26-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் மிகவும் நல்ல சகவாசத்தில் இருக்க வேண்டும். தீய சகவாசத்தின் சாயம் ஏற்பட்டு விட்டது என்றால் விழுந்து விடுவீர்கள். தீய தொடர்பு புத்தியை கீழ்த்தரமானதாக ஆக்கி விடுகிறது.

கேள்வி:
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த ஒரு துடிப்பு இருக்க வேண்டும்?

பதில்:
கிராமம் கிராமமாக போய் சேவை செய்ய வேண்டும் என்ற துடிப்பு உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் எல்லாமே சேவைக்காக உள்ளது. பாபா குழந்தைகளுக்கு அளிக்கும் ஆலோசனையாவது - குழந்தைகளே இந்தப் பழைய உலகத்திலிருந்து உங்களை விடுவித்து கொள்ளுங்கள். எந்த ஒரு பொருள் மீதும் பற்று வைக்காதீர்கள். இவற்றின் மீது மனதை ஈடுபடுத்தாதீர்கள்.

பாடல்:
இந்த பாவங்களின் உலகத்திலிருந்து .. .. .. ..

ஓம் சாந்தி.
பாவ ஆத்மாக்களின் உலகம் மற்றும் புண்ணிய ஆத்மாக்களின் உலகம் – ஆத்மாக் களுக்குத் தான் பெயரிடப்படுகிறது. இப்பொழுது இங்கு துக்கம் இருக்கும் பொழுது முறையிடு கிறார்கள். புண்ணிய ஆத்மாக் களின் உலகத்தில் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிட மாட்டார்கள். இதை யாரோ பண்டிதர் அல்லது சந்நியாசி அல்லது சாஸ்திரவாதி ஆகியோர் ஒன்றும் கூறுவதில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இவர் கூட தானே கூறுகிறார் - நான் இந்த ஞானத்தை அறிந்திருக்கவில்லை. இராமாயணம் ஆகிய சாஸ்திரங்களையோ ஏராளமாக படித்து கொண்டிருந்தேன். மற்றபடி இந்த ஞானத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவரும் கேட்கிறார். இப்பொழுது இது பாவ ஆத்மாக்களின் உலகம் ஆகும். புண்ணிய ஆத்மாக்களுக்காக இவர்கள் வாழ்ந்து போயிருக்கிறார்கள் என்று மட்டுமே கூறுவார்கள். அவ்வளவு தான். பூஜை செய்து விட்டு வந்து விடுவார்கள். சிவனுக்கு பூஜை செய்து விட்டு வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யாருக்கு பூஜை செய்வீர்கள்? உயர்ந்த திலும் உயர்ந்தவர் பகவான் சிவன் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் கீழ்ப்படி தலுள்ள தந்தை, ஆசிரியர், கீழ்ப்படிதலுள்ள குரு ஆவார். கூடவே அழைத்துச் செல்வதற்கான உத்தரவாதம் வேறு எந்த ஒரு குரு போன்றோர் அளிக்க முடியாது. அது கூட அவர்கள் எல்லோ ரையும் அழைத்து செல்வார்களா என்ன? இப்பொழுது நீங்கள் முன்னால் அமர்ந்துள்ளீர்கள். இங்கிருந்து உங்களுடைய வீட்டிற்குச் சென்ற உடனேயே கூட நீங்கள் மறந்து விடுவீர்கள். இங்கு நேரிடையாகக் கேட்கும் பொழுது ஆனந்தமாக இருக்கும். குழந்தைகளே நல்ல முறையில் படியுங்கள் என்று தந்தை அடிக்கடி கூறுகிறார். இதில் கவனக் குறைவாக இருக்காதீர்கள். தீய சகவாசத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இல்லை என்றால் இன்னும் கீழ்த்தரமான புத்தி உடைய வராக ஆகி விடுவீர்கள். நாம் என்னவாக