27-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு அடியிலும்
ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். இல்லையெனில் மாயா
ஒன்றுமில்லாத ஏழையாக ஆக்கிவிடும். இந்தக் கண்கள் மிகவும்
ஏமாற்றம் தருகின்றன. இவற்றிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளை மாயா அதிக
விகர்மங்கள் செய்ய வைக்கிறது? யக்ஞத்தில் விக்ன ரூபமாக
இருப்பவர் யார்?
பதில்:
யாருக்கு தன்னைப் பற்றிய
அகங்காரம் உள்ளதோ, மாயா அவர்களை அதிக விகர்மங்கள் செய்ய
வைக்கிறது. அப்படிப்பட்ட போலி அகங்காரம் உள்ளவர்கள் முரளியும்
கூடப்படிக்கமாட்டார்கள். அதுபோல் அலட்சியமாக இருப்பதால் மாயா
அடி கொடுத்து ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆக்கிவிடுகின்றது.
யாருடைய புத்தியில் பரசிந்தனையின் விஷயங்கள் உள்ளனவோ, அவர்கள்
விக்ன ரூபம் ஆகின்றனர். இது மிகக் கெட்ட பழக்கமாகும்.
ஓம் சாந்தி.
ஆன்மிகக் குழந்தைகளுக்கு பாபா புரிய வைத்துள்ளார், இங்கே
குழந்தைகள் நீங்கள் இந்தச் சிந்தனையோடு அவசியம் அமர
வேண்டியுள்ளது - இவர் தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும்
உள்ளார், சுப்ரீம் குருவாகவும் உள்ளார். மேலும் இதையும் நீங்கள்
உணர்கிறீர்கள், பாபாவை நினைவு செய்து-செய்து தூய்மையாகி,
தூய்மையான உலகத்திற்கு சென்றுவிடுவோம். பாபா புரிய வைத்துள்ளார்
- தூய்மையான பரந்தாமத்தில் இருந்து தான் நீங்கள் கீழே இறங்கி
வந்திருக்கிறீர்கள். முதலில் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள்.
பிறகு சதோ-ரஜோ-தமோவில் வந்தீர்கள். இப்போது நீங்கள் புரிந்துக்
கொண்டிருக்கிறீர்கள், நாம் கீழே விழுந்துவிட்டோம். தற்சமயம்
நீங்கள் சங்கமயுகத்தில் இருந்தபோதிலும் ஞானத்தின் மூலம் இதை
அறிந்திருக்கிறீர்கள் - நாம் விலகி வந்துவிட்டோம். பிறகு நாம்
சிவபாபாவின் நினைவில் இருக்கிறோம் என்றால் சிவாலயம் தொலைவில்
இல்லை. சிவபாபாவை நினைவே செய்யவில்லை என்றால் சிவாலயம் அதிக
தூரம் உள்ளது. தண்டனைகள் அடைய வேண்டி உள்ளது, அதனால் அதிக
தூரமாகிவிடுகின்றது. ஆக, தந்தை குழந்தைகளுக்கு அதிகக் கஷ்டம்
கொடுப்பதில்லை. மனம்-சொல்-செயலால் தூய்மையாக வேண்டும் இதை
அடிக்கடி சொல்கிறார். இந்தக் கண்களும் கூட அதிகமாக
ஏமாற்றுகின்றன. மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டியுள்ளது.
