28-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒவ்வொருவரின்
பாவத்தையும் உறிஞ்சக் கூடிய முதல் தரமான உறிஞ்சும் தாள் (பிளாட்டிங்
பேப்பர்) ஒரே ஒரு சிவபாபா ஆவார், அவரை நினைவு செய்தால் பாவங்கள்
அழிந்து விடும்.
கேள்வி:
ஆத்மாவில் அனைத்தையும் விட எந்த
ஆழமான கறை படிந்திருக்கிறது? அதை போக்குவதற்கு என்ன முயற்சி
செய்ய வேண்டும்?
பதில்:
ஆத்மாவில் தேக அபிமானம் என்ற மிக
ஆழமான கறை படிந்திருக்கிறது. அடிக்கடி ஏதாவது தேகதாரியின் பெயர்,
உருவத்தில் மாட்டிக் கொள்கிறது. தந்தையை நினைவு செய்யாமல்
தேகதாரிகளை நினைவு செய்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கொருவரின்
உள்ளத்தை துக்கப் படுத்துகிறது. இந்த கறையை போக்குவதற்கு ஆத்ம
அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
பாடல்:
தன் முகத்தை தானே பார்த்துக்
கொள்ளுங்கள் .........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய அனைத்து சென்டர்களிலும் இருக்கக் கூடிய
குழந்தைகள் பாட்டு கேட்டீர்களா! எவ்வளவு புண்ணியம்
செய்திருக்கிறேன்? எவ்வளவு பாவங்களை அழித்திருக்கிறேன்? என்று
தன்னைத் தான் பாருங்கள். ஹே பதீத பாவனனே! என்று முழு உலகமும்,
சாது சந்நியாசி களும் அழைக்கின்றனர். பதீதமானவர்களை பாவனம்
ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். மற்ற அனைவரிடத்திலும்
பாவம் இருக்கிறது. ஆத்மாவில் தான் பாவங்கள்
பதிவாகியிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். புண்ணியமும்
ஆத்மாவில் தான் இருக்கிறது. ஆத்மா தான் பாவனமாகவும், ஆத்மா தான்
பதீதமாகவும் ஆகிறது. இங்கு அனைத்து ஆத்மாக்களும் பதீதமாக
இருக்கிறது. பாவக் கறைகள் படிந்திருக்கின்றன. அதனால் தான் பாவ
ஆத்மாக்கள் என்று கூறப்படு கின்றனர். பாவத்தை எப்படி போக்குவது?
ஏதாவது ஒரு பொருளின் மீது மை அல்லது எண்ணெய் சிந்தி விட்டால்
அதன் மீது அதை பிளாட்டிங் பேப்பரை வைப்பர். அது முழுமையாக
உறிஞ்சி விடும். இப்பொழுது அனைத்து மனிதர்களும் ஒருவரை நினைவு
செய்கின்றனர், ஏனெனில் அவர் தான் பிளாட்டிங் பேப்பராக
இருக்கின்றார், பதீத பாவனாக இருக்கின்றார். அந்த ஒருவரைத் தவிர
வேறு யாரும் பிளாட்டிங் பேப்பர் கிடையாது. அவர்கள் பல
பிறவிகளாக கங்கையில் குளித்து வருகின்றனர், மேலும்
பதீத்தர்களாகத் தான் ஆகிவிட்டனர். பதீதமானவர்களை பாவனம் ஆக்கக்
கூடியவர் பிளாட்டிங் பேப்பர் ஒரே ஒரு சிவபாபா ஆவார். அவரும் ஒரு
சிறிய புள்ளியாக இருக்கின்றார். அனைவரின் பாவங்களையும் அழித்து
விடுகின்றார். எந்த யுக்தியின் மூலம்? பிளாட்டிங் பேப்பராகிய
என் ஒருவனை நினைவு செய்யுங்கள் (மன் மனா பவ) என்று கூறுகின்றார்.
