07.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைக் கிரகித்து, இப்பொழுது ஏழைகளிலிருந்து செல்வந்தர்கள் ஆகுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள் (ஞான இரத்தினங்களைப் பொழியும் யோக சொரூபம்).
கேள்வி:
தொடர்ந்தும் முயற்சி செய்யும்போது நீங்கள் கொண்டிருக்க வேண்டிய நல்லாசிகள் எவை?பதில்:
இந்த நல்லாசிகளை எப்பொழுதும்; கொண்டிருங்கள்: ஆத்மாவாகிய நான் சதோபிரதானாக இருந்தேன். நான் சக்திகளின் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோரினேன், நான் அதனை மீண்டும் ஒருமுறை கோருகிறேன். முயற்சி செய்யும் பொழுது இந்த நல்லாசிகளைக் கொண்டிருந்து, சதோபிரதான் ஆகுங்கள். அனைவரும் சதோபிரதான் ஆகப் போவதில்லை என எண்ணாதீர்கள். இல்லை, நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்து, சேவை செய்வதன் மூலம் பலசாலி ஆகுங்கள்.பாடல்:
எங்களை இந்தப் பாவ பூமியிலிருந்து அப்பால் ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்….ஓம் சாந்தி.
இது ஒரு கல்வி. அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஏனைய சத்சங்கங்கள் போன்ற அனைத்தும் பக்திமார்க்கத்துக்கு உரியவை. பக்தி செய்யும்பொழுது அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர். அந்தப் பிச்சைக்காரர்கள் (பக்கிரிகள்) வித்தியாசமானவர்கள். நீங்கள் வேறு வகையான பிச்சைக்காரர்கள். நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பக்கிரிகள் (சமயப் பிச்சைக்காரர்கள்) ஆகியுள்ளீர்கள். நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பது வேறு எவருக்கும் தெரியாது. உலக அதிபதிகளாகிய நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் செல்வந்தப் பிரபுக்களாக இருந்து, இப்பொழுது ஏழைப் பிரபுக்களாக ஆகியுள்ளோம். நீங்கள் இந்தக் கல்வியை நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் இவ்விடயங்களைக் கிரகித்து, ஏனையோர் அவற்றைக் கிரகிக்கவும் தூண்ட வேண்டும். நீங்கள் அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைக் கிரகிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கின்றார். சரீரம் அழியக்கூடியது. பயனற்றவை எரிக்கப்படுகின்றன. ஒரு சரீரம் மேலும் பயனற்றதாகும் பொழுது அது தீயில் எரிக்கப்படுகின்றது. அவர்கள் ஆத்மாவை எரிப்பதில்லை. நாங்கள் ஆத்மாக்கள். இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுதே மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்கள் ஆகினார்கள். “நான் ஒரு சரீரம்” என்பதும் உறுதி ஆகியது. எவ்வாறாயினும் ஆத்மாக்கள் அமரத்துவமானவர்;கள். அமரத்துவ பிரபுவாகிய தந்தை வந்து, ஆத்மாக்களை அமரத்துவமானவர்கள் ஆக்குகின்றார். அங்கு (சத்தியயுகத்தில்), அவர்கள் தங்கள் சரீரங்களைத் தங்களது சொந்த விருப்பத்திற்கேற்பச் சொந்த நேரத்தில் நீக்கி இன்னொரு சரீரத்தை எடுக்கின்றனர். ஏனெனில் ஒவ்வோர் ஆத்மாவும் ஓர் அதிபதியாவார். அவர்கள் விரும்பிய பொழுது அவர்களால் தங்;கள் சரீரங்களை நீக்க முடியும். அங்கே, அவர்களது சரீரம் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றது. பாம்பின் உதாரணமும் உள்ளது. அவை, உங்களது பல பிறவிகளினது இறுதிப் பிறவியின் பழைய தோல்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகளை முழுமையாக எடுத்துள்ளீர்கள். சிலர் 60 முதல் 70 பிறவிகளையும், சிலர் 50 பிறவிகளையும் எடுக்கின்றனர். திரேதாயுகத்தில் ஆயுட்காலம் நிச்சயமாகச் சிறிது குறைவானதாக ஆகுகின்றது. சத்தியயுகத்தில், அவர்கள் முழுமையான ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அங்கிருக்கும் ஆத்மாக்களிடம் சக்தி உள்ளது. ஆகவே அங்கு அகால