05.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவதற்காக, எல்லையற்ற ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் இராஜயோகக் கற்பித்தல்கள் மூலம் மீண்டும் ஒரு தடவை இராச்சியத்தைக் கோருகிறீர்கள்.
கேள்வி:
எந்த விடயத்தில் உங்களுடைய இறை குடும்பம் முழுமையாகவே தனித்துவமானதாக உள்ளது?பதில்:
இந்த இறை குடும்பத்திலுள்ள உங்களில் சிலர் ஒரு நாள் வயதினராகவும், சிலர் எட்டு நாள் வயதினராகவும் இருக்கின்றீர்கள். எனினும் நீங்கள் அனைவரும் ஒன்றாகவே கற்கிறீர்கள். தந்தையே ஆசிரியராகி, தனது குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். இது தனித்துவமானது. ஆத்மாக்களாகிய நீங்களே கற்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் “பாபா” எனக் கூறுகிறீர்கள், உங்களுடைய 84 பிறவிகளின் கதையை பாபா உங்களுக்குக் கூறுகிறார்.பாடல்:
தூரதேசவாசி இந்த அந்நிய தேசத்துக்கு வந்துள்ளார்…ஓம் சாந்தி.
வியாழ சகுனத்தின் நாளானது, விருட்சத்தின் பிரபுவின் நாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் வியாழ திசையின் நாளை ஒவ்வொரு வாரமும் கொண்டாடுகிறீர்கள். விருட்சத்தின் பிரபு என்றால் இம்மனித உலக விருட்சத்தின் விதை என்று அர்த்தம். அவர் உயிருள்ளவர் ஆவார். அவரிடம் மாத்திரமே இந்த விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. ஏனைய விருட்சங்கள் அனைத்தும் உயிரற்றவை, ஆனால் இவ்விருட்சமோ உயிருள்ளது. இந்த விருட்சம் கல்ப விருட்சம் என அழைக்கப்படுகிறது. அதன் ஆயுட்காலம் 5000 வருடங்களாகும். இந்த விருட்சத்துக்கு நான்கு பாகங்கள் உள்ளன. அனைத்துக்கும் நான்கு பாகங்கள் உள்ளன. இவ்வுலகச் சக்கரமும் நான்கு பாகங்களைக் கொண்டது. இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. உலகம் மிகவும் பெரியது. மனிதர்களின் புத்தியில் இந்த ஞானம் இல்லை. இவை புதிய உலகிற்கான புதிய கற்பித்தல்கள் ஆகும். இவை நீங்கள் புதிய உலகின் அரசர்கள் ஆகுவதற்கும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்து தேவர்கள் ஆகுவதற்குமான புதிய கற்பித்தல்கள் ஆகும். மொழி, அதே ஹிந்தி மொழியாகும். ஏனைய இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படும் பொழுது, அவற்றின் மொழிகள் வேறுபடுகின்றன என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். சத்திய யுகத்தில் என்ன மொழி இருக்கும்? குழந்தைகளாகிய நீங்கள் அதில் சிறிதளவை அறிவீர்கள். ஆரம்ப நாட்களில், சில புதல்விகள் திரான்ஸில் சென்று பின்னர் அவர்கள் பார்த்தவற்றைக் கூறுவார்கள். அங்கே சமஸ்கிருத மொழி இருக்க மாட்டாது. இங்கேயே சமஸ்கிருத மொழி இருக்கிறது. இங்கே இருப்பவை அங்கே இருக்கமாட்டாது. ஆகவே, அவரே விருட்சத்தின் பிரபு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் விருட்சத்தைப் படைப்பவராகிய தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். அவர் உயிருள்ள விதையாவார். ஏனைய அனைத்து விதைகளும் உயிரற்றவை. