07.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களுக்கு நேரம் கிடைக்கின்ற பொழுதெல்லாம் ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உஙக்ளின் உண்மையான அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதன் மூலமே சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள்.
கேள்வி:
இப்பொழுது நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டதால் எக் கவனயீனத்தை முடிக்க வேண்டும்?பதில்:
சில குழந்தைகள் கவனயீனமாகி எப்படியோ நாங்கள் பாபாவுக்குச் சொந்தமானவர்கள் எனக் கூறுகின்றார்கள். அவர்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்வதில்லை; அவர்கள் நினைவில் நிலைத்திருப்பதை மீண்டும் மீண்டும் மறக்கின்றார்கள். இது கவனயீனம் ஆகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் நினைவில் நிலைத்திருந்தால் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவஞ் செய்வீர்கள். எந்த விதமான மூச்சுத்திணறலும் இருக்க மாட்டாது. எவ்வாறு பந்தனத்தில் உள்ளவர்கள் இரவுபகலாக பரிதவிப்புடன் நினைவில் நிலைத்து இருக்கின்றார்களோ அதேபோல் நீங்களும் சதா நினைவில் நிலைத்திருக்க வேண்டும்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இதை விளங்கப்படுத்தினார். நீங்களும் “ஓம் சாந்தி” என்று கூறுகின்றீர்கள். தந்தையும் கூறுகின்றார்: ஓம் சாந்தி. ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபங்கள் என்பதே இதன் அர்த்தமாகும். தந்தையும் அமைதி சொரூபம் ஆவார். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியாகும். பரமாத்மாவின் ஆதிதர்மமும் அமைதியாகும். நீங்களும் அமைதிதாம வாசிகள். தந்தை கூறுகின்றார்: நானும் அந்த இடத்துவாசி ஆவேன். குழந்தைகளாகிய நீங்கள் மறுபிறவி எடுக்கின்றீர்கள்; நான் மறுபிறவி எடுப்பதில்லை, நான் இந்த இரதத்தில் பிரவேசிக்கின்றேன். இது எனது இரதமாகும். நீங்கள் சங்கரரைக் கேட்டிருந்தால், உண்மையில் உங்களால் அவரிடம் கேட்க முடியாது, ஆனால் உதாரணத்திற்கு நீங்கள் சூட்சும உலகிற்குச் சென்று அவரிடம் கேட்டால் அந்தச் சூட்சும சரீரம் தன்னுடையது என அவர் கூறியிருப்பார். சிவபாபா கூறுகின்றார்: இது எனது சரீரம் இல்லை. நான் அதைக் கடனாக எடுத்துள்ளேன், ஏனெனில் எனக்கும் பௌதீக அங்கங்களின் ஆதாரம் தேவை. ஸ்ரீகிருஷ்ணர் தூய்மையாக்குபவரோ அல்லது ஞானக்கடலோ இல்லை என்பதே விளங்கப்படுத்தப்பட வேண்டிய முதலாவதும் முதன்மையானதுமான விடயமாகும். ஸ்ரீகிருஷ்ணர் தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குவதில்லை. அவர் வந்து தூய உலகை ஆட்சிசெய்கின்றார். முதலில் அவர் ஓர் இளவரசராகவும் பின்னர் சக்கரவர்த்தியாகவும் ஆகுகின்றார். அவரிடம் இந்த ஞானம் இல்லை. படைப்பவரிடம் மாத்திரமே படைப்பின் ஞானம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் படைப்பு என்றே அழைக்கப்படுகின்றார். படைப்பவராகிய தந்தையே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை இப்பொழுது படைப்பதுடன் கூறுகின்றார்: நீங்கள் என்னுடைய குழந்தைகள். “பாபா நான் உங்களுக்குச் சொந்தம்” என நீங்கள் கூறுகின்றீர்கள். பிராமணர்கள் பிரம்மாவின் மூலம் படைக்கப்படுகின்றார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. வேறு எங்கிருந்து பிராமணர்கள் வருவார்கள்? சூட்சும உலகின் பிரம்மா என வேறு எவருமில்லை. மேலே இருப்பவரே, கீழேயும் இருக்கின்றார். மேலே