நான் சைத்தன்யமாக இருக்கிறேன் அல்லவா! உங்களுக்கு வேறு எந்த
கஷ்டமும் கொடுப்பது கிடையாது. ஆத்மாக்களாகிய நீங்களும்
புள்ளியாகத் தான் இருக்கிறீர்கள், தந்தையும் புள்ளியாக
இருக்கிறார். என் ஒருவனை நினைவு செய்தால் உங்களது அனைத்து
பாவங்களும் அழிந்து விடும் என்று கூறுகின்றார். நினைவின் மூலம்
எவ்வளவு பாவங்களை அழித்திருக்கிறேன்? எவ்வளவு பாவங்கள் செய்
திருக்கிறேன்? எவ்வளவு பாவங்கள் பாக்கி இருக்கிறது? இதை எப்படி
தெரிந்து கொள்வது? என்று ஒவ்வொரு வரும் தனது உள்ளத்தில்
கேளுங்கள். பிளாட்டிங் பேப்பராகிய ஒரு தந்தையை நினைவு
செய்யுங்கள் என்ற வழியை மற்றவர்களுக்கு கூறிக் கொண்டே இருங்கள்.
அனைவருக்கும் இந்த வழி கூறுவது நல்லது அல்லவா! ஆனால் ஆச்சரியம்
என்னவெனில் யாருக்கு வழி கூறுகிறீர்களோ அவர்கள் தந்தையை நினைவு
செய்ய ஆரம்பித்து விடுகின்றனர், வழி கூறக் கூடியவர்கள் சுயம்
நினைவு செய்வது கிடையாது, அதனால் தான் பாவங்கள் அழிவது கிடையாது.
பதீத பாவன் என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். பல
பாவங்கள் படிந்திருக் கின்றன. காமத்தின் பாவம், தேக அபிமானம்
தான் முதல் நம்பர் பாவம் ஆகும். அது தான் அனைத்தையும் விட
கொடியது ஆகும். இப்பொழுது ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். எந்த அளவிற்கு என்னை நினைவு செய்வீர்களோ,
உங்களிடத்தில் பதிந்திருக்கும் கறைகள் எரிந்து விடும். நினைவு
செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த வழி கூற வேண்டும். எந்த
அளவிற்கு மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்களோ உங்களுக்கும் நன்மை
ஏற்படும். இந்த தொழில் செய்வதில் ஈடுபட்டு விடுங்கள். தந்தையை
நினைவு செய்தால் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள் என்று
மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். பதீத பாவன் ஒரே ஒருவர் தான்
என்று மற்றவர்களுக்கு கூறுவது தான் உங்களது கடமையாகும். ஞான
நதிகள் நீங்கள் பலர் இருக்கலாம், இருப்பினும் ஒருவரை நினைவு
செய்யுங்கள் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். அவர்
ஒருவர் தான் பதீத பாவன் ஆவார். அவருக்கு அதிக மகிமைகள் உள்ளன.
ஞானக் கடலானவரும் அவர் தான். அந்த ஒரு தந்தையை நினைவு செய்ய
வேண்டும், ஆத்மா அபிமானியாகி இருக்க வேண்டும் - இந்த ஒரே ஒரு
விசயம் தான் கடினமாக இருக்கிறது. தந்தை உங்களுக்கு மட்டும்
கூறுவது கிடையாது. அனைத்து சென்டர்களிலும் இருக்கக் கூடிய
குழந்தை களின் மீதும் பாபாவின் கவனம் இருக்கிறது. தந்தை அனைத்து
குழந்தைகளையும் பார்க்கின்றார் அல்லவா! சில இடங்களில் நன்றாக
சேவை செய்யும் குழந்தைகள் இருக்கின்றனர், சிவபாபாவின்
பூந்தோட்டம் அல்லவா! யார் நல்ல மலர்களாக இருக்கிறார்களோ
அவர்களைத் தான் பாபா நினைவு செய்வார். செல்வந்தர்களுக்கு 4-5
குழந்தைகள் இருப்பர், யார் மூத்த குழந்தையோ அவரை நினைவு செய்வர்.
மலர்களில் பல விதங்கள் இருக்கிறது அல்லவா! ஆக பாபாவும் தனது
பெரிய மலர் தோட்டத்தை நினைவு செய்கின்றார். யாராக இருந்தாலும்
சிவபாபாவை நினைவு செய்யுங் கள் என்ற இந்த வழி கூறுவது எளிதாகும்.
