27-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுடைய முகம் இப்போது சொர்க்கத்தின் பக்கம் உள்ளது. நீங்கள் நரகத்திலிருந்து விலகி சொர்க்கத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறீர்கள். அதனால் புத்தியின் யோகத்தை நரகத்திலிருந்து வெளியில் கொண்டு வாருங்கள்.

கேள்வி:
அனைத்தையும் விட உயர்ந்த மற்றும் சூட்சுமமான இலக்கு எது? அதை யார் கடந்து செல்ல முடியும்?

பதில்:
குழந்தைகள் நீங்கள் சொர்க்கத்தின் பக்கம் முகத்தை வைத்திருக்கிறீர்கள். மாயா உங்கள் முகத்தை நரகத்தின் பக்கமாகத் திருப்பி வைத்து விடுகிறது. அநேகப் புயல்களைக் கொண்டு வரு கின்றது. அந்தப் புயல் களைக் கடந்து செல்ல வேண்டும் - இது தான் சூட்சுமமான இலக்காகும். இந்த இலக்கைக் கடந்து செல்வதற்காக முழுமையாகப் பற்றற்றவராக ஆக வேண்டும். நிச்சயம் மற்றும் தைரியத்தின் ஆதாரத்தில் இதைக் கடந்து செல்ல முடியும். விகாரிகளுக்கு நடுவில் இருந்தவாறே நிர்விகாரியான அன்னப்பறவை ஆக வேண்டும் - இது தான் முயற்சியாகும்.

பாடல்:
பலவானின் யுத்தம் பலமற்றவனோடு..........

ஓம் சாந்தி.
புத்திசாலியான குழந்தைகள் அந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள். யாருடைய புத்தியோகம் சாந்திதாமம் மற்றும் சொர்க்கத்தின் பக்கம் உள்ளதோ, அவர்களுக்குத் தான் புயல் வீசுகின்றது. பாபாவோ இப்போது உங்கள் முகத்தைத் திருப்பி வைக்கிறார். அஞ்ஞான காலத்தில் கூட பழைய வீட்டிலிருந்து முகம் திரும்பி விடுகின்றது. அது எப்போது தயாராகும் என்று பிறகு புதிய வீட்டை நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக் கும் -எப்போது நமது சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகும், பிறகு சுகதாமம் வருவோம் என்று கவனத்தில் உள்ளது. இந்த துக்கதாமத்திலிருந்தோ அனைவருமே சென்றாக வேண்டும். முழு சிருஷ்டியின் மனிதர்கள் அனைவருக்கும் பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - குழந்தைகளே, இப்போது சொôக்கத்தின் வாசல் திறந்து கொண்டிருக்கிறது. இப்போது உங்கள் புத்தி யோகம் சொர்க்கத்தின் பக்கம் செல்ல வேண்டும். சொர்க்கத்திற்குச் செல்பவர்கள் பவித்திர மானவர்கள் எனச் சொல்லப்படுவார்கள். நரகத்திற்குச் செல்பவர்கள் அபவித்திரமானவர்கள் எனச் சொல்லப்படுவார்கள். இல்லற விவகாரங்களில் இருந்தாலும் புத்தியோகத்தை சொர்க்கத்தின் பக்கம் ஈடுபடுத்த வேண்டும். தந்தையின் புத்தியோகம் சொர்க்கத்தின் பக்கம் மற்றும் குழந்தை களினுடையது நரகத்தின் பக்கம் உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள், அப்போது இருவரும் ஒரே வீட்டில் எப்படி இருக்க முடியும்? அன்னப்பறவையும், கொக்கும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க முடியாது. மிகவும் கடினமாகும். அவர்களுடைய புத்தியோகம் இருப்பதே 5 விகாரங்களின் பக்கமாக. அவர்கள் நரகத்தின் பக்கம் செல்பவர்கள், இவர்கள் சொர்க்கத்தின் பக்கம் செல்பவர்கள் என்றால் இருவரும் ஒன்றாக இருக்க முடியாது. பெரிய குறிக்கோளாகும். தந்தை பார்க்கிறார், நம்முடைய குழந்தையின் முகம் நரகத்தின் பக்கமாக உள்ளது, நரகத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது என்றால் என்ன செய்ய வேண்டும்? நிச்சயமாக வீட்டில் சண்டை வரும். இதுவும் ஒரு ஞானமா…. பையன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது........எனக் கேட்பார்கள்! இல்லற விவகாரங்களில் இருப்பவர்களோ அநேகம் இல்லையா? குழந்தையின் முகம் நரகத்தின் பக்கம் என்றால் நரகத்தின் பக்கம் செல்ல விரும்புகிறார்கள். தந்தை சொல்கிறார், நரகத்தின் பக்கம் புத்தியோகத்தை வைக்காதீர்கள். ஆனால் தந்தை சொல்வதையும் கேட்பதில்லை. பிறகு என்ன செய்ய வேண்டும்? இதில் மிகவும் பற்றற்ற நிலை வேண்டும். இந்த ஞானம் முழுவதும் ஆத்மா வில் உள்ளது. பாபாவின் ஆத்மா சொல்கிறது, இவர்களை நான் படைத்துள்ளேன், நான் சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை. சிலரோ பிராமணர்களாகவும் ஆகியுள்ளனர், பிறகும் புத்தியோகம் நரகத் தின் பக்கம் சென்று விடுகின்றது. ஆக, அவர்கள் ஒரேயடியாக நரகத்தில் சென்று விடுவார்கள்.

குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது-இது ஞானக்கடலின் தர்பார் (சபை). பக்தி மார்க்கத்தில் இந்திரனின் தர்பார் எனவும் பாடப்படுகின்றது. புக்ராஜ் (புஷ்பராகம்) பரி, நீலம் பரி, மாணிக் பரி என்று அநேகப் பெயர்கள் வைத்திருக்கின்றனர். ஏனென்றால் ஞான நடனம் ஆடுகின்றது இல்லையா? விதவிதமான பரிகள் (தேவதைகள்).அதுவும் பவித்திரமானவராக வேண்டும். யாராவது அபவித்திரமானவரை அழைத்து வந்தால் தண்டனை பெற நேரிடும். இதில் மிகவும் தூய்மை வேண்டும். இந்தக் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. அதனால் மரம் சீக்கிரம்-சீக்கிரம் விருத்தி அடைவதில்லை. பாபா தரும் ஞானத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. சாஸ்திரங்களிலும் கூட இந்த ஞானம் கிடையாது. அதனால் கொஞ்சம் நிச்சயம் ஏற்பட்டது, பிறகு மாயா ஒரே அடியில் கீழே வீழ்த்தி விடுகின்றது. புயல் இல்லையா? சிறிய தீபம் என்றால் புயல் அதை ஒரே வீச்சில் வீழ்த்தி (அணைத்து) விடுகின்றது. மற்றவர்கள் விகாரத்தில் விழுவதைப் பார்த்து தாங்களும் விழுந்து விடுகின்றனர். இதிலோ புரிந்து கொள்வதற்கான விசால புத்தி வேண்டும். பாடப் பட்டுள்ளது, அபலைகளுக்குக் கொடுமை நேர்ந்ததாக. பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே, காமம் மகா சத்ரு. இதன் மீது உங்களுக்கு மிகவும் வெறுப்பு வர வேண்டும். பாபா இப்போது மிகவும் வெறுப்படையச் செய்கிறார். முன்பு இந்த விசயம் இருந்ததில்லை. நரகமோ இப்போது தான் உள்ளது இல்லையா? திரௌபதி அழைத்தார் எனச் சொல்வது இப்போதைய விசயம் ஆகும். எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கப் படுகின்றது! பிறகும் புத்தியில் பதிவதில்லை.

