசமாக இருக்கலாம் அல்லது காமத்தின் போதை அல்லது
தேக-அபிமானத்தின் போதையாக இருக்கும். நாம் எல்லையற்ற
தந்தையிடமிருந்து உலக இராஜ்யத்தை அடைவதற்காக படித்துக்
கொண்டிருக்கிறோம் என்பதை அனைத்து சென்டர்களை சேர்ந்தவர்களும்
தெரிந்துள்ளார்கள். நம்பிக்கை இல்லையென்றால் இங்கு ஏன்
அமர்ந்துள்ளீர்கள், இன்னும் நிறைய ஆசிரமங்கள் இருக்கின்றனவே.
ஆனால் அங்கே எந்த பலனும் இல்லை. குறிக்கோளே இல்லை. அவையனைத்தும்
சிறு சிறு மடங்கள், கிளை களாகும். மரம் வளரத்தான் வேண்டும்.
இங்கே இவை அனைத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இனிமையான தெய்வீக
மரத்தைச் சேர்ந்தவர்கள் யார் இருப்பார்களோ, அவர்கள் வருவார்கள்.
அனைத்திலும் இனிமையானவர்களாக யார் இருப்பார்கள்? யார்
சத்யுகத்தில் மகாராஜ மகாராணியாக ஆகிறார்களோ, அவர்களே ஆவர். யார்
முதல் நம்பரில் வருகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக படிப்பை
நன்றாக படித்திருப்பார்கள், என்பதை இப்போது நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். அவர்கள் தான் சூரியவம்சத்தில் சென்றார்கள்.
குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே சமர்ப்பண வாழ்க்கை
வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். நிறைய சேவை செய்து கொண்டிருக்
கிறார்கள். வித்தியாசம் இருக்கிறது அல்லவா. இங்கேயும்
இருக்கிறார்கள் ஆனால் படிப்பிக்க முடியவில்லை என்றால் மற்ற
சேவைகளில் ஈடுபடுகிறார்கள். கடைசியில் சிறிய இராஜ்ய பதவியை
அடைந்து விடுவார்கள். வெளியில் குடும்ப விவகாரங்களில்
இருப்பவர்கள் படிப்பதில்-படிப்பிப்பதில் மிகவும் கூர்மையானவர்
களாக இருக்கிறார்கள். அனைவரும் குடும்பஸ்தர்கள் கிடையாது.
கன்னியர்களை அல்லது குமார்களை குடும்பஸ்தர்கள் என்று சொல்ல
முடியாது மேலும் யார் வானப்பிரஸ்திகளாக இருக்கிறார்களோ அவர்கள்
60 வயதிற்குப் பிறகு அனைத்தை யும் குழந்தைகளுக்குக் கொடுத்து
விட்டு சென்று சாதுக்களோடு இருந்து விடுகிறார்கள். இன்றைக்கு
தமோபிரதானமாக இருக்கின்ற காரணத்தினால் இறக்கும் வரை கூட தொழில்
போன்றவற்றை விடுவதில்லை. முன்பெல்லாம் 60 வயதில் வானப்பிரஸ்த
நிலைக்கு சென்று விடுவார்கள். பனாரஸ் சென்று இருந்தார்கள்.
