06.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, விளையாட்டுப் பொம்மை போன்ற இந்தச் சரீரம், ஆத்மா எனும் உயிர்வாழும் திறவுகோலால் இயங்குகிறது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் பயமற்றவர்கள் ஆகுவீர்கள்.

கேள்வி:
சரீரத்தினூடாக ஒரு நாடகத்தில் நடிக்கும்போது, தொடர்ந்து கீழிறங்குகின்ற ஆத்மாவிற்கு எந்தப் பெயரை நீங்கள் வழங்குவீர்கள்?

பதில்:
பொம்மைகள். ஒரு பொம்மலாட்டத்தில் பொம்மைகள் ஆடுவதைப் போன்றே, ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த 5000 வருடங்களுக்குரிய நாடகத்தில் பொம்மைகளைப் போன்று தொடர்ந்தும் கீழிறங்குகின்றீர்கள். பொம்மைகளாகிய உங்களுக்கு மீண்டும் மேலே ஏறுவதற்கான வழிமுறையைக் காட்டுவதற்காகத் தந்தை வந்துள்ளார். இப்போது, ஸ்ரீமத் எனும் திறவுகோலைப் பிரயோகியுங்கள். நீங்கள் மேலே செல்வீர்கள்.

பாடல்:
சுவாலைக்கான ஒன்றுகூடலில் விட்டிற்பூச்சி எரிக்கப்பட்டுள்ளது……

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஸ்ரீமத் வழங்குகிறார். ஒருவரின் நடத்தை நன்றாக இல்லாதபோது, அவருடைய பெற்றோர்கள் ‘கடவுள் உனக்கு நல்ல வழிகாட்டல்களை வழங்கட்டும்!’ எனக் கூறுகிறார்கள். கடவுள் உண்மையில் வழிகாட்டல்களை வழங்குகிறார் என்பதை அந்த அப்பாவி மக்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். அதாவது, ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்கு மேன்மையான வழிகாட்டல்களை வழங்குகிறார். நீங்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். தந்தை எமக்கு இத்தகைய மேன்மையான வழிகாட்டல்களை வழங்குகிறார். நாம் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி சாதாரணமான மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறோம். தந்தையால் மட்டுமே சாதாரணமான மனிதர்களைத் தேவர்களாக மாற்ற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு கடவுளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை எனச் சீக்கியர்கள் பாடுகிறார்கள். எனவே, அவர் நிச்சயமாக நீங்கள் சாதாரணமான மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறார். அசரீரியானவர், அனைத்தையும் செய்பவர், பயமற்றவர் என அவருடைய புகழ் பாடப்படுகிறது. நீங்கள் அனைவரும் பயமற்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களுக்குப் பயம் கிடையாது. தந்தை கூறுகிறார்: பயமற்றவர் ஆகுங்கள்! எதனையிட்டுப் பயப்பட வேண்டும்? உங்களுக்கு எந்தவிதப் பயமும் கிடையாது. நீங்கள் வீட்டில் இருக்கும்போது, தந்தையிடம் இருந்து தொடர்ந்து ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். யாருடைய ஸ்ரீமத் அது? யார் அதனை வழங்குகிறார்? இந்த விடயங்கள் கீதையில் குறிப்பிடப்படவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தூய்மை ஆகுவதற்கு, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கான இந்த ஒன்றுகூடலானது சங்கம யுகத்தில் மட்டுமே இடம்பெறுகின்றது. பலர் வந்து ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது கடவுளுடனான குழந்தைகளின் மேலா (சந்திப்பு) எனப்படுகின்றது. கடவுள் அசரீரியானவர். குழந்தைகளும் அசரீரியானவர்களே. நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகின்ற திடமான பழக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொம்மை ஒன்றின் திறவுகோலை முடுக்கி விடும்போது, அது நடனமாடத் தொடங்குகிறது. எனவே, ஒவ்வோர் ஆத்மாவும் பொம்மை