29-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது இனிமையான
தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சதோபிரதான
தேவதையாக ஆகிவிடுவீர்கள், நினைவின் யாத்திரையில்தான் அனைத்து
ஆதாரமும் உள்ளது.
கேள்வி:
தந்தையின் மீது குழந்தைகளுக்கு
ஈர்ப்பு ஏற்படுவது போல எந்த குழந்தைகளின் மீது அனைவருக்கும்
ஈர்ப்பு ஏற்படும்?
பதில்:
மலர்களாக ஆகியுள்ளவர்கள் மீது.
சிறு குழந்தைகள் மலர் போல உள்ளதால் அவர்களுக்கு விகாரங்களைப்
பற்றி தெரிவதே இல்லை. எனவே அவர்கள் அனைவரையும் ஈர்க்கின்றனர்
அல்லவா. அதுபோல குழந்தைகளாகிய நீங்களும் கூட மலர்களாகும்போது
அதாவது தூய்மையடைந்து விடும்போது அனைவருக்கும் ஈர்ப்பு ஏற்படும்.
உங்களுக்குள் விகாரங்களின் எந்த முள்ளும் இருக்கக் கூடாது.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. இது புருஷோத்தம சங்கமயுகம் என ஆன்மீகக் குழந்தைகள்
அறிவார்கள். தனது எதிர்காலத்தின் புருஷோத்தம முகத்தைப்
பார்க்கிறீர்களா? புருஷோத்தம சரீரத்தைப் பார்க்கிறீர்களா? நாம்
மீண்டும் புதிய உலகமாகிய சத்யுகத்தில் இவர்களுடைய (லட்சுமி
நாராயணருடைய) வம்சாவளியில் செல்லப் போகிறோம் அதாவது
சகதாமத்திற்குச் செல்லப் போகிறோம் அதாவது புருஷோத்தமராக ஆகப்
போகிறோம் என உணர்கிறீர்கள். அமர்ந்தபடியே இந்த சிந்தனைகள்
வருகின்றனவா! மாணவர்களுக்கு தாம் படிக்கும் படிப்பு, தாம்
படிக்கும் வகுப்பு கண்டிப்பாக புத்தியில் இருக்குமல்லவா - பிறகு
நான் வக்கீல் அல்லது இன்னாராக ஆகப் போகிறேன் என்று எண்ணுவார்கள்.
அதுபோல நீங்களும் கூட இங்கே அமரும்போது நாம் விஷ்ணுவின்
இராஜ்யத்தில் வருவோம் என அறிகிறீர்கள். விஷ்ணுவின் இரண்டு
ரூபங்கள் - லட்சுமி-நாராயணன், தேவி-தேவதைகள். உங்களுடைய புத்தி
இப்போது அலௌகிகமாக உள்ளது. வேறு யாருடைய புத்தியும் இந்த
விஷயங்களை நினைத்து ரசிப்பதில்லை. குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில் இந்த அனைத்து விஷயங்களும் உள்ளன. இது எதுவும்
பொதுவான சத்சங்கம் அல்ல. இங்கே அமர்ந்திருக்கும்போது சிவன் என
சொல்லப்படும் சத்தியமான தந்தையுடன் அமர்ந்திருக்கிறோம் எனப்
புரிந்துக் கொள்கிறீர்கள். சிவபாபாதான் படைப்பவர், அவரே
சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை அறிவார், அந்த ஞானத்தையும்
கொடுக்கிறார். நேற்றைய விஷயத்தைப் போல சொல்கிறார். இங்கே
அமர்ந்திருக்கும் போது நாம் புத்துணர்ச்சி அடைவதற்காக வந்தோம்
அதாவது இந்த சரீரத்தை மாற்றி தேவதா சரீரம் எடுப்போம் என்று
இந்த நினைவு இருக்குமல்லவா. ஆத்மா சொல்கிறது - என்னுடைய இந்த
பழைய தமோபிரதான சரீரத்தை மாற்றி இப்படி லட்சுமி-நாராயணன் போல்
ஆக வேண்டும். இலட்சியம், குறிக்கோள் எவ்வளவு உயர்வானது.