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் மனிதர்களிடம் சந்தோஷம் இருப்பதில்லை, ஏனெனில் அவர்களிடம் இந்த ஞானம் இல்லை. இந்த ஞானம் எல்லையற்றது. நீங்கள் அதன் மூலம் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். எல்லைக்குட்பட்ட ஞானம் மூலம் நீங்கள் பெறும் எந்த சந்தோஷமும் ஒரு காக்கை எச்சத்தைப் போன்றது. எல்லையற்ற சந்தோஷத்தை அடைவதற்கு, நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். “மீண்டும் ஒருமுறை” எனும் இந்த வார்த்தைகளை நீங்கள் மாத்திரமே செவிமடுக்கிறீர்கள். நீங்கள் மாத்திரமே மீண்டும் ஒருமுறை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கு, இராஜயோகக் கற்பித்தல்களைப் பெறுகிறீர்கள். அசரீரியான தந்தையே ஞானக்கடல் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரின் குழந்தைகளான ஆத்மாக்களும்கூட அசரீரியானவர்களே. எவ்வாறாயினும், உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சொந்தச் சரீரம் உள்ளது. அவரின் பிறப்பு அலௌகீகமானது எனக் கூறப்பட்டுள்ளது. அவர் பிறப்பெடுக்கும் முறையில் பிறப்பெடுக்க மனிதர்களால் முடியாது. அவர் இவரில் இவருடைய ஓய்வுபெறும் ஸ்திதியில் பிரவேசிக்கிறார். அவர் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு (ஆத்மாக்கள்) தனிப்பட்ட முறையில் நேரடியாக விளங்கப்படுத்துகிறார். “குழந்தைகளே, குழந்தைகளே” என வேறு எவரும் ஆத்மாக்களுக்குக் கூறுவதில்லை. ஏனையோர் எந்தச் சமயத்துக்கு உரியவர்களாக இருப்பினும், சிவபாபாவே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை என்பதை அவர்கள் அறிவார்கள். அவர் நிச்சயமாக “குழந்தாய், குழந்தாய்” எனக் கூறுவார். எவ்வாறாயினும், மனித ஆத்மாவைக் கடவுள் என அழைக்க முடியாது. வேறு எவரையும் பாபா என அழைக்க முடியாது. காந்திஜி, பாபு(தந்தை) என அழைக்கப்பட்டார். ஒரு நகரசபையின் மேயரும் தந்தை என்றே அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், அந்தத் தந்தையர்கள் அனைவரும் பௌதீகமானவர்கள். ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அந்தத் தந்தை இங்கு வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். இது இறை குடும்பம் ஆகும். தந்தைக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். நீங்களும் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். ஆகவே, நீங்கள் அவருடைய குழந்தை ஆகுகிறீர்கள். சிலர் கூறுகிறார்கள்: நான் உங்களுடைய ஒரு நாள் குழந்தை அல்லது எட்டு நாள் குழந்தை அல்லது ஒரு மாதக் குழந்தை ஆவேன். முதலில், ஒரு குழந்தை நிச்சயமாகச் சிறியவராகவே இருப்பார். எவ்வாறாயினும், இங்கே ஒருவர் இரண்டு நாள் அல்லது நான்கு நாள் குழந்தையாக இருப்பினும், அவருடைய அங்கங்கள் பெரிதாகவே உள்ளன. இதனாலேயே பெரிய குழந்தைகள் (பௌதீகமாக) அனைவரும் கற்க வேண்டும். இங்கே வருபவர்களுக்குத் தந்தை கற்பிக்கிறார். நீங்களும் கற்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என அவர் உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரில் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கிறேன். நீங்கள் இங்Nகு அதி சிரேஷ்ட ஆசிரியரிடம வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அவரிடம் இருந்தே இந்த ஆசிரியர்கள் வெளிவந்துள்ளனர். அவர்கள் வழிகாட்டிகள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் தொடர்ந்து அனைவருக்கும் கற்பிக்கிறார்கள். இந்த ஞானத்தை அறிந்து கொள்பவர்கள், பின்னர் தொடர்ந்தும் ஏனையோருக்குக் கற்பிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், இரு தந்தையர்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஒருவர் இவ்வுலகத் தந்தையும் மற்றையவர் இவ்வுலகிலிருந்து