யாரும் (முக்தி தாம்) திரும்பிச் செல்ல முடியாது, சத்கதி அடைய
முடியாது என்பதை குழந்தைகள் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
பாபா தான் முக்தி-ஜீவன்முக்தியை வழங்கும் வள்ளல் ஆவார். அதிலும்
அனைவரும் ஜீவன்முக்தி அடைவதில்லை. சிலர் முக்திக்கு சென்று
விடுகிறார்கள். இப்போது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின்
ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது, பிறகு யார் எவ்வளவு முயற்சி
செய்கிறார்களோ அதைப் பொருத்தது. அதிலும் குமாரிகளுக்கு நல்ல
வாய்ப்பாகும். பரலௌகீக தந்தையின் வாரிசாகி விடுகிறார்கள். இங்கே
அனைத்து குழந்தைகளும் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடை வதற்கு
உரிமையுள்ளவர்களாவார்கள். லௌகீகத்தில் பெண்களுக்கு ஆஸ்தி
கிடைப்பதில்லை. ஆண்களுக்கு பேராசை இருக்கிறது. இந்த ஆஸ்தியும்
கிடைக்கும், அதையும் எடுத்துக் கொள்ளலாம், அதை ஏன் விட வேண்டும்
என்று புரிந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டையும்
படிக்கிறார்கள். இப்படி வித-விதமாக இருக்கிறார்கள். யார்
நன்றாக படிக்கிறார் களோ, அவர்கள் உயர்ந்த பதவி அடைந்து
விடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பிரஜையில் நிறைய
பேர் செல்வந்தர்களாக ஆகிவிடுகிறார்கள். இங்கே இருக்கக்
கூடியவர்கள் உள்ளேயே இருக்க வேண்டியிருக்கிறது. தாச-தாசிகளாகி
விடுகிறார்கள். பிறகு திரேதாயுகத்தின் கடைசியில் 3-4-5 பிறவிகள்
இராஜ்ய பதவி கிடைக்கும், அதைவிட சத்யுகத்தில் வரும்
செல்வந்தர்கள் மேலானவர்கள், சத்யுகத்திலிருந்து அவர்களின்
செல்வசெழிப்பு நிலையாக இருக்கிறது. குடும்ப விவகாரங்களில்
இருந்து கொண்டே செல்வந்த பதவி ஏன் அடையக் கூடாது. இராஜ்ய பதவி
அடைய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒருவேளை தவறி
விடுகிறார்கள் என்றால் பிரஜையில் நல்ல பதவி அடைவதற்கு முயற்சி
செய்ய வேண்டும். அதுவும் உயர்ந்த பதவி தான் அல்லவா. இங்கே
இருப்பவர்களை விட வெளியில் இருப்பவர்கள் மிக உயர்ந்த பதவியை
அடைய முடியும். அனைத்தும் முயற்சியில் தான்
ஆதாரப்பட்டிருக்கிறது. முயற்சி ஒருபோதும் மறைந்திருக்க முடியாது.
பிரஜையில் யார் பெரியதிலும் பெரிய செல்வந்தராக ஆவார்களோ,
அவர்களும் மறைந்து இருக்க மாட்டார்கள். வெளியில் இருப்பவர்
களுக்கு குறைந்த பதவி கிடைக்கும் என்பதும் கிடையாது. கடைசியில்
இராஜ்ய பதவி அடைவது நல்லதா அல்லது பிரஜையில் ஆரம்பத்திலிருந்தே
உயர்ந்த பதவி அடைவது நல்லதா? குடும்ப விவகாரங்களில் இருக்கக்
கூடியவர்களுக்கு அந்தளவிற்கு மாயையின் புயல் வருவதில்லை. இங்கே
இருப்பவர்களுக்கு நிறைய வருகிறது. நாம் சிவபாபாவின் காலடியில்
இருக்கிறோம் என்று தைரியம் வைக்கிறார்கள் ஆனால் சகவாசத்தினால்
படிப்பதில்லை. கடைசியில் அனைத்தும் தெரிந்து விடுகிறது. யார்
என்ன பதவி அடைவார்கள் என்பது காட்சி ஏற்படும். வரிசைக்கிரமமாக
படிக்கிறார்கள் அல்லவா. சிலர் அவர்களாகவே சென்டரை
நடத்துகிறார்கள். சில இடங்களில் சென்டர் நடத்துபவர்களை விட
படிக்கக் கூடியவர்கள் தீவிரமானவர்களாகி விடுகிறார்கள்.
அனைத்தும் முயற்சியில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. மாயையின்
புயல் வருகிறது என்பது கிடையாது. தங்களுடைய நடத்தை சரியில்லை.
