06.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உண்மையான மீட்புப் படையினராகி. அனைவரையும் இப்பாவ உலகிலிருந்து, புண்ணிய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். அனைவரினதும் மூழ்கியுள்ள படகுகளை அக்கரைக்குக் கொண்டு செல்லுங்கள்.
கேள்வி:
குழந்தைகள் அனைவரினதும் புத்தியில் எந்த நம்பிக்கை, வரிசைக்கிரமமாக உள்ளது?பதில்:
எங்கள் அதி அன்பிற்கினிய தூய்மையாக்குபவரான பாபாவே, எங்கள் சுவர்க்க ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கின்றார். குழந்தைகள் அனைவரினதும் புத்தியிலும் இந்த நம்பிக்கை வரிசைக்கிரமமாகவே உள்ளது. அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தாலும், மாயை முன்னாலேயே நிற்கிறாள்; தந்தையை அவர்கள் மறப்பதால் சித்தி அடைவதில்லை. இந்த நம்பிக்கை உள்ளவர்கள், தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடைய புத்தியில், தாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது உள்ளது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, அன்பான, நீண்டகாலம் பிரிந்திருந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காலை வந்தனங்கள். சத்தியயுகத்தில், தினமும் காலைப்பொழுது நன்றாகவே இருக்கிறது; ஒவ்வொரு நாளும் நன்றாகவே இருக்கின்றது; அனைத்துமே நன்றாக இருக்கிறது. இரவும் நன்றாக இருக்கிறது - அனைத்தும் நன்றாக இருக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இங்கு காலையோ அல்லது இரவோ நன்றாக இருப்பதில்லை. இரவே மோசமானது. எனவே அனைத்திலும் சிறந்தது எது? அமிர்த வேளை என்று அழைக்கப்படுகின்ற, அதிகாலை வேளையே சிறந்தது. உங்கள் ஒவ்வொரு கணமும் நன்றாகவே இருக்கிறது. இந்நேரத்தில் நீங்கள் யோகேஸ்வரராகவும், யோகேஸ்வரியாகவும் இருப்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்கள் தந்தையாகிய கடவுள், வந்து உங்களுக்கு யோகம் கற்பிக்கிறார். அதாவது, குழந்தைகளாகிய நீங்கள், கடவுளுடன் யோகம் செய்கிறீர்கள். யோகேஸ்வரர் ஆகுவதால், ஞானக் கடவுளான (ஞானேஸ்வரர்) தந்தையைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். உங்கள் யோகம் தந்தையுடன் இணைக்கப்படுகிறது. தந்தை வந்து, முழு உலகச் சக்கரத்தையும் பற்றிய ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதன் மூலம் நீங்கள் இந்த ஞானத்தின் கடவுள்கள் ஆகுகிறீர்கள். தந்தையாகிய கடவுள் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். எந்தக் கடவுள்? அசரீரியான தந்தையே. இப்பொழுது நீங்கள் அனைத்தையுமே உங்கள் புத்தி மூலம் செய்ய வேண்டும். குருமாருக்குப் பலவகையான அபிப்பிராயங்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணருடன் யோகம் செய்யும்படி கூறி, சிலர் ஸ்ரீகிருஷ்ணருடைய படத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சாயிபாபா எனவும், இன்னொருவர் மகரிஷி பாபா எனவும் அழைக்கப்படுகிறார். ஒருவர் முஸ்லிம்களின் பாபா, மற்றவர் பார்ஸிகளின் பாபா. அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் பாபா என்றே அழைக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அனைவரும் கடவுளே, ஒரு மனிதராலும் கடவுளாக இருக்க முடியாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் கூட இறைவி என்றோ இறைவன் என்றோ அழைக்கப்பட முடியாது. அசரீரியானவரே கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் தந்தை ஆவார். அவர் சிவபாபா என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் பிறவிபிறவியாக ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்கிறீர்கள். அங்கே நிச்சயமாகப் ஒரு பண்டிதரான, சந்நியாசி அல்லது சாது ஒருவர் இருப்பார். அவரே