அப்பாற்பட்ட தந்தையும் ஆவார். நிச்சயமாக மகத்தானவர் இவ்வுலகிலிருந்து அப்பாற்பட்ட தந்தையான, கடவுளே ஆவார். இந்த உலகிலிருந்து அப்பாற்பட்ட தந்தையை நீங்கள் இப்பொழுது கண்டடைந்து விட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவரும் இதை அறியார், ஆனால் அவர்கள் படிப்படியாக அறிந்துகொள்வார்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்கு பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரங்களை நீக்கிவிட்டு, எங்களுடைய அடுத்த சரீரங்களை எடுப்போம். நாங்கள் அதிமேன்மையான தேவர்கள் ஆகுவோம். அதிமேன்மையான தேவர்கள் ஆகுவதற்கே நாங்கள் இங்கே வந்துள்ளோம். முன்னேறிச் செல்கையில், சில குழந்தைகள் இந்த அதிமேன்மையான கல்வியை விட்டு நீங்குகிறார்கள். அவர்கள் எதைப் பற்றியாவது சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள் அல்லது அவர்கள் மாயையின் புயல்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளார்கள். அவர்கள் கொடிய எதிரியான, காமத்தால் தோற்கடிக்கப்படுகிறார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் கற்பதை நிறுத்துகிறார்கள். காமமே உங்கள் பெரும் எதிரி என்பதால், குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவுக்குச் சகித்துக்கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: அப்பாவித் தாய்மார்களாகிய நீங்கள் கல்பம் கல்பமாக என்னை அழைக்கிறீர்கள். “பாபா, துகில் உரியப்படுவதில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!” என நீங்கள் அழைத்தீர்கள். தந்தை கூறுகிறார்: நினைவே ஒரேயொரு வழிமுறை, வேறு வழியில்லை. நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் தொடர்ந்தும் சக்தியைப் பெறுவீர்கள். சக்திவாய்ந்த மாயை தொடர்ந்தும் தனது சக்தியை இழப்பாள், நீங்கள் பின்னர் விடுதலை அடைவீர்கள். பலரும் இவ்வாறாக பந்தனத்திலிருந்து விடுபட்டு, இங்கே வருகிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படுவதும் ஒரு முடிவுக்கு வருகிறது. பின்னர், அவர்கள் வந்து பிரம்மாவினூடாக சிவபாபாவுடன் பேசுகிறார்கள். உங்களுக்குள் இந்தப் பழக்கத்தை விருத்திசெய்து கொள்ளுங்கள். நீங்கள் சிவபாபாவிடம் செல்கிறீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அவர் இந்த பிரம்மாவின் சரீரத்தில் வருகிறார். நாங்கள் சிவபாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறோம். நினைவினூடாக மாத்திரமே எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இவை மாத்திரமே உங்களுக்குக் கொடுக்கப்படும் கற்பித்தல்கள் ஆகும். நீங்கள் இங்கே தந்தையைச் சந்திக்க வரும்பொழுதும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்களாக! இப்பொழுது மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியாகும். பக்தி மார்க்கத்தில், மக்கள் பல வேதங்கள், சமய நூல்கள் போன்றவற்றைக் கற்கிறார்கள். இங்கே நீங்கள் செய்யவேண்டிய ஒரே முயற்சி நினைவைக் கொண்டிருப்பதே. இது அனைத்திலும் இலகுவான முயற்சியாக உள்ளது. அத்துடன் இதுவே அனைத்து முயற்சியிலும் சிரமமானதும் ஆகும். ஒருவரின் தந்தையை நினைவு செய்வதை விடவும் இலகுவானது எதுவுமேயில்லை. ஒரு மகன் பிறந்தவுடன், “பாபா, பாபா” எனச் சொல்ல ஆரம்பிக்கிறான். ஒரு