அவர் தான் பதீத பாவன் ஆவார். என்னை நினைவு செய்தால் உங்களது
பாவங்கள் அழிந்து விடும் என்று சுயம் அவரே கூறுகின்றார். முழு
உலகிற்கும் முதல் தரமான பிளாட்டிங் பேப்பராக இருக்கின்றார்.
அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். சிவபாபாவை நினைவு
செய்யுங்கள் என்று மற்றவர்களுக்கு கூறுவது மிகவும் எளிதாகும்.
என்னை நினைவு செய்தால் உங்களிடம் படிந்திருக்கும் தேக அபிமானம்
என்ற கறை நீங்கி விடும் என்ற யுக்தி கூறியிருக்கின்றார். ஆத்ம
அபிமானி ஆவதில் தான் உழைப்பு இருக்கிறது. பாபாவிடம் யாரும்
உண்மை கூறுவது கிடையாது. சிலர் சார்ட் எழுதி அனுப்புகின்றனர்,
பிறகு களைப்படைந்து விடுகின்றனர். மிக உயர்ந்ததாகும் இலட்சியம்.
மாயை போதையை முற்றிலுமாக நீக்கி விடுகிறது. பிறகு எழுதுவதையே
விட்டு விடுகின்றனர். அரைக் கல்பத்திற்கான தேக அபிமானம் ஆகும்,
அது நீங்குவதே கிடையாது. இந்த தொழில் மட்டுமே செய்து
கொண்டிருங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தையை நினைவு
செய்யுங்கள், மற்றவர்களையும் செய்வியுங்கள். அனைத்தையும் விட
உயர்ந்த தொழில் இதுவாகும். யார் சுயம் நினைவு செய்யவில்லையோ
அவர்கள் இந்த தொழில் செய்ய முடியாது. தந்தையின் நினைவு தான்
யோக அக்னியாகும், இதன் மூலம் பாவங்கள் அழிந்து விடும், அதனால்
தான் எவ்வளவு பாவங்கள் அழிந்திருக்கிறது? என்று கேட்கப்
படுகிறது. எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த
அளவிற்கு குஷியின் அளவு அதிகரிக்கும். ஒவ்வொருவரும் அவரவர்களது
உள்ளத்தை அறிந்திருப்பீர்கள். மற்றவர்களையும் அவர்களது சேவையின்
மூலம் அறிந்து கொள்ள முடியும். பாபாவை நினைவு செய்யுங்கள் என்று
மற்றவர்களுக்கும் வழி கூறுகின்றனர். அவர் பதீத பாவன் ஆவார்.
இங்கு இது பதீதமான தமோ பிரதான உலகமாகும். அனைத்து ஆத்மாக்களும்
மற்றும் சரீரம் தமோ பிரதானமாகும். இப்பொழுது திரும்பி செல்ல
வேண்டும். அங்கு அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாக இருக்கும்.
எப்பொழுது தூய்மையாக ஆவீர்களோ அப்பொழுது தான் வீட்டிற்குச்
செல்ல முடியும். மற்றவர்களுக்கும் இதே வழியைக் காண்பிக்க
வேண்டும். தந்தை யுக்தியுடன் மிக எளிதாக கூறுகின்றார்.
சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இந்த பிளாட்டிங் பேப்பரை மட்டுமே
வையுங்கள், அனைத்து பாவங்களும் உறிஞ்சப்பட்டு விடும். உங்களது
விகர்மங்கள் விநாசமாகி விடும். முக்கிய விசயம் தூய்மை ஆவதாகும்.