இருந்தோம் என்ன பாவம் செய்தோம் என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இப்பொழுது நாம் இந்த தேவதைகளாக ஆகிறோம். இந்தப் பழைய உலகம் முடியப் போகிறது. பிறகு இங்கு இருக்கும் வீடுகள் பற்றி என்ன அக்கறை கொள்ள வேண்டி உள்ளது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தையும் மறக்க வேண்டும். இல்லை என்றால் தடைகள் ஏற்படுத்தும். இதில் மனம் ஈடுபடுவதே இல்லை. நாம் புதிய உலகத்தில் போய் நம்முடைய வைரம் வைடூரியங் களின் மாளிகைகள் அமைப்போம். இங்கு இருக்கும் பணம், போன்ற ஏதேனும் பொருட்களும் பிடித்திருக்கும் என்றால் சரீரம் விடும் பொழுது அவற்றின் மீது பற்றுதல் ஏற்பட்டு விடும். எனது எனது என்றிருந்து கொண்டால் அவை கடைசியில் முன்னால் நினைவில் வந்து நிற்கும். இதுவோ எல்லாமே இங்கு முடியப் போகிறது. நாம் நம்முடைய ராஜதானியில் வந்து விடுவோம். இதன் மீது என்ன மனதை ஈடுபடுத்த வேண்டி உள்ளது! அங்கு நிறைய சுகம் இருக்கும். பெயரே சொர்க்கம் என்பதாகும். இப்பொழுது நாம் நம்முடைய வதனத் திற்கு (வசிக்குமிடம்) சென்று விடுவோம். இதுவோ இராவணனினுடைய வதனம் ஆகும். நம்முடையது அல்ல. இதிலிருந்து விடுபடுவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். பழைய உலகத்திலிருந்து விடுபடுமாறு செய்விக்கிறார். எனவே தந்தை கூறுகிறார், எந்த ஒரு பொருள் மீதும் பற்று கொள்ளாதீர்கள். வயிறு ஒன்றும் அதிகம் கேட்பதில்லை. தேவையற்ற பொருட்களின் செலவு நிறைய ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்கான துடிப்பு வர வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு கிராமம் கிராமமாக சேவை செய்வதற்கான ஆர்வம் இருக்கிறது. மற்றபடி யாருக்கு சேவை செய்வதற்கான ஆர்வம் இல்லையோ அவர்களை எந்த வேலைக்கு ஆவார்கள்? என்று கூறுவார்கள், எப்படி தந்தையோ அவ்வாறே குழந்தைகள் ஆக வேண்டும். தந்தையினுடைய அறிமுகத்தைத் தான் அளிக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் தந்தையிட மிருந்து ஆஸ்தி பெறுங்கள். நாங்கள் பாபாவின் சேவைக்குச் செல்கிறோம் என்று குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்பட்டால் தந்தையும் தைரியத்தை அதிகரிக்கிறார். தந்தை சேவைக்காக வந்துள்ளார். சேவைக்காக எல்லாமே உள்ளது. இதுவோ தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் அளிக்க வேண்டும். தந்தை ஒரே ஒருவர் ஆவார். பாரதத்தில் வந்திருந்தார். பாரதத்தில் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. நேற்றைய விஷயம் ஆகும் அது. இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பிறகு இராமர் சீதையினுடையது. பிறகு வாம மார்க்கத்தில் விழுந்தீர்கள். இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. படி கீழே இறங்கினீர்கள். இப்பொழுது மீண்டும் முன்னேறும் கலை. ஒரு வினாடியின் விஷயம் ஆகும்.