மரணம் இல்லை. அவர்களின் சக்தி குறைவடையும் பொழுது அவர்களது ஆயுட்காலமும் குறைவடைகின்றது. தந்தை எவ்வாறு சர்வசக்திவானோ, அவ்வாறே ஆத்மாக்களாகிய உங்களையும் அவர் சர்வசக்திவான் ஆக்குகின்றார். முதலில் நீங்கள் தூய்மையாகி நினைவில் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியாகிய சக்தியைத் தந்தையிடம் இருந்து கோருகின்றீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் சக்தியைப் பெற முடியாது. ஆத்மாக்கள், புண்ணியாத்மாக்கள் ஆகும்பொழுது அவர்கள் சக்தியைப் பெறுகின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் சதோபிரதானாக இருந்தோம் எனச் சிந்தியுங்கள். எப்பொழுதும் நல்லாசிகளைக் கொண்டிருங்கள். அனைவரும் சதோபிரதான் ஆக மாட்டார்கள் என்றும், சிலர் சதோவாக மாத்திரமே ஆகுவார்கள் என்றும் எண்ணாதீர்கள். இல்லை, நீங்கள் முதலில் சதோபிரதானாகவே இருந்தீர்கள் என்பதை எப்பொழுதும் எண்ண வேண்டும். இந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். எவ்வாறு உங்களால் சதோபிரதானாக ஆக முடியும் என நீங்கள் வினவக்கூடாது. இல்லையெனில், நீங்கள் நழுவி விடுகிறீர்கள். நினைவு யாத்திரையிலும் நிலைத்திருப்பதில்லை. முடியுமானவரை, அதிகளவு முயற்சி செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சதோபிரதான் ஆகுங்கள். இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தமோபிரதானாக இருக்கின்றனர். ஆத்மாக்களாகிய நீங்களும் தமோபிரதானாகவே உள்ளீர்கள். தந்தையின் நினைவு மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். அத்துடன் சேவையையும் அதேநேரத்தில் செய்வீர்களாயின், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். உதாரணமாக, ஒருவர் நிலையம் ஒன்றைத் திறந்தால் பலரிடமிருந்தும் அவர் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றார். ஒருவர் யாத்திரீகர்களுக்கு இளைப்பாறும் விடுதியைத் (தர்மசாலை) திறக்கும் பொழுது எவரும் அங்கு சென்று இளைப்பாற முடியும். அந்த ஆத்மாக்கள் சந்தோஷம் அடைவார்கள், இல்லையா? அங்கு தங்கச் செல்பவர்கள் ஓய்வை அனுபவம் செய்யும் பொழுது, விடுதியைக் கட்டியவர் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றார். அதன் பலன் என்னவாக இருக்கும்? அந்த ஆத்மா தனது அடுத்த பிறவியில் சந்தோஷமாக இருப்பதுடன், நல்ல வீடொன்றையும் பெறுகின்றார். நல்லதொரு வீட்டைக் கொண்டுள்ள சந்தோஷம் அவருக்கு இருக்கும். அவர் ஒருபொழுதும் நோய்வாய்ப்பட மாட்டார் என்றில்லை. அவர் ஒரு நல்ல வீட்டைப் பெறுவார். ஒருவர் வைத்தியசாலையைத் திறந்திருந்தால், அவர் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார். ஒருவர் பல்கலைக்கழகம் ஒன்றைத் திறந்திருந்தால், அவர் நல்ல கல்வியைப் பெறுவார். வைத்தியசாலைகள் போன்றவை, சுவர்க்கத்தில் இருக்கமாட்டாது. இங்கு, நீங்கள் முயற்சி செய்வதன் மூலம் 21 பிறவிகளுக்கான உங்கள் வெகுமதியை இப்பொழுது உருவாக்குகின்றீர்கள். எவ்வாறாயினும், வைத்தியசாலைகள், நீதிமன்றங்கள், அல்லது பொலிஸ் நிலையங்கள் போன்றவை அங்கு இருக்க மாட்டாது. நீங்கள் இப்பொழுது அந்த சந்தோஷ பூமிக்குச் செல்கின்றீர்கள். அங்கே ஆலோசகர்களும் இல்லை. அதிமேலான சக்கரவர்த்திக்கும், சக்கரவர்த்தினிக்கும் எவரிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற வேண்டிய தேவை இல்லை. நீங்கள் விகாரத்தில் விழுந்து, அந்தளவுக்கு விவேகத்தைக் கொண்டிராத பொழுதே ஆலோசனை பெறப்படுகின்றது. இராவண இராச்சியத்தில் இருக்கும் அனைவரும் முற்றாக விவேகம் அற்றவர்களாகவும், சீரழிந்த புத்தி உடையவர்களாகவும் ஆகுகின்றனர். இதனாலேயே, அவர்கள் விநாசத்திற்கான வழிகளைத் தேட முயற்சி செய்கின்றனர். தாங்கள் உலகை