மனிதர்கள் பதீதமாக ஆகியிருப்பதால் தான் பதீத பாவனனே வாருங்கள்,
வந்து அனைவரையும் தூய்மையாக்கி கூடவே அழைத்துச் செல்லுங்கள்
என்று அழைக்கின்றனர். எழுதியும் இருக்கின்றனர். அனைத்து ஆத்மாக்
களையும் பாவனம் ஆக்கி அழைத்துச் செல்கிறார், பிறகு எந்த பதீத
ஆத்மாக்களும் இருக்கமாட்டார்கள். முதன் முதலில் சொர்க்கவாசிகள்
மட்டுமே வருவார்கள் என்பதும் புரிய வைக்க பட்டிருக்கிறது. தந்தை
கொடுக்கும் மருந்து அனைவருக்கும் ஆனது. யாரை சந்தித்தாலும்
அவருக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டும். நீங்கள் தந்தையிடம்
செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் ஆத்மா பதீதமாக இருக்கிறது,
அதனால் செல்ல முடியாது. பாவனம் ஆகும் பொழுது தான் செல்ல
முடியும். ஹே ஆத்மாக்களே! என்னை நினைவு செய்தால் உங்களை
அழைத்துச் செல்வேன், பிறகு உங்களை அங்கிருந்து சுகத்திற்கு
அழைத்துச் செல்வேன். பிறகு உலகம் பழையதாக ஆகின்ற பொழுது நீங்கள்
துக்கம் அடைகிறீர்கள். நான் யாருக்கும் துக்கம் கொடுப்பது
கிடையாது. நான் நினைவு செய்கிறேனா? என்று ஒவ்வொருவரும் தன்னைப்
பாருங்கள். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவு
குஷியின் அளவு அதிகரிக்கும். எவ்வளவு எளிய மருந்தாகும்! வேறு
எந்த சாது, சந்நியாசிகளும் இந்த மருந்தைப் பற்றி அறிய வில்லை.
எங்கும் எழுதப்படவும் இல்லை. இது முற்றிலும் புதிய விசயமாகும்.
பாவக் கணக்குகள் எந்த சரீரத்திலும் பதிவது கிடையாது. இவ்வளவு
சிறிய புள்ளி வடிவ ஆத்மாவில் தான் அனைத்து பாகங்களும்
பதிவாகியிருக்கிறது. ஆத்மா பதீதமாக ஆகின்ற பொழுது அதன் பாதிப்பு
சரீரத்தின் மீதும் ஏற்படுகிறது. ஆத்மா தூய்மையாக ஆகிவிடும்
பொழுது சரீரமும் தூய்மையானதாக கிடைக்கும். ஆத்மா தான்
துக்கமானதாகவும், சுகமானதாகவும் ஆகிறது. சரீரத்திற்கு காயம்
ஏற்படும் பொழுது ஆத்மா தான் துக்கம் அடைகிறது. இவர் துக்கமான
ஆத்மா, இவர் சுகமான ஆத்மா என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு
சிறிய ஆத்மா, எவ்வளவு பெரிய பாகம் நடிக்கிறது, ஆச்சரியம் அல்லவா!
தந்தையோ சுகம் கொடுக்கக் கூடியவர், அதனால் தான் அவரை நினைவு
செய்கின்றனர். துக்கம் கொடுப்பது இராவணன். அனைத்தையும் விட
முதலில் வருவது தேக அபிமானமாகும். நீங்கள் ஆத்ம அபிமானியாக ஆக
வேண்டும் என்று தந்தை இப்பொழுது புரிய வைக்கின்றார். இதில் தான்
மிகுந்த உழைப்பு இருக்கிறது. உண்மையான உள்ளத்துடன், எந்த
யுக்தியுடன் நினைவு செய்ய வேண்டுமோ அவ்வாறு நினைவு செய்ய கஷ்டப்
படுகின்றனர் என்பதை பாபா அறிவார். இங்கு இருந்தாலும் பலர்
மறந்து விடுகின்றனர். ஒருவேனை ஆத்ம அபிமானியாக இருந்தால் எந்த
பாவமும் ஏற்படாது. தீயவைகளை கேட்காதீர்கள் ....... என்பது
தந்தையின் கட்டளையாகும். குரங்கிற்கு கிடையாது. இது
மனிதர்களுக்காக கூறப்பட்டிருக்கிறது. மனிதர்கள் குரங்கு போன்று
இருப்பதால் குரங்கின் சித்திரம் காண்பித்து விட்டனர். பலர் முழு
நாளும் வீண் விசயங்கள் பேசிக் கொண்டிருக் கின்றனர். ஆக தந்தை
புரிய வைக்க வேண்டியிருக் கிறது. அனைத்து சென்டர்களிலும்
ஒருவருக்கொருவர் துக்கம் கொடுக்கும் யாராவது இருக்கவே
செய்கின்றனர். சில நல்லவர்களும் இருக்கின்றனர், தந்தையின்
நினைவில் இருக்கின்றனர். எண்ணம், சொல், செயலால் யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது என்று நினைக் கின்றனர்.