ஒன்று உண்மையான அன்பு (ரியல் லவ்) மற்றொன்று செயற்கையான அன்பு (ஆர்ட்டிஃபிஷியல் லவ்) தன்னை ஆத்மா என்று உணரும் பொழுது தான் தந்தையிடம் (ரியல் லவ்) உண்மையான அன்பு இருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த உலகத்தின் மீது (ஆர்ட்டிஃபிஷியல் லவ்) செயற்கையான அன்பு இருக்கிறது. இதுவோ முடியப் போகிறது. சேவை செய்பவர்கள் ஒரு பொழுதும் பசியால் இறக்க மாட்டார்கள். எனவே குழந்தைகள் சேவையில் ஆர்வம் கொள்ள வேண்டும். உங்களுடைய ஈசுவரிய சேவை (மிஷன்) மிகவும் சுலப மானது. தர்மம் எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது. கிறிஸ்து வந்தார். கிறித்துவ தர்மத்தை ஸ்தாபித்தார். தர்மம் வளர்ந்து கொண்டே சென்றது. அவருடைய வழிப்படி நடந்து நடந்து கீழே இறங்கி கொண்டே வந்தார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். அரைக் கல்பமாக இராவண இராஜ்யத்தில் நாங்கள் தந்தையை மறந்து விட்டோம். இப்பொழுது தந்தை வந்து விழிப்புறச் செய்துள்ளார். பாபா கூறுகிறார்-நாடகப் படி நீங்கள் விழ வேண்டியே இருந்தது. உங்களுடைய குற்றம் கூட இல்லை. இராவண இராஜ்யத் தில் உலகத்தின் நிலைமை இதுபோல ஆகிவிடுகிறது. இப்பொழுது நான் படிப்பிக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் மீண்டும் உங்களது இராஜ்யத்தைப் பெற்று கொள்ளுங்கள். நான் வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. கடையில் விற்கும் சீ-சீ அசுத்தமான பொருட்களை உட்கொள்ளாதீர்கள். மேலும் என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். இந்த நாடகத்தின் சக்கரம் மீண்டும் (ரிபீட்) திரும்ப நடைபெறும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். உங்களுடைய புத்தியில் நாடகத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் உள்ளது. நீங்கள் யாருக்கு வேண்டு மானாலும் புரிய வைக்க முடியும். முதலிலோ தந்தையின் நினைவு இருக்க வேண்டும். சேவைக்காக தங்களுக்குள் ஒன்று சேர்ந்து துணையாளர்களை அழைத்துக் கொள்ள வேண்டும். தாய்மார்களைக் கூட அழைத்து வர வேண்டும். இதில் பயப்படு வதற்கான எந்த விஷயமும் கிடையாது. படங்கள் ஆகியவை எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும். உங்களது சேவை அதிகமாகி விடும். கூறுவார்கள் - நீங்கள் போய் விடுகிறீர்கள். பிறகு எங்களுக்கு யார் கற்பிப்பார்கள்? கூறுங்கள், நாங்கள் சேவை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். வீடு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அநேகருக்கு நன்மை செய்வதற்கான கருவி ஆகி விடுவீர் கள். தந்தை சேவைக்கான ஊக்க மூட்டுகிறார். குழந்தைகளிடம் தைரியம் இருக்கிறது என்றால் சேவையும் அதிகரிக்கிறது. இது ஒன்றும் (மேளா) திருவிழா அல்ல. 10-15 நாட்கள் மேளா நடந்தது. பிறகு முடிந்து விட்டது என்பதல்ல. இந்த மேளாவோ நடந்து கொள்டே இருக்கும். இங்கு ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு நடக்கிறது. இதற்குத் தான் உண்மையான மேளா என்று கூறப்படுகிறது. அதுவோ இப்பொழுது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சேவை முடிந்து விடும் பொழுது, மேளாவும் முடிந்து போய் விடும். நாடகப்படி குழந்தைகளுக்கு சேவையில் மிகுந்த ஆர்வம் வேண்டும். எல்லையில்லாத தந்தையிடம் இருக்கும் ஞானம் குழந்தைகளின் புத்தியில் உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை மூலமாக நாம் எவ்வளவு உயர்ந்தவராக ஆகிக் கொண்டு வந்துள்ளோம். இது போல நம்மிடம் நாமே உரையாட வேண்டும். தங்களுக்குள் (செமினார்) கருத்தரங்கு நடத்த வேண்டும். பாபாவிடம் ஆலோசனை பெற்று சேவையில் ஈடுபட்டு விடுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் அன்பு மணமகனான அவர் அமர்ந்துள்ளார். இவை எல்லாமே நாடகத்தில் பொருந்தி உள்ளது. கவலைப்பட வேண்டிய எந்த விஷயமும் கிடையாது. இல்லை என்றால் ஸ்தாபனை எப்படி ஆகும். இரண்டாவது இந்த விஷயம் இருக்கிறது, செய்பவர் அடைவார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கல் புத்தியிலிருந்து வைரம் போல ஆகிறீர்கள். தந்தை ஞானத்தின் மூலம் அந்த அளவிற்கு பண்புடையவர்களாக ஆக்குகிறார். மாயை பிறகு மூக்கைப் பிடித்து பின் வாங்குமாறு செய்து விடுகிறது.