கற்பிக்கக் கூடிய ஆசிரியர் கற்கின்ற மாணவர்களை விடவும்
புத்திசாலியாக இருப்பார் அல்லவா. கல்வி கற்பிக்கிறார், நல்ல
கர்மங்களை கற்பிக்கிறார் எனும்போது கண்டிப்பாக உயர்வானவராக
இருப்பார் அல்லவா. நம்மை அனைவரிலும் உயர்ந்தவரிலும் உயர்வான
பகவான் கற்பிக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். எதிர்காலத்தில்
நாமே தேவதைகளாக ஆகப் போகிறோம். நாம் படிப்பது எதிர்காலத்தின்
புதிய உலகத்திற்காக. மற்ற யாருக்கும் புதிய உலகத்தைப் பற்றி
தெரியாது. இந்த இலட்சுமி-நாராயணர் புதிய உலகத்தின் எஜமானர்களாக
இருந்தனர் என உங்களுடைய புத்தியில் இப்போது வருகிறது.
கண்டிப்பாக மீண்டும் நடக்கும். உங்களுக்கு கற்பித்து
மனிதரிலிருந்து தேவதைகளாக ஆக்குகிறேன் என தந்தைப் புரிய
வைக்கிறார். தேவதைகளிலும் கண்டிப்பாக வரிசைக்கிரமமாக
இருப்பார்கள். தெய்வீக இராஜ்யமாக இருக்குமல்லவா. நாம் ஆத்மா
என்ற சிந்தனையே முழு நாளும் நடந்து கொண்டிருக்கும் அல்லவா.
நம்முடைய ஆத்மா மிகவும் தூய்மையற்றிருந்தது, அது இப்போது
தூய்மையடைவதற்காக தூய்மையான தந்தையை நினைவு செய்கிறது. நினைவு
என்பதன் அர்த்தத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆத்மா தனது
இனிமையான தந்தையை நினைவு செய்கிறது. குழந்தைகளே, என்னை நினைவு
செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதானமாகிவிடுவீர்கள் என தந்தை தாமே
சொல்கிறார். நினைவின் யாத்திரையில்தான் முழு ஆதாரமும் உள்ளது.
குழந்தைகளே எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள்? என தந்தை
கண்டிப்பாக கேட்பார் அல்லவா. நினைவு செய்வதில்தான் மாயையின்
சண்டை ஏற்படுகிறது. இது யாத்திரை அல்ல, ஆனால் சண்டை, இதில்
அதிகமாக தடைகள் ஏற்படு கின்றன என நீங்கள் தாமே புரிந்து
கொள்கிறீர்கள். நினைவின் யாத்திரையில் இருப்பதில்தான் மாயை
தடைகளை ஏற்படுத்துகிறது, அதாவது நினைவை மறக்கடிக்கிறது. பாபா
நாங்கள் உங்களின் நினைவில் இருப்பதில் மாயையின் புயல்கள்
அதிகமாக வீசுகின்றன என சொல்லவும் செய்கின்றனர். தேக
அபிமானத்தின் புயலே முதல் நம்பர் ஆகும். அதன் பிறகு இருப்பவை
காமம், கோபம், பேராசை, மோகம், . . . பாபா, நாங்கள் நினைவில்
இருப் பதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என மிகவும் முயற்சி
செய்கிறோம், ஆனாலும் புயல்கள் வீசுகின்றன என குழந்தைகள்
கூறுகின்றனர். இன்று கோபத்தின் புயல். . . இன்று பேராசையின்
புயல் வீசியது. இன்று எங்களுடைய நிலை நன்றாக இருந்தது, எந்தப்
புயலும் வீசவில்லை. நினைவின் யாத்திரையில் முழு நாளும்
இருந்தோம், மிகவும் குஷியாக இருந்தது. பாபாவை மிகவும் நினைவு
செய்தோம். நினைவில் அன்பின் கண்ணீர் சிந்தியபடி இருக்கின்றோம்
இவ்வாறெல்லாம் கூறுகின்றனர். தந்தையின் நினைவில் இருப்பதன்
மூலம் நீங்கள் இனிமையானவர்களாக ஆகிவிடுவீர்கள்.