பாபா புரிய வைத்துள்ளார் - தியானமும் (டிரான்ஸ்) யோகமும்
முற்றிலும் வேறுபட்டவை. யோகம் என்றால் நினைவு. கண்களைத்
திறந்துக் கொண்டே நினைவு செய்ய முடியும். டிரான்ஸில் போவது
யோகம் எனச் சொல்லப்படுவதில்லை. டிரான்ஸில் செல்கின்றனர் என்றால்
அது ஞானம் என்றும் சொல்லப்படுவதில்லை யோகம் என்றும்
சொல்லப்படுவதில்லை. டிரான்ஸில் செல்பவர்கள் மீது மாயாவும்
அதிகம் போரிடுகின்றது. அதனால் இதில் மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டியுள்ளது. பாபாவின் விதிமுறைப்படி நினைவு இருக்க
வேண்டும். விதிமுறைக்குப் புறம்பான ஏதேனும் காரியம் செய்தால்
மாயா முற்றிலும் கீழே வீழ்த்திவிடும். டிரான்ஸில் செல்வதற்கு
ஒருபோதும் ஆசையே வைக்கக் கூடாது. இச்சா மாத்திரம் அவித்யா (ஆசை
பற்றி அறியாதிருக்க வேண்டும்). நீங்கள் எந்த ஓர் ஆசையும்
வைக்கக் கூடாது. பாபா, உங்கள் அனைத்து ஆசைகளையும் கேட்காமலே
நிறைவேற்றி வைக்கிறார் - பாபாவின் கட்டளைப்படி நடந்தால் மட்டும்
போதும். பாபாவின் கட்டளைக்குப் புறம்பாக நடந்து, தலைகீழான
வழியைப் பின்பற்றினால் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு பதிலாக
நரகத்தில் விழ நேரிடலாம். கதை உள்ளது, யானையை முதலை விழுங்கியது
என்று. அநேகருக்கு ஞானம் கொடுப்பவர்கள், போக் (பிரசாதம்)
வைப்பவர்கள் இன்று இல்லாமல் போயினர். ஏனென்றால் விதிமுறைக்கு
விரோதமாக நடக்கின்றனர் என்றால் முழுமையாக மாயாவினுடையவர்கள்
ஆகிவிடுகின்றனர். தேவதையாக ஆகி-ஆகியே அசுரராக ஆகிவிடுகின்றனர்.
அதனால் இது போன்று நடந்து கொள்வதில் அதிக எச்சரிக்கை தேவை. தன்
மீது கட்டுப்பாடு வைக்க வேண்டியுள்ளது. பாபாவோ குழந்தைகளுக்கு
எச்சரிக்கை விடுக்கிறார். ஸ்ரீமத்துக்கு விரோதமாக நடக்கக்
கூடாது. அசுர வழிப்படி நடந்ததால் தான் உங்களுக்கு இறங்கும் கலை
ஆயிற்று. எங்கிருந்து ஒரேயடியாக எங்கே வந்து
சேர்ந்திருக்கிறீர்கள்! முற்றிலும் கீழே வந்து
சேர்ந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட ஸ்ரீமத் படி நடக்கவில்லை,
பொருட்படுத்தாமல் இருந்தீர்கள் என்றால் பதவி மிகக் கீழானதாக
ஆகிவிடும். பாபா நேற்றும் கூடப் புரிய வைத்திருந்தார்,
ஸ்ரீமத்தின் ஆதாரம் இல்லாமல் எது செய்தாலும் சேவைக்கு மிகுந்த
குந்தகம் விளைவிப்பதாக ஆகும். ஸ்ரீமத் மீறி எதை செய்தாலும் கீழே
விழுந்து கொண்டே தான் செல்வீர்கள். பாபா ஆரம்பத்திலிருந்தே
மாதாக்களை நிமித்தமாக வைத்துள்ளார். ஏனென்றால் கலசமும்
மாதாக்களுக்குக் கிடைக்கின்றது. வந்தே மாதரம் எனப்
பாடப்பட்டுள்ளது. பாபாவும் மாதாக்களின் கமிட்டி ஒன்றை அமைத்தார்.
அவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்தார். பெண் குழந்தைகள்
நம்பிக்கைக்கு உரியவர்கள். ஆண்கள் அதிகமாக திவாலாகி (தோற்று)
விடுகின்றனர். ஆகவே பாபாவும் கலசத்தை தாய்மார்கள் மீது
வைக்கிறார். இந்த ஞான மார்க்கத்தில் தாய்மார்களும் கூட
திவாலாகலாம். பத்மாபதம் பாக்கியசாலி ஆகக் கூடியவர்கள் யாரோ,
அவர்களும் கூட மாயாவிடம் தோல்வியுற்று திவாலாக முடியும். இதில்
ஆண்-பெண் இருவருமே திவாலாக முடியும். அதில் ஆண்கள் மட்டும்
திவாலாகின்றனர். இங்கோ பாருங்கள் எத்தனைப் பேர் தோல்வியுற்றுச்
சென்றுவிட்டனர்! அதாவது திவாலாகி விட்டனர் இல்லையா? பாபா
வந்துப் புரிய வைக்கிறார் - பாரதவாசிகள் முழுமையாக திவாலாகிப்
போயுள்ளனர். மாயா எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! நாம்
என்னவாக இருந்தோம் எனப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
எங்கிருந்து ஒரேயடியாக கீழே விழுந்து விட்டுள்ளனர்! இங்கேயும்
மேலே ஏறி-ஏறிப் பிறகு ஸ்ரீமத்தை மறந்து தன்னுடைய வழிப்படி
நடக்கின்றனர் என்றால் திவாலாகி விடுகின்றனர். இப்போது
சொல்லுங்கள், அவர்களின் நிலை என்னவாகும்? அவர்களோ
திவாலாகின்றனர், பிறகு 5-7 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து நின்று
கொள்கின்றனர். இப்படி 84 பிறவிகளுக்கு திவாலாகி விடுகின்றனர்.
பிறகு உயர்ந்த பதவிப் பெற முடியாது. திவாலாகிக் கொண்டே தான்
இருப்பார்கள். எவ்வளவு மகாரதிகள் அநேகரை உயர்த்திவிட்டனர்.
இன்று அவர்கள் இல்லை. தோல்வி அடைந்துவிட்டார்கள். இங்கே
உயர்ந்த பதவிகளோ நிறைய உள்ளன. ஆனால் எச்சரிக்கையாக இல்லை
என்றால் மேலிருந்து முற்றிலும் கீழே விழுந்து விடுவார்கள். மாயா
விழுங்கிவிடுகின்றது. குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். தன்னுடைய வழிப்படி கமிட்டிகள் முதலியவற்றை அமைப்பது
என்றால் அதில் ஒன்றும் இருக்கப் போவதில்லை. பாபாவிடம்
புத்தியோகத்தை வையுங்கள் - இதன் மூலம் தான் சதோபிரதானமாக ஆக
வேண்டும். பாபாவுடையவர்களாக ஆகிவிட்டுப் பிறகு பாபாவிடம் யோகம்
வைக்கவில்லை, ஸ்ரீமத்துக்கு விரோத மாக நடக்கின்றனர் என்றால்
உடனே வீழ்ந்துவிடுகின்றனர். தொடர்பே விட்டுப் போய்விடுகிறது.
இணைப்பு விடுபட்டுப் போகின்றது. இணைப்பு விடுபட்டால் சோதித்துப்
பார்க்க வேண்டும், மாயா நம்மை ஏன் இவ்வளவு தொந்தரவு செய்கிறது?
முயற்சி செய்து பாபாவுடன் தொடர்பை இணைக்க வேண்டும்.
இல்லையென்றால் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகும்? விகர்மங்கள்
செய்வதால் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகிவிடுகின்றது. உயரத்தில்
ஏறி-ஏறி கீழே விழுந்துவிடுகின்றனர். இதுபோல் அநேகர் உள்ளனர்
என்பதை அறிவீர்கள். ஆரம்பத்தில் எவ்வளவு ஏராளமான பேர் வந்து
பாபாவுடையவர்களாக ஆனார்கள்! பட்டியில் வந்தனர். பிறகு இன்று
அவர்கள் எங்கே சென்றனர்? கீழே விழுந்துவிட்டனர். ஏனென்றால்
பழைய உலகம் நினைவு வந்துவிட்டது. இப்போது பாபா சொல்கிறார், நான்
இப்போது உங்களை எல்லையற்ற வைராக்கியம் கொள்ள வைக்கிறேன். இந்தப்
பழைய தூய்மையற்ற உலகின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. மனதை
சொர்க்கத்தில் ஈடுபடுத்துங்கள். இதில் முயற்சி வேண்டும். இந்த
இலட்சுமி-நாராயணராக ஆக விரும்புகிறீர்கள் என்றால் முயற்சி
செய்ய வேண்டும். புத்தியோகம் ஒரு தந்தையிடம் இருக்க வேண்டும்.