குழந்தைகளாகிய நீங்கள் மிகவுமே நல்ல சகவாசத்தில் இருக்க வேண்டும். தீய தொடர்பின் சாயம் பட்டு விடும் பொழுது விழுந்து விடுவீர்கள். பாபா திரைப்படம் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு தடை விதிக்கிறார். யாருக்கு (பயஸ்கோப்) திரைப்படத்தை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிடுகிறதோ அவர்கள் பதீதமாக (தூய்மையற்ற நிலை) ஆகாமல் இருக்க முடியாது. இங்கு ஒவ்வொரு வருடைய செயல்களும் கூட (டர்ட்டி) அசுத்தமாக உள்ளது. பெயரே வைசியாலயம் என்பதாகும். தந்தை சிவாலயத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். வைசியாலயத்திற்கு முழுமையாக நெருப்பு பிடிக்கப்போகிறது. கும்பகர்ணன் போன்று அசுர உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றனர்,. நாம் சிவாலயத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். முதலில் நாம் கூட குரங்குகள் போல இருந்தோம். இது பற்றி இராமாயணத்தில் கூட கதை இருக்கிறது. இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உதவி செய்பவர்கள் ஆகி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் சக்தியினால் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இந்த இராவண இராஜ்யம் முடிந்து விடப்போகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு அநேக விதமான யுக்திகளை (வழி முறைகள்) கூறிக் கொண்டே இருக்கிறார். யாருக்கும் தானமே செய்யவில்லை என்றால், பலன் எப்படி கிடைக்கும்? முதன் முதலாக 10-15 பேருக்கு வழி கூறிய பிறகு உணவு உட் கொள்ள வேண்டும். முதலில் சுபகாரியம் செய்து விட்டு வாருங்கள். இதில் தான் உங்களுக்கு நன்மை உள்ளது. எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இதுவோ பதீதமான (தூய்மையற்ற) உலகம் ஆகும். பதீத பாவனரான ஒரு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவன உலகத்திற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். (அந்த் மதி சோ கதி) கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே எதிர்கால கதி ஆகி விடும். எனவே யாராவது ஒருவருக்கு இறை செய்தி அளித்து விட்டு பிறகு வந்து உணவு உட்கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்வதால் அந்த அளவு உயர்ந்தவராக ஆகி விடுவீர்கள் என்பதையே நீங்கள் எல்லோருக்கும் கூறிக் கொண்டே இருங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

இரவு வகுப்பு - 17.03.1968 :