போன்றிருக்கும். இந்தச் சரீரத்திற்கான திறவுகோலாகும். அதில் ஆத்மா இல்லாவிடின், அந்த சரீரத்தால் எதனையும் செய்ய முடியாது. நீங்கள் உயிர்வாழும் பொம்மைகள் ஆவீர்கள். பொம்மையைத் திறவுகோலால் முடுக்காதுவிடின், அதில் எந்தவிதப் பயனும் இருக்காது. அது ஆடாது அசையாது நின்றுவிடும். ஆத்மா உயிர்வாழும் திறவுகோலாகும். அது அழியாத, அமரத்துவமான திறவுகோலாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் ஆத்மாவை மட்டுமே பார்க்கிறேன். ஆத்மாவே செவிமடுக்கிறார் என்ற உறுதியான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சரீரத்தால் இந்தத் திறவுகோலின்றிச் செயற்பட முடியாது. இவர் அழியாத திறவுகோலைப் பெற்றுள்ளார். இந்தத் திறவுகோல் 5000 வருடங்களுக்கு நிலைத்திருக்கிறது. இந்தத் திறவுகோல் உயிர்வாழ்வதனால், சக்கரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்தச் சரீரம் உயிர்வாழும் பொம்மை ஆகும். தந்தையும் உயிர்வாழும் ஆத்மாவே ஆவார். சாவி திருப்பப்படுவது நின்றுவிடும்போது, தந்தை வந்து இதனை மீண்டும் இயக்குவதற்கான வழிமுறையை உங்களுக்குக் காட்டுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். சாவிக்கு மீண்டும் சக்தியூட்டப்படும். அதாவது, எவ்வாறு காரின் தாங்கி வெறுமை ஆகும்போது, அதில் பெற்றோல் நிரப்பப்படுகிறதோ, அவ்வாறே, ஆத்மா தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவார். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களை எவ்வாறு பெற்றோலால் நிரப்புவது என்பதை இப்போது அறிவீர்கள். பற்றரி ஒன்றின் சக்தி குறைவடையும்போது, அது சக்தியால் நிரப்பப்படுகிறது. பற்றரி ஒன்றின் சக்தி குறைவடையும்போது, அதன் ஒளியும் அணைந்து விடுகின்றது. உங்களுடைய ஆத்மாவின் பற்றரியின் சக்தி இப்போது மீண்டும் சக்தியூட்டப்படுகிறது. எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு ஆத்மா சக்தியால் நிரப்பப்படுவார். 84 பிறவிச் சக்கரத்தில் சுற்றி வந்ததனால், பற்றரி வெறுமை ஆகிவிட்டது. ஆத்மா சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் சென்றிருக்கிறார். தந்தை மீண்டும் ஒருமுறை சாவியைத் திருகி விடுவதற்காக, அதாவது, பற்றரியைச் சக்தியூட்டுவதற்காக வந்துள்ளார். அவர்களிடம் எந்தவிதச் சக்தியும் இல்லாவிடின் மனிதர்கள் என்ன ஆகுவார்கள்? எனவே, பற்றரி இப்போது நினைவால் சக்தியூட்டப்பட வேண்டும். உங்களை மனித பற்றரி என்றும் அழைக்க முடியும். என்னுடன் யோகம் செய்யுங்கள் எனத் தந்தை கூறுகிறார். ஒரேயொரு தந்தை மட்டுமே இந்த ஞானத்தை வழங்குகிறார். அந்த ஒரேயொரு தந்தை மட்டுமே ஜீவன்முக்தியை அருள்பவர் ஆவார். உங்களுடைய பற்றரி இப்போது முழுமையாக சக்தி ஊட்டப்படுகிறது. அதன் மூலம் நீங்கள் 84 பிறவிகளுக்கு முழுமையாகத் தொடர்ந்து உங்களுடைய பாகத்தை நடிப்பீர்கள். எவ்வாறு ஒரு நாடகத்தில் பொம்மைகள் ஆடுகின்றனவோ, அவ்வாறே ஆத்மாக்களாகிய நீங்களும் அந்தப் பொம்மைகள் போன்றவர்களே. மேலிருந்து கீழிறங்கி வந்து, நீங்கள் 5000 வருடங்களில் படிப்படியாகக் கீழிறங்கி வந்துள்ளீர்கள். தந்தை மீண்டும் உங்களை மேலேறச் செய்வதற்காக வந்துள்ளார். அது வெறுமனே ஒரு பொம்மை ஆகும். மேலேறுகின்ற ஸ்திதியினதும், கீழிறங்குகின்ற ஸ்திதியினதும் அர்த்தத்தைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அது 5000 வருடங்களுக்குரிய விடயமாகும். நீங்கள் ஸ்ரீமத் என்ற சாவியால் திருகி விடப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் முழுமையாக சதோபிரதான் ஆகும்போது, நாம் முழுமையான பாகத்தை மீண்டும் நடிப்போம். இது புரிந்து கொள்வதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் இலகுவான விடயமாகும். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: சென்ற கல்பத்தில் இதனைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே அதனைப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எந்தளவிற்கு உங்களுடைய தலைகளை அடித்துக் கொண்டாலும், அவர்கள் வேறு எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். தந்தை அனைவருக்கும் அதே விளக்கத்தையே வழங்குகிறார்: நீங்கள் எங்கிருந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். ஆசிரியர் ஒருவர் உங்களுக்கு முன்னால் இல்லாவிட்டாலும், நீங்கள் அமர்ந்திருந்து அவரை நினைவு செய்ய முடியும். தந்தையின் நினைவினால் மட்டுமே உங்களுடைய பாவங்கள் அழியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் அவரின் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக நினைவு செய்வதற்காக, யாராவது உங்களை அமரச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உண்ணும்போதும், பருகும்போதும், நீராடும்போதும், அனைத்தையும் செய்யும்போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். யாராவதொருவர் உங்களுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம். அந்த நபர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதல்ல. இல்லை. நீங்கள் ஒவ்வொருவருமே உங்களுக்கு உதவி செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய புத்தி தெய்வீகமானது ஆகுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கடவுள் உங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கி உள்ளார். உங்களுக்கு இந்த ஆவல் ஏற்படுத்தப்படுகின்றது. அவர் தொடர்ந்தும் அனைவருக்கும் ஸ்ரீமத் வழங்குகிறார். நிச்சயமாக, சிலரின் புத்தி பலவீனமானதாகவும், சிலரின் புத்தி கூர்மையானதாகவும் இருக்கும். நீங்கள் தூயவரான ஒரேயொருவருடன் யோகம் செய்யாவிடின், உங்களுடைய பற்றரியைச் சக்தியூட்ட முடியாது. அப்போது நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் ஏற்றுக்கொள்ளவும் மாட்டீர்கள். உங்களால் யோகமும் செய்ய முடியாது. உங்களுடைய பற்றரி மீண்டும் சக்தியூட்டப்படுகிறது என்பதை இப்போது நீங்கள் உணருகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். இந்த வேளையில் மட்டுமே நீங்கள் பரமாத்மாவிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். உலகம் இவற்றைப் புரிந்து கொள்வதே இல்லை. தந்தை கூறுகிறார்: என்னுடைய இந்த வழிகாட்டல்கள் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். இதனைவிட உயர்ந்தது எதுவுமில்லை. இந்த ஞானம் அங்கு இருக்கப் போவதில்லை. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. சங்கமயுகத்தில் மட்டுமே தந்தை வந்து உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்குகிறார். இதன் ஞாபகார்த்தம் பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படுகிறது. அவர்கள் தசேராவைக் (இராவணனின் கொடும்பாவியை எரிப்பது) கொண்டாடுகிறார்கள். தந்தை வரும்போது தசேரா நிகழ்கிறது. அனைத்தும் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு மீண்டும் நிகழ்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். அவற்றினூடாக நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர், படிப்படியாகக் கீழிறங்கி வரும்போது, நீங்கள் தமோபிரதானாகவும் சீரழிந்தவர்களாகவும் ஆகினீர்கள். தந்தை இப்போது உங்களுக்கு இந்த ஞானத்தையும் யோகத்தையும் கற்பித்து, உங்களை சதோபிரதானாகவும் மேன்மையானவர்களாகவும் ஆக்குகிறார். நீங்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள் என்பதை அவர் காட்டுகிறார். நாடகம் தொடர்கிறது. எவருக்கும் இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, முடிவு பற்றித் தெரியாது. தந்தை உங்களுக்கு இந்த நாடகத்தை விளங்கப்படுத்தி உள்ளார். எனவே, நீங்கள் இப்போது அதனை நினைவு செய்கிறீர்கள். ஒவ்வொருவரின் சுயசரிதையையும் அவரால் கூறமுடியாது. நீங்கள் அதை வாசித்து, கூறும் வகையில் அவை எழுதப்பட முடியாது. தந்தை இங்கிருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்போது பிராமணர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: நான் பிராமணர், தேவர், ஷத்திரியர் என்ற மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கிறேன். தந்தையினூடாக நீங்கள் பிராமணக் குலத்திற்கு உரியவர்கள் ஆகியிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் சூரிய வம்சத்திற்கு உரியவராகவும், பின்னர் சந்திர வம்சத்திற்கு உரியவராகவும் ஆகுவீர்கள் என்பதும் உங்களுடைய புத்திகளில் உள்ளது. தோல்வி அடைபவர்கள் சந்திர வம்சத்திற்கு உரியவர்களாக மட்டுமே ஆகுவார்கள். எந்தப் பாடத்தில் தோல்வி? யோகத்தில். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பது மிக இலகுவாக உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுவதனால், அவர்கள் வெகு தொலைவிற்குச் சென்று விட்டார்கள். நீங்கள் இப்போது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். கடவுள் ஒரு தடவையே வருகின்றார். எனவே அவரது வழிகாட்டல்களையும் ஒரு தடவையே பெறுகின்றீர்கள். ஒரு தேவ தர்மமே இருந்து வந்தது. அதற்கு முன்னர் அது சங்கமயுகமாக இருந்தது. அவர்கள் நிச்சயமாகக் கடவுளின் வழிகாட்டல்களைப் பெற்றே இருந்தனர். தந்தை வந்து உலகை மாற்றுகிறார். நீங்கள் இப்போது மாறுகிறீர்கள். இந்த வேளையிலேயே தந்தை வந்து உங்களை மாற்றுகிறார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் மாறுகிறீர்கள் என்றும், தொடர்ந்தும் மாறுவீர்கள் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். இந்த பற்றரி உயிருள்ளது. ஆனால் அந்த பற்றரியோ உயிரற்றது. தந்தை 5000 வருடங்களுக்குப் பின்னர் வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர் அனைத்திலும் மேலான வழிகாட்டல்களை உங்களுக்கு வழங்குகிறார். நீங்கள் அதிமேலானவரான கடவுளின் மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். யாராவதொருவர் உங்களிடம் வந்தால், அவரிடம் இவ்வாறு கேளுங்கள்: நீங்கள் கடவுளின் குழந்தை, அல்லவா? சிவபாபாவே கடவுள் ஆவார். அவர்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அவர் சற்கதியை அருள்பவரும் ஆவார். அவருக்குத் தனக்கென ஒரு சரீரம் இல்லை என்பதால், அவர் யார் மூலமாக வழிகாட்டல்களை வழங்குவார்? நீங்களும் ஆத்மாக்களே. நீங்கள் உங்களுடைய சரீரத்தினூடாகப் பேசுகிறீர்கள். ஓர் ஆத்மாவால் சரீரமின்றி எதனையும் செய்ய முடியாது. அசரீரியான தந்தை எவ்வாறு வருகிறார்? அவர் ஓர் இரதத்தில் பிரவேசிக்கிறார் என நினைவுகூரப்படுகிறது. இவற்றைப் பற்றி யாரோ ஒருவர் எதனையோ உருவாக்க, ஏனையவர்கள் அவற்றைப் பற்றி வேறொன்றை உருவாக்கினார்கள். அவர்கள் திரிமூர்த்தியையும் சூட்சும வதனத்தில் சித்தரித்துள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அந்த விடயங்கள் அனைத்தும் காட்சிக்குரிய விடயங்களாகும். எவ்வாறாயினும், படைப்பு முழுவதும் இங்கேயே உள்ளது. எனவே, படைப்பவராகிய தந்தையும் இங்கேயே வரவேண்டியுள்ளது. அவர் உங்களைத் தூய்மை ஆக்குவதற்காகத் தூய்மையற்ற உலகிற்குள் பிரவேசிக்க வேண்டியுள்ளது. இங்கு, அவர் குழந்தைகளாகிய உங்களை நேரடியாகத் தூய்மை ஆக்குகிறார். நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். எனினும், இந்த ஞானம் உங்களுடைய புத்திகளில் தங்குவதில்லை. உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. எனவே, உங்களால் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆக முடியாது. எதனையும் புரிந்து கொள்ளாதவர்கள் என்ன அந்தஸ்தைக் கோர முடியும்? நீங்கள் எந்தளவு சேவை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதியுயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தை கூறியுள்ளார்: உங்களுடைய எலும்புகளைச் சேவைக்கு வழங்குங்கள். சகல துறைகளிலும் சேவை செய்யுங்கள். தந்தையின் சேவைக்கு எமது எலும்புகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். குழந்தைகள் பலர் சேவை செய்வதற்கான ஆவலுடன் இருக்கிறார்கள். பாபா, எங்களை விடுவியுங்கள். அதன் மூலம் பலருக்கும் நன்மை ஏற்படக்கூடிய சேவையில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்! முழு உலகமும் பௌதீகச் சேவை செய்கிறது. எனினும், அதனூடாக அவர்கள் ஏணியில் கீழிறங்கி மட்டுமே வந்துள்ளார்கள். இப்போது, இந்த ஆன்மீகச் சேவையினூடாக, ஏறுகின்ற ஸ்திதி ஏற்படுகிறது. உங்களை விட யாராவது ஒருவர் அதிகளவு சேவை செய்யும்போது, உங்கள் ஒவ்வொருவராலும் அதனைப் புரிந்து கொள்ள முடியும். புதல்விகள் சிலர், மிக நல்லவர்களாகவும், சேவையாளர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, அவர்களால் நிலையத்தைப் பராமரிக்க முடியும். அவர்கள் வரிசைக்கிரமமாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள். இங்கு, நீங்கள் வரிசைக்கிரமமாக அமர்ந்திருப்பதில்லை. இல்லாவிடின், உங்களுக்கு இதயவழுவல் ஏற்படலாம். உங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் சேவை செய்யாவிடின், உங்களுடைய அந்தஸ்து நிச்சயமாகக் குறைவடையும். வரிசைக்கிரமமாக, அந்தஸ்தில் பல மட்டங்கள் உள்ளன. எவ்வாறாயினும், அது சந்தோஷதாமமும், இது துன்ப தாமமும் ஆகும். அங்கு எந்தவிதமான நோய்களும் கிடையாது. நீங்கள் உங்களுடைய புத்தியை அனைத்திற்கும் உபயோகிக்க வேண்டும். நீங்கள் சேவை செய்யாததனால், குறைந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். சேவை செய்வதனால் மட்டுமே உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோர முடியும். உங்களையே சோதித்துப் பாருங்கள்: உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுடைய சொந்த ஸ்திதியைப் பற்றித் தெரியும். மம்மாவும் பாபாவும்கூட சேவை செய்திருக்கிறார்கள். மிக நல்ல குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் வேலை செய்தாலும், அரைச் சம்பளத்துடன் விடுமுறை எடுத்துச் சேவை செய்யுமாறு அவர்களுக்குக் கூறப்படுகிறது. அதில் எந்தவிதத் தவறும் கிடையாது. பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள், தமது முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக மயில் சிம்மாசனத்தில் அமருவார்கள். இந்த முறையிலேயே, நீங்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்படுகிறீர்கள். நீங்கள் உங்களை அர்ப்பணிப்பதுடன், சேவையும் செய்கிறீர்கள். நீங்கள் உங்களை அர்ப்பணித்திருந்தும், சேவை செய்யாவிடின், உங்களுடைய அந்தஸ்து குறைக்கப்படும். இந்த இராச்சியம் ஸ்ரீமத்தினூடாக ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் இதனை முன்னர் எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? கற்பதன் மூலம் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதைப் பற்றி முன்னர் எப்போதாவது கேள்விப்பட்டோ அல்லது பார்த்தோ இருக்கிறீர்களா? ஆமாம், தானங்கள் செய்வதனாலும் புண்ணியம் செய்வதனாலும், உங்களால் அரசருக்கு குழந்தையாகப் பிறக்க முடியும். எவ்வாறாயினும், கற்பதன் மூலம் இராஜ அந்தஸ்தை உங்களால் கோர முடியும் என்பதை நீங்கள் ஒருபோதும் கேள்விப்படவில்லை. எவருக்கும் இது தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் முழுமையான 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். நீங்கள் இப்போது மேலே செல்ல வேண்டும். இது மிகவும் இலகுவானது. நீங்கள் இதனை ஒவ்வொரு கல்பமும், உங்களுடைய முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக அன்பையும் நினைவுகளையும் தந்தை வழங்குகிறார். சேவையில் மும்முரமாக இருப்பவர்களுக்கு அவர் அதிகளவு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். எனவே, நீங்கள் அவருடைய இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். என்னால் மாலையின் மணி ஆகமுடியுமா? கல்வி அறிவற்றவர்கள், கற்றவர்களின் முன்னால் தலைவணங்க வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள்! எவ்வாறாயினும், நாடகத்தில் அவர்களுடைய பாகத்தில் இல்லாவிடின், நீங்கள் எவ்வளவு தலையை அடித்துக் கொண்டாலும், அவர்கள் மேலே ஏற மாட்டார்கள். சரீர உணர்வினூடாக ஏதாவதொரு தீய சகுனம் ஏற்பட்டுப் பின்னர் ஏனைய விகாரங்கள் வருகின்றன. பிரதானமானதும், கடுமையானதுமான நோய் சரீர உணர்வாகும். சத்தியயுகத்தில், சரீர உணர்வைப் பற்றிக் குறிப்பிட மாட்டார்கள். அங்கு, நீங்கள் வெகுமதியைப் பெற்றிருப்பீர்கள். இங்கேயே தந்தை இதனை விளங்கப்படுத்துகிறார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சதா தந்தையை நினைவு செய்யும்படியான ஸ்ரீமத்தை வேறு எவராலும் உங்களுக்கு வழங்க முடியாது. இதுவே பிரதானமான விடயமாகும். நீங்கள் மேற்கண்டவாறு எழுத வேண்டும்: அசரீரியான கடவுள் பேசுகிறார்: என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! உங்களுடைய சரீரத்தை நினைவு செய்யாதீர்கள்! எவ்வாறு பக்தி மார்க்கத்தில், அவர்கள் சிவனை மட்டும் வழிபடுகிறார்களோ, அவ்வாறே, இப்போது, நான் மட்டுமே உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறேன். எஞ்சிய அனைத்தும் பக்தியே ஆகும். சிவபாபாவிடமிருந்து மட்டுமே நீங்கள் கலப்படமற்ற ஞானத்தைப் பெறுகிறீர்கள். இந்த இரத்தினங்கள் ஞானக்கடலிடமிருந்து வெளிப்படுகின்றன. இது அந்தக் கடலைப் பற்றிய விடயமன்று. இந்த ஞானக்கடல் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களை வழங்குகிறார். அவற்றினூடாக நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். அவர்கள் சமய நூல்களில் என்ன எழுதியிருக்கிறார் எனப் பாருங்கள்! தேவர்கள் கடலில் இருந்து வெளிப்பட்டு இரத்தினங்களை வழங்குவது போன்று அவர்கள் சித்தரித்துள்ளனர். ஞானக்கடலே குழந்தைகளாகிய உங்களுக்கு இரத்தினங்களை வழங்குகிறார். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களை எடுத்துக் கொள்கிறீர்கள். முன்னர், நீங்கள் கற்களை எடுத்ததனால், கல்லுப் புத்திகளைக் கொண்டவர்கள் ஆகினீர்கள். இப்போது, இந்த இரத்தினங்களை எடுப்பதன் மூலம், நீங்கள் தெய்வீகப் புத்திகளைக் கொண்டவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் தெய்வீகப் பிரபுக்கள் ஆகுகிறீர்கள். தெய்வீகப் பிரபுக்களான இலக்ஷ்மியும், நாராயணனும் உலகை ஆட்சி செய்தார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தில் பல பெயர்களையும் உருவங்களையும் உருவாக்கி உள்ளார்கள். உண்மையில், இலக்ஷ்மியும், நாராயணனும் மற்றும் தெய்வீகப் பிரபுக்கள் என்பவர்களும் ஒன்றேயாகும். நேபாளத்தில் இடம்பெறும் பசுபதிநாதருக்கான (சகல உயிரினங்களுக்கும் பிரபு) ஒன்றுகூடலும் (மேளா) தெய்வீகப் பிரபுவிற்குரியதே ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்கு வழங்கும் இந்த ஞான இரத்தினங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், கற்களை அல்ல. சரீர உணர்வு என்ற கடுமையான நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

2. உங்களுடைய பற்றரியை முழுமையாகச் சக்தியூட்டுவதற்கு, சக்தி வீடாக விளங்கும் தந்தையுடன் யோகம் செய்யுங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். பயமற்றவராக இருங்கள்.

ஆசீர்வாதம்:
அருள்பவர் ஆகுகின்ற ஊக்கத்தைக் கொண்டிருப்பதுடன், ஆசை என்றால் என்னவென்றே அறியாத ஸ்திதியை அனுபவம் செய்பவரான, ஒரு மனநிறைவான ஆத்மா ஆகுவீர்களாக.

அருள்பவரின் குழந்தையாக, ஆத்மாக்கள் அனைவருக்கும் நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஒரேயொரு இலக்கை மாத்திரமே எப்பொழுதும் கொண்டிருங்கள். அருள்பவர் ஆகவேண்டும் என்ற ஊக்கத்தைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் நிறைவான ஆத்மா ஆகுவீர்கள், நிறைந்திருப்பவர்கள் சதா திருப்தியாக இருக்கிறார்கள். நான் அருள்பவரின் குழந்தை, கொடுப்பது என்றால் பெறுவதாகும். இந்த உணர்வு உங்களை சதா தடைகளில் இருந்து விடுபட்டிருப்பவராகவும் ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதவராகவும் உள்ள ஸ்திதியில் அனுபவசாலியாக ஆக்கும். எந்தவொரு சூழ்நிலையின் விரிவாக்கத்தையும் பார்க்கையில் உங்கள் பார்வை சதா ஒரு புள்ளியாக இருப்பதில் மாத்திரமே ஒருமுகப்பட்டிருக்கட்டும். அதனைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். கேட்டும் கேட்காதிருங்கள்.

சுலோகம்:
உங்கள் புத்தி அல்லது ஸ்திதி பலவீனமாக இருந்தால், அதற்குக் காரணம் வீணான எண்ணங்களாகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

கர்மாதீத் ஆக வேண்டுமாயின், எந்தவொரு கர்மக்கணக்கில் இருந்தும் விடுபடுங்கள். சேவை செய்வதிலும் கூட, எந்தவொரு சேவையின் பந்தனத்திலும் கட்டுண்ட, ஒரு சேவையாளராக இருக்காதீர்கள். பந்தனத்திலிருந்து அதாவது, எல்லைக்கு உட்பட்ட இராஜரீக ஆசைகளில் இருந்து விடுபட்டவராக சேவை செய்யுங்கள். சரீரத்தினது பந்தனங்களும் சரீர உறவினர்களின் பந்தனங்களும் உள்ளன. அவ்வாறே, நீங்கள் செய்கின்ற சேவையில், சுயநலம் கொண்டிருத்தலும் பந்தனமே. நீங்கள் கர்மாதீத் ஆகுவதற்கு அது உங்களுக்குத் தடைகளை உருவாக்கும். கர்மாதீத் என்றால் இந்த இராஜரீக கர்மக்கணக்குகளில் இருந்து விடுபட்டிருத்தல் என்று அர்த்தமாகும்.