வார்த்தைகளினால் யாருக்காவது துக்கம் கொடுத்தால் துக்கப்பட்டு
தான் இறக்க வேண்டி யிருக்கும். குழந்தைகளாகிய நீங்கள்
அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்.
ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். தந்தையை
நினைவு செய்யுங்கள், மேலும் யாரிடத்திலும் பணம் கொடுக்கல்
வாங்கலுக்கான விசயம் கிடையாது. அன்பான தந்தையை நினைவு செய்தால்
போதும், உங்களது விகர்மங்கள் அழிந்து விடும். நீங்கள் உலகிற்கு
எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். பகவானின் மகாவாக்கியம் - மன்மனாபவ,
ஒரு தந்தையை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். வேறு எதுவும்
தங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டாம், தந்தையை நினைவு செய்தால்
போதும். மற்றவர்களுக்கு நன்மை செய்யுங் கள். உங்களது மன நிலை
அந்த அளவிற்கு இனிமையானதாக இருக்க வேண்டும், யாராவது வந்து
பார்த்தால், பாபாவின் குழந்தைகளும் பிளாட்டிங் பேப்பராக
இருக்கின்றனர் என்று கூற வேண்டும். இப்பொழுது அப்படிப்பட்ட மன
நிலை கிடையாது. பாபாவிடம் யாராவது கேட்டால் பிளாட்டிங் பேப்பர்
மட்டுமல்லாமல் வெற்று காகிதமாகக் கூட ஆகவில்லை என்பார். பாபா
அனைத்து சென்டர்களிலும் இருக்கக் கூடிய குழந்தை களுக்கு புரிய
வைக்கின்றார். மும்பை, கல்கத்தா, டெல்லி ....... அனைத்து
இடங்களிலும் குழந்தைகள் இருக்கின்றனர் அல்லவா! பாபா, இன்னார்
அதிகம் தொந்தரவு செய்கின்றனர் என்று ரிப்போர்ட் வருகிறது.
புண்ணிய ஆத்மா ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக, மேலும் பாவ
ஆத்மாக்களாக ஆக்கிக் கொள்கின்றனர். பாபாவிடம் யாராவது கேட்டால்
உடனேயே கூறி விடுவார். சிவபாபா அனைத்தையும் அறிவார். அவரிடம்
அனைத்து கணக்கு வழக்குகளும் உள்ளன. இந்த பாபாவும் கூற முடியும்.
முகத்தின் மூலமாகவே அனைத்தும் தெரிந்து விடும். இவர்கள்
பாபாவின் நினைவில் மூழ்கி இருக்கின்றனர், இவர்களது முகம்
தேவதைகளைப் போன்று மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. ஆத்மா குஷியாக
இருக்கும் பொழுது சரீரமும் குஷியாக இருப்பது தென்படும்.
சரீரத்திற்கு துக்கம் ஏற்படும் பொழுது ஆத்மாவும் துக்கத்தை
உணர்கிறது. என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து
விடும் என்று சிவபாபா கூறுகின்றார் என்ற ஒரு விசயத்தை
அனைவருக்கும் கூறிக் கொண்டே இருங்கள். கிருஷ்ண பகவானின்
மகாவாக்கியம் என்று அவர்கள் எழுதி வைத்து விட்டனர். கிருஷ்ணரை
பலர் நினைவு செய்கின்றனர், ஆனால் பாவங்கள் அழிவதே கிடையாது.
மேலும் பதீதமாக ஆகிவிட்டனர். யாரை நினைவு செய்ய வேண்டும்?