ஸ்ரீமத்படி நடப்பதில்லை. லௌகீகத்திலும் இப்படி நடக்கிறது.
டீச்சர் அல்லது தாய்-தந்தையரின் வழிப்படி நடப்பதில்லை. தந்தையே
இல்லாத தந்தைக்கு நீங்கள் குழந்தைகளாகியுள்ளீர்கள். அங்கே
அதிகம் வெளியே செல்ல வேண்டியிருக் கிறது. நிறைய குழந்தைகள்
சகவாசத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள் எனும்போது தோற்று
விடுகிறார்கள். மாயையின் புயல் வருகிறது என்று ஏன் சொல்ல
வேண்டும். இது தங்களுடைய முட்டாள்தனமாகும். கட்டளைப்படி
நடப்பதில்லை. இப்படிப்பட்ட நடத்தையினால் தேர்ச்சி பெறாமல்
போய்விடுகிறார்கள். நிறைய பேருக்கு பேராசை இருக்கிறது,
சிலரிடத்தில் கோபம், சிலரிடத்தில் திருடும் பழக்கம், கடைசியில்
தெரிந்து விடுகிறது. இன்ன-இன்னார் இந்த-இந்த நடத்தையினால்
சென்று விட்டார்கள். சூத்திர குலத்தவர்களாக ஆகிவிட்டார்கள்
என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்களை பிராமணர்கள் என்று
சொல்ல முடியாது. பிறகு சென்று சூத்திரர் களாக ஆகி விட்டார்கள்.
படிப்பை விட்டு விட்டார்கள். கொஞ்சம் ஞானம் கேட்டாலும்
பிரஜையில் வந்து விடுவார்கள். பெரிய மரமாக இருக்கிறது.
எங்கெல்லாமோ இருந்து வருவார்கள். தேவி-தேவதா தர்மத்தவர்கள் யார்
மற்ற தர்மங்களுக்கு மாறியுள்ளார்களோ அவர்கள் வருவார்கள். நிறைய
பேர் வந்தால் அனைவரும் அதிசயப்படுவார்கள். மற்ற தர்மத்தவர்களும்
முக்தி எனும் ஆஸ்தியை அடைய முடியும் அல்லவா. இங்கு யார்
வேண்டுமானாலும் வர முடியும். தங்களுடைய வம்சத்தில் உயர்ந்த பதவி
அடைய வேண்டும் என்றால் அவர்களும் வந்து இலட்சியத்தை எடுத்துக்
கொண்டு செல்வார்கள். அவர்களும் வந்து இலட்சியத்தை அடைந்து
செல்கிறார்கள் என்று பாபா உங்களுக்கு காட்சி காட்டியுள்ளார்.
இங்கே இருந்துக் கொண்டிருந்தால் தான் இலட்சியத்தில் இருக்க
முடியும் என்பது இல்லை. எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள்
வேண்டுமானாலும் இலட்சியத்தை பெற்று கடைப்பிடிக்க முடியும்.
தந்தையை நினைவு செய்யுங்கள் என்று இலட்சியம் கிடைக்கிறது.
சாந்திதாமத்தை நினைவு செய்தீர்கள் என்றால் தங்களுடைய தர்மத்தில்
உயர்ந்த பதவியை அடைந்து விடுவீர்கள். அவர்களுக்கு ஜீவன்முக்தி
கிடைக்காது, அங்கே வரவும் மாட்டார்கள். மனம் ஈடுபடாது. யார்
இந்த தர்மத்தைச் சேர்ந்தவர் களோ, அவர்களுக்குத் தான் உண்மையாக
மனம் ஈடுபடும். கடைசியில் ஆத்மாக்கள் தங்களுடைய தந்தையை
தெரிந்து கொள்வார்கள். நிறைய சென்டர்களில் படிப்பில் கவனம்
இல்லாதவர்கள் இருக்கிறார்கள். எனவே உயர்ந்த பதவி அடைய முடியாது
என்று புரிந்து கொள்ளப் படுகிறது. நம்பிக்கை இருந்தால் எனக்கு
நேரமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதிர்ஷ்டத்தில்
இல்லையென்றால் நேரமில்லை, இந்த வேலை இருக்கிறது என்று
சொல்கிறார்கள். அதிர்ஷ்டத்தில் இருந்தால் இரவும்-பகலும் முயற்சி
செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். போகப்போக சகவாசத் தினாலும் கூட
கெட்டு விடுகிறார்கள். அதை கிரகச்சாரம் என்றும் சொல்லப்படுகிறது.