மிக மேன்மை ஆக்குவதாக அவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அதை மேலும் சீரழிந்த நிலைக்கே கொண்டுவருகின்றனர். விநாசம் இப்பொழுது முன்னால் உள்ளது. நீங்கள் வீடு செல்ல வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் பாரதத்திற்குச் சேவை செய்து, எங்கள் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபித்துப் பின்னர் அங்கே ஆட்சி செய்வோம். நினைவுகூரப்படுகிறது: தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை மகனைக் காட்டுகிறார், மகன் தந்தையைக் காட்டுகிறார். சிவபாபா இப்பொழுது பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் பிரம்மாவைக் கடவுளாகவோ அல்லது தேவர் போன்றவர்களாகவோ கருதுவதில்லை. அவர் தூய்மையற்று இருந்தார். தந்தை தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்துள்ளார். அவர் எவ்வாறு விருட்சத்தின் உச்சியில் நிற்கின்றார் என்பதைப் படத்தில் பாருங்கள். அவர் தூய்மை அற்றவர். அவர் தூய்மையாகித் தேவர் ஆகுவதற்காக, விருட்சத்தின் அடியிலிருந்து தபஸ்யா செய்கின்றார். தபஸ்யா செய்பவர்களே, பிராமணர்கள். பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் அனைவரும் இராஜயோகம் கற்கின்றீர்கள். அது மிகத் தெளிவானது! இதற்கு நீங்கள் மிக நல்ல யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காது விட்டால் இந்த ஞானத்தைப் பேசும்பொழுது, உங்களிடம் அந்தச் சக்தி இருக்க முடியாது. சிவபாபாவின் நினைவைக் கொண்டிருப்பதால், நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் நினைவு செய்வதன் மூலம் சதோபிரதான் ஆகாது விட்டால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்து, குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். நினைவே பிரதானமான விடயம் ஆகும், அதுவே பாரதத்தின் புராதன யோகம் என அழைக்கப்படுகின்றது. இந்த ஞானத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. முன்னர் ரிஷிகளும், முனிவர்களும் தங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ தெரியாது எனக் கூறுவார்கள். உங்களுக்கும் கூட முன்னர் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்த ஐந்து விகாரங்களும், உங்களை முற்றாகவே ஒரு சதத்திற்கேனும் பெறுமதி அற்றவர்களாக ஆக்கிவிட்டன. இப்பொழுது இப்பழைய உலகம் எரிக்கப்பட்டு, முழுமையாகவே அழிக்கப்பட உள்ளது. எதுவுமே எஞ்சி இருக்கப் போவதில்லை. பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கே நீங்கள் அனைவரும் உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தின் மூலம் உங்களது முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகச் சேவை செய்கின்றீர்கள். கண்காட்சிகளிலே மக்கள் உங்களிடம் இக் கேள்வியைக் கேட்கும் பொழுது, ஸ்ரீமத்திற்கேற்ப எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தின் மூலம் சேவை செய்வதனால், பிரம்மாகுமார், குமாரிகளாகிய நாங்கள் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம் என்று கூறுங்கள். காந்திஜி, ஒருபொழுதுமே தான் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றேன் என்று கூறியதில்லை. இங்கு, ஸ்ரீ ஸ்ரீ 108 ஆக இருக்கும் தந்தை (108 பேரை உருவாக்கும் அதிமேன்மையானவர்) இவரில் அமர்ந்திருக்கின்றார். 