தங்கள் குரு என்றும், ஒரு சமயக் கதையை அவர் தங்களுக்குக் கூறுகிறார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சத்தியயுகத்தில் சமயக் கதைகள் இருப்பதில்லை. தந்தை இங்கே அமர்ந்து இருந்து விளங்கப்படுத்துகிறார்: 'கடவுள்" அல்லது 'ஈஸ்வரர்" என்று மாத்திரமே கூறுவதால் எவ்வித இனிமையும் அனுபவம் செய்யப்படுவதில்லை. அவரே தந்தை ஆவார். எனவே, அவரை பாபா என்று அழைப்பதால், அன்பினால் உறவுமுறை பூர்த்தி அடைகிறது. நீங்கள் மம்மா, பாபாவின் குழந்தைகள் என்பதையும், அவர்கள் மூலம் சுவர்க்கத்தின் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். அங்கே செல்வதால், தாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாகவோ அல்லது நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாகவோ ஆக முடியுமென மக்கள் நம்பிச் செல்கின்ற, வேறெந்த ஆன்மீக ஒன்றுகூடலும் இல்லை. இப்பொழுது நீங்கள் உண்மையான தந்தையின் சகவாசத்தில் இருக்கிறீர்கள், ஏனைய அனைவரும் பொய்யான சகவாசத்தில் இருக்கிறார்கள். இது இவ்வாறு பாடப்படுகிறது: 'உண்மையான சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றது, பௌதீகமான சகவாசம் உங்களை மூழ்கடிக்கின்றது”. பௌதீகமான சகவாசம் உங்களை மூழ்கடித்து விடும். தந்தை கூறுகிறார்: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! உங்கள் சரீரங்களின் உணர்வைத் துறந்து விடுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு, ஆத்மாக்களாகிய உங்களுக்கு நான் கற்பிக்கிறேன். பரமாத்மா வந்து ஆத்மாக்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கிறார். ஏனைய அனைத்துமே பக்தி மார்க்கம்; அது இந்த ஞான மார்க்கமல்ல. தந்தை கூறுகிறார்: சகல வேதங்கள், சமயநூல்கள் அனைத்தையும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நான் அறிவேன். நானே அதிகாரி. அந்த மக்கள் பக்தி மார்க்கத்தின் அதிகாரிகள். அவர்கள் பல்வேறு சமயநூல்கள் போன்றவற்றையும் கற்றிருப்பதால், அவர்கள் சமயநூல்களின் அதிகாரிகள் என அழைக்கப்படுகிறார்கள். தந்தை வந்து உங்களுக்கு உண்மையைக் கூறுகிறார். உண்மையான சகவாசம் உங்களை அக்கரை அழைத்துச் செல்கின்றது எனவும், பொய்யான சகவாசம் உங்களை மூழ்கடித்து விடுகின்றது எனவும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மூலமே, பாரதத்தை மீட்கிறார். நீங்களே ஆன்மீக மீட்புப் படையினர். தந்தை கூறுகிறார். சுவர்க்கமாக இருந்த பாரதம் இப்பொழுது நரகமாகி விட்டது. அது மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் அது கடலுக்கடியில் இருக்கிறது என்பதல்ல. நீங்கள் சதோபிரதானில் இருந்து, தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். சத்திய, திரேதா யுகங்களே சதோபிரதானானவை; இது ஒரு பெரிய நீராவிக் கப்பல். நீங்கள் நீராவிக் கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். இது ஒரு பாவகரமான உலகம், ஏனெனில் அனைவரும் பாவாத்மாக்களே, உண்மையில் ஒரேயொரு சற்குருவே இருக்கிறார், எவருக்குமே அவரைத் தெரியாது. அவர்கள் எப்பொழுதும் கூறுகிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! அவர்கள் என்றுமே கூறுவதில்லை: தந்தையும், குருவுமாகிய கடவுளே! இல்லை; அவர்கள் தந்தையைப் பற்றியே பேசுகிறார்கள். அவரே தூய்மையாக்குபவர், எனவே அவரே குருவும் ஆவார். ஒரேயொருவரே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். எந்த மனிதரும் சற்கதியை அருள்பவராகவோ, இத்தூய்மையற்ற உலகினைத் தூய்மை ஆக்குபவராகவோ இருக்க முடியாது. தந்தை கூறுகிறார்: அதிகளவு கலப்படமும் சீரழிவுமே இருக்கின்றன! தாய்மாராகிய உங்கள் மூலமும், குமாரிகளாகிய உங்கள் மூலமுமே, நான் இப்பொழுது அனைவரையும் ஈடேற்ற