பரமாத்மாவின் ரூபம் என்ன? என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை
சர்வ வியாபி என்று கூறுகிறார்கள் எனில் ஆத்மா எவ்வாறு
நட்சத்திரம் போன்று இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும்
நட்சத்திரம் போன்று இருக்கின்றார். ஏனெனில் ஆத்மா தான் பரமாத்மா
என்று கூறிவிட்டனர். ஆக இந்த கணக்கைப் பார்க்கும் பொழுதும்
புள்ளி ஆகிவிடுகிறார். சிறிய புள்ளி பிரவேசம் ஆகிறது.
குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள் என்று அனைத்து
புள்ளிகளுக்கும் (ஆத்மாக்களுக்கும்) கூறுகின்றார்.
கர்மேந்திரியங்களின் மூலம் கூறுகின்றார். கர்மேந்திரியங்களின்றி
ஆத்மா பேச முடியாது. ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் ஒன்று
தான் என்று நீங்கள் கூற முடியும். பரமாத்மாவை பெரிய -ங்கம்
அல்லது வேறு எதுவும் கூற முடியாது. நானும் இவ்வாறு புள்ளியாக
இருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். ஆனால் நான் பதீத பாவனாக
இருக்கிறேன், அனைத்து ஆத்மாக்களாகிய நீங்கள் பதீதமாக
இருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவான விசயமாகும்! இப்பொழுது ஆத்ம
அபிமானி ஆகி தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்,
மற்றவர்களுக்கும் வழி கூறுங்கள். நான் இரண்டே இரண்டு
வார்த்தைகள் தான் கூறுகிறேன் - மன்மனாபவ. பிறகு இது கிளைகள் (மற்ற
தர்மங்கள்) என்று சிறிது விரிவாக கூறுகிறேன். முதலில் சதோ
பிரதானம், ரஜோ, தமோ ...... வின் பொழுது வருகிறேன். பாவ ஆத்மா
ஆவதன் மூலம் எவ்வளவு கறைகள் படிந்து விடுகின்றன! அந்த கறைகள்
எப்படி நீங்கும்? கங்கையில் குளித்தால் நீங்கி விடும் என்று
அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது சரீரத்தின் குளியல் ஆகும்.
ஆத்மா தந்தையை நினைவு செய்வதன் மூலம் தான் பாவனமாக ஆகும். இது
நினைவு யாத்திரை என்று கூறப்படுகிறது. எவ்வளவு எளிதான
விசயமாகும்! இதையே தந்தை நாள் தோறும் புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். மன்மனாபவ என்ற விசயத்தில் தான் கீதையிலும்
ஆழமாக கூறப் பட்டிருக்கிறது. ஆஸ்தி அவசியம் கிடைக்கும், என்னை
நினைவு செய்து பாவங்களை அழித்து விட்டால் போதும். தந்தை
அழிவற்ற பிளாட்டிங் பேப்பர் அல்லவா! என்னை நினைவு செய்தால்
நீங்கள் பாவனம் ஆகிவிடுகறீர்கள், பிறகு இராவணன் பதீதமாக
ஆக்குகிறது எனில் இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும்
அல்லவா! என்று தந்தை கூறுகின்றார். யார் நினைவே செய்ய வில்லையோ
அவர்களது நிலை என்ன ஆகும்? குழந்தைகளே! மற்ற அனைத்து
விசயங்களையும் விட்டு விடுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
ஆத்ம அபிமானி ஆக வேண்டும், என் ஒருவனை நினைவு செய்ய வேண்டும்
என்ற ஒரே விசயம் போதும். ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை
எடுக்கிறது என்பதை அறிவீர்கள். ஆத்மா தான் துக்கம், சுகம்
அடைகிறது. ஒருபொழுதும் பிறருடைய உள்ளத்தை புண்படுத்தக் கூடாது.
ஒருவருக்கொருவர் சுகம் கொடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது
தொழிலே இது தான். பலர் மற்றவர்களுக்கு துக்கம் கொடுத்துக்
கொண்டே இருக்கின்றனர். ஒருவருக்கொருவரின் தேகத்தில் மாட்ட
வைக்கின்றனர். முழு நாளும் ஒருவரை யொருவர் நினைவு செய்து கொண்டே
இருக்கின்றனர். மாயையும் தீவிர மானது. பாபா பெயர் கூற
விரும்பவில்லை, அதனால் தான் குழந்தைகளே! ஆத்ம அபிமானியாக
ஆகுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஞானம் மிகவும் எளிது. நினைவு
கடினமானது. அந்த படிப்பும் 15-20 ஆண்டுகள் படிக்கின்றனர்.