நாம் மாயையிடம் தோற்று, தோற்று இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம்
என்பதையும் கூட குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
குழந்தைகள் கணக்கு எடுக்கின்றனர். கல்பத்தில் எத்தனை மாதங்கள்,
எத்தனை நாட்கள். . . புத்தியில் வருகிறது அல்லவா.
இலட்சக்கணக்கான வருடங்கள் என யாராவது சொன்னால் பிறகு கணக்கிட
இயலாது. தந்தைப் புரிய வைக்கிறார் - இந்த சிருஷ்டியின் சக்கரம்
சுற்றியபடி இருக்கும், இந்த முழு சக்கரத்தில் நாம் எத்தனை
பிறவிகள் எடுக்கிறோம், எப்படி இராஜ்யத்தில் செல்கிறோம். இதை
அறிவீர்கள் அல்லவா. இது புதிய உலகத்திற்கான புதிய விஷயங்கள்,
புதிய ஞானமாகும். புதிய உலகம் என சொர்க்கத்தை சொல்லப்படுகிறது.
நாம் இப்போது மனிதர்களாக இருக்கிறோம், தேவதைகளாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என நீங்கள் சொல்வீர்கள். தேவதா பதவி
உயர்வானதாகும். நாம் அனைவரை விடவும் தனிப்பட்ட ஞானத்தை
எடுத்துக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள்
அறிவீர்கள். நமக்கு கற்பிப்பவர் முற்றிலும் தனிப்பட்ட
விசித்திரமானவர். அவருக்கு இந்த சாகார (ஸ்தூல) சித்திரம் (உடல்)
கிடையாது. அவர் நிராகாரமாக இருக்கிறார். ஆக, பாருங்கள்,
நாடகத்தில் எப்படி நல்ல நடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று.
தந்தை எப்படி கற்பிப்பார்? எனவே தாமே தெரியப்படுத்துகிறார் -
நான் இன்னாருடைய உடலில் வருகிறேன். எந்த உடலில் வருகிறேன்
என்பதையும் தெரியப்படுத்துகிறார். ஒரே உடலில் வருவாரா என
மனிதர்கள் குழம்புகின்றனர். ஆனால் இது நாடகமல்லவா. இதில்
மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த விஷயங்களை நீங்கள்தான்
கேட்கிறீர்கள், தாரணை செய்கிறீர்கள் மற்றும் சொல்கிறீர்கள் -
எப்படி எங்களுக்கு சிவபாபா படிப்பை சொல்லித் தருகிறார்; நாங்கள்
பிறகு மற்ற ஆத்மாக்களுக்கு எப்படி படிப்பை சொல்லித் தருகிறோம்.
ஆத்மா படிக்கிறது. ஆத்மாதான் கற்கிறது, கற்பிக்கிறது. ஆத்மா
மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஆத்மா அழிவற்றது, அமரனாக இருப்பது.
சரீரம் மட்டுமே அழிந்துப் போகிறது. ஆத்மாக்களாகிய நாம் பரமபிதா
பரமாத்மாவிடமிருந்து ஞானத்தை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடைசி, 84 பிறவிகளின்
ஞானத்தை அறிந்துக் கொண்டிருக்கிறோம். ஞானத்தை யார் பெறுகிறார்?
ஆத்மா. ஆத்மா அழிவற்றது. மோகப் பற்றுதலும் கூட அழிவற்ற பொருளின்
மீது வைக்க வேண்டும், அழியக் கூடிய பொருளின் மீது அல்ல. இவ்வளவு
சமயம் நீங்கள் அழியக்கூடிய சரீரத்தின் மீது மோகம் வைத்து
வந்தீர்கள். இப்போது புரிந்துக் கொள்கிறீர்கள் - நான் ஆத்மா,
சரீரத்தின் உணர்வை விட வேண்டும். ஆத்மாவாகிய நான் இந்த வேலை
செய்தேன் என ஒரு சிலர் எழுதவும் செய்கின்றனர். ஆத்மாவாகிய நான்
இந்த சொற்பொழிவு ஆற்றினேன். ஆத்மாவாகிய நான் இன்று மிகவும்
பாபாவை நினைவு செய்தேன். அவர் உயர்வான (சுப்ரீம்) ஆத்மா, ஞானம்
நிறைந்தவர். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானம்
கொடுக்கிறார். மூல வதனம், சூட்சும வதனத்தை நீங்கள் அறிவீர்கள்.