இந்த சிருஷ்டிச் சக்கரத்தின் சித்திரம் மிகவும் நன்றாக உள்ளது - கேட் வே டு ஹெவன் (சொர்க்கத் தின் வாசல்). இந்த சிருஷ்டிச் சக்கரத்தை வைத்து மிக நன்றாகப் புரிய வைக்க முடியும். ஏணிப் படியின் சித்திரத்தில் கூட இவ்வளவு இல்லை, அந்தளவு இந்தப் படத்தின் மூலம் புரிந்து கொள்வார்கள். நாளுக்கு நாள் திருத்தங்களும் (கரெக்ஷன்) நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பாபா சொல்கிறார், இன்று உங்களுக்கு முற்றிலும் புதிய டைரக்ஷன் தருகிறேன். முதலிலேயே எல்லாக் டைரக்ஷன்களும் கிடைத்து விடாது. இது எப்படிப்பட்ட உலகமாக உள்ளது, இதில் எவ்வளவு துக்கம்! குழந்தைகள் மேல் எவ்வளவு மோகம் உள்ளது! குழந்தை இறந்து போனால் முற்றிலும் பித்துப் பிடித்தவராக ஆகி விடுகின்றனர். அளவற்ற துக்கம்! பணக்காரர்கள் என்றால் சுகமாக இருக்கின்றனர் என்பதெல்லாம் கிடையாது. அநேக விதமான நோய்கள் வருகின்றன, பிறகு மருத்துவ மனையில் படுத்து விடுகின்றனர். ஏழைகள் பொது வார்டில் உள்ளனர். பணக்காரர் களுக்குத் தனியாக சிறப்பு அறை கிடைத்து விடுகின்றது. ஆனால் துக்கமோ, எப்படி பணக்காரர் களுக்கு உள்ளதோ, அதுபோல் ஏழைகளுக்கும் உள்ளது. அவர்களுக்கு இருப்பிடம் மட்டும் நல்லதாகக் கிடைத்து விடுகின்றது, நல்லபடியான பராமரிப்பு கிடைத்து விடுகிறது, அவ்வளவு தான். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நமக்கு பாபா படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். பாபா அநேகத் தடவைகள் கற்றுத் தந்துள்ளார். தனது மனதைக் கேட்க வேண்டும், நாம் படிக் கிறோமா இல்லையா? எத்தனை பேருக்கு கற்றுத் தருகிறோம்? கற்றுக் கொடுக்கவில்லை என்றால் என்ன பதவி கிடைக்கும்? தினமும் இரவில் தனது சார்ட்டை வையுங்கள் - இன்று யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லையே? ஸ்ரீமத் சொல்கிறது - யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள் என்று, அனைவருக்கும் வழி சொல்லுங்கள். யார் நம்மவரோ, அவர்களுக்கு உடனே டச் ஆகும். இதற்கு தங்கத்தாலான பாத்திரம் வேண்டும். அதில் தான் அமிர்தம் தங்கும். சிங்கத்தின் பால் கெடாமல் தங்க வேண்டுமானால் தங்கப் பாத்திரம் வேண்டும் என்று சொல்கிறார்கள் இல்லையா ! ஏனென்றால் அதன் பால் மிக அதிக சக்தி வாய்ந்தது. அதற்குக் குட்டிகள் மேல் மோகம் இருக்கும். யாரையாவது பார்த்தால் ஒரேயடியாகப் பாய்ந்து விடும். குட்டியைக் கொன்றுவிடக் கூடாதே என்று நினைக்கும். இங்கேயும் அநேகர் உள்ளனர், அவர்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகள் மீது மோகம் உள்ளது. இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், சொர்க்கத்தின் வாசல் திறக்கப் படு கின்றது. கிருஷ்ணரின் சித்திரத்தில் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த யுத்தத்திற்குப் பின் சொர்க்கத்தின் கேட் திறக்கப்பட இருக்கிறது. அங்கே மிகக் குறைவான மனிதர்களே இருப்பார்கள். மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். தண்டனைகள் அதிகம் அடைய நேரிடும். என்னென்ன பாவங்கள் செய்துள்ளனரோ, ஒவ்வொரு ஜென்மத்தின் சாட்சாத்காரம் செய்விக்கப்பட்டு அதன் பின் தண்டனைகளை அடைந்து கொண்டே இருப்பார்கள். பிறகு ஒன்றுக்கும் உதவாத பதவி பெறுவார்கள். நினைவில் இல்லாத காரணத்தால் விகர்மங்கள் விநாசமாவதில்லை.