பழைய உலகின் மீது வைராக்கியம். நல்லது, பழைய உலகை மறந்துவிட
வேண்டும் என்பது நல்லது தான். ஆனால் எதை நினைவு செய்வது?
சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு
முடியுமோ, அமரும்போதும், எழுந்திருக்கும்போதும், நடமாடும்போதும்
பாபாவை நினைவு செய்யுங்கள். எல்லையற்ற சுகத்தின் சொர்க்கத்தினை
நினைவு செய்யுங்கள். இது மிகவும் சுலபமானது. இந்த இரண்டு
ஆசைகளிலும் தலைகீழாக நடந்தால் பதவி கீழானதாக ஆகிவிடும். நீங்கள்
இங்கே வந்திருப்பதே நரனில் இருந்து நாராயணனாக ஆவதற்குத் தான்.
அனைவருக்கும் சொல்கிறீர்கள், தமோபிரதானில் இருந்து சதோபிரதானம்
ஆக வேண்டும் என்று. ஏனென்றால் திரும்பிச் செல்லும் பயணம்
நடைபெறுகின்றது. உலகத்தின் சரித்திரம்-பூகோளம் திரும்பவும்
அப்படியே நடைபெறுகிறது என்றால் நரகத் திலிருந்து சொர்க்கம்,
பிறகு சொர்க்கத்திலிருந்து நரகம். இந்தச் சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது. பாபா சொல்லியிருக்கிறார், இங்கே சுயதரிசனச்
சக்கரதாரி ஆகி அமர்ந்திருங்கள். இதே நினைவில் இருங்கள், நாம்
எத்தனைத் தடவை இந்தச் சக்கரத்தைச் சுற்றியுள்ளோம்? நாம்
சுயதரிசனச் சக்கரதாரி, இப்போது மீண்டும் தேவதை ஆகிறோம். உலகில்
யாருமே இந்த இரகசியத்தை அறிந்திருக்கவில்லை. இந்த ஞானத்தை தேவதை
களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தூய்மையாகவே இருப்பவர்கள்.
சங்கொலி எழுப்புவதற்கு அவர்களிடம் ஞானம் கிடையாது.
பவித்திரமாகவும் உள்ளனர். அதனால் அவர்களுக்கு அடையாளம்
தருவதற்கான தேவை கிடையாது. எப்போது இருவரும் சேர்ந்து
சதுர்புஜமாக உள்ளனரோ, அப்போது அடையாளம் உள்ளது. உங்களுக்கும்
அடையாள சின்னம் கொடுப்பதில்லை. ஏனென்றால் நீங்கள் இன்று தேவதை,
நாளை பிறகு கீழே இறங்கிவிடுகிறீர்கள். மாயா வீழ்த்திவிடுகிறது
இல்லையா? பாபா தேவதை ஆக்குகிறார், மாயா பிறகு
அசுரனாக்கிவிடுகிறது. அநேக விதமாக மாயா பரீட்சை செய்கிறது. பாபா
இப்போது புரிய வைக்கிறார், அதனால் தெரிய வருகிறது. உண்மையிலேயே
நமது நிலை கீழானதாகிவிட்டது. எத்தனைப் பேர் பாவம், தங்களின்
அனைத்தையும் சிவபாபாவின் கஜானாவில் சேமிப்பாக்கிப் பிறகும் கூட
எப்போதாவது மாயாவிடம் தோல்வி அடைந்துவிடுகின்றனர்.
சிவபாபாவுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். பிறகு ஏன் மறந்து
போகிறீர்கள்? இதில் யோகத்தின் யாத்திரை முக்கியமானதாகும்.