பிரகஸ்பதி திசை மாறி செவ்வாய் திசையாகி விடுகிறது. இன்னும்
போகப்போக விலகிச் சென்று விடவும் செய்யலாம். சிலருக்கு ராகு
திசை பிடித்திருக்கிறது என்று பாபா கூறுகிறார். பகவானைக் கூட
ஏற்றுக் கொள்வதில்லை. இதை பிரம்மா கூறுகின்றார் என்று
நினைக்கிறார்கள். வழி சொல்வது யார் என்பது கூட குழந்தைகளுக்குத்
தெரிவதில்லை. தேக-அபிமானம் இருக்கின்ற காரணத்தினால் பிரம்மா
சொல்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆத்ம-அபிமானியாக
இருந்தால் சிவபாபா என்னவெல்லாம் சொல்கிறாரோ அதை நாம் செய்ய
வேண்டும் என்று புரிந்து கொள்வார்கள். பொறுப்பு
சிவபாபாவினுடையதாகும். சிவபாபாவின் வழிப்படி நடக்க வேண்டும்
அல்லவா. தேக-அபிமானத்தில் வருவதினால் சிவபாபாவை மறந்து
விடுகிறார்கள் பிறகு சிவபாபா பொறுப்பாக முடியாது. அவருடைய
கட்டளையை சிரமேற்கொண்டு தாரணை செய்ய வேண்டும். ஆனால் புரிய
வைப்பது யார் என்பதை புரிந்து கொள்வதில்லை. இருந்தாலும் வேறு
யாரும் கட்டளையிடு வதில்லை, பாபா மட்டுமே நான் உங்களுக்கு
ஸ்ரீமத் அளிக்கின்றேன் என்று கூறுகின்றார். ஒன்று என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் நான் என்ன ஞானம் சொல்கிறேனோ அதை தாரணை
செய்யுங்கள் மற்றும் செய்ய வையுங்கள். இந்த தொழிலையே
செய்யுங்கள் அவ்வளவு தான். நல்லது பாபா தங்களுடைய கட்டளைப்
படியே செய்கிறோம். இராஜாவுக்கு முன்னால் இருப்பவர்கள் இப்படி
சொல்வார்கள் - தங்களது கட்டளைப்படியே நடந்துக் கொள்வோம் என்று.
அந்த இராஜாக்கள் கட்டளையிட்டார்கள். இது சிவபாபாவின்
கட்டளையாகும். தங்களுடைய கட்டளைப்படியே சிவபாபா ! என்று
அடிக்கடி சொல்ல வேண்டும். அப்போது குஷியும் இருக்கும். சிவபாபா
கட்டளையிடுகிறார் என்று புரிந்து கொள்வார்கள். சிவபாபாவினுடைய
கட்டளை என்பது நினைவிருக்கும் போது புத்தியின் பூட்டு திறந்து
கொள்ளும். இந்த பயிற்சி இருந்தால் துக்கம் தூரமாகப் போய் விடும்
என்று சிவபாபா கூறுகின்றார். ஆனால் இது தான் கடினமாகும்.