அநேகக் குழந்தைகள் முரளியையும் தவற விட்டு விடுகிறார்கள். அநேகக் குழந்தைகள் இதைப் பொருட்படுத்தாதவர்களாக உள்ளனர். இதுபோல் தேக அபிமானிகள் அநேகர் உள்ளனர். அவர்கள் தங்களுக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பாபாவுக்குத் தெரியும், அதனால் இங்கே அவர்கள் வரும் போது கேட்கிறேன், அநேகர் முரளி படிப்பதில்லை. அவற்றில் ஏதாவது நல்ல பாயின்ட்டுகள் இருந்திருக்கலாம். பாயின்ட்டுகள் தினந்தோறும் வெளிவருகின்றன இல்லையா? இப்படிப் பட்டவர்களும் அநேக சென்டர்களில் இருந்து வருகின்றனர். ஆனால் தாரணை எதுவும் கிடையாது, ஞானம் இல்லை. ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் பதவி கிடைக்காது. சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியருக்கு நிந்தனை செய்தால் ஒருபோதும் நல்ல பதவி பெற முடியாது. ஆனால் அனைவருமே இராஜா ஆகிவிட முடியாது. பிரஜைகளும் உருவாகிறார்கள். நம்பர்வார் பதவிகள் உள்ளன இல்லையா? எல்லாமே நினைவின் ஆதாரத்தில் தான் உள்ளது. எந்தத் தந்தை யினால் உலகத்தின் இராஜ்யம் கிடைக்கிறதோ, அவரை நினைவு செய்ய முடியாதா? அதிர்ஷ்டத் திலேயே இல்லை என்றால் பிறகு முயற்சியும் என்ன செய்வார்கள்? பாபாவோ சொல்கிறார், நினைவு யாத்திரை மூலம் தான் பாவங்கள் பஸ்பமாகும். ஆகவே புருஷார்த்தம் செய்ய வேண்டும் இல்லையா? பாபா ஒன்றும் இப்படியும் சொல்லவில்லை-அதாவது உண்பது, அருந்துவதெல்லாம் கூடாதென்று. இது ஒன்றும் ஹடயோகமல்ல. நடமாடும் போதும், சுற்றி வரும் போதும் அனைத்துக் காரியங்களையும் செய்து கொண்டே எப்படி நாயகி நாயகனை நினைவு செய்வார் களோ, அதுபோல் நினைவில் இருங்கள். அவர்களுக்கு பெயர் வடிவத்தின் அன்பு உள்ளது. இந்த இலட்சுமி-நாராயணர் உலகின் எஜமானர்களாக எப்படி ஆனார்கள்? யாருக்கும் தெரியாது. நீங்களோ , நேற்றைய விஷயம் என்று சொல்கிறீர்கள். இவர்கள் இராஜ்யம் செய்தனர். மனிதர்களோ இலட்சம் வருடங்கள் எனச் சொல்லி விடுகின்றனர். மாயா மனிதர்களை முற்றிலும் கல்புத்தியாக ஆக்கி விட்டது. இப்போது நீங்கள் கல்புத்தியிலிருந்து பாரஸ் புத்தி உள்ளவர்களாக ஆகிறீர்கள். பாரஸ் நாத்தின் கோவிலும் கூட உள்ளது. ஆனால் அவர் யார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் முற்றிலும் பயங்கர இருளில் உள்ளனர். இப்போது பாபா எவ்வளவு நல்ல-நல்ல விஷயங்களைச் சொல்கிறார்! பிறகு ஒவ்வொருவரின் புத்தியைப் பொருத்து உள்ளது. படிப்பு சொல்லித் தருபவரோ ஒருவர் தான். படிப்பவர்கள் ஏராளமாக ஆகிக் கொண்டே செல்வார்கள். ஒவ்வொரு தெருவிலும் உங்கள் பள்ளிக்கூடம் வந்து விடும். கேட் வே டு ஹெவன். நாம் நரகத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்ட ஒரு மனிதர் கூட இல்லை. பாபா புரிய வைக்கிறார், அனைவரும் பூஜாரிகள். பூஜைக்குரியவர்கள் இருப்பது சத்யுகத்தில். பூஜாரிகள் இருப்பது கலியுகத்தில். மனிதர்கள் பிறகு நினைக்கின்றனர், பகவானே பூஜைக்குரியவர், பகவானே பூஜாரியாகவும் ஆகிறார் என்று. நீங்கள் தான் பகவான், நீங்கள் தான் இந்த விளையாட்டுகள் அனைத்தையும் உருவாக்குகிறீர்கள். நீங்களும் பகவான், நாங்களும் பகவான் என்றால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. இதுவே இராவண இராஜ்யம். நீங்கள் என்னவாக இருந்தீர்கள், இப்போது என்னவாக ஆகிறீர்கள்! குழந்தைகளுக்கு மிகவும் நஷா (போதை) இருக்க வேண்டும். என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள்.