நினைவினால் தான் தூய்மையாக ஆக வேண்டும். ஞானத்தோடு கூடவே
தூய்மையும் வேண்டும். நீங்கள் அழைக்கவும் செய்கிறீர்கள், பாபா
வந்து எங்களை தூய்மையாக்குங்கள், அப்போது நாங்கள்
சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். நினைவு யாத்திரையே
தூய்மையாகி உயர்ந்த பதவி பெறுவதற்காகத் தான். யார் இங்கிருந்து
விட்டுச் சென்றுவிடுகிறார்களோ, பிறகும் ஏதாவது கொஞ்சம் ஞானம்
கேட்டுள்ளனர் என்றால் சிவாலயத்திற்கு அவசியம் வருவார்கள். பிறகு
பதவி எப்படி வேண்டுமானாலும் அடையலாம், ஆனால் நிச்சயமாக
சொர்க்கத்திற்கு வருவார்கள். மற்றப்படி உயர்ந்த பதவி இருக்காது.
சொர்க்கம் என்ற பெயரை மட்டும் கேட்டுக் குஷி அடைந்து
விடக்கூடாது. .பெயிலாகி ஒன்றுக்கும் உதவாத பதவி பெறுவது
என்பதில் குஷியடைந்துவிடக் கூடாது. சொர்க்கம் தான் என்றாலும்
அதில் பதவிகளோ அதிகம் உள்ளன இல்லையா? மன வருத்தம் வரத் தான்
செய்கிறது இல்லையா? - நான் வேலைக்காரன், நான் தோட்டி! கடைசியில்
உங்களுக்கு அனைத்தும் சாட்சாத்காரமாகும் - நாம் என்னவாக ஆவோம்?
இந்த நிலை வருவதற்கு நாம் எந்த மாதிரி விகர்மங்கள் செய்துள்ளோம்?
நான் ஏன் மகாராணி ஆகவில்லை? ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாகச்
செல்வதால் நீங்கள் பல கோடிக்கு அதிபதி (பதம்பதி) ஆக முடியும்.
எச்சரிக்கையாக இல்லையென்றால் அதிபதி ஆக முடியாது. கோவில்களில்
தேவதைகளுக்கு பதம்பதிக்கான (தாமரை) அடையாளம் காட்டுகின்றனர்.
வித்தியாசத்தையோ புரிந்துக் கொள்ள முடியும் இல்லையா?
பதவிகளிலும் அதிக வித்தியாசம் உள்ளது. இப்போது கூடப் பாருங்கள்,
பதவிகள் எத்தனை உள்ளன! எவ்வளவு பகட்டு, ஆடம்பரம் உள்ளது!
இருப்பதோ அல்பகால சுகம்! ஆக, பாபா இப்போது சொல்கிறார், இந்த
உயர்ந்த பதவி பெற வேண்டும். இதற்காக அனைவரும் கை
உயர்த்துகின்றனர் என்றால் அவ்வளவு புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
கை உயர்த்துகிறவர்களும் தாங்களே விட்டுப் போகின்றனர். இவர்கள்
தேவதை ஆகக்கூடியவர்களாக இருந்தனர் எனச் சொல்வார்கள்.
புருஷார்த்தம் செய்யும்போதே இல்லாமல் போய் கை உயர்த்துவது
சுலபம். அநேகருக்குப் புரிய வைப்பதும் கூட சுலபமானது தான்.
மற்றவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டுள்ள மகாரதிகளும் காணாமல்
போய்விடுகின்றனர். மற்றவர்களுக்கு நன்மை செய்துவிட்டுத்
தங்களுக்குத் தீமை செய்துக் கொண்டு அமர்ந்துள்ளனர். அதனால் பாபா
புரிய வைக்கிறார், எச்சரிக்கையாக இருங்கள். உள்முக நோக்கில்
இருந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். எந்த விதத்தில்? பாபா
நம்முடைய தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார்,
சத்குருவாகவும் உள்ளார், நாம் நம்முடைய இனிய வீட்டுக்குச்
சென்றுக் கொண்டிருக்கிறோம். இந்த ஞானம் முழுவதும் உள்ளுக்குள்
இருக்க வேண்டும். பாபாவிடம் ஞானம் மற்றும் யோகம் இரண்டும்
உள்ளன. உங்களிடமும் இருக்க வேண்டும். சிவபாபா படிப்பு சொல்லித்
தருகிறார் என்றால் ஞானமும் ஆகிறது, நினைவும் ஆயிற்று. ஞானம்,
யோகம் இரண்டும் சேர்ந்தாற்போல் நடைபெறுகின்றன. யோகத்தில்
அமர்ந்து சிவபாபாவை நினைவு செய்துக் கொண்டே இருக்கும்போது ஞானம்
மறந்துப் போய்விட்டது என்று இருக்கக் கூடாது. பாபா யோகம்
கற்றுத் தருகிறார் என்றால் ஞானம் மறந்து விடுமா என்ன? ஞானம்
முழுவதும் அவரிடம் உள்ளது. குழந்தைகளாகிய உங்களிடமும் கூட இந்த
ஞானம் இருக்க வேண்டும். படிக்க வேண்டும். எப்படிப்பட்ட கர்மத்தை
நான் செய்கிறேனோ, என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள்.