அடிக்கடி மறந்து விடுகிறார்கள். மாயை மறக்கச் செய்து விடுகிறது
என்று ஏன் சொல்ல வேண்டும். நாம் மறந்து விடு கிறோம் ஆகையினால்
தான் தலைகீழான கர்மங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், மிகவும் நன்றாக ஞானம்
கொடுக்கிறார்கள், ஆனால் விகர்மங்கள் வினாசம் ஆவதற்கு தந்தையை
நினைப்பதில்லை. இப்படி நிறைய நல்ல - நல்ல குழந்தைகள்
இருக்கிறார்கள், நினைவு முற்றிலும் இல்லை. நடத்தையின் மூலம்
புரிந்து கொள்ளப் படுகிறது - நினைவில் இல்லை என்றால் பாவம்
அப்படியே இருந்து விடுகிறது பிறகு அதை அனுபவிக்க
வேண்டியிருக்கிறது. இதில் புயலின் விசயமே இல்லை. நான்
ஸ்ரீமத்படி நடப்ப தில்லை, இது என்னுடைய தவறு என்று புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் இங்கே இராஜயோகம் கற்றுக் கொள்ள
வருகிறீர்கள். பிரஜையோகம் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
தாய்-தந்தையர் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களைப்
பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சிம்மாசனதாரியாக ஆவீர்கள்.
இவருக்கு (பிரம்மாவிற்கு) உறுதி செய்யப்பட்டது அல்லவா. இவர்கள்
லஷ்மி- நாராயணனாக ஆகிறார்கள் என்றால் தாய்-தந்தையரை
பின்பற்றுங்கள். மற்ற தர்மத்தவர்கள் தாய்-தந்தையரை
பின்பற்றுவதில்லை. அவர்கள் (நீங்களும்) தந்தையைத் தான் ஏற்றுக்
கொள்கிறார்கள். இங்கே இருவரும் இருக்கிறார்கள். இறைவன்
படைப்பவர் ஆவார். தாயைப் பற்றிய விசயம் மறைமுகமான இரகசியமாகும்.
தாய்-தந்தையர் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி
செய்யாதீர்கள், இதை செய்யுங்கள் என்று புரியவைக்கிறார்கள்.
டீச்சர் எந்தவொரு தண்டனை அளித்தாலும் பள்ளியில் தான் கொடுப்பார்
அல்லவா. என்னை அவமானப்படுத்துகிறீர்கள் என்று குழந்தை சொல்லுமா
என்ன. தந்தை 5-6 குழந்தைகளுக்கு முன்னால் அறை கொடுப்பார். 5-6
பேருக்கு முன்னால் ஏன் அறைந்தீர்கள் என்று குழந்தை கேட்குமா
என்ன. இங்கே குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வி கற்பிக்கப்படுகிறது,
இருந்தாலும் அதன்படி நடக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை
குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.
இங்கே இருந்து கொண்டு டிஸ்சர்வீஸ் செய்தீர்கள் என்றால் கொஞ்ச,
நஞ்சம் என்ன இருக்குமோ அதுவும் முடிந்து விடும். படிக்க
வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். எங்களால் நடக்க முடியாது
என்று விட்டு விடுங்கள். ஏன் நிந்தனை செய்ய வேண்டும். நிறைய
குழந்தைகள் இருக்கிறார்கள். சிலர் படிப்பார்கள், சிலர்
விட்டுவிடுவார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய படிப்பின்
போதையிலிருக்க வேண்டும்.