பாபா குழந்தைகளுக்கு புண்ணியாத்மா ஆவதற்கான யுக்தி சொல்கிறார் - குழந்தைகளே, இப்போது இந்தப் பழைய உலகத்தின் கடைசி நேரம். நான் இப்போது நேரடியாக வந்துள்ளேன். இது கடைசி நேரத்தில் முற்றிலும் சமர்ப்பணம் ஆகி விடுங்கள். பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. பாபாவோ கொடுப் பதற்காகவே செய்விக்கிறார். இவர்களுக்கு ஏதேனும் நல்ல வருங்காலம் அமையட்டும். மனிதர்கள் ஈஸ்வரன் பெயரால் தான-புண்ணியம் செய்கின்றனர். அது மறைமுக மானது. அதற்கான பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும். இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. இப்போதோ நான் நேரடியாக வந்துள்ளேன். இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதற்கான பிரதிபலன் பல மடங்கு கிடைக்கும். சத்யுகத்திலோ தான-புண்ணியம் முதலியவற்றின் விஷயம் இருப்பதில்லை. இங்கே யாரிடமாவது பணம் இருக்கு மானால் பாபா சொல்வார்-நல்லது, நீ போய் சென்டர் திறந்து வை. கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய். ஏழைகள் என்றால் சொல்வார்-நல்லது, தனது வீட்டிலேயே போர்டு மட்டும் செய்து வை - கேட் வே டு ஹெவன். சொர்க்கம் மற்றும் நரகம் என்று உள்ளது இல்லையா? இப்போது நாம் நரகவாசிகள். இதையும் யாரும் புரிந்து கொள்வதில்லை. சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் என்றால் அவர்களை நரகத் திற்கு ஏன் அழைக்கிறீர்கள்? சொர்க்கத்திற்குச் சென்று விட்டதாக சொர்க்கத்திலேயே யாரும் சொல்ல மாட்டார்கள். அவர்களோ சொர்க்கத்தில் இருக்கின்றனர். புனர்ஜென்மம் சொர்க்கத்தில் தான் கிடைக்கும். இங்கே புனர்ஜென்மம் நரகத்தில் தான் கிடைக்கின்றது. இந்த விஷயங்களையும் நீங்கள் புரிய வைக்க முடியும். பகவான் சொல்கிறார் - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். ஏனென்றால் அவர் தான் பதீத பாவனர். என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் பூஜாரி யிலிருந்து பூஜைக்குரியவராக ஆகி விடுவீர்கள். சொர்க்கத்தில் அனைவருமே சுகமாக இருப்பார்கள் என்ற போதிலும் நம்பர்வார் பதவிகள் இருக்கும். மிகப்பெரிய குறிக்கோள். குமாரி களுக்கோ சேவையின் எழுச்சி அதிகமாக வர வேண்டும். நாங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் காட்டுவோம். 21 குலத்தை உயர்த்துபவர் அதாவது 21 பிறவிகளுக்கு யார் உயர்வை அளிக்க முடியுமோ, அவர் தான் குமாரி. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்தப் பழைய உலகத்தின் கடைசியில் தந்தை வந்துள்ளார் என்றால் முற்றிலும் சமர்ப்பணம் ஆகிவிட வேண்டும். பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை......... இந்த யுக்தியினால் புண்ணியாத்மா ஆகி விடுவீர்கள்.