இருப்பவர் அவரே, அவர் இவரே ஆவார். அச்சா. பின்னர் விஷ்ணுவும் இலக்ஷ்மி நாராயணன் ஆகியோரும் அதே அவர்களே. அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள்? பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார். பிரம்மாவும் சரஸ்வதியும் நாராயணனும் இலக்ஷ்மியும் ஆகுகின்றனர். பின்னர் அவர்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்து சங்கமயுகத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆகுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் மனிதர்களே, அவர்கள் தேவ தர்மத்திற்குச் சொந்தமானவர்கள். விஷ்ணு நான்கு கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்: அது இல்லறப் பாதையைக் குறிக்கின்றது. ஆரம்பத்தில் இருந்தே பாரதத்தில் இல்லறப் பாதை தொடர்ந்துள்ளது. இதனாலேயே விஷ்ணுவுக்கு நான்கு கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே பிரம்மாவும் சரஸ்வதியும் இருக்கின்றனர். சரஸ்வதி தத்தெடுத்த குழந்தை ஆவார். இவருடைய உண்மையான பெயர் லேக்ராஜ், இவர் பின்னர் பிரம்மா எனப் பெயர் இடப்பட்டார். சிவபாபா இவரினுள் பிரவேசித்து பின்னர் இராதையைத் தனக்குச் சொந்தமாக்கி அவருக்கு சரஸ்வதி என்று பெயரிட்டார். பிரம்மா, சரஸ்வதியின் லௌகீகத் தந்தையல்ல. இருவருக்கும் அவர்களின் சொந்த லௌகீகத் தந்தையர் இருந்தார்கள். அவர்கள் இப்பொழுது இங்கில்லை. சிவபாபா, மம்மாவைப் பிரம்மா மூலம் தத்தெடுத்தார். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். பிரம்மாவும் சிவபாபாவின் ஒரு குழந்தையே ஆவார். அவர் பிரம்மாவின் கமலவாய் மூலம் படைப்பை உருவாக்கினார். இதனாலேயே பிரம்மா தாய் என்றும் அழைக்கப்படுகின்றார். பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களின் குழந்தைகள். நாங்கள் உங்கள் கருணையால் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றோம். பிராமணர்களாகிய நீங்கள் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு பெரிய பரந்த புத்தி தேவை. குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிரம்மா சுவர்க்கத்தைப் படைப்பவரோ ஞானக்கடலோ அல்லர். ஒரேயொரு தந்தையே ஞானக்கடல் ஆவார். ஞானக்கடலே ஆத்மாக்களின் தந்தையாவார். ஆத்மாக்களும் ஞானக்கடல்கள் ஆகுகின்றனர். ஆனால் அவர்கள் ஞானக்கடல்கள் என அழைக்கப்படுவதில்லை, ஏனெனில் ஒரேயொரு கடலே இருக்கின்றார். நீங்கள் அனைவரும் ஆறுகள். கடலுக்குக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. ஆனால் ஆறுகளாகிய உங்களுக்குச் சரீரம் உள்ளது. நீங்கள் ஞான ஆறுகள். கல்கத்தாவிலுள்ள பிரம்மபுத்திரா ஆறு மிக நீண்டது, ஏனெனில் அதற்குக் கடலுடன் ஒரு தொடர்புள்ளது. அந்த சங்கமம் (மேலா) மிகப்பெரியது. இங்கும் ஒரு மேலா இடம்பெறுகின்றது. கடலும் பிரம்மபுத்திராவும் இணைந்துள்ளனர். இந்தச் சங்கமம் உயிருள்ளது. ஆனால் மற்றையது உயிரற்றதாகும். தந்தை இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார்; அவை சமயநூல்களிலே குறிப்பிடப்படவில்லை. சமயநூல்கள், பக்திமார்க்கத்தின் திணைக்களம் ஆகும். இந்தப் பாதை, இந்த ஞானத்திற்கு உரியது. ஆனால் அதுவோ பக்தி மார்க்கமாகும். அந்தப் பக்தி மார்க்கத்தின் பகுதி அரைக் கல்பத்திற்குத் தொடர்ந்துள்ளது. அங்கே ஞானக்கடல் இருப்பதில்லை. ஞானக்கடலான பரமாத்மாவாகிய பரமதந்தையான தந்தையே சங்கம யுகத்தில் வந்து உங்களை இந்த