மனிதர்களின் புத்தியில் எதுவும் இல்லை. படைப்பவர் யார் என்பது
உங்களுடைய புத்தியில் உள்ளது. இந்த மனித சிருஷ்டியைப் படைப்பவர்
பாடப்படுகிறார் எனும்போது கண்டிப்பாக காரியம் செய்ய வருகிறார்.
ஆத்மா மற்றும் பரமாத்மாவின் நினைவு இருக்கக் கூடிய மனிதர்
யாரும் கிடையாது என நீங்கள் அறிவீர்கள். தன்னை ஆத்மா என
புரிந்து கொள்ளுங்கள் என தந்தைதான் ஞானம் கொடுக்கிறார். நீங்கள்
தன்னை சரீரம் என புரிந்து கொண்டு தலைகீழாக தொங்கிக்
கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா என்பது சத் (சத்ய மான), சித் (உயிரோட்டமிக்க),
ஆனந்த சொரூபமானது. அனைத்தையும் விட மகிமை ஆத்மாவுக்கு உள்ளது.
ஒரு தந்தையின் ஆத்மாவுக்கு எவ்வளவு மகிமை உள்ளது. அவர்தான்
துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்க வல்லவர். துக்கத்தை நீக்கி
சுகத்தைக் கொடுப்பவர், ஞானக் கடல் என கொசு முதலானவற்றை மகிமை
செய்வதில்லை. இது தந்தையின் மகிமை ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும்
கூட துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர்கள்தான். ஏனெனில்
அனைவரின் துக்கத்தையும் நீக்கி சுகத்தைக் கொடுக்கும் அந்த
தந்தையின் குழந்தைகள் அல்லவா. அதுவும் அரைக் கல்ப காலத்திற்காக.
இந்த ஞானம் வேறு யாருக்குள்ளும் கிடையாது. ஒரு தந்தைதான் ஞானம்
நிறைந்தவர் ஆவார். நமக்குள் ஞானம் கிடையாது. ஒரு தந்தையையே
அறிவதில்லை எனும்போது வேறு என்ன ஞானம் பிறகு இருக்கப் போகிறது?
நாம் முன்னர் ஞானத்தை எடுத்துக் கொண்டிருந்தோம், எதுவும்
தெரிந்திருக்கவில்லை என்பதை இப்போது நீங்கள் உணருகிறீர்கள்.
சிறு குழந்தைக்குள் ஞானம் இருப்பதில்லை மற்றும் எந்த
அவகுணங்களும் கூட இருப்பதில்லை, ஆகையால் மகாத்மா என
சொல்லப்படுகிறது ஏனெனில் தூய்மையாக இருக்கிறது. எந்த அளவு சிறு
குழந்தையோ அந்த அளவு முதல் நம்பர் மலர் - முற்றிலும் கர்மாதீத
(கர்மங்களை வென்ற) நிலையில் இருப்பது போல. கர்மம், விகர்மம்
பற்றி எதுவும் தெரியாது. தன்னை மட்டும்தான் அறியும். அது மலர்
போல் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கிறது - இப்போது பாபா
கவர்ந்து ஈர்ப்பது போல. தந்தை வந்ததே குழந்தைகளாகிய உங்களை
மலர்களாக ஆக்குவதற்காக. உங்களுக்குள் சிலர் மிகவும் கெட்ட
முட்களும் உள்ளனர். 5 விகாரங்களின் ரூபத்தில் இருக்கும் முட்கள்
அல்லவா. இந்த சமயம் உங்களுக்கு மலர்கள் மற்றும் முட்கள் பற்றிய
ஞானம் உள்ளது. முட்களின் காடும் இருக்கிறது. கருவேல முள்
அனைத்தையும் விட பெரிதாக இருக்கும். அந்த முட்களிலிருந்தும்
கூட நிறைய பொருட்கள் உருவாகின்றன. மனிதர்கள் அதனுடன்
ஒப்பிடப்படுகின்றனர். இந்த சமயத்தில் மிகவும் துக்கம் கொடுக்கக்
கூடிய மனிதர்கள் முட்களாக இருக்கின்றனர், ஆகையால் இது துக்கமான
உலகம் என சொல்லப்படுகிறது என தந்தைப் புரிய வைக்கிறார். தந்தை
சுகத்தை வழங்கும் வள்ளல் என சொல்லவும் செய்கின்றனர். மாயா
இராவணன் துக்கத்தை வழங்கும் வள்ளல். பின்னர் சத்யுகத்தில் மாயை
இருப்பதில்லை எனும்போது இந்த விஷயங்கள் எதுவும் இருக்காது.