2) முரளியை ஒருபோதும் தவறவிடக் கூடாது. முரளியைப் பற்றி கவலையில்லாமல் இருந்துவிடக் கூடாது. நான் படிக்கா விட்டால் என்ன, நாமோ அனைத்தையும் செய்து முடித்து விட்டோம் என்று இருந்துவிடக் கூடாது. இது தேக அபிமானமாகும். முரளியை அவசியம் படிக்க வேண்டும்.

வரதானம்:
சுயம் தன்னை வடிவமைத்து (நடத்தையை மாற்றி) உண்மையான தங்கமாக மாறி ஒவ்வொரு செயலிலும் வெற்றி அடையக்கூடிய சுயபரிவர்த்தனையாளர் ஆகுக.

எவர் ஒருவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சுயம் தன்னை மாற்றி சுய பரிவர்த்தனையாளர் ஆகின்றாரோ அவர் எப்பொழுதும் வெற்றி அடைகிறார். எனவே சுயத்தை மாற்றுவதற்கான இலட்சியம் வையுங்கள். பிறர் மாறட்டும் அப்பொழுது நான் மாறுவேன் - இப்படி கிடையாது. பிறர் மாறினாலும் மாறாவிட்டாலும் நான் மாற வேண்டும். பிறருக்கு எடுத்துக்காட்டாக நான் இருக்க வேண்டும். எப்பொழுதும் மாற்றத்தை (சுயத்தில்) கொண்டு வருவதில் முதலில் நான். யார் இந்த விஷயத்தில் முதலில் நான் என்று கூறுகிறாரோ அவர் தான் முதல் நம்பரை பெறுபவராகிறார். ஏனென்றால் சுயத்தை வடிவமைப்பவர் (மாற்றுபவர்) தான் உண்மையான தங்கம் ஆவார். உண்மையான தங்கத்திற்கு தான் மதிப்பு இருக்கிறது.

சுலோகன்:
தன்னுடைய உயர்ந்த வாழ்க்கையின் நடைமுறை நிரூபணம் மூலமாக தந்தையை வெளிப்படுத்துங்கள் (பிரத்யக்க்ஷம் செய்).

அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும் கையாளுங்கள்.

தந்தைக்கு சமமாக மாற வேண்டும் அல்லது தந்தைக்கு மிக அருகில் செல்ல வேண்டும் என்றால் அசுத்தம் (அபவித்திரதா) அதாவது காமம் எனும் மிகப்பெரிய எதிரி கனவிலும் கூட போர் செய்ய கூடாது. எப்பொழுதும் சகோதரன்-சகோதரன் என்கிற நினைவு எளிதாக மற்றும் தானாகவே சொரூபத்தில் இருக்க வேண்டும். ஆத்மாவினுடைய உண்மையான குணசொரூப மற்றும் சக்தி சொரூப மனநிலையிலிருந்து கீழே (தாழ்ந்த நிலைக்கு) வராதீர்கள்..