மகள் பிறந்தவுடன், “அம்மா, அம்மா” எனச் சொல்ல ஆரம்பிக்கிறாள். அந்த ஆத்மா ஒரு பெண்ணின் ஆடையை ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு பெண் தனது தாயிடம் செல்கிறார், ஒரு மகனோ ஓர் ஆஸ்தியைப் பெறும் காரணத்தினால், பொதுவாகத் தனது தந்தையை நினைப்பார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் மகன்கள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்வதால், உங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகிறீர்கள். உங்களுக்குச் சரீர உணர்வு இருந்தால், ஓர் ஆஸ்தியைக் கோருவது உங்களுக்குச் சிரமமாக இருக்கும். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே கற்பிக்கிறேன். தந்தை உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இவ்விடயங்களைக் கூற இயலாது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் அவரை நேசித்தீர்கள். நீங்கள் அனைவரும் ஒரே அன்பிற்கினியவரின் காதலிகளாக இருந்தீர்கள். முழு உலகும் ஒரே அன்பிற்கினியவரின் காதலிகள் ஆவர். பரமாத்மா, பரமதந்தை எனவும் அழைக்கப்படுகிறார். தந்தை ஒரு காதலர் என அழைக்கப்படுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னுடைய காதலிகளாக இருந்தீர்கள். இப்பொழுதும், என்னுடைய காதலிகளாக உள்ள பலர் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், யார் கடவுள் என அழைக்கப்படுகிறார் என்பதில் அவர்கள் மிகவும் குழம்பி உள்ளார்கள். அவர்கள் கணேஷ், அனுமான் போன்றோரை “பரமாத்மா” என அழைக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் முற்றாகவே குழப்பி சிக்கலாக்கி விட்டார்கள். ஒரேயொருவரைத் தவிர வேறு எவராலும் அந்தச் சிக்கலில் இருந்து விடுவிக்க முடியாது. வேறு எவரிடமும் இதைச் செய்வதற்கான சக்தி இல்லை. தந்தை மாத்திரமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள்; செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகப் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்தத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு கல்பத்தின் முன்னர் செய்தது போன்றே, மிகச்சரியாக இங்கே கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பின்னர், நீங்கள் புதிய உலகில், இதற்கான உங்கள் வெகுமதியைப் பெறுவீர்கள். அது அமரத்துவ பூமி என அழைக்கப்படுகிறது. நீங்கள் மரணத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். அங்கே அகால மரணம் இல்லை. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியில் இருந்து பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தந்தையின் சொத்தையும் நினைவு செய்கிறீர்கள். முழு நாடகத்தின் ஞானமும் ஒரு விநாடியில் உங்கள் புத்தியில் பிரவேசிக்கிறது. அசரீரி உலகமும் சூட்சும உலகமும், 84 பிறவிச் சக்கரத்துடன் கூடிய பௌதீக உலகமும் உள்ளன. முழு நாடகமும் பாரதத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஏனைய அனைத்தும் துணைக் கதைகள் ஆகும். தந்தை உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுகிறார்.