நாடகத்தில் ஒரு நடிப்பு இரு முறை இருக்க முடியாது. முழு உலகில்
நடிக்கக் கூடிய நடிப்பு அனைத்தும் புதிதாகும் என்பது புத்தியில்
உள்ளது. நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் - சத்யுகத்தில் தொடங்கி
இதுவரை உள்ள நாட்களே மாறிவிடுகின்றன, நடவடிக்கைகள் மாறிவிடு
கின்றன. 5 ஆயிரம் வருடங்களின் முழு நடவடிக்கைகளினுடைய பதிவு
ஆத்மாவில் நிரம்பியுள்ளது. அது மாற்றம் அடைய முடியாது. அனைத்து
ஆத்மாக்களிலும் அவர்களது நடிப்பு நிரம்பியுள்ளது. இந்த ஒரு
விஷயம் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்போது
முதல்-இடை-கடைசியை நீங்கள் அறிவீர்கள். இது பள்ளிக்கூடம் அல்லவா.
சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை அறிய வேண்டும் மற்றும் பிறகு
தந்தையை நினைவு செய்து தூய்மையடையக் கூடிய படிப்பாகும். நாம்
இப்படி ஆக வேண்டும் என இவருக்கு (பிரம்மாவுக்கு) முன்பு
தெரிந்திருந்ததா என்ன? தந்தை எவ்வளவு தெளிவாக்கிப் புரிய
வைக்கிறார். நீ முதல் நம்பரில் இதுவாக இருந்தாய், பிறகு கீழே
இறங்கி இறங்கி இப்போது என்ன ஆகிவிட்டாய். உலகைப் பாருங்கள்
என்ன ஆகிவிட்டுள்ளது என. எவ்வளவு அளவற்ற மனிதர்கள் உள்ளனர்.
இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தைப் பற்றி இருக்கப் போகிறது
என சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் இருக்குமிடத்தில் எப்படி
வைர வைடூரியங்கள் பதித்த மாளிகைகள் எல்லாம் இருக்கப் போகின்றன.
இப்போது நாம் சொர்க்கவாசியாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது
புத்தியில் வருகிறது. அங்கே நாம் நமது வீடு முதலானவற்றை கட்டப்
போகிறோம். சாஸ்திரங்களில் காட்டியிருப்பது போல கீழிருந்து
துவாரகை வெளிவரும் என்பதல்ல. சாஸ்திரம் எனும் பெயரே நடந்து
வந்துள்ளது, வேறு எந்த பெயரும் வைக்க முடியாது. மற்ற
புத்தகங்கள் படிப்பிற்கானவை ஆகும். மற்றொன்று நாவல்கள்
எனப்படுபவை ஆகும். மற்றபடி இவற்றை புத்தகம் அல்லது சாஸ்திரம்
என சொல்கின்றனர். அவை படிப்பின் புத்தகங்கள் ஆகும். சாஸ்திரம்
படிப்பவர்கள் பக்தர்கள் எனப்படுகின்றனர். பக்தி மற்றும் ஞானம்
என இரண்டு பொருட்கள் உள்ளன. இப்போது வைராக்கியம் எதன் மீது?