வேண்டும். பிரம்மா குமாரர்களும், குமாரிகளுமான நீங்கள் அனைவரும் சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் பாட்டனாரின் ஆஸ்தியை எவ்வாறு பெறுவீர்கள்? நீங்கள் 21 சந்ததிகளுக்கான, சுவர்க்க இராச்சியம் எனும் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இவ்வருமானம் மிகவும் மகத்தானது! இதுவே உண்மையான தந்தையிடம் இருந்து பெறப்படுகின்ற உண்மையான வருமானம். தந்தையே, தந்தையாகவும், ஆசிரியராகவும், சற்குருவாகவும் இருக்கிறார். அவர் அனைத்தையும் நடைமுறையாக எங்களுக்குச் செய்து காட்டுகிறார். இங்கே ஒரு குரு மரணித்தால், அவருடைய சீடர் 'கதி"யைப் பெறுகிறார் என்பதல்ல. அந்தக் குருமார்கள் பௌதீகமானவர்கள். இவரோ ஆன்மீகக் குரு. இது மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது முற்றிலும் புதியதொரு விடயம். உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தூய்மையாக்குபவரும், ஞானக்கடலுமாகிய சிவபாபாவே இச்சரீரத்தினூடாக எங்களுக்குக் கற்பிக்கிறார். உங்கள் புத்தி சிவபாபாவை நோக்கியே செல்கிறது. அந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்களுடைய புத்தி, மனிதர்களை நோக்கியே செல்கிறது. அவை யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இப்பொழுது நீங்கள் பாடுகிறீர்கள்: நீங்களே தாயும், தந்தையும் ஆவீர்கள், நாங்கள் உங்கள் குழந்தைகள். அவர் ஒரேயொருவரே. எவ்வாறாயினும், தான் எவ்வாறு வந்து, உங்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்குகிறார் என்று பாபா உங்களுக்குக் கூறுகிறார். அவர் கூறுகிறார்: நானே, உங்கள் தந்தை. எனவே நான் இவருடைய சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன். எனவே பிரம்மா எனது மனைவியும், எனது குழந்தையும் ஆவார். சிவபாபா குழந்தைகளாகிய உங்களை இவர் மூலம் தத்தெடுப்பதால் இவரே மூத்த தாயும் ஆவார். அவருக்கெனச் சொந்தமாக ஒரு தாய் இல்லை. சரஸ்வதி, உலகத்தாய் என்று அழைக்கப்படுகிறார். அவரே உங்கள் அனைவரையும் பராமரிப்பதற்கு நியமிக்கப்பட்டவர். சரஸ்வதி ஞான தேவி ஆவார். அவரே (மம்மா) கனிஷ்ட தாயும் ஆவார். இவை மிகவும் ஆழமான விடயங்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஆழமான கல்வியைக் கற்கிறீர்கள். நீங்கள் கௌரவமாக சித்தி அடைய வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனும் கௌரவமாக சித்தி அடைந்தார்கள். அவர்களே அனைத்திலும் மிகப் பெரிய புலமைப்பரிசிலைப் பெற்றார்கள். அவர்கள் தண்டனையை அனுபவம் செய்ய வேண்டி இருக்கவில்லை. தந்தை கூறுகிறார், இயலுமானவரை என்னை நினைவு செய்யுங்கள்! இதுவே பாரதத்தின் புராதன யோகம் என அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குச் சகல வேதங்கள், சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கூறுகிறேன். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன், அதனூடாக நீங்கள், உங்கள் வெகுமதியை அடைந்தீர்கள். பின்னர் அந்த ஞானம் மறைந்து விடுகிறது. எனவே அது எவ்வாறு தொன்றுதொட்ட காலத்தில் இருந்து தொடர்ந்திருக்க முடியும்? அங்கே சமயநூல்கள் போன்ற எதுவுமே இருப்பதில்லை. இஸ்லாம், பௌத்தம் போன்ற ஏனைய சமயங்கள் அனைத்தினதும் ஞானம் மறைந்து விடுவதில்லை; அவை ஆரம்பித்த காலத்தில் இருந்து அவர்களின் ஞானம் தொடர்கிறது. அனைவருமே அதைப் பற்றி அறிந்துள்ளார்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுக்கும் ஞானத்தை எவருமே அறியார். பாரதம் சந்தோஷம் அற்றதாக ஆகுகின்றது. நான் வந்து அதைச் சதா சந்தோஷம் உடையதாக ஆக்குகிறேன். தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் இருக்கிறேன். உங்கள் புத்தியின் யோகம், தந்தையுடன் இருக்க வேண்டும். பரமாத்மா, பரமதந்தையே