எப்பொழுதுமே எங்காவது சொற்பொழிவு நிகழ்த்த வேண்டி இருக்கிறது என்றால் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து 2-4 முறை ஒத்திகை (ரிஹர்சல்) பாருங்கள். (பாயிண்ட்ஸ்) குறிப்புக்களைச் சேர்ப்பது, திருத்துவது ஆகியவற்றை செய்து சொற்பொழிவு தயாரியுங்கள். பிறகு துல்லியமான சொற்பொழிவு நிகழ்த்துவீர்கள். முக்கியமாக ஒரு விஷயத்தில் (கீதையின் பகவான் பற்றி) நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் என்றால் எல்லா விஷயங்களிலும் வெற்றி ஏற்பட்டு விடும். இதற்காக மாநாடு ஆகியவையோ நடக்கும் தானே! விருட்சம் அவசியம் வளர்ந்து கொண்டே போக வேண்டி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டே செல்வார்கள். மாயையின் புயல்களோ எல்லோ ரையும் தாக்குகிறது. பாபா நான் காமத்தின் அடி வாங்கி விட்டேன் என்று பெரும்பாலும் எழுது கிறார்கள். இதற்குத்தான் சேமித்த சம்பாதியத்தை இல்லாமல் ஆக்கி விடுவது என்று கூறப்படு கிறது. கோபப்படுவது ஆகிய செயல்கள் செய்தார்கள் என்றால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது என்பார்கள். இதற்காகப் புரிய வைக்க வேண்டி உள்ளது. காமத்தின் மீது வெற்றி அடைந்து (ஜகத்ஜீத்) உலகத்தை வென்றவராக ஆகிறீர்கள். காமத்தில் தோற்றுப்போகும் பொழுது தோல்வி ஆகிறது. காமத்தில் தோற்று விடுபவர்களுக்கு அவர்கள் சேமித்த சம்பாத்தியம் இல்லாமல் போய் விடுகிறது. தண்டனை ஏற்பட்டு விடுகிறது. குறிக்கோள் மிகவும் உயர்ந்தது ஆகும். எனவே மிகவும் எச்சரிக்கை கொள்ள வேண்டி இருக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்பேயும் நமக்கு அரசாட்சி கிடைத்திருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் தெய்வீக இராஜதானி ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படிப்பினால் நாம் அந்த இராஜ தானிக்குச் செல்கிறோம். எல்லாமே படிப்பை பொருத்தது ஆகும். படிப்பு மற்றும் தாரணையினால் தான் தந்தைக்குச் சமானமானவர் ஆவீர்கள். எத்தனை பேரை தனக்குச் சமானமானவராக ஆக்கினீர்கள் என்பது தெரிய வரும் வகையில் ரெஜிஸ்தர் (பதிவேடு) கூட வேண்டும் அல்லவா? எந்த அளவு அதிகமாக தாரணை செய்வீர்களோ அந்த அளவே இனிமையானவர் ஆவீர்கள். மிகவும் (லவ்லி) அன்பான குழந்தைகள் வேண்டும். மனிதர்கள் முக்தியில் செல்ல வேண்டும் என்று எந்த நாளுக்காக மிகுந்த முயற்சி செய்கிறார்களோ அந்த நாள் குழந்தைகளாகிய உங்களுக்கு இன்று வந்து விட்டுள்ளது. தந்தை அனைவருக்கும் ஒட்டு மொத்தமாகவே முக்தி ஜீவன் முக்தி அளிக்கிறார். யார் தேவதையாக ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார்களோ அவர்களே ஜீவன் முக்தியில் வருவார்கள். மற்றவர்கள் எல்லோரும் முக்தியில் செல்வார்கள். கணக்கு மிகச் சரியாக கூற முடியாது. ஒரு சிலர் இருக்கவும் செய்வார்கள். விநாசத்தின் சாட்சாத்காரம் செய்வார்கள். இந்த இன்பகரமான நேரத்தையும் பார்ப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியும் அல்ல நினைவில் அமர்ந்து விட்டீர்கள் என்றால் வேலை ஆகிவிடும் என்பதல்ல. வீடு கிடைத்து விடும் - கிடையாது. அதுவோ நாடகத்தில் என்ன இருக்கிறதோ அதுவே நடக்கிறது. ஆசை வைக்கக் கூடாது. புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டி இருக்கும். மற்றபடி நாடகத்தில் என்ன பொருந்தி இருக்கிறதோ அதுவே தான் நடக்கும். இனி போகப் போக உங்களுடைய விருத்தி (உள்ளுணர்வு) கூட சகோதர சகோதரனுடையதாக ஆகிவிடும். எந்த அளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்வீர்களோ அந்த அளவு அந்த விருத்தி (உள்ளுணர்வு) இருக்கும். நாம் அசரீரியாக வந்திருந்தோம். 84 ஜன்மத்தின் சக்கரம் முடிவடைந்தது. இப்பொழுது கர்மாதீத நிலையில் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். உண்மையில் நீங்கள் யாரிடமும் சாஸ்திரங்கள் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான விஷயமே நினைவு மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையைப் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும். சக்கரவர்த்தி இராஜா ஆக வேண்டும். இந்த சக்கரத்தை மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். இதற்குத் தான் ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என்ற பாடல் உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக் கூடும். அரைக் கல்பம் பக்தி நடக்கிறது. சிறிதளவு கூட ஞானம் இல்லை. ஞானம் இருப்பதே தந்தையிடம் தான், தந்தை மூலமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. இந்தத் தந்தை எவ்வளவு அசாதாரணமானவர் (அன் காமன்) எனவே கோடியில் ஒருவர் வெளிப்படுகிறார். அந்த ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவார்களா என்ன? அவரோ "நானே தந்தை, ஆசிரியர் மற்றும் குரு ஆவேன்" என்று கூறுகிறார். எனவே மனிதர்கள் கேட்டு ஆச்சரியப்படுவார்கள்! பாரதத்தை (மதர் கண்ட்ரி) தாய் நாடு என்று கூறுகிறார்கள். ஏனெனில் அம்பிகையின் பெயர் மிகவும் பிரசித்தமானது. அம்மனுக்கு விழாக்கள் கூட நிறைய நடக்கிறது. அம்பா (அம்மா) என்பது இனிமையான வார்த்தை ஆகும். சிறிய குழந்தைகள் கூட தாயை நேசிக்கிறார்கள் அல்லவா? ஏனெனில் தாய் உணவூட்டி பராமரிக்கிறார். இப்பொழுது அம்பாவின் (பாபா) தந்தை கூட வேண்டும் அல்லவா? இவரோ தத்து எடுக்கப்பட்ட பெண் குழந்தை ஆவார். இவருக்கு கணவனோ கிடையாது. இது புதிய விஷயம் ஆகும் அல்லவா? பிரஜாபிதா பிரம்மா அவசியம் தத்து எடுத்துக் கொண்டே இருப்பார். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை தான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். எவ்வளவு (மேளா) திருவிழாக்கள் நடக்கின்றன, பூஜை ஆகிறது. ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் சர்வீஸ் செய்கிறீர்கள். மம்மா எந்த அளவிற்கு கற்பித்திருப்பாரோ அந்த அளவு வேறு யாரும் கற்பித்திருக்க முடியாது. மம்மா வின் பெயர், புகழ் நிறைய இருக்கிறது. மேளாக்கள் (திருவிழாக்கள்) கூட நிறைய நடக்கிறது. தந்தை தான் வந்து படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய முழு இரகசியத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு தந்தை யினுடைய வீடு பற்றி கூட தெரிய வந்துள்ளது. தந்தையிடமும் அன்பு உள்ளது. வீட்டின் மீது அன்பு உள்ளது. இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது கிடைக்கிறது. இந்தப் படிப்பினால் எவ்வளவு சம்பாத்தியம் ஆகிறது!. எனவே மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் அல்லவா? மேலும் நீங்கள் இருப்பதோ முற்றிலும் சாதாரணமாக. உலகத்திற்குத் தெரியாமல் இருக்கிறது. தந்தை வந்து இந்த ஞானத்தைக் கூறுகிறார். தந்தை தான் வந்து எல்லா புதுப் புது விஷயங்களையும் குழந்தைகளுக்குக் கூறுகிறார். எல்லையில்லாத படிப்பின் மூலம் புது உலகம் அமைகிறது. பழைய உலகத்தின் மீது வைராக்கியம் ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்குள் ஞானத்தின் குஷி இருக்கிறது. தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்ய வேண்டும். வீட்டிற்கோ எல்லோரும் செல்லவே வேண்டி உள்ளது. குழந்தைகளே நான் உங்களுக்கு முக்தி ஜீவன் முக்தியின் ஆஸ்தியை அளிக்க வந்துள்ளேன் என்று தந்தையோ எல்லோருக்கும் கூறுவார் அல்லவா? பிறகு ஏன் மறந்து விடுகிறீர்கள்? நான் உங்களுடைய எல்லையில்லாத தந்தை ஆவேன், இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளேன். பின் நீங்கள் ஸ்ரீமத் படி நடக்க மாட்டீர்களா என்ன? பிறகோ மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடும். இது எல்லையில்லாத நஷ்டம் ஆகும். தந்தையின் கையை விட்டு விட்டீர்கள் என்றால் சம்பாத்தியத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும். நல்லது. குட்நைட். ஓம் சாந்தி.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த உலகத்தில் இருப்பது அனைத்தையுமே மறந்து விட வேண்டும். தந்தைக்குச் சமானமாக கீழ்ப்படிதலுடையவராகி சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்.