எவ்வளவு பாடங்கள் இருக்கின்றன! இந்த ஞானப் படிப்பு மிகவும்
எளிது. நாடகத்தை அறிந்து கொள்வது ஒரு கதையாகும். முரளி எடுப்பது
ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. நினைவு தான் மிகவும் கடினமானது.
இருப்பினும் நாடகம் என்று பாபா கூறி விடுகின்றார். முயற்சி
செய்து கொண்டே இருங்கள். தந்தையை நினைவு செய்தால் இந்த யோக
அக்னியின் மூலம் உங்களது பாவங்கள் அழிந்து விடும். நல்ல நல்ல
குழந்தைகள் இதில் தோற்று விடுகின்றனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒருபொழுதும் யாருடைய உள்ளத்தையும் புண்படுத்தக் கூடாது.
அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். ஒரு தந்தையின் நினைவில்
இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் நினைவு ஏற்படுத்த
வேண்டும்.
2) பாவக் கறைகளை நீக்குவதற்கு ஆத்ம அபிமானியாகி அழிவற்ற
பிளாட்டிங் பேப்பராகிய தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
அனைவருக்கும் நன்மை ஏற்படும் படியான இனிய மன நிலையை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்.
வரதானம்:
தன்னுடைய சிரேஷ்டதன்மை மூலம் புதுமைத்தன்மையின் கொடியைப் பறக்க
விடக்கூடிய சக்தி சொரூபம் ஆகுக.
இப்பொழுது சமய அனுசாரம், சமீப நிலையின் அனுசாரம் சக்தி
ரூபத்தின் பிரபாவத்தை, எப்பொழுது பிறர் மீது ஏற்படுத்துவீர்களோ,
அப்பொழுது இறுதி பிரத்யட்சதாவை சமீபமாகக் கொண்டு வரமுடியும்.
எவ்வாறு சினேகம் மற்றும் சகயோகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றீர்
களோ, அதுபோல் சேவை என்ற கண்ணாடியில் சக்தி ரூபத்தினுடைய
அனுபவத்தை செய்வித் திடுங்கள். எப்பொழுது தன்னுடைய சிரேஷ்டதன்மை
மூலம் சக்தி ரூபத்தினுடைய புதுமைத் தன்மை யின் கொடியைப்
பறக்கவிடுவீர்களோ, அப்பொழுதே பிரத்யட்சதா ஏற்படும். தன்னுடைய
சக்தி சொரூபத்தினால் சர்வசக்திவான் தந்தையினுடைய சாட்சாத்காரம்
செய்யுங்கள்.
சுலோகன்:
மனதின் மூலம் சக்திகளுடைய மற்றும் கர்மத்தின் மூலம்
குணங்களுடைய தானம் கொடுப்பது தான் மகாதானம் ஆகும்.
அவ்யக்த இஷாரே: நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கி
சதா பயமற்றவர் மற்றும் கவலையற்று இருங்கள்
என்னுடைய குழந்தைகளாகிய இவர்களே தடைகளை அழிக்கக்கூடிய
ஆத்மாக்கள், பூஜைக்குரிய ஆத்மாக்கள், இந்தக் குழந்தைகள் தந்தையை
விட சிறந்தவர்கள், நிமித்தம் ஆகியிருக்கும், சதா தந்தையையும்
கவலையற்றவராக ஆக்கக்கூடியவர்கள், சதா மகிழ்ச்சியான செய்தியை
சொல்லக் கூடிய ஒவ்வொருவரும் விசே‘மானவர்கள் என்ற இந்த
முழுமையான நம்பிக்கை தந்தைக்கு குழந்தைகள் மீது உள்ளது. தன்
மீது அப்பேற்பட்ட நம்பிக்கை வைத்து இதே நினைவு சொரூபத்தில்
இருந்தீர்கள் என்றால் வெற்றியாளர் ஆகிவிடுவீர்கள்.