05.05.25

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை

அமைதி இருக்குமிடத்தில் பொறுமை இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சிந்தனை செய்வதற்கு நேரம் கொடுக்காமலோ அல்லது ஒரு சூழ்நிலையை சரியாக புரிந்துகொள்ளாமலோ, பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுகிறோம் அல்லது வேகமாக செயல்படுகிறோம். இப்பொறுமையின்மையினால் பெரும்பாலும், நாம் பல விஷயங்களை, நம்மை அறியாமலேயே இழந்துவிடுகின்றோம்.

செயல்முறை:

நான், குறிப்பாக கஷ்டங்களை சந்திக்கும்போது, என்னுடைய மனதை அமைதியாக வைத்திருப்பதற்கு உணர்வுபூர்வமாக முயற்சி செய்வது அவசியம். அப்படிப்பட்ட மனநிலை, பொறுமை என்ற போஷாக்கை  அளிக்கின்றது: அமைதி சக்தியை உருவாக்குகிறது, இது பொறுமையை கொண்டுவருகிறது.