ஒருவர் மற்றவரிடமிருந்து சேவை வாங்காதீர்கள் என்று பாபா
கூறுகின்றார். அகங்காரம் எதுவும் வரக்கூடாது. மற்றவர்களிடம்
சேவை வாங்குவதும் கூட தேக அகங்காரமாகும். பாபா புரிய வைக்க
வேண்டியிருக்கிறது அல்லவா. இல்லை என்றால் தீர்ப்பாயம்
அமரும்போது, எங்களுக்கு சட்டவிதிகளைப் பற்றி தெரியாது என்று
சொல்வார்கள் ஆகையினால் பாபா புரிய வைத்து விடுகிறார் பிறகு
சாட்சாத்காரம் காட்டி தண்டனை வழங்கப்படும். நிரூபிக்காமல்
தண்டனை கிடைக்குமா என்ன? கல்பத்திற்கு முன்போலவே நன்றாக நிறைய
விசயங்களைப் புரிய வைக்கின்றார். ஒவ்வொருவருடைய
அதிர்ஷ்டத்தையும் பார்க்கப்படுகிறது. நிறைய பேர் சேவை செய்து
தங்களுடைய வாழ்க்கையை வைரத்துக்குச் சமமாக மாற்றுகிறார்கள்,
நிறைய பேர் தங்களுடைய அதிர்ஷ்டத்தில் கோடு போட்டு (வரையறுத்து)
விடுகிறார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை டீச்சர் சத்குருவின் மூலம் என்ன அறிவுரைகள் (ஸ்ரீமத்)
கிடைக்கிறதோ அதன்படி நடக்க வேண்டும். மாயையை குற்றம் கூறாமல்
தங்களுடைய குறைகளை சோதனை செய்து அவற்றை நீக்க வேண்டும்.
2) அகங்காரத்தை தியாகம் செய்து தங்களுடைய படிப்பின் போதையில்
இருக்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களிடத்தில் தன்னுடைய சேவையை
வாங்கக் கூடாது. சகவாசத் திலிருந்து தன்னை மிக-மிக பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
வரதானம்:
தூய சங்கல்பங்களின் (எண்ணங்களின்) சமிஞ்கைகள் மூலம் அனைத்து
காரியங்களையும் செய்து முடிக்கக்கூடிய, எப்போதும் ஒளியின்
கிரீடம் அணிந்தவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் எப்போதும் லேசாக (சுமையற்றவர்களாக)
இருக்கிறார்களோ, அவர்களுடைய சங்கல்பமோ அல்லது நேரமோ ஒருபோதும்
வீணாகாது. எது நடக்க இருக்கின்றதோ, அதுவே அவர்களுக்கு
சங்கல்பமாக வரும். பேச்சின் மூலம் விஷயங்களை விளக்குவது போல,
சங்கல்பத் தின் மூலமே அனைத்து காரியங்களும் நடைபெறும். இத்தகைய
முறையை நீங்கள் கடைபிடிக்கும் போது, இந்த ஸ்தூல உலகம் சூட்சும
உலகமாக மாறும். இதற்காக அமைதியின் சக்தியைச் சேமித்து,
எப்போதும் ஒளியின் கிரீடம் அணிந்தவர் களாக இருங்கள்.
சுலோகன்:
இந்தத் துக்கமான உலகத்திலிருந்து (துக்கதாம்) ஒதுங்கிவிட்டால்,
துக்கத்தின் அலைகள் உங்களை ஒருபோதும் தொட முடியாது.
அவ்யக்த சமிக்கை: நிச்சயம் என்னும் அஸ்திவாரத்தை வலுப்படுத்தி
சதா பயமற்றவராகவும், கவலையற்றவராகவும் இருங்கள்
ஒரு காரின் பேட்டரி பலவீனமாக ஆகும்போது, கார் தானாக
இயங்குவதில்லை; அப்பொழுது மற்றவர்களை வைத்து கொஞ்சம் தள்ள
வேண்டியதாக இருக்கிறது; அதுபோலவே, எந்த ஆத்மாவின் மீது
உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ மற்றும் யாரிடமிருந்து உதவி
கிடைக்கும் என்று கருதுகிறீர்களோ, அவர்களிடம் சிறிது ஒத்துழைப்
பைப் பெற்று முன்னேறிச் செல்ல வேண்டும். பலவீனங்களைப் பற்றி
அதிகம் சிந்திக்க வேண்டாம், அப்பொழுது மகிழ்ச்சியுடன்
முன்னேறிச் செல்வீர்கள்.