ஞானத்தில் நீராட்டுவதால் உங்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து சுவர்க்க சந்தோஷம் எனும் உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் சத்திய, திரேதா யுகங்களில் உண்மையில் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தோம். நாங்கள் இப்பொழுது பூஜிப்பவர்களான மனிதர்கள் ஆவோம். பின்னர் மனிதர்களில் இருந்து நாங்கள் தேவர்கள் ஆகுவோம். பிராமணர்கள் தேவ தர்மத்திற்குச் சென்று பின்னர் சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகுகின்றார்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கையில் கீழே வரவேண்டும். உங்களுடைய சொந்தப் பிறவிகள் பற்றியே நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தந்தை கூறியுள்ளார். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள். முதலில் வருகின்றவர்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கின்றனர். யோகத்தின் மூலமாக மாத்திரமே கலப்படம் அகற்றப்பட முடியும். யோகத்திலேயே முயற்சி இருக்கின்றது. சில குழந்தைகள் இந்த ஞானத்தில் திறமைசாலிகளாகவும் ஆனால் யோகத்தில் பலவீனமாகவும் இருக்கின்றார்கள். பந்தனத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்டிருப்பவர்களிலும் பார்க்க யோகத்தில் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் சிவபாபாவைச் சந்திக்க இரவுபகலாகப் பரிதவிக்கின்றனர். ஆனால் நீங்கள் அவரை ஏற்கனவே சந்தித்துள்ளீர்கள். உங்களுக்கு நினைவில் நிலைத்து இருக்குமாறு கூறப்பட்டுள்ளது, இருப்பினும் நீங்கள் மீண்டும் மீண்டும் அவரை மறக்கின்றீர்கள்! நீங்கள் பல புயல்களை அனுபவம் செய்கின்றீர்கள். ஆனால் அவர்களோ அவர்களின் நினைவில் பரிதவிப்புடன் இருக்கின்றனர். நீங்கள் பரிதவிப்புடன் இருப்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தவாறே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். சிவபாபாவின் நினைவில் இருப்பதனால் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு ஒரு பிறப்பெடுக்காத குழந்தை கருப்பையில் இருந்து வெளிவருவதற்குப் பரிதவிப்புடன் இருக்கின்றதோ அதேபோல் பந்தனத்தில் உள்ளவர்கள் “சிவபாபா, எங்களை இந்தப் பந்தனத்தில் இருந்து விடுதலை ஆக்குங்கள்” என்று பரிதவிப்புடன் சிவபாபாவை அழைக்கின்றார்கள். அவர்கள் இரவுபகலாக அவரை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள், ஆனால் நான் எவ்வகையிலும் பாபாவின் குழந்தையே என நினைத்துக் கவனயீனமாக ஆகுகின்றீர்கள். “நான் இந்தச் சரீரத்தை விட்டுச் சென்று ஓர் இளவரசர் ஆகுவேன்.” உங்களுக்குள்ளே இந்தச் சந்தோஷம் நிரந்தரமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் மாயை உங்களை நினைவில் நிலைத்திருக்க அனுமதிப்பதில்லை. நினைவைக் கொண்டிருப்பதால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்து இருக்காதுவிடின் தொடர்ந்தும் மூச்சுத் திணறுகிறீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக இராவண இராச்சியத்தில் துன்பத்தையே பார்த்து வந்தீர்கள்; அகால மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எவ்வகையிலும் துன்பமே உள்ளது. ஒருவர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் துன்பத்தையே அனுபவம் செய்கின்றார்; அகால மரணம் உள்ளது. சத்தியயுகத்தில் எவரும் அகால மரணம் அடைவதில்லை; அவர்கள் ஒருபொழுதும் நோய்வாய்ப்படுவது இல்லை. அந்நேரத்தில் அவர்கள் இயல்பாகவே ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கின்றார்கள். அது சந்தோஷ பூமி என அழைக்கப்படுகின்றது. சுவர்க்கத்திலுள்ள விடயங்கள் அனைத்தும் உங்களுடைய கற்பனை என்று மக்கள் எண்ணுகிறார்கள். “சுவர்க்கம் எங்கிருந்து வந்தது?