அனைவரிலும் உயர்வானவர்களாக ஆகுகின்ற நீங்களே, பின்னர் அனைவரிலும் தாழ்ந்தவர்களாகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் இரட்டைக் கிரீடம் உடைய அரசர்களாகிப் பின்னர், முழுமையான பிச்சைக்காரர்கள் ஆகுகிறீர்கள். பாரதம் இப்பொழுது ஒரு பிச்சைக்கார நாடாக ஆகியுள்ளது. இது மக்களை மக்களே ஆளும் அரசாங்கம் ஆகும். சத்தியயுகத்தில், அது இரட்டைக் கிரீடமுடைய சக்கரவர்த்திகள்,சக்கரவர்த்தினிகளின் பேரரசாக இருந்தது. அனைவரும் ஆதி தேவர் பிரம்மாவை நம்புகிறார்கள், அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் மகாவீரர் எனவும் அழைக்கப்படுகிறார். அனுமானும் மகாவீரர் என அழைக்கப்படுகிறார். உண்மையில், குழந்தைகளாகிய நீங்களே, உண்மையான மகாவீரர்களும் (துணிவான சத்திரியர்கள்), அனுமான்களும் (இராமரில் ஆழ்ந்த அன்புடையவர்) ஆவீர்கள். ஏனெனில் மாயையின் புயல்கள் எவ்வளவுக்கு வந்தாலும், நீங்கள் தளம்பல் அடையாத அளவுக்கு நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கிறீர்கள். நீங்கள் மாயையை வெல்வதால், மகாவீரரின் குழந்தைகளாகிய நீங்கள் மகாவீரர்கள் ஆகுகிறீர்கள். ஐந்து விகாரங்களாகிய இராவணனை நீங்கள் ஒவ்வொருவரும் வெல்கிறீர்கள். அது ஒரு மனிதரைப் பற்றிய கேள்வியல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் வில்லை வளைக்க வேண்டும், அது நீங்கள் மாயையை வெல்லுதல் என அர்த்தப்படும். இதில் யுத்தம் செய்வதற்கான கேள்வியே கிடையாது. எவ்வாறு ஐரோப்பிய மக்கள் சண்டை இடுகிறார்கள்? பாரதத்தில், கௌரவர்களுக்கும் யவனர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறுகிறது. எங்கும் இரத்த ஆறு பாய்ந்தது என்பதும் நினைவுகூரப்படுகிறது. பின்னர் பாலாறு பாயும். பால் ஏரியில் விஷ்ணு காண்பிக்கப்பட்டுள்ளார். இலக்ஷ்மியும் நாராயணனும் பரஸ்நாத் (தெய்வீகப் பிரபு) ஆவார்கள். நேபாளத்தில், அவர்கள் பசுபதி (ஆத்மாக்கள் அனைவரையும் கர்ம பந்தனத்திலிருந்து விடுவிப்பவர்) எனப் பெயரிடப்பட்டுள்ளனர். ஒரே விஷ்ணுவிற்கு இரண்டு வடிவங்கள் உள்ளன: பரஸ்நாத், பரஸ் நாதினி. அவர்கள் பசுபதிநாத் பதியும் பசுபதிநாத் பத்தினியும் (பிரபுவும் அவர் மனைவியும், சகல ஜீவராசிகளினதும் பிரபு) ஆவார்கள். அங்கே அவர்கள் விஷ்ணுவின் சிலையொன்றையும் ஓர் ஏரியையும் உருவாக்குகிறார்கள். ஓர் ஏரிக்கு எங்கிருந்து பால் வரும்? முக்கியமான நாட்களில்,அவர்கள் அந்த ஏரியில் பாலை ஊற்றுகிறார்கள். பின்னர் விஷ்ணு பாற்கடலில் படுத்திருப்பதாகக் காண்பிக்கிறார்கள். இதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நான்கு கரங்களுடன் கூடிய ஒரு மனிதர் இருக்க முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சமூக சேவையாளர்களாக உள்ளீர்கள். நீங்கள் ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு இதைப் பற்றிய சந்தேகம் இருக்கக்கூடாது. சந்தேகம் என்றால், மாயையின் புயல்கள் ஆகும். நீங்கள் என்னை “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” என அழைத்தீர்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்வதால், நீங்கள் தூய்மை ஆக்கப்படுவீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். தந்தை மாத்திரமே ஞானக்கடலான தூய்மையாக்குபவர் ஆவார். இரு விடயங்கள் உள்ளன: அவர் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதுடன் 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தைப் பற்றியும் பேசுகிறார். 