நான் முரளி படிக்கவில்லை என்றால் மற்றவர்களும் படிக்க
மாட்டார்கள். நான் எப்படி துர்கதியை அடைவேனோ, அதுபோல்
மற்றவர்களும் துர்கதி அடைவார்கள். மற்றவர்களை விழச் செய்வதற்கு
நான் ஒரு கருவி ஆகிவிடுவேன். அநேகக் குழந்தைகள் முரளி
படிப்பதில்லை. பொய்யான அகங்காரம் வந்துவிடுகின்றது. மாயா உடனே
போரிடுகின்றது. ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
இல்லையென்றால் ஏதாவது விகர்மம் ஆகிவிடுகின்றது. அநேகக்
குழந்தைகள் தவறுகள் செய்கின்றனர். பிறகு அழிந்து போகின்றனர்.
கவனக்குறைவினால் மாயா அடி கொடுத்து ஒரு பைசாக்கூடப்
பெறாதவர்களாக ஆக்கிவிடுகின்றது. இதில் மிகவும் புரிதல் வேண்டும்.
அகங்காரம் வருவதால் மாயா அதிக விகர்மங்கள் செய்ய
வைத்துவிடுகின்றது. கமிட்டி ஏதாவது அமைக்கிறீர்கள் என்றால்
அதில் ஓரிரு பெண்களும் அவசியம் இருக்க வேண்டும். அவர்களின்
ஆலோசனைப்படி காரியம் நடக்க வேண்டும். கலசமோ லட்சுமி மீது
வைக்கப்படுகின்றது இல்லையா? பாடலும் உள்ளது, அமிர்தம் அருந்தச்
செய்த போது அசுரர்களும் கூட அமர்ந்து அருந்தினர் என்று. பிறகு
எங்காவது யக்ஞத்தில் விக்னம் ஏற்படுத்துகின்றனர். அநேக விதமான
விக்னங்களை ஏற்படுத்துகிறவர்கள் உள்ளனர். நாள் முழுவதும்
புத்தியில் பரசிந்தனையின் விஷயங்கள் உள்ளன. இது மிகவும்
தீயதாகும். ஏதாவது பிரச்சினை என்றால் பாபாவுக்கு ரிப்போர்ட்
செய்யுங்கள். சீர்திருத்துபவரோ ஒரு தந்தை தான். நீங்கள் உங்கள்
கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் தந்தையின்
நினைவில் இருங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுங்கள்.