பக்தியின் மீதா அல்லது ஞானத்தின் மீதா? கண்டிப்பாக பக்தியின்
மீது என சொல்வோம். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. அதன் மூலம் நீங்கள் இவ்வளவு உயர்வானவர்களாக
ஆகிறீர்கள். இப்போது தந்தை உங்களை சுகம் மிக்கவர்களாக
ஆக்குகிறார். சுகதாமம்தான் சொர்க்கம் எனச் சொல்லப்படுகிறது.
சுகதாமத்திற்குச் செல்லப்போகிறவர்கள் நீங்கள் எனும்போது
உங்களுக்குத்தான் கற்பிக்கிறார். இந்த ஞானத்தையும் கூட
உங்களுடைய ஆத்மா எடுக்கிறது. ஆத்மாவின் தர்மம் என எதுவும்
கிடையாது. அது ஆத்மா ஆகும். ஆத்மா சரீரத்தில் வரும்போது
சரீரத்தின் தர்மம் தனியாக இருக்கும். ஆத்மாவின் தர்மம் எது?
ஒன்று ஆத்மா புள்ளி போல் இருக்கிறது, மற்றொன்று அமைதி சொரூபமாக
இருக்கிறது. சாந்தி தாமம், முக்தி தாமத்தில் வசிக்கிறது.
இப்போது தந்தைப் புரிய வைக்கிறார் - அனைத்து குழந்தைகளுக்கும்
உரிமை உள்ளது. பிற தர்மங்கள் பலவற்றில் மாறிச் சென்றுவிட்ட
குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்கள் பிறகு வெளியேறி தனது
உண்மையான தர்மத்தில் வந்துவிடுவார்கள். தேவி தேவதா தர்மத்தை
விட்டு பிற தர்மத்திற்குச் சென்ற அனைத்து இலைகளும் (குழந்தைகள்)
மீண்டும் தம்முடைய இடத்திற்குத் திரும்பி வருவார்கள். இந்து
தர்மத்திலிருந்து முஸ்லீமாக ஆனவர்களை ஷேக் என சொல்கின்றனர்.
ஷேக் முகமது என்பது போல. இந்த அனைத்து விஷயங்களையும் வேறு
யாரும் புரிந்து கொள்ள முடியாது. முதன் முதலில் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இதில்தான் அனைவரும்
குழப்பமடைந்திருக்கின்றனர். இப்போது நமக்கு கற்பிக்கின்றவர்
யார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை
கற்பிக்கிறார். கிருஷ்ணர் தேகதாரி ஆவார். இவரை (பிரம்மாவை) தாதா
என அழைப்போம். அனைவரும் சகோதரன்-சகோதரன் ஆக உள்ளனர் அல்லவா.
பிறகு பதவியின் மீது உள்ளது. இது சகோதரனின் சரீரம், இது
சகோதரியின் சரீரம். இதுவும் கூட இப்போது நீங்கள் அறிகிறீர்கள்.
ஆத்மாவோ ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரம் போன்றதாகும். இவ்வளவு
ஞானம் அனைத்தும் சிறிய நட்சத்திரத்தில் இருக்கிறது. நட்சத்திரம்
சரீரமின்றி பேசவும் முடியாது. நட்சத்திரங்களுக்கு நடிப்பை
நடிப்பதற்காக அங்கங்களும் தேவைப்படுகிறது. நட்சத்திரங்களின்
உலகமே தனியானது. பிறகு இங்கு வந்து ஆத்மா சரீரத்தை தாரணை
செய்கிறது. அது ஆத்மாக்களின் வீடு. ஆத்மா சிறு புள்ளியாக உள்ளது.
சரீரம் பெரிய பொருளாகும். ஆக அதனை எவ்வளவு நினைவு செய்கின்றனர்.
இப்போது நீங்கள் ஒரு பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும்.
ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு நடக்கும் இந்த நினைவே
சத்தியமானது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம்
பிரிந்திருந்தனர் . . . என பாடலும் உள்ளது. நாம் பாபாவைப்
பிரிந்திருந்தோம் அல்லவா. எவ்வளவு காலம் பிரிந்திருந்தோம் என
நினைவு வருகிறதா! கல்பம் தோறும் சொல்லி வந்த தந்தைதான் வந்து
சொல்கிறார். இதில் கொஞ்சமும் வித்தியாசம் ஏற்பட முடியாது.