84 பிறவிகளின் சக்கரம் சதா காலமும் தொடர வேண்டும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அதற்கு முடிவு கிடையாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை மிகவும் இனிமையானவர் ஆவார். அவர் கணவன்மாருக்கு எல்லாம் கணவர் எனவும் அழைக்கப்படுகிறார். அவர் தந்தையும் ஆவார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் என்னிடமிருந்து ஒரு பெரும் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், தந்தையாகிய என்னை விட்டு நீங்கிச் செல்லும் சிலரும் இருக்கிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கற்பதை நிறுத்திவிடுகிறார்கள், அவர்கள் என்னை விட்டு நீங்கிவிடுகின்றனர் என்பதே அதன் அர்த்தம். அவர்கள் மிகவும் விவேகமற்றவர்கள். திறமைசாலிகளான குழந்தைகள் அனைத்தையும் இலகுவில் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்த ஆரம்பிப்பார்கள். ஒரு லௌகீகக் கல்வியிலிருந்து அவர்கள் எதனைப் பெறமுடியும், இக்கல்வியிலிருந்து அவர்கள் எதனைப் பெறுவார்கள் என உடனடியாக அவர்கள் புரிந்து கொள்வதனால், தாங்கள் எதனைக் கற்கவேண்டும் எனத் தீர்மானிப்பார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கும் பொழுது, இந்தக் கல்வியே மிகவும் சிறந்தது எனக் குழந்தைகளாகிய நீங்கள் பதில் அளிப்பீர்கள். அப்பொழுதும் சிலர் கூறுகிறார்கள்: நாங்கள் என்ன செய்வது? நாங்கள் லௌகீகக் கல்வியைக் கற்காது விட்டால், எங்கள் நண்பர்களும் உறவினர்களும் குழப்பம் அடைவார்கள். தந்தை கூறுகிறார்: நாளுக்கு நாள், காலம் குறுகிக்கொண்டே வருகிறது. இப்பொழுது நீங்கள் கற்க முடிவதைப் போன்று, பின்னர் உங்களால் கற்க முடியாமல் போய்விடும். பெரும் விசையுடன் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள், ஒருவருடன் ஒருவரான விரோதம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அனைவரையும் உடனடியாகவே அழித்துவிடக்கூடிய அத்தகைய ஏற்பாடுகளைத் தாங்கள் செய்துள்ளார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். நாடகத்துக்கேற்ப, யுத்தம் இன்னமும் ஆரம்பிக்க முடியாதுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதலில் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதுவரைக்கும், நாங்கள் எங்கள் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். அவர்களும் தங்கள் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் உங்கள் செல்வாக்கு பெருமளவில் பரவும். நினைவுகூரப்பட்டுள்ளது: ஓ கடவுளே! உங்கள் தெய்வீக லீலைகள் மிகவும் அற்புதமானவை! அந்தப்புகழ் இந்த நேரத்தையே குறிக்கிறது. நினைவுகூரப்பட்டும் உள்ளது: உங்கள் வழிமுறைகள் தனித்துவமானவை. ஒவ்வோர் ஆத்மாவும் நடிக்கின்ற பாகமும் தனித்துவமானது. இப்பொழுது தந்தை உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! அவருடைய மேன்மையான வழிகாட்டல்களுக்கும் மனிதர்களின் மேன்மையான வழிகாட்டல்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. பரமாத்மா பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் முழு உலகிலும் அமைதியைக் கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடகத்துக்கேற்ப, மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப் போன்றே, 100 சதவீதம் தூய்மை, அமைதி, சந்தோஷம் ஸ்தாபிக்கப்படுகிறது. எவ்வாறு? வந்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் உதவியாளர்கள் ஆகவும் வேண்டும். பெருமளவில் உதவுபவர்கள், வெற்றி