அப்போது இதுபோல் ஆக முடியும். மாயா மிகவும் கடுமையானது. அது
யாரையும் விட்டு வைப்பதில்லை. சதா தந்தைக்கு செய்தியை எழுதிக்
கொண்டே இருக்க வேண்டும். வழிகாட்டுதல் பெற்றுக் கொண்டே இருக்க
வேண்டும். இவ்விதமோ ஒவ்வொரு வழிகாட்டுதலும் கிடைத்துக் கொண்டு
தான் இருக்கிறது. குழந்தைகள் புரிந்துக் கொண்டுள்ளனர், பாபாவோ
தாமாகவே இந்தப் பிரச்சினையில் புரிய வைக்கலாம், அவர் அந்தர்யாமி
(நமக்குள் இருப்பதை அறிவார்) தானே என்று நினைக்கின்றனர். பாபா
சொல்கிறார் - அப்படியில்லை, நானோ ஞானம் கற்பிக்கிறேன். இதில்
அந்தர்யாமியின் விஷயமே கிடையாது. ஆம், இவர்கள் அனைவரும் என்
குழந்தைகள் என்பதை அறிந்துள்ளார். ஒவ்வொருவருக்குள் உள்ள
ஆத்மாக்கள் என்னுடைய குழந்தைகள். மற்றபடி தந்தை
அனைவருக்குள்ளும் அமர்ந்துள்ளார் என்பது கிடையாது. மனிதர்கள்
தலைகீழாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
பாபா சொல்கிறார், நான் அறிவேன், அனைவரின் ஆசனத்திலும் (புருவமத்தி)
ஆத்மா அமர்ந்துள்ளது. இதுவோ எவ்வளவு சுலபமான விஷயம்! பிறகும்
தவறாக பரமாத்மா சர்வவியாபி எனச் சொல்லிவிடுகின்றனர். இது
முக்கியமான ஒரு பிழையாகும். இதன் காரணத்தால் இவ்வளவு கீழே
விழுந்துவிட்டுள்ளனர். உலகத்தின் எஜமானர் ஆக்குபவரை நீங்கள்
நிந்தனை செய்கிறீர்கள். அதனால் பாபா சொல்கிறார், யதா யதாஹி.........
பாபா இங்கே வருகிறார் என்றால் குழந்தைகள் நல்லபடியாக விசார்
சாகர் மந்தன் செய்ய வேண்டும். ஞானத்தைப் பற்றி அதிகம் சிந்தனை
செய்ய வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும் அப்போது உங்களுக்கு
நீங்களே நன்மை செய்து கொள்ள முடியும். இதில் பைசா முதலியவற்றின்
விசயமும் கிடையாது. யாரும் பட்டினியாலோ சாகமாட்டார்கள். எவ்வளவு
பாபாவிடம் சேமிக்கிறார்களோ, அவ்வளவு பாக்கியம் உருவாகின்றது.
பாபா புரிய வைத்துள்ளார், ஞானம் மற்றும் பக்திக்குப் பிறகு
வைராக்கியம். வைராக்கியம் என்றால் அனைத்தையும் மறந்துவிட
வேண்டியுள்ளது. தன்னை பற்றி-ருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.
சரீரத்திலிருந்து நாம் ஆத்மா இப்போது போய்க் கொண்டிருக்கிறோம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தன் மீது மிகுந்த கட்டுப்பாடு வைக்க வேண்டும். ஸ்ரீமத்தில்
ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மிகமிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருபோதும் எந்த ஒரு
விதிமுறைக்குப் புறம்பான காரியமும் செய்யக் கூடாது.
2. உள்முகநோக்கில் இருந்து ஒரு பாபாவிடம் புத்தியின் தொடர்பை
இணைக்க வேண்டும். இந்தத் தூய்மையற்ற பழைய உலகத்திடம் எல்லையற்ற
வைராக்கியம் வைக்க வேண்டும். புத்தியில் இருக்க வேண்டும் -
எந்த மாதிரிக் கர்மத்தை நான் செய்கிறேனோ, என்னைப் பார்த்து
மற்றவர்களும் செய்வார்கள்.
அவ்யக்த இˆôரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்தி-ருந்து
விடுபட்டு
ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
ஜீவன் பந்தனத்தின் கூடவே ஜீவன் முக்தியை அனுபவம் செய்ய வேண்டும்.
அங்கோ ஜீவன் பந்தனத்தின் விஷயம் என்பதே கிடையாது. அங்கு (சத்யுகம்)
அந்த பிராலப்தின் அனுபவத்தில் இருப்போம். முக்தி தாமத்தின்
அனுபவத்தை இங்கு அனுபவம் செய்ய முடியும், அங்கு முக்தி
தாமத்தில் அனுபவம் செய்ய முடியாது. ஆகையால் சங்மயுகத்தில்
முக்தி ஜீவன்முக்தியின் அனுபவம் செய்யுங்கள். ஆஸ்திக்கு அதிகாரி
ஆகிவிட்டீர்கள், இப்பொழுது அதை தாரணை செய்து முழு இலாபத்தை
பெறுங்கள்.
|
|
|
|