108 மணிமாலை உருவாக்கப்படுகின்றது. பெரியதொரு மாலை உருவாக்கப்படுகின்றது. ஆனாலும் எட்டும், 108 பேருமே மிகச்சிறந்த முயற்சி செய்பவர்கள். மிக நல்ல முயற்சி செய்வதில் பலர் வரிசைக்கிரமமாக உள்ளனர். உருத்திரரின் யாகம் உருவாக்கப்படும் பொழுது, சாலிகிராம்களும் வழிபடப்படுகின்றன. நீங்கள் சேவை செய்ததனாலேயே நிச்சயமாக வழிபடப்படுகின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்களே, ஆன்மீகச் சேவையாளர்கள். நீங்கள், அனைவருக்கும் உள்ளே இருக்கும் ஆத்மாவை விழித்தெழச் செய்கின்றீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை மறக்கும் பொழுது சரீர உணர்வு ஏற்படுகின்றது. அப்பொழுது நீங்கள் “நான் இன்னார் இன்னார்” என எண்ணுகின்றீர்கள். எவருமே தான் ஓர் ஆத்மா என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இன்னார் இன்னாருடைய பெயர் என்பது சரீரத்திற்கே உரியதாகும். ஆத்மாக்களாகிய நாங்கள், எங்கிருந்து வருகின்றோம் என்ற அபிப்பிராயம் சிறிதளவேனும் எவருக்கும் இருப்பதில்லை. இங்கு எங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, சரீர உணர்வு உறுதியாகி விடுகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தவறு செய்வதை நிறுத்துங்கள்! மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள், ஒரு யுத்தகளத்தில் இருக்கின்றீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பாகும். ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் தந்தையுடன் வாழ்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அது ஆத்மாக்களின் வீடாகும். தந்தையும் அங்கு வசிக்கின்றார். அவரது பெயர் சிவன் ஆகும். சிவனது பிறந்தநாள் நினைவுகூரப்படுகின்றது. அவருக்கு வேறெந்தப் பெயரும் கொடுக்கப்பட முடியாது. தந்தை கூறுகின்றார்: எனது உண்மையான பெயர் நன்மைசெய்பவராகிய, சிவன் என்பதாகும். நான் நன்மை செய்பவராகிய, உருத்திரர் என அழைக்கப்படுவதில்லை. நன்மை செய்பவராகிய சிவன் என்றே கூறப்படுகின்றது. காசியில் சிவனுக்கு ஓர் ஆலயம் உள்ளது. சாதுக்கள் அங்கு சென்று, “சிவகாசி விஷ்வநாத் கங்கா” என்ற மந்திரத்தை உச்சரிக்கின்றனர். காசியில் அந்த ஆலயத்தில் உள்ள சிவனது உருவமே விஷ்வநாதர் (உலகின் பிரபு) என அழைக்கப்படுகின்றார் எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நான் உலகின் பிரபு இல்லை. நீங்கள் உலகின் பிரபுக்கள் ஆகுகின்றீர்கள். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் பிரம்ம தத்துவத்தின் பிரபுக்கள் ஆகுகின்றீர்கள். அது உங்கள் வீடும், மற்றையது உங்கள் இராச்சியமும் ஆகும். பிரம்ம தத்துவம் மாத்திரமே எனது ஒரே வீடு ஆகும். நான் சுவர்க்கத்திற்குச் செல்வதும் இல்லை, அதன் பிரபு ஆகுவதும் இல்லை. நான் சிவபாபா என அழைக்கப்படுகின்றேன். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதே எனது பாகமாகும். சீக்கியர்கள், அழுக்கான, தூய்மையற்ற ஆடைகளைக் கடவுள் சலவை செய்வதாகக் கூறுகின்ற பொழுதிலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்ட அசரீரியானவரின் புகழைப் பாடுகின்றனர். நான் 84 பிறவிகளை எடுப்பதில்லை. நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர். பாபா, தன்னுடன், தனது சரீரத்தில் உள்ளார் என்பது இந்த ஆத்மாவுக்குத் தெரியும். அப்படியிருந்தும், நான் அவரை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றேன். இந்த தாதாவின் ஆத்மா கூறுகின்றார்: நான் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். அவர் என்னுடன் உள்ளதால் என்னால் அவரை நன்றாக நினைவுசெய்ய முடியும் என்பதில்லை. இல்லை. நாங்கள் முழுமையாக இணைந்துள்ளதுடன் அவர் என்னுடன் உள்ளார் என்பதையும் நான் அறிவேன். அது, அவரே இந்தச் சரீரத்தின் அதிபதி போன்றதாகும். அப்படியிருந்தும், நான் அவரை மறந்து விடுகின்றேன். நான் இந்த வீட்டை (சரீரம்) பாபா தங்கி இருப்பதற்காக பாபாவுக்குக் கொடுத்துள்ளதுடன், நான் ஒரு மூலையில் அமர்ந்துள்ளேன். ஆகவே, அவரே முக்கியமான நபர் இல்லையா? அதிபதி எனக்கு அடுத்ததாக அமர்ந்துள்ளார் என நான் நினைக்கின்றேன். இந்த இரதம், அவருக்கு உரியது, அவரே அதனைப் பராமரிக்கின்றார். சிவபாபா எனக்கு உணவுகூட ஊட்டுகின்றார். நான் அவரது இரதம் ஆவேன். அவர் நிச்சயமாக என்னை நன்றாகப் பராமரிப்பார். நான் அந்தச் சந்தோஷத்தில் உண்கின்றேன். இரண்டு முதல் நான்கு நிமிடங்களுக்குப் பின்னர் நான் அவரை மறந்து விடுகின்றேன். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். இதனாலேயே, பாபா தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: இயலுமானவரை தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் பெருமளவு நன்மை உள்ளது. இங்கு அவர்கள் அற்ப விடயங்களுக்கும் குழப்பம் அடைந்து கற்பதை நிறுத்தி விடுகின்றனர். அவர்கள் “பாபா, பாபா” எனக் கூறி, பின்னர் அவரை விவாகரத்துச் செய்து விடுகின்றனர்! அவர்கள் தந்தையைத் தங்களுக்கு உரியவர்கள் ஆக்குகின்றார்கள். அவர்கள் இந்த ஞானத்தை ஏனையோருக்கும் கொடுக்கின்றனர். அவர்கள் இந்த ஞானத்தை விரும்புகின்றார்கள். அவர்கள் தெய்வீகக் காட்சிகளில் சுவர்க்கத்தைக் கூடப் பார்க்கின்றனர். அவர்கள் அங்கே நடனம் ஆடுகின்றனர். பின்னர் ஓஹோ! மாயை வருகின்றாள். அவர்கள் என்னை விவாகரத்துச் செய்து ஓடி விடுகின்றனர். அவர்களை உலக அதிபதிகள் ஆக்குபவரையே அவர்கள் விவாகரத்துச் செய்கின்றனர். மிகவும் முக்கியமான பிரபல்யமானவர்கள் கூட என்னை விவாகரத்துச் செய்கின்றனர். இப்பொழுது உங்களுக்குப் பாதை காட்டப்பட்டுள்ளது. அவர் உங்கள் கரத்தைப் பிடித்து உங்களை அவருடன் அழைத்துச் செல்வார் என்றில்லை. நீங்கள் குருடர்கள் அல்ல. உங்களுக்குக் கண்கள் உள்ளன. ஆம், நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானம் எனும் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி இப்பொழுது உங்களுக்குத் தெரியும். உங்கள் புத்தியில் இந்த 84 பிறவிச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். வேறெவரின் நினைவும் இருக்கக்கூடாது. நீங்கள் இறுதியில் அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். மனைவி தனது கணவன் மீது அன்பைக் கொண்டிருக்கின்றாள். அது பௌதீகமான அன்பு, ஆனால் இங்கு நீங்கள் ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள், அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித்திரியும் பொழுதும் கணவர்களுக்கு எல்லாம் கணவரையும், தந்தையர்களுக்கு எல்லாம் தந்தையையும் நினைவுசெய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்பு செலுத்தி ஒன்றாக வாழுகின்ற மனைவி, கணவன், குடும்பங்கள் பல இந்த உலகில் உள்ளன. அவர்களது வீடு சுவர்க்கம் போன்றிருக்கும். ஐந்து முதல் ஆறு குழந்தைகள் ஒன்றாக வாழ்கின்றார்கள். அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்து தங்கள் வழிபாடுகள் போன்றவற்றைச் செய்கின்றார்கள். அவர்கள் வீட்டில் சண்டை, சச்சரவுகள் இருக்கமாட்டாது. அவர்கள் மிக ஸ்திரமாக இருக்கின்றார்கள். சில குடும்பத்தில் ஒருவர் இராதா சுவாமிகளைப் பின்பற்றுபவராகவும், இன்னுமொருவர் எந்தச் சமயத்திலும் நம்பிக்கை அற்றவராகவும் இருக்கக்கூடும். அவர்கள் அற்ப விடயங்களுக்கும் குழப்பம் அடைகின்றனர். ஆகவே, தந்தை கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் பணத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி உங்களுக்கு நன்மை செய்யுங்கள், அப்பொழுது பாரதமும் நன்மை அடையும். நீங்கள் மீண்டும் ஒருமுறை ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலமும், உலகச் சக்கரத்தின் ஆரம்பம் மத்தி, இறுதியை அறிந்திருப்பதன் மூலமும், நாங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுகின்றோம். பின்னர் நாங்கள் கீழிறங்கத் தொடங்குவோம். இறுதியில், நாங்கள் மீண்டும் பாபாவிடம் வருவோம். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். தந்தை உங்களைத் தூக்கு மேடையில் போடவில்லை. அவர் கூறுகின்றார்: முதலில் தூய்மையாகி, தந்தையை நினைவு செய்யுங்கள். சத்தியயுகத்தில் தூய்மை அற்றவர்கள் எவரும் இல்லை. அங்கு வெகுசில தேவர்களே உள்ளனர், பின்னர், படிப்படியாகச் சனத்தொகை அதிகரிக்கின்றது. தேவர்களது விருட்சம் சிறியதாக உள்ளது. பின்னர் அது அதிகளவு விரிவடைகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் தொடர்ந்தும் கீழே வருகின்றனர். இந்த நாடகம், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் ஆன்மீகச் சேவையாளராகி, ஆத்மாக்களை விழிப்படையச் செய்யும் சேவையைச் செய்யுங்கள். ஸ்ரீமத்திற்கேற்ப உங்களது சரீரம், மனம், செல்வத்தால் சேவை செய்து இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான கருவி ஆகுங்கள்.2. சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, உங்கள் புத்தியில் 84 பிறவிச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். ஓரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். எவற்றினாலும் குழப்பம் அடையவோ அல்லது கற்பதை நிறுத்தவோ வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்திசாலி ஆத்மாவாகி, உங்களின் ஒன்றுகூடலில் இருக்கும்போது, உங்களின் இலட்சியத்தையும் உங்களின் தகைமைகளையும் சமமானவை ஆக்குவீர்களாக.உங்களின் ஒன்றுகூடலில் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதும், உங்களுக்குள் ஊக்கமும் உற்சாகமும் இருக்க முடியும். ஆனால், அதேவேளை கவனயீனமும் ஏற்பட முடியும். நீங்கள் அதன்பின்னர் நினைப்பீர்கள்: இவர் இதைச் செய்கிறார், நானும் அதையே செய்தால் என்ன? எனவே, ஒன்றுகூடலில் இருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு, மேன்மை அடையுங்கள். எந்தவொரு செயலைச் செய்ய முன்னரும், எல்லாவற்றுக்கும் முதலில், விசேடமான கவனம் செலுத்துவதுடன் உங்களைச் சம்பூரணமாக ஆகுவதுடன் ஒரு மாதிரி ஆகுகின்ற இலட்சியத்தையும் கொண்டிருங்கள். நான் அதைச் செய்து, மற்றவர்களையும் தூண்ட வேண்டும். இந்த இலட்சியம் மீண்டும் மீண்டும் வெளிப்பட வேண்டும். தொடர்ந்து உங்களின் இலட்சியத்தை உங்களின் தகைமைகளுடன் ஒத்துப் போகச் செய்யுங்கள். நீங்கள் சக்திசாலி ஆகுவீர்கள்.
சுலோகம்:
கடைசிப் பகுதியில் வேகமாகச் செல்வதற்கு, சாதாரணமான அல்லது வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறையன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
அன்பாக இருப்பவர்களை நினைக்க வேண்டிய தேவை இல்லை, அவர்கள் இயல்பாகவே நினைவு செய்யப்படுவார்கள். உங்களின் இதயத்தில் அன்பு இருக்கட்டும். அது உண்மையான, தன்னலமற்ற அன்பாக இருக்க வேண்டும். எனது பாபா! அன்பான பாபா! என நீங்கள் சொல்லும்போது, உங்களால் ஒருபோதும் நீங்கள் நேசிப்பவரை மறக்க முடியாது. தந்தையைத் தவிர வேறு எவரிடம் இருந்தும் உங்களால் தன்னலமற்ற அன்பைப் பெற முடியாது. ஆகவே, அவரை எந்தவிதமான சுயநலமான நோக்கங்களுடனும் நினைக்காதீர்கள், ஆனால் தன்னலமற்ற அன்பைக் கொண்டிருப்பதில் திளைத்திருங்கள்.
விசேட அறிவித்தல்: பாபாவின் ஸ்ரீமத்திற்கேற்ப, முரளிகள் பாபாவின் குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். இராஜயோகா பாடநெறியை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அல்ல. ஆகவே, கருவி ஆசிரியர்கள், சகோதர, சகோதரிகள் எல்லோரிடமும் பாபாவின் சாகார் முரளிகளின் ஓடியோ மற்றும் வீடியோப் பதிவுகளை யுரியூப், பேஸ்புக், இன்ஸ்ரகிராம் அல்லது எந்தவொரு வட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.