ஆத்மாக்களின் தந்தை. அவரே குழந்தைகள் அனைவரினதும் தந்தை. அனைவரும் அவரது குழந்தைகளே. இந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவருமே தூய்மை அற்றவர்கள். தந்தை கூறுகிறார்: நான் நடைமுறை ரீதியில் இங்கு வந்திருக்கிறேன். விநாசம் முன்னாலே இருக்கிறது. தீ உருவாகும் என்பதையும், அனைவருடைய சரீரங்களும் அதில் அழியும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் அல்லது ஒளியுடன் இரண்டறக் கலப்பார்கள் என்பதல்ல. பிரம் சமாஜியினர் ஓர் ஒளியை ஏற்றி, அதைத் தங்கள் பிரம்மாலயம் என்று அழைக்கிறார்கள். உண்மையில், அதுவே ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்ற, பெரும் பிரம்ம தத்துவம் ஆகும். ஆரம்பத்தில் அதுவே எங்கள் ஆலயமாக உள்ளது. அங்கு தூய்மையான ஆத்மாக்கள் வசிக்கின்றனர். மனிதர்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது நீங்கள் ஞான தேவர்களும், தேவிகளும் என்றும், பின்னர் நீங்;கள் இராஜ இராஜேஸ்வரர்கள் (இளவரசர்களும், இளவரசிகளும்) ஆகுவீர்கள் என்றும் ஞானக்கடலான தந்தை இங்கே அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எங்கள் அதி அன்பிற்கினியவரான தூய்மையாக்குபவரான பாபாவே வந்து, எங்கள் சுவர்க்க ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கிறார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இது சிலருடைய புத்தியில் இருப்பதில்லை. பலர் இங்கு இருந்தாலும், எவருடைய புத்தியிலும் 100% நம்பிக்கை இருப்பதில்லை. சிலருக்கு 80% நம்பிக்கையும், ஏனையோருக்கு 50% நம்பிக்கையும் உள்ளது, சிலருக்கு அந்தளவு நம்பிக்கையேனும் இருப்பதில்லை. அவர்கள் முழுமையாகத் தோல்வி அடைந்தவர்கள்! இது நிச்சயமாக வரிசைக்கிரமமாக இருக்கிறது. பலருக்கு நம்பிக்கையே இருப்பதில்லை. அவர்கள் நம்பிக்கை வைக்க முயற்சிக்கிறார்கள். சரி, அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், மாயை மிகவும் பலமானவள்: அவர்கள் பாபாவை மறந்து விடுகிறார்கள். தான் ஓர் உறுதியான பக்தராக இருந்தாரென இந்த பிரம்மாவே கூறுகிறார். இவர் 63 பிறவிகளுக்குப் பக்தி செய்தார், நீங்களுமே அதையே செய்தீர்கள்; நீங்களும் 63 பிறவிகளாகப் பக்தி செய்தீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெற்று, பின்னர் பக்தர்கள் ஆகினீர்கள். பக்தியின் பின்னர் விருப்பமின்மை ஏற்படுகிறது. சந்நியாசிகளுமே இந்தப் பதங்களைப் பயன்படுத்துகின்றார்கள்: ஞானம், பக்தி, விருப்பமின்மை. அவர்களுக்குத் தங்கள் வீட்டிலும், குடும்பத்திலும் விருப்பமின்மை இருக்கிறது. அது எல்லைக்கு உட்பட்ட விருப்பமின்மை எனவும், உங்கள் விருப்பமின்மை எல்லையற்றது எனவும் அழைக்கப்படுகிறது. சந்நியாசிகள் வீடுகளை விட்டுவிட்டு; காடுகளுக்குச் செல்கிறார்கள். இப்பொழுது எவருமே காடுகளில் இருப்பதில்லை; குகைகள் போன்றன வெறுமையாக உள்ளன. ஏனெனில், முதலில் அவர்கள் சதோபிரதானாக இருந்தாலும், இப்பொழுது தமோபிரதானாகி விட்டனர். இப்பொழுது அவர்களுக்கு எந்தச் சக்தியும் கிடையாது. உங்களுக்கு இலக்ஷ்மி, நாராயணனுடைய இராச்சியத்தில் சக்தி இருந்தது. மறுபிறவிகளை எடுத்தபின் இப்பொழுது என்ன நிலையை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்! எவ்விதமான சக்தியுமே எஞ்சியிருப்பதில்லை. இங்குள்ள அரசாங்கம் தங்களுக்குச் சமயத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறுகிறது. சமயங்கள் மூலம் பெருமளவு பாதிப்பு ஏற்படுகின்றது. அவர்கள் சண்டை சச்சரவு செய்து கொண்டு, தொடர்ந்தும் சமயங்கள் அனைத்தும் ஒன்றுசேர்வதற்கு மாநாடுகளை நடாத்துகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எவ்வாறு ஒன்றுபட முடியும் என்று