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருப்பீர்கள் எனவும் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் எனவும் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த முழு நாடகமும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய தேவர்களாகவும் சத்திரியர்களாகவும் ஆகுகின்றீர்கள் எனவும் பின்னர் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகுகின்றீர்கள் எனவும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். சுயதரிசனச் சக்கரம் மிகவும் இலகுவானது. சிவபாபா இங்கே அமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா பிரம்மாவின் இரதத்தில் வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பிரம்மாவே சத்தியயுக ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தார். அவர் 84 பிறவிகள் எடுத்துத் தூய்மை அற்றவர் ஆகினார். பின்னர் தந்தை இவரில் பிரவேசித்து இவரைத் தத்தெடுத்தார். அவரே கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து உங்களை எனக்குச் சொந்தமாக்கினேன். நான் இப்பொழுது உங்களைச் சுவர்க்க இராச்சியத்துக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறேன். தகுதிவாய்ந்தவர்கள் ஆகுபவர்கள் இராச்சியத்திற்குச் செல்வார்கள். இதற்கு மிக நல்ல பண்புகள் தேவைப்படுகின்றன. தூய்மையே பிரதான விடயம். இதன் காரணமாகவே அப்பாவித் தாய்மார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் ஆண்களும் துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் விகாரத்துக்காக ஒருவரையொருவர் தொந்தரவு செய்கின்றார்கள். இங்கே பல பெண்கள் இருப்பதனால் “சக்திசேனை” என்ற பெயர் நினைவு கூரப்படுகின்றது. தாய்மார்களுக்கு வந்தனங்கள்! அழகானவர்கள் ஆகுவதற்காக நீங்கள் இப்பொழுது காமச்சிதையில் இருந்து வெளியேறி இந்த ஞானச்சிதையில் அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் துவாபர யுகத்தில் இருந்து காமச்சிதையில் அமர்ந்து வருகின்றீர்கள். தூய்மையற்ற பிராமணர்களே ஒருவருக்கொருவர் நஞ்சைக் கொடுக்கின்ற பந்தனத்தைத் கட்டுகின்றனர். நீங்கள் விகாரமற்ற பிராமணர்கள். நீங்கள் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து அவர்களை இந்த ஞானச் சிதையில் அமரச் செய்கின்றீர்கள். நீங்கள் காமச் சிதையில் அமர்ந்ததனால் அவலட்சணமாகி இப்பொழுது இந்த ஞானச்சிதையில் அமர்வதனால் அழகானவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒன்றாக வாழலாம், ஆனால் என்றுமே விகாரத்தில் ஈடுபட மாட்டோம் எனச் சத்தியம் செய்யுங்கள். இதனாலேயே பாபா உங்களுக்கு ஒரு மோதிரத்தை அணியக் கொடுக்கின்றார். சிவபாபாவே பாபாவும் மணவாளனும் ஆவார். அவரே சீதைகள் அனைவரதும் இராமர். அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவர். அது இரகு குலத்தின் தலைவராகிய இராமரைப் பற்றிய கேள்வி இல்லை. அவர் சங்கமயுகத்திலேயே இந்த வெகுமதியைப் பெற்றார். அவரை வன்முறைக்கு அடையாளமான அம்புடன் காட்டுவது தவறாகும். அது படங்களிலும் காட்டப்படக்கூடாது. நீங்கள் ‘சந்திர வம்சம்’ என்றே எழுத வேண்டும். சிவபாபா சக்கரத்தின் இரகசியங்களை இதன் மூலமே எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் எனக் குழந்தைகளான நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சத்திய நாராயணனின் கதை ஒன்றுள்ளது. அந்தக் கதை மனிதர்களினால் உருவாக்கப்பட்டது. எவருமே (அந்தக் கதையின் மூலம்) சாதாரண மனிதரிலிருந்து தேவராக மாறுவதில்லை. சத்திய நாராயணனின் கதையின் அர்த்தமானது சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதாகும். மக்கள் அமரத்துவக் கதைகளைக் கூறுகின்றார்கள், ஆனால் எவருமே அமரத்துவப் பூமிக்குச் செல்வதில்லை. மரணபூமி 2500 வருடங்களுக்குத் தொடர்கின்றது. தாய்மார்கள் மூன்றாவது கண்ணின் கதையைக் கேட்கின்றார்கள். உண்மையில் அது இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுக்கின்ற கதையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளதால் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். ஆத்மாவாகிய நான் இப்பொழுது இந்தச் சரீரத்தின் மூலம் தேவர் ஆகுகின்றேன். நான் இந்தச் சம்ஸ்காரங்களை எனக்குள்ளே கொண்டுள்ளேன். மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். மக்கள் ஆத்மாக்களும் பரமாத்மாவும் ஒன்றே என்றும் கடவுள் அந்தப் பல ரூபங்கள் அனைத்தையும் எடுத்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அது தவறானது. அது பொய்யான அகந்தை எனவும் பொய்யான ஞானம் எனவும் அழைக்கப்படுகின்றது. தான் ஒரு புள்ளி எனத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். நீங்களும் முன்னர் இதை அறிந்திருக்கவில்லை. இவரும் அதை அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எனவே இது பற்றி எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். பாபா நிச்சயமாக உண்மையையே பேசுகின்றார். சந்தேகப் புத்தியைக் கொண்டவர்கள் விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுவர்; அவர்களால் முழு ஆஸ்தியையும் பெறமுடியாது. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதிலேயே முயற்சி இருக்கின்றது. உணவு சமைக்கும் பொழுது உங்கள் புத்தியைத் தந்தையுடன் இணையுங்கள். இதை ஒவ்வொரு சூழ்நிலையிலும் பயிற்சி செய்யுங்கள். சப்பாத்திகளை உருட்டுகின்ற பொழுதும் உங்கள் அன்பிற்கினியவரைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் இதை அனைத்து விடயங்களிலும் பயிற்சி செய்வது அவசியம். உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம் நினைவில் நிலைத்திருங்கள். நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உங்கள் வேலையைச் செய்வதற்கு எட்டு மணித்தியாலங்கள் உள்ளன. இடையிடையே சென்று ஏகாந்தத்தில் அமருங்கள். நீங்கள் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இன்று இல்லாவிடில் அவர்கள் நாளை அதனைச் செவிமடுப்பார்கள். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் சுவர்க்கத்தில் இருந்தோம், இப்பொழுது நரகவாசிகள் ஆகிவிட்டோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற இருக்கின்றோம். தந்தை பாரத மக்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். அவர் பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். சீக்கியர்களும் கிறிஸ்தவர்களும் வருகின்றார்கள். எதிர்காலத்தில் பலர் வருவார்கள். இந்த ஞானம் அனைவருக்கும் உரியது. ஏனெனில் இது இலகு நினைவும் தந்தையிடம் இருந்து பெறும் இலகு