ஒவ்வொரு வினாடியும் நடக்கக் கூடிய நடிப்பு புதுமையானது. ஒரு
வினாடி கடந்து செல்கிறது, நிமிடம் கடந்து செல்கிறது, இது போல
காலம் கடந்து செல்கிறது. இவ்வளவு வருடங்கள், இவ்வளவு நாட்கள்,
நிமிடங்கள், இவ்வளவு வினாடிகள் கடந்து வந்தோம் என சொல்லுமளவு
கடந்துக் கொண்டே செல்கிறது. 5 ஆயிரம் வருடங்கள் முடிந்து போகும்,
பிறகு முதல் எண்ணிலிருந்து தொடங்கும். துல்லியமான கணக்கு அல்லவா.
நிமிடம், வினாடி என அனைத்தையும் குறிப்பிடுகின்றனர். இவர்
எப்போது பிறவி எடுத்தார்? என இப்போது யாராவது உங்களிடம் கேட்கக்
கூடும். நீங்கள் எண்ணிக்கையிட்டு சொல்கிறீர்கள். கிருஷ்ணர்
முதல் நம்பரில் பிறவி எடுத்தார். சிவனைப் பொறுத்தவரை நிமிடம்,
வினாடி என எதுவும் கணக்கு எடுக்க முடியாது. கிருஷ்ணரின் நாள்,
கிழமை முழுமையாக எழுதப்பட்டுள்ளது. மனிதர்களின் கடிகாரத்தில்
நிமிடம், வினாடியில் வித்தியாசம் ஏற்படக் கூடும். சிவபாபாவின்
அவதாரத்தில் கொஞ்சமும் வித்தியாசம் ஏற்பட முடியாது. எப்போது
வந்தார் என தெரிவதும் இல்லை. காட்சி ஏற்பட்டது அப்போது வந்தார்
எனவும் சொல்ல முடியாது. தோராயமாக சொல்லிவிடுகிறோம். மற்றபடி
இன்ன நேரத்தில் பிரவேசம் செய்தார் என்பது போல் அல்ல. நாம்
இன்னாராக ஆகவுள்ளோம் என்ற காட்சி கிடைத்தது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சுகதாமம் செல்வதற்காக சுகம் மிக்கவராக ஆக வேண்டும். அனைவரின்
துக்கத்தையும் நீக்கி சுகம் கொடுக்க வேண்டும். ஒருபோதும்
துக்கம் மிக்கவராக ஆகக் கூடாது.
2. இந்த அழியக்கூடிய உடலில் ஆத்மாதான் மிகவும் மதிப்பு
மிக்கதாகும், அதுவே அமரன், அழிவற்றது ஆகும், ஆகையால் அழிவற்ற
பொருள் மீது அன்பு வைக்க வேண்டும். தேக உணர்வை நீக்க வேண்டும்.
அவ்யக்த இˆôரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்தி-ருந்து
விடுபட்டு
ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
எதுவரை, எந்தவிதமான பற்றும் இருக்கின்றதோ - அது எண்ணத்தின்
ரூபத்தில் இருக்கலாம், சம்மந்தத்தின் ரூபத்தில் இருக்கலாம்,
தொடர்பின் ரூபத்தில் இருக்கலாம், தன்னுடைய விசேஷதாவின் பக்கம்
இருக்கலாம்; எந்த ஒரு பற்றும் பந்தனம்-நிறைந்தவராக ஆக்கிவிடும்.
அந்த பற்று அசரீரியாக ஆக விடாது மேலும் விஷ்வ
கல்யாண்காரியாகவும் ஆக - விட முடியாது ஏனெனில் முதலில் தான்,
பற்றிலிருந்து விடுபட்டவராக ஆக வேண்டும் அப்போதே விஷ்வத்திற்க
முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான ஆஸ்தியை கொடுக்க முடியும்.
|
|
|
|