30.11.25

இன்றைய சிந்தனைக்கு

அகநோக்கு:

கவனம் செலுத்துவது, ஒருவரை மனஉளைச்சலிலிருந்து விடுவிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், நாம் ஏற்றுகொள்கின்ற பொறுப்புகளால் நாம் மனஅழுத்தத்தை உணர்கின்றோம். முக்கியமாக, சூழ்நிலையின் தேவையிலோ அல்லது நம்முடைய திறமைகளுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் இருக்கும்போதோ, நம்மை நாம் மனஉளைச்சலிலிருந்து விடுவித்துக்கொள்வது சிரமமாக இருப்பதை காண்கின்றோம்.

செயல்முறை:

குறிப்பாக, சூழ்நிலைக்கு தேவையான போதும், ஆனால், பொதுவாக வாழ்க்கையிலும் கூட, மனஉளைச்சலை போக்கும் வழியானது, தொடர்ந்தும் கவனத்துடன் இருப்பதாகும். கடினமான சூழ்நிலையின் போது என் மீது கவனம் செலுத்துவது முக்கியமாகும். ஆனாலும், சாதாரண சூழ்நிலையிலும் நான் என் மீது கவனம் செலுத்துவது முக்கியம்.  கவனம் செலுத்துவது, என்னை நான் சோதித்து, மாற்றிக் கொள்ள செய்கின்றது. மேலும், இது மனஉளைச்சலிலிருந்து என்னை விடுவிக்கின்றது.