மாலையின் மணிகள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களும், மிகவும் களிப்பூட்டுவனவாக இருந்தன. அந்தப் பெயர்களின் பட்டியல் ஓர் அல்பத்தில் வைக்கப்பட வேண்டும். நீங்கள் பத்தியில் இருத்தப்பட்டீர்கள். நீங்கள் உங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வந்து தந்தைக்கு உரியவர்கள் ஆகினீர்கள். நீங்கள் வந்ததும் பத்தியில் இடப்பட்டிருந்தீர்கள். வெளி நபர்கள் பிரவேசிக்க முடியாத அத்தகையதொரு தீவிரமான பத்தியே அது. நீங்கள் வந்து தந்தைக்கு உரியவர்கள் ஆகியபொழுது, உங்களுக்குப் புதிய பெயர்கள் வழங்கப்பட வேண்டியிருந்தது. நீங்கள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தீர்கள். இதனாலேயே உங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. அது ஓர் அற்புதமாக இருந்தது! தந்தை உங்கள் எல்லோருக்கும் பெயர்களை வழங்கினார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தி எதைப் பற்றிய சந்தேகத்தையும் கொண்டிருக்கக் கூடாது. ஒரு மகாவீரர் ஆகி மாயையின் புயல்களை வெற்றி கொள்ளுங்கள். மாயையின் புயல்கள் எதுவும் உங்களை அசைக்க முடியாத அளவில் யோகத்தில் நிலைத்திருங்கள்.2. திறமைசாலிகளாகி, உங்கள் வாழ்க்கையை இறை சேவைக்காகப் பயன்படுத்துங்கள். ஓர் உண்மையான ஆன்மீக சமூக சேவையாளர் ஆகுங்கள். இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்று ஏனையோருக்குக் கற்பியுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் அகங்காரத்தையும் சந்தேகங்களையும் முடிப்பதன் மூலம் உலக உபகாரியாகி, கருணைநிறைந்தவர் ஆகுவீர்களாக.ஓர் ஆத்மாவிடம் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் அந்த ஆத்மாவின் சம்ஸ்காரங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவரிடம் எந்தவிதமான விவேகமும் இல்லாமல் எப்போதும் மற்றவர்களை அவமதித்துக் கொண்டிருந்தாலும் கருணைநிறைந்த உலக உபகாரிக் குழந்தைகளான நீங்கள் சகல ஆத்மாக்களுடனும் நீதியாகவும் அன்பு நிறைந்தவர்களாகவும் இருப்பீர்கள். ஒருவரால் மாற முடியுமா இல்லையா அல்லது அவர் எப்போதும் அப்படித்தான் அல்லது அவரால் எதையும் செய்ய முடியாது என்ற எந்தவிதமான சந்தேகங்களும் உங்களுக்குள் ஒருபோதும் இருக்காது. ‘நான் மட்டுமே எல்லாமாக இருக்கிறேன், ஆனால் அவரோ எதுவுமே இல்லை’. இந்த வகையான அகங்காரத்தையும் உங்களின் சந்தேகங்களையும் அப்பால் ஒதுக்குங்கள். பலவீனங்களையும் குறைபாடுகளையும் இனங்காணும்போது, மன்னிக்கக்கூடிய, கருணை நிறைந்தவர்களாகவும் இருக்கும் குழந்தைகளான நீங்கள், உலக நன்மை என்ற சேவையைச் செய்வதில் வெற்றிநிறைந்தவர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
எங்கே பிராமணர்களின் சரீரம், மனம், செல்வத்தின் ஒத்துழைப்பு இருக்கிறதோ, அங்கே வெற்றி உங்களுடன் இருக்கும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். ஆத்மாக்கள் உங்களின் ஆத்ம உணர்வு ரூபத்தை அனுபவம் செய்யும்போது, அவர்கள் தந்தையை நோக்கிக் கவரப்படுவார்கள். ஓ பிரபுவே (ஓ கடவுளே) என்ற பாடல்களைப் பாடி, சரீர உணர்வு இல்லாமல் இலகுவாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள். ஓஹோ உங்களின் பாக்கியமே! ஓஹோ எனது பாக்கியமே! இந்தப் பாக்கியத்தை அனுபவம் செய்வதால், அவர்கள் சரீரம் மற்றும் சரீர உறவுகளின் விழிப்புணர்வைத் துறந்து விடுவார்கள்.