கேளுங்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது, அனைவருமே வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பாபா வந்திருக்கிறார், இந்த உலகம் மயான பூமி ஆகவுள்ளது. இது ஒரு 'பல்வகை" விருட்சம் ஆகும். அவர்களால் எவ்வாறு ஒன்றுபட முடியும்? அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. பாரதத்தில் ஒரேயொரு தர்மம் இருந்த பொழுது, அவர்கள் பிரிவினையற்ற வழிகாட்டல்களைப் பின்பற்றிய, தேவர்கள் என அழைக்கப்பட்டனர். பிரிவினை என்பதன் அர்த்தம் அசுரர்கள் என்பதாகும். பாபா கூறுகிறார்: உங்கள் தர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. நீங்கள் 84 தடவைகள் மறுபிறவிகளை எடுக்க வேண்டும் என்பதை அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் எனும் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். நாங்கள் திரும்பிச் சென்று, பின்னர் மீண்டும் இங்கு திரும்பி வரவேண்டும். நீங்கள் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்று பாரத மக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. இப்பொழுது இது உங்கள் பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். இது ஒருவருக்கு மாத்திரம் விளங்கப்படுத்தப்படுவதில்லை, ஆனால் பாண்டவ சேனையைச் சேர்ந்த உங்கள் அனைவருக்குமே விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்களே வழிகாட்டிகள், நீங்கள் ஆன்மீக யாத்திரையைக் கற்பிக்கிறீர்கள், இதனாலேயே நீங்கள் பாண்டவ சேனை என அழைக்கப்படுகிறீர்கள். இப்பொழுது கௌரவர்களிடமோ அல்லது பாண்டவர்களிடமோ இராச்சியம் ஏதுமில்லை. நீங்களும் பிரஜைகள். அவர்களும் பிரஜைகளே. கௌரவர்களும், பாண்டவர்களும் சகோதரர்கள் எனவும், பரமாத்மாவாகிய தந்தையைப் பாண்டவர்கள் தங்கள் பக்கம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறு மாயையை வெல்வது என்று தந்தையே வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களான நீங்கள் அகிம்சாவாதிகள். அகிம்சையே பரம தர்மமாகும். காமவாளை உபயோகிக்காமல் இருப்பதே பிரதான விடயம். பசுக்களைக் கொல்லாமல் இருப்பது மாத்திரமே அகிம்சை என்று பாரத மக்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், பாபா கூறுகிறார்: காமவாளை உபயோகிக்காதீர்கள்! அதுவே மிகப்பெரிய வன்முறையின் வடிவம் என்று அழைக்கப்படுகின்றது. சத்திய யுகத்தில், காமவாளோ அல்லது சண்டை சச்சரவோ இருக்க மாட்டாது. அவை இரண்டும் இங்கேயே உள்ளன. காமவாளே அது ஆரம்பித்த காலம் முதல் மத்தியினூடாக இறுதி வரை துன்பத்தைத் தருகிறது. நீங்கள் ஏணியில் இறங்கி வருகிறீர்கள். பாரத மக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். அது இலக்ஷ்மி நாராயணனுடைய இராச்சியமாக இருந்தது, அவர்கள் மறுபிறவி எடுத்தார்கள். ஒவ்வொரு பிறவியும் ஏணியில் ஒரு படியாகும். இங்கிருந்து நீங்கள் ஆக உச்சிக்குப் பாய்ந்து செல்கிறீர்கள். நீங்கள் 84 படிகளில் இறங்குவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன, பின்னர் ஒரு விநாடியில் இங்கிருந்து மேலே ஏறிவிடுகிறீர்கள். உங்களுக்கு ஜீவன் முக்தியை ஒரு விநாடியில் கொடுப்பது யார்? தந்தையே ஆவார். இப்பொழுது அனைவரும் முற்றாகத் தரையில் விழுந்து விட்டார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இப்பொழுது நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என்பதையும், நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் எனபதையும் உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் எங்கள் தந்தையையும், எங்கள் வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் உங்களுக்கு வீடு செல்லும் வழியைக் காட்டுவார். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதால், ஒரு பாவமேனும் அழியாது. பரமாத்மா மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் எவ்வாறு தூய்மை ஆக்குகிறார் என்பதை உலகிலுள்ள எவரும் புரிந்து கொள்வதில்லை. தந்தை, நிச்சயமாக, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வர வேண்டும். தந்தை வந்து விட்டதால், குழந்தைகளான நீங்கள் அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறீர்கள். அவர் எந்த மிகச்சரியான கணத்தில், நேரத்தில் அல்லது திகதியில் வந்தார் என்பதை உங்களால் கூற முடியாது. சிவபாபா எப்பொழுது வந்தார் என்பதை எவ்வாறு உங்களால் கூற முடியும்? பலருக்குக் காட்சிகள் கிடைக்கின்றன. முதலில் நாங்கள் அவரைச் சர்வவியாபகர் என்று கருதினோம் அல்லது ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்று கூறுவதும் வழக்கம். இப்பொழுது எங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியும். பாபா, ஒவ்வொரு நாளும் ஆழமான விடயங்களை எங்களுக்குத் தொடர்ந்தும் கூறுகிறார். சாதாரண குழந்தைகளாகிய நீங்கள் இத்தகைய மேன்மையான ஞானத்தைக் கற்கிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கௌரவமாக சித்தி அடைவதற்கு, தண்டனையில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். நினைவில் இருப்பதனால் மாத்திரமே உங்களால் ஒரு புலமைப் பரிசிலுக்கான உரிமையைக் கோர முடியும்.2. ஓர் உண்மையான பாண்டவராகி, அனைவரையும் ஆன்மீக யாத்திரையில் அழைத்துச் செல்லுங்கள். எவ்வகையான வன்முறையையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கலங்கரைவிளக்க ஸ்திதியில் இருப்பதன் மூலம் புண்ணியாத்மாவாகி, எவ்வித பாவகரமான செயல்கள் செய்வதையும் நிறுத்துவீர்களாக.எங்கு ஒளி உள்ளதோ, அங்கே எவ்விதமான பாவகரமான செயல்களும் இடம்பெற முடியாது. சதா நீங்கள் கலங்கரை விளக்க ஸ்திதியில் நிலைத்திருந்தால், மாயையினால் உங்களை எவ்விதமான பாவகரமான செயல்களையும் செய்விக்க முடியாது, ஏனெனில் நீங்கள் சதா புண்ணியாத்மாவாக இருப்பீர்கள். ஒரு புண்ணியாத்மாவினால் தனது எண்ணங்களிலேனும் பாவச் செயலைச் செய்ய முடியாது. எங்கு பாவம் உள்ளதோ, அங்கே தந்தையின் நினைவு இருக்க முடியாது. இந்தத் திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருங்கள்: நான் ஒரு புண்ணியாத்மா, என் முன்னிலையில் பாவம் வரமுடியாது. எந்தப் பாவத்தையும் உங்கள் கனவிலோ எண்ணங்களிலோ வர அனுமதிக்காதீர்கள்.
சுலோகம்:
ஒவ்வொரு காட்சியையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக பார்ப்பவர்கள், சதா முகமலர்ச்சியுடன் இருப்பார்கள்.அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கை அத்திவாரத்தை உறுதியானதாக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
நம்பிக்கையுடைய புத்தியை கொண்டிருக்கின்ற குழந்தைகள் சதா முகமலர்ச்சியுடனும் கவலையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். கவலை உங்கள் சந்தோஷத்தை முடித்து விடுகின்றது, ஆனால் நீங்கள் கவலையற்றவர்களாக இருந்தால், நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்கள். நீங்கள் கேள்விகள் கேட்கும் போது: எந்த ஒரு சூழ்நிலையிலும், என்ன நடந்தது? எப்படி நடந்தது? எப்படி நடக்கும்? என கேட்டால் கவலை ஏற்படுகிறது. ஏன்? என்ன? எப்படி? இவை கவலையின் அலைகளாகும். அதன் பின்னர் : இது ஏன் எப்பொழுதும் எனக்கு நடக்கிறது? எனக்கு ஏன் இந்த பந்தனங்கள் உள்ளன? மாயை ஏன் என் பின்னாலேயே வருகிறாள்? எனது கர்ம கணக்கு ஏன் இவ்வளவு கடுமையாக உள்ளது? என்றும் சிலர் வினவுகிறார்கள். அதனால் ஏன்? எனக் கேட்பது என்றால் துன்பத்தின் அலையாகும். இந்தக் கவலைகளில் இருந்து விடுபட்டிருப்பவர்கள் கவலையற்றவர் ஆவார்கள்.