ஆஸ்தியும் ஆகும். எவ்வாறாயினும் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். ஒரு தானம் செய்யுங்கள், தீய சகுனங்களின் கிரகணம் அகற்றப்படும். இப்பொழுது பாரதத்தின் மீது இராகுவின் தீய சகுனங்கள் உள்ளன, பின்னர் 21 பிறவிகளுக்கு வியாழ சகுனங்கள் இருக்கும். முதலில் வியாழ சகுனங்களும் பின்னர் வெள்ளி சகுனங்களும் இருக்கின்றன. சூரிய வம்சத்தவர் வியாழ சகுனங்களையும் சந்திர வம்சத்தவர்கள் வெள்ளி சகுனங்களையும் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் சகுனங்கள் குறைவடைகின்றன. இராகுவின் சகுனங்களே மோசமானவை. வியாழன், குரு அல்ல. விருட்சாதிபதியின் சகுனங்கள் உள்ளன. விருட்சத்தின் அதிபதியான தந்தை வரும்பொழுது வியாழ சகுனங்களும் வெள்ளி சகுனங்களும் இருக்கின்றன. இராவணன் வரும்பொழுது இராகுவின் சகுனங்கள் உள்ளன. குழந்தைகளான நீங்கள் இப்பொழுது வியாழ சகுனங்களை அனுபவம் செய்கின்றீர்கள். விருட்சாதிபதியை நினைவுசெய்து தூய்மையாக இருங்கள், அவ்வளவுதான்! அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அனைத்தையும் செய்கின்ற பொழுதும் ஆத்ம உணர்வில் இருப்பதைப்; பயிற்சி செய்யுங்கள். உங்கள் சரீரத்தின் அகங்காரத்தை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.2. சத்தியயுக இராச்சியத்திற்குத் தகுதியானவர் ஆகுவதற்கு இராஜரீகமான பண்புகளைக் கொண்டிருங்கள். தூய்மையே அனைத்திலும் அதியுயர்ந்த நடத்தை. தூய்மை ஆகுவதனால் மாத்திரமே நீங்கள் தூய உலகின் ஓர் அதிபதி ஆகுவீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கரன்கரவன்ஹாரை (உங்களைச் செய்யத் தூண்டும் ஒருவர், அத்துடன் செய்பவர்) உணர்ந்தவராக இருப்பதன் மூலம் இலகு யோகத்தை அனுபவம் செய்வதுடன் அதனால் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.எந்தவொரு பணியைச் செய்யும்போதும் இதன் முதுகெலும்பாக இருப்பவர், உங்களைக் கருவியாக ஆக்கிய அந்த ஒரேயொருவரை உணர்ந்தவராக இருங்கள். முதுகெலும்பு இல்லாமல் உங்களால் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. எனவே எந்தவொரு பணியைச் செய்யும்போதும் நீங்கள் ஒரு கருவி என்றும் சர்வசக்திவானான தந்தையே அனைத்தையும் செய்விக்கிறார் என்றும் நினையுங்கள். இந்த விழிப்புணர்வுடன் அனைத்தையும் செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து யோகத்தை இலகுவானதாக அனுபவம் செய்வீர்கள். இந்த இலகு யோகம், உங்களை இலகுவாக ஓர் இராச்சியத்தை ஆளச் செய்யும். இங்கே உங்களின் சம்ஸ்காரங்கள் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.
சுலோகம்:
ஆசைகள் நிழல்கள் போன்றவை. நீங்கள் அவற்றிடம் இருந்து திரும்பி இருப்பீர்களாயின் அவை உங்களைப் பின்தொடரும்.அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.
கசப்பு நிறைந்த நிலத்தையும் மிகவும் இனிமையாக மாற்றக்கூடியதே, இனிமை என்ற விசேடமான நற்குணம் ஆகும். உங்கள் அனைவரின் மாற்றத்திற்கான அடிப்படை, பாபாவின் இனிய வார்த்தைகளே: இனிய குழந்தைகளே நீங்கள் தூய இனிய ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்த இனிமையான வார்த்தைகள் உங்களை மாற்றின. பாபாவின் இனிய திருஷ்டி உங்களை மாற்றியது. அதேபோல் உங்களின் இனிமையால் மற்றவர்களை இனிமை ஆக்குங்கள். உங்களின் வாயை இனிப்பாக்குங்கள். சதா இந்த இனிமை என்ற பரிசை உங்களுடன் வைத்திருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சதா இனிமையாக இருப்பதுடன் மற்றவர்களையும் இனிமை ஆக்குவீர்கள்.