2. இந்த பதீத (தூய்மையற்ற) உலகத்தில் தீய சகவாசத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். கடையில் கிடைக்கும் அசுத்தமான உணவை உட் கொள்ளக் கூடாது. திரைப்படம் (பயோஸ்கோப்) பார்க்கக் கூடாது.

வரதானம்:
திரிகாலதரிசியெனும் நிலை மூலமாக வீண் கணக்கை அழித்து விட்டு சதா வெற்றி மூர்த்தி ஆகுக!

திரிகாலதரிசி நிலையில் நிலை பெறுவது என்றால் ஒவ்வொரு எண்ணம், சொல், செயல் யாவும் செய்வதற்கு முன்பே வீணானதா நல்லதா என சோதனை செய்வதாகும். வீணாகயிருப்பின் ஒரு நொடியில் பன்மடங்கு நட்டம் ஏற்படும். நல்லதெனில் ஒரு நொடியில் பன் மடங்கு வருமான மாகும். ஒருநொடியில் செய்யும் விண் விசயமும் வருமானத்தில் மிகப் பெரிய நஷ்டம் ஏற்படுத்தும். இதனால் செய்த வருமானம் யாவும் மறைந்து விடும். எனவே ஒரு காலத்தை (நிகழ் காலம்) மட்டும் பார்த்து செயல்படுவதை விடுத்து திரிகாலதரிசி (முக்காலம்) நிலையில் நிலை பெற்று செய்தால் வீண் என்பது அழிந்தே போகும் சதா வெற்றி மூர்த்தி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
புகழ், பெருமை, சாதனங்களின் தியாகமே மிக உயர்ந்த தியாகமாகும்.

அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும் கையாளுங்கள்.

உடலும் உயிரும் இரு வேறு பொருட்கள். ஆனால் அறியாமையின் வசமாகி இரண்டையும் ஒன்றாக்கி விட்டனர். எனது என்பதை நான் என புரிந்து கொண்டனர். இந்த தவறினாலேயே இத்தனை மன இறுக்கம், துக்கம், அமைதியின்மை உருவாயிற்று. அவ்வாறே இந்த தூய்மை யின்மையும் மறதியும் சூத்திர சம்ஸ்காரமேயன்றி பிராமணரது அல்ல. இதனையும் எனது என புரிந்ததால் மாயைக்கு வசமாகி இன்னலடைகின்றீர்கள்.